சனி, 31 மே, 2014

பூர்விகம்

ஓரிடத்தில் உள்ள ஒன்று பிறிதோரிடத்துப் போய் அடங்குமாயின் அதனைப் "புகுதல் '  என்கிறோம். பலர் இதனைப் "பூர்(தல் )  என்கிறார்கள்.

இந்த உறைக்குள் தலையணை பூரமாட்டேன் என்கிறது:" என்பர்.

ஒன்று ஓரிடத்தில் பூர்வதுதான் (புகுவதுதான்)  அதற்குத் தொடக்கம் ஆகும்.

பூர் > பூர் +வ் ​ + இகம் > பூர்விகம்.
பூர் + வ்  +அம்  =  பூர்வம். (தொடக்கம்.)

பூர் என்பது புகு என்பதன் திரிபாதலின், பூர்வம் என்பது புகவம் என்று இருக்கவேண்டும்.  அப்படி இல்லை; அதுவும் ஒன்றும் நட்டமில்லை.

இது பேச்சு வழக்குத் திரிபுச் சொல்லாகும்.  இகம் ஒரு விகுதி.
  

virus

Some virus program is preventing new posts.  This will be looked into and rectified.

nAtham

நாதம் பலவாறு எழுகிறதென்பது இன்றைய மனிதனுக்குச் சொல்லாமலே புரிந்துகொள்ளக்கூடியதாய் உள்ளது. ஆனால் ஆதி மனிதன் இதனை இவ்வாறு அறிந்திருக்கவில்லை. அவனுக்கு முதன்முதலாய் உணரத் தக்கதாய் நின்றது ஒரு நாதம் தான்.  அது நாவிலிருந்து எழும் ஒலியாகிய நாதம்.

நா  ‍ நாவினை அடிப்படையாக ;  து : உடையது;  அம் ‍  விகுதி.
நா+  து ‍‍+ அம் =  நாதம் ஆயிற்று.

பின் அறிவும் திறனும் அடைந்த மனிதன்,  நாதமானது எங்கும் நிறைந்து உளது என்பதைனை அறிந்துகொண்டான்.

ஏபிசிடி படித்துத்தான் வித்துவானாகி இருக்கவேண்டும். குகைவாழ் முந்தியல் காலத்திலேயே அனைத்தையும் அறிந்துவிட்டதுபோன்ற பாவனையில் கூறப்படும் சொல்லமைப்புகள் வரலாற்று நடைக்கு ஒவ்வாதவை.  

ஆ ற்றின் ஒழுக்கிலும்  நாதம் உள்ளதே!  அதிலும் வேத ஒலி கேட்கிறதே!  ஆற்றொலியை ஆதி மனிதன் கேட்டிருப்பான் எனினும் இத்தகு உணர்வு  அவன் பெற்றது பின்புதான். 

வெள்ளி, 30 மே, 2014

ஓதம் : noise, uproar.

ஓதம்  :  noise, uproar.  .

ஓதுங்கால், பலத்த ஒலி ஏற்படுவதுண்டு.  கூடியிருப்போர் யாவருக்கும் கேட்கும்படியாகவே  ஓதப்படும்.  பலர் அமர்ந்து ஓதுகையில் பேரொலி எழுமாதலின் ஓதம்  (ஓது+ அம்) பேரொலி எழுப்புதலைக் குறிக்கலாயிற்று.

"ஓ" என்னும் ஒலிக்குறிப்படியாய்ப் பிறந்த சொல்லே  ஓது என்பது. இதில் "து ‍ வினைச்சொல்லாக்க விகுதி.

நோய் குறிக்கும் ஓதம் என்ற சொல் ஊது என்பதிலிருந்து தோன்றியது.  இங்கு ஆயப்பட்ட ஓதமென்பது ஒலிக்குறிப்புச் சொல். இவற்றின் பிறந்தகங்கள் வெவ்வேறாம்.

வியாழன், 29 மே, 2014

ஓதம் disease: hydrocele

"ஓதம்"   சொல்  அமைந்த  விதம் அறிவோம்.

 வீக்கத்தை "ஊதிவிட்டது "  என்பது பேச்சு  வழக்கு.  "ஊதலான " உடம்பு  என்ற  வழக்குமுண்டு.

ஊது   >  ஊதம்  >  ஓதம்  என்பது திரிபு.

பருத்துவிட்டது என்பது பொருளாம்.    .

விவாகம்

முஸ்தீபு  என்ற சொல்லமைப்புக்  கண்டு இன்புற்றோம்.   இங்கே:

http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_29.html

இஃது ஒரு குறுக்கச் சொல் என்பது அங்கே விளக்கப்பட்டது.

தமிழ் மொழி முழுவதிலும்  இப்படி  ஒரே ஒன்றுதான் உள்ளதோ ?  அப்படியாயின் எப்படி நம்புவது?

இதோ இன்னொன்று  தருகிறேன். முன்பே  நான்  எழுதி வெளியிட்டதுதான்.

இல்லறம் என்பதே விழுமிய வாழ்வு ஆகும். 

விழுமிய வாழ்க்கை ஆகும் .

வி- வா -  ஆகும்   >  விவாகம்.  ஆகும் >  ஆகம் .

வி வா என்பது  viva  என்று இலத்தீன் மொழி வரை  பரவிவிட்டது.

viva il  papa!       See also the roots of  vitamin  ,  vita,  etc

ஏன் ?  அழகு தமிழ் என்பதால்.!


முஸ்தீபு:

இப்போது முஸ்தீபு என்ற சொல்லை அணுக்கமாக ஆராய்வோம்.

சொல்லைப் பார்த்தாலே.........கேட்டாலே தெரிகிறது அது தமிழாக இருக்க முடியாதென்று.  எப்படி?  "ஸ்" வருகிறதே,  தமிழில் "ஸ்" ஒலி இல்லையே!
"ஸ்"  வருமாயின் உறுதியாகச் சொல்வேன்,  அது தமிழன்று என்று.

இருக்கட்டும்.இந்தச் சொல்லை அமைத்தவரை நாம் பாராட்ட   வேண்டும். முஸ்தீபு என்பதென்ன என்று சொல்ல வேண்டுமாயின், முன்னரே தயார்ப்படுத்துதல் என்று சொன்னால் ஏறக்குறையச் சரியாகவிருக்கும்.

இந்தச் சொல் இப்போது அவ்வளவாக  வழங்கவில்லை. ஒரு 40 /50 ஆண்டுகளின்  முன் வெளிவந்த சில புத்த‌க‌ங்கள் தாளிகைகளில் கிடைக்கும்.

முஸ்தீபு:

மு  <  முன்.
தீ   <  தீட்டுதல்.
பு    ‍  விகுதி.

மு+தீ +பு  =  முத்தீபு.    இப்படியே விட்டிருந்தால் அழகிய தமிழ்க் குறுக்கச் சொல்லாக அமைந்து தமிழை அழகுபடுத்திக்கொண்டு இருந்திருக்கும்.

ஆனால், அமைத்தவருக்கு மன நிறைவில்லை.

ஆகவே சொல்லை அழகு படுத்தவேண்டுமே!  Polish it!

முத்தீபு >  முஸ்தீபு.

இப்போது மிக நன்றாக அமைந்துவிட்டதே!.


தமிழ் வாத்தியார்  இது என்ன சொல் என்று கேட்டால், இந்தி , உருது என்று எதையாவது சொல்லிவிடலாம். யாராவது அதை அவர்கள் சொல் என்று சொல்லாமல்  -  ஏற்காமல்  போய்விடுவாரோ! போதிய சொற்கள் இல்லாமல் எத்தனையோ மொழிகள் தவித்துக் கொண்டிருக்கும்போது.....

