புதன், 19 அக்டோபர், 2011

எலிப்பாவம்

எலிப்பாவம்

(நகைச்சுவைக் கவிதை)


எலிக்கு உண்ண எதுவும் கிடைக்காதபடி எல்லாம் பத்திரப்படுத்தி வைப்பதாக நண்பர் ஒருவர் எழுதினார். அவருக்கு எழுதிய நகைச்சுவைக் கவிதை

எலிப்பாவம் பொல்லாத பாவம் முகமே
சுளிக்காமல் ஊண் ஊட்டு வீர்

தினமும் வரும் எலி தின்னாமல் போனால்
குணமில்லை கூடிவாழ் வார்க்கு.

கூடிவாழ் வார்க்கு.- for the family

வெள்ளி, 14 அக்டோபர், 2011

மங்கும்நன் மாலையே வா.

பாலை வனம்காண் பகலோன் எமன்நட்போ?
காலை எழுச்சியே காய்கிறதே ! -- நூலாடை
இங்கே பயனில்லை; இன்பகல் துன்பமலை
மங்கும்நன் மாலையே வா.

மணற்குன்று (தொடர்ச்சி)

மணற்குன்று (தொடர்ச்சி)

சென்றிமைகள் சேர்ந்திணைய சீறிப் புயல்மணல்
குன்றமைய வீசிடும் கூடாது -- நின்றிடவும்;
அவ்விடம் நீங்க அசைந்தோடக் காலெங்கே?
எவ்விடமும் தூசுமணல் ஏகு!

வியாழன், 13 அக்டோபர், 2011

பாலை மணற்குன்று

வருண பகவான் வலிமையோ டூதி
பெருமணற் பாலையில் குன்றுகளை மேலெழுப்பி
விந்தைகள் செய்திடுவார் வேறெங்கும் காணாத
செந்தீபோல் வேகும் பகல்.

புதன், 12 அக்டோபர், 2011

pleasures from poems

கடின நடையில் வரு கவிதை -- தமிழ்க்
காதல் உடையவர்க்குத்
தென்றல் தரு பொதிகை!

மெதுவு நிலையில் எழு பாடல் -- எளிமை
மேவிக் கவர்ச்சிதரும்
மேலும் முயற்சி அறும்

எளிய தமிழ்க்குரைகள் வேண்டா - கதலிக்
கனியை உரித்துணவே
இனிமை மிகுந்துவரும்!

கடினக் கவிதை மாதுளையே -- ஓடும்
உடைந்த கத்துத்தரும்
சுளைமி குத்தினிமை.

செவ்வாய், 11 அக்டோபர், 2011

Tamil word for date thEthi

சங்க காலத்திலும் (2000 ஆண்டுகளின் முன்) அதற்கு முன் மிகப் பழங்காலத்திலும் தமிழை எவ்வளவு திருத்தமாக மக்கள் பேசினார்கள் என்று தெரியவில்லை. இதை நாமறிய உதவும் ஆதாரங்கள் நமக்குக் கிடைக்கப்போவதில்லை. இலக்கியங்களில் காணப்படும் தமிழை வைத்து, இதை நாமறிய இயலாது என்பது கூறாமலே புரியும்.

திகைதல் என்ற சொல் பெரிதும் வழக்கில் இல்லை என்று நினைக்கிறேன். "விலை திகையவில்லை" என்று கூறுவதுண்டு.

The price has not been determined or settled என்பது இதன் பொருள்.

நாள், நேரமிவை திகைவதற்குத் (to determine) தேதி, மணிக்கணக்கு முதலியவை உள்ளன.


திகை > திகைதி > திகதி.

தி என்பது விகுதி.

கை என்ற எழுத்து, "க" ஆனது, ஐகாரக் குறுக்கம்,

திகதி > தேதி,

பகுதி > பாதி என்பதுபோன்ற திரிபு.

தேதி என்றால், "இன்ன நாள் என்று நிறுவப்பட்டது" என்பது பொருள்.

honey bee

the smart honey-bee

கொங்கலர்தேர் தேனீ



முன்னிருப்ப தொருநச்சுச் செடியாம்
முனைந்துவரும் தேனீயும் அறிந்தே
எண்ணரிய நறுமணமே பரப்பும்
எழில்மலரைத் தான் நாடி அமரும்!

அஞ்சிறையின் கொங்கலர்தேர் தேனீ
அதுதன்னை ஏமாற்றும் வித்தை
தன் சிறைக்குள் தான்கிடக்கும் மாந்தன்
தாரணியில் கண்டறிந்த துண்டோ?

