சனி, 12 அக்டோபர், 2013

முச்சலிக்கை

வெவ்வேறு சார்பினர், ஒன்றுகூடி கலந்துரையாடி ஏதேனும் ஒன்றுபற்றி ஆய்வு நடாத்துதற்கு,  கலந்தாய்வு என்கிறோம். தொழிற்சங்க  வட்டாரங்களில் பெரும்பாலும் "பேச்சுவார்த்தை" என்கிறார்கள். இது மக்களிடையே பயின்று வழங்கி இன்று ஆட்சி பெற்றுவிட்ட வழக்கு. பேசி  முடித்து எதையேனும் வார்த்து எடுக்கவேண்டுமே! இப்படிப் பார்த்தால் நன்றாகவே உள்ளது. இல்லையேல், "பேச்சு" என்பதும் "வார்த்தை" என்பதும்
தொடர்பு உடையவை என்பது சொல்லாமலே புரியும். பேச்சு  (talk)   வார்த்தை, (word).  vaarththal - moulding. Figuratively speaking, all words are moulded.
இது நிற்க!

பேச்சுகளின் முடிவில், அறிக்கை வெளியிடுவார்கள். அறிக்கை வெளியிடப் படாத பேச்சு, பெரும்பாலும் பயனற்றதாக இருக்கலாம். அல்லது
பின்னொரு நாளில் மீண்டும் கூடுவதாக இருக்கலாம்.

பேச்சு முடித்து அறிக்கை > முடித்து அறிக்கை > முடித்தறிக்கை > முடிச்சறிக்கை > முச்சறிக்கை.

முச்சறிக்கை>  முச்சலிக்கை > முச்சலிக்கா

Note:
வாய் > வார் > வார்த்தை என்பதும் கவனிக்கத்தக்கதே ஆகும்.
வாய் இடமென்றும் பொருள். வார்த்தல் ‍ ஓர் அமை‍ப்புள்ள இடத்தில் இடுதல். அமைத்தல்.

செவ்வாய், 8 அக்டோபர், 2013

chengkOl

chengkOl

மன்னவன் செங்கோலே காரணமாக....
“அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்” (543)

என்னும் குறளில் அரசசாதியையும் செங்கோலின் மாட்சியையும் கூற வந்த திருவள்ளுவர், முதற்சாதியாகிய சிறப்புடைய அந்தணசாதிக்குரிய வேதத்திற்கும் அறத்திற்கும் மன்னவன் செங்கோலே காரணமாக நின்றது என்றார்.
Cited above: a Question posed.

இந்தக் கருத்தின்வழி சென்றால், மன்னவன் செங்கோலின் வல்லமையே, அந்தணராவாரின் சாதியமைப்பிற்கும் அவர்கள் மக்களிடையே அடைந்த மேனிலைக்கும் காரணம் என்றாகிறது. நேரடியாகக் கூறினால், அந்தணர் என்பாரை அரசர்களே உண்டாக்கி, மன்பதையினுள் நடமாட விட்டனர் என்றாகிறது....

இதைத்தான் வள்ளுவர் கூறினார் என்கிறீர்! So, it was the second jati (kings) who created the first jati (anthaNars), as per this research.

எந்த அரசர் ஆட்சியில் அந்தணர்கள் நிறுவப்பட்டனர் என்று கூறுங்களேன் கேட்டு இன்புறுவோம்....

திருக்குறள் எழுதப்படும் காலத்தில் அந்தணர் .............

திருக்குறள் எழுதப்படும் காலத்தில் அந்தணர் .............
திருக்குறள் எழுதப்படும் காலத்தில் அந்தணர் .............

இருந்தால் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சிதான்.இது கடைச்சங்கத்தின் இறுதி நிலையில் என்பர் அறிஞர் சிலர்...கடைச்சங்க காலத்தில்தான் சாதிகள் உருப்பெறத் தொடங்கின என்றும் வேறு சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இவைபோன்ற சாதிக் குறிப்புகள் சங்க நூல்களில் இருந்தால் அவை இடைச்செருகல்கள் என்பாருமுண்டு. சாதிகளை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு வரலாற்று அடிப்படை மிகமிகத் தேவையாய் இருந்த காரணத்தால், இங்ஙனம் முனைவதும் மனித இயற்கைதான். கற்பாருக்குத்தான் கன மதி தேவை.

