திங்கள், 31 மார்ச், 2014

தேகம்

தேகம்  என்ற சொல்லுக்குத் தமிழில் யாக்கை,  உடம்பு , மேனி  என்றெல்லாம் பல சொற்கள் கிடைக்கின்றன.  தேக, (தேகம்) என்பது தமிழன்று  எனப்படினும் அதை இப்போது நுணுகி ஆய்வு செய்வோம்.

குழந்தை பிறந்தபின் அது வளர்ந்து ஆளாகிறது.   அதுவரை  அது வளர்பிறையும் பின் முழு நிலவும்போல் நிலவுகின்றது.  இந்த நிலையில் குழந்தையின்  உடம்புக்கு  ஒரு புதிய சொல்லை உருவாக்கி அமைப்பதானால்
"வளர்கம்" என்று  ஒரு சொல் தரலாம்.  வளர்+கு+அம்  என்று !! இந்த வளர் நிலையைக் குறிக்கும் பெயர் எதுவும் "உடம்பு"  என்னும் பொருள்படத்  தமிழில் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
(பெண்ணின் பருவப் பெயர்களைக் குறிப்பிடவில்லை )

மனிதனின் கவலையெல்லாம் வளர்ச்சியில் இல்லை. வளர்ச்சி யடைந்தபின் அது தேய்ந்து அழியாமல் இருக்க வேண்டுமென்பதிலேயே சென்றது தெரிகிறது. ஞான்  (நான் ) மற்றும் நீ (கடவுள்) என்றுணர்ந்த ஞானியரும் இந்த எண்ணத்தால் பீடிக்கப்பட்டு  --" தேய்வதும் அழிவதும் உடைய உடல் -  இது  ,மெய்யன்று  பொய் !  " என்று உடல் நடபடிக்கைகளிலிருந்து ஒதுங்கினர்.

இதனால் தேய்தல் கருத்திலிருந்து உடலுக்கொரு சொல் அமைந்தது.

தேய் + கு+ அம்  = தேய்கம் > தேகம்.  (தேய்ந்து அழிதலுடையது )  --  தேக .

தேகத்திற்கு அழிவே இல்லையென்றால்,  அதைப் பற்றி மனிதன் கவலையே படாமலிருந்  திருந்தால்  மதங்கள் தோன்றி வளர்ந்திருக்க மாட்டா. 

இது நல்ல  சொல்தான்.  இப்போது தேய்பிறைபோல் தேகம் தேய்ந்து ஒழியும் என்று இந்தச்  சொல்லைப்  பார்த்து அல்லது கேட்டு யாரும் எண்ணிக்கொள்வதில்லை.  தேய்தல் என்ற சொல்லின் தாக்கம் ஏதுமில்லாத இடங்களிலும் இச்சொல் வழங்கியதால்,  கருத்தில் தடையும் அதனால் அதைத் தள்ளுபடியாக்கும் உணர்வும் இன்றி  உடல் நலம்  நாடுமிடங்களிலும்  அது இது காறும் வழங்கி வந்துள்ளது.  மூலங்கள் கிடக்கும் தமிழிலும் எப்போதாவதுதான் பயன்பட்டது.

தேகம் என்ற சொல்லின் உருவாக்கப் பொருளை (etymological meaning )இராமலிங்க அடிகள் நன்கு உணர்ந்திருந்தார் என்று தோன்றுகிறது.  "உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உன்னை மறவேன்" என்று பாடியமை நோக்கற்பாலது.  தேக அழிவின் வெவ்வேறு கட்டங்களை பட்டினத்தடிகள் நன்கு படம்பிடித்தளிப்பது  போல "ஒரு மடமாதும் ஒருவனும் ஆகி " என்ற பாட்டில் தெரிவிக்கிறார். 

யரல  வழள ஒற்றுக்களை அடுத்து வல்லினம்  வந்தால், ஒற்றுகள் மறைதலும்  வேறு திரிபுகள் தோன்றுதலு  முண்டு என்பதும் என் முன் இடுகைகளைக் கவனித்தால் நன்கு புரியும்.

வாய் >  வாய்த்தி >  வாத்தி > வாத்தியார். (one who uses his mouth to teach). இன்னும் விரிந்த விளக்கம் இதற்குத் தேவைப் படலாம். But I avoid it at this juncture.
உய்  >  உய்த்தி >  உத்தி. 

உபாத்தியாயார் என்ற சொல் பற்றிப்  பின் கருதலாம்.

தே+கு+அம் = தேகம்  என்று கண்டோம் .  ஒப்பீடு:  மே+கு+அம்  = மேகம் . இவை இரு விகுதிகள் பெற்றமைந்தன. கு விகுதி  வினைச் சொல்லாக்கத்திலும் வரும்.  மூழ்  >  மூழ்கு .  அழு >   அழுகு . ஏ  > ஏகு .  பெரு  > பெருகு .

தேகம் சமஸ்கிருதத்திற்காக தமிழர்  வடிவமைத்த சொல் ,   . The root of the word is in Tamil. 


குறிப்பு 

நாகர் >  நாயர்    இது    பேராசிரியர் கணபதிப்   பிள்ளை ( இலங்கை ) உள்ளிட்ட  ஆசிரியர் பலர்   கருத்தாகும்      நாயர் :   ,இவர்கள் நாக வணக்கம்  செய்தோர்  என்ப,     ய ,<> க  திரிபு  நோக்குக ht  In his book  Tamils 1800 Years Ago  Author  Kanagasabaip Pillar discusses on  Nair word derivation.  You may wish to read more..

நேயம்  >  நேகம் >  ஸ் - நேகம்   என்னும் திரிபும் உணர்க .   ய >க   


மேனன் மேனோன் சொல்லாக்கங்கள்

மேல் என்பதினின்று மேனன் வரை என்பதில் சொல்லாக்கங்கள் சிலவற்றைக் கண்டோம். மேனோன்  என்பதுமதே!

கேரளம் (<சேரலம் ) சற்று விரிந்த கடலெல்லை கொண்ட  நாடு  (இப்போது  மாநிலம்).  அரபு தேயத்திலிருந்து வந்த வணிகர் குழுக்களிடத்து வேலைக்கமர்ந்த உள் நாட்டினரைக்  கண்காணிக்க . மேல்பார்க்க மற்றும் கணக்கெழுத  எழுதப் படிக்கத் தெரிந்த  உள் நாட்டினரே நேமிக்கப் பட்டனர். இவர்கள்  (ஒவ்வொருவரும் )   மேலோன்  என்றழைக்கப் பட்டனர்.   இச்சொல்லே மேனோன் என்று முறைப்படி திரிந்தது.

லகர னகரத் திரிபுகள் இயல்பானவை.  (என் பல இடுகைகளையும் படித்து இன்புறுங் காலை ஒரு குறிப்புப் புத்தகத்தில் பட்டியலிட்டுக் கொண்டால் பின் ஐயம் எழாது.)

மேனன் என்பது மேலன் என்பதன் திரிபே.

மேனன் என்பது பின் ஒரு சாதியாய் முகிழ்த்து எழுந்தது.  ஒவ்வொரு தொழிலில்  ஈடுபட்ட குழுவினரும் ஒரு சாதியினராய் மாறியது இந்தியாவெங்கும் காணலாகும் ஒன்று.    பஞ்சாபு மானிலத்தில் தண்ணீர் தூக்கி வீடு வீடாகக் கொண்டு கொடுத்தவர்கள் தண்ணீர் தூக்கிச் சாதி யானது போல.   (water carriers)

மெனா என்பது ஒரு  சமஸ்கிருதச் சொல்.  இது பெண்,   பெண்விலங்கு    மற்றும்  பேச்சு என்றெல்லாம்   பொருள் தரக்கூடியது.   இதிலிருந்து சொல் அமைய வாய்ப்பில்லை . இதை விவரிக்க (விரித்து வரிகள் செய்ய) முற்படவில்லை.












ஞாயிறு, 30 மார்ச், 2014

மேலிலிருந்து மேனோன்வரை

இப்போது "மேல்" என்பதனோடு தொடர்புடைய சில சொற்களைக் கவனித்தின்புறுவோம் வாருங்கள்.
மே   >  மேல்,   அல்லது   மேல் > மே
மே ‍>  மேகம்  (வானத்தில் மேலே ஊர்ந்து செல்வது).  (மே+கு+அம்).

பழந்தமிழ் நூல்களில் இது பெரிதும் வழக்குப்பெறாதொழிந்தது  எனினும் பேச்சு மொழியில் இன்றுகாறும் நிலவுகிறது. தமிழினோடு தொடர்புடைய பிற அண்டை மொழிகளிலும் வழங்குவதாகும்மே என்ற அடிச்சொல் இருக்கும்போது அது தமிழன்று என்று எங்ஙனம் தீர்மானித்தனர் தமிழாசிரியர்நமக்குக் கிடைத்த தமிழ் நூல்கள் (சங்க இலக்கியங்கள் முதலியவை ) சிலவேசில ங்கப்  புலவர் பேரால் ஒன்றிரண்டே பாடல்கள் கிடைத்துள்ளன.
வாழ்நாள் முழுமைக்கும்  இரண்டே பாடல்கள் தாம் பாடினாரா? ‍‍என்றால்    ஆயிரம்    இரண்டாயிரம்  பாடியிருப்பார்நம்  கைக்கு வந்தவை  இரண்டுதாம் என்றுதான்  பதில் சொல்ல வேண்டியிருக்கும்.    பல ஒழிந்தன.

எனவே எழுதப்பட்ட நூல்களில்  இல்லாதவை தமிழன்று  என்று எளிதில் முடிவு கட்டமுடியாது.

சில   பேச்சு வழக்குச் சொற்கள் -- 


மேல் என்பது பேச்சில் உடம்பையும் குறிக்கும்.

"மேலிலெல்லாம் கொப்புளமாக உள்ளது" என்பர்இதில் மேல் = உடம்பு.

