ஞாயிறு, 31 அக்டோபர், 2010

பறையர்க்குக் காவியம் பாடிய கவிராயர்

This is in praise of writer Sudhama of forumhub, who writes on "PaRaiyen". Knowledgeable on Saivath ThirumuRai.

பறையர்க்குக் காவியம் பாடிய கவிராயர்
இறைவர்க்குத் தம்வாழ்வு சூடிய புவிவாணர்
நிறைவரோ நானிலம் வாடிடும் நிலைகண்டே
உறைவரே நெஞ்சமே உழைப்போர் துயர்விண்டே!

சனி, 30 அக்டோபர், 2010

nandhan and paNan in swarga

ஈனத்துள் வீழ்ந்தவன் ப..யன் - இங்கே
இனிஒரு வாழ்விலை என்றழும் குறையன்;
வானத்துள் தூக்கினன் இறைவன் -- அருள்
வைப்பகம் வைத்தனன் நந்தனை, அறைவீர்!


பாவத்தில் ஆழ்குழிப் பாணர் -- குலப்
பாழ்வழித் தோன்றலை, வாழ்கலை வாணன்
தேயத்தில் யாரும்கொண் டேத்த -- அருள்
தேட்டத்தை ஏற்றுப்பொன் தோட்டத்தில் சேர்த்தான்.

இறைவனும் ஏற்றார் இவர்கள் -- இங்கு
இணையறு பற்றினுக் கிருக்குமோ சுவர்கள்?
குறைதலும் இலாச்சுவை தொடர்வீர் --- என்றும்
கோடுதல் இலாமொழி கொண்டணி படர்வீர்


வாழ்கலைவாணன் = திருமால்; இறைவன். தேட்டம்= சம்பாதிப்பு. பொன் தோட்டம் = சுவர்க்கம். குறைதலும் = குறைவதும் முற்றும் இலாதொழிதலும் உள்ளடங்க, உம்மை வந்தது.

வியாழன், 28 அக்டோபர், 2010

my poems and other writings

My poems and other writings are also available at http://bishyamala.wordpress.com/.
But they are not duplicated here.

You are cordially invited to visit me at both blogs.

SIVAMAALAA.

வெள்ளி, 22 அக்டோபர், 2010

குழந்தை

குட்டி - குழந்தை

குட்டியை மாந்தன் குழந்தைக்கே ஒப்பிட்டுக்
குட்டியெனும் சொல்லாலே கூறினீர் --- மட்டிலாத்
தாயின் பெருமையைத் தக்க படிசொன்னீர்
காயும் கனியாம் தரம்.

கனியாம் = கனியாகும். தரம் = தகுதி, நிலை.

தாயன்றி யார்?

தாயன்றி யார்?


பிறர்தயை இல்லாநற் பெற்றியில் வாழ
குறைமயல் இல்லாத குட்டி -- நிறைவளர்ச்சி
நேரிற் பெறவேண்டும், நேடவிது கற்பிக்கப்
பாரிதனில் தாயன்றி யார்?

பெற்றி = தன்மை; குறை மயல் =அறிவுமயக்கமாகிய குறை.; அல்லது குறையும் மயக்கமும். நேரில் பெறவேண்டும் = பல இன்னல்களையடைந்து அறிந்துகொள்ளாமல், நேரடியாய்த் தாயிடமிருந்து கற்றுகொள்ளவேண்டும். நேட = சிந்தித்தால் .


நிறைவளர்ச்சி = உடல் வளர்ச்சி மட்டுமின்றிப் பிற வளர்ச்சியையும் குறிக்கிறது.

வியாழன், 21 அக்டோபர், 2010

உயர்நற் கருத்துகள்

உயர்நற் கருத்துகள்


உயிரிகள் நூலுடையார் உண்மையாய்க் கண்ட
உயர்நற் கருத்துகள் உள்வைத்து -- அயர்வின்றி
நன்கு செலச்சொல்லும் நல்லார் சுதாமருக்கு
என்கொடுப்பீரோ பரிசு.


அருஞ்சொற்பொருள்.



உயிரிகள் = பிராணிகள். நூலுடையார்= நூல்வல்லுநர். உண்மையாய்க் கண்ட = ஆய்ந்து உண்மை என்று நிறுவிய. செலச்சொல்லும் = மனத்திற் பதியுமாறு சொல்கின்ற. என் = என்ன.

