வியாழன், 30 ஜனவரி, 2014

காரசாரம்

காரசாரம் என்பதோர் அழகிய சொல்.

காரம் என்பதற்குப் பல பொருளுண்டு எனினும், மிளகாயின் காரம் நினைவுக்கு வந்துவிடுகிறது.

சாரம்  : சார்ந்தது.  சார்தல், சார்பு, இவை சார் என்னும் அடிச்சொல் கொண்டு அமைந்தவை.

காரசாரமான விவாதம் என்கிறோம்.

விளக்கம் தேவையில்லாத சொல்லாகும்.

புதன், 29 ஜனவரி, 2014

வகரம் பகரமாகத் திரியும்

வகரம் பகரமாகத் திரியும் என்பது :தூபம்" என்ற சொல்லைப் பற்றிய விளக்க இடுகையில்  (கீழே )  எடுத்துச் சொல்லப்பட்டது.

இப்போது  வேறு  சில சொற்களை ஒப்பிடுவோம்.

கூவம் > கூபம்.
*தவி + அம் = தாவம் > தாபம். தாவம் > தாகம்.
அவி + அம் = அவம், அவம்> அப, (அவிதல், அவிந்து கெடுதல், கேடு)
(அப கீர்த்தி, அபகடம், அபகாரம்  அபத்தம் எனப்பல)

அவ என்பது ஒரு சங்கத முன்னொட்டானது )

பாவம் > பாபம்
சாவி(த்தல்), சாவி+ அம் = சாவம் > சாபம்,
கோவம்  > கோபம்.

கா > காவல் ;
கா > காவந்து > காபந்து @
(காவல் > காவல்+து >  காவந்து ) இது பேச்சு வழக்குச் சொல் .
காவல் >காவன் > காவன்  து  > காவந்து.  ல்>ன்  திரிபு  மற்றும் து விகுதிச் சேர்க்கை .

@ இது  போன்றவை நம்  பழைய இலக்கணக் கோட்பாடுகட்கு இணங்க அமையவில்லை. இருப்பினும்  தமிழே.  

...........எனப்  பலவாம்.

குறிப்புகள்

*தாகம்  எடுக்கிறது என்று சிலர் கூறினாலும் " தண்ணீர்  தவிக்கிறது"  என்று 
சிற்றூர்களில் கூ்றுவதுண்டு. எனவே "தவி" அடிச்சொல்..      

புதன், 22 ஜனவரி, 2014

தூபம்.



இப்போது சாம்பிராணி, பல மாதிரிகளில் கிடைக்கிறது. கட்டி, தூள், குப்பி என்பன எனக்குத் தெரிந்த சில  வடிவங்கள். இவற்றுள் கட்டிச் சாம்பிராணியே முந்தியது என்று தெரிகிறது. கட்டியை நொறுக்கித் தூளாக்கித் தான் தூபக்கால் நெருப்பில் இடவேண்டும்.

தூளாக்கித் தூவினால் நறுமணப் புகை வருகிறது.

தூவு  > தூவம் > தூபம்.

ஒப்பீடு :  வசந்த் -  பசந்த்   (வசந்தம்)

வகரம் பகரமாகத் திரியும். 

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

பெண் சம நிலை

"தலைமை அமைச்சராய்ப் பெண்ணிருப்பதா?
தாரணியில் நானிங்கே பின்னிருப்பதா?
குலைப்பேன் அரசுதனைக்  கூன்படுத்தியே,
கூடிடுவீர் சென்றவளைப் பின்கிடத்துவீர்....."

என்றகுரல் எங்கேனும் ஞாலம்தன்னில்   
ஒலித்தபடி செல்லுமிந்தக் காலம் தன்னில்!       
இன்றுவரும் நாளைவரும் ஒத்தநிலைஎன்
றிருந்ததன்றிக்  கையில்வரப் பெற்றதிலையே.

புதன், 15 ஜனவரி, 2014

baby, young persons - newcomers

( continue from post dated 7.1.14 below )    புதல்வர், புதல்வி, புதல்வன் என்பன புது (புதியது, புதுவரவு) என்பதிலிருந்து கிளைத்தமைந்த சொல் என்று இங்கு கூறப்பட்டுள்ளது.

இப்போது நாம் சில ஒப்பீடுகளைச் செய்யலாம்.

தமிழில் "பை"  (பைந்தமிழ், பைங்குழவி ) என்ற அடிச்சொல் இளமை, பசுமை முதலிய மூலக்கருத்துக்களை உடையது. பை > பையன். தென்கிழக்காசிய மொழிகளில் பாயோ*, பாயு* என்பன  புதுமைப் பொருளன. மலாய் மொழியில் பாயி என்பது குழந்தை.