மேல் > (மேலி ) > மேனி.   லகரம்  னகரமாய் மாறும்மேலி என்ற இடைப்பட்ட  சொல் மறைந்தது.

மேனி மினுக்கி =  >  மேனாமினுக்கி.

மேல என்ற சொல் தொல்காப்பியத்தில் மேன என்று வந்துள்ளது.

மேலோன் ‍  >  மேனோன்

இனி மேனோன்,(1) மேனன் பற்றி அடுத்த இடுகையில்  தொடர்வோம்.

editing is reserved.





வெட்டப்படுமுன் விலகிச்செல்ல‌..............

வெட்டப்படுமுன் விலகிச்செல்ல‌
கட்டிக்கொண்டவளுக்குக் கருத்துவர வில்லையோ!
வெட்டப்படுவதும் உன்னாலென்றால்
விழை சொர்க்கமும் அதுவேயென்று
வேண்டிக்கொண்டு நின்றவளோ?

ஆயிரம் ஆண்டுகளின் முன்னே
அரிய மணச்சடங்குகள் நிறுவினரே!
ஆயிரம் ஒடிவிட்டதாலே
அந்த உட்பயிர் வாடிவருகிறதோ?
புதுமை வதங்கிவிட்டதோ!

திருமணமே வேண்டாமை
தெளிந்த பாதையோ...!

சேர்ந்தால் வாழாமையேல்
பிரிந்தால் பிழைத்தோடிவிட‌
வழியதோ! விழிவைப்ப்பாய் தங்காய்.

Written last year after a murder incident. where the husband, who married her according to rites and lived with her happily for a while finished her off...............shocking relatives and friends and the country at large!

வெள்ளி, 28 மார்ச், 2014

சின்னஞ் சிறு...

சின்னஞ் சிறு வீ   டாக்கி
சேர்ந்தங்கு  மணலில் ஆடி
கன்னங்கள் நகையே பூத்த
கனிவான சிறுவர் தம்மை
இன்னாத சாவில் சேர்த்தாய்
இதில்பிழைத் தாலோ தாங்க
ஒண்ணாத துன்பம் தன்னில்
ஓவாதே அலற வைத்தாய்.

மணலிலே ஆடும் போது
மகிழ்ந்திட்ட சிறுவர் என்றும்
கணமேனும் கருதினாரோ
கடலம்மை கொல்வாள் என்று?
குணமனம் பிணைந்த காதல்
கோலத்துச் சோடி எங்கும்
நினைத்தது முண்டோ ஏக
நேர்ந்திடும் அலையில் என்று!

இது  "கண்ணீரில்  விளைத்த வாழ்வில்"  என்ற தலைப்பிட்ட கவிதையின் தொடர்ச்சியாகும். இவை சுனாமி  சமயத்தில் எழுதப்பட்டவை. அறுசீர் விருத்தங்கள் .

sday, March 27, 2014

27.htmlகண்ணீரில் விளைத்த வாழ்வில்.................


http://sivamaalaa.blogspot.com/2014/03/blog-post_27.htmlhttp://sivamaalaa.blogspot.com/2014/03/blog-post_27.html





  

சிலேடை

ஒரு பதம் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைத் தருமானால் அது  சிலேடை என்று கொள்வோம்.
பொருள்தரும் இயல்பு பதத்திற்கு உண்டு.  பொருளானது பதத்தில் பதிந்து உள்ளது.   பதி >  பதம் . பதி + அம்  =  பதம்.  இது இகரம்  கெட்டுப்  புணர்ந்த சொல் . (கெடுதல் -  எழுத்து  அல்லது ஒலி மறைவது.)
இதுபோன்று வினைப் பகுதியின் ஈற்றில் நின்ற உயிர் கெடுதல் மொழி முழுவதிலும் காணப்படுவது.  அறு+அம்  =  அறம்  அறு என்பதன் ஈற்றில் நின்ற உகரம் கெடவில்லை?  அதுபோலத்தான். வித + அம்  = விதம் ,  வித என்பதில் அகரம் கெட்டது. விதந்து ஓதுதல் என்று பழ நூல்களில் வரும்போது just make a note of it.  Vitham :  there is no vitham unless  it is different from another in some special way.

அது  நிற்க.

 சில் > சில . இதில் இறுதியில் வந்த "அ "  பலவின் பால்  விகுதி . வந்தன போயின என்பவற்றில் வரும் அதே அஃ றிணைப் பன்மைதான்.  பல் > பல  என்பனவும்  ஒப்பிடுக .

சில்+எடு +ஐ = (சிலெடை) >  சிலேடை. (ஒரு பதத்திலிருந்து சில பொருள்களை  எடுப்பது  என்பது.) . சிலெடை என்பது சிலேடை என்று திரிந்தது வாயொலிக்க எளிமை .தரல்பொருட்டு .

எடு + ஐ = ஏடை .என்றுமாகும்.   எடு+ஐ  - எடை (வேறொரு சொல் )  என்றும் வரும். இவற்றுள் ஏடை  என்பது முதனிலை திரிந்தது.  அதாவது எகரம் ஏகாரமாய் நீண்டது.  **

ஒப்பீடு:   படு  >  பாடை .  படு+ ஐ என்பதில்  ப > பா என்று நீண்டது.  பிணம் படுக்கவைக்க (கிடத்திவைக்க) உள்ள விரிகட்டு.  படு > படை என்பதில் பகரம் நீளவில்லை. படு படை, படர்  என்பவற்றைப்  பின் காண்போம்.

மொழிக்குச்  சொற்கள் பல வேண்டுமெனில் இந்தத்  தந்திரங்களைக் கையாளவேண்டும்.  We admire those who coined these terms long long ago.

சில் +(எடு + ஐ )=  சில் + ( ஏடை )=  சிலேடை என்று திரிபு இன்றியும் (இரண்டாம் சொல்லில் முதனிலை நீண்டது தவிர ) வரும்.   இதை இயல்பாகக் காட்டலாம்.  எனில் லகர ஒற்று இரட்டிக்கவில்லை.

சிலேடை :   சில பொருள்கள் தரும் பதம் என்பது.  சில = இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட எனற்பொருட்டு)

இது போதும் என்று .நினைக்கிறேன் . Just enjoy the analysis.


**  vishEsham

double click above link.

விசேஷம்  என்ற சொல்லின் முன்னோடியான  விழேடம் என்பதிலும் "எடு "  > ஏடு வந்து,  பின் "அம் "  விகுதியும் பெற்றுச்  சொல் அமைந்துள்ளது.  அங்குக் காண்க.

Notes:

Some typos rectified:  17/2//2019
We have to make such rectifications when data charges are nil or less.


வியாழன், 27 மார்ச், 2014

Traffic Accidents

மனிதனாய்ப் பிறந்துவிட்டால் 
மண்டிவரும் குறைகளுக்கோ
பஞ்சமில்லை;

தனியளாய் உந்துதனைத் 
தகச்செலுத்திச் சோலிகளை
முடிக்கவேண்டி 

இனியவா  னொலிப்பாடல்
இதமாகக் கேட்டபடி
ஏகுங்காலை 

கனிவிழைந்த  வாயிலொரு 
காய்வந்து திணிந்ததுபோல்
விபத்து நேரும்! 

நேர்ந்துவிட்ட விபத்தினைச்ச 
மாளிக்க ஒருதிறமை 
வேண்டும்வேண்டும்!

ஊர்ந்துவந்த   வீதியில்கைப்  
பேசிகளில் படமெடுப்பார் 
நடிகை யாமே !

பேர்ந்துவிடும் முகரை எனப் 
பேச்சிலொரு மிரட்டலினை 
விடுப்பார் கேட்டுச் 

சோர்ந்துவிட நேர்ந்துவிட்டால் 
சோமனருள் அன்றியொரு 
காவலுண்டோ?   

----    சிவமாலா 

பாடலில் வரும் பதங்களுக்கு விளக்கம் .

குறைகள் :  கோபம்,  தேவையற்ற வாய்ப்பேச்சு,  அச்சம்,  ஆயுதமெடுத்தல் 
போன்ற  குறைகள் .  உந்து  -  (கார்),     தக -  நன்றாக;  செலுத்தி-  வண்டியை  ஓட்டி ;   நடிகை  யாமே -   யாம் அங்கு விபத்தில் மாட்டிக்கொண்டால்,  எ ம்மைப்  பட மெடுப்பவர்கள்     camera crew ;    I then become the actress!  !    யாமே நடிகையானோம் என்றபடி.


நீங்கள்  படித்தின்புற  சாலையில்  நடப்பவை  பற்றிய  ஒரு கட்டுரை:

Anger, Social Media and Singaporeans

http://theindependent.sg/anger-social-media-and-singaporeans/ 


(விபத்து ஒன்றும் நேர்ந்துவிட வில்லை;  சிங்கப்பூரில் மட்டுமன்று,   எங்கும்  நடப்பதுதானே, ஓட்டுநரும் பயணிகளும் சாலையில் சற்று நிதானம்   கடைப்பிடிக்கவேண்டும்....  அந்த நாள் வரவேண்டும்.   )                                                                                                                

கண்ணீரில் விளைத்த வாழ்வில்.................


(அறுசீர் விருத்தம் )

தண்ணீரில் மிதந்து சென்று 
காற்றொடு மழையில் சிக்கி 
கண்ணீரில் விளைத்த வாழ்வில் 
கால்வயி  றுண்ட மக்கள்
உண்ணீரும் இன்றி வாடி 
உற்றாரை இழந்து கண்கள் 
செந் நீரைச் சிந்தச் செய்தாய் 
சேய்க்கிது தாயின் தொண்டோ?

