வெள்ளி, 31 ஜூலை, 2009

munnu > man முன்னுதல் > மன்

மன்னுயிர் என்ற சொல்வழக்கு தமிழ் நூல்களில் பரவாலாக உள்ள ஒன்றாகும். இது humanity என்று பொருடரும் என்றாலும விலங்குகளையும் குறிக்கும். பொதுவாக உலகத்துயிர்கள் என்றும் பொருள் தரும்.

திருக்குறளில் பல இடங்களில் வந்துள்ளது, மணிமேகலையில்:

மன்னுயிர் முதல்வன் மகர வேலையன்
முன்னிய வங்கம் முங்கிக் கேடுற
பொன்னின் ஊசி பசுங்கம்பளத்து ..... தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை:29 : 15-17

இச்சொல்லாட்சியைக் காணலாம்.




வியாழன், 30 ஜூலை, 2009

சுகாதாரம் - தமிழா?

இது தமிழன்று என்று தமிழாசிரியர் கூறுவர்.

உடல் உயிர்வாழ்க்கைக்கு உகந்த நிலையே சுகம்.

உக >உகத்தல்
உக >உகப்பு.

உக > சுக > சுக+அம் = சுகம்.

உ > சு திரிபுக்கு எடுத்துக்காட்டு:

உலவு > சுலவு (வினைச்சொல)

இதுபோலவே உக > சுக என்பதும்.

ஆதாரம் என்பது செல்வம் தந்து போற்றுதல். ஆ முன்காலத்தில் செல்வம்.

ஆ தருதல் - ஆதாரம்,

பிற்காலத்தில் அது பிறவகைத் தரவுகளையும் குறித்தது.

இங்ஙனம் சுகம், சுகாதாரம் என்ற சொற்கள் தமிழ் மூலமுடையனவாகலாம்.
====================================================================
உயிர் முதலாகிய சொற்கள், அவ்வுயிர் சகர மெய் பெற்றுத் திரிதல் இயல்பு.
அடுதல் = சுடுதல், சமைத்தல்.

அடு+இ =( அட்டி) > (ச்+அட்டி) > சட்டி.
ஏமம் > சேமம்.
ஏண் > சேண்.
அமையம் > சமையம்,
அமைதல் > சமைதல்.

சில திரிபுகளில் நுண்பொருள் வேறுபட்டு, தொடர்புடைய வேறு பொருள் தரும்.

திங்கள், 27 ஜூலை, 2009

Sweet stuff ( கரும்பு முதலியவை)

கரும்பு பற்றிச் சங்க இலக்கியத்தில் காணப்படும் குறிப்புகளை உணர்வுகள் களத்தில் ஓர் இடுகையில் எழுதியுள்ளேன்.

கரும்பு ஆலைகளும் அப்போது தமிழ் நாட்டிலிருந்தமை தெளிவு.

திருக்குறளும் கரும்பைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டுள்ளது:

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.

மணிமேகலையிலும்:
காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக்கொடி வல்லியும் கரும்பும்் நடுமின்!
என வரும் ( 1: 46-47 : விழாவறை காதை)

சர்க்கரை, வெல்லம், சீனி, கருப்பட்டி. கற்கண்டு, பனங்கற்கண்டு, எனத் தமிழில் பல சொற்களிருப்பது தமிழின் சொல்வளத்தைக் காட்டுவதாகும்.