Election & Minister post

தேர்வும் தேர்தலும் ஒன்றுக்கொன்று
திறமான ஒற்றுமைகள் தெரியக்காட்டும்,
ஆர்வம் கூடிவர ஆடிப்பாடி
அகமகிழ அவைபோலச் சிலவே யுண்டு.

தோற்றவர்க்கு மறுவழியில் அமைச்சர் வேலை.
துரைத்தனத்தார் தரவந்த போதும், "வேண்டாம்!
ஏற்றவனாய் மக்கள் எனைக் கருத வில்லை,
இனி எதற்கோ?" என்று நின்றார் அஃதே வீரம்!

On Sathya Sai

கேட்டபோ தெல்லாம்நீ உதவி செய்தாய்,
கேடகற்றி வாழ்வைநீ விளக்கம் செய்தாய்!
ஊட்டமிகப் பெற்றதெலாம் மறக்கப் போமோ?
ஊரறிய விந்தைபுரிந்் துயர்ந்து நின்றாய்.
நாட்டமுடன் நானுனையே வணங்க, இங்கே
யாமிருக்க அச்சமிலை எனவே கையை
ஆட்டியப யம்தந்தாய் அயர்வு தீர்ந்தேன்
அகிலம்நீ நீங்கினையோ என்றும் உள்ளோய்!

உடற்சட்டை களைந்ததனால் ஓய்வ துண்டோ
உன்பற்றா ளர்தமக்குன்் கடைக்கண் பார்வை?
கடல்வட்டம் நிலவரம்போ டிவை கடந்து
கனிந்தஅருள் நீபொழியத் தடைகள் ஏது?
விடலறியார் உமதுதிரு வடிகள் தம்மை
விழைந்தணுகும் நல்லடியார்; சத்ய சாயி,
உடலொருமைக் குள் அடங்கா ஆன்ம ஞானி
உலகில்நீ வலம்வந்தே ஓங்கி நிற்பாய்.

on corruption

ஊழல் இலா ....

ஊழல் இலா நாடெங்கே? -- வான்
உச்சியிலே பறந்தபடி,
ஆழ்கடல்ம லைகடந்து -- தேடி
அலுத்ததே மிச்சமாச்சு.

பற்றாத காரணத்தால் -- ஊட்டுப்
பெற்றாலும் வேறுசிலர்
வற்றாத வசதியரும் -- வாங்க
வழிகண்டார்; ஏன்? செல்வீர்!

செத்தாலும் வாய்க்கரிசி -- வந்து
சேர்பிணமே எரிசேரும்,
எக்காலும் தீர்வில்லா -- ஓர்
இழிநோய்க்குள் இவ்வுலகம்.

god and earthquake

மலர்கள் குலுங்கினால் -- இங்கு
மனமகிழ் வாக்கும் ஒருநிகழ்வாம்;
மலைகள் குலுங்கினால் -- அஃதிம்
மன்பதை மாய்க்கும் குலைநடுக்கம்.

(வேறு சந்தம்.)

அறிவெழு பூங்காவெனும் -- புகழ்
ஆர்ந்தெழும் யப்பான் நிலத்தினிலே;
செறிவுறு மண்பிளந்தே -- மக்கள்
செத்தனரே துன்பம் உறப்பலரே.


பூவெனத் தந்துவந்தான் -- இறை
பூமியைப் பொன்றாத மக்கள்குலம்,
மேவி மகிழ்வுறத்தான் -- பின்னும்
பூவெனவே எண்ணிக் குலுக்கினனோ?

commentary.
தந்துவந்தான் - தந்து உவந்தான்; தந்து
மகிழ்ந்தான்.
ஆர்ந்தெழும் - நிறைந்து எழும்;
செறிவுறு = solid
யப்பான் = ஜப்பான்.

பூமியைப் பூவாக மக்களிடம் தந்தான் இறைவன். அதனால்தானோ, அப்போதைக்கப்போது பூவைக் குலுக்குவதுபோல, பூமியையும் இறைவன் குலுக்கிவிடுகின்றான், ஏற்படும் சேதங்களை மறந்தானோ?

உலகத்தை "மலர்தலை உலகம்" என்பதுமுண்டு. தலை = இடம

எருமைக்கு விருது

பொறுமைக் கெருமை! பொய்யாமோ என்சொல்?
அருமையில் அஃதொப்ப தில்.

கண்டாலும் தன்வழியே போமெருமை தன்னாலே
உண்டாமோ யாதும் இடர்?