புதன், 20 அக்டோபர், 2010

maampazaththu vandu

Post subject: mAmpazaththu vaNdu
உணவுக்குள்ளேயே குடியிருக்கிறேன்
உம்மைப்போல் வெளியுலகை
நான் அறிந்ததில்லை!
அறிந்து மகிழத்தான் உங்கள் உலகில்
என்ன இருக்குமோ?
என் உணவுலகம்
எனக்குப் போதும்!
என் உணவுக் கோளத்தை
யார் வெட்டிப்பார்த்தாலும்
என்னோடு என் உணவையும்
வீசி விடுவார்கள்.
ஆனாலும்
மாம்பழத்து வண்டென்று
மதிப்பில் எனக்குக் குறைவில்லை.
என்னைப் படைத்தவன்
என்னையும் காக்கின்றான்.


=================


difficulty with reading fonts
பழுத்த அறிவினராம் பாவலர் பல்லோர்
கழுத்து வலித்திரு் கண்கள் கசிய

விழித்திர வெல்லாம் வியர்த்து வரைந்தார்
எழுத்தினது வேற்றுமையால் ஏதும் படித்தல்

ஒழித்தனர் நேயர்கள் ஒன்றும் அறியாது.
அழுத்திப் புலவர்சொல் ஆழ்ந்த கருத்தும்

இழைத்தநல் வேளைக்கு ் இழுக்கோ கணினி
பிழைத்தலறக் காக்குமோர் பெற்றிப் பராபரமே!

மக்கள் கடமை

மக்கள் கடமையே மாமுனி யாரென்று
தக்க[படி] தாமறிந்து தாள்பற்றல் --- ஒக்கநின்றார்
தன்மை அறிந்தால் தகுதி வெளிக்காணும்
உண்மை உலகோர் பெற.
எங்கெங்கு நோக்கினும் துன்ப நேர்ச்சிகள்
இயற்கைப் பேரிடர் எண்ணிலா இன்னல்கள்,
மங்கிடும் கதிரொளி என்றிடும் அறிவியல்
மாநிலம் காப்பவன் தானழித் திடுவன்
இந்தப் பூமியை என்பவர் பற்பலர்!
வருநாள் பான்மை அறியோம் எனினும்
திருநாள் விழாக்கள் எவற்றிலும் மூழ்கி
கிடைத்ததை மதித்துக் கேடற வாழ்வது
படைத்துயர் வெல்லும் பான்மை,
............... censored
............... கவல்வது மகிழ்ந்திருப் பீரே..

சாமியார்கள்

ஒரு நேரம் புகழின் உச்சியில்...
அடுத்த கணம்,
பழியின் படு பாதாளத்தில்,
பாவம் சாமியார்கள்.
உலகம் பழித்ததை ஒழித்துவிட
வழி கண்டிலார் போலும்!

அந்த வழியைக் கண்டுபிடித்துவிட்டால்
அதுவே உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு.

பிணியும் சனியும்
சதிகளுமே,
துறந்தாரையும விட்டுவைப்பதில்லை.

மழைத்துளிகள் பட்டதனால் Rain and nature


மழைத்துளிகள் பட்டதனால் மகிழ்வு கொண்டு
மயக்கியெனை ஈர்த்தாடும் மலர்கள் கூவி
அழைத்திசையைப் பாடுகின்ற குயில்கள் ஈடே
அற்றதொரு நடம்புனைந்த மயில்கள் இன்பம்
இழைத்தளிக்கும் இயற்கையென்றன் பக்கம் இன்னும்
என்ன இனி வேண்டுமிவை இருக்கத் தேனைக்
குழைத்தளிக்கும் சுவைக்கோலம் குறையா நாளும்
கொஞ்சுகிளி தத்திவரும் குந்தும் தோளில்.

ஒரு பூவின் கெஞ்சுதல்.

ஒரு பூவின் கெஞ்சுதல்.

அழகான ஆரிய மலர்நானே
அடுத்து நீ வந்திடு பொன்வண்டே!
பழகாமல் தேன்தனைப் பருகாமல்
பறந்துநீ தாண்டியே சென்றிடாதே.

