புதன், 7 அக்டோபர், 2009

ON LEAVE TILL JANUARY.

I will be moving from my present location. Hence busy packing up for the removal.

I shall meet my friends after the new year.

I shall try to visit in between if time permits.

Till then: Bye-bye

SIVAMAALAA.

வெள்ளி, 2 அக்டோபர், 2009

பெண்னை --- துறந்தார் !

பெண்ணை இகழ்ந்தார்தம் பேதைமை ஒப்பதே
கண்ணை இழந்தார்் கதி.

துறந்தார்க்குத் தொல்லைஒன் றில்லை உலகில்
சிறந்தேம்யாம் என்பார் அவர்!

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

pullAngkuzal - puLLAngkuzal.

புள்ளாங்குழல்.

ல்கர ளகர எழுத்து மாற்றங்கள் பற்றி முன்பு எழுதியுள்ளேன்.
பொருள் மாறாவிடின், போலி என்ப. எ-டு: திறன் - திறம் - திறல். அறம் > அறன்.

இந்த வகையில், மெல்ல > மெள்ள என்பதுபோன்ற திரிபுகளைக் குறிப்பிட்டிருந்தேன்.

இப்போது இன்னொன்று:

புல்லாங்குழல் > புள்ளாங்குழல்.

ஆனால் இது பேச்சுவழக்குத் திரிபு என்கிறார் அறிஞர் கி.வா.ஜ.

மக்கள் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார், " புள்ளாங்குழல்" என்றே பாட்டில் அமைத்தார்.

புதன், 2 செப்டம்பர், 2009

In the life of poet Longfellow

மனையாளும் பற்றிஎரிந் திட்டபோது
தனையோடித் தந்திட்டான் தீயணைக்க;

நினைவற்று வீழ்ந்திட்டாள் அவள், அவற்கோ
நெஞ்சு முகம் பிறஎங்கும் தீக்காயங்கள்;

உணர்வுற்ற பெருங்கவிஞன் "நெடுமான்" வாழ்வில்
உள்கவிந்த சோகத்தை என்னசொல்வேன்;

கணமேனும் கண்ணீரை நிறுத்திக் கொள்ள
கருதிடினும் கூடுவதோ உருகும் நெஞ்சர்?

"நெடுமான்" - Longfellow, American poet.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

பேச்சாயியும் சரசுவதியும்

சரசு்வதி என்னும் தெய்வம் நாவை ஆள்பவள்; கல்வி தருபவள். அவளை வணங்கி கல்வி மேன்மை அடையலாம் என்பதே இந்து மதம் நமக்குக் கற்பிப்பது.

சரசுவதி தொன்றுதொட்டுத் தமிழர்களால் வணங்கப்பட்டு வருபவள். காலமாறுதலால், சில பெயர்கள் "நாகரிகம் " குறைந்தவையாய்க் கருதப்பட்டு ஒதுக்கப்படலாம். எனினும் இத்தகைய இனிமை குன்றியவையாய்க் கருதப்படும் பெயர்களையும் நாகரிகப் பெயர்களையும் ஒப்பாய்வு செய்தால், அவற்றின் தொடர்பு நாகரிகப் பெயர்களுடன் நன்கு இயைந்திருத்தலைக் காணலாம்.

பேச்சாயி என்பது நாகரிகமும் இனிமையும் குன்றிய பெயர் என்று சிலர் சொல்வர், இப்போது யாரும் தம் பெண் குழந்தைகளுக்கு இப்பெயர் இட்டதாகத் தெரியவில்லை.

பேச்சு நாவினின்று வருவது. அதற்கு ஆயி (தாய்), யார்? சரசுவதி!.

பேச்சாயி என்ற சிற்றூர் வழக்குப் பெயர், சங்க இலக்கியத்தில் இல்லாமல் இருக்கலாம்.(இருக்கிறதா என்று நான் தேடிப் பார்க்கவில்லை). பேச்சு ஆயி தமிழ் தான். சங்க இலக்கியங்கள் என்று எந்த இலக்கியமும் இல்லாத மொழிகளில், ஒரு சொல் ஒரு மொழிக்குச் சொந்தமானதா இல்லையா என்பதை எந்த முறையில் தீர்மானிப்பது? அம்முறை கொண்டுதான் இதையும் தீர்மானிக்க வேண்டும்.

இது வேறு மொழியில் இல்லாத பெயராதலால், தமிழ்தான்! மேலும்் தமிழர் தொன்றுதொட்டுச் சரஸ்வதியை வணங்கிவந்தனர் என்பது தெளிவு. பெயரை மாற்றிவிட்டால், ஆள் வேறு என்று கூற முடியாதல்லவா?

(உசாவிய நூல்: ஸ்றீ பரமாச்சாரியாரின் இந்துமத விளக்கங்கள்,(2006) Edited by Dr K K Ramalingam நர்மதா பதிப்பகம்)

Note: At the time of publishing, the text editor is affected by improper display of Tamil Fonts. Please ignore typos.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

தமன்னா Tamanna - how derived?

தமன்னா என்ற சொல்லின் பொருள் யாது?

சங்கதத்தில் : மிகவும் விரும்பப்படுவது என்று பொருள். வேறு பொருள்களும் உள்ளன. இருள், துன்பம் என்றும் பொருளுண்டு.

"நா" என்பது எதிர்மறைப் பொருளும் தரும். ஆனால், நா: இளவரசி, அரசி என்றும் பொருள் தரும்.

1{tamas} (`" the ascending node -mas}) darkness L. ; the point of the foot L. ; (%{A}) f. night
2 tama 2 an affix forming the superl. degree of adjectives and rarely of substantives most desired
3 tAma m. {doSa} L. ; anxiety , distress W.

இப்பொருள்களில் சில இப்பெயருடன் தொடர்புள்ளனவாய் ஏற்றுக்கொள்ள இயலாதவை.


தமிழில்:

தம்+அன்னை > தமன்னை > தமன்னா

ஒ. நோ: தம்+அப்பன் >தமப்பன் ( > தகப்பன். இன்றைய வடிவம்)

"தம் அன்னை" மிக விரும்பப்படுபவள்

் ஆதலின், "தமன்னா" தமிழ் மூலமுடைய சொல் என்று தெரிகிறது. மேலும் இளவரசி, அரசி, பெண்பால் அன்றோ? அன்னைபோல.

( அரசி, இளவரசி முதலியோர், அவர்களுக்குச் சேவை புரிகிறவர்களுக்கு "அன்னை"தான்.
இதுகொண்டு மலைவு கொள்ளவேண்டியதில்லை)

சாதிப்பட்டமாக வழங்கும் "பாத்தியா"வும் வாத்தியார் என்பதன் திரிபே.

ஒ.நோ: பண்டிட் < பண்டிதர். காஷ்மீரில் சாதிப்பெயர்.

வெள்ளி, 31 ஜூலை, 2009

munnu > man முன்னுதல் > மன்

மன்னுயிர் என்ற சொல்வழக்கு தமிழ் நூல்களில் பரவாலாக உள்ள ஒன்றாகும். இது humanity என்று பொருடரும் என்றாலும விலங்குகளையும் குறிக்கும். பொதுவாக உலகத்துயிர்கள் என்றும் பொருள் தரும்.

திருக்குறளில் பல இடங்களில் வந்துள்ளது, மணிமேகலையில்:

மன்னுயிர் முதல்வன் மகர வேலையன்
முன்னிய வங்கம் முங்கிக் கேடுற
பொன்னின் ஊசி பசுங்கம்பளத்து ..... தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை:29 : 15-17

இச்சொல்லாட்சியைக் காணலாம்.




வியாழன், 30 ஜூலை, 2009

சுகாதாரம் - தமிழா?

இது தமிழன்று என்று தமிழாசிரியர் கூறுவர்.

உடல் உயிர்வாழ்க்கைக்கு உகந்த நிலையே சுகம்.

உக >உகத்தல்
உக >உகப்பு.

உக > சுக > சுக+அம் = சுகம்.

உ > சு திரிபுக்கு எடுத்துக்காட்டு:

உலவு > சுலவு (வினைச்சொல)

இதுபோலவே உக > சுக என்பதும்.

ஆதாரம் என்பது செல்வம் தந்து போற்றுதல். ஆ முன்காலத்தில் செல்வம்.

ஆ தருதல் - ஆதாரம்,

பிற்காலத்தில் அது பிறவகைத் தரவுகளையும் குறித்தது.

இங்ஙனம் சுகம், சுகாதாரம் என்ற சொற்கள் தமிழ் மூலமுடையனவாகலாம்.
====================================================================
உயிர் முதலாகிய சொற்கள், அவ்வுயிர் சகர மெய் பெற்றுத் திரிதல் இயல்பு.
அடுதல் = சுடுதல், சமைத்தல்.

அடு+இ =( அட்டி) > (ச்+அட்டி) > சட்டி.
ஏமம் > சேமம்.
ஏண் > சேண்.
அமையம் > சமையம்,
அமைதல் > சமைதல்.

சில திரிபுகளில் நுண்பொருள் வேறுபட்டு, தொடர்புடைய வேறு பொருள் தரும்.

