திங்கள், 30 ஜூன், 2014

Real Lover branded as possessed.. (Sangam)

சங்க காலப் புலவர் பெருஞ்ச்சாத்தனார் பாடிய ஓர் அழகிய பாடலைப் பாடிப் பொருளை அறிந்து இதுபோது மகிழ்வோம்.    சங்க இலக்கியச் சுவை கண்டு சின்னாட்கள் கழிந்துவிட்டன.

மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப்பு இரீஇச்
செல்லாற்றுக் கவலை பல்லியங் கறங்கத்
தோற்றமல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
பேஎய்க்  கொளீஇயள் இவளெனப் படுதல்
நோதக்  கன்றே தோழி  மால்வரை
மழை விளையாடு நாடனைப்
பிழையேம் ஆகிய நாம்இதற் படவே .      குறுந் 263.   

அருஞ் சொற்கள்:

மறி = ஆடு . குரல் =  குரல்வளை.  பிரப்பு  =  படையல் பாத்திரம். இரீஇ = படையலிட்டு .  செல்லாற்றுக் கவலை  -   ஆற்று நடுவில் உள்ள திட்டு .
பல்லியம் = பலவகை வாத்தியங்கள்.  கறங்க =  இசைக்க. தோற்றம் =  இங்கு முருகன்,  அல்லது =  அல்லாமல்.;  நோய்க்கு =  காதல் நோய்க்கு ; மருந்து ஆகா:= தீர்வு தரும் மருந்து ஆகமாட்டாது. வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்தி  = மற்ற தெய்வங்களுக்கு வாழ்த்து , வெறுப்பில்லை ; அவை பலவும் போற்றினோம் என்றபடி .

பேஎய்க்  கொளீஇயள் இவளெனப் படுதல் =  இவளுக்குப் பேய் பிடித்துள்ளது என்று சொல்வதும் நடந்துகொள்வதும் ;  நோ = வருத்தம். தக்கன்று = (அடையத்)  தக்கது .  மால் வரை =  பெரிய மலை இடத்து ;  மழை = மழை (தரும் முகில்கள் ).  நாடன் =  நாடுடையோன்  (அவனை )

பிழையேம் =  மாற மாட்டோம் ; ஆகிய  =  (என்று)  நடப்பில் காட்டிய ; நாம் = (தலைவி தோழி ஆகிய)  நாம்.  இதற் படவே =  இந்தப் பேய் விரட்டில் பங்கு பெறவே .  இதற் படவே = இதன் +படவே ,  இதனில் படவே.

பேய் விரட்டு நிகழ்வுகள் இப்போது சில இடங்களில் இன்னும் நடத்தல் போலவே சங்க காலத்திலும் .நடைபெற்றன . மலை  நாட்டுக் காதலன்பால்  மனம்  பறிகொடுத்த தலைவி முருகப் பெருமானிடம் வேண்டி அக்காதல் நிறைவேறும் நாள் எதிர் பார்த்துக்கொண்டிருந்தாள். அன்னையோ  இக்காதலின் ஆழம் உணராதவளாய்,  தலைவிக்குப் பேய் பிடித்துவிட்டதாக நம்பிக்கொண்டு,  ஆற்று நடுவில் உள்ள திட்டில் பேய் விரட்டுப பூசை போடத் துவங்கி விட்டாள்.
பூசைகளுக்குத்  தேர்வாவன   பெரும்பாலும் பாடலில் வரும்  இதுபோலும் .இடங்களே.  தெய்வங்கள் வாழ்விடம் .இவை என்ப .( சீரங்கம் இத்தகையதே. அரங்கன் அமர்விடம்.)   இந்நிகழ்வால் தலைவியும்  தோழியும் வருந்தினர். எங்ஙனமாயினும் காதலைக் கைவிடாள்  தலைவி.  மழைமுகில்கள் கொஞ்சும் நாடனைப்   "பிழையேம்"  என்கிறாள். பேய் விரட்ட ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தாலும் பங்கு பெறுதல்போல் நடந்து`கொள்ள வேண்டியதுதான்.

பிரம்பினால் பின்னப்பட்ட பாத்திரத்தில் படையல் செய்தனர் . இது  பிரப்பு   எனப்பட்டது,  பிரம்பு > பிரப்பு .  (வலித்தல் ) தினை  என்பது  ஒரு கூலம்.

முருகன் சிவனின்  தோற்றம் எனவே,  "தோற்றம் "  என்றார் புலவர்.  அருணகிரியாரும் இங்ஙனமே பாடினார்.

முருகன்தான் காப்பாற்ற வேண்டியவன் . மற்ற  தெய்வங்கள் வாழ்த்தப் பெறும். என்றாலும் காதலுக்குக் கைகொடுக்க வரும் கடவுள் முருகனே. என்பது தலைவி தோழி ஆகியோர் துணிபு.  வாதாடும் குறவரிட வள்ளிப் பங்கன் ஆதலினாலோ?

அளபெடைகள்  அழகுடையான.

நோ  தக்கன்றே :  இங்கு  "தக்கன்றே "  என்பதைப் பிரித்துப் பார்ப்போம்.

தகு + அ +து =  தக்கது.

தகு + அன் + து  = தக்கன்று.

தகு ​+ அ + து =  தகுவது .

இவை ஒரே பொருளன . இங்கு அன் எதிர்மறைப் பொருளில் வரவில்லை.
செய்தனம் என்ற வினைமுற்றிலும்  finite verb அப்படியே.

நில்லன்மீர் =  நில்லாதீர். இங்கு .எதிர்மறை..  அல் > அன் .


புலவர்  பெருஞ்ச்சாத்தனார் இங்கு தலைவியை ஓர் இறைவணக்கப் பண்பாடு உடைய பெண்மணியாகக் காட்டியது அறிந்து போற்றத்தக்கது ஆகும். அவள் நம்பிக்கையுடன் வேண்டிகொண்டது முருகப் பெருமானிடம். பூசையோ மற்ற தெய்வங்களுக்கும் நடைபெறுகின்றது.  வேற்றுப் பெருந்தெய்வங்கள்  அவளுக்கு உதவும் என்ற நம்பிக்கை இல்லை என்றாலும்,
அவற்றையும் வாழ்த்த அவள் தவறவில்லை. இதுவே நல்ல நாகரிகம் என்பதும் இறைக்கொள்கை நல்லிணக்கம் என்பதும் இங்குக்  கோடிட்டுக் காட்டவேண்டிய  உயர் பண்புடைமை ஆகும்.

edited
edited again: 19.2.2019 some letters (alphabet) missing. Inserted.














"கவ்வை" என்பது. கவ்விக்கொள்வது.



சில நிகழ்வுகள் நம்மையும் நம் நேரத்தையும் "கவ்விக்" கொண்டுவிடுகின்றன. கவ்வுதல் என்றால் என்ன? அது இரண்டாகப் பிளந்து நம்மை அகப்படுத்தி, இறுகப் பிடித்துக் கொள்கின்றது . விடுபாடு என்பதோ கடினமான காரியம் ஆகி விடுகிறது.

இப்போது கிசுகிசுப்புகள் என்று சொல்லப்படும் பேச்சுகளும் ஒருவாறு கவ்வுதலைச் செய்வனவே. இக் "கவ்வுதலில்" அகப்பட்டுக்கொள்வதும் மன உளைச்சல் தருவதேயாம். அலர் எழுதலும் அப்படியே. இன்னும், துன்பம், துயரம், ஆழ்ந்த எதிர்பார்ப்பு, பொறாமை முதலியவையும்   ஆம்.

இவை எல்லாவற்றுக்கும் ஒரு சொல் என்றால், அதுதான் "கவ்வை" என்பது.
கவ்விக்கொள்வது, அல்லது கப்பிக்கொள்வது.

கவை, கவடு, கபடம்,கபாடம் எல்லாம் பிறகு காண்போம்.

Some matters consume you, others swallow you up.

ஞாயிறு, 29 ஜூன், 2014

Possibly the Guru of Ilayaraja and ARRahman

 இசை வல்லுநர்  தஞ்சை தன்ராஜ்
                                          
                                          -செ.அ.வீரபாண்டியன் –
http://musicdrvee.blogspot.in/                                    http://musictholkappiam.blogspot.in/

  ‘தமிழிசையின் இயற்பியல்’ (Physics of Tamil Music) என்ற எனது முனைவர் பட்ட ஆய்வு தொடர்பாக, 1990‍- களில் நான் பயன்படுத்திய அரிய நூலகங்களில் ஒன்று , சென்னை திருவான்மியூர் கலாசேத்ரா அருகில் உள்ள 'உ.வெ.சா நினைவு நூலகம்'.