சேரன் செங்குட்டுவன் கண்ணகி சிலை நிறுவிய ஞான்று, கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னன் வந்திருந்தான். அது கி.பி இரண்டாம் நூற்றாண்டு என்று நிறுவப்பட்டுள்ளது. கயவாகு என்று பல மன்னர்கள் இருந்ததால், பிற்காலத்துக் கயவாகுவைத்தான் இளங்கோ குறித்தார் என்று சிலர் வாதாடத் தொடங்கினர். எப்படியும் சங்க காலத்தை பல நூற்றாண்டுகள் பின் தள்ளிவிட வேண்டுமென்பது இவர்கள் துடிப்பு.
வள்ளுவர் இளங்கோவுக்கு முந்தியவர். இப்போது குறிக்கப்பெறும் திருவள்ளுவராண்டு, சரியானதென்று தென்கலைப் பெரும்புலவர் சாமிநாத ஐயரும் ஏற்றுக்கொண்டுள்ளார். 
பிற்காலத்துச் சமண சங்கம் வேறு. முன்னிருந்த முச்சங்கம் வேறு



பிராமணத் தன்மை

சுவானுபவப் பிரம ஞானமுடையவனே பிராமணனென்றோதி..........
“ஸாமவேத வஜ்ரஸூசிகோபநிஷதம் – பிராமணத் தன்மைக்குரியது சீவனன்று, உடம்பன்று, சாதியன்று, கல்வியறிவன்று, கன்மமன்று, தன்மமன்று எனத் திருட்டாந்த வாயிலாக விளக்கிச் சுவானுபவப் பிரம ஞானமுடையவனே பிராமணனென்றோதி இதுவே, சுருதிஸ்ம்ருதி புராணேதிஹாசங்களின் அபிப்பிராயம் என்று முடிவுரை மொழிந்துளது. “
சரிதான், மறுக்கமுடியாத உண்மைதான், ஆனால் உம் முன் நிற்பவனொருவன், சொந்தப் பட்டறிவும் பிரம்மம்சார் உணரறிவும் உடையானென்று நீர் எப்படி அளவிட்டறிவீர்? அதனால்தானோ, அப்பன் பிராம்மணன் என்றறியப்பட்டு, இப்போது பூணூலணிந்து கோவிலில் மந்திரமோதுவோனே பிராமணன் என்ற முடிவிற்கு மக்கள் வந்துவிட்டனர்....

People are just being practical about it.
If you go by certain criteria, even an Imam or a Catholic priest can be a Brahmin, though not a member of the Brahmin caste, as you yourself seem to come to realise. So, as per you, was VaLLuvar adverting to a member of a Brahmin caste (if existed then in present rigid form) or one who is Brahmin by certain qualities? If it is the latter, there is no need to feel so disappointed at kuRaL commentaries that leave out or differently interpret "paarppaan","anthaNar" etc.,
You agree that these words do not have a single meaning. Shall we call them multi-purpose words? Why work so hard on these terms...?

These were replies given to queries. 
.

மன்னவன் கோல் - அந்தணர்



அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)

நாமக்கல் கவிஞர் உரை

அந்தணர்கள் ஓதும் வேதம் முதலிய ஞான நூல்களின் அறிவு மக்களிடையே பரவுவதற்கும், அதனால் நாட்டில் அறங்கள் சரியாக நடப்பதற்கும் ஆதரவாக இருப்பது அரசாட்சியின் 
 செங்கோன்மை

மன்னவனின் செங்கோன்மை என்பது அரசு தரும் பாதுகாப்பு என்று பொருள்படும். ("ஆதரவாக" என்பது ஒருவகையில் சரி என்றாலும், ஆதி என்பது ஆதரவன்று. பொருள் முரண்படுகிறது.)