திங்கள், 27 ஜூலை, 2009

Sweet stuff ( கரும்பு முதலியவை)

கரும்பு பற்றிச் சங்க இலக்கியத்தில் காணப்படும் குறிப்புகளை உணர்வுகள் களத்தில் ஓர் இடுகையில் எழுதியுள்ளேன்.

கரும்பு ஆலைகளும் அப்போது தமிழ் நாட்டிலிருந்தமை தெளிவு.

திருக்குறளும் கரும்பைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டுள்ளது:

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.

மணிமேகலையிலும்:
காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக்கொடி வல்லியும் கரும்பும்் நடுமின்!
என வரும் ( 1: 46-47 : விழாவறை காதை)

சர்க்கரை, வெல்லம், சீனி, கருப்பட்டி. கற்கண்டு, பனங்கற்கண்டு, எனத் தமிழில் பல சொற்களிருப்பது தமிழின் சொல்வளத்தைக் காட்டுவதாகும்.

செவ்வாய், 21 ஜூலை, 2009

U<>A PATTERN OF CHANGE

am - um (opputhal) sangkatham
hAn (A) - hun (U) sInamozi
Am (A) - Om - Um (U) thamiz: opputhaRkuRippu.
Om enpathu ilangkaiththamizar vazakku .
(Omai) > Amai.
Omputhal enpathan adi Om - kAththal enRu porul. ithu Am> Amai enRu mARi OddukkuL pAthukAppAka irukkum uyiriyaik kuRiththathu.
ammai - ummai - umai - umA
ammA - ummA ( kEraLaththil sila sAthiyAridai vazangkuvathu).
Angkilaththil u (u) enRa ezuththukku iraNdu olippukaL uLLana. university (yu u) enpathum a (under ) enpathumAm
(ay)>ayA (sangkatham) n-aRpERu : (uy)> uyya - munnERa (thamiz)
umpar > ampar. (thamiz)
kudaithal > kadaithal. ku(u)>ka(ka). (malaiyALa vazakku n-Okkuka)
puthai > pathi (n-uNporuL vERupAduLLathu). uLLiRakkuthal enpathu pothupporuL.
(ul>al vErssol) ul>uL>uN. al>ar> arun-thu.
ulaithal (wander) : alaithal
kuNiththal > kaNiththal.
ar > ur : thiripukaL: aramAyik, yUrOp (U), ayarlan-thu;
urAy > arAvu.
udr (Sanskrit ) > udder (Old Eng) ud r > adar
ugligr uklikra (Old Norse) - ugly akli (English)
ulAmA > alAmA (arapu)
ullakE - allakE (Old Fr) to fill up to the bung
uNNAkku - aNNAkku
alSdar (Angkilam) - ulveSdar (A-French) -- alqvaSdir (Old Norse)
uL thIra - ulterior (English) thIrvAka uLpuRaththil.
ulE (Old Eng) - owl. (avl)

ஞாயிறு, 19 ஜூலை, 2009

"Nyabakam" or "In memory" ஞாபகம்

ஞாபகம் என்ற சொல் எங்ஙனம் பிறந்தது என்பதை ஆய்வோம்.

தமிழில் ந என்பது ஞ என்று திரியும்.

எடுத்துக்காட்டு:

நயம் > ஞயம்.

"ஞயம்பட உரை" (ஒளவையார்).

மலையாள மொழியில் ந எழுத்து ஞ என்று திரியும்.

நான் (தமிழ்) - ஞான் (மலையாளம்)
நங்கள் (நம்+கள்) - ஞங்ஙள் (ம்)

நங்கள் என்ற வடிவம் தமிழில் வழக்கிறந்துவிட்டது.

இவ்விதிகளைப் பின்பற்றி :

ஞாபகம் முன் நாபகம் என்றிருந்திருக்க வேண்டுமென்பதை யறிந்துகொள்ளலாம்.

வகரம் பகரமாகத் திரியும்.

ஒழிவு - ஒழிபு.
வசந்தம் - பசந்த் (வட இந்திய மொழிகளில்)
கோவம் - கோபம்.
தாவம் - தாபம். (தவி+அம்= தாவம், வழக்கிறந்தது).
கோவிந்தன் - கோபிந்த் ( வ.இ. மொழிகளில்)

வ - ப திரிபு தமிழிலும் பிறமொழிகளிலும் பெரும்பான்மையானது. ( )

இவ்விதியைக்கொண்டு, நாபகம் என்பதன் முன்வடிவம் நாவகம் என்று தெரிந்துகொள்ளலாம்.

நாவு+அகம் = நாவகம்.

ஒருத்திக்கு ஒன்று ஞாபகம் இருந்தால், அது அவள் நாவகத்திருக்கும். அதாவது மனத்தில் இருப்பது நாவில் வரும். மனத்திலிருப்பதை நாவில் வரவழைத்து அளந்தறியலாம். (இக்காலத்தில் நாவிற்கு ஈடாக எழுதச்சொல்லி அறிந்துகொள்ளலாம். ஓலைச்சுவடிக் காலத்தில், அதற்கு முன்பு எவ்வாறு என்று சிந்திக்கவும். )

நாவகம் = நாவிலும் அகத்திலும் என்றும் பொருள்கொள்ளலாம். எல்லாவற்றையும் நானே சொல்லவேண்டியதில்லை.

ஞாபகம் என்பது தமிழ்ச்சொல் என்பது இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும்.

தமிழனே, நாம் உரையாடியதையும் உரையாடாமல் விட்டதையும் சிந்தித்தறிவாயாக.

சனி, 18 ஜூலை, 2009

[tscii]«Î (Å¢¨É¡ø) : º¨Á, ¸¡öîÍ.

«Î+þø = «ðÊø (º¨ÁÂü¸ðÎ «øÄÐ º¨ÁìÌÁ¢¼õ)

þЧÀ¡Ä, «Î+þ = «ðÊ. (þíÌ ¸¡öîºôÀð¼Ð ±ýÚ ¦À¡Õû).

¸Õ = ¸ÕôÒ,

¸ÕôÒ+«ðÊ = ¸ÕôÀðÊ.

( ¸Ã¢Â ¿¢Èò¾¢ü ¸¡öîºô¦ÀüÈÐ).

¸ÕôÒì¸ðÊ > ¸ÕôÀðÊ ±ýÚ ÁÕÅ¢ÂÐ ±ýÀ¡Õõ ¯Ç÷.[/tscii]

The above is now converted to Unicode for your reading pleasure:

அடு (வினைச்சொல்) : சமை, காய்ச்சு.

அடு+இல் = அட்டில் (சமையற்கட்டு அல்லது சமைக்குமிடம்)

இதுபோல, அடு+இ = அட்டி. (இங்கு காய்ச்சப்பட்டது என்று பொருள்).

கரு = கருப்பு,

ஞாயிறு, 12 ஜூலை, 2009

கருப்பட்டி

கருப்பட்டி:

கருப்புக்கட்டி > கருப்பட்டி என்பார் உளர்.

கருப்பு+அட்டி = கருப்பட்டி.

(கரிய நிறத்திற் காய்ச்சப்பெற்றது என்பது பொருள்.)

இதில்: அட்டி = அடு +இ. அடுதல் = சமைத்தல்; எரித்து வேகவைத்தல்.

அடு > அட்டில் என்பது காண்க.

பகு >>

பகு > பகவு> பகவன்; அல்லது
பகு > பகம் > பகம்+அன் = பக+அன் = பகவன்;
பகு > பங்கு > பங்கன்;
பகு > பாகு > பாகன்;
பகு > பாகு > பங்கு > பாங்கன்.

பகம் என்ற சொல்லுக்கு இறைவனின் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட அடைவுகள் (சிறப்பியல்புகள் ) என்ற பொருள் மட்டுமின்றி, வேறு பொருள்களுமுண்டு. மனித உறுப்பு, கொக்கு, குருவி என்ற பொருள்களும் கூறப்படும். ஆதலின், பகவு+ அன் எனப் பிரிப்பதே குழப்பமொன்றுமில்லாததாம்.

செவ்வாய், 7 ஜூலை, 2009

MJackson

ஓடியும் ஆடியும் பாடியும் இந்த
உலகை மகிழ்வித்த வித்தகன், இன்று
நாடியின் துடிப்பு நின்றிட்ட தாலே
ஞால மக்களைத் துயரினில் ஆழ்த்தினன்!

துயர்வயப் பட்டவர் அயர்வினில் வீழ்ந்தவர்
துவண்டவர் தம்நிலை குலைந்தவர் யார்க்கும்
இசைநடம் வழங்கித் தேற்றிய இனியவன்
இன்றுநாம் தாங்கொணாத் துன்பத்தைத் தந்து
இவ்வுல கந்தனை அகன்றது கொடுமை!