அமைதியும் வாழ்வும் இன்றி 
அலைந்திட்ட மீன  வர்க்கே 
அமிழ்ந்துயிர் எடுத்துக் கொள்ளும் 
அலைகளோ  பரிசு தந்தாய்?
"இமிழ்கடல் எங்கள் அன்னை"
இருந்தனர் இவ்வா றெண்ணி 
உமிழ்ந்தனை பேர லைகள்  
உயிர்களைக் குடித்தாய் அந்தோ !


இவை சுனாமி சமயத்தில் எழுதியவை .  அப்போது வெளியிடவில்லை, அப்போது கவிதைகள்  பல வெளிவந்தன. துயரை மிகுதிப் படுத்தலாகாது என்று  வெளியிடாமை மேற்கொண்டேன். ஒன்று வெளியிடவேண்டும் அல்லது எறிந்துவிடவேண்டும்  என்ற நிலையில் இப்போது  உள்ளபடியால் இதோ  அவற்றில் .சில...........பிற பின்பு!.
  

புதன், 26 மார்ச், 2014

நாய் வால்

நாய் வால் நிமிர்த்திவிட்டு
நல்லபடி நோக்கியே
ஒயாது முற்படினும்
ஒக்குமோ ?
பேயாய்ப்    பிதற்றித் திரிவாரின்
பேதைமையைப் போக்க
எதைச் செய்தும் ஞாலத்தில் என்?

இதை எழுதிச் சில  ஆண்டுகள் ஆகியிருக்கும்,  ஆனால் எழுதியதன் பின்புலம் இப்போது ஞாபகத்தில் இல்லை.  நாய் வால் நிமிர்த்துதல் என்பது   பலரும் அறிந்ததுதான். இங்குள்ள  சீனர்  மலாய்க்காரரும்கூட சில வேளைகளில் சொல்வதுண்டு. கவிதையிலோ ஒரு புதுமை வேண்டும். பழம்பொருளாயினும் ஒரு புது நோக்கு  வேண்டுமே ! அது  கவிதை.  இதில் இருக்கிறதா என்பதை  நீங்கள் தாம் சொல்லவேண்டும்.....


ஒக்குமோ   -   வேறு  உயிரிகளின்  நேரான வாலுடன்  அது  சமமாகுமா ?  ஒ - (ஒத்தல் ) வினைச்சொல்  ,  ஒவ்வுதல்   எதிர்மறையில்  ஒவ்வாது  என வரும்.  ஒக்குமோ  (மலையாள வழக்கு )  முடியுமோ? எனப்  பொருள்.

ஒ  -  ஒப்பு   என்ற பழந்தமிழ் வினைச்சொல்லை  .. opt   என்ற  ஆங்கிலச்   சொல்லுடன்  ஒப்பிட்டு  ஓர் ஆய்வு   செய்யுங்களேன்........

யாருடைய  பேதைமையையும்  போக்குவது  நம் வேலையல்ல  (  வேலையன்று )  என்று  அறி ஞர்  சிலர்  கூறுவர்   இது  எப்படி ? ..




Condolences to MH370 passengers and crew

ஆறாத் துயரில் அனைவரையும்  ஆழ்த்திவிட்டு
மீளா உலகிற்கு மேல்சென்ற வான்பயணி
எம் எச்சு முன்னூற்று எழுபதை எண்கொண்டு
தம்முயிர் ஈந்தார்மற்    றுற்றார் உறவினர்
யார்க்கும் உளம் நொந்து, இரங்கலில் ஆழ்ந்தோம்  
இது போது கண்ணீர்  இணைத்ததுவே  நெஞ்சம்!
மறவாது செல்வோம் இனி.

edited 27.3.14 6.45am
The editing software sometimes does not accept edit.   Only after  a few tries does the editor work. Preview is also not available. As frequent loading and reloading increase the data charges,  I am constrained to wait until a safe time when the edits can go through.  /Crave the readers'  patience and understanding.

திங்கள், 24 மார்ச், 2014

வாத்தியம்

சாத்தியம் என்பதை அறிந்துகொண்ட நமக்கு, அதற்கு எதுகையாகத் தகும் இன்னொரு சொல்லையும்  அறிந்துகொள்ள ஆவலெழும்.  அச்சொல்தான் "வாத்தியம்" என்பது.

வாத்தியம் என்பது இனிய எளிய தமிழ். இப்போதெல்லாம்  "ஆர்கெஸ்ட்ரா" என்னும் ஆங்கிலம் அதனிடத்தை வேகமாகக் கவர்ந்துவருகின்றது.

இயம் என்றாலே  வாத்தியம் என்றுதான்  பொருள்.  ஆனால் பண்டைக் காலத்தில் இயம் என்பது பொதுப்பொருளிலும்  வாத்தியம் என்பதொரு  சிறப்புப் பொருளிலும் வழங்கிற்று என்று  தெரிகின்றது.

அது ஏனென்று இப்போது புரிந்துவிடும்.

வாழ்த்து + இயம் =  வாழ்த்தியம்  >  வாத்தியம்.  இங்கு ழகர ஒற்று  மறைந்தது.

சிறப்பான காலங்களில்  அதாவது, திருமணம்,  விழாக்கள் முதலானவற்றில்  பெரும்பாலும் வாழ்த்திசை வழங்கும் குழுவினர்க்கு வாழ்த்தியம்  ‍>  வாத்தியம் என்றனர்.

சாத்தியம் என்ப‌தில் ய‌கர ஒற்று  மறைந்தது போன்றே இங்கு ழகர ஒற்று மறைந்தது.

இப்போது வாத்தியம்  என்பது பொதுப்பொருளில்  வழங்குவது  மட்டுமின்றி,   இயம் என்பது அன்றாட வாழ்வில் கேட்கக்  கிட்டாத சொல்லாய்விட்டது.

--------------------------------------------------------------------------------------------------

Thanks to Devaneyap Pavanar  for the exposition. Retold by B.I.S.

ஞாயிறு, 23 மார்ச், 2014

சாத்தியம்

சாதித்தல் என்னும் சொல்லைக் கண்டோம். ஆங்கிலத்தில் கடலோடிகள், கப்பலோட்டிகள் ஆகிய மக்களிடமிருந்து மொழிக்குக் கிட்டிய சொற்களின் ஒரு பட்டியல் இருத்தல் போலவே, ஒவ்வொரு மொழியிலும் துறைச்சொற்கள் இருக்கின்றன.  சாதித்தல் என்பது மரத்தொழிலுடையோரிடமிருந்து தமிழிற்கும் தமிழிலிருந்து அது தாவிய வேறுமொழிகட்கும் சொல்லாய்க்  கிட்டிற்று என்பது தெளிவுற்றது.

இனிச் சாத்தியம் என்னும் சொல்லினைக் காண்போம்.  இதுவும் சாய்த்தல் என்னும் சொல்லினடிப் பிறந்ததே.

சாத்தியம் எனின் சாய்க்க இயல்வது என்பது அமைப்புப் பொருளாகும்,.

சாய்த்து + இயல்.> சாய்த்து + இயம் >  சாத்தியம் என்றானது.

இயல் - ( இயம் ) என்பது இயல்வது எனற்பொருட்டு. இது,  திறல் > திறம் என்பதுபோன்ற திரிபு.  இறுதி லகர ஒற்று, மகர ஒற்றாயது.  பின், சாகரத்தை அடுத்து நின்ற யகர மெய் மறைந்து, சாத்தியம் என்று அமைந்தது.

இதனைச்  "சாய்த்து" என்று எச்சவினையாகக் கொள்ளாமல்,   சாய் பகுதி;   து ஒரு விகுதி; இயம் , பின்னுமொரு விகுதி என்றும் கொள்ளலாம். முடிபு ஒன்றேயாம்.

In some languages words may be formed or derived from participles too. Tamil preferred formation of words from  (command)  verbs themselves. But whether our pundits liked the event or not, Tamil has its fair share of words developed from  participles.  A glaring example of course is "Andavan" which takes on a "past tense format". நோட் But in usage, the word does not refer to tense.

இப்போது சாத்தியம் என்பதில் "சாய்த்தல்" பொருள் மறக்கப்பட்டு, பொதுநிலையாக‌ "இயல்வது" எனறு மட்டும் குறித்து வழங்குகிறது. மரத்தொழிலாளர் மரம்சாய்த்தல் பற்றிய நினைப்பும் குறிப்பும்  நீங்கவே,  சொல் பொதுப்பொருள் உடையதாய் கருத்துத்தடைகள் யாதுமின்றி வலம்வருகிறது.

வியாழன், 20 மார்ச், 2014

வாடகை

வாடகை என்பது அழகிய தமிழ்ச்சொல்.  சிலர்  இது என்ன சொல்லோ என்று ஐயுற்று  இதனைக் குடிக்கூலி என்று மாற்றிச் சொன்னார்கள்.  குடியிருக்கக் கூலி என்று இஃது  விரியும்.

வாடகை என்பது அமைந்த விதம் நோக்குவோம்.

வாழ்>   வாழ் + அ + கை   =  வாழகை  >  வாடகை. (1)

இங்கு ழ என்பது ட என்று திரிந்தது.

இது வழக்கமான திரிபுதான் . பாழை >  < பாடை  என்பதுபோல.

இதில் நடுவில் நிற்கும் அகரம்.ஒரு .சாரியை.  கை என்பது விகுதி.
 ஒரு  வீட்டில் வாழ((குடியிருக்க)க்   கையில்(வீ ட்டுக்காரனிடத்தில்) தரப்படுவது (ஆகிய பணம் ) என்றும் பொருள் கூறலாம்.  இந்தச் சொல்லுக்குக் "கை" பொருத்தமான விகுதி.

சொற்களை  அமைக்கும்போது இப்படிப் பலவகையிலும் பொருந்துதல்  கருதி  அமைப்பது சிறப்பு ஆகும்.

வாழகை என்பதையே ஏன் பயன்படுத்தலாகாது என்று சிந்திக்கலாம்.