வேதங்களை ஓதுவது, அவற்றை ஓதுவதனால் உண்டாகும் பலன்களை அடைவதற்காக. மன்னன் எப்படி அதற்கு "ஆதி" (ஆக்கம் தருதல்) ஆவது?

அரசியற் பாதுகாப்பு என்பது நேரல்லாத [indirect ] காரணம். மூல காரணம் ஆகாது.

ஆகவே இங்கு அந்தணர் என்ற சொல், "பிராமின்" என்ற பொருளில் வரவில்லை. நூல் என்பதும் வேதங்களைக் குறிக்கமாட்டா!

வேதங்களுக்கும் அவற்றை ஓதுவதற்கும் ஆதியாய் நிற்பது பிரம்மன். மன்னன் கோல் அன்று.

The mannan is no more than an obedient "consumer" of the Brahmin services in this respect. Wrong interpretation.

திங்கள், 7 அக்டோபர், 2013

உலகம் சுழல்கிறது. references from KuRaL

உலகம் சுழல்கிறது.

உலகம் சுழல்கிறது.

ஏறத்தாழ 2000 ஆண்டுகளின் முன் வள்ளுவர் காலத்தில் வாழ்ந்த தமிழர், உலகம் உருண்டையானது என்று நம்பினரா, அன்றி அது ஒரு தட்டை என்ற கொள்கை உடையோரா என்பது தெரியவில்லை.

வள்ளுவனாரும் இதுபற்றி நேரடியாகத் தம் குறளில் ஏதும் சொல்லவில்லை.

உலகம் சுழல்கிறதென்பதை அவர் ஒருவாறு உணர்ந்திருந்தார் என்றே தோன்றுகிறது. ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்லாமல்,

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை.

என்கிறார்.

சுழன்றும் எனின், உலகம் பல்வேறு நெறிகளிற் சென்றாலும் என்று பொருள்தருமென்பர். ஆனால் உலகம் சுழல்கிறது என்ற கருத்தும் அங்கு ஒளிந்துகொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.

மேலும், உலகம் சுற்றுகிறது என்பதற்கு இன்னொரு குறளையும் குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. 1025.

இங்கு சுற்றும் என்ற சொல்லுக்கு "விரும்பிப் போற்றிக் கொள்ளும்" என்பது பொருள். "சூழ்ந்து நிற்கும்" என்றும் கூறலாம். வேறு சொற்களால் உரை கூறியிருப்பினும், கருத்து இதுவாகவே இருக்கக் காணலாம்.

ஆனால், உலகம் சுற்றுகிறது என்று வள்ளுவர் உணர்ந்திருந்தார் என்பதற்கு இதுவும் ஒரு குறிப்பாகக் கூடுமே!
இதைத்தான் "சூட்சுமமாகக்" கூறுதல் என்பர் பிறர். 

சனி, 5 அக்டோபர், 2013

mIn, kiiZkaL meaning

from a dialogue with another writer:


மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்

இதில் மீன் என்பது எதைக் குறிக்கிறது? குளத்து மீனா? விண்மீனா?

The reference here is to the stars - viN mIIn,


Please note that the word mIIn here is plural, though in singular format. 

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.


இதற்கான பொருள் என்ன? இங்கே கீழ்மக்கள் என வள்ளுவர் குறிப்பிடுவது யாரை?

கீழ்கள் = கயவர்.

இந்தக் "கயவர்" என்ற சொல்லை மாற்றாகப் பயன்படுத்தி மீண்டும் குறளைப் படித்தால், தெளிவாகும் என்று எண்ணுகிறேன்.

ஆசாரம் = ஒழுக்கம், செல்லும் நெறி.

கணக்கியல் திட்டவட்டமுடையதுபோல (mathematical precision), "=" என்னும் குறியீடு போட்டுப் பொருள்சொல்வது, அறிஞர் சிலரையாவது வியப்பிலாழ்த்தக்கூடும். என்னைப் பொறுத்தவரை ஐயப்பாடொன்றுமின்றிக் கூறுகிறேன் என்று நீங்கள் கொண்டாலும், தவறொன்றுமில்லை.