செவ்வாய், 21 ஜூலை, 2009

U<>A PATTERN OF CHANGE

am - um (opputhal) sangkatham
hAn (A) - hun (U) sInamozi
Am (A) - Om - Um (U) thamiz: opputhaRkuRippu.
Om enpathu ilangkaiththamizar vazakku .
(Omai) > Amai.
Omputhal enpathan adi Om - kAththal enRu porul. ithu Am> Amai enRu mARi OddukkuL pAthukAppAka irukkum uyiriyaik kuRiththathu.
ammai - ummai - umai - umA
ammA - ummA ( kEraLaththil sila sAthiyAridai vazangkuvathu).
Angkilaththil u (u) enRa ezuththukku iraNdu olippukaL uLLana. university (yu u) enpathum a (under ) enpathumAm
(ay)>ayA (sangkatham) n-aRpERu : (uy)> uyya - munnERa (thamiz)
umpar > ampar. (thamiz)
kudaithal > kadaithal. ku(u)>ka(ka). (malaiyALa vazakku n-Okkuka)
puthai > pathi (n-uNporuL vERupAduLLathu). uLLiRakkuthal enpathu pothupporuL.
(ul>al vErssol) ul>uL>uN. al>ar> arun-thu.
ulaithal (wander) : alaithal
kuNiththal > kaNiththal.
ar > ur : thiripukaL: aramAyik, yUrOp (U), ayarlan-thu;
urAy > arAvu.
udr (Sanskrit ) > udder (Old Eng) ud r > adar
ugligr uklikra (Old Norse) - ugly akli (English)
ulAmA > alAmA (arapu)
ullakE - allakE (Old Fr) to fill up to the bung
uNNAkku - aNNAkku
alSdar (Angkilam) - ulveSdar (A-French) -- alqvaSdir (Old Norse)
uL thIra - ulterior (English) thIrvAka uLpuRaththil.
ulE (Old Eng) - owl. (avl)

ஞாயிறு, 19 ஜூலை, 2009

"Nyabakam" or "In memory" ஞாபகம்

ஞாபகம் என்ற சொல் எங்ஙனம் பிறந்தது என்பதை ஆய்வோம்.

தமிழில் ந என்பது ஞ என்று திரியும்.

எடுத்துக்காட்டு:

நயம் > ஞயம்.

"ஞயம்பட உரை" (ஒளவையார்).

மலையாள மொழியில் ந எழுத்து ஞ என்று திரியும்.

நான் (தமிழ்) - ஞான் (மலையாளம்)
நங்கள் (நம்+கள்) - ஞங்ஙள் (ம்)

நங்கள் என்ற வடிவம் தமிழில் வழக்கிறந்துவிட்டது.

இவ்விதிகளைப் பின்பற்றி :

ஞாபகம் முன் நாபகம் என்றிருந்திருக்க வேண்டுமென்பதை யறிந்துகொள்ளலாம்.

வகரம் பகரமாகத் திரியும்.

ஒழிவு - ஒழிபு.
வசந்தம் - பசந்த் (வட இந்திய மொழிகளில்)
கோவம் - கோபம்.
தாவம் - தாபம். (தவி+அம்= தாவம், வழக்கிறந்தது).
கோவிந்தன் - கோபிந்த் ( வ.இ. மொழிகளில்)

வ - ப திரிபு தமிழிலும் பிறமொழிகளிலும் பெரும்பான்மையானது. ( )

இவ்விதியைக்கொண்டு, நாபகம் என்பதன் முன்வடிவம் நாவகம் என்று தெரிந்துகொள்ளலாம்.

நாவு+அகம் = நாவகம்.

ஒருத்திக்கு ஒன்று ஞாபகம் இருந்தால், அது அவள் நாவகத்திருக்கும். அதாவது மனத்தில் இருப்பது நாவில் வரும். மனத்திலிருப்பதை நாவில் வரவழைத்து அளந்தறியலாம். (இக்காலத்தில் நாவிற்கு ஈடாக எழுதச்சொல்லி அறிந்துகொள்ளலாம். ஓலைச்சுவடிக் காலத்தில், அதற்கு முன்பு எவ்வாறு என்று சிந்திக்கவும். )

நாவகம் = நாவிலும் அகத்திலும் என்றும் பொருள்கொள்ளலாம். எல்லாவற்றையும் நானே சொல்லவேண்டியதில்லை.

ஞாபகம் என்பது தமிழ்ச்சொல் என்பது இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும்.

தமிழனே, நாம் உரையாடியதையும் உரையாடாமல் விட்டதையும் சிந்தித்தறிவாயாக.

சனி, 18 ஜூலை, 2009

[tscii]«Î (Å¢¨É¡ø) : º¨Á, ¸¡öîÍ.

