செவ்வாய், 8 ஏப்ரல், 2025

தர்சனம், தரிசனம், தர்சனை,

 தெரிதல் என்பது தனித்தமிழ்ச் சொல்..  இதற்கும் தெள்> தெர்> தெரிதல் என்ற சொல்லுக்கும்  பிறப்பியல் தொடர்பு  உள்ளது.   தெள்>  தெர் என்றும் மாறும்.  இந்த ளகர ரகர மாற்றீடுகளில்  கவனிக்கவேண்டிய முக்கியமான பழைய சொற்களில் ஒன்றுதான்  மடி - மரி என்ற  மாற்றீடு ஆகும்,   டி என்பது ரி என்று மாறிற்று. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல் என்பதுதான் மொழி  நூல் விதியாகும்.  இதுவும் நம் பண்டை உரையாசியரால் பலமுறை விளக்கப்பட்டதே  ஆகும். இதை நீங்கள் தேடிக் கண்டுபிடித்துக் கட்டுரையாக வெளியிடுங்கள்.  அல்லது நூலாக்கிப் புகழ்பெறுங்கள்.

மாள் > மடி > மரி என்பனவும் தொடர்புடைய சொற்களே. இதன் அடிச்சொல் மள் என்பதாகும்.  இது குறைதல் குறிக்கும் சொல்.  மடிதலினால் ( மடியாமல் ) இருக்கும்  தொகை குறைவு படுகிறது..  மடிதல் என்பது நிகழ்வாகவும் குறைதல் என்பது மடிதலின் விளைவாகவும் கொள்ளத்தக்கவை.  பண்டை மனிதன் வேட்டையின் போது பத்து முயல்களில் நான்கைப் பிடித்துவிட்டால், மீதமிருபது குறைவுதான்.  பண்டை மனிதன் இவ்வாறே தொடர்பினை அறிந்துகொண்டான்.  இதன்மூலம்  மள்> மாள் என்பதன் தொடர்பினை அறிந்துகொள்ளுங்கள்.

மள் > மளிகை:  பெரும்பாலும் உயிரற்ற அல்லது காய்தலுற்ற பொருட்களை விற்றுத் தொழில் செய்வதுதான் மளிகைக் கடை.  மளிகாரம் என்பது காய்ந்த ஒரு மருந்துப்பொருள். ( பொராக்ஸ் borax ). நீரிருந்து காய்ந்த இடங்களில் கிடைப்பதும்  ( நீர்குறைதற் பயனால் கிட்டுவது) மற்றும் பூச்சிக்கொல்லக் கூடியதுமாகும். வெண்காரம்  என்பதும் இதுவே. பூச்சிகள் குறைவுக்கு உதவுவது.

குறைவதும் கூடுவதும் ஒரு நிலைக்களனில் தோன்றும் கருத்துகள்  ஆகும். பத்து முயல்களில் இரண்டு இறந்துவிட்டால் அல்லது அவற்றை உண்டுவிட்டால்,  இறந்தவையை நோக்க இருப்பவை எட்டு,  ஆகவே கூடுதல் ஆகும். பெரும்பாலும் உடற்பலம் அல்லது வலிமை என்பது இவ்வாறுதான் வலியவர்களைச் சுட்டும் கருத்தாகிற்று.  மள்ளர் என்பவர்கள் உடல்வலிமைக் குரிய வேலைகளில் ஈடுபட்டவர்கள். பள்ளம் தோண்டுவதும் வலிமையற்றோரால் இயலாதது  ஆகும். ஆகவே மள்ளர் என்பது உடல்வலியோர் என்றானது இவ்வாறுதான்.

இவை ளகர ரகர மாற்றீட்டை விளக்க எழுதப்பட்டன.  

தெள் > தெளி> தெரி.  இதிலிருந்து தெரிதல் வினை வந்தது . தெரி > தெரிசு> தெரிசு அன் அம் >  தெரிசனம் ஆகும்.  அன் > அண் தொடர்புள்ளவை. இவற்றை முன்வந்த இடுகைகளில் விளக்கியுள்ளோம்.  எடுத்துக்காட்டு: அன் > அன்பு, (அணுக்கம்).  அண்> அணுக்கம்.  அன்= அண். ( இதன் தொடர்பில்).

தெரி என்பது தரி என்று வந்தது திரிபு.  தெரிசனம் > தரிசனம்.  இது தரிசனம் என்றுமாகும். தர்ஷன் என்பது இதனின்று வந்த திரிபு.  தெய்வக்காட்சியைக் குறிப்பது இச்சொல்.

தெரிசனம் என்பது  தர்சனை என்றும் வரும்.

இனி வேறொரு விளக்கத்தில் தொடர்புற்ற பிற விளக்குவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

If you enter compose mode please do not make changes.

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்த சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.




ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

விஞ்ஞானம் என்ற சொல்லின் முன்னோடிச் சொல்.

