புதன், 30 ஏப்ரல், 2014

சரித்திரம்

வரலாறு என்ற தனித் தமிழ்ச் சொல்லுக்கு நேரான சொல்லாக வழங்குவது
சரித்திரம் என்ற சொல். இது சரிதம், சரிதை என்றெல்லாம் குறுகியும் வழங்கும்.

நடந்த ஒரு நிகழ்வினை உள்ளது உள்ளபடியே சொன்னால்  அது சரித்திரம். அதாவது நடந்த நிகழ்வினைக்   கூட்டிக் குறைப்பு ஏதுமின்றிச்  சரியாகச் சொல்லவேண்டும். கற்பனை நிகழ்வுகள் சேர்க்கப்படுமாயின் அது கதையாகிவிடும்.  கவிஞனின்   உயர்வு நவிற்சி,
 பழித்தல் முதலியவை விலக்கப்படவேண்டும்.

இந்தியர்களிடம் மேலை நாட்டில் உள்ளதுபோன்ற சரித்திர  நூல்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

ஒன்று சரியாகச் சொன்னால் அது திறமாகவும் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

சரி + திறம் =  சரித்திரம்

திறம் என்பது  பின்னொட்டாகத்  திரம் என்ற  என வந்தது.

இது தமிழ் மூலங்கள் உடையது  என்பது தெளிவு.

 will edit


A bigger Indus Valley historical site in Haryana discovered

Korean scientists helping.............. 
  • altVarious artifacts of the ancient era -Department of Archaeology Deccan College
Pune: In one of the largest excavations undertaken for an Indus Valley civilisation site at Rakhigarhi in Hisar district of Haryana, city-based archaeologists have discovered human skeletons in the burial mounds.
In order to know more about their origin, race, food habits, health and the diseases that plagued them, a team of scientists from Seoul National University of Medicine, South Korea has been roped in to conduct DNA testings on these skeletons.
Archaeologists working in the village believe that the Indus Valley civilisation has its roots in Rakhigarhi and gradually grew from there.
The team from the archaeological department of Deccan College, which has been conducting excavations at the village, believe that Rakhigarhi is the largest Indus Valley civilisation site spanning across a 350-hectare area compared to Mohenjo-daro situated in Pakistan, which is around 300 hectare.
There are close to 2,000 Indus Valley civilisation sites across India, Pakistan and Afghanistan, of which Mohenjo-daro, Harappa, and Ganweriwala in Pakistan; and Dholavira and Rakhigarhi in India are the most well known.
alt
Vasant Shinde, vice-chancellor and director of Deccan College Post-Graduate and Research Institute, affiliated to the University of Pune, said that since the Rakhigarhi site is the biggest, they plan to apply for a ‘World Heritage Status’ for the site and will soon start the nomination process.
“Though the work has been going on for the past three years, for the first two years, we could only conduct surveys of the area. The excavation work was started just a year ago,” he said.
Terming it an important discovery, Shinde said, “While conducting excavations, our archaeologists found some early dates of 1500 BC in Rakhigarhi and on that basis there is a strong sense that the Indus Valley civilisation could have its roots here and then moved towards the Indus valley,” he said.

http://www.dnaindia.com/pune/report-archaeologists-from-pune-discover-indus-civilization-artifacts-in-haryana-1981160





alt

குறள் பார்ப்பான் என்ற சொல்

"Paarppaan"  

பார்ப்பான் என்ற சொல்லுக்கு, பெரும்பேராசிரியர் மறைம-
லையடிகளார் சொன்ன பொருள் , கோயிற்காரியங்கள் பார்-
ப்பவன் என்பது.

ஓரிரண்டு ஆண்டுகளின்முன் நம் நேயர்கள் இணைய தளங்களில்
கூறியது: "நூல்களைப் பார்ப்பவன்" என்பது.

இரண்டையும் அணைத்துச் செல்கிறது என் உரை.

திருவள்ளுவர் காலத்தில், நூல்கள் ஏட்டுருவை இன்னும்
அடையவில்லை என்பது மெய்ப்பிக்கப் பட்டால், நூல்கள்
பார்ப்பவன் என்ற பொருளில் மாற்றம் தேவைப்படலாம்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர்
கரணம் என்ப என்பது தொல்காப்பியம், அது நினைவுக்கு
வருகிறது. பொய்யும் வழுவும் தோன்றாது மக்களை மேற்பார்-
ப்பவர் "பார்ப்பார்" என்று சுட்டப்பட்டிருத்தலும் கூடும்.
மறையோதுவோர் மக்களை நன்னெறிப்படுத்துவோர் அல்லது
அக்கடமை உடையோர் என்பதனால் இப்பெயர் வந்திருப்பி-
ன் சாலப் பொருத்தமே.

பார்ப்பான்  என்ற சொல் வந்துள்ள குறளைச் சற்று நுணுகி ஆய்வோம்.

ozukkam

மறப்பினும் ஓத்துக் கொளலாகும்; பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

ஓத்து = ஓதுதலை;
மறப்பினும் = மறந்துவிட்டாலும்;
கொளல் ஆகும் = அதனை ஏற்றுக்கொள்வது கூடும்;
பார்ப்பான் = கோயிற்காரியங்கள் அல்லது நூல்கள் பார்ப்ப-
வன்;
பிறப்பொழுக்கம் = பிறந்த ( குடியின் )் ஒழுக்கத்தினை;
குன்ற = குறைவுபட விட்டுவிட்டால்;
கெடும் = (அது மாற்றவியலாத ) கெடுதலை உண்டுபண்ணிவிடும்.

இதனால், ஒழுக்கத்தின் இன்றியமையாமை உரைக்கப்பட்டது.

ஓதுதலை மறத்தல் : ஓதும் தொழிலையே நிறைவேற்ற மறத்தல்
ஒன்று; மற்று, ஓதுகையில் சொற்களையும் (மந்திரத்தையும்)
சொற்பொருளையும் மறந்துவிடுதல் இன்னொருவகை மறப்பாகும்.


குன்றக் கெடும் = குன்றினால், கேடுகள் பலவும் உண்டாகும்
என்பதாம். குன்ற = குன்றினால்.


A review of kuRaL (supra), sufficiently referenced below:

இக்குறளை வேறு வகையாகவும் சிந்திக்கலாம்.

குறள்:

SENTENCE 1  : (மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்.)
SENTENCE  2 : (பிறப்பு, ஒழுக்கம் குன்றக் கெடும்.)

இதில் இரண்டு வாக்கியங்கள் உள்ளன. முதல் வாக்கியம்:
பார்ப்பான் மறப்பினும் ஓத்துக் கொளலாகும் என்பது.

நூல்களைப் பார்ப்பவ னொருவன், அவற்றில் ஓதற்குரிய ஒன்றை மறந்துவிட்டாலும், அதனை அறிஞர் பொருட்படுத்தமாட்டார்; (காரணம், அதனை யவன் திருத்திக்கொள்ளலாமே!)