அந்நூலகத்தில் சுமார் 30 பக்கங்களுக்குள் இருந்த ஒரு மிகச் சிறிய புத்தகம் என்னை  அதிர்ச்சி இன்பத்திற்குள்ளாக்கியது. சிலப்பதிகாரத்தில் உள்ள வட்டப்பாலைப் படத்துடன் ‘இசை விதி -> 1800 ->  பிரம்ம மேள பிரமாணம்’ -  தஞ்சை தன்ராஜ்’   என்பதை தலைப்பாகக் கொண்டு அப்புத்தகம் என்னை ஈர்த்தது. உடனே எடுத்து படித்தேன். 

அப்புத்தகத்தில் சிலப்பதிகாரத்தில் உள்ள வட்டப்பாலை முறை, மேற்கத்திய இசை முறை, மேளகர்த்தா ராக அமைப்பு உள்ளிட்ட கர்நாடக இசை ஆகியவற்றினை பற்றிய அரிய ஆராய்ச்சி முடிவுகள் இருந்தன. இப்படிப்பட்ட அரிய நூலை பதிவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, , எனது முனைவர் பட்ட ஆய்வில் அந்நூலைக் குறிப்பிட்டுள்ளேன். அதன் பின் அவரைப் பற்றி நான் கேள்விப் பட்டவற்றை கீழே தொகுத்து குறிப்பிட்டுள்ளேன். இவை எந்த அளவுக்கு நம்பத் தகுந்தவை என்பதை இனிவரும் ஆய்வுகள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

1. தஞ்சை மாவட்டத்தில் ஒரு கிறித்துவ பாதிரியரால் அனாதையாகக்(orphan) கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்.
2. இசையில் நிபுணராகும் அளவுக்கு அவர் பெற்ற இசை தொடர்பான கல்வி பற்றி எந்த தகவலும் இல்லை.

3. சென்னை மைலாப்பூர் தெப்பக்குளம் எதிரேயுள்ள சாய் லாட்ஜில்(Sai Lodge)  பிரம்மச்சாரியாக, சாகும் வரை ஒரு அறையில் வாழ்ந்து, இசை வகுப்புகள் நடத்தி வந்துள்ளார்.

4. இளையராஜா, ஏ, ஆர், ரகுமான் உள்ளிட்ட இசை அமைப்பாளர்கள் அவரிடம் இசை பயின்ற மாணவர்களில் அடங்குபவர் .

5. குடிப்பழக்கம் உள்ளவர். விஸ்வநாதன்‍ - ராமமூர்த்தி திரை இசையில் கொடி கட்டி பறந்த காலத்தில்,  இரவில் அவரது அறைக்கு சென்று,  ' ஸ்காட்ச் விஸ்கி'(scotch whisky)  பாட்டிலைக் கொடுத்து, அவரிடம் இருந்து, இசை நோட்ஸ்களைப்(Music Notes)  பெற்று தமது திரை இசையில் பயன்படுத்தியுள்ளனர்.

6. இளையராஜா பிரபல திரை இசை அமைப்பாள‌ரான பின்னரே அவர் மறைந்தார். அவரது இறுதிச் சடங்குகளை தமது செலவில் இளையராஜா செய்து முடித்து, அவர் அறையிலிருந்த 'அனைத்தையும்' தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

7. அவர் இசை தொடர்பாக எழுதிய குறிப்புகள் பற்றி இளையராஜா எதையும் வெளிப்படுத்தவில்லை. அதைப் பற்றி பேசுவதையும் விரும்புவதில்லை.

8. அவரின் இசைக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டே இளையராஜா திரை இசையில் கொடி கட்டி பறந்தார். அவை முடிந்தவுடன், அவர் 'ஹிட்'(Hits) பாடல்கள் கொடுப்பதும் முடிந்து விட்டது.

திருவாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன்,இளையராஜா,ஏ.ஆர்.ரகுமான் போன்று அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தான்,  மேலேக் குறிப்பிட்டுள்ளவை எந்த அளவுக்கு சரி, அல்லது தவறு என்று தெளிவுபடுத்த வேண்டும்.  

தன்ராஜ் பற்றிய எனது முயற்சிகளைப் பற்றி கேள்விப்பட்ட பத்திரிக்கையாளர் நாகார்ஜுனன் (பெயர் எனது நினைவில் உள்ளபடி) சென்னையில் மாநிலக்கல்லூரியில் நான் பணியாற்றிய காலத்தில் என்னை சந்தித்தார். தன்ராஜின் இசைக் குறிப்புகள் என்னிடம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டார். நான் உ.வெ.சா நூலகத்தில் படித்த அந்த புத்தகத்தைப் பற்றி சொன்னேன். இளையராஜவிடம் அது பற்றிய தகவலைப் பெற பலர் முயன்றும் ஒன்றும் பலனில்லை என்று வருத்தத்துடன் என்னிடம் சொல்லி, விடை பெற்றார்.

தமிழ்நாட்டில் மேற்கத்திய இசை, கர்நாடக இசை, தமிழ் இசை பற்றிய ஆழ்ந்த புலமையுடன் வாழ்ந்து மறைந்த இசை வல்லுநர் அவர். உ.வெ.சா நூலகத்தில் உள்ள அந்த புத்தகம் மட்டுமே அதற்கான சான்று. கூடுதல் சான்றுகளை அவரிடம் இசை ப‌டித்த மாணவர்களும்,தொடர்பில் இருந்தவர்களும் தான் வெளிப்படுத்த வேண்டும். அது 'குருவிடம்' காண்பிக்க வேண்டிய நன்றியுமாகும்.

தன்ராஜின் இசைக்குறிப்புகள் கிடைத்து, அவற்றை புத்தகமாக வெளியிடும் முயற்சியில் யாரேனும் ஈடுபட்டால், அவற்றைத் தொகுத்து தரும்(Editing)  பணியை எந்த கட்டணமுமின்றி (without remuneration) நான் செய்து தர விரும்புகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்


(Reproduced without  any amendment or modification.  The writer and not the Blogger Sivamala is responsible for the contents. Any query or objection is to be referred to the writer. Blogger Sivamala excludes any liability)

சனி, 28 ஜூன், 2014

chimpanzees like Indian music.


மரத்தினில் வாழ்கின்ற மாந்தற்போலி == அதன்
மனத்திற்கே தேனாகும் நம் நாட் டிசை.
உரத்தவோர் வாயொலி பல்லியத்தின்  == மேல்
உலகத்தின்  நல்லிசை கொள்ளாததாம்!

இந்திய நல்லிசை காணியற்கை ‍‍== தன்னை
எடுத்துள் வளர்த்திய பேரிசையே!
வந்திதைச் சொன்னார் அறிவியலார் ‍‍‍== அவர்
வாயுரை தந்தது பேருண்மையே.



மாந்தற்போலி --- மனிதன் போன்ற பெரிய குரங்குகள். பல்லியம் - பல வாத்தியங்கள்  அவற்றின் கருவிகள்.
"செல்லாற்றுக் கவலை பல்லியங் கறங்க" --- குறுந்தொகை 263.
எடுத்துள் வளர்த்திய  -  மேற்கொண்டு உட்பெய்து  வளர்ச்சி பெறச் செய்த.


Chimps prefer African, Indian tunes over strong beats ty...
While preferring silence to music from the West, chimpanzees apparently like to listen to the different rhythms of music from Africa and India, according to new res...
https://us-mg5.mail.yahoo.com/neo/launch?.rand=bjtfp0j39l0b6#412832436

வெள்ளி, 27 ஜூன், 2014

Amma pharmacies.

அம்மா மருந்தகங்கள் ‍‍‍‍‍‍===  நல்லா
னந்தம் பொருந்திடவே,
எம்மா நிலத்துமில்லா === வெல்லம்
இடும்நற் கலத்தினில்பால்.

ஏழை எளியமக்கள் ‍‍‍‍‍‍=== நோய்
எரிவில் மருந்தின்றியே,
வீழு நிலையகற்றி  ‍‍=== விடி
வெள்ளியுள் உய்ப்பதுவாம்.