 விஞ்ஞானம் என்ற சொல்,  வி + ஞானம் என்று அமைக்கப்பட்டிருக்கலாம் என்பது உங்கள் கருத்தாக இருக்கலாம்.   சொல்லைப் பார்த்தாலும் அப்படித்தான் தெரிகிறது.  ஞானம் என்ற ஒரு தனிச்சொல்லும் இருப்பதால்  வி என்று சிறப்புக் குறிக்கும் சொல்லின் முதலெழுத்துடன் தொடங்குவது எளிதாகிறது. ஞானம் என்றால் அறிவு என்பது பலரும் அறிந்திருப்பதால்,  இதிலெதுவும் குழப்பம் இருப்பதாகத் தெரியவில்லை!

விஞ்ஞானம் என்ற சொல்லின் முன்னோடியாய் இருந்தது விண்ணானம் என்ற சொல். இது விண்ணானம் என்றும் குற்றாலக் குறவஞ்ச்சி என்னும் நூலிலும் வந்துள்ளது. 

விண்ணாணம் என்பதன் பொருளாவன:

1. இடம்பகம்,  சாதுரியம்

2  சாதுரியம்

3 அறிவு\

4 நாகரிகம்

5 சாலக்கு, பாவனை

6 பகட்டு,  வெளியிற்  காட்டிக்கொள்ளுதல்

7 நாணம் ( யாழ் அகராதி )

ஏறத்தாழ இச்சொலின் பொருள் இவை என்று அற்கிறோம்.

இது விள்+ நாணம் என்று பிரிக்கப்பட்டுக் காட்டப்பெறும்.   ஆயினும் இவ்வ்வாறு காட்டுதல் யாழ் அகராதிக்குரியதாக இருக்கலாம்.   விஞ்ஞானம் என்பதற்கு இப்பிரிப்பு  உதவவில்லை.

விண்ணாணம் என்பதில் வரும் நாணம்,    வெட்கம் குறிக்கும் நாணம் அன்று. இது வேறு சொல்.  நண்ணுதல் என்ற வினை,  நண்ணு + அம் >  நாணம் என்று முதனிலை நீண்ட சொல்லால் அமைந்தது.    நண்ணுதல் என்பது அணூகி ஆராய்தலுக்கு உதவும் சொல்.விணை ஆராய்தல் என்பது பழங்காலத்திலிருந்தே தமிழர்களுக்கு ஒரு கலையாக இருந்துள்ளது. இதிலிருந்தே  விஞ்ஞானம் என்ற சொல்லும் திரிந்திருக்க வாய்ப்புள்ளது.  வானநூல் என்பது ஒரு அறிவியலும்  முதல் ஆய்வுமாக இருந்திருத்தல் பொருந்துவதே  ஆகும்,

விண்ணாணம் என்ற சொல்லைக் கண்டு அதைப் பின்பற்றி விஞ்ஞானம் என்ற் சொல்லை அமைத்தனர் என்பது தெரிகிறது.

அறிக மகிழ்க\

மெய்ப்பு பின்

.f you enter compose mode please do not make changes.

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம்.

 இந்த இடுகையை எந்த சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.



வியாழன், 3 ஏப்ரல், 2025

சாமர்த்தியம் இன்னோர் முடிபு

 சாமர்த்தியம் என்ற சொல்லுக்கு இன்னொரு முடிபு காண்போம்.

முன்னர் கண்ட முடிபு இன்னும் உள்ளது.  சுருங்கக் கூறின்,  அது சா என்பதற்குச் சாதல் என்ற பொருள்கொண்டு  அதனின்று தப்பிக்கத் திரம்படச் செயல்பட்டு அந்த இடுக்கணிலிருந்து வெற்றியுடன் விடுபடுதல்  என்ற பொருள்பதிவுறு மாரு சொல்லப்பட்டது.

இப்போது சா என்பது சார் என்பதன் கடைக்குறையாகக் கொண்டு பொருளுரைக்கப்படுகிறது.   இடுக்கண் வந்துற்ற காலை,  சார்பு கொள்ளத்தக்க நிலையை மேற்கொண்டு,   மருவி -   அதாவது கடைப்பிடித்து,  அவ்விடுக்கணிலிருந்து தப்பி வாழ்தல் என்று பொருள்கொள்ளப் படுகிறது.  

சார்தல் - வினைச்சொல்.

சார் >  சா  -    இது கடைக்குறை வினைச்சொல்.

சார் +  மரு +  து  +  இ + அம்

சா+ மார் + து + இயம்

>  சாமார்த்தியம்   ஆகும்.             

மரு என்பது மார் என்று திரியும்.   இன்னொரு உதாரணம்:  தரு > தார்.   தருவான்,  தாரான்  என்பது காண்க.  தாரம் என்ற சொல்லிலும் தரு என்பது தார் என்று திரிந்தது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்     

முடிபு என்பது ஆய்வின்  முடிபு என்று பொருள்படும். இது தொல்காப்பியம் முதலிய நூல்களிலும் காணப்படும் சொல். 


YOUR ATTENTION PLEASE


If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.