அடுத்த வாக்கியம்: "பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்". இந்த இரண்டாவது வாக்கியத்துக்குப் பார்ப்பான் என்ற சொல்லை மீண்டும் துணைக்கழைக்க வேண்டியதில்லை. குடிக்குரிய ஒழுக்கம்
என்பது யார்க்கும் உண்டு, ஆதலால்், யாரென்றாலும், குடிக்குரிய ஒழுக்கத்தினின்று திறம்பி நடந்தால், அந்த நடத்தை, திருத்திக் கொள்ள முடியாத பெரும் பேரிடர்களை வாழ்வில்
விளைத்துவிடும்.

இதுவே சிறந்த விளக்கம் எனலாம்.

திருவள்ளுவர் காலத்தில் ";" குறி இல்லை. இப்போது அச்சிடப்பட்டவற்றில் அது இருக்கிறதென்பதை உணர்க. பிறப்பொழுக்கம் என்பது எச்சாதியானுக்கும் உண்டு. ஒவ்வொருவனும் ஒவ்வொருத்தியும் ஒரு குடியில் பிறத்தலால், அக்குடிக்குரிய ஒழுக்கமே அந் ந(ண்)பருக்குப் பிறப்பொழுக்கமாகும்.

meanings vary....

(Puram 166) it is clear that the word “paarppaan” can also refer to “uurpaarppan”, a person who looks after a village or region of several villages.

One has to be careful in interpreting.

பிறப்பொழுக்கம் - பிறந்த குடிக்குரிய ஒழுக்கம் என்று பல உரையாசிரியன்மார் உரைத்துள்ளனர். அவர்களை ஒருவகை-
யில் பின்பற்றியே நானும் " பிறப்பு ஒழுக்கம்" - குடிப்பிறப்புக்குரிய ஒழுக்கம் என்று உரைத்திருந்தேன். 

இதிலும் நாம் சற்று கருத்தைச் செலுத்தலாம். 

குடிக்குரிய ஒழுக்கம் என்று தமிழ் நாட்டில் ஓர் ஒழுக்க நெறி கடைப்பிடிக்கப்பட்டு வந்தது என்பது நிறுவப்படுதல் வேண்டும்்.

குடிக்குரிய ஒழுக்கம், சாதிக்குரிய ஒழுக்கம், பிறப்புக்குரிய ஒழுக்கம் என்பவெல்லாம் ஒரு பொருளனவா என்பதும்
தெளிவுறுத்தப்படுதல் வேண்டும். வள்ளுவர் ஒவ்வொரு சாதிக்கும் அல்லது குடிக்கும் அல்லது பிறப்புக்கும் ஒரு விதந்து கூறத்தக்க
ஒழுக்கம் இருந்தது என்று நம்பினாரா அல்லது அவ்வாறு இருந்ததா என்பதும் ஆய்ந்து நிறுவப்படுதல் வேண்டும். 

பிறப்பொக்கும் என்பது வள்ளுவர் கருத்தாகலின், பிறப்பொழுக்கம் என்பது ஏன் ஒத்த பிறப்பினரான மக்களிடையே
பொதுவாக நிலவிய ஒழுக்க நெறிகளின் தொகுப்பு என்று பொருள் படலாகாது என்பதையும் தெளிவு படுத்தவேண்டும்.
"சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்" என்றதனால், ஏன் சிறப்பொழுக்கம் என்ற தொடர் ஆளப்பெறவில்லை என்றும்
கடாவ வேண்டும். குடிக்கும் செய்தொழிலுடையோருக்கும் இடையே வழங்கி வரும் ஒழுக்க நெறிகள் எனின் சிறப்பொழுக்கம்
குன்றக் கெடும் என்று குறளில் ஏனோ வரவில்லை என்றும் குடைய வேண்டும்.

(குடி என்று இங்கே கூறப்பட்டது ஒரே தொழிலில் அல்லது அக்கறைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு இணைந்தியங்கும்
குடும்பங்கள் என்று பொருள்படும். )

சரியான உரை

இருவகையில் பொருள் கொள்ளுதல்.

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் என்பதை:

1. பிறப்பு, ஒழுக்கம் குன்ற, கெடும் அதாவது: பிறப்பானது, ஒழுக்கம் குன்றுமாயின், கெட்டுப் போகும் என்று கொள்ளுதல். இங்கு, பிறப்பு ஒழுக்கம் என்பன தனித்தனியாக நிற்கும்படி பொருள்கொள்ளப்பட்டது. பிறப்பு (எழுவாய்), கெடும் (பயனிலை). எப்போது கெடும்? என்ற கேள்விக்கு, ஒழுக்கம் குன்றினால் கெடுமென்றவாறு. இதைத் தற்கால உரைநடை இலக்கணத்தில், "கிளவியம்" (clause ) என்பர். இங்ஙனம் கொள்ளுங்கால், "பிறப்பொழுக்கம்" என்று ஒன்று விதந்து கூறுவதற்கு இல்லையாயிற்று.

2. அடுத்து, "பிறப்பொழுக்கம்" என்பதை ஒரு கூட்டுச்சொல்லாகக் கொண்டு, பிறப்பொழுக்கம் குன்றக்கெடும் எனக் கொள்ளுதல். இப்படிக் கொண்டால், பிறப்பொழுக்கம் குன்றினால், (எது) கெடும்? என்று கேள்வியை எழுப்பி, அதற்கு உரையாசிரியர் விடை சொல்வார். எது கெடும் என்றால் அவன் குலம் கெட்டுப்போகும், மேற்குலத்தினின்று கீழிறக்கப் பெறுவான்.. என்பார். ஆகவே, குலம் என்பதை வருவித்து உரைகூறுவார். கெடும் என்ற பயனிலை மட்டும் இருக்கிறது, எழுவாய் இல்லை. அதைப்படிப்பவரே வழங்கிக்கொள்ளவேண்டும். இப்படியும் உரை கூறலாம்.

சரியான உரை என்று எதுவும் இல்லை. சரியில்லாத உரையும் எதுவும் இல்லை. வள்ளுவர் காலத்தின்பின் ஈராயிரம் ஆண்டுகள் ஓடி மறைந்த நிலையில், அவரை முற்றும் அறிந்தவர் யார்? அவரே உரை வகுத்திருந்தால் இத்தகைய தொல்லைகள் இரா. ஆனால் அவரெழுதிய காலத்தில் மொழி நிலை மேம்பட்டு நின்று விளங்கிய காரணத்தால், உரை தேவைப்பட்டிருக்காது. ஈராயிரம் ஆண்டுகளின் பின் வாழும் நமக்குத் தேவைப்படுகிறது. உரையாசிரியர் அனைவருக்கும் நன்றி நவிலும் அதே வேளையில், வேறுபடும் உரைகளில் எது உங்கள் அறிவிற்கும் பொருத்தமாகப் படுகிறதோ, அதையே நீங்கள் மேற்கொள்வது, உங்கள் பொறுப்பும் கடனுமாகும்.