வெல்லம் இடும்நற் கலத்தினில்பால்  -   இனியது ,  சிறப்பானது.
எரிவில் -  மிகுதியில் ; உச்சத்தில்


Chennai: After Amma canteens, water and salt, Tamil Nadu Chief Minister Jayalalithaa is all set to launch Amma pharmacies on Thursday.
The state government plans to launch 10 such pharmacies across Chennai and 90 in the rest of the state. These medical shops will sell medicines at a subsided rate to the general public.
The government has allotted Rs 20 crore for this project.
Jayalalithaa to launch Amma pharmacies in Tamil Nadu today

Jayalalithaa's canteens are a big hit in the state




__._,_.___



வியாழன், 26 ஜூன், 2014

திறந்திடலாம் அந்த நாட்டில்

குழும்புகளைத் திறந்திடலாம் அந்த நாட்டில்,
கோணலாகி வீழ்ந்துவிட்டால்  அடைக்க லாமோ?
குறும்புமிகு சிலவிதிகள் கூடிப் போக‌
குத்திவீழ்ந்த வணிகருக்குத் தொல்லை தொல்லை!
வரம்புகளே அதிகமையா அங்கு  போனால்
வழியொன்றும் கிட்டாது குழிக்குள் மாட்டி
திரும்புவது யாங்ஙனமோ திகைத்து நிற்பீர்
தீரஎண்ணிச் செயல்படுவீர் நலமே கொள்வீர்.


குழும்பு = கம்பெனி.

ஏதேனும் தொழிலொன்று செய்தல் எண்ணி,
இனிதான இடமென்றும் மனத்தில் எண்ணி,
காதினிலே நல்லோரும் சொன்னார் மீறிக்
கடைமுனையின் தீவினைநீர் விரைந்து  நண்ணி
யாதெனவே ஆயாது குழும்பு கொண்டீர்
பாதியிலே நட்டமெனின் யாது செய்வீர்?
ஓதினரே ஆய்ந்தியல்வீர் உண்மை காண்பீர்
ஆய்வதற்கு நிகரில்லை அறிந்து கொள்வீர்.

கலை­­­­­­­ம­­­­­­­கள் என்று அழைக்­­­­­­­கப்­­­­­­­படும் திருமதி சாவோ ஜியாங்


உலகின் அருமை­யான மொழி யான தமிழ்மொழியின் பயன் பாட்டை புதிய

 முயற்சிகளைத் தீவிரமாக தொடரப்போவதாக சீன அனைத்­­­­­­­து­­­­­­­லக வானொலி

 தலை­­­­­­­வி திருமதி சாவோ ஜியாங் சூளுரைத்து இருக்கிறார்.


கலை­­­­­­­ம­­­­­­­கள் என்று அழைக்­­­­­­­கப்­­­­­­­படும் திருமதி சாவோ, நேற்று தொடங்கிய

 சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாட்டில் ‘எல்லை­­­­­­­கள் கடந்த தமிழ் இதயம்’
என்ற தலைப்பில்  (தமிழில் )   உரையாற்றினார். சீனத் தகவல் தொடர்பு பல்­கலைக்­க­ழ­கத்­தில் 1995ஆம் ஆண்டில் தமிழ்மொழியைப்  பயிலத் தொடங்­கி­ய­தாகத் தெரிவித்த கலைமகள், அப்போது தமிழ் மொழியில் தமக்கு அதிக
நாட்டம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

“தொடக்கத்தில் தமி­ழி­லுள்ள ழ,ள,ல போன்ற எழுத்­துக்­களை உச்­ச­ரிப்பது சிரமமாக இருந்தது.  தமிழில் எழுத்­துக்­களின் மொத்த எண்­ணிக்கையைப் பார்த்து தயக்­க­மும் ஏற்பட்டது"

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்.  23.6.14

சிங்கப்பூர் தமிழ் முரசு  நன்றி

http://tamilmurasu.com.sg/story/38949

திங்கள், 23 ஜூன், 2014

Rushing for food in temple events

பூசைகளில்  அவிசேகம் ஆராதனை === அங்கு
புகுந்துசோ றுண்டாலும் புண்யம்  கிட்டும்! ‍‍‍=== நம்
நேசர்களும் இடையூறும் பலவுண் டேனும்=== நின்று
நேர்படுவார் அவர்மகிழ்வு நம்மானந்தம்.

வரிசைவழி காட்டுகிற காவ லாளர் ‍‍‍‍=== இவர்
வார்த்தைகளை நாம்மதித்தல் கடமையன்றோ?
புரிந்துணரா மக்கள்போல் உடைத்துக் கொண்டு=== அங்கு
புசிப்பதற்கே முண்டியடித் தோடல் நன்றோ?

பண்பாடு நமக்குண்டு காத்துக்  கொள்வோம்=== ‍‍எதிலும்
பகிர்ந்துண்போம் வயிற்றுக்கோ அடிமை ஆவோம்?
தன்பாடு தானுண்டே உலகம் இல்லை ‍‍‍=== என்றே
உண்பேனென் றோடுவது "புன்பாடு" என்போம்.

புன்மை  + பாடு =  புன்பாடு !  புன்மை படுதல் . 

ஞாயிறு, 22 ஜூன், 2014

வீரமா காளியம்மை நேரில் வந்தாள்

சிங்கப்பூரில்  வீரமாகாளியம்மன் ஆலயத்தில்  22.6.2014lல்   கும்ப நீராட்டு நிகழ்ந்தது. .....(கும்பாபிஷேகம்). அதுபற்றிச் சில வரிகள்.
இவ்வாலயம் சிறப்பாக எடுத்துக் கட்டப்பெற்றுள்ளது.


வீரமா காளியம்மை நேரில் வந்தாள்
தீருமினி வேதனைகள் பேரே ஓங்கும்!
சீரங்கு விளங்கும்சீ  ராங்கச் சாலை
சேருபல தெருக்களிலும் கூறும் நாமம்
வீறுடனே வான்முட்டும்!   நீறும் பூசி
யாரும்கை கூப்பிடவே யாழே போல‌
ஊறுமிசை! உயர்முழுக்கு, கும்பம் காணும்.
மாறிலதாம் மங்கலமே சிங்கை தன்னில்.

குறிப்பு:  பெரும்பாலும் எதுகைகளை வைத்தே இது .புனையப்பட்டுள்ளது மாறிலதாம் =  மாறுபாடில்லாத .

அடுத்துவரும் இடுகையும் இவண் யாகசாலையில் வெளியில் நடந்தது பற்றியது ஆகும். 

வெள்ளி, 20 ஜூன், 2014

Ph.D., dedicated service, no promotion!

You may read about this Tamil scholar:

://www.deccanchronicle.com/140530/nation-current-affairs/article/tamil-scholar-left-high-and-dry

To secure a promotion, a PhD is not enough!!

"காரர்கள்" : வேலைக்காரன், வண்டிக்காரன், etc etc

வேலைக்காரன், வண்டிக்காரன், சண்டைக்காரன், குடும்பக்காரன் என்று "காரர்கள்" பலருளர்.  காரன் என்பதென்ன?

காரன் என்றொரு சொல், அகரவரிசைகளில் காண்பதரிது.   அது ஒரு தனிச்சொல் அன்று.

கருத்தல் = செய்தல் என்னும் பொருளில் ஒரு பழங்கால் வினைச்சொல் இருந்ததென்றும் அதனின்று கருவி, காரியம், காரணம் முதலிய தோன்றினவென்றும், பின் அது வழக்கொழிந்தது என்றும் மொழிஞாயிறு  தேவ நேயப் பாவாணர் மீட்டுருவாக்கம் செய்து  கூறியுள்ளார். எனவே காரன் என்பதும் கரு என்னும் சொல்லினின்று பிறந்து செய்வோன் என்னும் பொருளில் வழங்கி வந்துள்ளது என்று கூறலும் கொள்ளற்குரித்தே.

ஆயினும், நாம் வேறு வழியில் இஃது அமைந்திருக்குமா என்று  பார்க்கலாம்.

வேலைக்காரன் <  வேலை+ கு+  ஆர் + அன்.
இதில் அன் என்னும் ஆண்பால் விகுதியை எடுத்துவிட்டுப் பார்த்தால்:

வேலை + கு + ஆர்.

வேலைக்கார் என்றாகிறது.  ஆர் என்ற பலர்பால் விகுதி,  அவர் என்பது அதன்  பொருள்.  அர், ஆர் இரண்டும் அத்தகையனவாகும்.

ஒரு வாக்கியத்தின் சுருக்கமே அது.  உண்மையில், வேலைக்கு அவர், சண்டைக்கு அவர் என்று சொல்வதே அதுவன்றி மற்றில்லை.

