ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

"Disproportionate Assets."......

"Disproportionate Assets.".......  என்பதை  "சொத்துக் குவிப்பு" என்றே ஊடகங்கள் மொழிபெயர்த்துக் கூறுகின்றன. இதை இன்னும் சிறப்புறச் செய்யவேண்டுமானால், வருமானத்தை மிஞ்சிய.." என்பதைச் சேர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. இதுவும் அவ்வளவு சரியாகத் தெரியவில்லை. ஆகவே வருமான விழுக்காட்டினை மிஞ்சிய சொத்து வைத்திருத்தல் என்று கூறலாம்.
இதெல்லாம் தேவையில்லை. "குவிப்பு" என்ற சொல்லில் இந்தப் பொருளெல்லாம் அடங்கிவிட்டது  என்று வாதிடலாம்,
உங்கள் கருத்துக்களை வந்து வெளியிடலாம்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

பிரபு

பிரபு என்ற சொல்.

பிரபு என்றால் பெரியோன் என்று பொருள். எல்லா உயர்வு குறிக்கும் சொற்களும் எந்த மொழியிலும் பெருமை குறிக்கும் அடியிலிருந்துதான் வந்திருக்க வேண்டுமென்று ஒருவன் ஐயுற்றுத்  தெளிதல் வேண்டும், பகவன். பகவான்   
என்பன பகுத்தளிப்பவன் என்று பொருள்படுமாறு பகு என்பதனடிப் பிறந்தவை.
ஆகவே, பெருமைக் கருத்துக்கு விதிவிலக்குகள் உள.

பெரு> பெரியான் > பெரியோன்.

பெரு > பெருபு > பிரபு.  

பு என்பது தொழிற்பெயர் விகுதி. எ‍-டு: திரிபு, ஒழிபு. இழிபு.

இவை வேறாகத் தெரிந்தாலும்,  திரிவு, ஒழிவு, இழிவு போன்றவைதாம் எனினும் நுண்பொருள் வேறுபாடு உடையனவாம்.

மகிழ் > மகிழ்பு > மகிழ்பன் > மகிபன். (ழகர ஒற்று கெட்டது).

அகழ்ந்த இடத்திலிருந்து ஒரு பூதம் வெளிப்பட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு என்ன பெயர் வைப்பது.

அகழ் >  அகழ்பு > அகழ்பன் (உடனே ழகர ஒற்றை ஒழித்துக் கட்டினால் ) > அகபன்.

இதை வேறு மொழிக்குக் கொடுப்பதானால், அன் என்ற ஆண்பால் விகுதி தேவைப்படாது. அகபு என்று வைத்துவிடலாம். அரபு மொழியார்க்குத் தருவதானால் அகப் (AHAB)  என்றே நிறுத்திவிடலாம்,


Incidentally: click  to read:

The Demoniacal: Ahab-Spirit


வியாழன், 25 செப்டம்பர், 2014

நிரப்புவது பிறப்புகளை............


பிறப்பினிலே உயர்வில்லை தாழ்வும் இல்லை;
பிரபுவென்றும் அல்லனென்றும் பேதம் இல்லை;

நிரப்புவது பிறப்புகளை நில்லாக் செல்வம்;
நிரப்பியவ‌ர் பிரபுகளென் றேறி நின்றார்;

குறைப்பட்ட ஏழைகளே கீழே சென்றார்
கொள்வறுமைக் கோடெழுந்து யர்ந்தா ரில்லை;

அரைப்பகுதி அறிவுடையார் இன்னும் பாதி
அடையாமல் அதுபோற்றி மேலும் தாழ்ந்தார்

விளக்கம்:

உடலை "இடும்பைக் கொள்கலம் " என்கின்றன  இலக்கியங்கள். பிறப்பில் இது செல்வங்களால்  நிரப்பப்  பெற்றால்,  அப்போதுதான் "பிரபு" ஆகிறான் ஒருவன். அல்லாதவன்  அதற்குத் தகுதி  இல்லாதவன்       இதுவே  உலகச்  சூழல்..

Noble by birth? An anachronism.

பிரபுக்கள் அவைஅங்கே  நீதி சொல்ல‌
பெரும்புள்ளி அறிஞர்கள் சட்ட மேதை
குறைவற்ற குழுஇயங்கிக் கொண்டி ருந்தார்
கோதிதிலே யாதெனவே கூர்ந்து நோக்கின்
பிரிவுற்ற கிளைகளென ஆட்சி வேண்டும்
பேச்சவைக்குள் நீதித்துறை ஆகா தென்றார் 
அறிவுற்றார் அதுவொன்றும் குற்றம் இல்லை
பிரபுவென்றும் பிறரென்றும் கூறும் வெட்கம்!

பொருள் :

பிரபுக்கள் அவை  House of Lords in UK.

 நீதி சொல்ல‌  to give judgements  ( on appeals:)

கோதிதிலே   குற்றம் இதிலே.;   defects in this constitutional arrangement.

பிரிவுற்ற கிளைகளென ஆட்சி வேண்டும்  refers to the doctrine of Separation of Powers in government.

பேச்சவைக்குள் நீதித்துறை ஆகா தென்றார்  A judicial wing in a debating chamber is not desirable;  it does not accord with modern governmental systems.

பிறர் - this refers to people of non-noble birth.