T032011@468# 

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

வலித்தல் in grammar

melittal valittal

மெல்லின எழுத்து வல்லினமாகத் திரிபு அடையும் இடனும் உண்டு. அப்போது அது வலித்தல் எனப்படும்.

இங்ஙனமே வல்லின எழுத்து மெல்லினமாகத் திரியுங்கால் அது மெலித்தல் எனப்படும்.

" நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே." 


இங்கு நந்தி என்றது சிவபெருமானை. நந்திமகன் - சிவன்மகன்.

புந்தி <> புத்தி.


குன்றும் மலையும் பலபின் ஒழிய
.................................................. ......................
"காணாது ஈத்த இப்போருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித்
தினைஅனைத்து ஆயினும் ....................
............................... நல்கினர் விடினே. "

-- பெருஞ்சித்திரனார், (புறநானூறு)

புலவரை நேரில் காணாமல் அலுவலாளன் மூலமாகப் பரிசில் தந்த அதிகமானுக்கு, அவ்வலுவலாளன் சென்று அறிவுறுத்துமாறு அவர் பாடிய பாடலின் பகுதி.

ஈந்த <> ஈத்த. 

இன்னும் ஒன்று:

"ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல்் தாமுடைமை
வைத்திழக்கும் வன்கண் ணவர்"
 குறள் 228

ஈத்து <> ஈந்து.

இங்ஙனம் வரும் பிற திரிபுகளையும் கண்டுகொள்க.

சிந்தி, சிந்தை, சிந்தனை, சித்து. சித்தர். சித்தம் முதலிய சொற்களில் ந் > <த் மாற்றங்களை அறிந்தின்புற இவ்வறிவு உதவும்.

TWD08092009@115#

அடிக்குறிப்பு:




அந் நாற் சொல்லும் தொடுக்கும் காலை
வலிக்கும் வழி வலித்தலும் மெலிக்கும் வழி மெலித்தலும்
விரிக்கும் வழி விரித்தலும் தொகுக்கும் வழித் தொகுத்தலும்
நீட்டும் வழி நீட்டலும் குறுக்கும் வழிக் குறுக்கலும்
நாட்டல் வலிய என்மனார் புலவர்.  


(தொல். எச்ச.7)


திங்கள், 28 ஏப்ரல், 2014

பால் part

பாற்று என்ற சொல் அமைந்த விதம்:

பால்+ து = பாற்று.

ஏல் என்ற வினை வினை எச்சமாகும்போது: ஏற்று என்று வரும்.

எ-டு: ஏற்றுக் கொண்டாள்.
ஏல்+து = ஏற்று.

கால் என்ற பழந்தமிழ்ச்சொல் "நீட்சி" குறிப்பது.

கால்+து = காற்று. ( நீண்டு வீசுதலை உடையது).

இனி பால்+து என்பது இருவகையாகப் புணரும்.

பால்+து = பாற்று.
பால்+து = பாலது.
பால்+மை+அது = பான்மையது.
பகுதியைச் சேர்ந்தது என்று பொருள்.

ஒருமை: பாற்று, பாலது.
பன்மை: பால, பான்மைய.

பாற்று என்று வராமல், பாலது என்றும் வரும்.

"செயற்பாலது ஓரும் அறனே " என்று தொடங்கவில்லையா?

இதேபோல், 

மேல் + து = மேற்று., மேலது.
மேல் + அ = மேல (பன்மை)
மேல் + அ = மேன என்றும் வரும் (தொல்காப்பியம்).

(மேலோன் > மேனோன், மேலானவன்).0

நூல் + து = நூற்று ( "நூல் நூற்றுத் துணி நெய்தாள்" ) வினை எச்சம். "நூற்று".



TWD 21062009@53#

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

பாக்கியம். how did that come about?

பாக்கு என்ற சொல்,  "பகுக்கப்" பட்டதனால் எற்பட்ட சொல்.

முதனிலை (சொல்லின் முதலெழுத்து நீண்டு )  பகு என்ற வினைச்சொல்  பெயராயிற்று.

இதற்கு கமுகு என்பதும் .பெயராம்.  பகுக்கப் பட்ட கொட்டையே பாக்கு ஆதலின், பாக்கு மரம் என்று சொல்வது  சொற்பிறப்பு  நோக்கில்  பிழையாய்த்  தோன்றினும் வழக்கில் உள்ளபடியினால், யாம் யாதும் கூறாது விடுகின்றோம்.

திருமணப் "பேச்சுவார்த்தைகள் " வெற்றியுடன் முற்றுப்பெற்றவுடன் பாக்கு மாற்றிக் கொள்ளும் வழக்கம்  உள்ளது. இதே வழக்கம் மலாய் மக்களிடமும் உண்டு.

திருமணம் நடைபெறப்  பெரியோர் ஒப்புதல் தந்தபின் வாழ்க்கையில் ஈடுபடத்   தயாராய் உள்ள இருவருக்கும் அதைவிடப் பாக்கியமானது வேறேது? அதுவே பாக்கியமாம்.

பாக்கு மாற்றிக் கொள்ளும் இனிய நிகழ்விலிருந்து பாக்கியம் என்ற சொல் தோன்றியது எத்துணைப் பொருத்தமானது!

பகு > பாக்கு > பாக்கியம்.

உண்மையில் divide என்று பொருள் படும் பகு என்னும் சொல்லினின்று பாக்கியம் தோன்றியது சற்றும்  பொருத்தமற்றது  எனலாம் --  இந்தப் பாக்கு மாற்றும் முன்னோடிச் சடங்கிலிருந்து  அதையே அடிப்படையாய்க் கொண்டு
அது தோன்றவில்லை ஆயின் !

சொற்களின் பண்டக சாலையான சமஸ்கிருதமும்  இதை மேற்கொண்டு சொல்லைப் பதிந்து வைத்துக்கொண்டுள்ளது.

பண்ட  நிறைவகத்தின் காவலன்,  அது அவன் இடத்தினின்றும்  வந்ததென்பான் ---  உண்மைதான். அது  நிறைவகத்துக்குள் சென்றமர்ந்து விட்டதல்லவா ! சொல்லிக் கொண்டுதா  னிருப்பான்.

ஆனால்  இது ஒரு" சுப"   (நல)  நிகழ்வின் காரணமாய்த் தோன்றிய சொல்!

மலாய்  -   bahagia  (see previous post)

பகு - & its affiliations in Malay

இந்த "பகு" என்னும் சொல்லுடன் தொடர்புடை மலாய்ச் சொற்களைப் பார்ப்போம்.