என்றினி இவன்போல் இசைப்பெரு மனிதனை
இப்புவி வாழ்வினில் கண்டிடக் கூடும்?
வாழும் ஆண்டுகள் இன்னும் பலவாய்ச்
சூழ நின்றிடும் வேளையில் சென்றது
ஊழ்வலி என்றே அமைவதும் அரிதே
தனியொரு மனிதனாய்த் தணியாத் துன்பம்
பலப்பல கண்டும் துவண்டிட மறுத்தவன்
இனியும் வருவேன் என்றவன் மறைந்தான்
முயற்சி உடையார்க்கு இகழ்ச்சி இல்லென
முன்னோர் உரைத்ததை முன்வந்து நிறுவ
பயிற்சி மேவினன் பரிவொன் றின்றி
அவனையோ காலன் கொல்வது? ............
தவப்பெரு மகன்புகழ் தரணியில் வாழ்கவே!!

வெள்ளி, 12 ஜூன், 2009

பகு சொல்லாய்வு

நல்ல ஆர்வத்துடன் செயல்படுவது தெரிகிறது. நன்று.


இப்போது "பகு" என்பதையே பார்ப்போமே!

Kurukh: paxna
Malto: pakme
Kuruba bata (cf)
Telugu payu

பகு > பகல் > பால்

Tamil. pa-l part, portion, share, section, dividing; எ-டு: அறத்துப்பால்
(pa-n_mai : portion, share; nature.)
Malayalam. pal part.
Kodagi (?). palm (obl. palt-) portion, division.
Toda. polm (obl. polt-) share; subdivision of patrilineal sib.
Kannada: . pal

ஆங்கிலம்: part.

பாற்று = பார்ட் (ஆங்.) ?

பால் + து = பாற்று.

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று (திருக்.)


இன்னும் ஏனை மொழிகளிலும் தேடிக் கண்டுபிடித்தால், ஒரு வேளை பயனுடைய நல்ல கருத்து உருவாகலாம்.

திராவிடமொழி ஒப்பாய்வுகள் சென்ற 150 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இப்போது எண்ணிறந்த நூல்களும் கட்டுரைகளும் உள்ளன.
பல ஆய்வு நிலையங்களும் செயல்படுகின்றன.

உங்கள் கருத்துகளைக் கேட்க ஆவல்.


வியாழன், 11 ஜூன், 2009

ராவுத்தர்

இரா = இரவு.

உத்தர் from யுத்தர் = fighter.

(Those who attacked by the night).

So I was taught.

உத்தம் என்பது பைத்தியத்தையும் குறிக்கும்.

(Those who became mad at night? )

உருது மொழி அகரமுதலியில் " ரவுத்" என்ற சொல்லைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

குதிரைக்கு உருதுவில் : "கோ~ரா" ( ghoraa ) என்பர்.

ghoraa - horse

குறிப்பு: இதில் கு-(gho) கோவாகி, ரை - ராவாகிவிட்டது போலும். தி காணாமல் போய்விட்டது

இப்படிக் கூறும் அதே வேளையில், ghor : hor ஒற்றுமையும் கவனிக்கத்தக்கது. raa > rse.

soldier - sapahi சிப்பாய்

ராவுத்தர் என்ற சொல்லும் காணமுடியவில்லை.

raat (உருது) என்பது இரவு குறிக்கும். இது தமிழ் இரா > ராத்திரியிலிருந்து பெறப்பட்டது.

raut. rawt rowt rawat முதலான தொடக்கங்கள் இல்லை.

சென்னைப் பல்கலைப் பேரகராதியில், குதிரைவீரன் என்று குறிப்பிட்டபடியால், "ரவுத்" என்பது குதிரை என்று கருதிவிட்டனர் போலும். நமது தமிழ் முஸ்லீம்கள், தமக்குத் தெரியாத சொற்களெல்லாம் உருதிலிருந்து வந்ததாகக் கருதிக்கொள்வர்.

இனி:

14ம் நூற்றாண்டின் அமிட் குர்சோ என்பவர் இந்து குதிரை வீரர்களை "ரவுத்" என்று குறித்தாராம். இதைப் பின்னர் மதுரை வாழ் தமிழ் முஸ்லீம்கள் பட்டப்பெயராய்க் கொண்டிருக்கலாம் என்று சிலர் உய்த்துரை (அனுமானித்தல்) செய்துள்ளனர். (see The Political evolution of Muslims in India).

குதிரையுத்தர் > குரவுத்தர் > ரவுத்தர் > ராவுத்தர்.

அல்லது:

குதிரை(தமிழ்)> கோரா (உருது) > கோராவுத்தர் > ராவுத்தர்.

அல்லது:

இராயுத்தர் > இராவுத்தர் > ராவுத்தர்.

இரா (தமிழ்) > ராத் (உருது) என்பது கவனிக்கவும்.
_________________________________________________________
Note: švā (which could be related to the French cheval 'horse'); Young Avestan (that is, the latter period of the two Avestan periods) spā; Old Persian * spaco-; Middle Persian sak, sag; Semnāni esbe; Tāleši sipa; Kāšghari esbá, espá; Afghani (yes, it is an Iranian dialect) spai; etc.

Now let us compare these with the Iranian words for "horse":
OlPers. asa-; Median aspa-; Av. aspa-; Mid. Pers. asp; New Pers. asb.

As we can see, it is possible to relate these two words; especially that in Persian a diminutive suffix as Mid. Pers. [-ag], New Pers. [-ak] exists. Thanks to the researcher.



My opinion:

உரம் +உத்து+ அர்
மனத்தில் திடத்திற்குச்சான்றானவர் என்று பொருள்படும்.

[ உரம் + உத்து + அர் = உர(ம்) + உத்து +அர் = உரவுத்தர் .

இதில் மகர ஒற்று மறைந்தது. எ-டு: அறம்+ வாழ்+ நர் = அறவாழ்நர் > அறவாணர் . இங்கு மகர ஒற்று கெட்டு, வாழ்நர் என்பதும் வாணர் என்று திரிந்தது ]

உரம் = உள்ள உரம்.
உத்து = சான்று.
உரவுத்தர் > ராவுத்தர்.
இதுவே அருணகிரியார் பயன்படுத்திய சொல்லாம்.

உரமுற்றவரைக் குறிக்கும் இச்சொல் பின்னர் குதிரைவீரர்களையும் குறித்திருக்கலாம்.

உகரமும் பெரும்பாலும் மறைந்துவிடுதல் உண்டு. காட்டாக:

உசாவடி (கல்வெட்டில்) -> சாவடி. (பேச்சிலும் இன்றைய வழக்கிலும்.)

இங்ஙனம் பல.

சந்தியில் மகர ஒற்றுக் கெடும் வேறு எடுத்துக்காட்டுகள்:

அறம்+ ஆழி = அறவாழி. மகர ஒற்று கெட்டு, வகர ஒற்று தோன்றியது.
அறம் + ஆறு = அறத்தாறு. (அற+அத்து+ ஆறு. ) மகரம் கெட்டு அத்துச் சாரியை தோன்றியது.

வடக்கு + புலம் + அர் = வட+ புல + அர் = வடபுலவர்.

சரி: இங்கே மகரம் யாதாயிற்று?

களம் + அர் = களமர்!!

மகர ஒற்றுக்கெடாமலும் வருவதுண்டு. அறிக.

மலையகத்தில் ( Malaysia) ரொட்டி என்ற சொல் வழங்குகிறது.

இந்தியாவிலும் இது வழங்குகிறது.

மலாய் மொழியில் "Roti".

சீன மொழியில் "lOti" (லோத்தி). (மலேசிய சீனரிடையே).

இது உண்மையில் கேரளத்தில் வழங்கும் உரட்டி என்ற சொல்லின் திரிபு.

உரட்டி - ரொட்டி.

இப்போது உரட்டி என்பது கேரளத்தில் செய்யப்படும் உள்ளூர் வகை அப்பத்தையே இன்னும் குறிக்கிறது.

ஆனால் ரொட்டி என்ற திரிபுச்சொல் மேனாட்டு bread வகையையே குறிக்க வழங்கப்படுகிறது.

Thus the meanings have become restricted in usage.
நான் இங்கு இதை எடுத்துக்காட்டுவது ஏன்?

உரவுத்தர் - ராவுத்தர்

உரட்டி - ரொட்டி.

இங்கும் உகரம் கெட்டது.


குறிப்பு: முள்லீம்கள் மீன் கருவாடு முதலியவை விற்பர்.

இறாலை வற்றலாக ஆக்கி, விற்றவர்கள் என்னும் காரணத்திற்காக " இறால்வற்றல் > இறாவத்தல் > (இது விற்றோர் ) இறாவத்தர்
என்றும் கூறப்படுகிறது. அப்படியானால், பத்திப் பாடல்களில் வந்த "ராவுத்தர் " வேறு, முஸ்லீம் பட்டப்பெயர் வேறு .
என்பதே இதனாலும் பெறப்படுகிறது.
படித்து மகிழுங்கள்.

பாராட்டியமைக்கு நன்றி மிது.

இன்றைய அச்சம்

அரசர்கள் போரிட்ட காலம் போச்சே!
அயல்நாட்டுப் படைபற்றி அச்சம் இல்லை,
தெருக்கோடிச்  சாலைகளில் கிடக்கும் பெட்டி
தேர்போல நிலைநின்ற பேருந்(து) ஆரும்
வெறுக்காத விட்டுப்போம் பொருள்கள் தம்மில்
வீணர்கள் வைத்தாரோ வெடியென் றஞ்சி
இருக்காமல் இடம்விட்டே ஓடும் இத்தீ
விரவாதப்  போரன்றி வேறொன் றில்லை.