"என்பது யாதெனின்" என்ற தொடருக்கு ஈடாக அதனைப் பயன்படுத்துகிறேன். நீங்கள் குறிப்பிடுவதுபோல வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர் என்பதால், அவரெழுதியதைக் கணக்கியல் திட்டவட்டத்துடன் பொருள்விளக்கம் செய்யும் எவரும் இன்றில்லை என்பது உண்மைதான். ஆசிரியர்கள் ஓருவருக்கொருவர் மாறுபடுவதினின்று அது தெளிவாகிறது.

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

கயவர் யார், கீழ் யார், கீழ்மகன் யார் என்பது வள்ளுவரால் ஒரு வரையறவாக (definition) இவ்வதிகாரத்திற் கூறப்படவில்லை (அவர் காலத்தில் அது தெளிவாய் இருந்திருக்கும் ) எனினும், திருக்குறளையும் ஏனைத் தமிழ் நூல்களையும் நுணுகியாய்ந்து அதற்கு ஒருவாறு பொருள்கூறுவது இயலாத ஒன்றன்று. நீதி நூல்கள் மிகப்பல தமிழிலுண்டு ஆதலின், அதற்கு மிக்க இடமும் வசதியும் தமிழில் உண்டு என்பதுண்மை.

"=" என்பதற்குப் பதிலாக "≈" என்ற குறியீட்டை நீங்கள் போட்டு வாசித்தாலும், எனக்கு மறுப்பொன்று மில்லை.

இக்காலத்தவர் "கீழ்" என்பதைக் கீழ்ச்சாதி என்று தவறாகப் பொருள் கொள்ளக்கூடும். . இதன்பொருள் அதுவன்று.

இன்னொரு கேள்வி வரும் என்று எனக்குத் தெரியும், கயவர் யார் என்று கேட்பீர்கள் என்று அல்லது, கீழ் என்பது எப்படிக் கயவரைக் குறிக்கும் என்று!   பொருள் தெளிவாய் உள்ளது . 

வியாழன், 3 அக்டோபர், 2013

அதிராகும் தீர்ப்புகளை,,,,,,,,,,,,


சிதறாத‌ சான்றுகளைக் கண்டு கேட்டார்!
அதிராகும் தீர்ப்புகளை ஒவ்வொன்  றாக‌,
ப‌தறாத தூண் ஒத்தார் பதறிப்  போக‌
கதறாத கட்சியினர் கதறி நிற்க,
உதறாமல் கால்கையை‍ ‍ உச்ச  ரித்தார்!
குதறாத வழியர்க்கோ அச்ச மென்ன?
குதர்க்கமிலார் என்றென்றும் எதற்கு மஞ்சார்,
இதற்குவர லாறிதுவாம் நேரம் தானே!

some explanation of the words used:

With ref to post #494:-

சிதறாத - referring here to evidence ( before a court,) which the judge considered to be reliable and not punctured with holes by the defence attorney in cross-examination etc.,

சான்றுகள் - evidence, oral as well as documentary and exhibits.

கண்டு - seen and examined.

கேட்டார்! - heard in hearing session.

அதிராகு - unprecedented.

பதறாத தூண் ஒத்தார் - refers here to the high stature of the accused person,
  கதறாத கட்சியினர் - the political party to which the accused belongs has been taken aback by the court decision. Previously they had never been in such position.

உதறாமல் கால்கையை*- with unshaken resolve to do justice. disregarding the stature of the accused person,
உச்ச ரித்தார்! - made decisions and passed judgment.