ஐயப்பாட்டுக்குரிய புலிகள் கைது Malaysia arrests "Tamil Tigers"

Malaysia arrests three suspected Tamil Tigers
Kuala Lumpur (AFP) - Three men suspected of being Tamil Tigers have been arrested in Malaysia, a top police official said Sunday, accusing them of attempting to revive the Sri Lankan separatist group.
Khalid Abu Bakar, inspector-general of police, said the trio, who had been in Malaysia since 2004, were arrested in multiple raids in the central Selangor state on May 15, and were being held under the Immigration Act.
"They used Malaysia as a base to collect funds, spread their propaganda, and were attempting to revive the defunct terrorist group at the international level," he said in a statement.
Police also seized propaganda materials of the Liberation Tigers of Tamil Eelam, and some money in various foreign currencies.
There is a small but affluent Sri Lankan Tamil diaspora living in multi-racial Malaysia after migrating from their homeland many decades ago.
Khalid said they were registered with the UN High Commissioner for Refugees, and so had been able to remain in Malaysia since 2004 without visas.
"We will not allow the country to be used as a place for them to hide or conduct any terror activities in the country or on foreign soil," he said.
Sri Lanka's military killed Tiger supremo Velupillai Prabhakaran on May 18, 2009 and declared an end to 37 years of armed conflict.
There have been no major attacks blamed on the group since.
The Tigers, who during the height of their power controlled nearly a third of Sri Lanka's territory, were known for their trademark suicide bombings.
Meanwhile, in the past few weeks Malaysian security forces have made a series of arrests involving foreign terror suspects and foiled a plot to attack foreign missions in two Indian cities.
Police have also launched an investigation into whether Al-Qaeda-linked Somali rebels were seeking to set up a base in the Southeast Asian country after a suspected insurgent was arrested.
Malaysian courts on Friday charged three men and a woman from the Muslim-majority country over promoting terrorism in strife-torn Syria.




புதன், 28 மே, 2014

தைவருதல்= (சங்கத் தமிழ்ச் சொல் ) தடவிக்கொடுத்தல்

தைத்தல், தையல் , தயிர் .  தைரியம்  ( வேறு விதமாக எழுதியமைக்க வேண்டுமானால் "தயிரியம் " என்றெழுதலாம் [ வீரமாமுனிவர் "தயிரியம்" என்றே எழுதியுள்ளார் ] எனினும், நாம் அப்படி எழுதுவதில்லை `)  என இவற்றின் அடியறிந்து இன்புற்றோம். இதன் தொடர்பில் ஒரு பழந்தமிழ்ச் சொல்லை அறிந்து மகிழ்வோம்.

தைவருதல் என்றால்  தடவிக் கொடுத்தல் என்று பொருள்.
சிறிய கள் பெறினே எமக்கீயும் மன்னே என்னும் ஔவையாரின் புறப்பாடலில் "என் தலை தைவருமன்னே "  என்பது காண்க. .

இவற்றுளெல்லாம் அடிப்படைக்  கருத்து,தொடுதல் என்பதுதானே யன்றி வேறன்று.

இரு துண்டுத் துணிகளைத் தைக்கும்போது, ஒரு துண்டு இன்னொரு துண்டைத் தொடவேண்டும். தொட்டபின்புதான் தைக்க அல்லது  இணைக்க முடியும்.

தயிர் என்பதில் பால் கட்டிப் படுகிறது.  தைரியம் என்பதில் மனம் கட்டிப் படுகின்/றது அல்லது கெட்டிப் படுகிறது.  எனவே, இதன் அமைப்புப் பொருளை நன்கறியலாம்.  உறைவதில் சிறு திரள்கள் ஒன்றை ஒன்று    தொட்டுத்தான் இணைந்து உறைகின்றது. தைரியம் என்பது பருப்பொருளுடன் ஒப்பீடு செய்து  உருவான சொல்.

பெண்ணைக் குறிக்கும் தையல் என்ற சொல்லும் "தொடற்குரிய பருவத்தினள் " என்ற கருத்தில் அமைந்த சொல்.

தொடர்புடைய .இடுகைகள் :

தைரியம் :http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_27.html

தைரியசாலி :   http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_3822.html




Raja Aslan Shah Sultan of Perak State (Malaysia) passes away.

So sad that a  celebrated legal brain of Malaysia and an eminent judge in the Malaysian  Courts of yesteryears has passed away  Click to read   more:

.https://my.news.yahoo.com/sultan-azlan-shah-dies-075734841.html

After his retirement as Lord President  ( =  Chief Justice of the Federal  Court .   highest tribunal ), he was also the Head of State (  Agong or Paramount  Ruler ) of  Malaysia.  He was the Ruler  (Sultan)  of Perak State).

He has been known to be witty. Once he was presiding Judge in the High Court when  a lawyer got up to address the bench.

Judge:  I can't hear you.

The lawyer spoke louder.

Judge:  I still  can't hear you!!

The lawyer, taken aback,  almost spoke in shouting volume.

Judge:  I still cannot hear you,  counsel.

Then someone reminded softly to the lawyer that he has forgotten his court vestments..

Now, wearing it immediately,  the lawyer readdressed the Court.

The Judge  now said:  " Ah!   Now I hear you.   Please proceed.  "

His passing is a loss to Malaysia.

செவ்வாய், 27 மே, 2014

தைரியசாலி

தைரியம்   என்ற  சொல் அமைந்த விதம் எங்ஙனம்  என்பது கண்டோம்.  தைத்தல் என்பது இணைத்தல், சேர்த்தல்,  பிணைத்தல் என்றெல்லாம் பொருள்தரும்.  மனப் பிணைப்பு  என்பது மன ஈடுபாடு.  இத்தகைய ஈடுபாட்டில் மிக்க உறுதிகொண்டு   செயல்படத் தயங்காது நிற்றலே "தைரியம்:".   ஆகும்.   அமைந்துவிட்ட ஒரு சொல்  பயன்பாடு கணக்காண அதன் பொருண்மை விரிதலும் சுருங்குதலும் புதுப்பொருளைத்  தழுவுதலும் மொழி எங்கினும் மலிந்து கிடப்பதே.

சாலி என்பதை இப்போது அறிந்து இன்புறுவோம்.

சாலுதல் -  நிறைதல்.

சால -  நிறைய.   (சாலச் சிறந்தது  என்பது நோக்கவும் )

சாலி -   நிறைந்தோன், நிறைந்தவள்.

தைரிய சாலி -  தைரியம் நிறைந்த ஆள் .


இது தொடர்பான  முன் இடுகை இங்கே காணலாம்.

Click here to see more on Thairiyam:

http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_27.html

A R RAHMAN TAMIL SONG GOES GLOBAL.

Tamil song goes global

DC CORRESPONDENT | May 22, 2014, 23.05 pm IST

Oscar-winning musician A.R. Rahman  (Photo: DC archives)
Oscar-winning musician A.R. Rahman (Photo: DC archives)
Chennai: Urvashi Urvashi, the yesteryear chartbuster song from the monstrous Tamil hit movie, Kadhalan which sent youngsters into frenzy, will now reverberate across the globe.
The foot-tapping, peppy song composed by Oscar-winning musician A.R. Rahman for the 1994 release starring Prabhu Deva in the lead has inspired renowned US rapper William Adams aka will.i.am for his new single titled Birthday which is all set to become an exhilarating, contagious number.
An elated Mozart of Madras who is upbeat about the inventive collaboration posted on both his Twitter and Facebook account, “Excited to creatively partner with Will.i.am to recreate an early popular track of mine in a new flavour.”
Interestingly, Birthday was co-written by Rahman, will.i.am, Cody Wise and Keith Harris. The single track has been produced by the US musician in association with DJ Damien LeRoy. Birthday will be released on the digital retailers on next week.
Craig Gillespie’s Million Dollar Arm which released recently was the last outing of ARM abroad.