«Î+þø = «ðÊø (º¨ÁÂü¸ðÎ «øÄÐ º¨ÁìÌÁ¢¼õ)

þЧÀ¡Ä, «Î+þ = «ðÊ. (þíÌ ¸¡öîºôÀð¼Ð ±ýÚ ¦À¡Õû).

¸Õ = ¸ÕôÒ,

¸ÕôÒ+«ðÊ = ¸ÕôÀðÊ.

( ¸Ã¢Â ¿¢Èò¾¢ü ¸¡öîºô¦ÀüÈÐ).

¸ÕôÒì¸ðÊ > ¸ÕôÀðÊ ±ýÚ ÁÕÅ¢ÂÐ ±ýÀ¡Õõ ¯Ç÷.[/tscii]

The above is now converted to Unicode for your reading pleasure:

அடு (வினைச்சொல்) : சமை, காய்ச்சு.

அடு+இல் = அட்டில் (சமையற்கட்டு அல்லது சமைக்குமிடம்)

இதுபோல, அடு+இ = அட்டி. (இங்கு காய்ச்சப்பட்டது என்று பொருள்).

கரு = கருப்பு,

ஞாயிறு, 12 ஜூலை, 2009

கருப்பட்டி

கருப்பட்டி:

கருப்புக்கட்டி > கருப்பட்டி என்பார் உளர்.

கருப்பு+அட்டி = கருப்பட்டி.

(கரிய நிறத்திற் காய்ச்சப்பெற்றது என்பது பொருள்.)

இதில்: அட்டி = அடு +இ. அடுதல் = சமைத்தல்; எரித்து வேகவைத்தல்.

அடு > அட்டில் என்பது காண்க.

பகு >>

பகு > பகவு> பகவன்; அல்லது
பகு > பகம் > பகம்+அன் = பக+அன் = பகவன்;
பகு > பங்கு > பங்கன்;
பகு > பாகு > பாகன்;
பகு > பாகு > பங்கு > பாங்கன்.

பகம் என்ற சொல்லுக்கு இறைவனின் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட அடைவுகள் (சிறப்பியல்புகள் ) என்ற பொருள் மட்டுமின்றி, வேறு பொருள்களுமுண்டு. மனித உறுப்பு, கொக்கு, குருவி என்ற பொருள்களும் கூறப்படும். ஆதலின், பகவு+ அன் எனப் பிரிப்பதே குழப்பமொன்றுமில்லாததாம்.

செவ்வாய், 7 ஜூலை, 2009

MJackson

ஓடியும் ஆடியும் பாடியும் இந்த
உலகை மகிழ்வித்த வித்தகன், இன்று
நாடியின் துடிப்பு நின்றிட்ட தாலே
ஞால மக்களைத் துயரினில் ஆழ்த்தினன்!

துயர்வயப் பட்டவர் அயர்வினில் வீழ்ந்தவர்
துவண்டவர் தம்நிலை குலைந்தவர் யார்க்கும்
இசைநடம் வழங்கித் தேற்றிய இனியவன்
இன்றுநாம் தாங்கொணாத் துன்பத்தைத் தந்து
இவ்வுல கந்தனை அகன்றது கொடுமை!

என்றினி இவன்போல் இசைப்பெரு மனிதனை
இப்புவி வாழ்வினில் கண்டிடக் கூடும்?
வாழும் ஆண்டுகள் இன்னும் பலவாய்ச்
சூழ நின்றிடும் வேளையில் சென்றது
ஊழ்வலி என்றே அமைவதும் அரிதே
தனியொரு மனிதனாய்த் தணியாத் துன்பம்
பலப்பல கண்டும் துவண்டிட மறுத்தவன்
இனியும் வருவேன் என்றவன் மறைந்தான்
முயற்சி உடையார்க்கு இகழ்ச்சி இல்லென
முன்னோர் உரைத்ததை முன்வந்து நிறுவ
பயிற்சி மேவினன் பரிவொன் றின்றி
அவனையோ காலன் கொல்வது? ............
தவப்பெரு மகன்புகழ் தரணியில் வாழ்கவே!!