வாழகை என்பது வாடகை என்று திரிந்ததும் நன்மையே.  மற்றபடி  அகரச் சாரியை வந்து, வாழ்க்கை என்ற சொல்லுடன் மயங்காமையை நல்கியது.

வாழ என்ற வினை எச்சமே சொல்லின் பகுதி என்று  சில மொழிகளின் இலக்கணியர் கருதியிருப்பர். எ-டு :  பாலி .   தமிழில் ஏவல் வினையே பகுதியாவது மரபு.

======================================================================

(1)  ஞா . தேவநேயப் பாவாணர்.

%"குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
குடியிருக்க நான் வரவேண்டும்,
குடியிருக்க நான் வந்துவிட்டால்
வாடகை என்ன தரவேண்டும் " திரைப்பாடல்.

%%மேற்கண்ட பாடலில் "குடிக்கூலி "  எனற்பாலது மோனையாகியிருக்கும் எனினும் வாடகை என்பதே பொருந்திய சொல்.

சாதித்தல்

"நிலை பெறச் செய்தல்" என்பது,   உண்மையில் கீழே விழுந்துவிட்டதை  நிமிர்த்தி நிற்கச் செய்தல் என்ற செயலினின்று எழுந்த சொல்லாக்கமாகும்."  அடுத்து,   ஒருவர் நிற்கச்  செய்த ஒன்றை இன்னொருவர்  வந்து பிடுங்கி எறிந்துவிடுதல் கூடுமாதலால்,  அங்ஙனம் நிகழாமல் காத்தலையும் ""நிலைபெறச் செய்தல்"  என்னும் தொடர் தழுவிக் குறித்தது என்பது சொல்லாமலே புரியும்.  கருத்துகள் விரிந்து சென்றாலும், ஒரு முதல்தொடரே நின்று அவ்விரிவுகளையும் உள்ளடக்கிக் குறித்தல்  எல்லா மொழிகளிலும் காணக்கிடைக்கும் ஒரு நிகழ்வாகும்.  இங்ஙனம் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் ஒரு சொல்லுக்குப்   பலகாலும்  வந்தணைவதை  ஆய்ந்து    அறிந்துகொள்ளலாம் . இதுவேயன்றிக்  ,  கண்ணாற்  காணப்படாத,   பருப்பொருள் அல்லாதவற்றையும்  சொற்கள் அல்லது தொடர்கள் பொருள் விரிந்து குறிக்கலாம்.  "காதலை நிலைபெறச் செய்தல் "  என்ற தொடரில் கண் காணாத  மனவுணர்வு சுட்டப்படுகிறது.  விழப்  போகும் மரம்போல. அல்லது சுவர் போல பருப்பொருள்கள் யாதும் ஈண்டு  தென்படவில்லை. Meaning has been extended to cover the abstract.

இனிச் சாதித்தல் என்பது காண்போம். இந்தச் சொல் "சாய்த்தல் " என்ற கருத்தின் அடிப்படையில் எழுந்த சொல்.  " நீங்கள் கேட்டதை நாங்கள் செய்து முடித்துவிட்டோம் " என்பவனைப் பார்த்து:  " என்ன அப்படிச்  சாய்த்து விட்டாய்?" என்று கேட்பதில்லையா?  ஒன்றை நிலைபெறுவித்தல் ஒரு வெற்றிச்செயல்.  சாய்ப்பதும்  அப்படியே.

சாய்க்க முடியாத மரத்தைச் சாய்ப்பதுவும் ஒரு பெருவெற்றிதான்.  இதைச் சாய்க்க இயலாது என்று பார்த்துக்கொண்டிருந்தவன் தான்  அந்நிகழ்வுக்கு  உரிய நீதிபதி.  சாய்த்தல் என்பது நிலைபெறுவித்தலுக்கு எதிர்மாறான செயல் திறன் ஆகும்.

சாய்த்தல் >  சாய்தித்தல் >  சாதித்தல்

எனவே மரம் வெட்டுத் தொழிலினின்றும்  நாம் ஒரு சொல்லைப் பெற்றோம் என்று மகிழ்வோம்.  தொழிலாளர் வாழ்க. 

ஒப்பீடு :

சாய்  > சாதித்தல் 
வாய்  >  வாதித்தல் 
அதிகம் வாதம் செய்வோனை  சில வேளைகளில்  நிரம்ப வாயுள்ளவன் என்பர்.
("ரொம்ப  வாயி ")  வாதித்தல்  -   வாயடியாக வந்த சொல்லே ஆகும்


வல்லினத்திற்கு முந்திய யகர ஒற்றுக்கள் மறைதல் பேச்சுமொழி  இயல்பே.

ஒப்பீடு:


உய்  > உய்த்தல்.
உய்(த்தல் )  >  உய்த்தி  >  உத்தி   (உய்த்துணர்வு பற்றிய  கொள்கை).   யகர ஒற்று மறைந்தது.

இடைக்குறை  இதுவாகும்..

புதன், 19 மார்ச், 2014

மூன்று துணுக்குப் பாடல்கள்

கலைகள் அனைத்திலுமே  ---  வரும்
கருத்தில் புதுமையும் வேண்டும்;
இலையில் புதுச்சுவை ஊண்  --- எனில்
ஏற்க மனத்தடை உண்டோ?


(இது ஏறத்தாழ பத்தாண்டுகளின் முன் எழுதப்பட்டது. மீதமுள்ள பாடல்களைக் காணவில்லை. எனவே இந்த வரிகள் மட்டும் இங்கே........)

-------------------------------------------------------------------------------------------

எதிரியென்று  யாரைச்சொல்வோம்?  -----  இன்றே
எதிரிஎன்பார்  நாளை  உதவு நண்பர் ;
உதறி எவர்  தம்மைவிடுப்போம்?  ---- இந்த
உலகத்தில் நிலையாய்க் கெட்டவர்யார்?

(இதுவும் சில ஆண்டுகளின் முன் எழுதியது.  தொடரவில்லை.)


------------------------------------------------------------------------------------------

கிழடு ஆன போதும் --- இன்னும்
பல்லில் ஒன்றும் பழுதில்லை!
தோலும் சுருங்க வில்லை --- பூனைக்கு
வாலும் அடங்கவில்லை.

(பாவம் .  நான் எழுதிக் கொஞ்ச நாளில் அது உந்து வண்டியில் அடிபட்டு
இறந்துவிட்டது.  கவலை......)


செவ்வாய், 18 மார்ச், 2014

Life and the Gita

The following is said to have been extracted from Bhagavat Gita,  from various verses. The author of this rendering is unknown. If the reader knows,  may we invite the reader to state his name ..  We  thank the author:


Life is a challenge  -   meet it
Life is a gift   - accept it
Life is a adventure  dare it
Life is a sorrow -  overcome it
Life is a tragedy  -  face it
Life is a duty -  perform it
Life is a game -  play it
Life is a mystery  - unfold it
Lift is a song  - sing it
Life is an  opportunity - take it
Life is a journey -  complete it
Life is a promise - fulfill it
Life is a love - enjoy it
Life is beauty  - praise it
Life is a spirit - release it
Life is a struggle - fight it
Life is a puzzle - solve it
Life is a goal - achieve it




துக்கடா.

இனித் "துக்கடா"       என்ற சொல்லைக் கவனிப்போம்.

இஃது எந்த ஒரு நிகழ்ச்சியிலும்  இறுதியில் தரப்படும் சிறு துளியை  -  (அல்லது துளியினோடு ஒப்பீடு செய்யத் தகும் சிறிய அளவினதான எப்பொருளையும்  குறிக்கும் சொல் . எங்ஙனம் இது அமைந்தது?

கடைத் துளி : இச் சொற்றொடரில் கடை என்பது  நிகழ்வின் இறுதியைச் சுட்டுவதாகும்  அன்றி தரப்படும் பொருளின் இருப்பு முடியும் தறுவாயில் இருத்தலையும் குறிக்கக்கூடும்.

கடைத் துளி =>  துளிக்கடை.

துளிக்கடை > துக்கடை > துக்கடா.

இங்ஙனம் முறைமாற்றில் அமைந்த சொற்கள் பல. முன் சில காட்டப்பெற்றுள்ளன.

விசிறி ‍  சிவிறி;   மருதை > மதுரை ;.  இல் வாய் > வாயில்.  .  வாய்க்கால் > கால்வாய்
 


Tukkada
Tukkadas are compositions played towards the end of Carnatic concerts. or any little item given as a last piece.  Something small given out.

துளிக்கடை  > துக்கடை  என்பது  இலக்கணப்படி இடைக்குறை எனப்படும்.  Our grammarians managed to recognise such changes early in the development of Tamil language.

டை  என்று வருவன  டா  என்றாவது தமிழிலும் உண்டு;      ஏனை   மொழிகளிலும்  உண்டு.

முதல்   -  இடை  - கடை.

எக்கடை  >  எக்கட   (தெலுங்கு )  - எங்கே ?   

ஞாயிறு, 16 மார்ச், 2014

ஆனந்தம்

வீட்டுக்கு ஒரு ஆ(பசு)வாவது இருக்கவேண்டும். இருந்துவிட்டால், பால், வெண்ணெய், தயிர்,மோர் என்றிவற்றுக்கெல்லாம் ஒரு குறைவுமிருக்காது. ஆம்!  அதுவும் தம் சொந்த ஆவாக இருந்தால் அதுவே எல்லையில்லாத மகிழ்ச்சி ஆகும்.

ஆவைக் கண்டால் மகிழ்ச்சி. அதன் பாலை உண்டால் மகிழ்ச்சி. தயிர்ச்சாதம் அன்னை தந்தால் மகிழ்ச்சி. தண்ணீர் தவிக்கும்போது மோர் கிடைத்தால் மகிழ்ச்சி. தம் ஆ எனில் அழகு!  அழகு!

அந்த அழகே மகிழ்வு!