பகு >  பகல்   (பகு+ அல் )  தமிழ்.

பகு   >  பகி  .pagi   ( morning.)

பகு   >  பகிர்தல்   (பகு+ இர் + தல் )  (தமிழ் )

பகு  >   bagi   ( give,  supply)

பகு  >   bahagi  ( allot  )

பகு > பாக்கியம்  (பகு> பக்கு > பாக்கு > பாக்கியம்  

பகு >   பாக்கியம் >  >   bahagia   (  blissful ).

பகு > வகு.


இப்போது "பகு" என்பதையே பார்ப்போமே!

ப  > வ திரிபு

பகு > வகு.

சில திராவிட மொழிகளுடன் ஒப்பாய்வு


Kurukh: paxna
Malto: pakme
Kuruba bata (cf)
Telugu payu

பகு > பகல் > பால்

Tamil. pa-l part, portion, share, section, dividing; எ-டு: அறத்துப்பால்
(pa-n_mai : portion, share; nature.) 
Malayalam. pal part. 
Kodagi (?). palm (obl. palt-) portion, division. 
Toda. polm (obl. polt-) share; subdivision of patrilineal sib. 
Kannada: . pal 

சமஸ்கிருதம்:

பாஜ்  -  divide, distribute.


The Babylon connection

If you are so inclined, you may do a research on the following:

vAyilOn  > babylon  (means Gate-God )

Gate of the God or God of the Gate!

v > b1.

y > b2

el (Tamil)  >  ilu (semitic )   > iru (old persian)

el : sun  el > ellOn


l transforing to r is also quite common in Tamil words:
(not  language specific)

Certain individuals (non -English speaking Chinese speakers ) pronounce r as l.

sun has been worshipped as god.

happy research! You may wish to report your findings.

Do not commit major faults or costly mistakes (vallluvar)

ariya pizaikaL.

அரும் பிழைகள்


போற்றின் அரியவை போற்றல்; கடுத்தபின்,
தேற்றுதல் யார்க்கும் அரிது.

693.

போற்றின் = காத்துக்கொள்ள வேண்டுமென்றால்;

அரியவை = அரும் பிழைகள் (நேராவண்ணம்);

போற்றல்= காத்துக்கொள்ள வேண்டும்;

கடுத்தபின் = அத்தகைய பிழைகளில் ஏதேனும் ஒன்று நேர்ந்துவிடுமானாலும்;

தேற்றுதல் = அப்புறம் போய் அதைத் தெளிய வைப்பது;

யார்க்கும் = எவருக்கும்;

அரிது= கடினமாகப் போய்விடும்

என்றவாறு.


அரிது என்று ஒருமையில் முடிந்ததனால், "பிழைகளில் ஏதேனும் ஒன்று நேர்ந்தாலும்" என்று உரைக்கப்பட்டது.


நீர் ஒரு பொறுப்பான வேலையில் இருக்கிறீர். உமக்குக் கீழிருப்பவர் சில பரிந்துரைகளைச் செய்கிறார். அதை நன்கு ஆராய்ந்து, " இதனால் தொல்லைகள் ஏதும் விளையுமா?" என்று நன்கு சிந்தித்து, பிறகு அப்பரிந்துரையை ஏற்றுச் செயல் படுவதா, அல்லது தள்ளுபடி செய்துவிடுவதா என்று முடிவு செய்ய வேண்டும்.
 @461#
அப்படி ஆய்ந்து ஓய்ந்து பாராமல், பிழைபடும் ஒரு காரியத்தைச் சிந்திக்காமல் செய்துவிட்டு, பிறகு அதைச் சரிப்படுத்தி விடலாம் என்றால், அது எளிதன்று. அது முயற்கொம்பாகிவிடும்.

ஸ்பெக்றம் விவகாரம் இதற்கோர் எடுத்துக்காட்டு.

Here Naayanaar is not concerned with common or routine faults. Ariyavai = those faults which may lead to dire consequences....
Even one such fault will be enough to destroy you!!

Th29112010@461#


அறிவின் பயன்

Treatment of other persons and creatures....


தமக்கு வந்த துன்பம்போல் கருதிச் செயல்படாதவிடத்து.....



அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின் நோய்
தம் நோய்போல் போற்றாக் கடை.

(315)

அறிவினான் = அறிவினால்; ஆகுவது = விளையும் பயன்;
உண்டோ = ஏதும் உள்ளதோ; பிறிதின் நோய் =
வேறோர் உயிரின் நோயை அல்லது துன்பத்தினை ; தம் நோய் போல் = தமக்கு வந்த துன்பம்போல், போற்றாக்கடை = கருதிச் செயல்படாதவிடத்து எ-று.

எனவே, பிற உயிர்கட்கு இன்னா செய்தலாகாது , அதுவே அறிவுடைமை என்கிறார் நாயனார்

Th14112010@51#

சனி, 26 ஏப்ரல், 2014

மலைவாரம் - Malabar et al v>p>b

வ - ப திரிபுபற்றி இன்னும் உதாரனங்கள் சில:

இந்த வ-ப மற்றும் ப-வ திரிபுகள் பல உலக மொழிகளில் உண்டு. தமிழிலும் உளது.

பெங்கால் - வங்காளம்.
பீஷ்மன் - வீமன்.
பைபிள் - விவிலியம்.
மாவலி -( மகாபலி )- பாலி.( இந்தோனேசியா)
சேவை - sebok (busy) 
வா அழை - balek
மலைவாரம் - Malabar
வ(ல்)லவன் - balawan(t)
நக்கவாரம் - Nicobar
வில் (விலை) -bill *
பகு - வகு
வ - ba (usually confounded in Skrt)
பாஷ்கலா - வாஸ்கலா
பாஷ்பா - வாஷ்பா
பஸ்தி - வஸ்தி
வேல் - Belu (Akkd) Baal (Hebrew) * ("Lord) 

இன்னும் பல .................. 


* ஆய்வுக்குரியது.



TWD07062009@47#

தென்னை

thennai - thengku

தென்னை மரம்பற்றிய சொற்கள்----------------------------

தென்னை என்ற மரப்பெயரில், ஈற்றில் நின்ற "ஐ" விகுதியாகும். எனவே. சொல்லின் பகுதி: "தென்" என்பதே.

தென் என்ற அடிச்சொல், தென் திசையையும் குறிப்பதால், தென்னை தமிழ் நாட்டின் தெற்கிலிருந்து கொண்டுவரப்பட்ட மரமென்பர். அது நிற்க:

தென் > தென்னை.

தென் > தெங்கு. (தென்+கு > தெங்கு.)