தமிழாட்சியில் மன்னற் கறிவுரை.




தமிழ் வேந்தர்களும் குறு நில மன்னர்களும்  ஆண்ட போது, புலவர்கட்கு நல்ல மதிப்பு இருந்தது. தகுதியான நேரத்தில் மன்னனைக் காணவும், பேசவும் ஒரு பாடல் மூலம் அவனுக்கு அறிவுரை புகட்டி நல்வழியில் உய்க்கவும் புலவருக்கு ஓர் எழுதப்படாத அதிகாரம் இருந்ததென்றால் அஃது மிகையன்று.

இப்படிச் செயல்படும் புலவருக்கென்று புறப்பொருள் இலக்கணம் பாடாண் திணையில் ஒரு துறையை அமைத்தது. அத்துறைக்கு ஓம்படை என்று பெயராம். ஓம்படையில் புலவன் நேராக அறிவுரை  கூறி அரசன் மனத்தைப் புண் படுத்தாமல், "மன்னா, இத்தகைய சூழலில் நீ இப்படிச் செய்வதுதான் இயல்பு " என்று அழகாக எடுத்துரைப்பார். அவன் அதை உண‌ர்ந்து கொள்வான்.

இதனை: " இன்னது செய்தல் இயல்பென இறைவன்
முன்னின்றறிவன் மொழிதொடர்ந்தன்று" என்கிறது புறப்பொருள் இலக்கணம்.

ஓம்படை  ஓம்பு + அடை.  ஓம்புதல் = காத்தல்; அடை = அடைவித்தல்.
காக்கும் நன்மையின் பக்கமாக மன்னனை ஒப்புவித்தல் என்பதாம்



மன்னன் + கு = மன்னற்கு ,  மன்னனுக்கு ..



புதன், 24 செப்டம்பர், 2014

மழை பாடும் இசை

தடதட வென்றஓசை---எங்கள்
தகர அடுக்களைக் கூரையின்மேல்,
படுகிற நீர்த்துளிகள் ---மழை
பாடும் இசையெனக் கேட்கிறதே!

பகல்தரு வெப்பமதே ‍‍‍--- நீங்கி
பைங்குளிர் வந்து பரவுவதால்,
உகந்திடு சூழலிதே ‍‍‍--- நான்
உறங்கவுய்த் தே நின்று தாலாட்டுதே.


இரவில் யாமமதற் ‍---கப்பால்
இவ்வினி  மைதான் தொடர்ந்திடுமோ?
நிறைவாய் உறங்கியெழ --- எனை
நித்திரைத் தேவியும் முத்தியிட!

கரகர ஓசையிலே!‍‍--- நெடுங்
கடலிடை நீரினில் அமிழ்வதுபோல்
உறுமிது பேரின்பமே --- இந்த‌
உறக்கத் தணைப்பினை என்சொல்வனே!

பாடாண்திணை, துறை: குழந்தைபால் கொண்ட காமம்

பாடாண்திணை, துறை: குழந்தைபால் கொண்ட காமம்

புலவன் தன் பாடலில் ஒரு சிறு குழந்தையின் மேல் பருவமங்கை (வளமங்கை) காமம் மேலிட்டு நின்றதாகப் பாடுவது:  "குழவிக்கண் தோன்றிய காமப் பகுதி" என்று பாடாண் திணையில் ஒரு துறையாக அடக்கப்பெறும். இது வேடிக்கையாய் இருக்கலாம். இத்துறை ஒரு சரியான இனிய துறைதான். எப்படி?

இதனைத் தொல்காப்பியனார் "குழவி மருங்கினும் கிழவது ஆகும்" என்கிறார்.

இதற்கு என்ன உதாரணம் தரலாம்?

கண்ணன் வளர்ந்து பெரிய ஆண்மகனாகி விட்டான். என்றாலும் அங்கு வந்த கோபியருள் ஒருத்தி, கண்ணனை அள்ளிக் கொஞ்சியதாகவும், முத்தங்கள் பதித்ததாகவும், இறுகப் பற்றி இனிய மொழிகள் புகன்றதாகவும் புலவர் பாடுவாகில், புலவர் தன் கவிதையில் காலத்தால் பல்லாண்டுகள் பின்னே போய்விட்டார்; கற்பனையில் மிதக்கின்றார்; உண்மையாகக் கண்ணனிடம் அப்பெண் காமவயப்பட்டு மென்மைப்பட்டாள் என்பதன்று. கவியின் கற்பனைதான். அவர் சொல்லவந்தது வேறு. கண்ணன் கடவுள். கோபி பற்றாளி; அம்மாத்திரத்தில் அது இறை நலம் விழை பற்றின் வெளிப்பாடுதான். உண்மையை மட்டுமே உரைத்தால் அது ஓவியத் தன்மை அற்ற வெறும் வரிகள் ஆகிவுடுமே! கவிதைக்குக் கற்பனை வேண்டுமே!

ஆகவே பெரிய கண்ணனை சிறிய குழவியாக்கி, புலவர் விழைந்த சேட்டைகளைச் செந்தமிழ்ச் சீர்சால் அசைகளாக்கி,  கவி கேட்டோர் நெஞ்சங்களை வருடுகிறார். But in bakti, this may yet be differently interpreted.