தைரியம்

தையல் என்பது அடிப்படையில் ஒன்றில் மற்றொன்றைப் பிணைத்தல், இணைத்தல் என்றெல்லாம்  பொருள்படும்.  துணிகளை இணைத்து ஆடைகளை உருவாக்கும் கலையை இது   இன்று குறிக்கிறது. தையலூசி. தையற்பொறி, தையல் இயந்திரம் என்பன அக்கலைக்குரிய துணைக்கருவிகள்.

ஒன்றில் மற்றொன்று இணையும்போது, அவை ஒன்றாகி மேலும் திடம்பெறுவன ஆகின்றன.

சிவனுடன் இனைந்து ஒன்றாகிப்   பேராற்றல் ஆகிவிட்ட நாயகி, தையல் நாயகி ஆகின்றாள். உறையூற்றித் திடமாகிவிட்ட  காய்ச்சிய பால் "தயிர்" ஆகிறது.

தை > தய் > தயிர்.

இது: பை > பய் >பயிர் என்ற  அமைப்பினைப் பின் பற்றியது.
      பை > பய் > பயல்.  (அல் விகுதி).
      மை > மய் > மயல்.  (அல்)  மை > மையல் எனினுமாம்.

பை -  இளமை . பை > பயல்.  பை < பையன்.

மனத்தில் உறுதி வந்தினைந்தால்,  தை > இரு+ இயம் = தைரியம் ஆகும்.
இகரம் கெட்டு "ரி" ஆனது.   :இரு+ இயம் > இரியம்>  ரியம்..


இதைத் தைரியம்  (dhairiyam)   என்று எடுத்தொலிக்க   வேண் டாம்.

தைரியம் :  திட இணைப்பு என்று பொருள்படும்.

திங்கள், 26 மே, 2014

மோடி நாடிடும் அனைத்தும் நலமோடுயர்க!

மோடி பதவி ஏற்பு

(வஞ்சிப்பா)

பதவி நிற்புறுதி
படிக்கையிலே சொற்பிழ்ச்சி
பதட்டமோ ஏதுமின்றி
பண்புடனே விண்பயந்த‌
நக்கத் திரத்தினைப்போல்
ஒக்க நிற்பார் கையொலியை
உடன்பெற்ற மோடியுமே
நடமுற்றார் நம் மனத்தில்.
நல்லாட்சி வருமெனற்குப்
பல்லாற்றானும் குறிப்பே!
பிறமதத்துத் தேயங்களில்
பிறங்கிடும் தலைவர்கள்,   தம்
திறங்காணும் விதமாக‌
மதப்பித்தம் சிதல்படவே
மாட்சியுடன் மேற்செலுத்தும்
காட்சியும் புகழரிதே!

என்றிவற்றால்

கூடி வருமோர் கோடுயர் புகழுச்சி
மோடியும் மக்கள் முன்னே
நாடிடும் அனைத்தும் நலமோ டுயர்கவே.

பதவி நிற்புறுதி == பதவிப் பிரமாணம் .  விண் பயந்த -  வானம் தந்த
நக்கத்திரம் -  நட்சத்திரம்   பல்லாற்றானும் - பல வழிகளிலும் .
தேயம் -  நாடு. சிதல் - அழிவு.
என்றிவற்றால் ,   தனிச்சொல் .  பழம் பாடல்களில் எனவாங்கு என்று வரும்.
கோடுயர் -  மலை  உயர்ந்த .




ஞாயிறு, 25 மே, 2014

As long as Rajapakse is there......

நடுவண்நல் அரசின்பால் தமிழர் வேண்டும்
நல்லபல கோரிக்கை அவற்றுள் ஒன்று
கெடுவண்ணன் இராசபக்சே மோடி யோடு
கேணமையுறச் சந்தித்தல் கூடா தென்பர்!
மடுவுள்ளில் வீழாமல் இது நாள் காறும்
மதியுடனே தப்பிவிட்ட இராச பக்சே
இடுமன்றில் குற்றவாளி யாக நிற்பான்
என்றெவரும் திட்டமுறக் கூறற் கில்லை.

இத்தகைய சூழலிலே மோடி பேச்சை
எடுக்காமல் ஒதுங்குவதால் என்ன நேரும்?
ஒத்திருவர் பேசியுள்ள மாறு பாட்டை
ஒடுக்கத்தில் கொண்டுவரல் பயனுண் டென்பர்.
வித்திடுதல் இலையாயின் விளைவோ இல்லை.
வேறுபட்டு நிற்பதனால் சீர்பட் டங்கே
ஒத்துழைப்பும்  ஒருதீர்வும் இல்லா தாகும்.
ஓய்ந்தாய்ந்து பார்த்திடுதல் கடமை அன்றோ?

As long as Rajapakse is president, anything you want in Sri Lanka would have to be handled by him. Sad but true. It is the fact of  politics and diplomacy between states. Is there a way for Modi to circumvent this?

சனி, 24 மே, 2014

Busiest causeway in the world between Malaysia - Singapore

சிங்கப்பூர் ஜொகூர்ப்பாலம் உலகில் உள்ள‌
சீரொழிந்த மிகுநெரிசல் தொடர் பாம் என்று
நங்கையரும் நம்பியரும் நவிலும் போது
நானுமதை உணர்ந்துள்ளேன்! காணும் உண்மை!

கடப்பதற்கு மணி நேரம் இரண்டு மூன்று
கழித்திடுங்கள் இதைச்செலவாய் அகவை தன்னில்.
திடப்பயணம் மகிழுந்தும் பழுதொன் றின்றி
தேரினைப் போல் நகர்ந்திடுமோர் திருவே கொள்ளும்.

இனியங்கு போவேனோ எனவே வேர்த்தே
ஏற்பில்லா மனத்தோடே இயல்வோ ரெல்லாம்
கனியங்கே கிடைப்பதுபோல் மாலை நெஞ்சம்
காலையிலே திரிந்துவிடப் பயணம் செல்வார்.

Thailand military: Former Prime Minister Yingluck Shinawatra, others held 'to think'



Thailand military: Former Prime Minister Yingluck Shinawatra, others held 'to think'



http://www.foxnews.com/world/2014/05/24/thailand-coup-leaders-will-detain-former-prime-minister-yingluck-shinawatra/

Army Stages Coup in Thailand, Suspends Constitution

http://www.voanews.com/content/crisis-talks-continue-in-thailand/1919959.html



(இது மெட்டுப் பாடல் அன்று.)

சிந்தனை செய்மனமே  ‍‍‍ செய்தால்
வந்துனை அடைந்திடுமே!  குணமே.

அந்தத் தேர்தல் நீ வென்றதும் உண்மைதான்,
ஆனாலும் எதிர்ப்பவன் கேட்பதும் நன்மைதான் 
உன்றன் கட்சியும் நீயும் ஒருசேர‌
குன்றைவிட் டிறங்கிக்  குட்டைக்குள் மூழ்கிடு!