திசையைக் குறிக்கும் தென்+கு என்ற புணர்ப்பு "தெற்கு" என்று வர, மரத்தைக் குறிக்கும் தென்+கு என்பது தெங்கு என்றானது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? சொல்லாக்கத்தில் வெவ்வேறு சொற்களைப் படைக்க, வெவ்வேறு வழிகள் பின்பற்றப்படுகின்றன என்பதுதான்.
இவற்றைக் கூர்ந்து கவனிக்காமல், வாதங்கள் செய்வதில் பயனில்லை.

இதை இப்படிக் காட்டாமல், மாற்றுவழியாக:

தென் > தெம் > தெங்கு எனலாம்.

இது ஓர் உத்திதான்.

தெங்கு+ காய் = தேங்காய்! தெங்குக்காய் என்று வரவில்லை! ஏன் வரவில்லை ? (ஆனால் தெங்கங்காய் என்று கவிதையில் வரும்).

தெம் என்ற திரிபு அடியின் முதல் நீண்டது என்று சொல்லலாம்.

தென்காய் > தேன்காய் > தேங்காய் ஆகலாமே! அப்படியானால் இடையில் ஏன் தேன் வழிகிறது என்று கேட்கத் தோன்றுகிறதா?

தென் > தெம் > தேம் > தேம்+காய் > தேங்காய் என்று மடக்கலாம். அதுவும் ஒரு தந்திரம்தான்.

தென்னை+தோப்பு , இது தென்னைத் தோப்பு என்று வராமல் தென்னந்தோப்பு என்றன்றோ வருகிறது.

"தெங்கு நீண்டு ஈற்றுயிர் மெய்கெடும் காய்வரின்" -- நன்னூல், 186.


TWD23072008@26#  

வருக வருக மேதகு தலைவர் ஒபாமா

மே.த.  திரு ஒபாமா அவர்கள் மலேசியா வருகை.


புத்துலகின்   இருளகன்ற   நிலைகாட்டும்   

புது நிலவே   வருகவருக !

எத்திசையும்  புகழ்சொல்ல இன்னுரைசேர்  

இனியோனே வருகவருக! 

நித்திலமாய்  அரசியலில் நிமிர்ந்துலவும் 

பெரியோனே வருகவருக !

பத்தினிலே பத்துமுனக் கானசிறப்  போன்---

-ஒபாமா  வருகவருக! 

kuRal and murugan.

murugan adi



மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 
நிலமிசை நீடுவாழ் வார்   


இப்போது மேற்கண்ட குறளுக்கு வேறொன்று உரையாகக் கூறுகிறேன்:

மலர் = மலர்க! = மகிழ்க!! (ஏவல்வினை, கட்டளைப் பொருளில்).

மிசை = குன்றில் (அல்லது மலையில்). மிசை என்பதற்கு குன்று என்ற பொருளும் உளதாகையால்).

ஏகினான் = ஏறியவன் , = முருகன்;

மாணடி சேர்ந்தார் = மாண்புமிக்க அடிகளைச் சேர்ந்தார்.

நிலமிசை - உலகில்,

நீடுவாழ்வார் = நெடிது (நோய் நொடியின்றி) வாழ்வார். என்றபடி.

மலர் மிசை = மலர்க்குன்று எனினும் ஆம். 


TWD19082006@@14# 

கடம்ப மலர் அமர் செல்வன்.

malaril amarntha selvan



முருகன் கடம்ப மலரில் அமர்ந்தவன் என்னும் பொருளில் பரிபாடலிலும் ("கடம்பமர் செல்வன்") பொருநராற்றுப் படையிலும் ("கடம்பமர் நெடுவேள்") என்று வருவதனால்., அவன் "மலர்மிசை ஏகினான்" என்று திருக்குறளில் குறிக்கப்படுகின்றான் என்பது ஒப்பு நோக்கின் தெளிவாகிறது.

அமர்ந்தான் எனில் அது மேலிருந்தான் என்று பொருள்படுவதாம். இதற்குச் சூடினான் என்று பொருள் கூறுவது பொருத்தமாயின், "மிசை ஏகினான்" என்ற திருக்குறள் தொடருக்கும் "சூடினான்" என்றெ பொருளுரைத்தலில் இழுக்கொன்றுமில்லை.


 TWD18082006@13#

Stone was the cutting instrument - கத்தி

We shall consider how the word "kaththi" (knife) developed. But before that, there are some preliminary matters.

Humans used stone as cutting instrument in the very olden days, before the advent of the iron age when humans made iron tools.

Let's look at the position in the Indo-European family of languages as it will broaden our research and knowledge.

Latin: secare (to cut) :: saxum (a stone).

seax (OE) - a knife.

The above words show that early man used stones as cutting instrument.

In Tamil, we have the word "kaththi".

In the very old days, long long before Tolkappiyam was ever written, this word "kaththi" should have been in the form: "kalthi" . kal means stone. thi is the suffix. It later dropped its "l" and became kaththi.  கத்தி

If you use the "puNarchi" rules of grammar, it should be kal+thi = kaRRi. Such rule had not yet been formulated as yet when the word kaththi was formed or it was not followed, as it occurred in other words too. We shall reserve such examples for the time being.

Thus you have kal > kaththi, a knife, the root being "kal".

Word formation in Tamil appears to be similar to the Indo-European languages.



Notes:


TWD 25052006@1# UPD 02102010: 

Anthropologists have postulated, in a classic work on European ethnology, that the modern day Basque people of the Pyrenees Mountains (northern Spain/southern France) speak a language inherited directly from Cro-Magnon Man (Ripley, 1899).The Basque (Euskara) word for knife means literally "stone that cuts,"

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

வேடு > வேடம்.

vEdam


பானைக்கு வேடு கட்டுதல் என்று ஒரு பேச்சுவழக்கு இருப்பதை அறிகிறேன். பானை வாயை துணிகொண்டு கட்டி மூடிவிடுதலை இது குறிக்கிறது.

வேடு என்ற சொல்லும் வேய் (வேய்தல்) என்பதனோடு தொடர்புடைய சொல்லே. இதை சொன்னூல் முறையில் வேண்டுமானால் காட்டலாம்.

வேடு > வேடம். (துணியினால் அல்லது வேறு பொருட்களால் மூடிக்கொள்ளுதல் அல்லது புனைந்துகொள்ளுதலைக் குறிப்பது.)

இதை வேடம் என்றே எழுதுதல் வேண்டும். usually met as esham

TWD 5@18062006REP17092010

இடும்பைக்கே கொள்கலம்

A receptacle for misery....


இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.
குறள் 1029


நாயனார் பெரிய குடும்பக்கலை வல்ல அரும்பெரியார். ஒரு குடும்பக்காரனுக்குத்தான் எத்தனை அல்லல்கள்? எதையெதையெல்லாம் அவன் சரிசெய்துகொண்டு இவ்வுலகில் வாழ்க்கையைத் தொடரவேண்டியுள்ளது?
அக்குடும்பத்துக்கு ஒரு வீழ்ச்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்று கண்ணுங் கருத்துமாகச் செயல்படவேண்டி யுள்ளதே! அதனால், மன அழுத்தம் மிகுந்து, அவனுடலும் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை உண்டாகிவிடுகிறதே!
மன அழுத்தத்தின் காரணமாக, மாரடைப்புமுதல் புற்று நோய்வரை வந்த நோய்களேதும் மிகுவனவே தவிர , அவற்றுள் ஏதும் குறைந்து நலம்பெறுவதாய்க் காண முடியவில்லையே!

குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் = குடும்பத்துக்கு ஏற்படும் இடர்களைச் சரிப்படுத்திக்கொள்ள முயன்று உழலும் அவன் , 
உடம்பு இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ = துன்பங்களையே உள்வாங்கிச் சுமக்கும் பாத்திரமோ (அவன்) உடம்பு?

இப்படி குடும்பத்தலைவன்பால் மனமிரங்கும் உள்ளம், நாயனாரின் உள்ளம்.

துன்பம் வருங்கால் நகுக என்கிறாரே, துறவு பூண்டு ஓடிவிடு என்கிறாரோ!! மனம் இரங்கவும் செய்கிறார் அல்லவா?



453@15112010 

A day with more than 24 hours...............

பகலும் இரவுமே நீளாமலே ---  நாம் 
பார்க்கும் சோலிகள் தீராமலே,
அகலும் பொழுதுகள் ஒவ்வொன்றுமே ---  மன 
ஆறுதல் தீர்த்ததே என்றென்றுமே! 

 ( In   some countries of the world:-  )

அதிகாரிகள் வந்தே  ஆணையிட்டார் ---  ஆனால் 
அன்றாட வேலைகள் கோணவிட்டார்!
நதி  நீரும்  குடி நீரும் பஞ்சமென்பார்  --- மக்கள் 
நாடியும் பெற்றவை  கொஞ்சமென்பார் 

-----

.அலுவலர் மணிமுள்ளை நீட்டிக்கணும்  ---  அந்த 
ஆண்டவன் வந்திதை கேட்டுக்கணும்;
பகலவன்  நாள் நீட்டித் தந்துவிட்டால்  --- இன்பம் 
பாரெங்கும் கதவினை வந்துதட்டும்


ஒரு நாள்  இருபத்து  நான்கென்பதை  ----  இனி 
ஊரார்க்கு  நாற்பத்தி எட்டாக்கணும்;
இரு நாள் செய்வதை ஒரு நாளிலே ---. செய் தால் 
இன்பமே   எங்கணும் வரு  நாளிலே

வைபோகம்

வைபோகம் என்ற சொல்லை மிக்க அழகுடன் புனைந்துள்ளனர். கரு நாடக இசைப்பாடலில்  அதைக் கேட்குங்கால்  தம் சொந்த ஆனின் (பசுவின் ) அழகு  கண்டு  மகிழ்வுற்ற இன்பம் (ஆன் +அம் +தம்   > தம்  ஆன்  அம் )  எமக்கு விளைகின்றது!  அதுதான்  ஆனந்தம் !

:ஞான குரு  பரன்
 தீனர்க் கருள் குகன்,
வானவரும் தொழும்
ஆனந்த வைபோகன்!

என்று பாடுவார்   எம்.எல்  வசந்த குமாரி அம்மா.

முதலில் வைபோகம் என்பது யாது , உசாவி அறிவோம்.  இதை ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமாயின் grandeur,   magnificence என்றெல்லாம் குறிக்கலாம். மகிழ்வும் கவர்ச்சியும் மனத்தால் ஒரு பிணைப்பும் ஏற்படுத்தும் ஓர்  உயர்  நிகழ்வு எனலாமா?

இதை ஏன்  தேர்ந்தெடுத்தோம் ?

அவை  என்பதன்   "வை"  என்னும் சொல்லையும்  "வையகம், வையம் " என்பவற்றின் "வை"  என்னும் பயன்பாட்டையும் .  வைகுதல் என்னும் சொலாக்கக்த்தையும் ஆய்ந்துண ர்ந்த பின்பு  இவ் "வைபோகத்தில்" ஈடுபடுதல் மிக்கப் பொருத்தமுடைத்தாய்  இருக்கும்.  அதனால்தான்.

வை எனின் நுகர்வோன்முன் சிறப்பாக இடப்பட்டது.(வைக்கப்பட்டது )என்பது.  bestowed,

போகம் என்னும் பதம், ஓர் இடக்கர் அடக்கல் சொல். "இவள் அவனிடம் போய்விட்டாள்"  என்று அடக்கிச் சொல்வார்கள். இந்தப் "போவது" என்பதிலிருந்து புனையப் பட்டதே "போகம்" என்பது.  ஆ>  ஆகு,  போ> போகு> போகு+அம் = போகம் என்றாகும்.  இதுவும், வேறு பல போலவே,   பேச்சு வழக்கிலிருந்து திரிக்கப்பட்ட  (புனையப்பட்ட) சொல்.

உங்கள் ஆய்விற்கு சில சமஸ்கிருதச் சொற்கள் :

vinirbhoga m. Name. of a cosmic period ;    vinirbhoga m. (probably . from  bhuj -  Name of a partic. cosmic period. visambhoga male {bhuj} separation   vRthAbhoga

போகம்  என்பது  தமிழ் மூலத்தையுடைய  ---  ஆனால்   இப்போது அயற்சொல்!  எனப் படுவது.    இரண்டு  இலக்கத்துக்குக்  குறைவான  சங்கதச்  சொற்களில்    1/3  விழுக்காடு திராவிடச் சொற்கள் என்பது டாக்டர்  லகோவரியின்  முடிவு. சங்கத்தின் ஒலி அமைப்பு  திராவிட அடிப்படையிலானது   என்பது சட்டர்ஜி அவர்களின்  ஆய்வு.  நான்  இதுவரை  கூறிய  மொத்தம் ,   சிலவே. Less  than a couple of hundreds.

" வை" தமிழே.

வைப்புத் தொகை என்பதென்ன? உங்கள் ஆய்வுக்கு.

edit reserved.



.

வியாழன், 24 ஏப்ரல், 2014

அ வை II

அ வை  என்ற சொல்லின் உருவாக்கத்தைக் கண்டு களித்தோம்.

இனி வை என்ற சொல்லில் விளைந்த இடங்குறிக்கும்  இரு சொற்களைச் சந்திப்போம்.

வை  --  வையகம்;

வை + அகம்  - இறைவனால் வைக்கப்பட்ட இடமாகிய இந்தப் பூமி என்பது. மற்றும் நாம் இனிதே வைகும் இந்த நில வுலகு. 

வை +   அம்  = வையம்., இதுவும் அதே!