பலகாலம் உனக்கே பூத்திருந்து
பசுந்தேனை வைத்தே காத்திருந்து
சிலநிமைய மாகிலும அமைந்திடாமல்
செல்வாயோ பூீ மனம் குமைந்திடாதோ!

வாராது போயின் வனத்துக்காரன்
வந்தென்னைக் கொய்துதன் அகத்துக்காரி
தேராத கூந்தலுக் கியைத்துக்கொண்டால்
தேன்போகும் வாழ்வுமே வீண்போகாதோ?

அவள்கொண்டை மேலே சென்றுகாய்ந்தே
அழிந்திடாமல் நீதேன் அருந்திடாயோ?
தவழரிய இதழ்களில் தவழ்ந்துவாராய்!
தனிமதுவை நீதான் உவந்துதேராய்!



===============================================
ஆரிய = மென்மைமிக்க (little, delicate), ஆர்தல்: நிறைதல்,,மனநிறைவுபெறுதல், அனுபவித்தல், தங்குதல் எனப் பல
பொருள்தருவது, ஆர் + இய). ் நிமையம் = நிமிடம். குமைந்திடாதோ = நெஞ்சமழிந்திடாதோ; தவழரிய் = பிற வண்டுகள் தவழ்தற்கு அரிய அல்லது முடியாத; தனி மது = தன்னேரிலாத அல்லது ஒப்பற்ற சுவைத் தேன். தேராய் = தேர்ந்தெடுத்துக்கொள்வாய்.். .
தேராத கூந்தல் - இங்கு இப் பூவினால் விழைந்து ஏற்றுக்-
கொள்ளப்ப்டாத (தோட்டக்காரன் மனைவியின்) கூந்தல்
என்பதை வலியுறுத்தும்பொருட்டு. (not sought by the flower to be worn )

மது - இங்கு தேன் என்று பொருள். மலேசிய மொழியிலும்
இதுவே பொருள். ("Madu" in Malaysian and Indonesian languages)

முதுகிழவன்

ஔிந்துகொள்ளும் எதிர்வீட்டு முதுகிழவன்



எதிர்வீட் டிலேஓர் முதுகிழவன் --- நான்
எட்டிப்பார்த் ்திட்டால் ஔநி்துகொள்வான்;
அதிர்வேட் டினைக்கேட்ட நாகமொன்றைப் --- போன்ற
அவன்செயல் என்று புரிந்துகொள்வேன்!

காணாத போது் மகிழ்ந்திருப்பான் --- எனைக்
கண்டதும் தோட்டுள்் புகுந்துகொள்வான்்.
வீணாக ஏனங்குப்் பார்க்கவேண்டும் --- ஒரு
வேதனைக் குள்ளவனை ஆழ்த்தவேண்டும்?

கண்களைக் காண்பொருள் தன்னில்வைத்து --- தன்
கருத்தினைக் கோணாமல் நெஞ்சில்வைத்து,
பெண்நிலை ஒப்புமை எண்ணியக்கால் -- அவற்கிப்
பேதைமை தான்துயர் பண்ணிடுமோ?


குறிப்பு:- ஏதோ ஒரு மென்பொருள் கோளாறு காரணமாக,
"ஔி ந்து" என்பது ஔநிது என்று தானே மாறிக்கொள்கிறது.
மேலும் (ஔி ந்து) என்பதை இடைவெளி இல்லாமல் எழுத
இயலவில்லை. அன்பர்கள் சரியாக வாசித்துக்கொள்ள
வேண்டுகிறேன். This note pertains to forumhub post.


_________________

இன்ப விடுதலை

இன்ப விடுதலை


நினைத்த இடத்தில் இருப்பு--- கண்படும்
நீலவான் எங்கும் பறப்பு,
கனத்த மழைவந்து காடெங்கும் நீரானால்
காண்பாயோ ஓய்விடம் வெண்புறாவே!

இரையினைத் தேடி அலுத்தல் ---பின்யானும்
இட்டபச் சைப்பய றுகத்தல்,
குறையும் உனக்கில்லை கூடவந் தென்னுடன்
கொஞ்சிக் கிடந்திடு வெண்புறாவே!

கறிக்குழம் புண்டிடும் மாந்தன் --- அவன்
கண்ணியின் பக்கலில் மேய்ந்தாய்!
வெறிக்கிரை ஆகிநீ வெந்தணல் வீழுமுன்
வேண்டினேன் வந்திடு வெண்புறாவே!