பதவி என்பது நிலையாது நீயறி,
பாரினில் அதையவன் பக்கமாய்  நீஎறி
உதவி வேண்டுமேல் நாங்கள் செய்கிறோம்,
உன்மேல் குற்றங்கள் வாராமல் உய்கிறோம்

வெள்ளி, 23 மே, 2014

Crumbling Hindu Temples in Pakistan

http://tribune.com.pk/story/676154/endangered-heritage-hindu-community-struggles-to-protect-its-temples/Endangered heritage: Hindu community struggles to protect its temples

Published: February 26, 2014
alt
The handful of temples left in the city are crumbling due to neglect and apathy from the state and citizens alike, while religious imagery inside has been defaced with graffiti. PHOTO: MUHAMMAD JAVAID/ Express
RAWALPINDI: 
For around 5,000 Hindus living in Rawalpindi, Krishna Mandir is the only place of worship left. The temple is built on a four marla plot which is not enough to accommodate the community’s growing numbers during religious ceremonies. But the fact that this temple remains is also nothing short of an achievement. There was a time when its future was also bleak and even today’s there are challenges to its daily existence.
Its not just about religious intolerance, which many remember from amongst the community here. The attacking and burning of temples and statues of Hindu deities in 1993 are still fresh in the mind of 79 year old Mahesh. “We [the Hindus] condemned the attack on Babri Mosque just like our Muslim brothers did. We even held protests but were not spared,” he recalls.
Most Hindus feel that the attacks had less to do with religion and more with money. They believe that the land mafia attacked temples around which Muslim families were living so that the families would vacate the land and the land grabbers could take over, considering the commercial value. Some local politicians led mobs and attacked the temples. “There is a perception that the Hindus [who migrated] had buried their wealth in these temples. Temples on the outskirts of the city were dug but when they found nothing, they destroyed the statues and defaced the statues.”
crumbli
Over the years, most of the Hindu inhabitants migrated to India at the time of partition, leaving behind a good number of properties and places of worship These properties have been up for grabs. Some allege that locals forged documents in order to occupy land around temples and construct markets. These temples are located in areas where the value of land is very high. This acts as a magnet for the land mafia. “No temple here exists that has been spared by land grabbers,” claims Amarnath, a resident of Kirtarpura.  The helpless community can do nothing to protect the dilapidated and plundered buildings.
The security of the evacuated buildings remains a source of concern. The government established the Evacuee Trust Properties Board under the Evacuee Trust Properties (management and disposal) Act 1975 for the protection of such properties. This board now sells or rents out the property around the temples.
When the board was contacted, they said that they are looking after the functioning temples around the province. “The attached properties around these temples have been given on lease while the main buildings of the temples were destroyed or occupied after the Babri Mosque incident,” said Deputy Secretary Evacuee Trust Property Board, Azhar Sulehri. According to him, the zonal offices are looking after the non-functional temples and shrines. But officials at the zonal office denied that this was their responsibility .
alt
Look towards the temples
Out of 11 temples only one temple , the Krishna Mandir, is being used by the Hindu community. A temple in Bhabra Bazaar is being used by the police and political workers as a rest room. The sacred images have been defaced and scriptures scribbled out.  The most important part of the temple, which is the sanctuary where the statue is placed, has been turned into an office.
In the old area of Lunda Bazaar, the temple of goddess Kali no longer exists. There are temples around College Road, Bohar Bazaar, Purana Qilla, Bagh-e-Sardaran and on the outskirts of the garrison city which await protection. A temple in Lunda Bazaar, Mohan Mandir, is said to have been built in 1930 by two brothers Hakim Asa Anand and Hakim Moti. It was also ransacked by an angry mob in 1993.
The members of the Hindu community demand preservation and protection of their religious sites. President of Pakistan Hindu-Sikh Social Welfare Council, Jag Mohan Kumar Arora, said that the trust board and the Department of Archaeology can generate millions of rupees from these temples if they are properly preserved and opened for tourists. “The board is generating money by selling the attached pieces of land around the temples to land mafia. The board is least bothered about spending a penny on maintenance of these historical temples.”
“The government should constitute a committee on the pattern of Pakistan Sikh Gurdwara Prabandhak Committee to protect its holy sites and heritage,” said Dr Umer Nadeem Tarar, Director at National College of Arts.
“People take temples as nothing but mere buildings and they want to destroy them,” said Muhammad Yousaf, lecturer at Islamic International University. The people who understand the importance of heritage can never think about razing them, he said, adding that heritage is what defines a people’s identity and it is a page from the past. However, in Rawalpindi, heritage sites like the temples are disappearing rapidly because of negligence of authorities.

Published in The Express Tribune, February 26th, 2014.


__._,_.___

வியாழன், 22 மே, 2014

வையாபுரி

வையாபுரி என்ற சொல்லினைப் பார்ப்போம். ஆய்வின் பொருட்டு, முதலில் "வையகம்" என்ற சொல்லைக் கவனியுங்கள்.  "வையம்"  மற்றும் "வையகம்" என்பன இறைவனால் வைக்கப்பட்டதாகிய இவ்வுலகம் என்று பொருள்படும். வீடு வைத்தல் என்ற  பேச்சு வழக்கினையும் நோக்குக. இவற்றினை  விளக்கி, முன் இடுகைகளில் பதிவு செய்துள்ளேன்.

இறை (நகரம் அல்லது) நகரங்கள், மனிதனால் கட்டப்படாதவை.  அவை இறையருளால் தாமே தோன்றியவை என்பது கருத்து. எனவே, அமைக்கப்படாமல், மனிதனால் கட்டப்படாமல், தாமே முகிழ்த்த நகரம்  அதுவே வையா ‍ -- கட்டப்படாத ;  புரி -- ‍  நகரம்.

பழனி இங்ஙனம் தானே முகிழ்த்த நகரம் என்று கருதியதால்,  அதாவது மனிதனால் அமைக்கப்படாமல் இறைவனால் தோன்றிய நகரம் என்பதால், அது வையாபுரி ஆயிற்று.

பொருள்  -   முருகன்  அருளிய  நகர்,  இடம்   , கோவில் .   அவன்  அமர்விடம் 


More on words using "vai" and  formation of words:.

http://sivamaalaa.blogspot.com/2014/04/ii_24.html.

http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_24.html

http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_25.html





படைத்தலைவர் அரசினை மேற்கொண்டார்

படைத்தலைவர் அரசினை மேற்கொண்டார்

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு  உறுப்பினர்கள் சிலர் கைது.

http://www.voanews.com/content/crisis-talks-continue-in-thailand/1919959.html


ஆட்சி அமைத்தார் படைத்தலைவர் ;  ஆகையால் 
மீட்சி  எதிர்தரப்பு மேற்றாகும் ---- வீழ்ச்சி 
அடையும் எனச்சொல்வார் ஆண்டோர்  தரப்பாம்  !
உடைவதோ மக்கள் அணி ?


குறிப்புகள்:

மீட்சி  -  மீண்டும் அதிகாரத்துக்கு வருதல் போன்ற  நடவடிக்கைகள்.
எதிர்தரப்பு  -  opponents to the last ruling govt which was deposed.
மேற்று  -  மேலது ,  சேர்ந்தது  (ஆகும்).
ஆண்டோர்  தரப்பு:   முன்னைய அரசு சேர்ந்தவர்கள்.
மக்கள்  அணி  -   ஜன நாயக அணி   மக்கள் ஆட்சி அணியினர்.

 படைத்தலைவர்  -  refers to the Army  General and his command who staged the coup. 




புதன், 21 மே, 2014

திரிபு அடைவனவும் அடையாதனவும்

புகையிலை என்ற சொல் போயிலை என்று திரிந்து  வழங்குவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். புகையிலை என்பது எழுத்தில் மட்டும் வழங்குவது. பேச்சில் பெரிதும் "போயிலை" என்பதே ஆட்சி செய்கிறது.