திங்கள், 8 ஜூன், 2009

மறவாமல் வந்துவிட்ட காதலன்

நீதான் அவனையே நினைந்து
வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருந்தாய்.
வேதனையோ உன் உளந்தனிலே!
விரைவு சில வேளைகளில், ஆனால்
தளர்வும் மெதுநடையும் பற்பல சமயங்களில்!
அலையாய் வந்து
கரையை முத்தமிட்டவன்,
உகந்து உன்னில் பெருகிட
மறந்த நாட்களும் பற்பலவே!
காத்திருந்து கண் பூத்துவிட்டதைச்
சேர்த்துவைத்த கணக்கும் வீண்போகவில்லை,
இன்றவன் உருகிப் பெருகி
இங்கேயே வந்துவிட்டான்!
எத்தனை சிறிய இன்ப அலைகள்
உன் மேனியில் வந்து பாய்கின்றன,
கடற்காதலன் உன்னைக்கை விடவில்லை,
உடனினி இருந்துவிட்டால்
இடர் இனி உனக்கில்லை, நீ வாழ்க.

ஞாயிறு, 24 மே, 2009

etymology by mala: ref: page9 (extract)

சரி, இப்போது இராசி என்ற சொல்லாக்கத்தில் உள்ள துண்டுச்சொற்களை மாற்றிப்போட்டு விளையாடுங்கள்:

இரு+ஆசு+இ = இராசி > ராசி.
ஆசு+இரு+இ+அர் = ஆசிரியர். அதாவது, மாணவர்களுக்குப் பற்றுக்கோடாயிருப்பவர். மாணவர் பற்றிக்கொள்ளவேண்டியது ஆசிரியரை. இதுவே இதன் சொல் மூலமென்பதைத் தமிழாசிரியர்கள் கூறுவர். இது நான் கண்டுபிடித்ததன்று.

"பற்றுக பற்றற்றார் பற்றினை.." என்றார் வள்ளுவப் பெருந்தகை.

இனி, ஆசு+ஆன் = ஆசான் ஆகும்.

இ, அன், ஆன், ஆர், அர் என்பன என்றும்போல் விகுதிகள்.

ஆசிரியர் > ஆச்சார்ய (சங்கதம்).
Ref: p9

------------------------


பார்த்தல் என்ற சொல்லுக்கு அகரவரிசைகள், கண்ணுறுதல் (seeing) என்ற பொருளை மட்டுமே கணக்கிலெடுத்துக்கொண்டதாகத் தெரிகின்ற்து. பேச்சுத் தமிழில் இச்சொல்லின் பொருள் இன்னும் விரிவானதென்பதை நம் நேயர்கள் அறிவர்.

"பார்த்துப் போ'ங்கள்" என்றால் take care as you go or proceed என்று பொருள்படுவது தெளிவு.

"பெண் பார்த்தல்" என்பதற்கு வெறுமனே எந்தப் பெண்ணையும் கண்ணுறுதல் என்று பொருளன்று.

பார்த்தால் பசி தீரும் என்ற வரியில், அது நுகர்வுப்பொருள் தரும்.

"எதையும் பார்த்துத்தான் செய்யமுடியும்" என்கையில், "பார்த்து" = நன்கு ஆய்ந்து என்று பொருள்தரும்.

பல சமயங்களில், பேச்சுத் தமிழ் செய்யுள்வழக்கினும் விரிந்து செல்வது தெளிவு.


பார்வை ஒன்றே போதுமே. பல்லாயிரம் சொல்வேண்டுமா : இதில், பார்வை "நோக்குதல்" என்ற நுண்பொருள் உடையது. "கண்ணொடு கண்ணினை நோக்கு ஒக்கின்" (குறள்).்

பார்த்தல் என்பதையும் கண்ணுறுதல் என்பதையும் நிகராக நான் மேலே காட்டினாலும் இவை நுண்பொருள் வேறுபாடுடைய சொற்கள்.

இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் விளக்குங்கள் என்று நீங்கள் கேட்க, நானதற்குப் பார்க்கலாமென்றால் "நேரம் ஏனை வசதிகள் எல்லாம் இருந்தால் உங்கள் கோரிக்கை கவனிக்கப்படும்" என்று பொருள்படும். எவ்வளவு சொற்சிக்கனம் உடையது பேச்சுத்தமிழ் என்பது தெளிவாகியிருக்கவேண்டுமே? Ref: pg9
--------------------------------------------

ஆபத்து:

இதில் ஆ = மாடு. பத்து = பற்று என்பதன் பேச்சு வழக்குத் திரிபு.

பழங்காலத்தில், எதிரிகள் போர்தொடுக்கும்போது, நாட்டின் ஆக்களைக் கவர்ந்து செல்வர். ஆக்களை எதிரிகள் கவர்வது அல்லது பற்றிச்செல்வது "ஆபத்து" - அடுத்து முழுப்போர் வெடிக்கும். இப்படிக் கவர்ந்து செல்லும் மறவர்படை, " கள்ளர்" எனப்பட்டனர். இது பின் ஒரு சார்தி (ஜாதி) யாகிவிட்டது.

நாளடைவில், ஆவும் பற்றுதலும் மறக்கப்பட்டு, ஆபத்து என்ற திரிபு ஒருசொன்னீர்மை பெற்றது.

ற்று என்பது த்து என்று மாறுவது பெருவழக்கு ஆகும். வந்துழிக் காண்க.

பின் ஆபத்து என்ற சொல், பேரிடர் (danger ) என்ற பொதுப்பொருளில் வழங்கிற்று.


அபய, அப்வ என்ற சங்கதச் சொற்கள் வேறு. : "ஆபத்து" வேறு. pg 9

----------------------------------------
செகுத்தல் என்ற சொல்லின் அடியாய்ச் சாதி என்ற சொல் ன்றவில்லை என்று நான் நினைப்பதற்குக் காரணம், தொல்காப்பியர் காலத்தில் இச்சொல் நீர்வாழ் இனங்களுக்கே பயன்படுத்தப்பட்டது. "நீர்வாழ் சாதி" என்று வரும் தொல்காப்ப்பியத் தொடரால் இதனை அறியலாம். அதாவது நீர் சார்ந்து வாழ்வன என்று பொருள். நாம் போய்ப் பிரித்துவைக்குமுன்பே அவை அங்ஙனம் வாழத் தொடங்கி வாழ்ந்து வருகின்றன. ஆகவே பிரித்துவைக்கப்பட்டவை என்பதைவிட சார்ந்து வாழ்வன என்பதே பொருந்தும். சேர் > சார்: நீரைச் சேர்ந்தவை, நிலத்தைச் சேர்ந்தவை என்க.

சார்திகளை மனிதன் பிரித்துவைத்தான் அல்லது கடவுள் பிரித்தார் என்று கொள்வதை விட, தொழிலடிப்படையாகத் தோன்றி மெல்லப் பன்னூறு ஆண்டுகள் வளர்ந்து, உள்கட்டமைப்புகள் உருவாகி, பிற்காலத்தில் அதிகாரத்தில் உள்ளோரால் குமுக அமைப்புகளாக ஏற்கப்பட்டன என்று கொள்வதுதான் பொருந்துவது.

மேலும் சார்> சார்தி > சாதி என்பது ஒருபடி மாற்றம். Just one step word corruption or change.

செகு என்ற சொல் செகுதி - சாதி என்று மாறுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட திரிபுகள் தேவைப்படுகின்றன.

மற்றும் சார் என்ற அடிச்சொல் உலகவழக்கில் உள்ள எளிய சொல். மக்கள் பேச்சு வழக்கில் எளிதாய் நிகழ்ந்து மாறதலடையத்தக்கது,

மேலும் சார்தி என்பது சேர்வுக் கருத்தை உள்ளடக்கியது, பிரிவினைப் பொருளில் மிளிர்வது அன்று.

இன்ன பிற காரணங்களால், சார்தி > சாதி என்பதே பொருத்தமானது - உண்மையும் ஆகும்.

இத் திரிபை இங்ஙனம் விளக்கியோர் வேறு அறிஞர் ஆவார். அவர் பெயர் நினைவில் இல்லை.

செகு என்ற தமிழ்ச்சொல்லில் இருந்து sex என்ற இந்தோ ஐரோப்பியச் சொல் தோன்றியது என்று முன்னரே முனைவர் அரசேந்திரன் முடிவுசெய்தார். அவரும் சாதி என்பது செகு என்பதிலிருந்து வந்ததெனக் கூறியுள்ளதாக அவர்தம் நூல்களிலிருந்து நான் அறியவில்லை. (எனக்குத் தெரிந்தவரை). இந்த ஆய்விலிருந்து இராம கி மேல் சென்றுள்ளார் என்று தெரிகிறது. pg 9

-----------------------------

விழேடம் > விசேடம் > விஷேஷம்.


இப்போது "விஷேஷம்" என்ற சங்கதச் சொல்லின் மூலத்தினைக் கண்டுபிடிப்போம்.