குடித்தனம் செய்திடு கின்றாய் --- சிறு
குஞ்சுகள் கொண்டவன் ஒன்றாய்! --- உன்
நெஞ்சினை நானறி வேன்உன்
குடிக்கிடம் இங்குண்டு வெண்புறாவே!

பெயலும் ஒழிந்தபிதுடித்திடும் ன் சோலை --- எங்கும்
தென்றல் நறுமண மாலை --- வர,
அயலிலோர் பெண்ணொடு வைகுதல் ஆகாதென்
ஆய்ந்துணர்ந் திட்டாயோ வெண்புறாவே!

என்னென்ன கிட்டினும் என்ன -- ஓர்
இன்ப விடுதலை அன்ன,
பொன்னில்லை பொங்கும் பொலிசெல்வம் ஒன்றில்லை
போடியென் றார்த்தாயோ வெண்புறாவே!
_________________
_________________
பொருள்கண்டு போற்றுதல் ஒன்றே கவிஞர்
நருள்தந்த நன்மையென் பார்.

நருள் = மக்கள்.்


Finding topics and substance for theses Reply with quote
ஆய்வுக் கட்டுரைகளுக்குத் தலைப்பும் பொருளும் தேடுவதில் உள்ள் தொலலைகள் பற்றிச் சில வரிகள். நல்ல தலைப்பும் பொருளும் கிடைக்காவிட்டால் யாது செய்வது?



நல்ல தலைப்புகள் வேண்டும் -- எந்த
நாட்டிலும் ஆய்வு செய் வோர்க்கு;
மெல்ல எதனையும் கொள்வார் -- தேடி
மேனி அலுத்ததன் பின்னே!

மொட்டைத் தலைமுழங் கால்கள் -- என
முடிச்சுகள் எங்கணும் போட்டு -- புனை ்
கட்டுரை நாட்ட முடிந்தால் -- முனை
கண்டவர் என்றுயர் வாராம்,

ஒன்றினையொன்று் உண்டிடுமா றேன்படைத்தாய்!

கரும்பினிலும் கரடியிலும் உயிரை வைத்தாய்
கருத்தாக அவைதமக்கு வளர்ச்சி வைத்தாய்
எறும்புமுதல் உலகினில்வாழ் உயிர்களெல்லாம்
ஒன்றினையொன்று் உண்டிடுமா றேன்படைத்தாய்!

உட்கொள்வோன் ஓருடம்பை உண்டபின்னே
ஒன்றொழியப் பிறிதுவளர் மாயை செய்தாய்!
கட்புலனுக் கொழிந்துவிட்ட உருவும்பின்பு
காட்சிதர மீண்டுவராக் காலம்கண்டாய்!

போர்செய்து பல்லுயிரை அழிக்கவெண்ணும்
புலைமைதனை நிலைமையென விடுத்ததென்ன,
ஏர் உய்தி பெற்றுலகில் அறமும் ஓங்க
ஏற்றவழி நின்றுதவ இணங்கிவாராய்

cat meditation

cat meditation Reply with quote
பூனை கண்ணை மூடிக்கொண்டால்


பூனை கண்ணை மூடிக்கொண்டால்
புவியும் இருண்டு விட்டதென்று
நினைத்துக் கொள்கிற தென்பார்கள்.
நேக்கு் அப்படித் தெரியவில்லை.
தியானம் செய்வது போலஅல்லவா
தெரிகிறது என்றன் அன்பர்களே
உடலை வளைத்துக் களிக்கையிலே
யோகம் போலும் தெரிகிறதே!

நயாகரா

Reply with quote
நயாகரா


நளின அலைசேர் நடையின் நதியே நயாகராஉன் ீ
கவனம் எலாம்நின் புதினம் புகழ்ந்திடும் காதலன்பால்!
புவனமிப் பூவன மாக்கிய ஆறுகள் தேவிநீயென்(று)
எவனும் விளம்புவன் என்றிடில் அஃதும் மிகையலவே!

வீழ்ச்சி அழகினை விஞ்சும் அழகும் உலகிலுண்டோ,
காய்ச்சிய வௌ்ளியை ஊற்றுதல் போல் ஒரு காட்சிதரும்,
மூச்சினை நிற்பிக்கும்் விந்்தையை ஈந்திடும் நீரிதுபோல்
பாய்ச்சும் அருவி பயக்கும் நதிதனைக்் கண்டிலனே.