இனி, அரசனுக்கும் பிறருக்கும் இது பொருந்தும். அரசனைச் சின்னப்பிள்ளை ஆக்கிவிட வேண்டியதுதான்.

பாடாண் திணை என்பது "புறப்புறம்" எனப்படும்.  This thinai is among the ones that is on the outer skirts of  actual "puRam".  It is puRam because the hero is a king and the so-called lover is a subject who is depicted as one in love with him but in truth, there is no love, but just liking, admiration and intense loyalty./ devotion. These kinds of poem say something but mean something else.

பாடாண் திணையில், துறை: பொலிவுமங்கலம்.

மன்னர் பிரானுக்கு அழகிதாய் ஆண்மகவு தோன்றி, அரசியும் அவரும் ஆனந்தக் கூத்தாடுதலில் ஆழ்ந்துகிடக்கின்றனர். அரண்மனை புகுந்த அருந்தமிழ்ப் புலவர்,  அனைவரும் போற்றிப்பாடிக்கொண்டிருப்பதை அறிந்துகொள்கிறார்.  அரண்மனையே பொலிந்து காணப்படுகின்றது. மங்கலமே எங்கும் தங்குகின்றது. புலவரும் பாடுகிறார்.

இது என்ன திணை?  என்ன துறை?

இதுவே பாடாண் திணையில்,  துறை: பொலிவுமங்கலம்.

மிக்கப் பொருத்தமாகப் பெயரிட்டிருக்கிறார்களே, புறப்பொருள் இலக்கணியர்?!

வெல்வேந்தன் உள்மகிழப்
பாலன்பிறப்பப் பலர்புகழ்ந்தன்று.இது கொளு.

நீங்கள் இப்போது அந்தக்காலத்துக்குப் போய்விட்டீர்கள். மன்னன் கரிகாலனின் அரண்மனையில், அவனுக்குப் பிறந்த குழவியைப் புகழ்ந்து பாடுகிறீர்கள். பொலிவுமங்கலத் துறையில் பாடாண் திணையில் ஒரு பாடல் புனைகிறீர்கள். மன்னன் கரிகாலன் கேட்கிறான். பாடி மகிழுங்கள். அனுப்பிவைத்தால், இங்கு வெளியிடுவோமே.

You may use the comments feature,

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

The original source of word "red"?

இப்போது சொற்கள் சிலவற்றைச் சிந்திப்போம்:

*(அர்) > அரத்தினம்>  ரத்தினம்> இரத்தினம்.
*(அர்) > அரத்தை.
*(அர்) > அரத்தம்>  ரத்தம். இரத்தம்.
*(அர்) > அரன்  (செம்மை, செந்நிறக் கடவுள், சிவ> சிவன்)
(அர்) > அரசநாபி  (red aconite)

மேற்குறித்தவை யாவும் செம்மைப் பொருள் உடையன.

(அர்) > (அரத்து ) > ரத் > red. (English)  (அர் + அத்து )   



அர் என்பது சிவப்பு  நிறம் குறிக்கும் ஒரு தமிழ் அடிச்சொல். 
------------------------------------------------------------------------------------
*This has been pointed out by other etymologists


அது > அத்து    .இது  என்பது இத்து என்று மலாய் மொழியில் திரியும்.
இது -  it.

The original source of  word "red"

Sanskrit rudhira.     எ ன்ற சொல் லும்   நன்கு ஆராய்தற்குரியது.


இதெல்லாம்  கடினமான  வேலைதான்.   ஒரு  அறுத்த விலங்கு  உருவிலிருந்து  வெளிப்படுவது    அரத்தம்.  இது  அறுத்தல் என்ற சொல்லுடன்  தொடர்பு உள்ளது,     விலங்கை  அறுத்தவுடன் வெளிப்படுவது  அரத்தம்.  அறு+ அத்து  + அம் .> அறத்தம் >  அரத்தம் > ரத்தம் >  இரத்தம்   ரகரம் றகரமாகவும்  பின்னது  முன்னதாகவும்  மாறும்  வசதி  உடையவை     அறுத்து   வெளிவருவது சிவப்பு நிறத்தது ஆதலின், அரத்தம் என்பதற்குச் சிவப்பு என்ற பொருளும் ஏற்பட்டது.

அப்படியானால் மறம் என்பதை ஏன் மரம் எனல் கூடாது? திட்டவட்டமான பொருள் திண்மை பெற்றபின்பு இவற்றை மாற்றி மாற்றி எழுதினால் பொருள் விளங்காமல் போய்விடும், மிகப் பழங்காலத்தில் இவை ஒன்றுக்கு மற்றொன்று வந்திருக்கலாம். அது அந்தக் காலத்துக்குச் சரி. சொல்லாய்வு என்பது பழயதை ஆய்வ்து என்று அறிதல்வேண்டும். கருப்பு கறுப்பு போன்றவை பாதிக்கப்படாமல் இன்றும் உலவுகின்றன, ற என்பதே இரு ர (ரர) இணைந்த எழுத்தென்பதைக் கவனிக்கவும்.
 .


ருத்திரா என்ற சமஸ்கிருதமும் "அறுத்திர்ரா" ( அறுத்திருடா) என்ற அறுப்புக்கொட்டகைச் சொல்லின் மருஉவே என்று உணர்க.