பின் ஆர் என்பது பன்மை எனல்  மறந்து, மீண்டும் அதன்பின் ஓர் ஆண்பால் அல்லது பெண்பால் ஒருமை விகுதியைச் சேர்த்தனர். அது ஒருமை‍பன்மை ஒருவித "மயக்கம்". வழு எனினும் அமைந்துவிட்டபடியால், இலக்கணம் ஏற்கும் ‍ அது வழுவமைதி எனப்படும்.

தகப்பன் என்ற ஒருமையில், ஆர் விகுதி சேர்த்து தகப்பனார் என்று மரியாதைப் பன்மையில் கூறுவதும் வழுவமைதியே.

கு என்ற உருபு பற்றித் தனியே எழுதவேண்டும். இங்கு வேண்டாம்.

ஆக, காரன் என்பது பிறழ்பிரிப்பினால்  metanalysis.  விளைந்த சொல். 

வியாழன், 19 ஜூன், 2014

தை மாதம்.



 இம்மாதத்துக்கு ஏன் இப்பெயர் வந்ததென்று இங்கு ஆய்வோம். மார்கழியும் தையும் முன்பனிக்காலம். தைத்தல் ‍ இணைப்பு என்று பொருள்படும சொல் என்பது முன் பதிந்த இடுகைகளிற் கூறப்பட்டது. முன்பனிக் காலத்தில் மார்கழி தையுடன் இணைந்து வரும் மாதமாகையால்,  இணை  வரும் மாதம் என்னும் பொருளில் தையென்றனர்.

"முன்பனியாகிய மார்கழியும் தையும் தொடர்ந்தாற்போல..." என்பது நச்சினார்கினியர் உரை.  (தொல். அகத்திணையியல் )

"பின்பனிதானும் உரித்தென மொழிப" (தொல்,40. அகத்தினையியல்.)


இனி பூக்கள் பூத்துக்குலுங்கி  மனத்தினில் ஓர் இணைப்பினை ஏற்படுத்தும் மாதம் எனினும் ஆம்.

முருகனுக்கு உகந்த மாதமாய்   பற்றாளனோடு இறைவன் ஓர் இணைப்புக் கொண்டு அருள்புரியும் மாதமெனினும் ஆம். பொங்கல் பண்டிகை குதூகலம் தரும் நாட்கள் கொண்ட மாதமெனினும் ஆம்.

இவற்றுள் ஒவ்வொன்றுக்காகவும் ஒருசேர அனைத்துக்காகவும் இணைப்பினைத் தரும் நன்மாதம்  என்றும் கூறுதலும் பொருத்தமே.

மொத்தத்தில் தை எனின்  இணைப்பு ஆகும். அதுவே சொல்லாக்கத்து அடிப்படைக் கருத்து.

தொடர்புடைய இடுகைகள்:

thairiyam

http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_27.html

thairiyachAli


 thaivaruthal

பக்கணம் பட்சணம்

பட்சணம் என்பது  காண்போம்.  இலையில் சோறு, குழம்பு முதலானவற்றுக்குப் பக்கத்தில் வைக்கப்படுவது பக்கணம் >  பட்சணம்.

பகு+ அம் = பக்கம்.
பகு+ அணம் = பக்கணம்.

பின் பக்கணம் > பச்சணம் > பட்சணம் ஆயிற்று.

அணம் என்பது ஒரு விகுதி.  கட்டு+ அணம் ‍  =  கட்டணம் போல அணம் என்னும் விகுதி பெற்றது பக்கணம்.

அணம் என்னும் விகுதி அண் என்னும் அடியிற்றோன்றியது.

அண் >  அண்மு(தல்.)
அண் >  அண்மை.
அண் >  அணிமை.
அண்  >  அண்டுதல்,  அண்டை.
அண்  > அணு
அண்  >  அணுகு(தல்)
அண் > அண்டி (பழத்தை அடுத்திருப்பதாகிய முந்திரிக் கொட்டை)

எனப்பல


அண்டா:    ‍ ஆக்கியவற்றை  கொட்டிவைக்க  அடுப்புக்கு அண்டையில் வைக்கப்படும் பெரிய பாத்திரம்.  பின்  அண்டாவும் ஆக்கப் பயன்பட்டது,

விகுதிகள் ஆதியிற் பொருளுடன் நின்றவை எனினும் பின்  தம் பொருளிழந்து வெறும் சொல்லாக்கத்துக்குப்  பயன்பட்டுள்ளன, அதனால் சொற்கள் பல்கிட வழியேற்படலாயிற்று.

பச்சை  என்பது இங்கு காய்கறிகளைக்  குறிக்கும் என்றும்  "அணம்" பின்னொட்டுப் பெற்று பச்சணம் ஆகி, பின் பட்சணம் ஆயிற்று  என்பாரும் உளர்.

இப்போது  பச்சணம்  (பட்சணம்)  பலவகை உணவுகளையும் குறிப்பதாக விரிந்துள்ளது.  எ-டு :  கேரளீய பட்சணம்  .Here   they meant Kerala Cuisine or kinds of kerala food.

புதன், 18 ஜூன், 2014

பச்சடி



இந்தச் சொல் பேச்சு வழக்கில் மக்கள் புனைந்த சொல்.  சொல்லை அணுகும் போதே  இது புலவர் புனைவன்று எனத் தெரிகின்றது.

பச்சை + இடி என்ற இரு சொற்களால் ஆனது இது.  சை என்பதில் உள்ள ஐகாரம் குறுகி. (கெட்டு )   ச் என நிற்கவே, பச்(ச்+ஐ)  > பச்ச்  என்றாகி, இடி சேர்ந்து பச்(ச்+இ)டி என்று இணைந்து, பச்சிடி ஆனது. பிறகு வாயொலிக்க  வசதியாக, பச்சிடி இறுதியில் பச்சடி  ஆயிற்று. ஐகாரத்தின் இடத்தை மாத்திரை (ஒலியளவு ) குறைந்த இகரம் மேற்கொண்டது.

புலவர் நோக்கில், பச்சை + இடி = பச்சையிடி > பச்சயிடி >  பச்சடி  எனவாகி, ஐகாரம் குறுக. யகர உடம்படு மெய ஏறிய இகரம் ஒழிந்தது என்று கூறுதல் ஒரு கலையே ஆகும்.

சொல்லாக்கதில் பயன்பட்ட சொல், அடி என்பதினும் இடி என்பதே உண்மை நிலையைக் காட்டுவது, ஏனென்றால்,  இது முன்பு இடித்துச் செய்யப்பட்டவற்றையே குறித்துள்ளது.கெட்டுவிடாமல் இருப்பதற்காகப்  பின் சூடு காட்டப்பெற்று,  நாளடைவில் வேகவைத்துச் செய்யப்பெறுவ   தாயிற்று.

தமிழில் ஐகாரம் குறுகுதல் தொல்காப்பியர் முதலான நம் இலக்கணப் பெரியோர் கண்டு ஓதிய ஒன்றே ஆம். 

திங்கள், 16 ஜூன், 2014

ரசம்

இப்போது நாம் தினமும் அருந்தும் "ரசம் " பற்றி ஆய்வோம்.  இந்தச் சொல்  சமஸ்கிருதத்திலும்  மலாய் மொழியிலும் கூட உள்ளது.

"rasa sedap"   -சுவையாக உள்ளது என்று மலாயில் வரும் .. saya rasa......  I feel ....என்று மனவுணர்வும் குறிக்கும்.

அரை (அரைத்தல்)  >  அரையம் >   அரயம்  >  ரசம் .

சில மூலிகைகள்  அரைத்துக் கொதிக்கவைத்துச்  சாறு எடுக்கப்பட்டு  அதுவே ரசம் எனப்பட்டது. அரைக்காமல் கொதிக்கவைத்து எடுக்கப்பட்ட சாறும்,  இதில் அடக்கப்பட்டது.  (இது பொருள் விரிபாடு  ஆகும். extension  of meaning. )

முடக்காத்தான் முதலியவை அரைத்துக்  கொதியூட்டிச்   சாறு எடுக்கப்படும் .

ரை  என்பது ர ஆனது ஐகாரக்குறுக்கம். யகரம் சகரம் ஆவது முன் கூறப்பட்டுள்ளது.

நவரசம் - தொண்சுவை  என்று தனித்தமிழில் தரப்படும்.

ரசம் என்பது பேச்சு வழக்கில் வந்த  அடுக்களைச் சொல்.  தலையிழந்தது .