வை என்ற சொல்லில் இருந்து ஒரு வினைச் சொல்லும்  தோன்றியது..   அது என்ன?

வை+ கு  =  வைகு. > வைகுதல்.  ஓரிடத்தில் தங்குதல். 

இவை எல்லாம் அவை என்னும் சொல்லுக்கு  உறவுச்  சொற்கள்


----------------------------------------------------------------------------------------------------------
The Tamil editor has  a problem.  Could not continue. Will return  later to edit.  Enjoy what is written in the mean time.  Thank you dear readers.

அவை

அவை என்ற சொல் உருப்பெற்ற வழியை ஆராய்வோம்.

வை என்ற ஓர் எழுத்துச் சொல்  பல பொருட்களை உடையது. அவற்றுள் ஒன்று, ஓர் இடத்தில் ஒன்றை இடுதல்  என்பதாகும்.  இடப்படுவது, ஒரு  பொருளாகவும் இருக்கலாம். மக்கள் கூடும் ஒரு நிகழ்ச்சியாகவும் இருக்கலாம்.

"திருமணத்தை எங்கே  வைத்திருக்கிறார்கள்?"

"மாநாட்டை எங்கே  வைத்திருக்கிறார்கள்?

நிகழ்ச்சி வைத்த  இடம்  "வை"  ஆகும். முதனிலைத்   தொழிற்பெயர்.

அ  -  சுட்டுச் சொல். ஆகும்.

குகையிலோ   அரண்மனையிலோ  நிற்பவன்  முதன்முதலில்  சுட்டிச் சொல்லியிருப்பான்.  நாளேற நாளேற  கைகால்களை ஆட்டிச்  சுட்டிக்கொண்டிருக்க மாட்டான். வெறுமனே  "அவை"  என்றிருப்பான்.

அவர் இவர்  என்பதிலெல்லாம்    சுட்டு உள்ளது.   கைகால்களை ஆட்டிச் சுட்டுவதில்லை.

சுட்டிப்பேசுவது அவமரியாதை  என்னும் கலாச்சாரங்களும் உண்டு.  அஃது தவிர்க்கப்படும்.

நாளடைவில்  சுட்டு பொருளிழக்கவேண்டும்.     இழந்தது.

பின்  மதிதகு பேர்கள் கூடுவதற்கு  வைக்கப்பட்ட இடம் (appointed place for assembly) அவை எனப்பட்டது.  இடப் பெயர் பின் அங்கு கூடும் புலவரையும்  (அல்லது பிற பெரியோரையும் குறிக்கும் (அப்படிக் குறித்தலை ஆகுபெயர் என்பர் நம் தமிழிலக்கணத்திலே .)

Inscriptions evidence of temple built by Manickavasagar

FRESH EVIDENCE: Inscriptions found at Aavudaiyar Koil in Pudukottai district.
FRESH EVIDENCE: Inscriptions found at Aavudaiyar Koil in Pudukottai district.


The Saivite savant of the 9th century  or earlier era  used money meant for buying horses to construct the temple

Legend has it the Manickavasagar, one of the four Saivite savants, constructed the temple at Avudaiyarkoil, known as Thiruperunthurai, in Pudukottai district.
Now the State Archaeology department has stumbled upon inscriptions confirming that Manickavasagar, the Minister of Pandiya King Arimarthana Pandian, built the sanctum sanctorum and the kanagasabha mandapam.
“His contribution has been recorded in the form of a poem. The inscriptions, found in the Panchakshara mandapam of the temple built in the 16th century, also record that Thiruvachagam was inscribed on the walls,” said G. Muthusamy, registering officer of the department in Tiruchi region.
Manickavasagar belonged to the 9th century and was said to have used the money meant for buying horses for the cavalry to construct the temple at Thiruperunthurai, one of the ports of the Pandiya Kingdom. Manickavasagar penned Thiruvachagam and Thirupalliyezhuchi while camping in this temple and referred to it as Thiruperunthurai.
“So far, we have only oral narration about the temple construction. The discovery proved beyond doubt Manickavasagar's role,” said Mr Muthusamy.
Even as the temple construction was in progress, King Arimarthana Pandian waited for days for the arrival of Manickavasagar and the horses. Later, he realised that the money was already spent and commanded Manickavasagar to bring along the horses without further delay. According to tradition, Lord Siva transformed a pack of foxes into fine breed of horses. In the night, the horses became foxes and let out a deafening howl.
God appeared before the king and explained he was behind the mischievous drama. The story of ‘nariyai’ (fox) ‘pariyakkuthal’ (horse) is still enacted during temple festivals in Madurai,


புதன், 23 ஏப்ரல், 2014

"பேரேடு " and parade.

நாட்சம்பளம் பெறும் ஊழியர் மிகப்பலர் வேலைபார்க்கும் குழும்பு(companies)களில் அதிகாலை அவர்களையெல்லாம்  அணி அணியாய் நிறுத்திப்  பெயரெடுப்பதாய்க் கூறுகின்றனர். இதைப்  "பேரேடு "  (அதாவது பெயர் எடுத்தல் )  என்கின்றனர்.

இந்தச் சொல், ஆங்கிலத்தில்  உள்ள parade என்பதுடன் ஒலி  ஒற்றுமை உடையதென்பதைக் கண்டுகொள்ளலாம்.
Parade என்பது பெரும்பாலும் படைகளில் வழங்கும் சொல்லாகும். இது இலத்தீன் parare என்ற சொல்லினின்று வருகிறது.

இலத்தீன் மொழிக்கு இச்சொல் எப்படிக் கிடைத்த தென்று தெரியவில்லை.

தமிழ் ஊழியர் வழங்கும் "பேரேடு"  என்பதும் இந்த ஆங்கிலச்சொல்லும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்றுதான் கொள்ளவேண்டியுள்ளது. 
  

கண்றாவி.


பேச்சில் பெரிதும் புழங்கும் சொல் இது. இதில் முதலில் உள்ளது  "கண்" என்பது.  இது தெளிவு.

அடுத்து வருவது  அராவி.    இது அராவுதல் என்னும் சொல்லினின்று உருவானது.

அராவு ‍   ஆங்கிலத்தில்   ஃபைலிங்  (filing)  என்பர்.    அரத்தினால்  தேய்த்தல்.


கண்ணராவி எனின்  கண்ணை அரம்போட்டுத்  தேய்த்தல் போன்ற  துன்பத்தினைத் தரும்  காட்சி என்று பொருள்.

கண்ணை வருத்தும் காட்சி.

கண்ணராவி >  கண்றாவி.

தேர்தல் கலை

 இந்தியப் பெருந்தேர்தல்  --- கள்ளம்
 இல்லாப்  பொதுமக்கள்!---சொல்லால்
 வந்து பொழிந்திடுவார் ‍‍‍‍‍‍‍‍‍;--- வேட்பர்
 வயம்தமை   இழந்திடுவர்.