பாடாண் திணை 48 துறைகள்

பாடாண் திணை என்பதன் தன்மையை ஓரளவு அறிந்தோம். துறைகள் இத்திணையில்  பலவாகும்.

ஒன்றிரண்டைப் புரிந்துகொள்வோம்.

1. ஒரு புலவர் அரசன் பிறந்த நாளைப் பாடுகிறார். பாடாண் திணை.  ஆனால்  துறை யாது? இதன் துறை நாண்மங்கலம் என்பது.

2. ஓர் அரசன், புலவர்க்கு தானும் மகிழ்வு எய்திப் புலவரும் போற்றும் வண்ணம் பரிசில் அளிக்கின்றான். அதன்பின் புலவர் சின்னாட்கள் தங்கியிருக்கிறார்  நல்ல உரையாடலும் விருந்தும் நடக்கின்றது.  புலவருக்கு ஊர் ஞாபகம் வந்துவிடுகின்றது. விடை கொடுங்கள் என, அரசர் ஏன் இந்த விரைவு என்கிறார்.
மேலும் இரண்டுமூன்று நாடகள் ஓடவே, புலவர்:  நான் போகவே வேண்டும். இல்லையென்றால், என் உறவினர் என்னை  ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். எதோ ஒருபகை நாட்டினுள் அடியெடுத்து வைத்தது போல ஆகிவிடும் என்கிறார்.
அப்புறம் மேளதாளத்துடன் ஊருக்குச் செல்ல இசைவு கிட்டுகின்றது.

ஒரு பாடல் இப்படி வருமானால், அது என்ன துறை. ?

அதுதான் "பரிசில் நிலை" என்னும் துறை.

இப்படி 48 துறைகள் உள்ளன. 

திங்கள், 22 செப்டம்பர், 2014

பாடாண் திணை

 (  இந்த இடுகை சில முறை கள்ள  நுழைவர்களால்  மற்றும்  மென்பொருள்களால் தாக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் எழுத்துக்களையே மாற்றியுள்ளனர் என்று அறிகிறோம்.  கவனமாக வாசிக்கவும்.  சில வாக்கியங்களும் அழிக்கப்பட்டிருக்கலாம்.)


வாகைத்திணை என்பது யாது என்று சிறிது கண்டோம். இப்போது பாடாண் திணை என்பது யாது என்று அறிதல் பொருத்தமானது.

முன்னர் நான் இங்கு விளக்கமெழுதிய சில பாடல்களுக்குத் திணை குறித்துள்ளேன். அவற்றுள் பாடாண் திணையுமொன்று.

பாடாண் என்பது பாடப்படுகின்ற ஆண்மகனது ஒழுகலாறு என்று சொல்லப்படும். பாடு + ஆண் என்பது பாடாண் ஆயிற்று.அன்மொழித் தொகை.

"ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும்
அளியும் என்றிவை ஆய்ந்து  உரைத்தன்று "

என்பது பாடாணுக்கு அளிக்கப்படும் விளக்கம்.

ஒளி ‍  -புகழ். ஆற்றல் ‍ ஒன்றை இயற்று திறன். ஓம்பா ஈகை ‍ எதையும் ஒளிக்காமல் அறம் செய்தல்.  அளி ‍: இரக்கம்.

பாடாண் திணையில் இவையும் இவை போல்வனவும்  பாடுபொருளாய் வருமென்று அறிக. இதில் துறைகள் பலவாகும்.

மறுபார்வை நாள்:  31.12.2017 

 தொடர்புடைய   மற்ற  இடுகைகள்:


















வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக், கடல்கண் டன்ன ஒண்படைத் தானையொடு மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ, உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ, மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே; எம்மால் வியக்கப் படூஉ மோரே, இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு, புன்புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,














































 
மறுபார்வை செய்யப்படும்.



ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

tricking Scots out of independence -- Allegation

http://www.themalaysianinsider.com/world/article/nationalist-leader-says-scots-tricked-out-of-independence#sthash.H0CvTTgf.dpuf