ஞாயிறு, 15 ஜூன், 2014

compulsory Tamil situation in Tamil Nadu


Chennai: Despite taking a pledge to compulsorily teach Tamil as main language in 2006, several private schools in Tamil Nadu continued to teach other languages keeping the students in the dark.
Officials in the directorate of matriculation schools say  they have already informed the schools and even got the declaration form signed by school authorities that they would comply with the norms.
The Tamil Nadu Tamil learning Act (2006) made Tamil a compulsory language to be taught in schools starting from 2006-07 academic year. And students who joined class 1 in 2006 academic year had to take up Tamil as a mandatory subject. Schools, which failed to follow the norm, have put the students at risk now. On condition of anonymity, a senior school education department official told DC that it was a gross violation by schools, which have not taught Tamil as main language. “The government had informed them and asked them to send the declaration form. We have copies of several schools who have signed the forms,” said the official.
Speaking to DC, S. Arumainathan, state president, Tamil Nadu students parents welfare association, said, “The private schools have approached the high court only to save themselves from parents.
The schools cannot claim to be ignorant of the Act. They have given in writing that they would oblige the norm laid by the government. It is now the responsibility of schools to answer the parents.”
He added that these schools are worried about answering the parents as the students who studied other languages would not be allowed to take class 10 exams in the next academic year, 2015-16.
Sukumar Jaisingh, member of the Association of Matriculation Schools and Managements in TN and Pudhucherry, the association which moved the court against teaching Tamil as compulsory language,  said, "We are not against teaching Tamil. But considering the inconvenience of students we are forced to teach the language, which they are comfortable with. Moeover, we did not receive any letter from the school education department in 2006 making  Tamil a compulsory language."

ரம்பம் (saw)

ரம்பம்   என்பது அழகான ஒரு தமிழ்ச்சொல்லின் திரிந்த வடிவம்.

அறு > அறம்பு > அரம்பம் > ரம்பம்.

இதில் அறு  : பகுதி.  அம், பு, மீண்டும் அம் என்பன சொல்லாக்க விகுதிகள்.

நிலையம்:  நில் + ஐ + அம்  (இரு விகுதிகள்).  ரம்பத்தில் 3 விகுதிகள்.

று, ற என்பன ரகரமாய் மாறியது எப்படி?

கரு > கறு;  கருப்பு > கறுப்பு  என்பவை காண்க.

ரம்பத்தில் அறுத்தல் அடிச்சொல்.

பார்வை ஒன்றே போதுமா ? என்கிறார் தொல்காப்பியனார். "மொழிபொருள் காரணம்  விழிப்பத் தோன்றா"  என்கிறார்.

சனி, 14 ஜூன், 2014

சேமித்தல்

சேமித்தல் என்ற சொல், சேர் என்பதனடியாகப் பிறந்த சொல்லே ஆகும். சேமித்தல் அமைந்த விதமாவது:

சேர் > சேர்மி  > சேமி >  சேமித்தல்,  (ரகர  மெய் மறைவு)

இதேபோல் நேமித்தல்   என்பதும்.

நேர் >  நேர்மி  >  நேமி >  நேமித்தல்.  இதுபின் நியமித்தல் என்று திருத்தி அமைக்கப்பட்டது.  நில் > நி > நிய > நியமி  > நியமித்தல் என்றும் கூறுப.

ஒரு > ஒருமி > ஒருமித்தல்  இது ஓர்மித்தல் என்று வராத காரணம், மிகரத்தின் முன், ஒரு என்பது ஓர் என்று  திரியாது.

நில் > நிரு > நிருமி > நிருமித்தல்.( நிற்கச்செய்தல்,  நிறுவுதல்.) /*

லகரம் <> ரகரம் ஒன்று மற்றொன்றாகத் திரியுமென்பதை மறக்கலாகாது. பல மொழிகளில் இது இயல்பு.


*இதை வேறு விதமாகக் கூறுவதாயின் :
நில் > நிலுமி > நிருமி > நிருமித்தல்.
இது இன்னோசை கருதிய திரிபு மட்டுமன்று,  லு> ரு திரிபு முறைப்படியானதும் கூட.  நில்>  நிலுவை என்பது காண்க. இது நிருவை என்று திரியின், நிறுவை  என்பதனுடன் குழம்பக் கூடும் (  மயங்குதல்).

ஒ ..நோ

நிலு >  நிரு    (மேற்படி )
கலு   >  கரு (  கலுழன் >  கருடன்  )

வெள்ளி, 13 ஜூன், 2014

செம்முடிச் சீனப் பெண்கள்

செம்முடியாய் வேண்டுமென்று சீனப் பெண்கள்
சென்றுபணம் செலவாக்கி மாற்றிக் கொண்டு
தம்பணிக்குப் போகின்ற நேர்த்தி  தன்னைத்
தரணிபடைத் தோனும்கண் டயர்ந்து போவான்!
அம்மணியே உம்மழகும் அணிகள் தாமும்
அழகழகே என்றுபுகழ்ந்  துயர்த்தி விட்டால்
இம்முடியே நிரந்தரமென் றிருத்திக் கொள்வார்
இனியதொரு சிட்டு நடை நடந்து செல்வார்.

செம்முடி பற்றிய மரபணு ஆய்வு முடிவை இங்குக் காண்க .http://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_13.html

Note:  Sorry the server was down from 10.00 p.m. to  abt 11.59 p.m. as I was trying to insert the link address.







How did they get blond hair? Genetic Study

Single-letter change in the genetic code is enough to generate blond hair in humans, in dramatic contrast to our dark-haired ancestors. A new analysis by Howard Hughes Medical Institute (HHMI) scientists has pinpointed that change, which is common in the genomes of Northern Europeans, and shown how it fine-tunes the regulation of an essential gene.
"This particular genetic variation in humans is associated with blond hair, but it isn't associated with eye color or other pigmentation traits," says David Kingsley, an HHMI investigator at Stanford University who led the study. "The specificity of the switch shows exactly how independent color changes can be encoded to produce specific traits in humans." Kingsley and his colleagues published their findings in the June 1, 2014, issue of the journal Nature Genetics.
Kingsley says a handful of genes likely determine  in humans, however, the precise molecular basis of the trait remains poorly understood. But Kingsley's discovery of the genetic hair-color switch didn't begin with a deep curiosity about golden locks. It began with fish.
For more than a decade, Kingsley has studied the three-spined stickleback, a small fish whose marine ancestors began to colonize lakes and streams at the end of the last Ice Age. By studying how sticklebacks have adapted to habitats around the world, Kingsley is uncovering evidence of the molecular changes that drive evolution. In 2007, when his team investigated how different populations of the fish had acquired their skin colors, they discovered that changes in the same gene had driven changes in pigmentation in fish found in various lakes and streams throughout the world. They wondered if the same held true not just in the numerous bodies of water in which sticklebacks have evolved, but among other species.
Genomic surveys by other groups had revealed that the gene – Kit ligand – is indeed evolutionarily significant among humans. "The very same gene that we found controlling skin color in fish showed one of the strongest signatures of selection in different human populations around the world," Kingsley says. His team went on to show that in humans, different versions of Kit ligand were associated with differences in skin color.
Furthermore, in both fish and humans, the genetic changes associated with pigmentation differences were distant from the DNA that encodes the Kit ligand protein, in regions of the genome where  lie. "It looked like regulatory mutations in both fish and humans were changing pigment," Kingsley says. Kingsley's subsequent stickleback studies have shown that when new traits evolve in different fish populations, changes in regulatory DNA are responsible about 85 percent of the time. Genome-wide association studies have linked many human traits to changes in regulatory DNA, as well. Tracking down specific regulatory elements in the vast expanse of the genome can be challenging, however. "We have to be kind of choosy about which regulatory elements we decide to zoom in on," Kingsley says. "We thought human hair color was at least as interesting as stickleback skin color." So his team focused its efforts on a human pigmentation trait that has long attracted attention in history, art, and popular culture.
Kit ligand encodes a protein that aids the development of pigment-producing cells, so it made sense that changing its activity could affect hair or . But the Kit ligand protein also plays a host of other roles throughout the body, influencing the behavior of blood stem cells, sperm or egg precursors, and neurons in the intestine. Kingsley wanted to know how alterations to the DNA surrounding this essential gene could drive changes in coloration without comprising Kit ligand's other functions.
Catherine Guenther, an HHMI research specialist in Kingsley's lab, began experiments to search for regulatory switches that might specifically control hair color. She snipped out segments of human DNA from the region implicated in previous blond genetic association studies, and linked each piece to a reporter gene that produces a telltale blue color when it is switched on. When she introduced these into mice, she found that one piece of DNA switched on gene activity only in developing hair follicles. "When we found the hair follicle switch, we could then ask what's different between blonds and brunettes in northern Europe," Kingsley said. Examining the DNA in that regulatory segment, they found a single letter of genetic code that differed between individuals with different hair colors.
Their next step was to test each version's effect on the activity of the Kit ligand gene. Their preliminary experiments, conducted in cultured cells, indicated that placing the gene under the control of the "blond" switch reduced its activity by about 20 percent, as compared to the "brunette" version of the switch. The change seemed slight, but Kingsley and Guenther suspected they had identified the critical point in the DNA sequence.
The scientists next engineered mice with a Kit ligand gene placed under the control of the brunette or the blond hair enhancer. Using technology developed by Liqun Luo, who is also an HHMI investigator at Stanford, they were able to ensure that each gene was inserted in precisely the same way, so that a pair of mice differed only by the single letter in the hair follicle switch—one carrying the ancestral version, the other carrying the blond version.
"Sure enough, when you look at them, that one base pair is enough to lighten the hair color of the animals, even though it is only a 20 percent difference in gene expression," Kingsley says. "This is a good example of how fine-tuned regulatory differences may be to produce different traits. The genetic mechanism that controls blond hair doesn't alter the biology of any other part of the body. It's a good example of a trait that's skin deep—and only skin deep."
Given Kit ligand's range of activities throughout the body, Kingsley says many such regulatory elements are likely scattered throughout the DNA that surrounds the gene. "We think the genome is littered with switches," he says. And like the hair color switch, many of the regulatory elements that control Kit ligand and other genes may subtly adjust activity. "A little up or a little down next to key genes–rather than on or off–is enough to produce significant differences. The trick is, which switches have changed to produce which traits?
"Despite the challenges, we now clearly have the methods to link traits to particular DNA alterations. I think you will see a lot more of this type of study in the future, leading to a much better understanding of both the molecular basis of human diversity and of the susceptibility or resistance to many common diseases," Kingsley said.