ஆனால், புகை என்ற தனிச்சொல் போ என்று திரிவதில்லை. கூட்டுச் சொற்களைப் பார்த்தல்,  எல்லாக் கூட்டுச் சொற்களும் திரிவதில்லை. புகைவண்டி என்ற சொல், போவண்டி என்று திரிவதில்லை.

அதுபோலவே. புகைமூட்டம்,  புகைமண்டலம், புகைக்கூடு முதலியவை திரியவிலை.

ஒரே சொல் சிலவிடத்துத் திரிந்தும் சிலவிடத்துத் திரியாமலும் வழங்கும்.

திங்கள், 19 மே, 2014

Revelation of tea shop connection


தேநீர் செயும்பையன் என்றார் அவர்மொழியின்
வீணீர்மை விண்ணெரி தீ.   (1)

எடுபடாப்  புன்மொழி எங்கும் இயம்பிக்
கெடுபடல் காத்தல் கடன். (2)

யாவரும் மன்னரே மக்கள் ஆள்  மாண்பினில்
தேதரும் தீதிலார் காண்.  (3)

பொருள் :

இது பிரதம மந்திரி மோடி அவர்களைப் பற்றிய சில வரிகள்.

1.  தே நீர் =  tea. செயும் =  செய்யும். வீணீர்மை =  வீண் தன்மை . விண்ணெரி = ஆகாயத்தில்  எரிகின்ற நெருப்பு  போன்றது.  ஆகவே வீண் பேச்சு என்பது எல்லோருக்கும் தெரியும் .

2 எடுபடா = மக்கள் ஏற்க முடியாத . புன்மொழி = கீழ்த் தரமான பேச்சு . இயம்பி - சொல்லித் திரிந்து.  கெடுபடல் = தீமையுட் படுதல். காத்தல் = (கேடின்றிக்) காத்துக் .  கொள்ளுதல்.  கடன் = கடமை.

3.யாவரும் = எல்லாக் குடிமக்களும் .  மக்கள் ஆள் = மக்கள் ஆட்சி (செய்யும்)  

 தே தரும் -       தே நீர் விற்கும் .  தீதிலார் = தீமை இல்லாதவர்கள். 

Even with the revelation that Mr Modi was a tea boy and that he was marred but not with his wife now,  the Congress still lost.



`

ஞாயிறு, 18 மே, 2014

Terrorists arrested in Malaysia Targeted Indian cities

காவல்துறை  மலேசியா திறமை மிக்கோர்  ‍‍ --- எந்தக்
கள்ளனையும் கண்டுபிடி கடமைத் தக்கோர்.
மேவிடுவார்  வேலைனை செயல்முன் ஏவல்‍‍‍‍-- ‍‍‍‍‍‍‍ இந்த‌
மேதினியில் வேண்டாத மெய்ம்மை மேலோர்!

சென்னையிலே பெங்களூரு நகரந்  தன்னில் ‍‍---  வெடி
சிதறுகுண்டு வைப்பதற்குத்  திட்டம் பண்ணி,
உன்னிப்பாய் ஒளிந்திருந்தார் இரண்டு தீயர் ‍‍‍--- கைது
ஒருமிக்கச் செய்புகழால் உயர்ந்த காவல்!

அங்குமிங்கும் சேற்று நீர் உண்மை போல---- ‍‍ தீர்வு
அடையாத குற்றம்சில  இடையில் மேவும்;
எங்குமொரு குற்றச்செயல் இல்லா நாடு ‍‍‍ ---உலகம்
இனிக்காண வேண்டுவதே  இனிதே தேடு!

Source of news:  The Sun, (Malaysia).  May 16, 2014.

will edit for link etc later

வெள்ளி, 16 மே, 2014

"சருகு பிளகு"

சில நாட்களின் முன்பு, பாக்கு பற்றி எழுதியிருந்தேன். பகுக்கப் படுவதால் பாக்கு ஆயிற்றென்பதை விளக்கியிருந்தது அவ் இடுகை. மற்றொரு பெயர் கமுகு என்பதும் கண்டோம்.

வெற்றிலைக்கு வேறு பெயர் "சருகு" என்பதும் பின் ஓர் இடுகையில் சொல்லப்பட்டது.

வெற்றிலை பாக்குப் போடுவதை "சருகு பிளகு" போடுவது என்பதுண்டு. இப்போது இவ்வழக்கு இன்னும் உளதா என்பது தெரியவில்லை. இதில் பிளகு என்பது பாக்கைக் குறிக்கும்.  ஆனால், தமிழ்ப் பேரகராதிப் படி, பாக்குமர வேரைக் குறிப்பதே "பிளகு" என்னும் சொல். வேரை யாரும் போடுகிறார்களா என்று தெரியவில்லை. முன் போட்டதற்கான ஆதாரம் ஏதும் கிட்டவில்லை.

பகு என்பதிலிருந்து பாக்கு வருதல்போல். பிளத்தல் என்பதிலிருந்தே,  "கு" என்னும் விகுதி பெற்று பிளகு என்னும் சொல் அமைகிறது.பேச்சு வழக்கின்படி, பிளகு என்பது பாக்கையே குறிப்பதாகும்.  மலேசியாவில் பாக்கு விளைந்த இடங்கள் உண்டு. "பினாங்கு" என்றாலே பாக்குத்தான்.

இந்தோனேசியாவில் தஞ்சோங் பினாங் என்றோர் இடம் உண்டு. இந்த இடமும் பாக்கு விளைந்த பெருமை உடையதேயாம்.

பிளகு என்பது பிளத்தல் எனும் வினையடியாகப் பிறந்த சொல் என்பது காண்க.

Prime Minister மோடிக்கு வாழ்த்து!

ஆசியாவின் பண்பாட்டு மையமதில் ஒன்று
அரியபல நிகழ்வுகளால் தலை நிமிர்ந்து நின்று
மாசுறாத கலைகள்பல உலகினுக்கே தந்து
மாண்புறவே திகழ்பரதப் பெரு நாட்டின் முந்தும்

தலையமைச்சர் தகவுற்று வரலாற்றை ஆக்கி
நிலவுலகம் போற்றிடவே நேருயர்ந்த அண்ணல்
குலைவுறாத நெஞ்சுரத்தோன் மோடிக்கு வாழ்த்து!
கூட்டணியாய் வென்றுபுகழ் ஏற்றுநர்க்கும் வாழ்த்து.

உங்களின்முன் அச்சுறுத்தும் வேலைகளோர் குவியல்
தங்கமென ஒவ்வொன்றும் உருமாற்றம் அணிய,
பங்கமிலா விளைவுகளே பலகாலும் உலகும்
பார்க்குமொரு பாங்குடன்நல் அரசுமினி வளர்க!

வியாழன், 15 மே, 2014

வெற்றிலை (தொடர்ச்சி ) வேறு பெயர்கள்.

இது பற்றி முன் எழுதியதை இங்குக் காணலாம் "

http://sivamaalaa.blogspot.com/2014/05/vetrilai.html

வெற்றிலைக்கு வெற்றிலை என்பது தவிர வேறு பெயர்கள் உண்டா என்பதும் அறியத் தக்கது .