கண்டிட வந்தவர் மேனி குளிரப் ப(ன்)னீர்தெளித்து
சுண்டி மனத்தினை ஈர்த்தனை சுற்றுப் புறத்திலெல்லாம்
மண்டிக் கிடக்குமிம் மக்கள் வரவினை வாழ்த்துதல்போல்
அண்டும் எனக்கும் அளித்தனை அன்பை மறக்கொணாதே

நீதி

Reply with quote
நீதி

பசுங்கன்று பரிதவிக்க
பசும்பாலைக் கறப்பவன்
கொசுவிடம் குருதி இழந்து
தண்டிக்கப் படுகின்றான்;
அண்டங்கள் படைத்தவன்
அனைத்தும் அறிந்தவனே.

வனமல்லியே

வனமல்லியே

(The substance for this poem came from another writer Mdm P.P.)

தாமே இருகால் நிற்க---முந்
தானை பிடித்திழுத்தாள்;
மூணு முடிபோட் டாளோ---இவள்
முழுஉரி மை பெறவே?
வீணே நிறுத்திவிட் டாளே--- அழகு
வீச்சில் சிரிப்பவளாம்!
நாணா தருகழைக் கின்றாள்-- அடாது!
நலமோ அவள்செயலே!!

ஆகுமா துணிச்சல் இதுவே-- இது
அடாவடி அன்றிவேறோ?
மாகவின் சேலையும் இதுவே --- என்
மன்னர் விழை பரிசே!!
நோகமுன் கவ்விடு கின்றாய் ---- அழ
காசை வனமல்லியே;
ஏகிடும் நானுனை மறவேன் ---- என்
இன்மனம் கவர்ந்தவளே

So sad... your beautiful voice மறைந்ததென்ன!

So sad, you went away, leaving behind your beautiful voice Reply with quote


இது பின்னணிப் பாடகி சுவர்ணலதா மறைந்தபோது பாடியது.

காட்டிற் பிறந்துவந்தாய் -- மாய
கானத்தின் எல்லை கடந்துவென்றாய்;
பாட்டுக் குயிலிசையே -- மீண்டு
காட்டிற்குள் ஏகி மறைந்ததென்ன!


ஊர்மக்கள் யாவரையும் -- நீ
ஊர்கோலத்துக்கோ அழைக்கவந்தாய்!
நேர்நிற்ப தியார்குரலோ -- பிற
நெஞ்சினில் தோன்ற அவைதவிர்த்தோம்

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

fogive me.....

INFORMATION FOR VISITORS.

At the request of some of my visitors and friends, I tried before to contact them through the application facilities software herein by return post/ message. But hitherto I had not been successful. This was owing to the software error. So far I have not also been successful in fixing this problem

Please understand and forgive me. I shall try again some time later.

Sivamaalaa.

இறைவன் வருவான்.


இறைவன் வருவான்.





(தெருள்பெற்றாரிடம் அருளுருவான இறைவன் வருவான். அல்லாத விடத்து? }

இது முன் பாடப்பெற்ற ஒரு கவிதையின் தொடர்ச்சி.


அல்லா விடத்து வருதலோ இல்லையே.
நில்லா தவனாய் அறவழி நீங்கியோன்
கல்லான் எனினும் கலைவிண் எனினுமே
செல்லான் இறைவனின் சீரடிப் பாங்கே.

அறம்திறம் பாதோர் ஆழியின் முத்தாம்
புறம்செல வீழ்ந்தோர் புவனம் நி றைத்தார்
பரம்பொருள் உள்வழி பாவித் தவரே
தரம்தரு மாந்தர் சிலரே சிலரே.

தீதில் முகிழ்த்தோர் தினம் நீர் புகட்டினும்
யாது நிலையிலும் யாண்டுமே ஆட்படார்
சாதல் வரினும் சதைசிதை வாயினும்
மோதி அறச்சுவர் முட்டி அழிபவர


மொழி நடை கடினமாகிவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற நினைப்புடன் தான் எழுதுகிறேன். மரபுப் பாக்களில் சில வேளைகளில் தவிர்க்க முடியவில்லை.