 எங்கும் நடப்பதுபோல்  --- தருவார்
 தம்முறுதி  மொழிகள்‍--- களத்தில்
 தங்கி  உழைப்பவர்போல் --- தோன்றின்
 வென்றி விளைப்பவரே!

 தேர்தல்  போனபின்னே  ‍‍‍‍--- சொன்னவை
 தேற வில்லை யென்றால் --- அதுவும்
 யார்தம்  குற்றமையா ‍‍‍---  அதுவே
 தேர்தல் கலையல்லவோ!

 மீண்டும்  வேறொருவர் ‍‍‍‍--- தம்மை
 மேற்கொண்டு செல்வதன்றி  ‍‍--- ஞாலம்
 யாண்டும்  வேறுவழி ---- இல்லார்
 யாது     தலைப்படுவார்?‍‍



வேட்பர்   ==  வேட்பாளர்.   
சொல்லால் வந்து (உறுதிமொழிகளைப்) பொழிந்திடும்  வேட்பாளர் வயம்  தம்மை இழ ந்திடுவர் என்ற படி.  சொல்லாடும்  திறம்  கூறியது. 
 வென்றி ==  வெற்றி.
மேற்கொண்டு -   தேர்ந்தெடுத்து.
தலைப்படுவார்? =  செய்ய இயலும் ? என்பது 





செவ்வாய், 22 ஏப்ரல், 2014

uthayam உதயம்

அ , இ , உ  என்பன சுட்டுக்கள். இவற்றிலிருந்து அது, இது உது என்பனவும் அவை, இவை, உவை  என்னும்  அவற்றின்  பன்மை வடிவங்களும் தோன்றின.
மொழியில் உது, உவை என்பன இருப்பினும், நாம் அவற்றைப் பயன்படுத்துவதில்லை; அதற்கான இயல்பான வாய்ப்பும் ஏற்படுவதில்லை.

அ , இ , உ  என்பன  பல சொற்களுக்குத் தாயானவை. இவற்றுள் "உ" மிகப்பல சொற்களுக்குத் தாய்.  உ - ஒரு மக்களைப் பெற்ற மகராசி.

காலை முன் எழுவித்து ஒரு பொருளை சற்று கடினமாகத் தொட்டால்,  உது  என்பதிலிருந்து உதை என்ற சொல் பிறந்து, அச்செயலைக் குறிக்கின்றது.

பிற மொழிகள் பெரும்பாலும் தமிழ்ச்  சொல்லின் இரண்டாம் 3எழுத்தை முதலாக்கி அதிலிருந்து சொற்களைப் படைத்துக்கொள்கின்றன.

எடுத்துக்காட்டு:

உது > உதை  (தமிழ் )  பேச்சு வழக்கு : உத - ஓத
உதை  > ஒத  >  த >  தி(ண்டாங்)  (மலாய்)..

You have to make a research into many similar words to ascertain what is ("ண்") ("டாங்")

அரு > அருமை  (தமிழ்)
அரு>  ரேர்  (  rare)  ஆங்கிலம். "re" is hardly pronounced or not stressed.

இப்படிப் பல முன்  காட்டியுள்ளேன். அறிஞர்  பிறரும் எடுத்துக்காட்டியுள்ளனர்.

 சரி, இப்போது உதயம் என்ற சொல்லுக்கு வருவோம்.

உ  (முன்னிலை )

உது  >  உத > உதயம் .   (முன் னெழுதல்)

பல்லாயிரம் ஆண்டுகள் மொழிகள் தனித்தனி வளர்ச்சி  கண்டு உருப்பெற்றதனால்,   சொற்களின் ஒற்றுமை  குன்றியும் வேற்றுமை விரிந்துமே  காணப்பெறும். தொடர்நோக்கின்  (prolonged and focused examination)  பயனாகவே உண்மை உணரலாகும்.

திங்கள், 21 ஏப்ரல், 2014

தேவை & தேள்வை

தேவை என்ற சொல்லைச் சிலர் தேள்வை என்றே சொல்வர்.

இவற்றின் தொடர்பினை ஆய்வு செய்வோம்.

நீள் என்ற சொல்,  நீடு எனறும் தோன்றும்.

நீள் + அம் =  நீளம்;

நீடு + அம் =  நீட்டம்.

நீள் =  நீடு.  நீளுதல் ‍    நீடுதல்.   நீள் >  நீடு.

எனவே,  தேள்  >  தேடு.   

தேவை என்பதில் வை என்பது விகுதி. --- மூலம்  தே என்பது.

தே >  தேள் > தேடு.

தே+ வை = தேவை.

தேள் + வை = தேள்வை.

எனவெ, தேள் எனபதில்   ளகர  ஒற்று  குறைந்திருக்கலாம். தே என்றாகியிருக்கலாம்.

அல்லது தே என்பது ள் பெற்று நீண்டிருக்கலாம்.

எனவே,  தேள்வை என்பதும் ஏற்றுக்கொள்ளற்பாலதென்போம். 

பேய்விரட்டும் மந்திரச்சொல்

பின்னல்பாய்  தேங்காய்கள் இவற்றை வைத்துப்
பேய்விரட்டும் மந்திரச்சொல் பிசகா நிற்ப‌
முன்னிவரும் வானூர்தி முயன்றார் காண
முனிவுகொண்ட மக்கள்சிலர் முழுவீச் சாக
என்ன இது! ஏய்ப்பதென எதிர்ப்புக் கொண்டார்
எங்கு சென்று வீழ்ந்ததுவோ எழில்வா  னூர்தி,
அன்னநிகழ் வோடிவரும் அயர்ந்தார் என்றே
அனைவரும்ஓய்ந்  திருந்தார் இவ்  அழகு நாட்டில். 

சின்னாட்கள் முன்பாகச் சிங்கு (1)  மாண்ட‌
செல்வழியே சேர்சாலை இடத்தில் பேய்கள்
இன்னும்தாம் இருப்பவையே என்று கூறி
இவர்மீண்டும் மந்திரம் செய்  நிகழ்வில் நின்றார்
மின்னொளிபோல் புகழ்கூட்டும் செய்கை ஈண்டு
மீள இவர் ஆகாதே என்பர் பல்லோர்
பன்னுமொரு செய்திதனைப் படித்து  நீங்கள்
பாரில்மந்   திரவாதத் துண்மை சொல்வீர்.  


Raja Bomoh spouting mumbo-jumbo again

Magic to chase away spirits

Note:  Recently there was a road accident in which a famous lawyer Kirpal Singh(1)  died.  Now a bomoh (Malay magician) claims that the accident was caused by spirits which he wanted to drive way with his magic.
The poem is on this topic  To get a clearer picture, you may wish to also read the news at the link above.


On a related topic:
http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_18.html