தம் ஆன்  அம்.  தம்= சொந்த ; ஆன் = ஆ; பசு;  அம் ‍=  அழகு.

இதை,    ஆன்+ அம்   +  தம்  எனில் ஆனந்தம் ஆகிறது.

ஒரு வாக்கியமே  வார்த்தையானது.  ஒரு  சொற்றொடரே சொல்லானது.

இப்படி அமைந்தவை பிற மொழிகளிலும் உள்ளன.  எல்லாமே பகுதியும் விகுதியும் இடைச்சாரியையுமாய் அமைதல் இல்லை.

அம்  அழகு என்று பொருள் கொள்ளாமல்  அம்  - தாய்  என்றாலும் பொருந்துவதே . .....  என்றால்,  ஆவைத்  தாயெனப் போற்றி மகிழ்ந்து,  அம்மகிழ்வு  "ஆனந்த ' மாயிற்று  என்று கூறுதற்கும் இடமுண்டு.  மேலும் இதனின் முந்திய இடுகையில் "அம் "  விளக்கம்பட்டுள்ளதும் காண்க

"தம்" என்ற்பாலது "தமது" எனப் பொருள் தருதல் மட்டுமின்றி, ஒரு விகுதி போலவும் இச்சொல்லில் புனைவு பெற்றுள்ளது. A dual function for "tham"..தம்  என்பது முன்னொட்டாகவும் பின்னோட்டாகவும் பெற்ற சொற்கள் பலவாம்.

கோகுலத்துள்  எழுந்த சொற்களில் இதுவுமொன்று.

இந்தியாவெங்கும் தமிழர் வாழ்ந்தனர்.(1) அவர்களின் சொல் யாண்டும் பரவியது.
=======================================================================
Notes:
(1)  நாராயண  ஐயங்கார் இன்னும்  பிறரும்.

 (2) வட இந்தியாவிலிருந்து  திராவிடர் தென்னாட்டிற்கு விரட்டியடிக்கப்பட்டனர்  என்று இன்னும் பலர் நம்புவதால், அவர்கள் மொழி எங்கும் பரவியிருந்தது என்பது தெளிவாகும்.
திராவிடர் என்பதே  "விரட்டியடிக்கப்பட்டவர்கள்"  என்று பொருள்படும் என்கிறார்கள்.


சனி, 15 மார்ச், 2014

"அம்" அமைப்பு

தமிழில் பல விகுதிகள் அல்லது சொல்லீறுகள் பொருளிழந்து வெறும் சொல்லமைப்புக்காக அல்லது   சொற்களை வேறுபடுத்துவதற்காகப் பயன்படும் துணுக்குகள் என்பது  ஓரளவு உண்மையென்றாலும் அதுவே முழு உண்மை என்று கூறிவிட முடியாது.

அணிமை, அண்மை. அருமை.அறியாமை என்றெல்லாம் வரும் பல சொற்களை ஆய்வு செய்த அறிஞர்கள்  அவற்றில் வரும் "மை" விகுதி உண்மையில் "மெய் "  என்பதன் திரிபு என்றனர்.  மெய் எனின் உடல். அது அப்புறம் "மை "  ஆகிவிட்டது.(1)

அது "மை" ஆனபின் சொல்லமைப்பு மேற்கொள்வதற்கு மனத்தில் ஏதும் தடை தோன்றுவதில்லை. வேண்டியவர் விழைந்தபடி சொற்களை அமைக்கும் வசதி  உண்டானது போலும்.  தனிமை, தன்மை இனிமை. ஆளுமை என்றெல்லாம் பேசுவோர்க்கும்  எழுதுவோர்க்கும் அமைத்துக்கொள்ள திறந்த வெளி  உருவாயிற்று.

 இனிமை + தமிழ் =  இன்+ தமிழ் = இன்றமிழ்.  இது இனிதாய் அமைந்த சொல்.
இனிய தமிழ் என்று பொருள்,    (2)  "இளைஞருக்கான இன்றமிழ் " ஒரு நூலின் பெயர்.  இதை  வேறொன்றன் தொடர்பில்  வேறு வழியில் "இனிமைத் தமிழ்" என்றால் நன்றாக இருக்கும் என்றும் அறிஞர் (3) பின் கருதினர்.  ஆனால். பவணந்தி முனிவர் "மை" விகுதி கெடுத்துப் புணர்க்க வேண்டுமென்று விதி செய்தார். (4)  எனவே "இன்றமிழ் " என்பதுதான் அவர்க்குப் பொருந்திய  வடிவம்.  எதுவும் தவறன்று.  எனினும்  "மை" என்பது ஒரு பொருளைக் குறிக்கையில் அதைக் கெடுத்துப் புணத்துதல் கூடாது.  கண் மை தருக  என்பதை கண்தருக  என்றால் எப்படி?  இங்கு மை விகுதியன்று.

இணையம், கணையம் என்றெல்லாம் வரும்பல சொற்களில்  அம் விகுதி சேர்கின்றது.

"அம்"  என்பது முன் காலத்தில் அமைப்பு என்று பொருள்தரும் ஓர்  ஈறு எனலாம்.  அமைப்பு என்பதன் அடிச்சொல் அதுவேயாகும்.

அம்  > அமை .
அம்  > அமுக்கு.
அம்  > அமிழ்
அம்  >  அமர்   (விரும்பு )
அம்  > அமர்தல்
அம்  > அமர்த்து
அம்  > அமர்ப்பித்தல் (> சமர்ப்பித்தல்)
அம்  > அம்மி
அம்  > அம்பு  

etc. etc

In all these words,you can see that a dynamic force seems to be acting on a static force    .

 அம்  அழகு என்றும் பொருள்.  சீன மொழியில் மரியாதைக்குரிய பாட்டி என்றும் பொருள்.

அம்  விகுதி தமிழ் மொழிக்குப் பொருத்தமானது ;  சமஸ்கிருதத்திற்கு  இன்றியமையாததன்று.  அப்ஹிதம் , அபாலம்  என சொற்களில் வருமெனினும்  வேதா  யோகா என அம் இல்லாமலே  ஆகும்.

Notes:

(1)  மு.வரதராசனார் , (2)  நிறைதமிழாய்ந்த   மறைமலையடிகளார்.

  (3)  பாரதிதாசன்.  (4)  நன்னூல் (இலக்கணம்).

இன்று+ அமிழ் = இன்றமிழ் என்றும் வரும்.  "இன்றைக்கு  மூழ்கிவிடு" என்றும் பொருள் தருமேனும் இடம் நோக்கிப் பொருள் கொள்ளல் வேண்டும்.

இன் = இனிமை;   இன்னா  =  துன்பம் தருகிற,  தருவன  , இனிமை இல்லாத(வை), .


வெள்ளி, 14 மார்ச், 2014

மோட்சம்

மோட்சம்

மலையாளத்தில் பேச்சு வழக்கில் "மேல்" என்பதை "மோள் " என்பர்.   மேல்  - >
மேலுலகைக் குறிக்கும் மோட்சம் என்பது இந்தப்  பேச்சு வழக்குச் சொல்லினின்றும் திரிந்ததாகும்,


எப்படி என்று கவனிப்போம்."
மோள் + சு  + அம் =  மோட்சம்.  ("மோக்ஷ" :  " ம்"  இல்லை  )  'இம் "  முடன்  முடிவது தமிழ் மரபு .


பல சொற்களில் சு விகுதி உள்ளது,  எ‍-டு:  பரிசு.

து விகுதியும் சு என்று திரியும். எ‍‍‍-டு:  பெரிது > பெரிசு, (பேச்சு வழக்கில்).) ஆனால் இது "சு" விகுதி அன்றெனலாம். காரணம் அது தன்னிலையாய் எழாதது . மனம்> ??மனது> ??மனசு என்றும் காண்கிறோம் ஆயினும் இவை  (??)தவறான திரிபுகள் என்பர். அது நிற்க.

தவறான திரிபுகளும்  ஓர்  உண்மையைப் புலப்படுத்தக்கூடும்.


சு விகுதியுடன் அம் சேர்ந்தமைந்த  சொல்லே மோட்சம் என்பது.  மிக்க நேர்த்தியுடன் தான் அமைந்துள்ளது.

மோட்ச‌ என்று  அழுத்தாமல்,  மோக்ஷ என்று மெலிக்கப்பட்டதும் ஒரு திறமைதான்.  இத்தகைய அழுத்தம் raGgarATchandas என்பதில் கிடைக்கிறது!

மோட்சம் ஒரு திராவிட மூலம் உ டைய சொல்.


=======================================================================
Note:

மேடு > மோடு > மோட்டுவளை ??  மே > மோ  .

மோட்சம் -  முஸியதே  என்ற சமஸ்கிருதச் சொல்லின் திரிபு என்பர்.  mucyate (Sanskritमुच्यते)[12] appears, which means to be set free or release - such as of a horse from its harness
மோள் + சு +அம்  இன்னும் அணுக்கமாய் உள்ளது.  முஸியதெ என்பதும் "முற்றியதே !"  என்பதனோடு ஒலியணிமை உடையது!

சொற்களை 'வனைந்த'  பாமரர்  முனிவர்களைப் போல ஆழ்ந்து சிந்தித்து அமைக்க இயலாதவர். அல்லது  முயலாதவர்."செத்து மேலே போய்விட்டார்" என்பதே அவர்கள் இயல்பாய்க்  கூறும்  வாயுதிர்வு  ஆகும்.

ற்றி > பத்தி>  பக்தி.
முற்றி > முத்தி > முக்தி.
விழுபற்று > விபத்து   .

வியாழன், 13 மார்ச், 2014

Kerala Kasaragod Brahmi Inscriptions finding

Newly discovered Brahmi inscription deciphered

AThe mechanical estampage of the Dravida Brahmi inscriptionfound on a laterite bed inside a forest at Karadukka in Kasaragod  district.
The mechanical estampage of the Dravida Brahmi inscriptionfound on a laterite bed inside a forest at Karadukka in Kasaragod district.