More information: Paper: dx.doi.org/10.1038/ng.2991

வியாழன், 12 ஜூன், 2014

அம்மா உப்பு ம் அதிகம் விற்றிட

அம்மா  உப்பு ம்   அதிகம்  விற்றிட 

இம்மா நிலத்தின் துயரும்  அற்றிட 

எம்மான் சிவனருள் யாவரும் பெற்றிட 

தென்மா  நிலங்கள்  செழித்து 

ப ன்மா வளமும் பயில்கஇவ்  வுலகே

-----சிவமாலா    அகவற்பா 

Three varieties are up for open market sale under the ‘Amma Salt brand – Double Fortified Salt, Refined Free Flow Iodised Salt and Low Sodium Salt.

Buoyed by success of ‘Amma Drinking Water’ and ‘Amma Unavagams,’ the government has come out with ‘Amma Salt,’ an affordably priced quality common salt made by the Tamil Nadu Salt Corporation (TNSC) for the benefit of the weaker sections. Chief Minister Jayalalithaa will launch the scheme on Wednesday.
Sources in the TNSC told The Hindu that three varieties are up for open market sale under the ‘Amma Salt brand – Double Fortified Salt, Refined Free Flow Iodised Salt and Low Sodium Salt. While the double fortified variety is priced at Rs. 14 a kg, against the open market price of Rs. 21, the refined free flow variety costs Rs. 10, against the market price of Rs. 14 to Rs. 20. The Low Sodium Salt costs Rs. 21, against the private players’ price of Rs. 25.
The sources claim that the double fortified variety is not freely available in the open market in the South. While this salt helps those with anaemic and goitre disorders, the refined free flow salt helps those with hypothyroidism and the low sodium salt is a boon for those enduring blood pressure variations and cardiac conditions.
All varieties would be marketed in powdered form in attractive packs under the aegis of the TNSC, which is, for the first time, vending through the open market. Already it is canalising salt sale through the Public Distribution System outlets.
The corporation would ship ‘Amma Salt’ from its manufacturing base at Valinokkam pans in Ramanathapuram district in the initial stage and later venture into large scale manufacturing based on the future demand.
In a radical idea tailored to meet the market demand for fair price salt, the corporation plans to appoint wholesale dealers in all districts.
Official sources expressed the hope that the product would be a hit on the lines of the ‘Amma Drinking Water’ and Amma canteens.



"சேகரித்தல் "

இனிச்  "சேகரித்தல் " என்ற  சொல்லைப் பார்க்கலாம்.

இதில் கரித்தல் என்பதைப் பின் ஆய்வு செய்யலாம். இதற்குத்  இப்போது "செய்தல்"  என்று மட்டும் வைத்துக் கொள்வோம்.

முன் நிற்கும் சே என்பதென்ன?  அது சேர் என்பதன் திரிபு  ஆகும்.

சேர்கரித்தல்  >  சேகரித்தல்.

இதேபோல்  சேர்மித்தல்   திரிந்து  சேமித்தல் ஆயிற்று.

ர்  இடையில் வரும் சொற்கள் சேக்கிறது  பாக்கிறது  என்று  பேசப்படுவது காண்க.

"அங்கிகரித்தல்" அடுத்து நாம் கண்பதாகும். 

புதன், 11 ஜூன், 2014

ரங்கசாமி ரங்கன்

பழங்காலத் தமிழர்களுக்கு  ர ரா ரி ரீ வரிசையில் சொற்கள் தொடங்கக் கூடாது.  இது ஏன் என்று தெரியவில்லை. சொல்லுக்கு முதலெழுத்தாக எந்த எந்த எழுத்துக்கள் வரலாம் என்று விதிகள் செய்து அவற்றை அவர்களின் முன்னோர் பின்பற்றி வந்தனர் என்பது காரணமாக இருந்தாலும் அது வரலாற்றுக் காரணமே தவிர அறிவு அடிப்படையிலான காரணமன்று. இப்படிப் பல விதிகளை வைத்துக்கொண்டு தமிழ்ப் புலவன் தள்ளாடிக்கொண்டிருந்ததால்,  தமிழ்ப் புலவனைச் சமாளிக்க, பல சொற்களைப் பிற மொழிகளில் சேர்க்க வேண்டியதானது மட்டுமின்றி,  பல புதிய மொழிகளையும் மாறுபட்டு நின்றோர் படைத்துக்கொள்ளத் தலைப்பட வேண்டியதாயிற்று.

இத்தகைய விதிகள் இனி மாறுபடும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

ரங்கன் என்ற பெயர் கண்டு மேற்கண்டவாறு எழுதுகின்றேன். அந்தச் சொல்லை இப்போது  அணுகி  ஆய்வோம்.

சீரங்கம்  என்று சொல்லப்படும் கோவில், ஆறு இரண்டாகப் பிரிந்து இடையில் இருக்கும் நிலத்தின்மேல் அமைந்துள்ளது.  இவ்விடம் ஓர் அரங்கு மாதிரியானது. அங்கு குடி கொண்டிருக்கும் ரங்கன் உண்மையில் அந்த அரங்கின்மேல் எழுந்துள்ளான்,   அவனை அரங்க சாமி என்றது   மிக்கப் பொருத்தமானது. அரங்கசாமி என்பதை  அரங்கண்ணல் என்றும் பெயர்த்துக் கூறுவர். சாமி என்பதும் அண்ணல் என்பதும் .நிகரானவை.  "அண்ணலும்  நோக்கினான்  அவளும் நோக்கினாள் "  என்று கம்பர் கூறல் காண்க.

நாளடைவில் அது தலையிழந்து ரங்கசாமி  ரங்கன் என்றானது.

சீர்அரங்கம்  (சீரரங்கம்) என்பது தன்  இரு ரகரங்களில்  ஒன்றை இழந்து   சீரங்கம் ஆனது.   பின் இது  ஸ்ரீரங்கம்  என்று அழகாய்  அமைந்தது. 

சென்ற நூற்றாண்டுத் தமிழ்ப்  புலவர்கள் தலைபோன  சொற்கள் சிலவற்றை அறிந்து கூறினர். அவர்களுக்கு நாம் கடமைப் பட்டுள்ளோம். முறையாகச் சிந்திக்காமல்  தமக்குப்  புலப்படாதவற்றையெல்லாம் தமிழல்ல என்றனர் சிலர்.  நிற்க :

அரங்கசாமி  ரங்கசாமி ஆனதை விளக்கியுரைத்தவர் முத்தமிழ்க் காவலர் என்று போற்றப்பட்ட  மறைந்த அறிஞர்  கி. ஆ பெ  விசுவநாதம் அவர்கள்.