கொஞ்சம் சருகு போடுவதற்குக் கிடைக்குமா என்று கேட்பதுண்டாம்.  சருகு  என்பது காய்ந்த இலையைக் குறிப்பதுடன் வெற்றிலையையும் முன்காலத்தில் குறித்துள்ளது.  இது காய்ந்த இலையைக் குறித்ததால் முன் காலத்தில் காய்ந்த வெற்றிலைகள்தாம் கிடைத்தனவோ என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது. இதற்கான விடைகள் இப்போது  உடன் கிடைக்குமென்று தெரியவில்லை ,

சருகு என்ற  சொல்லுடன் sireh  என்ற வெற்றிலை குறிக்கும் மலாய்ச் சொல்  ஓரளவு  ஒலி ஒற்றுமை உடையது. சருகு என்பதில் "கு" என்பது சொல்லாக்க விகுதி.  மீதமுள்ள "சரு"  என்பது சிரே    ஆவது  எளிதாம்.

வெற்றிலைக் கொடி   குறிக்க  "சருகுக் கொடி" என்று  கேள்விப் பட்டதில்லை.   சருகு இலை,  சருகுக்  காம்பு என்ற வழக்குகள் இல்லை என்று நினைக்க வேண்டியுள்ளது.

வெற்றிலைக்  கொடி என்று "இலையை "   விட முடியாத நிலை மொழியில் இருப்பதால், மரபுக்கு மாறாய் சொல் அமைதல் காண, வெற்றிலை வெளி நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது என்று சொன்னால், அது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

வேம்பு ‍  வேப்பிலை ‍  வேப்பெண்ணெய்.

வேப்பிலை மரம் அன்று.  தவறு.

வெற்றிலை ‍  வெற்றிலைச் கொடி  வெற்றிலை காம்பு.  இலையைச் சொல்லித்தான் கொடி காம்புகளைச் சொல்லவேண்டியுள்ளது.

வெறு + இலை = வெற்றிலை.  வெறுச் கொடி, வெறுக் காம்பு என்ற வழக்குகள் இல்லை.

வெற்றி + இலை என்பது வெற்றிலை என்று மருவிற்றென்பர். திருமணப் பேச்சுகளில் வெற்றிக்கு அடையாளமாக, வெற்றிலை ‍பாக்கு மாற்றிக்கொள்ளும் காரணத்தால். இந்த வழக்கம் மலாய் மக்களிடமும் உள்ளது.

தைவான் முதலிய இடங்களிலும் தென்கிழக்காசிய பிற நாடுகளிலும் வெற்றிலைப் புழக்கம் உண்டு.  சீன அம்மனுக்கு வெற்றிலை படைப்பதுண்டு.

வெற்றிலை ‍ நல்லெண்ணெய் உருக்கி உண்டால் மரணம் ஏற்படுமென்கிறார்கள்.
 வெற்றிலை விடமாகிவிடும்.  சித்த வைத்தியர்களைக் கேட்டறியவும்.

 will edit later

    

மக்களாட்சி மலர் நாடு

மக்களாட்சி மலர் நாடு  என்றபெயர் வேண்டும்
மக்களிடம் அதிகாரம் தந்தபுகழ் வேண்டும்!
தக்கதொரு தலையமைச்சர் அவர்களுக்கு வேண்டும்
தமக்குரியர் மேலெவரும் கைவைத்தால் குற்றம்.
பக்கலொரு படைத்தலைவர் துணை நிற்றல் வேண்டும்
பணிகளிலே அவர் மூக்கை நுழைத்தாலோ கூச்சம்!
மிக்கவொரு முறைமன்றம் அதைச்செய்தல் வேண்டும்
மேலிறுதி அதிகாரம் அவர்களுக்கே வேண்டும்


மேலெவரும்   -   மேல்  எவரும்.   பக்கலொரு  --  பக்கல் ஒரு  :  பக்கத்தில்  ஒரு மிக்கவொரு -   அதிகாரம்  மிகுந்த .    .முறை மன்றம் -  நீதி  மன்றம் .   மேலிறுதி  -   supreme.  .



another council name

இனி, அம்பலம் என்பதை ஆய்வு செய்வோம்.

இந்தச் சொல்லில் இறுதியாய் நிற்பது "அம்" என்னும் விகுதி.  இதைப் பிரித்து எடுத்துவிட்டால், மீதமிருப்பது அம்பல் என்பது.

அம்பல் என்று ஒரு சொல் உண்டெனினும், அது மலரும் நிலையில் அல்லது அதற்குச் சற்று முந்திய நிலையில் உள்ள  மொட்டினைக் குறிக்கிறது.  அது வேறு சொல்.

இங்கு நாம் கருதும் சொல், அம்+ பல் என்று பிரியும்.

இவற்றுள் பல் என்பதைப் பார்ப்போம். பல் என்பது பன்மை அல்லது பலர் என்று பொருள்தரும் சொல்.

கூடுவோர்  பலர் என்பதே இதனால் பெறப்படுவது. ஆகவே ஊருக்குள் பலர் கூடும் இடமாயிற்று. அறையில் நடந்தது அம்பலத்துக்கு வருவதா என்று கேட்கப்படுவதிலிருந்தும்,  "அம்பலமாயிற்று" என்ற வழக்கிலிருந்தும் பலர் கூடி ஒன்றை அறியுமிடம் என்ற பொருள் அறியப்படும்.

முன் நிற்கும் அம் என்பதில்  "அ" என்ற சுட்டு உள்ளது. "அந்தப் பலர்கூடும் இடம்"  என்பது பொருள்.  அப் பல் என்று வல்லெழுத்தாக வரற்பாலது அம்பல்  என்று மெலிவுற்றது. சித்து> சித்தன், சித்து > சிந்தனை என்று மெலிதல்போன்றதே இது. இப்ப்டி மெலிந்து வரும் சொற்களின் பட்டியல் ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள் .

அன்றியும் முன் நிற்றல் உரிய  "அம்" என்பது அழகும் குறிக்குமாதலின், அம் இருபொருள் தருவதென்பதும்  ஆம்.

இறுதி அம், சொல்லாக்க விகுதி.

அவை என்பது சுட்டில் வளர்ந்த சொல்லாதல் போலும் இதுவும் சுட்டடிப் பிறப்புச் சொல்லே. 

இதற்குப் பிற பொருள் பின் வளர்ந்தவை.  அவற்றுள் "கோயில் " என்பதும் அடங்கும்.

புதன், 14 மே, 2014

pakkiri

பெரும்பாலும் முஸ்லீம் துறவியைக் குறிக்கும்  சொல்லாம் இது.

நபி நாதர் தம் பின்பற்றாளர்க்குத் துறவறம் போதிக்கவில்லை. அவர்கள் யாவரும் திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்தக் கடவர் என்றே அவர் விதித்தார்.  மண வயது எட்டிய ஒவ்வொரு முஸ்லீமும் அவர் வாழ்க்கையில் பக்கத்துணையாக ஒரு பெண்ணைப் போற்றிக்கொள்ள வேண்டும். 

இவ்வாறு கூறினாலும், ஒரு குறிப்ப்பிட்ட குழுவினர்  துறவறம் கொள்வாராய் உள்ளனர். அவர்கள்  "பக்கத்துணை இல்லாதவர்கள்"  என்பது உணரப்பட்ட போது,  பக்கு+இலி =  பக்கிலி  என்ற வரணிக்கப் பட்டனர்.

பக்கு என்பது பக்கம் என்பதன் முன் நிற்கும் வடிவச் சொல்.  பக்கு+ அம் = பக்கம்.

பக்கு + அம் = பக்கம்.
பக்கு+  இலி = பக்கிலி.

லகரம் ரகரமாய்த் திரியும்.

பக்கிலி >  பக்கிரி.>  பக்கிரிச் சாமி.  பக்கத் துணையாக ஒரு மங்கையை இல்லாதவராய் வாழ்வு நடத்தும் துறவி என்பதாகும்.