Defeated Scottish nationalist chief Alex Salmond accused Britain's political leaders today of tricking Scots out of independence after a dispute about how and when to give them more powers.
Salmond, who is stepping down as leader of the pro-independence Scottish National Party (SNP) after failing to persuade Scots to leave the United Kingdom, accused Britain's three main political parties of winning last Thursday's referendum by 55-45% by making a false promise of new powers.
"I think the vow was something cooked up in desperation for the last few days of the campaign and I think everyone in Scotland now realises that," said Salmond, referring to a pledge by Prime Minister David Cameron and other leaders before the vote to rapidly expand Scottish autonomy in the event of a "No".
If Britain voted to leave the European Union in a referendum pledged by Cameron in 2017, Salmond suggested that independence-minded Scots might push for another breakaway vote.
All three main parties are united in wanting to transfer new powers, over tax, spending and welfare, to Scotland. But with eight months before a national election, Cameron's Conservatives have become embroiled in a rancorous row with the opposition Labour party about when and how that might happen.
The dispute overshadowed the start of Labour's annual conference in Manchester, the last before next year's national election, where leader Ed Miliband is hoping to shift the political debate onto his vision for a society where wealth and opportunity is shared more equally.
Instead, Miliband was forced to clarify his position on more powers for Scotland and found himself engaged in what many voters are likely to perceive as a grubby party political spat.
Cameron, under pressure from some of his own lawmakers who represent English constituencies and whose own electoral hopes are threatened by the UK Independence Party (UKIP), last Friday suddenly linked new powers for Scotland to agreeing new constitutional arrangements for the rest of Britain, including England, at the same time.
In particular, he said he wanted to stop Scots lawmakers voting on English issues in parliament, a matter he said should be the preserve of those representing English areas.
His promise reflected fears inside his party that Scotland, which already has its own parliament and a large measure of devolution, was set to be given greater autonomy and continue to receive greater funding per head than the rest of Britain whereas England, the largest part of the United Kingdom, was not in line to receive any concessions.
However, Labour, which has far fewer lawmakers in England than the Conservatives and could therefore lose its ability to get legislation through parliament if it was in government, has rejected Cameron's linkage, raising the possibility that political squabbling could delay a new deal for Scotland.
Miliband said today Cameron had not raised the "English question" before he and Nick Clegg, the leader of the Liberal Democrats, signed the "vow" – a joint declaration with the British leader about granting new powers to Scotland.
"You know we've spent two years trying to keep our country together. Let's have a proper constitutional convention, let's look at these issues," Miliband told BBC TV.
"Let's not drive our country apart because David Cameron thinks it's a sort of opportunity for him to do it."
Cameron made it clear the dispute could resonate in the May 2015 general election, warning Miliband his reluctance to restructure voting arrangements in favour of England could backfire.
"The challenge to Labour and Ed Miliband is clear: either resolve this issue with us, or explain to the people of the rest of the UK why they shouldn't have the same powers as we are rightfully devolving to the people of Scotland," Cameron said in an article released on social media.
"Why, for instance, Scottish MPs should be able to vote to vary income tax rates in England, when the Scottish Parliament is going to be setting Scottish income tax rates in Scotland."
Deputy Prime Minister Clegg, Cameron's junior partner in the two-party coalition, urged an end to the row.
"We cannot allow an exciting new chapter of empowerment and constitutional renewal to be held hostage yet again by a Labour and Tory (Conservative) pre-election stand off," he said. – AFP, September 21, 2014.
- See more at: http://www.themalaysianinsider.com/world/article/nationalist-leader-says-scots-tricked-out-of-independence#sthash.H0CvTTgf.dpuf

சனி, 20 செப்டம்பர், 2014

வாகை ஒரு பாலை மலர்........


http://sivamaalaa.blogspot.com/2014/09/blog-post_20.html

மேற்கண்ட (முன்) இடுகையிலிருந்து  தொடர்கிறோம்:

வாகை என்பது பாலை நிலத்திற்குரிய ஒரு மலர்.  அங்கு கிடைக்கும் ஒரு மலரையே சூடிக்கொண்டனர் வெற்றித் தமிழ் வேந்தர்.  எதிரி எங்கெங்கு  எதிர் படுகின்றானோ அங்கெல்லாம் பொருதுவர்  என்றாலும் பாடல்கள் பெரிதும் பாலையையே போருக்குரிய நிலனாகக் கொள்ளல் சிறப்பு.  அன்றெனினும் அஃது  இழுக்காது. எனினும் பாலைப்பூவே (வாகை) சூடினர்.

வாகை சூடிக் கொள்ளல் எம்மரபினரும் மேற் கொள்ளலாம்  எனினும் அஃது அரசர்க்கே சிறப்பாம்.  ஏனையோர்க்கும் உரித்து.  (தொல் . புறத்.2)

இப்போது ஒரு பாடலைப் பார்ப்போம்:

சூடினான் வாகை சுடர்த்தெரியல் சூடுதலும் 
பாடினார் வெல்புகழைப்  பல்புலவர் --------கூடார் 
உடல்வேல் அழுவத்து ஒளிதிகழும் பைம்பூண் 
அடல்வேந்தன் அட்டார்த் தரசு.

சுடர் -  ஒளி யுடைய ; தெரியல் -  மாலை.  கூடார் =  பகைவர்.
வேல் அழுவத்து = வேல்களின்  நடுவே.(வேல் படையின்  நடுவே )
ஒளிதிகழும் பைம்பூண் -  (இவை அரசரின் )பசும்பொன்  அணிகலன்கள்.
அடல் -  ( இங்கு போர் மேற்கொண்ட அரசற்கு அடையாக வந்தது. )
அட்டு - கொன்று வென்று.   ஆர்த்து = ஆர்ப்பரித்து.   

அதாவது வெற்றி வேந்தன் வாகை சூடிக்கொண்டவுடன்  புலவர் புகழ் பாடினர்.
இது வாகைத்திணைக்கு எடுத்துக்காட்டு. 165

வேந்தன் வேல் அழுவத்து,     கூடார்  அரசு  உடல் அட்டு,   ஆர்த்துச்  சுடர்த் தெரியல்   வாகை சூடினான் ,   சுடுதலும் வெல்புகழைப் புலவர் பாடினார்   
என்று மாற்றிக்கொள்க.

இது பெரும்புலவர் ஐயனாரிதனார் இயற்றிய பாடல். இவர் தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியராற் போற்றப்பட்டவர். பன்னிருபடலமென்னும் இலக்கண நூலின் வழி நூலாக இப்பாடல் காணப்படும் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் பொருளிலக்கண நூலை இயற்றியுள்ளார். இவர் ஐயப்ப பற்றர் (பக்தர்) போல் தெரிகிறது. ஐயனாருக்கு இதமானவர் என்பது இவர் பெயரின் பொருள்.