It was found engraved on a laterite bed near a water channel in Kasaragod

An inscription in Dravida Brahmi characters, reported from the government forest division, Karadukka, in the Kasaragod district of Kerala, has been deciphered.
The inscription in bold and legible letters was discovered recently. There are 14 letters, and the use of pulli (dot), peculiar to Southern Brahmi for denoting half-sound, is conspicuous by its presence in the record. Such label records are not uncommon in Kerala, but this is the first time an inscription engraved on laterite has been found.
The record is in good state of preservation even though the place is infested with wild animals such as elephants and bison, M.R. Raghava Varier, a notable epigraphist, who visited the site and deciphered the inscription, told The Hindu.
According to Dr. Varier, the record reads, kazhokora pattan makan charuma. The writing, in all probability, records the name of the person who was responsible for constructing the channel. Until recently, this facility was utilised by people of the locality to water the low-lying fields.
Dr. Varier says the letters in the inscription are comparable to those of the Ammankoyilpatti and Arachallur of Tamil Nadu dated 3rd Century CE. The record may be tentatively dated to that period, he says. But it cannot be compared with the Brahmi inscriptions on the walls of the Edakkal rock shelter in Wayanad, he adds.
Mechanical estampage of the inscription was prepared by K. Krishnaraj, field assistant, Department of Archaeology, Kerala, and E. Kunhikrishnan, former professor, Department of Botany, Government University College, Thiruvananthapuram, along with E. Ratnakaran Nair, a local resident.
“Good discovery”

Chennai Special Correspondent adds:
V. Vedachalam, one of the four authors of Tamil-Brahmi Inscriptions, an authoritative book on Brahmi script brought out by the Tamil Nadu Archaeology Department, has described the find at Karadukka as “a good discovery.”
Dr. Vedachalam is of the view that the language of the Karadukka script is Tamil and should be called Tamil-Brahmi or at least Southern Brahmi.


http://www.thehindu.com/news/national/kerala/newly-discovered-brahmi-inscription-deciphered/article5777862.ece



__._,_.___

புதன், 12 மார்ச், 2014

கல, கலகம் கைகலப்பு, கலாட்டா

கலத்தல் என்ற சொல்லுக்குச்  சண்டையிடுதல் என்று தமிழில் பொருளுண்டு.     இந்தப் பொருள் எப்படி ஏற்பட்டது என்றால், நெருங்கி வரும் இரு படையணிகள் எதிர்கொண்டு கலந்து நின்றே போரிடுவதன் காரணமாக !

கைகலப்பு என்ற சொல்லும் இங்ஙனம் கலந்து நின்று சண்டையில்
ஈடுபடுவதனால் ஏற்பட்டதே.

கல + கு+ அம்  =  கலகம்  (வலி மிகாப் புனைவுகளில் இதுவுமொன்று .) I have given other examples where hard stressed sounds have been avoided in word construction. Read older posts).


சரி , கலாட்டா என்பது எப்படி அமைந்தது?


முறைப்படி போரிடாமல், கலந்து நிற்பதுபோல் நின்று ஆட்டம் போடுகையில்  அது கலாட்டா ஆகிறது.


இதைப் பிரித்தால்:


கல+ ஆட்டு + ஆ =   கலாட்டா. என்றிவண்  வரும்.


ஆ என்ற விகுதி வந்த வேறு சொற்கள் :


நில் > நிலா ;

கல் >  கலாஒற்று  ;
பல்  > பலா   ;  (பல சுளைகளை உடைய பழம்).
உல் > உலா ; ( உல் > உலவு ).
வில் > விலா  (வில் போன்ற வளைந்த எலும்பு)

எல்லாம் லகர ஒற்று  இறுதிச்  சொற்களாய் வந்துவிட்டன. டகரம்  வந்த சொல் ஒன்று காண்போம்.

எ-டு :  கடு + ஆ =  கட்டா  (ஒரு வகை மீன் )  (கட்டு + ஆ =  கட்டா எனினுமாம் )

பட்டை -  பட்டையம் >  பட்டயம்.
பட்டை > பட்டா.

மூலச்சொல் : படு என்பது,  படு+ஐ ,  படு+ ஆ.  படு ஐ  ( டகரம் இரட்டித்தும் இரட்டிக்காமலும் புணரும். ) 

விழை  >  விழா தொடர்பு மிக்கச் சொற்கள். 


வினை, பெயர் என்ற பல திறச்  சொற்களிலும்  இவ்விகுதிபெற்றுச் சொல் லமையும்.


galAttA அன்று;  கலாட்டா தான்!




கல, கலகம் கைகலப்பு, கலாட்டா   will edit later. Pl enjoy the post in the mean time.

ஞாயிறு, 9 மார்ச், 2014

"நானும் ஓர் ஆட்டக்காரி தான் "

குறுந்தொகை என்னும் சங்கத் தொகை நூலிலிருந்து ஓர்  இனிய பாட்டு. பாடிய புலவர்  மன்னன் கரிகாலனின் மகளாரான ஆதிமந்தியார். உண்மையில் இஃது  ஒரு துயரப் பாடலாகும்.  (ஆதிமன் + தி =  ஆதிமந்தி,  தி பெண்பால் விகுதி.   ன்+தி = ன்றி  என்று வரவில்லை).  ஆதி = ஆக்க காலம் ;  மன் = மன்னன், அரசு.  மன்  என்ற சொல்லில் அன் என்னும் ஆண்பால் விகுதி இல்லாமையால், அஃது  பால் தெளியப்படாத சொல் என்க . பொதுச்சொல். **

இனிப் பாடல் காண்போம்:

மள்ளர் தழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
 யாண்டும் காணேன் மாண் தக்கோனை;
யானுமோர் ஆடுகள மகளே; என் கைக்
கோடு ஈர்  இலங்கு வளை நெகிழ்த்த
பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே.  (31)

மள்ளர் = மறவர்.  soldiers. தழீ இய (அளபெடை )= தழுவிய.  இங்கு கூடிய (கூட்டமாய்ப் பொருந்தி யுள்ள  என்று பொருள்  )    விழவினானும் =   களித்து ஆடுமிடத்திலும்.  துணங்கை =  பெண்கள் ஆடும் "துணங்கை" என்னும் ஒரு நடனம் .   ~யானும் :  அஃது  ஆடுமிடத்திலும் ;    யாண்டும் =  எவ்விடத்திலும் ;   மாண் தக்கோன் = மாண்பு  பொருந்தியவன்.  என் தலைவன்.

யானுமோர் ஆடுகள மகளே   =  நானும் ஓர் நடனமாடு கூட்டத்தில் ஒருத்தியே;
கோடு ஈர்  =  அறுத்துச் செய்யப்பட்ட; இலங்கு -  ஒளி வீசும்;  வளை = வளையல்கள் .  நெகிழ்த்த =  (துயரம் விளைத்து அவை )  கழன்றிடும்படி செய்த .;  பீடுகெழு  =  பெருமைக்குரிய; குரிசில் =  தலைவன் .  ஆடுகள மகனே. =  நடனக்காரன் தான்.

ஆதிமந்தியார், கரிகால் சோழனின் மகள். மணமுடித்த சின்னாளில் காவிரியில் நீராடச் சென்றவிடத்து, அவர்தம் கணவனை ஆற்றுவெள்ளம் கொண்டுசென்றதாம்.  காவிரிக் கரையோரத்திலும் மற்ற இடங்களிலும் அவனை அவர் தேடினார். ஆடுகளங்களிலும் தேடினார்.  பயனொன்றுமில்லை.
கண்ணீரில் தோய்ந்துவிட்டார்.

தேடிக்கொண்டிருந்த வேளையில் யாரும், "நீவிர் ஆடுகள மகளா ?"  (ஆட்டக்காரியா?) என்று கேட்டனரோ என்னவோ அறியோம்.  அழகிய இளம்பெண், அண்மையில் மணமுடித்த அரசிளங்குமரி என்று கேட்டவர் அறிந்திலர் போலும். " ஆமாம், நானும் ஓர் ஆட்டக்காரிதான்,  என் தலைவரும் ஓர்  ஆட்டக்காரர்  தாம் .  நான் அணிந்த வளையல்கள் தாமே கழன்று விழச் செய்துவிட்டார்  ! " என்கிறார் அரசிளங்க்குமரியாகிய இப்புலவர்.

நல்ல  கவித் திறன் படைத்தவர். தம் கணவனைப் புனலில் போகக் கண்டு தேடிய ஞான்று,    தவித்த காலை எழுந்த பாடல் .  பெயர் ஒன்றும் குறிப்பிடாமற் பாடியதால், அகப்பொருள் பாடலாயிற்று.  படித்து நாமும் அவர் வருத்தத்தில் பங்குகொள்கிறோம்.

மகளுக்கு நேர்ந்த இத்துயர் அறிந்து மாவீரன் கரிகாலனும்  மிகுந்த துயரில் மூழ்கி எங்ஙனம்  மகட்கு ஆறுதல் கூறுவேனென்று தலை சுழன்றிருப்பன்.

ஆதிமந்தியார் earns our esteem and admiration by identifying herself with common dancers soldiers  etc., during such a period of trial and tribulation in her youthful life. She could have said: " no, I am a princess." But she did not.
At the base of her lines is her deep understanding of life itself......Whether princess or ordinary person, everyone is subject to the rigours and calamities in life....!  The soldiers go from place to place to do their battles as ordered.  The dancing girls go from place to place performing their art. She is going from place to place looking for her husband carried away by the waters.......hoping to find him.  soldiers....hoping for victory!  dancers, hoping for more fans and money..! No hope no life!

~   means you have to import the preceding word.

will edit later if necessary. In the meantime, you may enjoy the poem.