இதை வி +ஷேஷம் என்று பிரித்து க் காட்டுவதுண்டு.

இதில் வரும் வி என்ற முன்னொட்டு, "விழு" என்ற சொல்லின் சுருக்கம்.

விழுமிய, விழுப்பம், விழுப்புண் என்ற சொற்களை மறந்திருக்கமாட்டீர்கள். விழு என்பது "சிறப்பு" என்று பொருள்படும் பழந்தமிழ் உரிச்சொல்.

விழு > வி.

விஷேஷம் என்றால் சிறப்பாக எடுத்துக்கொள்ளப்படுவது, சிறப்புக்குரியது என்று பொருள்.

விழு +எடு +அம் = விழேடம் > விசேடம் > விஷேஷம்.

எடு என்பது முதனிலை நீண்டு, ஏடம் என்றானது. சுடு+ அன் = சூடன் என்பதுபோல.

தமிழிலிருந்து சங்கதம் சென்ற சொல்லுக்குத் தமிழ் மூலம் பொருள் கூறுவது இழுக்கென்பர்.


இது நிற்க, ஆசிரியர் என்ற சொல்லின் மூலம் "ஆசு" என்பதை உடன்படாது நிற்பார், அஃது ஆதன், அத்தன்் என்ற சொற்களின் திரிபு என்று கூறுவர்.
பண்டையாசிரியரும் அச்சொல் ஆசு என்ற மூலத்திற் பிறந்ததாகவே கூறுவர் ஆதலின், அதுவே சரியென்பது தேற்றம்.

ஆதன், அத்தன் என்பன ஆசிரியர் என்றாவதற்குப் பல மடித் திரிபுகள் காட்டவேண்டும். ஆசு+"இரியர" என்று காட்ட பிரித்துக்காட்டுவதே போதுமானது.

இன்னும் ஆழச் சிந்தித்தால், "ஆ" என்பதே அடிமூலச்சொல். ்ஆஆஅஅஆ

ஆ > ஆதல்; ஆ> ஆகு >ஆகுதல்; ஆ > ஆதி (ஆக்க காலம்). ஆ > ஆய்.>ஆயாள். (ஆக்கியவள்) ஆ > ஆத்தாள்.
ஆ > ஆசு. இதில் சு என்பது விகுதி. ஆ >அ >அப்பு >அப்பன், >அத்தன்; >அச்சன். ஆ>அன்>அன்னை.

இப்படிப் பார்க்கப்போனால், ஆயிரக்கணக்கான சொற்கள் தொடர்புடையவை. சீன மொழி, யப்பானிய மொழிகளில்கூடத் தொடர்பு கிடைக்கும். நாம் அவ்வளவு தொலைவு செல்லவேண்டாம்.

சுட்டடிச்சொல் வளர்ச்சியை தேவனேயப்பாவாணர் ஏறத்தாழ முழுமையாகவே காட்டியுள்ளதால், அதை இங்குக் கூற வேண்டியதில்லை.

சில சொற்கள் சுருங்கிவிடுகின்றன. ஆ > அ > அப்பு> அப்பன் போல. சாவு > சவம். (சாவு+அம்).

சில நீண்டுவிடும்: படு > பாடு; விடு > வீடு.

அறிந்தின்புறுவோம். pg 9

------------------
விழேடம் > விசேடம் > விஷேஷம்.


இப்போது "விஷேஷம்" என்ற சங்கதச் சொல்லின் மூலத்தினைக் கண்டுபிடிப்போம்.

இதை வி +ஷேஷம் என்று பிரித்து க் காட்டுவதுண்டு.

இதில் வரும் வி என்ற முன்னொட்டு, "விழு" என்ற சொல்லின் சுருக்கம்.

விழுமிய, விழுப்பம், விழுப்புண் என்ற சொற்களை மறந்திருக்கமாட்டீர்கள். விழு என்பது "சிறப்பு" என்று பொருள்படும் பழந்தமிழ் உரிச்சொல்.

விழு > வி.

விஷேஷம் என்றால் சிறப்பாக எடுத்துக்கொள்ளப்படுவது, சிறப்புக்குரியது என்று பொருள்.

விழு +எடு +அம் = விழேடம் > விசேடம் > விஷேஷம்.

எடு என்பது முதனிலை நீண்டு, ஏடம் என்றானது. சுடு+ அன் = சூடன் என்பதுபோல.

தமிழிலிருந்து சங்கதம் சென்ற சொல்லுக்குத் தமிழ் மூலம் பொருள் கூறுவது இழுக்கென்பர்.


இது நிற்க, ஆசிரியர் என்ற சொல்லின் மூலம் "ஆசு" என்பதை உடன்படாது நிற்பார், அஃது ஆதன், அத்தன்் என்ற சொற்களின் திரிபு என்று கூறுவர்.
பண்டையாசிரியரும் அச்சொல் ஆசு என்ற மூலத்திற் பிறந்ததாகவே கூறுவர் ஆதலின், அதுவே சரியென்பது தேற்றம்.

ஆதன், அத்தன் என்பன ஆசிரியர் என்றாவதற்குப் பல மடித் திரிபுகள் காட்டவேண்டும். ஆசு+"இரியர" என்று காட்ட பிரித்துக்காட்டுவதே போதுமானது.

இன்னும் ஆழச் சிந்தித்தால், "ஆ" என்பதே அடிமூலச்சொல். ்ஆஆஅஅஆ

ஆ > ஆதல்; ஆ> ஆகு >ஆகுதல்; ஆ > ஆதி (ஆக்க காலம்). ஆ > ஆய்.>ஆயாள். (ஆக்கியவள்) ஆ > ஆத்தாள்.
ஆ > ஆசு. இதில் சு என்பது விகுதி. ஆ >அ >அப்பு >அப்பன், >அத்தன்; >அச்சன். ஆ>அன்>அன்னை.

இப்படிப் பார்க்கப்போனால், ஆயிரக்கணக்கான சொற்கள் தொடர்புடையவை. சீன மொழி, யப்பானிய மொழிகளில்கூடத் தொடர்பு கிடைக்கும். நாம் அவ்வளவு தொலைவு செல்லவேண்டாம்.

சுட்டடிச்சொல் வளர்ச்சியை தேவனேயப்பாவாணர் ஏறத்தாழ முழுமையாகவே காட்டியுள்ளதால், அதை இங்குக் கூற வேண்டியதில்லை.

சில சொற்கள் சுருங்கிவிடுகின்றன. ஆ > அ > அப்பு> அப்பன் போல. சாவு > சவம். (சாவு+அம்).

சில நீண்டுவிடும்: படு > பாடு; விடு > வீடு.

அறிந்தின்புறுவோம்.

--------------------------------- pg 9

அது மட்டுமன்று; நன்செய், புன்செய் என்ற சொற்களே உலகவழக்கில் நஞ்சை, புஞ்சை என்றே வழங்குகின்றன. நஞ்சை புஞ்சை என்றே எழுதுவாரும் அவற்றை நன்செய். புன்செய் என்றே எழுதல் வேண்டுமென்று "திருத்துவாரும்" உளர். நம் கருத்து: செய் என்பது சை என்று திரியும் என்பதை இது நன்கு எடுத்துக்காட்டுகிறதல்லவா!

நிற்க, மலாய் மொழியில் மரக்கறி வகைகளுக்கு " sayur " (sayur-sayuran) அதாவது: சையுர் (சாயுர்) என வழங்குகிறது. தமிழர்கள் "சைவர்" என்பர் - மலேசியாவிலே! சைவர் = மரக்கறி.

சைவரு >" சைவர"் > சாயுர். sayur (M).

நன்செய், புன்செய் ஆகிய "செய்யிலிருந்து" (சையிலிருந்து) வரும் உணவு என்று பொருள். சை+வரு; செய்வரு பொருள். நன்செய் வரு பொருள்; புன்செய் வரு பொருள்.

சைவர் (சைவரு) - (சையுர்) என்பன இச்சொல்லின் வரலாற்றை அறிய உதவக்கூடும்.

தென்கிழக்காசிய மொழி(கள்) பேசுவோருடன் தமிழர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். ஓராயிரம் ஆண்டுகட்கு மேலாகவே.

சையுறு பொருள் ( செய்யுறு பொருள்) எனினும் இழுக்காது. (பொருத்தம்தான்). சையுறு/ சைவரு > sayur (Malay)

செய் என்ற சொல்லின் திரிபாகிய சை (சாய்) துண்டுகள், சைவருடன் / சாயுருடன் தமிழிலிருந்து மலாய் மொழிக்குச் சென்றிருக்கலாம்.

எங்ஙனம் ஆயினும், சைவம் (மதம்) வேறு; சைவம் (உணவு) வேறு. இவை வெவ்வேறு பிறப்புக்களை உடையன என்பது தெளிவு.


மலாய் மொழியில் "செய்" "சை" முதலிய தனிவடிவங்கள் இல்லை.
copyright. Pl acknowledge below before reproducing this elsewhere.


-------------------------------

இதுபற்றி முன் மன்ற மையத்தில் நடந்த உரையாடல்களில், விளக்கப்பட்டுள்ளது -- என்று நினைக்கின்றேன்.