பாரூட்டும் பால்தந்து நல்லெருமை! அவ்விலங்கால்
சீர்பெற்றார் செந்தமிழர் காண்!

கடித்த கொசுவையும் கண்டுகொள்ளா உள்ளத்து
எடுத்த தெருமை விருது.

செயற்பால தவ்வெருமை போற்றல் ஒருவற்
குயற்பால தோரும் கொசு.

Elephants யானை

கோலலம் பூர்நகரின் கொஞ்சமப் பால்செல்ல
கோல இயற்கையே கொஞ்சுசர --- ணாலயத்துள்
யானைகள் பற்பல யாரும் மகிழ்வெய்தக்
காணலாம் காண்பீரே சென்று.

அண்மையில் இம்மலை நாட்டில் அமைத்ததுவாம்;
உண்மை! உயிர்களைக் காத்திடும் --- தண்மையினால்
ஆனைக் கரண்செய்தார் அம்முயற்சி நாம்புகழ்வோம்
கூன்படாக் கொள்கை இது.

ஆனைகளை நாம்காக்க ஆனைமுகன் காக்கநமை!
வான்கதிரைப் போல வளர்ந்திடுக --- மேனிலைக்கு!
பானை வயிறன் பரந்த அருட்கொடையால்
யானும்நம் பாவலரோ டிங்கு.

BIRTH DEFECTS

உடற்குறை ஏதுமின்றி -- இந்த
உலகிற் பிறந்துவிட்டால்,
தவக்குறை இல்லையென்று - நாம்
தனிமகிழ் வெய்திடலாம்.

வலிப்பு வளிமுடக்கு --இவை
வந்து துயர்படுவார் -- தமை
நினைப்பினும் நெஞ்சுமிக --ஒரு
நிகரிலாத் துன்புறுமே

பிறவியில் ஓர்சிறுவன் -- அவன்
பிற்பட இக்குறைகள்,
இறைவன் நிறுவினனோ --அதற்கும்
யாதுரை காரணமோ?

வளி - வாயு. முடக்கு - கைகால் முடக்கு.

பாவம் கழுதை

பாவம் கழுதை பளுதூக்கும் நோவதனால்
ஆவ தறியாமல் கீழ்விழுந்து --- கேவிப்
புரண்டெழுந்து கத்துமோ போம்கதி எண்ணி
மிரண்டநிலை மீளுமோ தான்.

This was a response to Mr Chinnakannan wrote:

Quote Originally Posted by chinnakkannan View Post
உடல் வலி தான்.. குப்பை கூளங்களில் கழுதை புரண்டுபார்த்ததில்லை..வைகை ஆற்று மணல் வெளியில் புரண்டு பார்த்திருக்கிறேன்.. கூடவே இலவசமாய் இனிய கானமும் இசைக்கும்..!






.

திங்கள், 10 அக்டோபர், 2011

amiz > tamiz

குமரிமுனைக்கும் தெற்கே குமரிநாடு இருந்ததாகத் தமிழ் நூல்கள் தெரிவிக்கின்றன. சமஸ்கிருத நூல்களிலும் புராண நூல்களிலும் குறிப்புகள் உள்ளன என்பர். இது குமரி(க்) கண்டம் என்றும் அறியப்படுகின்றது.இதை மறுப்பவர்கள் சிலரும் உள்ளனர்.

ஆய்வாளர் சிலர், தமிழ் என்ற மொழிப்பெயர், அமிழ் என்ற சொல்லினின்றும் பிறந்ததாகக் கூறுகின்றனர். குமரி அமிழ்ந்து போயிற்றன்றோ? அமிழ்ந்துபோன நாட்டவரின் மொழி என்ற பொருளில் இங்ஙனம் அமைந்ததாம். தமிழ் என்ற சொல் தோற்றம் பற்றி வேறு கருத்துக்களும் உள்ளன.

உயிர்முதலாகிய சொற்கள் உய்ர்மெய் முதலாகத் திரிதலை முன் இடுகைகளீல் எடுத்துக்காட்டி யுள்ளேன். Pl see http://bishyamala.wordpress.com/2011/10/11/

அமிழ் என்பதுதான் தமிழ் என்று திரிந்து மொழிப்பெயர் அமைந்தது என்பதை ஏற்றுக்கொள்ள இயலுமாயின், இத்திரிபையும், மேற்குறித்த சொல்லமைப்பு விதியின்பால் அடக்கிவிடலாம்.

தெலுங்கு என்ற மொழிப்பெயர் அமைந்ததற்கு பலவாறு ஆய்வாளர் கூறுவதுபோல, தமிழுக்கும் பல கூறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.