குறிப்புகள் :

** தன் + திறம் >  தன் + திரம் >  தந்திரம்;
மன் + திரம்  = மந்திரம் . முன்னுதல் >  மன்னுதல் .  எண்ணுதல்   திறம் > திரமாகி ஒரு  பின்னொட்டாகப் பயன்பட்டுள்ளது.  இதுபோன்ற சொல்லாக்கப் புணர்ச்சிதான் ஆதிமன்+தி என்பதும்.  ஆதிமன்றி எனின்  இன்னா ஓசை பயக்கும்.  எனவே இலக்கணியர் சொல்லும் வழக்கமான  புணர்ச்சி விதிக்கு சொல்லாக்கத்தில் வேலையில்லை .  In the construction of words special rules would apply as necessary.

பீடு+மன் = பீடுமன் >  பீஷ்மன் >  பீஷ்ம .  ( பீமன் > வீமன் ) பெருமைக்குரிய மன்னன் என்பது பொருள்.  இது ஒரு காரணப் பெயர்.  Just for your knowledge,  note the corruption of the word "man".மன்  Note there are instances where da (ta) is replaceable with sha:  பாஷை .-  பாடை ;   ரிஷபம்  -  இடபம்     

Baby names (female)

குறளில் வரும் பதங்களை அடிப்படையாய் வைத்துப் புனையப்பட்ட பெண்குழந்தைப் பெயர்கள் ஓர்  இணைய நண்பருக்காகச் செய்யப்பட்டவை. 


அவிர்மதி (குறள் 1117)
தூவிதா ( குறள் 1120)
பணிமொழி (குறள் 1121)
நுதல்யா (> திருநுதல் குறள் 1123)
அமர்க்கண்ணி (குறள் 1125)
ஏமிதா ( ஏமம் - குறள் 1131)
மலரன்னா (மலர்+அன்னை, மலர், குறள் 1142) Also like a malar
ஒப்பிடுக: தம் +அன்னை, தமன்னை, தமன்னா)
மலர்மதி
அரிதாமணி (குறள் 1153) அரிதாகும் மணி என்பதன் சுருக்கம்.
உய்வினி (>உய்வு) குறள்1174
பசந்தி ( குறள்1188) பச்சை நிறம் தோற்றம் தந்தவள்  (வசந்தி என்ற பெயர் வேறு)
இது வசந்தி என்பதனோடு மயங்கி நிற்கும் பெயர்.

நனவிதா ( குறள்1219)
மாலிகா (மாலை, குறள்1221) 
இது பழைய பெயர் போலாகிவிட்டது.
போதிதா (போது = அரும்பு) குறள்1227
குழலினி. குழலிகா. குறள் 1228
மாயா குறள் 1230 இது பழைய பெயர்





சனி, 8 மார்ச், 2014

ஆரோக்கியம்

ஆரோக்கியம்  என்பது தமிழா?

 ஆர்தல்  =  நிறைதல்.

வளமார் தமிழ் -  இங்கு வரும் ஆர் என்பது "நிறைந்த" என்று பொருள் தருவது.
ஆர் என்பது ஓர்  இன்தமிழ்ச் சொல்.

"ஊக்குதல்"  "ஊக்குவித்தல்" என்பவை எல்லாம் என்ன?   ஊக்கப் படுத்துதல் என்று பொருள் .  அழகு தமிழே.

ஆர  என்றால் ?

நெடு நாள் பிரிந்திருந்த நண்பர்கள் தாம் எதிர்கொண்டபொழுது ஆரத் தழுவிக் கொண்டனர்.

இங்கு ஆர என்பது  எச்ச  வினை. It modifies the word தழுவிக் கொண்டனர்.  முழுமைபெறத்  தழுவிக்கொண்டனர்  என்பது.

இப்போது ஆர  ஊக்கிய என்ற இரு சொற்களை இணைத்தால் என்னாகும்?.

Now you choose which result you wish:

1.  ஆரவூக்கிய. (வகர உடம்படு மெய் பெற்றுப் புணர்ந்தது.)

2.  ஆரயூக்கிய  ( யகர உடம்படுமெய் போட்டிருக்கிறோம். முதலாம் புணர்வை விட கொஞ்சம் மோசமாகத் தோன்றுகிறது.)

3. ஆரோக்கிய -   இது  இப்போது காணப்படும் வடிவம்.

இந்தச் சொல்லைப் புணர்த்தியமைத்தோன் ஒரு  தமிழனாக இருக்கவேண்டும்.  இல்லையென்றால் இவ்விரு "ஆர  ஊக்கிய: " என்பவற்றை அவன் அறிந்திருத்தல் அருமையே.

ஆர  ஓங்கிய என்ற சொற்கள் "ஓக்கிய" என்றும் வந்திருக்கலாம் என்று வாதிடலாம்.  (.வலித்தல்)  I would say it is a possibility but not a probability.

உடலுக்கு ஊக்கம் தரும் நிலையைக் குறிப்பதால், ஊக்கிய என்பதே பொருந்துவது.  ஊக்கு > ஊக்கிய.  ஊக்கு > ஊக்கம்.

பெரும்பாலும்   சமஸ்கிருதச்  சொற்களின் புணர்ச்சியில்தான்  ர + ஊ  என்பது "ரோ" என்று திரியும் என்பது உண்மைதான். ஆனால் தமிழிலும் எப்போதாவது (ஒரோவழி )  இப்படி வரும் என்பர் தமிழ்ப்புலவோர்.

சொல் திரிபுற்ற விதம் கண்டு வெறுத்து அது தமிழ் அன்று என்பர் தமிழாசிரியர் பலர்.

மூலச் சொற்கள் - ஆர , ஊக்கு(தல்)  - தமிழ். இவற்றைக்கொண்டு ஆக்கிய இச்சொல் தமிழா? 

முடிவு:  உங்களுடையது!


வெள்ளி, 7 மார்ச், 2014

சிலாக்கியம்

சிலாக்கியம் என்ற சொல்லுக்குப் பாராட்டத்தக்கது, சிறப்பானது  எனப் பல அர்த்தங்கள் உள்ளன. இது பழம் ஐரோப்பிய மொழிக்கு  உரியதாகத் தெரியவில்லை.சொல்லின்  ஒலியிலிருந்து அது தென்னாட்டுச்  சொல் என்று  புரியும்.

இதை இப்போது சற்று நுணுகி ஆய்வு செய்யலாம்.

செல் > செல்ல > செல  >  சில  (மக்களிடத்துச் சென்று புகழ்பெறுமாறு )
ஆக்கிய >  செய்யப்பட்ட , உருவாக்கப்பட்ட
அம்  -   இறுதி  நிலை அல்லது விகுதி.

செல + ஆக்கிய + அம் .

செல + ஆக்கிய + அம் =  செலாக்கியம் > சிலாக்கியம்.

செந்தூரம் >  சிந்தூரம் என்ற திரிபோடு ஒப்பிடலாம்.

சில  (few)   என்று பொருள்தரும் சொல் வேறு.


குறிப்பு: 

செல்+ஆக்கு+இயம்  = செலாக்கியம்  > சிலாக்கியம் எனினும் ஒக்கும் என்பதறிக. லகரம் இரட்டித்துப் பின் மறைவதாகக் கொண்டாலும்  அஃ தே.  செ என்ற்பாலது சி ஆனதே இதில் முக்கியமான திரிபு ஆகும். The other changes are not substantial.  


புதன், 5 மார்ச், 2014

பக்கொடா !!

உளுந்துவடை ("உளுந்தவடை") அல்லது மெதுவடை என்பது நம் வடை வகைகளுள் ஒன்று. குளம்பி நீர் (coffee) அல்லது கொழுந்து நீர் (tea)  குடிக்கும்போது கடிக்க மிக்கச் சுவையாய் இருக்கும். இந்த மெது வடைக்குப் பக்கத்தில் கடித்துச்  சுவைக்கும் பொருட்டு கடின "வடை" ஒன்று வைக்கப்பட்டது.  அதைப் பக்கவடை என்றனர்.  பார்ப்பதற்கு வடைபோன்று  இல்லாமலும் ஓருருவில் இல்லாமலும் இருக்கும் பலகாரம் அது.

பக்கவடை > பக்கவடா > பக்கொடா  !!
(வடைக்குப் பக்கத்தில் வைப்பதற்குரிய பலகாரம் )

இப்போது யாரும்  பக்கவடை என்று சொல்வதில்லை என்று நினைக்கிறேன்.. பக்கொடா, பக்கடா என்றுதான் சொல்கிறார்கள்.

வடு >  வட்டம்  (டகரம்  இரட்டித்தது.)   வடு+அம் .
வடு >  வடை    (டகரம்  இரட்டிக்கவில்லை)  வடு+ ஐ .

சொல்லமைப்பில் இருவகையிலும்  இயலும்.

Please read through my various posts in the past where I have adverted to this in word-building.  Make a list for yourselves for your own reference.

வேங்கடம் : இங்கு  கடம் என்ற சொல் (கடு+அம்  ) -  இரட்டிக்கவில்லை.(  கட+ அம் என்பர் சிலர்.)

பஞ்ச - ஐந்து தொடர்பு

ஐந்து என்ற சொல் நூல் வழக்கில் உள்ள நல்ல தமிழ்.  பேசும்போது இந்தச் சொல்லை யாரும்  இயல்பாகப் பயன்படுத்துவதில்லை.   "அஞ்சு "  என்ற பேச்சு வழக்குச் சொல்தான் நம் நாவில் தவழ்வது.  இது  அச்சமுறுதலைக் குறிக்கும் "அஞ்சு " என்ற சொல்லுடன் மயங்கி எத்தகைய பொருள்தடையும் முளைப்பதில்லை. அதற்குக் காரணம்  நாம் "பயப்படு "  என்பதைப்  புழங்குகிறோம். ஆனால் திரைப்பாடலில் அல்லது திரை தரும் உரையாடல்களில் வரும்போது அதை சுவைக்கத் தொல்லையேதும் குறுக்கிடுவதில்லை.