சிவம் > சைவம். ( இ, உ, எ -->)
words of similar pattern:
மிதிலா > மைதிலி,
கேரளா > கைராளி,
புத்த(ர்) > பௌத்த(ம் ),
குமாரி > கௌமார(ம்)
விஷ்ணு > வைஷ்ணவ(ம்)்

என்று வரும் திரிபுகள் சங்கத்தத்தில் பெருவழக்கு. இப்படித் தமிழிலும் உண்டு என்று காட்டுவர் சில ஆய்வாளர்கள். எனினும் தமிழில் குறைவு.
சிவ (<சிவத்தல்) என்ற மூலச்சொல் தமிழில் உண்டு. எனவே சிவம் > சைவம் தமிழ்த்திரிபும் ஆகலாம்.

சிவன் உருக்குவேதக் கடவுள் அல்லன் என்பர். ( see German Slater's research ). உருத்திரன் என்று வேதம் கூறுவது சிவனே என்பார் மறைமலைஅடிகள். ஆனால் சிவன் தமிழர் கடவுள் என்பது என் கருத்து.

QUOTE (mithulan @ Jul 2 2008, 04:48 AM) *
சிவம் என்பதிலிருந்து சைவம் திரிந்தது என்றால் அது சங்கதத் திரிபா இல்லை தமிழ்த் திரிபா?

தமிழிலும் அப்படித் திரியக்கூடும். மேலே காண்க.

QUOTE
உங்களிடம் இன்னொரு சொல்பற்றியும் கேட்கவேண்டும், சிந்துவெளி என்பதில் உள்ள 'சிந்து' என்ற சொல் சிந்து என்ற ஆற்றின் பெயரால் வந்ததா? இல்லை சிந்து மரங்கள் நிறைந்த காடு அங்குள்ளதால் அந்தப் பெயர் தோன்றியதா? இல்லை சிந்து என்ற ஆடையைப் பழங்காலத்தில் அங்கிருந்த மக்கள் நெய்ததால் அந்தப் பெயர் தோன்றியதா?
சிந்து என்பதின் வேர் யாது?


சிந்து என்பது தமிழ் இலக்கணத்திலும் இசையிலும் உள்ள பழைய சொல். சிந்து என்பது நீட்டம் குறைந்த பாடல் வகையையும் குறிக்கும், (எ-டு) காவடிச் சிந்து. சிந்தியல் வெண்பா. சிந்தடி
இது சிறிய வகை நூலால் ஆன துணிவகையையும் குறிக்கும் என்பர் அறிஞர் சீனிவாச ஐயங்கார். இதுவே பின் ஆற்றுக்கும் சமவெளிக்கும் பெயரானது என்பார். அவர் சிந்து தமிழ்ச்சொல் என்பார்.

சில் > சிறு.
சில் > சில.
சில் > சின் > சிந்து. (து விகுதி).
சில் > சின் > சின்ன.

QUOTE
பெரும்பாலான ஈழத்து ஊர்ப்பெயர்களிற்கு தாவரவியல் வேர் உள்ளது. தமிழகத்திலும் அவ்வாறா எனத் தெரியவில்லை.

தமிழ் நாட்டில் அப்படியில்லை.

நேரம் கிடைத்தால் விளக்குவேன் மிது.

--------------------------------pg 9

பசுந்தமிழ் > பைந்தமிழ்.

இச்சொல்லில் அ (ப்+அ) என்பது பை (ப்+ஐ) என மாறிற்று.

திரிபுகள் ஏற்படும்போது:


பொருள் மாறியமையலாம்;
மாறாமலும் இருக்கலாம்.

இதற்கு தமிழில் சான்றுகள் பல.

இதையும் கவனிக்க வேண்டும்:

அத்தை > ஐத்தை (சில கூட்டத்தாரிடம் பேச்சு வழக்கு).

--------------------------- pg 9


பித்தம் > பைத்தியம். இதுவும் தமிழ்த்திரிபுதான்.

ஒப்பு நோக்குக: சிவம் > சைவம்!!

தமிழிலும் இத்தகைய திரிபு உண்டு: ஒப்பியன் மொழிநூல், பக்.217.

--------------------------

பித்து > (பித்து+அம்) > பித்தம்.
பித்து > (பித்து +இயம்) > (பித்தியம்) > பைத்தியம்.

பித்தியம் எனற்பாலது பழங்காலத்திலேயே பேச்சு வழக்கில் பைத்தியம் என்று திரிந்தது எனினும் இழுக்கில்லை. பிற்காலத்தில் இத்திரிபினின்று (அல்லது இதுபோன்ற வேறு திரிபினின்று ) இ>ஐ என்ற திரிபுவிதி உண்டாக்கப்பட்டு, சங்கதமுதலிய மொழிகளில் சொற்கள் பல படைக்கப்பட்டிருத்தல் கூடும்.

இயம் என்ற பின்னொட்டு இ+அம் ஆகிய இரு விகுதிகளின் கூட்டு.

அம் என்ற விகுதி, "அமை" (அமைதல், அமைப்பு) என்ற வினைச்சொல்லின் அடிச்சொல் என்று கூறலாம்.

சொற்கள் பிறந்து வழக்கில் உலவும்போது. அவற்றின் அடிச்சொற்கள், முன்வடிவங்கள் முதலியன சிலவேளைகளில் மறைந்துவிடுகின்றன. இப்படி, பித்தியம் என்பதும் மறைந்துவிட்டது எனக்கோடல் வேண்டும்.

சிவம் என்ற கடவுட்பெயர், ஆகுபெயராய் சிவநெறிக்கும் வழங்கிப் பின் "சைவம்" என்னும் வடிவத்தை அடைந்தது. வடிவம் மாறியபின் அது சிவ நெறியை மட்டுமே குறித்தது.

மரக்கறி உணவைக் குறிக்கும் சைவம் என்ற சொல் வேறு. அது முன் விளக்கப்பட்டது.


------------------------ pg9

அதற்கு வருமுன், ஒரு திரிபுச்சொல்லை உங்களுக்குக் காட்டவேண்டும்.

தஞ்சம் என்ற சொல் தான் அது.

தங்கு > (தஞ்சு) > தஞ்சம்.

இங்கே > இஞ்சே ( இஞ்சை) என்பதையொட்டி.

தங்க இடமின்றி ஓரிடத்தில் சென்று இடம் கேட்டு இறைஞ்சிப்் புகுவதைத்தான் தஞ்சம் புகுதல் என்றனர். உண்மையில் அது தங்கப்் புகுதல் தான். அஞ்சி ஓடிக்கொண்டிருந்தவன் ஓரிடத்திற் சென்று தங்குகிறான், அங்கு பாதுகாப்புடன் இருக்கலாம் என்று கருதி. இப்போது அது அடைக்கலம் புகுதல் என்ற பொருளுடையதாகிறது. இச்சொல் வடசொல் என்றும் பிறழ உணரப்பட்டது.

ஒ.நோ: இங்கே - இஞ்சே (சிலர் பேச்சு வழக்கு)

செய்து - செஞ்சு என்று வருவது வேறொரு வகை.




தொடர்வோம்.









திங்கள், 4 மே, 2009

poems

வெங்காவைப் பற்றி விளைத்தோம் ஒருபாடல்
வெங்கா விரைந்தார் பதிலோடு --- எம்கண்கள்
கண்ட ஒருநொடியில் கற்பனையில் இன்னொன்று
பண்டுபோல் ஊறிடும் பார்!

பணம்

தேடாமல் இருக்கவும் முடியவில்லை
தேடிக் கிடைத்தாலும் போதவில்லை
வாடாத பூவில்லை அதனைப்போல
வற்றாத நீரில்லை அதனைப்போல
தேடியே பெற்றதும் ஓடிப்போக
தேடுவார் முன்போலச் சென்றலைவார்!
மாடியில் வாழ்ந்தாலும் வேண்டும்சின்ன
மண்குடிசை வாழ்வார்க்கும் தேவைதானே!

பணம்

ஞாயிறு, 29 மார்ச், 2009

சொல்லமைவு ராஜ் முதலியவை

பிரகதீசுவரர் - பெருவுடையார்:
பெருகு > பிரக.
பெருகு+அது > பிரகது
இ(றை)வர் > இ(ஷ்)வர் > ஈஷ்வர் > ஈஸ்வர் > ஈசுவரர்.

தென்+கண்+அம் = தெற்கணம் > தெக்கணம் > தக்கணம்> தட்சிணம். ( தெற்கின்கண் உள்ள நிலம்).

அல்லது: தக்கு+அணம் = தக்கணம் ( தாழ்ந்து செல்லும் நிலம்). [ ஞா. தேவநேயப் பாவாணர்).

முகிழ்த்தல் = தோன்றுதல்.
மூள்தல் = தோன்றுதல்.

முகிழ் > மூர். முகிழ்த்து+இ = மூழ்த்தி > மூர்த்தி.

(தோன்றுவது; இறைத்தோற்றம்).

எனப்பல.