வேந்தனின் வேற்படை பகை அரசர்களைக் குத்திக் கொன்று  ( உடல் அட்டு) 
கொடி  நாட்டியது; வேந்தன் வாகை சூட, புலவர் பாடலாயினர்  எனற்பாலது வகைத்திணை.

"வாகைத் திணை"

அவர் தேர்வில் வாகை சூடி விட்டார் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.  இங்கு  வாகை சூடுதல்  என்றது வெற்றி பெற்றதை.  சில வேளைகளில் தாளிகைகளிலும் இச்சொற்றொடர்  காணப்பெறுவதுண்டு.

பகை அரசர்களை வெற்றிகொண்ட மன்னன் ,  வாகைப்பூ, இலை முதலியன சூடிக்கொண்டு அதனைக் கொண்டாடுவான். அவ்வரசனைப் புலவர் பாடினால், அப்பாடல் "வாகைத் திணை"யின் பாற்படும். வாகைத் திணையிலும் 33 துறைகள்  உள்ளன.

தமிழ் மொழி விரிந்த பொருளிலக்கணம் உடையது.  வேறெந்த மொழியிலும் பொருளிலக்கணம் இருப்பதாகத் தெரியவில்ல . தமிழனும் தமிழும் அத்தகு புகழுக்குரிய  உலகச் செல்வங்கள்.

இதை விளக்கும் கொளுப் பாடலை இப்போது காண்போம்.

இலை புனை வாகை சூடி  இகல் மலைந்து 
அலைகடல் தானை அரசு அட்டு  ஆர்த்தன்று.

அரும்பொருள் 

இலை -  தளிருடன், புனை -  சேர்த்துக் கட்டி,  இகல் மலைந்து  -- பகை நடவடிக்கை மேற்கொண்டு,   கடல் -  கடல்போன்ற;  தானை = படை; 
அரசு அட்டு =  பகை அரசனை  வென்று;  ஆர்த்தன்று =  ஆரவாரித்தது .  

 இப்பாடல் தெளிவாகவே உள்ளது.

அடுத்த  இடுகையில் தொடரும்,  அதுவரை மேலுள்ளவற்றைப் படித்து .இன்புறுங்கள் .

cool, cold, and Tamil kuL

சரி  இனிக் 'குள்' என்ற அடிச்சொல்லை வேறொரு கோணத்தில் நோக்குவோம்.

ஆங்கில மொழியில் குள் > குளிர் என்பதனோடு நெருங்கிய ஓசை உடையது   cool,  cold  என்னும் சொற்கள் என்பது எப்போதாவது மனத்துள்   பட்டதுண்டா?
இது என்ன வியப்பு ?

 இந்த ஆங்கிலச் சொற்கள் ஆய்வுக்குரியன ஆகும்.

மலாய் மொழியில் வழங்கும் se-juk என்பது சமஸ்கிருத "ஸீத " என்பதனோடு நெருக்கம் உடையதுபோலிருப்பதும்  ஆய்வுக்குரியதே. 

குள் >.etc..... and குளிகைகாலம் ‍‍

குள் என்ற அடிச்சொல் குட்டை, குள்ளை (குள்ளையன், குள்ளைச்சி) என்று நீளக் குறைவைக் குறிக்கும் சொற்கள் பலவற்றைப் பிறப்பித்துள்ளமை முன் இடுகைகளில் கண்டோம். அதனால் குள் என்பதற்குக் குட்டைத்தன்மை ஒன்றே பொருளெனல் கூடாது. வேறு பொருள்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக:

குள் > குளிர், குளிர்தல், குளிர்ச்சி.
குள் > குளியல், குளித்தல்.
குள் > குளு > குளுகுளு ,  குளுமை.

குள் > குளம்.

குளிகைகாலம் ‍‍ ‍

குளித்தல் என்பது மாந்தன் மீண்டும் மீண்டும், நாள்தோறும்,  அல்லது காலை மாலை செய்ய வேண்டிய செயலாகின்றது. உடல் வெப்பமடையும் போது அதனைக் குளிர்விக்க வியர்வை முதலியவை அடிக்கடி தோன்றுகிறது.  அதனால் மறு நிகழ்வுக்கு "குளி" என்பதிலிருந்து குளிகை என்ற சொல்லை ஆக்கியுள்ளனர்.
நற்காரியங்கள் மீண்டும் மீண்டும் வரவேண்டும். குளித்துத் தூய்மை செய்துகொள்ளல் போல. உடலைக் குளிர்வித்துக்கொள்ளவும் வேண்டும்.
அப்போது தட்பவெப்பம் சமன்படும்.

மேலும் குள் என்பது குட்டையையும் குறிக்கும். குளிகன் என்னும் கோள் தோன்றி  ஒன்றரை மணி நேரமே நீடிப்பதால், இது குறுகிய நற்காலமும் ஆகும். மீண்டும் மீண்டும் நடக்கவேண்டிய நற்செயல்கள் நடத்துதற்குரிய காலமாம்.

குளிகை என்பது மிகவும் அருமையாக அமைந்த சொல்லாம்.

Muslim law for non-Muslims in Malaysia says Balasubramaniam!