லகரம் ரகரமாய்ப் பல சொற்களில் திரிந்துள்ளன.  தமிழல்லாத வேறு மொழிகளிலும் இது காணலாம். இதை என் முன் இடுகைகளில் குறித்துள்ளேன்.

அம்பலம் > < அம்பரம்,  சிற்றம்பலம் >  சித்தம்பரம் > சிதம்பரம்.
சிதம்பரம் என்பதற்கு வேறு அழகிய பொருள் வருவித்துரைப்பதுமுண்டு.

இவை பின்பு  விவரிக்கப்படும்.

பக்கிரி என்பது  பின் வேறு மொழிகட்கும் தாவியது  அது மிக்கப் பொருத்தமான அமைப்புடையது என்பதையே தெரிவிக்கும்.

காலாடி

கைப்பொருள் உள்ள /காரணத்தினால் வாங்கித் தின்னும் கூ ட்டாளிகள்  அதிகமாகி  வீணே ஊர் சுற்றிக் காலம் கழிப்பவனைக்  "காலாடி"  என்று சொல்வர் .   நேரம் இருப்பதனால் வீண் சண்டைகளிலும் ஈடுபடுவான் .

" காலாடு போழ்தில் கழிகிளைஞர்  வானத்து
மேலாடு மீனிற் பலராவர் "

என்ற நாலடியாரில் வரும் பாட்டினால் "கைப்பொருள் உள்ளவனையே "  இச்சொல் குறித்த தென்பதை அறியலாகும்.

காலாடுதல்  =  கையில் காசு உள்ளவனாய் .இருத்தல்.

இப்பொருள் இழிந்து இப்போது "rowdy person"  என்று பொருள் தருவதாய் உள்ளது.  கைப்பொருள் பற்றிய பொருண்மை மறைந்து விட்டது ..  

உருவம்

உருவம் என்பது ரூபம் என்று மாறி.   இறுதியில் ரூப என்றானது.

அ, இ,உ என்று முச்சுட்டுக்களில், என்பது முன் தோன்றுதலையும் குறிக்கும். பிற அர்த்தங்களும் உளவெனினும் அவை இப்போது கிடக்கட்டும்.

உருத்தல் ‍ : ‍  முன்  தோன்றுதல்.


"ஊழ்வினை உருத்து வந்தூட்டும்"
( சிலப்பதிகாரம் ).

உரு + அம் = உருவம். வகர உடம்படு மெய் பெற்றது.

வழக்கம்போல், வ > ப என்று திரிந்து, தலை "உ" தொலைந்து, ருகரம் ரூகாரம் ஆகி,  ரூப , ரூபா என்ற சொற்கள் அமைந்தன. இது மகிழ்வு தரும் விளைவுதான்.

பேச்சு வழக்கில் உருவம் என்பது ரூப என்று திரிவதில்லை. வேறு சொற்களில் தலை போவது கண்ட பண்டிதன்மார், இது புனைந்தனரென்றே சொல்லத்தகும்.

இந்தோ ஐரோப்பியத்தில் ரூப உள்ளதா என்று நீங்கள் தேடிப்பார்த்துச் சொல்லலாமே!

செவ்வாய், 13 மே, 2014

மாரீசன்

மாரீசன் மான் ரூபம் எடுக்கிறான்.  அதாவது மானுருக் கொள்கிறான். மான் மரை என்பன உங்களுக்குத் தெரியும்.

மரை + ஈசன் =  மாரீசன்.

மரைப்பெயர் கொண்டோன்.

இறைவன்  >  இ ஷ் வர்  > ஷ்வர்.  றையை எடுத்துவிட்டு, ஷ் போட்டுவிட்டால், வேறுலகத்தில் போய்விட்டதுபோன்ற‌ உணர்வு,

ஈஷ்வர் > ஈஸ்வர் >  ஈசர் > ஈசன்.

மரை+  ஈசன் =  மரையீசன் என்று வரவேண்டும் என்பார்  தமிழ்வாத்தியார்.
இந்த வாத்தியாரை வேலைக்கு வைத்தால்  புதுமொழியையும் புதுச்சொல்லையும் எப்படி அமைப்பது?

ஆக வான்மீகியாரே  சொந்தமாகப் படைத்துக்கொண்டார் வேண்டிய சொற்களை.

மகிழ்ச்சிக்குரிய செய்தி ........

கைகேசி

கைகேசி என்ற இராமாயணத்தில் வரும் பெயரைப் பார்க்கலாம்.


கேசம் என்ற சொல்லை முதலில் நோக்கினால்,  அது முடி (மயிர்) குறிப்பது என்பது புரியும்.

கை  கேசி எனின், கையின் நீட்டத்திற்கு முடி தொங்க விட்டிருப்பவள் என்று பொருள்.  வாயில் <> வாசல் என்பது  போல,  கேசி <> கேயி என்று ஒன்றுக்கொன்று மாறுபடும். இன்னொன்று  ஆகாயம் <> ஆகாசம்.  மற்றும் வாயித்தல் > வாசித்தல்.  மலையாள‌த்தில் வாயிச்சு என்றுதான் சொல்வர்.

வான்மீகி ஒரு  தமிழறிந்த புலவர் என்பதற்கு அகச்சான்றுகள் பல.  கை என்ற சொல் பயன்படுத்தியதும் ஒன்றாம்.

திங்கள், 12 மே, 2014

If BJP Alliance wins in India....

இரு நூற்றின் மேற்பட்ட  இருக்கை யோடு
ஏறிவிடும்    பாஜக    எனச்சொல்  கின்றார்
வரு நாளில் முஸ்லீம்கள் சலுகை குன்றும்
வற்றுமவர்  வளங்களெலாம் என்கின் றார்கள்
குறுவானைக் கற்பனையில் கண்டு சொல்வார்.
கூறியவை எதனையுமே  நம்பற் கில்லை.
அரும் அப்துல் கலாம்வந்த தெந்த ஆட்சி?
ஆகையினால் வந்தாலோ குறைவொன் றில்லை.

BJP and allies may come in with majority but no religious group will be adversely affected. People in politics know their job.....!

ஆஞ்ச நேயர்

ஆஞ்ச நேயர் என்பது முன்னர் இராமர்பால்  "ஆழ்ந்த நேயம்" உடையவர் என்ற தொடரின் திரிபு என்று  கூறப்பட்டது.

ஆனால் "ஆழ்ந்த" எனற்பாலது "ஆஞ்ச" என்று திரிதற்குரிய சாய்நிலை குறைவு என்று தெரிகிறது.

இந்தத் திரிபுகளை நோக்குக.

பாய்ந்த  >  பாஞ்ச.
ஆய்ந்த >  ஆஞ்ச.    (ஆஞ்ச கீரை).
ஓய்ந்த >  ஓஞ்ச    (ஓஞ்ச வாய்).
காய்ந்த >  காஞ்ச    (காஞ்ச துணி)
தேய்ந்த > தேஞ்ச   (தேஞ்ச பல்லு).

ஆகவே, ஆய்ந்த நேயர் என்பதன் திரிபே "ஆஞ்ச  நேய" என்பது, மிகத் தெளிவாகின்றது.

இதன் பொருள்,  நண்பராக முன் வந்த  பலருள், ஆராய்ந்து எடுத்த நேசனே "ஆஞ்ச  நேயர் என்பது தெள்ளத் தெளிவாகின்றது.

மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பாத.............