அறிந்து இன்புறுவோம்.


பரம்பரை

பரம்பரை என்னும் சொல்லைக் கவனிப்போம்.

பர ‍‍ > பரத்தல்
பர>  பரவுதல்.
பர   பரம்  (பர+அம்).
பர >பரம் > பரமன். (எங்கும் பரவி நிற்பவன், கடவுள்.)
பர  > பரம்பொருள்.
பர >  பரை.  (பர+ஐ).
பர  > பரம் > பரம்பரை.  

ஒவ்வொரு தலைமுறையிலும் பிறப்பினால் தொடர்வது,  தொடர்ந்து பரவுவது.

இந்தச் சொல் பர என்னும் தமிழ் மூலச் சொல்லினின்று பிறந்தது. தமிழ்ச் சொல். வேறு இந்திய மொழிகளிலும் பரவியுள்ளதாகும்.  மகாபாரதத்திலும் பயன்பட்டுள்ளதாகும்.  இது இந்தோ ஐரோப்பியத்தில் உள்ளதாகத் தெரியவில்லை.

சனி, 7 ஜூன், 2014

மசாலை

மசாலை என்ற  தமிழ்ச்சொல் வேறு மொழிகளிலும்  இப்போது பரவி "சேவை " செய்துவருகிறது. மசாலா தோசை மூலம் மசாலா என்ற சொல் சீனர்கள் மலாய்க் காரர்களுக்கும் தெரிகிறது.  கிழங்குப் "பெரட்டல் "  (புரட்டல்)) தோசையின் உள்ளீடாக வைக்கப்படுவதால்  அதுதான் அவர்கள் அறிந்த மசாலா .  மசாலைத் தூள் தயாரிப்பாளர்கள் மூலம் இச்சொல் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் அன்றாட வழக்குச் சொல்லாகிவிட்டது.

மசித்தல் , இது அம்மியில் வைத்து அரைத்து மசிக்கப்  படுவதை குறிக்கிறது.
இப்போது அரைபொறிகள் இவ்வேலைச் செய்கின்றன.

மசி  + ஆல் +  ஐ =  மசாலை. மசித்தலால் குழைவாக்கப்படுவது என்று பொருள்.  ஆல் = கருவிப் பொருளில்  அழகாக  வந்துள்ளது.  ஐ - .விகுதி .

மசாலா என்பது அதன் திரிபு .

தசை

இனித் தசை என்னும் சொல்லை ஆய்வு செய்வோம்.   இது எழுத்துக்கள் முறை மாறி,   சதை  என்றும் அமையும்.  இவற்றில், தசை என்பதே முந்துசொல் என்பதால், அதையே ஆய்வுசெயல் தக்கது. சதை எனற்பாலது அதனின்று திரிந்து அமைந்த எழுத்து  முறைபிறழ்  சொல்.

தசையானது, என்புடனும் நரம்புடனும் தைக்கப்பட்டுள்ளது. தைத்தல் என்பதோ வெனின் இணைத்தற் பொருளதாம்.

முன் தயிர் என்பதனுள் நுழைந்து கண்டோம். தை > தய் > தயிர் என்பது காணப்பட்டது.

அதுவேபோல் தை > தய் > தசு  >  தசை.  இனி, தை > தய் >   தயை > தசை என்றும் ஆகும். இரண்டும்  ஒரே தெருவழித்தான் செல்கின்றன.       இரக்கத்துக்குரியோன்பால் மனம் சென்று தைத்தலும் அல்லது தையுறுதலும்  தை >  தய் > தயை தான். ஆனால்  இந்தத்  தயை உணர்வு,   தசை என்று மாறாது.   நிற்க, சதை குறித்த சொல் "தசை" என்று திரிந்தது,.  தொடர்புடைய எல்லாம் திரியுமாயின் பொருள் குழப்பம் ஏற்படும். மொழிக்கடல் சில அலைகளைச்  சில வரம்புக்குள் நிறுத்திவிடுகிறது. நடுக்கடல் அலைகள் எல்லாம் கரைக்கா வந்துவிடுகின்றன?

இங்ஙனம் தை என்ற அடியிற் பிறந்ததே தசை.

முன்னே கூறப்பட்ட சில திரிபு விதிகளை இங்கு  மீண்டும் கொண்டு  முன் நிறுத்தவில்லை. சுருங்கச் சொல்லல் கருத்தாம்.  For further   information and clarity, please refer to the older posts.

http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_28.html

http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_3822.html

http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_27.html

வெள்ளி, 6 ஜூன், 2014

ஆசை

இனி ஆசை என்னும் சொல்லைச் சற்று நோக்குவோம்.

அழகிய ஒரு பூவினைக் கண்டு மனம் அதன்பால் அசையாதிருக்குமாயின்  அதன்மேல் அம்மனிதருக்கு "ஆசை "  இல்லை என்போம்.  அழகிய பூவிற்கும்  அசைந்து கொடுக்கா மனம்.  அசையுமாயின்  அதுவே ஆசை ஆகும் .

இந்த அசைவைத்தான் "சலனம்"  என்றும் சொல்வார்கள்.

படு என்ற வினைச்சொல் நீண்டு "பாடு" என்று பெயர்ச்சொல் ஆகும்.  இது முதனிலை நீண்ட தொழிற்பெயர்   எனப்படும் .

 அதேபோல் அசை நீண்டு "ஆசை" ஆகும்.
  ஒன்றை நோக்கி மனம் அசைதல்.

இந்தச் சொல் கொஞ்சம் திரிந்து,  பின்பு தேசிய சேவையில் ஈடுபட்டுவிட்டது. இது ஒரு பேச்சு  வழக்குச் சொல். பிற்காலத்தில் நூல்களில் இடம்பெற்றதாகும்.

"இவர் எத்துணை அழகிய பெண்ணுக்கும் அசைந்துகொடுக்காத ஞானி " என்று பேசிக்   கேள்விப் பட்டதில்லையா?


    ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
            ஆளினுங் கடல்மீதிலே
    ஆணைசெல வேநினைவர் அழகேசன் நிகராக
            அம்பொன்மிக வைத்தபேரும்
    நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
            நெடுநா ளிருந்தபேரும்
     நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
            நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
    யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
            உறங்குவது மாகமுடியும்
    உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
            ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
    பாசக் கடற்குளே வீழாமல் மனத்தற்ற
            பரிசுத்த நிலையை அருள்வாய்
    பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
            பரிபூர ணானந்தமே.  [ தாயுமானவர். பரிபூர.10]


தணிவு. தணிக்கை.

மொழி பெயர்ப்புச் சொற்கள்:

சமாதானம் -   தணிவு.
censor  -  தணிக்கை.

from :  இந்துமதமும் தமிழரும்.பக்.148.

இவற்றுள் தணிக்கை என்பது ஓரளவு வழக்கில் வந்துவிட்டது.

சாம்பிராணி

பழைய தாள்களை வீசுவதற்காக எடுத்துக்கொண்டிருக்கையில், 2008ல் எழுதிய எனது குறிப்பு ஒன்று கிடைத்தது. அது சம்பிராணி பற்றியது.
இதை முன் ஓர் இணையதள வலைப்பூவில்  எழுதியிருக்கிறேன்.

சாம்பான்  என்பவன் பிணம் எரிப்பவன்.  இதன் வினைச்சொல் "சாம்புதல்" என்பது. அதாவது எரியூட்டுவது, புகை எழுப்புவது.  சாம்பார் என்பதும் நன்கு  குழைய வேகவைத்த பருப்பு.  இனி  சாம்பு சாம்பு என்று சாம்பிவிட்டேன் என்று சொல்வதுண்டு.  குழைந்து வீழும்படி உதை அடி கொடுத்தேன்  என்று பொருள்படும்.  சாம்புதல் :  வேக வைத்தோ, எரித்தோ, தாக்கியோ செய்வதைக் குறிக்கிறது.

சாம்பு + அரண் + இ = சாம்பரணி , இது பின் சாம்பிராணி  ஆயிற்று. எரிக்கும் போது, அல்லது தணலில் குழைவித்துப் புகை கிளப்பும்போது ஈ, கொசு, எறும்பு முதலியனவும் பிறவும்  அண்டாமல், அரணாக விளங்குவது என்பதே பொருள்.