அரசு > ராசு > ராஜ.
ராசு > ராஷ் > ராஷ்டிரீய
ராஷ்ட் ர
மா ராஷ்ட் ர > மகாரஷ்ட் ரா
ராஷ்ட்ரபதி
ராசு > ராய். (ஐஸ்வர்யா ராய்).
ராஜ் - ரெக்ஸ். rex (L)
ராஜ் > ரெஜினா. regina (L)

ராஜ்் > ரோய் > ரோயல். royal

1.புதுமை, 2. தமிழன்

1. கலைகள் அனைத்திலுமே -- வரும்
கருத்தில் புதுமையும் வேண்டும்;
இலையில் புதுச்சுவையூண் -- எனில்
ஏற்க மறுக்கும் நா உண்டோ?

-----------------------------------------------------
வேறு:
2
தமிழன் எனச்சொன்னால் பாவமோ? -- இந்தத்
தரையில் குடிவாழ்தல் நோகுமோ -- நீரில்
அமிழ்ந்தும் அவன்சாக வேணுமோ -- தீயில்
அழிந்தால் புவிக்காவல் ஆறுமோ?

குழந்தை முதியோரும் பெண்களும் -- ஒரு
குற்றம் அறியாநோ யாளியும் -- உயிர்
இழந்தும் உடல்கள்புண் ஆகியும் ---போர்
இனியெத் தனைநாட்கள் போகுமோ?

இரத்த வெறிகொண்ட மாந்தர்கள் -- இங்கு
இயற்றும் சமர்நிற்க வேண்டுமாய் -- ஓர்
உரத்த குரல்தந்துஇஞ் ஞாலமும் ---அமைதி
ஓங்கச் செயற்பால காலமே!

புலிக்கே வலைவீசும் வேட்டுவன் -- வந்த
பொன்மான் முயல்தம்மைச் சாட்டுதல்,--- ஒர
நெறிக்குள் அவனில்லை காட்டுமே --- உலகு
நில்லா தவன்மன்றில் ஏற்றுவீர்!

[சாட்டுதல் = கொல்லுதல் என்னும் பொருளில்.]

புதன், 25 மார்ச், 2009

ஒன்றுபட முடியுமா உன்னால்?

(புதுக்கவிதை )

இன்றைய புத்துலகில்,
நாட்டுக்கு நாடு,
ஊருக்கு ஊர்.
எண்ணற்ற  அரசியல் கட்சிகள்;
கட்சித் சண்டை---, மற்றும்
கட்சிக்குள் சண்டை!
ஆளுக்கு ஆள்,
கருத்து வேற்றுமை!

தமிழருக்குள்ளும் இதுதான் நடக்கிறது!
ஒப்பமுடிந்த அனைவருக்குமான நிலையில்
தப்ப முடியுமா தமிழன் மட்டும்?

ஒன்றுபடு நீ என்றும்
ஒப்பற்ற நல்லறிஞர் எவர் சொன்ன போதிலும்
ஓன்றுபட்டுவிட முடியுமா உன்னால்?

பாவம் நீ!
உலகின் தலைவிதிக்கு நீ என்ன விதிவிலக்கா?

சனி, 14 மார்ச், 2009

புதுமை

கலைகள் அனைத்திலுமே -- வரும்
கருத்தில் புதுமையும் வேண்டும்;
இலையில் புதுச்சுவையூண் -- எனில்
ஏற்க மறுக்கும் நா உண்டோ?

சனி, 7 பிப்ரவரி, 2009

மருத்துவமனையின்மேல் தாக்குதல்.

நோய்ப்பட்ட மக்கள் நுடங்கு மில்லத்தை
நாய்ப்படை குண்டெறிந்து தாக்கிப் படுகொலை
செய்த மனிதநேயச் சீரழிவைக் கண்டித்து
வைத உலகையும் ஒட்டி ஒழுகா
அரசியல் மேலாண்மை ஆமோ அரசு?
அறிவுடையார் பின்னதற்குத் தந்தார் பரிசு!!
கொலைக்குற்றக் கூண்டிலே ஏற்றினார் என்றால்
நிலைப்படும் இவ்வுலகம்! இன்றேல் நெடுநாட்கள்
இத்தகு போர்கள் இனியும் பலநேர்ந்து
மெத்தப் பலதுன்பம் மேலோங்கும்!! ஐநாவே!
ஏதேனும் செய்யீரோ!! காதேனும் கேட்குமோ?
ஓதிப் பயனுண்டா மோ?

போர்வேண்டாம்!

போர்வேண்டாம் போரினையே நிறுத்தி விட்டு
புத்துரிமை தருந்தீர்வு காணல் நன்று;

மார்தன்னைத் தட்டுவதில் மாட்சி இல்லை
மக்களுக்கே துன்பமத னாலே கண்டீர்;

யார்வந்து தடுத்தாலும் யாம்போர் செய்வோம்
யார்மீதும் குண்டுமழை என்ப தெல்லாம்

சீர்கெட்ட சிந்தனையால் விளைந்த கூச்சல்
செம்மையான அரசியலே இல்லாப் பேச்சு.

வெள்ளி, 30 ஜனவரி, 2009

புசி > போஷி> போஷாக்கு

புசித்தல் என்ற சொல்லின் அடிப்படையில் தோன்றியதே போஷி, போஷாக்கு என்பன.

போஷி என்பது, இருக்கு வேதம், அதர்வண வேதம் முதலிய நூல்களிலும் உள்ளது.

புசி > போசி > போஷி.
போஷி > போஷாக்கு.

போஷி + ஆக்கு = போஷாக்கு.

புசி+ஆக்கு > போஷாக்கு எனினும் அதுவே.

திங்கள், 26 ஜனவரி, 2009

உறங்கும் உலகினர்

மையக் கிழக்கில் நடக்கும்சண்டை -- அது
மனத்தை உருக்கும் உலகெங்குமே! -- ஆயின்
நையத் தமிழரைப் புடைத்துக்கொல்வார்--கண்டு
நாவினை யேனும் அசைத்ததுண்டோ? -- இன்று
செய்யத் தகுந்தவை அனைத்தும்செய்த -- தமிழ்ச்
சீர்பெறும் ஞாலத் தமிழெரெல்லாம்,-- சென்று
பைய உலகினர் கண்களுக்குள் --- தோன்றி
பாய்ந்து விழித்தெழச் செய்திடாரோ?

வெள்ளி, 23 ஜனவரி, 2009

நெறிதவறிய வேடன்

தமிழன் எனச்சொன்னால் பாவமோ? -- இந்தத்
தரையில் குடிவாழ்தல் நோகுமோ -- நீரில்
அமிழ்ந்தும் அவன்சாக வேணுமோ -- தீயில்
அழிந்தால் புவிக்காவல் ஆறுமோ?

குழந்தை முதியோரும் பெண்களும் -- ஒரு
குற்றம் அறியாநோ யாளியும் -- உயிர்
இழந்தும் உடல்கள்புண் ஆகியும் ---போர்
இனியெத் தனைநாட்கள் போகுமோ?

இரத்த வெறிகொண்ட மாந்தர்கள் -- இங்கு
இயற்றும் சமர்நிற்க வேண்டுமாய் -- ஓர்
உரத்த குரல்தந்துஇஞ் ஞாலமும் ---அமைதி
ஓங்கச் செயற்பால காலமே!

புலிக்கே வலைவீசும் வேட்டுவன் -- வந்த
பொன்மான் முயல்தம்மைச் சாட்டுதல்,--- ஒரு
நெறிக்குள் அவனில்லை காட்டுமே --- உலகு
நில்லா தவன்மன்றில் ஏற்றுவீர்!

புதன், 14 ஜனவரி, 2009

எண்கணிதம் தொடர்ச்சி.

நானுமெண் கணிதம் பார்த்து
நாட்பலன் உரைப்பேன் நாளை
மானிடர்க் கெல்லாம் துன்பம்
மாறிடும் மகிழ்வு தோன்றும்!
ஏனது நடக்கும் என்றீர்?
இருபதும் ஒன்றும் கூட்டி.
மேனிலை ஆண்டும் சேர்க்க
மீளுமெண் ஐந்தாம் காண்க!

இரண்டா யிரத்தின் ஒன்பான்
இனிதாகும் ஆண்டில் நாளில்
இருபத்தில் பதவி ஏற்பார்
இரும்பெயர் ஓபா மாவே!
ஒருபத்தில் பாதி என்றால்
உயர்வெலாம் கூடும் என்பேன்!
உருவத்தில் உயர்ந்தாற் போல
ஓங்கிடும் அன்னார் ஆட்சி!!

என்கணக்கு இதுவே ஆகும்.
இனிவரும் காலம் காண்போம்....
பொங்கலுண்(ட) பின்னே வந்து
புதுக்கணக் கிங்கே சொன்னால்
பங்கமாய்ப் ் போகா தன்றோ?
பைந்தமிழ் மக்காள்! எங்கும்
பொங்குக பொங்கல் இன்பம்.
புதுப்பொலி வெங்கும் தங்கும்!