"அஞ்சுதல் நிலைமாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்"  (கண்ணதாசன் )

என்று பாடலில் வந்தால் நன்கு சுவைத்து மகிழ்வோம்.    அஞ்சிலிருந்து எட்டுவரை அதில் அமைந்துள்ளபடியால்.

ஐந்து என்பதிலிருந்து அஞ்சு வந்ததா அல்லது அஞ்சு என்ற வாய்மொழிச் சொல்தான்  ஐந்து என்று இலக்கிய வழக்காகத் திரிந்ததா /  திருத்தப்பட்டதா என்று கேட்டால் அதற்குப் பதில், திட்ட வட்டமாகத் தெரியவில்லை எனபதாகவே இருக்கும்.  எழுத்து மொழியினும் பேச்சு மொழியே முந்தியது என்றால் அஞ்சு என்பதுதான் முந்தியது என்று கூறவேண்டும்.  ஆனால் :

மூல வடிவம்  "ஐ"  என்று தெரிகிறது.  பழந்தமிழர் (கல்தோன்றி மண் தோன்றி தமிழர்  தோன்றி ) ஓரசை மொழியைப் பேசியகாலை "ஐ" என்றிருப்பர். பின் அது "ஐஞ்சி" "அய்ஞ்சி"  "அஞ்சு" என்றெல்லாம் திரிந்திருக்கலாம்.  தொல்காப்பியனார்  போன்ற பழம்பெரும் பேராசிரியன்மார் அதை மாற்றி "ஐந்து" என்ற "து" இறுதிகொண்ட  சொல்லைப்  படைத்திருக்கலாம். ஐந்து என்பது புலவர் புனைவாகையினால் இதுவரை அது பேச்சு  வழக்கில் வரவில்லை.

அஞ்சு என்பதற்கும் பஞ்சு என்பதற்கும் உள்ள வேறுபாடு ஒரு பகர ஒற்றுதான்.
ப்  + அ  = ப . இந்த ஒரு புள்ளியிட்ட எழுத்தே வேறுபடுகின்ற பஞ்ச் என்ற சொல்  அஞ்சு என்பதன் தலைத் திரிபே ஆகும். பஞ்ச் என்பதிலிருந்து பல சொற்கள் புனைவு பெற்றன.  பஞ்சாமிர்தம்  பஞ்சாயத்து, பஞ்சகபாலம்,   ,பஞ்சதாரை. பஞ்சதீதீ ,    இன்ன பிற   (இத்யாதி இத்யாதி )

அஞ்சு என்ற பேச்சு வழக்கின் திரிபே பஞ்ச் என்பது  . மூலச் சொல் "ஐ " ஆகும். 

 

     

ஞாயிறு, 2 மார்ச், 2014

காலம்

காலே இல்லாத காலமே ---  உனக்குக்
கால்முளைத்து நீண்ட தெப்போது?
காலில் உருளை மாட்டிகொண்டாய் -  நீ
கனவே கமாக ஓடுகின்றாய்!

நேரமே நகராமல் நிற்கின்றாய் --- நீ
நிகரில் உளைச்சலை விற்கின்றாய் ,
ஊரைச்  சுற்றிடப்   போம்போது    ----- மட்டும்
ஓட்டமெடுப்பது உறு முறையோ!


பல்லிக்குப் பல் இல்லாததுபோல் காலத்துக்குக் கால் இல்லை,  அது கால் என்ற சொல்லினடிப் பிறந்ததென்றாலும் .

நேரம் நிற்பதாவது " நேரமே போகமாட்டேன்" என்கிறது  என்று   சொல்லும் நிலை.Such person is obviously bored.  She or he might be depressed too. If this person goes for a tour or travel.  she might feel better. At that point,  the time begins to run..

சனி, 1 மார்ச், 2014

விபத்து

விபத்து  என்னும் சொல்லைச் சற்று கவனிக்கலாமே!

ஆபத்து,  ஆதரவு என்னும் பதங்களை  முன்பு முன்கொணர்ந்து உரையாடியுள்ளோம்,

மலையாளத்தில் "என்ன ஆயிற்று?"  அல்லது "என்ன நடந்தது"  (என்ன ஆயிற்று உனக்கு ? ) என்பதை  "எந்து பற்றி?"  என்று  கேட்பர். இப்படித் தமிழர்  உரையாடுவதில்லை.  தமிழில் இதை முறையாகச் சொல்வதானால் -"உன்னை எதுவும் பற்றிக்கொண்டுவிட்டதா?"  என்றால் அதில் அர்த்தமுண்டு.
அதற்குப் பதிலாக, என்னை என்ன பேய் பிசாசு பற்றிக்கொண்டுவிட்டதென்றா கேட்கிறாய்? என்று திருப்பிக் கேட்கலாம். இயல்பாக நாம் இப்படிக் கேட்கமாட்டோம்.   பற்றி என்ற சொல்லினை நன்கு கவனித்தால் தமிழ் நாட்டிலும் இத்தகைய சொற்பயன்பாடு இருந்திருக்கக்கூடும்.

எங்கேயும் விழுந்து புண்பட்டுவிட்டல் அதை "விழு பற்றி "  எனலாம். விழு பற்று (தல் ),  விழுதலாகிய நிகழ்வு (என்னைப்) பற்றியது, பற்றிக்கொண்டது  என்பதாம்.

பற்று என்பது பேச்சில் பத்து எனவரும்.

விழுபற்று -  விழுபத்து  -  விபத்து.  றகர ஒலிகள் தகர ஒலிகளாய் ஆயின என்பது மட்டுமின்றி ழுகரமும் மறைந்த இடைக்குறைச்சொல்.

ஒரு காலத்தில் why grapple with such a messy word composition and corruption. Not quite neat isn't it?  Tamiz should not be so messy என்று இந்தச் சொல்லை வீசிஇருப்பார் நம் தமிழாசிரியர்.    இத்தகைய திரிபுச் சொற்களையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு இது நாள் வரையிலும் காத்து வைத்திருக்கும் சமஸ்கிருதத்துக்கு நாம் நன்றி சொல்வோம்.

ஓடு  ஓடுதல்  தாவு தாவுதல்  என்று வினையிலிருந்து தொழிலுக்குப் பெயர் வந்தது  என்பது கற்பிக்க எளிதல்லவா !

ஒப்பிடுக:

பற்று >  பற்றி >  பத்தி  >  bhakti.   இறைப்பற்று.




விபத்து என்ற சொல்லின்  அமைப்புப் பொருள்  விழுதல் தான் என்பதை சமஸ்கிருதமே தெளிவாக்குகிறது.  vipadpadyate: (விபத்துப்பட.....) to fall or burst asunder என்பதைக் கண்டு தெளியலாம்.

விழுதல் என்ற "கரு"விலிருந்து இத்தகைய பெருந்தொகையான சொற்கருத்துகள் உருப்பெற்றுள்ளமை  மகிழ்ந்து இன்புறத்தக்கது.

குறிப்புகள்

தமிழில்:

பற்று  (பத்து). grasp, grip, seizure; 2. acceptance; 3. adherence, attachment, affection, clinging of the mind to sensual objects, of two kinds, viz., aka-p-par6r6u, pur6a-p-par6r6u ; 4. connection, affinity, bond; 5. piece put on or nailed on for strength; 6. solder; 7. paste, glue; 8. particles of boiled rice adhering to the cooking pot; 9. pot containing particles of food adhering to it, as impure; 10. place under one's possession; 11. resting place; 12. portion of a country consisting of many villages; 13. receipt; things received; 14. support; 15. pillar; 16. love, devotion; 17. friendship; 18. path to salvation; 19. riches, treasure; 20. family life; 21. paddy field; 22. bundle; ass of betel leaves; 23. purpose, intention, principle; 24. plaster; poultice; medical application; 25. disease of the skin, ring-worm, psoriasis; 26. cement; 27. a kind of song; 28. village, parish

விபத்து = விபத்தி.  (விழுபற்றி >  விழுபத்தி >விபத்தி )
விபத்தி . misfortune;  poverty;  agony; danger;  death;  destruction
விபத்தி   change;  case; suffix of declension

பேச்சில் யாரும் பற்றி  என்னாது ; பத்தி என்றே சொல்வது  காண்க :  அதைப் பத்தி இதைப் பத்தி .........!

It is to be noted that the media uses the term vipaththu for accident.  pErunthu vipaththu,  rail (thodarvaNdi) vibattu, vimAna vipaththu (air accident or disaster).

சங்கதத்தில் :

vipadpAdayati   (விபத்துப்பாடு )   : to cause to perish , destroy , kill .
vipad   :  going wrongly , misfortune , adversity , calamity , failure , ruin , death
vipadpadyate: (விபத்துப்பட.....) to fall or burst asunder MBh. xi , 95 ; to come between , intervene ,
prevent , hinder ; to go wrongly , fail , miscarry , come to nought , perish die
vipadAkrAnta (விபத்தாகிறான் தா(ன்))  and vipadgata  ( விபத்திற் கிட) fallen into misfortune
vipaduddharaNa. (விபத்துத்தாரண)
vipaduddhAra  (வ்பத்துத் தாரம்) m. extrication from misfortune
vipadgrasta (வி பத்துக்குறுக்கிடு). seized by mñmisfortune , unfortunate ;
vipaddazA  (விபத்தாயது)  a state of mñmisfortune , calamitous position
vipadyukta  (விபத்துத்தம்) attended with mñmisfortune , unfortunate
vipadrahita  (விபத்திறுதல்) free from mñmisfortune , prosperous  இறுதல் -முடிதல்

பிறைக்கோட்டுக்குள் உள்ள தமிழ் ஒலிஒற்றுமை காட்டுவதற்கு .  Do you know that Sanskrit used a Dravidian sound system all the way.....!