பார்க்குமிடம் எங்குமொரு
நீக்கமற நிறைந்துள்ளாய்
பரிபூரணானந்தமே! --- நானும்
நோக்குமிட ம் ஒவ்வொன்றும்
ஈர்ப்பதெது கவனமதை
மக்கள்சிலர் ஆர்ப்பாட்டமே!

படைத்தவன்நீ உலகமிதை,
துடைத்தழிக்கும் பலமுடையோன்,
கருத்துமிது பொருத்தமன்றோ--- நீயும்
இடைத்துலக்கித் துயர்போக்கி
இவர்களெலாம் அமைதிபெற
ஏன் உய்க்க மறந்துவிட்டாய்!

இவர்களைநீ விலக்கிவிடு
இனிநீயே மேற்கொள்வாய்
இவருதவி உனக்கெதற்கு -- நல்ல
தவம்பிழைத்த நெறிசெல்வார்!
தண்ணருளைப் புறம்வைத்தார்
தலைதடு மாற்றமுற்றார்.