எண்கணிதப் பலன்

எண்கொண்டு கணித்துச் சொல்வார்
இனிவரும் பலன்கள் எல்லாம்!
விண்ணென்றும் இருந்த தைப்போல்
வேறுபடா திருக்கக் கீழே
மண்ணின்று பலதீ மைசூழ்
மடுவினில் விழுந்து மாளக்
கண்ணொன்றும் இலதாய்ச் செல்லும்
கதியினைக் கணித்தா சொன்னார்?

திங்கள், 12 ஜனவரி, 2009

viiram

வீரமே ஓர்முதலாய் வெற்றியே ஊதியமாய்
வீறுடன் போராடும் வெஞ்சமரில் --- சீருடனே்
நெஞ்சில் விழைந்ததெலாம் நேராம் விடுதலையே
நஞ்சுமே நாடெனின் ஊண்.


போரிடும் மறவர்க்கு வீரமே ஒரு  மூலதனம் ஆகும் 
வெற்றிதான் அவர்கட்குக் கிடைக்கும் இலாபம்.
கடினமான போரில் எழுச்சியுடன் போராடுகிறார்கள் .
அவர்கள் வேண்டியதெல்லாம்  உண்மையான நேர்மையான விடுதலையே ஆகும்.
நீ  நஞ்சை நாடு ( நாட்டம்  கொள் ) என்றாலும் அவர்கள் அதுவே எமக்கு "ஊண் " (உணவு ) எனறு  உண்டு அமைவர் .

இது வீரத்தின் இலக்கணம் ஆம் .

ஞாயிறு, 11 ஜனவரி, 2009

காளி தேவிக்கு விண்ணப்பம்

நீரின்றி வாடிடும் ஏழைத் தமிழரை
நீதானே காப்பற்ற வேண்டும் -- வலிந்த
போரொன் றவர்கள் பொறுக்கமாட் டார்மேல்
புகுத்தலை நீமாற்ற வேண்டும்.

வான்குண்டு வீச்சுக்கு வாழ்வு பறிபோகா
வண்ணமே நீயருள வேண்டும் -- அவர்க்கு
ஊண்பண்டு போலக் கிடைத்திட உன்னருள்
அல்லாது வேறென்ன வேண்டும்?

உடைமைகள் யாவும் இடையே களைந்தவர்
ஒயாத போராட்டம் வாழ்வில் -- கண்டு
படையவர் ஆற்றும் கொடுஞ்செயற்கு ஆளாய்ப்
படுந்துயர் நீபோக்க வேண்டும்.

சின்னஞ் சிறிய குழந்தைகள் மூப்பில்
செயலறி யாதவர் மக்கள் -- தம்மைக்
கண்ணுங் கருத்துமாய் முன்காத் தனையவர்
இன்றுசெய் பாதகம் யாதோ?

விரைந்தருள் நீயே புரிந்திடு தாயேநல்
வீரம் விளைத்திட்ட காளி --- அவர்கள்
குறைந்திட்ட வாழ்வின்னும் குன்றாமல் நீவா
நிறைந்திடச் செய்யிந்த நாழி!

வெள்ளி, 9 ஜனவரி, 2009

Problems for the new leader Obama

உலகத்தின் போர்கள் எல்லாம்
ஒபாமா ஓயச் செய்வார்;
சிலகத்தி தாம்போய்ச் சேரும்
செம்மையாய் உறைக்குள் என்று
பலபத்தி ரிகைகள், மேலோர்
பகர்ந்தனர் பதவி கொள்ள
நலமொத்து வருமுன் பேஇந்
நானில மெங்கும் வெம்போர்.

புகலப்போர் மட்டும் என்றால்
போகட்டும் என்போம் ஆங்கே
அகலப்பார் எங்கும் கெட்ட
ஆழ்பொரு ளியலால் வாடும்!
இகலுப்பி எதிரில் நின்ற
இன்னலை வென்றே விண்மீன்
மிகலொப்ப ஓபா மாவும்
மேலெழக் காண்போம் நன்றே.

வியாழன், 8 ஜனவரி, 2009

பொருள் அழுத்தம் emphasis

சொல்லுங்கால் ஒரு கருத்துக்கு அழுத்தம் கொடுத்துச் சொல்லவேண்டுமானால், ஒவ்வொரு மொழியிலும் அதற்கு வெவ்வேறு வசதிகள் உள்ளன.

தமிழில் இவ்வழுத்தம் கொடுக்கும் முறை எங்ஙனம் கையாளப்படுகிறது என்று பார்ப்போம்.

காசியப்பன் சோறு தின்றான். (வாக்கியம்)


இதன் பொருள்: காசியப்பன் சோறு, குழம்பு, பச்சடி, துவையல் (இன்ன பிற ) என்பனவற்றை உண்டான் என்று பொருள். வெறுங்சோறு உண்டான் என்பது பொருளன்று.

காசியப்பன் சோற்றை உண்டான் (வாக்கியம்).

இதில் "சோற்றை" என்பது: அவன் சப்பாத்தி, இட்டிலி, உப்புமா (இன்ன பிற ) என்பனவற்றை உண்ணவில்லை, சோற்றையே உண்டான் என்றாவது, மற்றவற்றை உண்ணாமல் சோற்றை உண்டான் என்றாவது பொருள்படலாம்.

இங்கு "ஐ" உருபு வந்து, சோறு என்ற சொல்லின்மேல் ஓர் அழுத்தத்தை உண்டாக்கியிருக்கிறது என்று உணரலாம்.

சின்னா மதுரை போனான்.

இதில் மதுரை என்ற சொல்லின்பால் அழுத்தம் ஏதும் இல்லை. மதுரை போய், அங்கிருந்து சொந்த ஊருக்கு உந்துவண்டியில் போனான் என்று பொருள் விரிவடைய இடம் தருகிறது இந்த வாக்கியம்.

சின்னா மதுரைக்குப் போனான்.

இங்கு வேறு இடத்துக்கு அவன் போகவில்லை, மதுரையோடு அவனது இப்பயணம் முற்றுப்பெறுகிறது என்று பொருள்படலாம்.

வேற்றுமை உருபுகள் ஒருவகை் பொருள் அழுத்தத்தை இடம் நோக்கி உண்டாக்குகின்றன என்று தெரிகிறது.

கடல்கடந்த சீனர்.

இங்கு கடல்கடந்த என்பது ஆங்கிலத்தில் வரும் oversea என்பதற்கு இணையான பொருளைத் தருகிறது. அதாவது இந்தச் சீனர் சீனா நாட்டினர் அல்லர் என்று பொருள்தரும். (The Chinese diaspora!)

கடலைக் கடந்த சீனர்.

இங்கு: இரண்டு மூன்று சீனர்களிடையே இந்த ஒருவர் கடலைக் கடந்தார், மற்றவர்கள் கடக்கவில்லை என்று பொருள் தரலாம். அதாவது ஒருவர் மட்டும் படகேறி வந்தவராக இருக்கலாம்.
கடலைக் கடந்த செயலானது முன்மை (primacy or importance) பெறுகின்றது. It does not refer to a category of Chinese. It is a reference to action of sailing across probably from China.

சில வேளைகளில் அழுத்தத்தை ஏற்படுத்த உருபு மட்டும் போதாமை ஏற்படலாம். எடுத்துக்காட்டு:

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் இரகசியம் சொல்வேன்.

இங்கு மட்டும் என்ற சொல் பிறருக்கு இந்த இரகசியம் கூறப்படாது என்று பொருள் தருவதைக் காணலாம். இருமுறை அடுக்கி வந்து அழுத்தம் குுடிவிட்டது என்று தெரிகிறது.்

இதுபோன்ற பொருள் அழுத்தங்களை (emphasis) நீங்கள் உணர்ந்ததுண்டா?

பிரிதிவி அல்லது பிருதிவி

பிருதிவி


அவஸ்தான் மொழியில் "பெரது" என்றால் விரிவுடையது என்று பொருள்.

ஒன்றைப் பெரிது எனில், உருவத்தில் பெரிது, இடத்தில் பெரிது, சிந்தனையில் பெரிது என, இன்னும் பலவாறு "பெருமை" (பெரிது) விரிவடையும்.


பெரிது (தமிழ் ) : பெரது (அவஸ்தான்).

பெரிது, பெரிது, புவனம் பெரிது என்பது ஔவையின் பாட்டு வரி.

அவஸ்தான் மொழியில் , புவனம் ( நிலவுலகு) பெரிதென்று கூற, பெரது என்ற சொல் பயன்படும். (perethu: broad, wide like the earth).

பெரிது (தமிழ்) : பிரிதிவி அல்லது பிருதிவி (சங்கதம்). பிரிதிவி = நிலவுலகு. பிரிதிவி = நிலவுலகின் தலைவன்.

புவனம் பெரிதுதான். சங்கதத்தில் பிரிதிவி என்ற சொல் ஏற்பட்டதும் பொருத்தமே.


ஆராயத்தக்கவை:

காஸ்பியன் கடலுக்குக் கிழக்கிலான பார்தியா (Parthia) , பார்தாவ். [ தமிழ்: பெரு, பரிதி முதலியவை ]
ஈரானிய வட்டாரத்தில் ர்த். ர்ட் என்பன ல் என்று திரிதல்.
(e.g. sard became sal, zard→zal, vard→gol, sardar→salar etc.).