திருடராய்ப் பார்த்துத் திருந்தும்வரை காத்திருக்காமல் 
திருட்டுக் கைகளை வெட்டி வீசுவீர்  திருவுடையோரே!

மனித வரலாறு என்பதோ
இனிதான பல கட்டங்கள் தாண்டி
கசப்பான பல கட்டங்கள் கடந்து
இன்று வந்துவிட்டோம் இங்கே!
இனி எங்கு செல்வது ? என்ன செய்வது?

இதைப் பாருங்கள்:

http://www.thestar.com.my/News/Nation/2014/09/20/PAS-supporters-club-Hudud-for-all/


BY RAHMAH GHAZALI

KAJANG: After taking over PAS Supporters Club from Hu Pang Chow last April, the new chairman of the non-Muslim wing has reversed his predecessor’s position on the shariah laws.
Unlike Hu, N. Balasubramaniam (pic) believes that the Islamic penal code could serve as a preventive law in reducing the crime rate in the country.
“I believe that the hudud law is effective for the people. It is already enshrined in the holy book, there must be a reason why it is there,” he told The Star Online at a recent interview.

Hailing from Kuala Lipis, Pahang, 56-year-old Balasubramaniam said a similar criminal law was the practice of an ancient kingdom in India and asked why there is now objection to it.

“The (criminal) law was called manu neethi sastram. It was a similar law to hudud that required offenders to have their hand chopped for stealing, or stoned to death for some other offences,” he said.

Balasubramaniam, who joined PAS in 2008, felt that non-Muslims can accept hudud if the right explanation is given.

“I have organised a number of forums with various NGOs on hudud law and they seem to be receptive to it.

“They also agreed that the Islamic penal code could bring down the crime rate significantly,” he said.

Hu’s outspokenness on the matter had seen him removed from helming the non-Muslim wing, but Balasubramaniam said this was just a part of forming a new committee.

“Hu was not sacked, but PAS merely wanted a new committee as he had held the position for four years.

“Besides, what he said about hudud was his personal views and the party could not take any action based on that,” he said.

Notably PAS has also been at loggerheads with its Pakatan Rakyat partners over its persistence on the implementation of the hudud law.

Now that he is given the responsibility of spearheading the PAS’ supporter’s club, Balasubramaniam said they will carry on with activities in the field and try to garner more members.

He said he would give himself a period of three years to prove to the party that the wing is capable of attracting new followers.

"In return, PAS should reward us with more seats in the next general elections with one non-Muslim candidate fielded in each state,” he said.

During GE13, three non-Muslim PAS candidates were fielded at two state seats and one parliamentary seat, but all were defeated. To date, the wing has 40,000 members  registered nationwide.

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

அடிச்சொல் குள் குட்டையும் கட்டையும்.

அடிச்சொல் குள்  குட்டையும் கட்டையும். 

குட்டையான மனிதனை, " அவன், ஆள் கொஞ்சம் கட்டை" என்பார்கள்.   ஆக, இதில் கவனிக்க வேண்டியது, உகர அகரத் திரிபுகள்.  உ > அ என்னும் விதிப்படி, 
குட்டை ‍> கட்டை பொருத்தமாய் உள்ளது. குகரத்தில் உள் 
ஏறி நின்ற உகரம், அகரமானது.  க்+உ  (கு)  > க் + அ  (க).

இதனை நீங்கள் பல சொற்களில் காணலாம். எ‍‍‍-டு: 

உமா (உம்மா)  <>  அமா (அம்மா) >  மா.

பெண் பெயர்களில் பின்னொட்டாக "மா" வரும்.

நாகம்மா > நக்மா.

விறகு கட்டை, இருவகையிலும் பொருத்தமானது. கடினமானது ஆதலால்.  கடு+ ஐ = கட்டை.  கட்டைகள்  நீளமாக இருப்பதில்லை. அந்த வகையில் குட்டை  > கட்டை என்பதும் பொருத்தமே.  கட்டை என்பதோர் இருபிறப்பிச் சொல் ஆகும்.

குள் என்னும் அடிச்சொல்:



இப்போதூ குள் என்னும்,  சுவையான சொற்களைப் பிறப்பித்த,  தமிழ் அடிச்சொல்லைக் கவனிப்போம்.

குள் > கூள் > கூளையன்.
குள் > கூள் > கூளைச்சி

குள் > குள்ளன்.
குள் > குடு > குட்டு. (குட்டு வெளிப்பட்டது) குட்டையான (மறைவான) செய்தி.
குள் > குடு > குட்டன் (ஆள் பெயராகவும் காண‌ப்படுகிறது)
குள் > குடு > குட்டம்  ( குட்டம் > குஷ்டம்).+
குள் > குடு > குட்டு > குட்டுவன்.  குட்டம் > குட்ட நாடு.
குள் > ......>  குட்டை. குட்டையன்.