புகையிலை போயிலை என்று திரிந்தாற்போல சாம்பரணி சாம்பிராணி  ஆகிவிட்டது. சாம்பிராணியில் பிராணி எதுவும் இல்லை.

சாம்புதல் எரித்தலையும் குறிக்கும் என்பதை சில அகரவரிசைகள் தவறவிட்டுவிட்டன.  சாம்பல் என்ற சொல், இன்னும் நம்மிடை வழங்குதலை மறந்தனர். எரித்து வருவதே சாம்பல்.

கச்சத் தீவினை.........

கச்சத் தீவினைக் கைவிடுங்கால்--- ‍‍  அவர்
கருதிய பற்பல இடுக்கண்களில்,
மிச்சமாய்க் கிடந்த மீன்பிடி வலைப்பொருள்
மேல்வந்து தெரிந்திட மறுத்திட்டதோ?

எந்தக் கடலலை நின்றபோதும்---- ‍‍‍‍‍‍‍ இந்த‌
மீனவர் துயரலை ஓய்ந்திடாமல்
வெந்த புண்களில் வேல்தனைப்  பாய்ச்சிட
முந்தி வருகுது செய்திகளில்!.

வியாழன், 5 ஜூன், 2014

விஷாலம்?

விசாலம் என்பது விய (வியன் )  என்னும் விரிவு குறிக்கும் சொற்களிலிருந்து திரிந்தமை கண்டோம்.   Click:
http://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_6614.html


நீங்கள் இதில் செய்ய வேண்டியது: இதே ஒலி யுள்ள சொல் சமஸ்கிருத அகரவரிசையில் உளதா என்று தேடிக் கண்டுபிடியுங்களேன். அது நல்ல பயிற்சியாய் அமையுமன்றோ?

நிற்க, விசாலத்தை விஷாலம் என்று  எழுதுவது பொருந்துவதாகத் தெரியவில்லை. விஷம் என்பது கொல்மருந்து.  ஆலம் என்பது ஆலகால விஷமென்னும் கொல்மருந்து. Poison  +  Poison!  Double poison!!

நிலவே நீ  இந்தச்  சேதி  சொல்வாயா ?
ஆலம் உண்ட  திரு  நீல கண்டனிடம் !

என்றொரு  திரைப்பாடல் வருகிறது!  ஆலகால விடத்தை (விஷத்தை) உண்டு உலகைக் காப்பாற்றியவன் சிவபெருமான் . அவன் "கருணா மூர்த்தி !" என்போம்.    ஆலம்  என்பது  கொடும் கொல்குழம்பு !  


 ஆக  இது நற்பொருள் தருவதாக இல்லை.

ஆகவே, விசாலம், விசாலாட்சி என்றே எழுதுவது நலம்.

புதன், 4 ஜூன், 2014

விசாலம்

விசாலம்  என்பது விரிவு குறித்தது. "நல்ல விசாலமான வீதி "  என்பதைப் பேச்சில் கேள்விப் பட்டிருப்பீர்கள்

யகரம் சகரமாய் மாறுதலை உடையது.  எ-டு :

வயந்தமாலை -  வசந்தமாலை.
வாயில்  - வாசல்.
ஆகாயம் -  ஆகாசம்

.எனப் பல.

விய  என்பதன் விளக்கத்தை முன் இடுகையில் காண்க. .

http://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_4.html

விய +   ஆல் + அம்  = வியாலம் > விசாலம்.

இதில் "ஆல் " என்பது "அகல்" என்பதன் திரிபு.  அகல் -  அகன்றதாதல்.

விரிந்து அகன்றது என்பது பொருள் .

விரும்பியவன் தோள்சேர்ந்த "வெகுளிப்பெண்"

விரும்பியவன் தோள்சேர்ந்த "வெகுளிப்பெண்" செய்கைகக்கு
விரும்பாத சுற்றத்தார் வெகுண்டார்,
அரும்பிவந்த வாழ்க்கையை அறுத்தெறிந்தார் அவளூடலை
ஆற்றொணா நோவேறப் புடைத்துத்,
திரும்பியுயிர் மீளாத தேயத்திற் கனுப்பினரே
திரும்பிவரும் மானமென்று நினைத்துக்;
குறும்பிதுபோல் ஞாலத்தில் குற்றறிவால் செய்வார்தம்
குறுங்கொற்றம் நொறுங்கிவிழல் எந்நாள்?

News story referred:

https://my.news.yahoo.com/husband-bludgeoned-pakistani-woman-strangled-first-wife-163921973.html

வியாழன்

இனி விரிவுப் பொருளில் அமைந்த சொற்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

வியனுலகு  என்ற சொல் குறளில் வருகிறது. வியன் என்றால் மிக விரிந்த என்பது பொருள் .

விய > வியப்பு என்பது விரிவுப் பொருளை யடிப்படையாகக் கொண்டதே. வியக்கும் போது, இயல்பாகவே வாய் கண் முதலிய விரிந்துகொள்ளும்  என்பது மட்டுமின்றி, மனமும் விரிவுகொள்ளும் அன்றோ?

வியாழன் என்பது பெரிய கோள். விய -  விரிந்தது.  ஆழ்  -  ஆழமாக.  அன் -  விகுதி.  விய + ஆழ் + அன் =  வியாழன் ஆயிற்று.  மிகவும் ஆழ்ந்த விரிவு உடையது என்பதாம்.

(விர்)  >  விரி .
(விர் ) > விய் >  வியன் 
(விர் ) > விய்  > விய  >  வியத்தல் . வியப்பு .

அடுத்த இடுகையில் தொடர்வோம். வேறு தொடர்புடைய சொற்களுடன்.

செவ்வாய், 3 ஜூன், 2014

The drunken teacher...........

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பள்ளி திறந்த முதல்நாளே, குடிபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் மீது வெறுப்படைந்த பெற்றோர், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புகார் கொடுத்தனர்.

சாயல்குடி அருகே பெருமாள் தலைவனேந்தலில் உள்ள ஒன்றிய துவக்கப் பள்ளியில் முதல், இரண்டாம் வகுப்பு ஆசிரியர் சாமுவேல், 48. பள்ளி துவக்க நாளான நேற்று, குடிபோதையில் பள்ளிக்கு வந்தார். பள்ளி துவங்கியதும், வகுப்பறைக்குச் செல்லாமல் பழைய கட்டடத்தில் அமர்ந்து பீடி புகைத்து, புலம்பிக்கொண்டிருந்தார். இதை பார்த்த பெற்றோர், புகார் கொடுத்தனர். ''இவர் எப்பவுமே இப்படித்தான்'' என சலித்துக்கொண்ட தலைமை ஆசிரியை, வழக்கம் போல் தனது பணிகளை கவனிக்கச் சென்று விட்டார். நாள் முழுவதும், அங்கேயே புலம்பிக்கொண்டிருந்த ஆசிரியர், பள்ளி நேரம் முடிந்ததும், வெளியே சென்று விட்டார். இவ்வளவு கூத்தும் நடந்து கொண்டிருக்க, முதல் நாள் பள்ளிக்கு ஆசை ஆசையாய் வந்த பிஞ்சு முத்துக்கள், 'மதுக்கடைகளை திறந்து விட்ட அரசை குத்தம் சொல்வதா... இல்ல... போயும், போயும் நம்ம இந்த பள்ளியில படிக்க வந்ததை குத்தம் சொல்வதா... இல்ல... இவ்வளவு காலம் இவர் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்காததை குத்தம் சொல்வதா...யாரை குத்தம் சொல்வது, என செய்வதறியாது திகைத்தனர்.

அந்த ஊரைச்சேர்ந்த கிருஷ்ணன் (பெற்றோர்) கூறுகையில்,'' பள்ளி திறந்த முதல் நாளே ஆசிரியர் போதையில் வந்து இருக்கிறார். இப்படி இருக்கும் பள்ளியில் குழந்தைகளை எப்படிசேர்க்க முடியும். இந்த பள்ளியால் எங்களுக்கு செலவில்லை என்றாலும், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறதே,'' என்றார்.

கடலாடி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ரவிக்குமார் கூறுகையில், '' அவர் மீது ஏற்கனவே புகார் வந்துள்ளது. இனிமேல் இதுபோல் நடந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும், என, பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளேன். இப்போது அவர் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படும்,'' என்றார்.


http://www.dinamalar.com/news_detail.asp?id=989719