மக்கள் கைபோற்றி மகிழாத,   ----
 மாநிலத்து நன்மையெனும்
மக்கள் வாய்போற்றி யுகக்காத -----
மதித்தவர்கள் எழுத்துமூலம்
மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பாத -----
 ஒருதலைவர் நேமித்தீரேல்
மக்கள் ஆர்த்தெழுந்து புரட்சியினால்
கவிழ்த்திடத்      தயங்காரென்றார்.

இவ்வாறு கூறினர் தாய்லாந்தில் தலைவர் சிலர். அது கவிதை வடிவில்.!

ஞாயிறு, 11 மே, 2014

vetrilai

வெற்றிலை என்பது வாயில் போட்டு மெல்லுவதற்குப் பயன்படும் ஓர்  இலைவகை. இது கொடியாகப் படர்கிறது.  இந்தக்  கொடியை வெற்றிலைக் கொடி என்றுதான் சொல்லக்கூடும். கொடி என்று பேசுகையில் ஏன் இலை வருகிறது?

 மா+இலை =  மாவிலை.

மரம் குறிக்கும்   போது மாவிலை மரம் என்று நாம்    சொல்வதில்லை. அப்படிச் சொன்னால்  அது மரபு வழு  (பிழை).

வெற்றிலைக் கொடிக்கு மட்டும் ஏன் இலையைச் சுட்டி அப்புறம் கொடியைக் குறிக்க வேண்டும்.?

உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். பின் எழுதுவேன்.

Application of Islamic law to non-M in Malaysia


நபிவழி பற்றார்க்கும் நாட்டென்ப இஸ்லாம்
தனிவழிச் சட்டமே  தான்.

நபிவழி -- அண்ணல் நபி போதித்த வழியை  ;  பற்றார்க்கும் --  பற்றி நிற்காதவர்க்கும் ;  நாட்டு என்ப --- நிலை நாட்டு என்பார்கள் ;   இஸ்லாம்  - இஸ்லாமிய ;  தனிவழிச் சட்டமே   ---  ஹுடுட் என்னும்    சிறப்புச்  சட்டமே '  தான்  -  ஆம் .

இவற்றைப் படித்து அறியுங்கள் :-   


Learn more :  click:


Islamic law to apply to non-Muslims as well!

The Chinese are here, deal with it, says Dr Mahathir.
https://my.news.yahoo.com/chinese-deal-dr-m-tells-isma-094200809.html

சனி, 10 மே, 2014

தூவானம்

பல சொற்கள் தம் அமைப்பில் முன் பின்னாக அமைக்கப்பட்டுள்ள என்பதைக் கண்டறிந்து முன்பு கூறியுள்ளேன்.  சரியான ஆய்வின்மையால் அவை பெரும்பாலும் கண்டறியப்  படாமல் இருந்தன. அல்லது  கண்டவர்  விண்டதில்லை என்று அடைபட்டுக் கிடந்தன.
இத்தகையவற்றில் ரவிக்கை என்பதொன்று என்பதை முன்பு வெளியிட்டுள்ளேன் .

இரு+அவிழ் +கை  =  இரு+ அவிக்கை = இரவிக்கை >  ரவிக்கை.

நடுவில் நெஞ்சுப் பகுதியில் அவிழ்க்கவும் பக்கங்களில் இரு கைகளும்  உடைய ஒரு "பெண்கள்" சட்டை.  இது  நன்றாகப் புனையப் பட்ட ஒரு சொல்.இத்தகு  புனைதிறன் இக்காலத்துப் புலவர்க்கு உண்டாவென்பது ஐயத்துக்குரியது.

இல்லத்தின் வாய்,   இல்வாய் என்று வழங்காமல், வாய்+இல் = வாயில் என்று அமைந்ததும் அது பின் வாசல் என்று திரிந்ததும் கண்டீரோ? இல்லத்து  நுழைவு என்று சொல்லலாம். இங்கு நுழைவு என்பது ஆகு பெயராய் நுழைவிடம் குறிக்கும்.

தூவானம் என்பதும் இங்ஙனம் முறைமாற்றாக அமைந்ததே. வானம் தூவல் எனின் அது வாக்கியமாய் நிற்கத் தகுவதன்றி ஒரு சொன்னீர்மைப் படுவதன்று.  அதை முன்பின்னாக்கி, தூவானம்,  தூவானை என்றெல்லாம் சொல்வதே சொல்லாக்கத் திறன்.

இந்த உத்திகளையெல்லாம் கையாளாமல்  இருந்திருந்தால், தமிழ் காலத்துக்கேற்பச் சொற்களைப் புனைந்துகொள்ள இயலாமல் தமிழர் ஒரு கடன்படு கூட்டமாக அன்றோ வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும்?

சீனம் மலாய் முதலியவையும் சொந்தச் சொற்களை  வேண்டுங்கால் படைத்துக் கொள்கின்றன.

பொன்மொழி:

தெரிந்ததைத் தெரியும் என்று சொல். தெரியாததைத் தெரியாது என்று சொல்.
அதுவே உண்மையான அறிவு என்றார் சீன அறிஞர்  கன்பூஷியஸ் 


edit reserved

மக்கள் அரசு வீழ்ச்சி

"அந்த அம்மை செய்வதெலாம்
அண்ணன் வாழ்வு  உய்வதற்கே!"
இந்த எண்ணம் எதிர்ப்போர்பால்
கொந்த ளித்தே உதிர்ப்புறவே,
வெந்து வீசும் அன‌ற்கலகத்(து)
உந்து  வேகம் தெருக்களிலே!
குந்தி  வேலைக்கு இடமின்றிக்
குத்திக் கிடந்த‌ பணிமன்றே!


வேறு சந்தம்

மக்கள் தேர்தலில் கண்டெடுத்த‌
மாபெரும் தலைவி அவளெனினும்
தக்க மனங்கள் இலர்பலராய்
தடைகள் பலவாய் தளர்வுறவும்
ஒக்க நிலவா நீதிமன்றம்
ஓய்வு விளைத்துப் பாதிகுன்ற
தெற்கில் ஆசியம் கவலைஉறத்
தேய்ந்தது மக்கள் அரசதுவே.

இது தாய்லாந்து நிலவரம் பற்றிய பாடல்.

உதிர்ப்புற --  வெளிப்பட ;    பணிமன்று  -  அலுவலகங்கள்.
ஒக்க  நிலவா --  ஒத்த நிலையிலும் பார்வையிலும் செயல்படாத ;
 பாதி குன்ற -  தேர்தெடுத்த  கால அளவு பாதியாய்க் குறையுமாறு.
ஓய்வு விளைத்து  -  பதவியிலிருந்து விலகுமாறு ஒரு கட்டாய ஒய்வு கொடுத்து .  ஆசியம் - ஆசிய நாடுகள்

.uk/news/world/asia/turmoil-in-thailand-as-supporters-of-ousted-prime-minister-yingluck-shinawatra-warn-that-installing-an-unelected-leader-could-lead-to-civil-war-9349952.htm


வாக்குகள் எண்ணினாலே

ஒரு மந்திரி சொல்கிறார்:
"வரு நாளில் அரசமைப்போம் நாங்கள்!"
ஒரு பேரெதிர்த் தலைவர் சொல்கிறார்
"நிறுவிடுவோம் அரசை நாங்கள்!"
இருக்கும் பெட்டிகள் அகத்தே.
இரு -அக -சி - அம் எனும் இரகசியம்!
வாக்குகள் எண்ணினாலே
தேக்குபோல் திண்ணிய  தலைவர் யார்?
நோக்கக் கிடைப்பார் மக்களுக்கு!
அதுவரை எதிர்பார்த்து  அமைதியாய்
நதிபோல் ஓடிக்கொண்டிருப்பர் மக்கள்.

(புதுக்கவிதை )