 குதறாத வழியர் -  குற்றங்கள் செய்து தன் வாழ்கையைக் குழப்படியில் மூழ்கடித்துவிடாத நேர்மையாளர்கள்.  குதறுதல்    messing  up,

இதற்குவர லாறிதுவாம் -    இது வரலாறு படைக்கும் நிகழ்வு என்பது குறிப்பு.
இதற்கு வேறு வரலாறு முன் இல்லை ஆகவே இதற்கு இது தான் வரலாற 

Note: There is some bug here which prevents proper editing.  This will be reviewed  when it is rectified.`



குதறாத ‍ குற்றங்கள் செய்து தன் வாழ்கையைக் குழப்படியில் மூழ்கடித்துவிடாத நேர்மையாளர்கள்.  குதறுதல்  

இதற்கு வரலாறிதுவாம்  இது வரலாறு படைக்கும் நிகழ்வு என்பது குறிப்பு.
இதற்கு வேறு வரலாறு முன் இல்லை ஆகவே இதற்கு இது தான் வரலாறு
ஆகும். இதுவேமுதல் என்பது.


சுபாரு வென்பதற் கெதுகை

என் தோழி ஒருத்தி, ஒரு மகிழுந்து வாங்கினாள். எனை உலவ அழைத்துச் சென்றதோடு, அவள் வாங்கிய வண்டியைப் பற்றி வாயாரப் புகழ் பாடிக்கொண்டே ஓட்டினாள். இப்போது எல்லா வண்டிகளும் நன்றாகவே ஓடுகின்றன என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு அவள் சொன்னவை, ஒரு மாறுதலாக இருந்தது. அவள் கருத்துகள், இங்கு கவிதையாக.....


சுபாரு வென்பதற் கெதுகை தேடினால்
அபார  மென்பதே அகத்துள் கூடிடும்!

மேலை உலகில் நீள்பயன் அறிந்தோர்
சாலை உலவிடச் சாற்றினர் நன்றென.

வழவழ‌ வென்று சுழலும் இயந்திரம்,
வாடிக்கை யாளர்க்கு வழங்கும் பயன் திறம்.

ஆடா அசையா அழகுத் தேரிது!
மேடும் பள்ளமும் ஏதெனக்  கூறிட.

சொர்க்கம் இலையெனத் தர்க்கம் புரிவோர்
வர்க்கம் சுபாரு வழங்கிட அறிவார்.

வானில வன்ன வண்ண மணமகள்
தேனில வுகந்து தேடுவள் தினமிதை.

வாங்க நினைப்பின் வண்தமிழ் மாலா
நீங்கா நினைப்பினில் வைத்திடு மேலாய்!




மறைந்து வாழ்வது,............

மறைவாம் வாழ்க்கை மாபெரும் வாழ்வென்
றுறைவோர் உலகிற் பலர்இது   நன்றே.

 கவிதையின் பொருள்:

மறைவாம் வாழ்க்கை = பிறர் அறியாமல்,விளம்பரமற்று, மறைந்து வாழ்வது, மாபெரும் = உன்னதமான, மிக உயரிய. உறைவோர் உலகிற் பலர் (இங்ஙனம் ) வாழ்வோர் உலகில் பலர்; இதுவும் நல்லதே எனபது பொருள்.


இப்பாடல் குறள் வெண்பா அல்ல. 



செவ்வாய், 1 அக்டோபர், 2013

kavimaNi on workers (poem)

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை poem on workers

ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள் முதலியன அளித்து தமிழிலக்கியத்தை மேலும் வளப்படுத்திய கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் ஓர் அழகிய பாடல். ஏழை எளிய மக்களையும் தொழிலாள உடன்பிறப்புக்களையும் உள்ளத்தில் கொண்டு அவர் பாடியது:

பாடு படுவோர்க்கே--- இந்தப்
பாரிடம் சொந்தமையா;
காடு திருத்தி நல்ல--- நாடு
காண்பது அவரல்லவோ

மனம் திரியாமல்---காலை
மாலை எப்பொழுதும்
குனிந்து வேலை--- செய்வோர்
கும்பி கொதிக்கலாமோ

கோடி கோடியாக---நீங்கள்
குவித்திடும் லாபம்
வாடும் எம்மக்கள்---உண்ணா
வயிற்றுச் சோறல்லவோ

வாழ வேண்டுமெனில்---தொழில்கள்
வளர வேண்டுமையா
ஏழை என்றொருவன்---உலகில்
இருக்க லாகாதையா ( பாடுபடுவோர்க்கே)