பாலன், பால, என்பன இளமைப்பொருள. சில தென்கிழக்காசிய மொழிகளில் பாலோ என்பது புதிது என்றே பொருள்படுகிறது.


---------------------------------------------------------------------------------------------------------
Note: *word collections from Pangasinan and Kapampangan (South East Asian) languages.

The difference between b and p is disregarded..

வியாழன், 9 ஜனவரி, 2014

ஊர்ஜிதம்.

ஊர்ஜிதம்.

இப்போது  இந்த வாக்கியததைப்  பாருங்கள்:

அவர் தம் உறுதியைத் தெரிவித்தார்.

இவ்வாக்கியத்தில்  அழுத்தம்  குறைவாகவே  இருப்பதாகக் கருதுவர் சிலர்.


எப்படி அழுத்தம் கொடுப்பது?


தம்  உறுதி  என்பதை  உறுதிதம்  என்று  மாற்றுக.

அழுத்தம் போதவில்லை.

உறுதிதம்  >  உறுஜிதம்.

இப்போது  அழுத்தம் தென்பட்டுவிட்டது.  ஆனால் இன்னும் போகலாம்.


உறுஜிதம்  >    ஊர்ஜிதம்.

இப்போது அழகிய அழுத்தமான இன்னொரு சொல்  கிடைத்துவிட்டது .

ஊர்ஜிதத்தில்  வரும் தம்,  பிடித்தம் என்பதில் வரும் "தம்" போல ஒரு விகுதியாக  அல்லது சொல்லீறாக இருக்கட்டுமே! அப்படியே கொள்வோம்.  என்ன மோசம் போய்விட்டது.






புதன், 8 ஜனவரி, 2014

பினாமி

பினாமி 


இனி பினாமி என்ற சொல்லினைப் பார்ப்போம்.

இதை,  பின்+ ஆம் + இ என்றும்,  பின் + நாம் + இ என்றம் பிரிக்கலாம்.

இவற்றுள் ஆம் என்பது, ஆகும் என்பதன் சுருக்கம்.

பின்னால் நின்றுகொண்டு ஆகும் அனைத்தும் செய்பவன் (அல்லது செய்பவள்) "பினாமி" ஆவான்(ள்).

பின்னால் இருந்தபடி ஆமாம்சாமி போடுவோன் என்றும் பொருள்படும்.

நாம் என்பது நாமம் என்பதன் "சுருக்கம்".

பின்னால் இருந்தபடி தன் நாமத்தை (பெயரை)த் தந்துதவுபவர் என்பது பொருள்.
செயல்பாடுகளை இயக்குவோனே  முன்னிருப்போன். பின்னால் இருப்பவன் பின்னால்  ஆவன செய்துகொண்டு "நாமத்தைத்" தந்துதவி நிற்பவன்.

சொல்லமைப்பில் ஒற்றுக்கள்  இரட்டிக்காமலும் அமைவது பெருநிகழ்வு.

இச்சொல்  ஓர் இருபிறப்பி.

Note:  The title could not be entered. Error.

செவ்வாய், 7 ஜனவரி, 2014

புதல்வர்

புதல்வர் என்பதற்கு நேரான தமிழ்ச்சொல் மக்கள் என்பது. புதல்வர் தமிழன்று என்பர் தமிழாசான்மார்.

புதல்வர் என்பதன் அடிச்சொல் புது என்பதே. முன் பிறந்து வாழ்ந்துகொண்டிருப்போரை நோக்க, புதுவரவுகளாகிய புதல்வர் புதியவர்களே ஆவர். இச்சொல்லை இப்படிப் பிரிக்கலாம்.

புது +  அல் + வ்+ அர்  =  புதல்வர்

அல் என்பது பல சொற்களில் விகுதியாய்ப் பயன்படுவதே. மத்தியக் கிழக்கு மொழிகளில் இது சொல்லின் முன் நிற்கும்.  உதாரணம்:   அல் கைதா.  அல் காதிப்.  அல் கிதாப்.  (al is like  "the" in English)

தமிழில்  பெரும்பாலும் தொழிற்பெயர்  விகுதியாய் வரும்.  காட்டாக: காணல், ஆகல்.

புதல்வர்  என்பதற்கு  நேராக,  தாய் தந்தையரைக் குறிக்கப்  "பழல்வர்"  என்ற சொல் அமையவில்லை.

---------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு : -  அல் சொல்லீ்று  ஆங்கிலத்திலும் உள்ளது:  committal, acquittal. நம் விகுதிகள்  அல்லது  சொல்லீறுகள் பல மொழிகளில் புகுந்துள்ளன.