நான் எழுதியதன் பொருள்:

அல்லா விடத்து = இறைவனைப் பற்றிய தெளிவை அடையாத இடத்தில்; வருதலோ இல்லையே.= அவன் வருவதில்லை;
நில்லா தவனாய் = அற நெறியில் நில்லாதவனாக , அறவழி நீங்கியோன் = அந்த வழியிலிருந்து நீங்கியவன்;

கல்லான் எனினும் = படிக்காதவன் என்றாலும், கலைவிண் எனினுமே = படிப்பில் உயர்ந்தவன் என்றாலும்,
செல்லான் - போய்ச்சேரமாட்டான், இறைவனின் சீரடிப் பாங்கே.= இறைவனின் சீரான திருவடிகளின் பக்கத்திலே.




அறம்திறம் பாதோர் = அற வழியினின்று மாறிச் செல்லாதோர்;

ஆழியின் முத்தாம் = கடலினின்று கிடைக்கின்ற முத்துப்ப்போன்றவர்கள்;

புறம்செல வீழ்ந்தோர் = வேறு வழிச்சென்று வீழ்ச்சி அடைந்தவர்கள்;

புவனம் நி றைத்தார் = உலகெங்கும் நிறைந்துள்ளனர்;

பரம்பொருள் உள்வழி = கடவுள் உள்ளானெனச் செல்லும் வழி, பாவித் தவரே = பின் பற்றியவர்கள்;

தரம்தரு மாந்தர்= உலகிற்கும் தமக்கும் ஒரு தரத்தை, அல்லது உயர் நிலையை வழங்குவோர், சிலரே சிலரே.= சிலர் என்பதில் ஐயமில்லை.


தீதில் முகிழ்த்தோர் = தீமையில் தோன்றியவர்கள்;
தினம் நீர் புகட்டினும் = ஒவ்வொரு நாளும் நீங்கள் அறிவு ஊட்டினாலும்;

யாது நிலையிலும் = எத்தகைய நிலையிலும்; யாண்டுமே ஆட்படார் = என்றுமே கடைப்பிடிக்க மாட்டார்;
சாதல் வரினும் = மரணம் வந்தாலும்; சதைசிதை வாயினும் = தம் உடல் அழிந்தாலும்;


மோதி அறச்சுவர் = அறமாகிய திண்ணிய சுவரில் சென்று இடித்துக்கொண்டு, முட்டி = அதில் திரும்ப வழி அறியாராய் மேலும் அடிபட்டு, அழிபவர் =, என்றவாறு.

என் தாழ்மையான உரையைப் படித்து, கவிச்சுவை காண்பீர்கள் என்று நம்புகிறேன்.

வியாழன், 14 அக்டோபர், 2010

ஆண்டு பலசெல்லும்

ஆண்டு பலசெல்லும் ஆனாலும் பிள்ளையே
ஆண்டவர்க்கு நீ இதை ஆழ்ந்துணர்ந்தால் --- வேண்டுமோ
தீண்டி அடையும் தெருள்சேரா இன்பமதைத்
தாண்டி மனம்நிறுத்து வோம்.



கிட்டிய தெல்லாம் கிழமும் இளைஞனுமாம்
மட்டிலா மாவொளியின் மாணருளே --- ஒட்டியுயிர்
உள்ள பொழுதே உவந்து வணங்கியே
கள்ளம் இலாவாழ்வு காண்.



மன்னும் அகந்தன்னில் மாசில் மணவழகன்
தன்னைத் தலைதாழ்ந்து போற்றியும் --- தன்னையே
தானறிந் துள்ளடங்கித் தாரணியில் வாழ்வாரை
ஏனணுகும் துன்ப மினி



நிறைவாழ்வோ கற்பின் நெறிகெட்டால் நித்தல்
சிறைவாழ்வே சீரழிவின் சேர்க்கை --- முறைசேர்
இறையுணர்வில் தோய்ந்தே இனிக்கும் இசையில்
கறைபுகல் இல் வாழ்வில் கனி.


கலம்குறை நீராய்வீண் காலம் கழிப்பன்
விலங்கினமும் வெல்லும் நரனை--- நலங்கள்
பலபெற்று வாழ்வனவோ பார்மனக்கண் முன்னே
வலம்வருமே வாய்க்குமோ சான்று?