குட்ட நோயில் வெளி யுறுப்புகள் உருவழிந்து குட்டையாகி விடுகின்றன. அதனால்  அந் நோய்  குட்டமெனப்பட்டது  இதற்குத்  தமிழ் நாட்டிலும் சுற்று வட்டாரத்திலும் வாழ்ந்தோர்  சமஸ்கிருதம் பயன்படுத்திய வேளை சமஸ்கிருதச் சொல்லைப் பயன்படுத்தாமல்   தமிழ்ச் சொல்லையே சற்று " குஷ்டம்" என்று மாற்றி   பயன்படுத்திக் கொண்டது  ஒரு   முயற்சிச்
சிக்கனம் ஆகும். இதனால் இது ச‌மஸ்கிருதத்திலும் புகுந்தது. சமஸ்கிருதத்தில் குட்டத்துக்குப் பல சொற்கள் உள


சமஸ்கிருதத்தில் பல சொற்கள் இதற்கு உள்ளன என்பதை நோக்க, இந்தியாவில் ஒரு காலத்தில் இந் நோய் பரவி இருந்தமை அறியலாம்

.தொடரும்.

புதன், 17 செப்டம்பர், 2014

Jailed after company failed.........


சொல்லி அழுவது தவிர, வேறென்ன செய்வது?

நார்வே நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், மலேசியாவுக்கு தெற்கிலுள்ள ஒரு வளமிக்க தீவில் ஒரு குழும்பு (கம்பெனி) திறந்தார். குழும்புமூலம் காசு கொட்டும்  என்று எதிர்பார்த்தார். வணிகம் ஓடவில்லை. இழுத்து மூடிவிட்டு, தமக்கு வேறு  நாடுகளிலுள்ள குழும்புகளைக் கவனிப்பதில் ஆழ்ந்து ஈடுபட்டுவிட்டார். 

தீவுக் குழும்பை மூடிய போது, சில பழைய நாற்காலி மேசைகளை முறைப்படி அப்புறப்படுத்தி, அரசுக்குக் கணக்குக் காட்ட மறந்துவிட்டார். அவை அங்கேயே கிடந்துவிடவே, அரசு அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்தனர்.  ஒரு குறிப்பிட்ட விலையை அவற்றுக்கு மதிப்பீடு செய்தனர். இவர் கூற்றுப்படி  அவை குப்பைக் கிடங்குக்குப் போகவேண்டியவை.  இவற்றை முறைப்படி கணக்குக்காட்டி களைவு (disposal)  செய்யத் தவறியதால், அவர்மேல் ஒரு வழக்குப் போட்டனர், அவர் வழக்கறிஞர் உதவியுடன் வாதாடினார்.   நீதிமன்றம் "குற்றம்" என்று தீர்மானித்து நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது.

இவர் பல குழும்புகளை வேறு நாடுகளில் நடத்துகிறவர். பழங்குற்றப் பின்னணி உள்ளவரா அல்லது முதல்தடவைக் குற்றவாளியா என்று தெரியவில்லை முதல்தடவைக் குற்றவாளியாயின், பெரும்பாலும் தண்டம் விதிப்பது வழக்கம்.
அது பழைய முறை. இப்போது புதுமுறைகள் நடப்புக்கு வந்திருக்கக்கூடும்.

இங்கே குழும்பு திறக்கப்போய், இப்படி ஆகிவிட்டதே என்று நண்பர்களிடம் சொல்லி அழுவது தவிர, வேறென்ன செய்வது?

இதற்குச் சில வரிகள்:-

சோர்வு தருவதொன்று சோகம்-----  இடர்
சொல்லி அழுதிடிலோ ஊதியம் குலாவும்
நேர்வ தென்பவெலாம் நேரும் ‍-----  அதை
நினைத்துக் கிடந்தவர்க்கோ உள்ளமே நோகும்!:

திங்கள், 15 செப்டம்பர், 2014

பார் பாதாளம்

தமிழில் "பா" என்று தொடங்கும் பல சொற்கள், பரந்த இடம்,  தட்டையான பொருள்  திறந்த வெளி, என்பன போன்ற  பொருண்மை தரும்.

பா >  பார் 

"பாருக்குள்ளே நல்ல நாடு "  ----பாரதி .

பா  >பார் > பார்த்தல்.

பரந்த வகையில் கண்ணைச் செலுத்துதல்.

பா  -- ஒலி  அசைகளால் பரந்த வகையில் (பாடலை) அமைத்தல்.

பா  --  பாவுதல். ( நெல், விதை  முதலிய தூவிப் பரப்புதல்.)

இவற்றைத தொடர்ந்து  ஆராய்ந்து அறியலாம் .

இனிப் பாதாளம்  சொல்லை ஆராய்வோம்.

பா -  பரந்த(து).

தாள்  -  கால்;  அடிப்பகுதி.

பா+தாள் + அம்  = பரந்த நிலத்தின்  அடிப்பகுதி.

இதில் எனக்கொன்றும் ஐயப்பாடுகள் இல்லை.

பர என்ற வினைச் சொல் முதனிலை நீண்டால் பார் என்று திரியும்.  "பார"
என்று வராது.  இதுவே தமிழ் இயல்பு. 

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

SuTar (drop u ) and star

இப்போது ஒரு சொல்விளையாட்டில் ஈடுபடலாம்.

ஸ்டார் என்ற ஆங்கிலச் சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். இது விண்மீனைக் குறிப்பது என்பது உங்களுக்குத் தெரியும்.

மறுபுறம் சுடர் என்ற தமிழ்ச் சொல்லைப் போட்டுக்கொள்ளலாம். இதை ஆங்கில எழுத்துக்களால் எழுதினால், SuTar.........* என்று வரும். இதில் யு  என்ற எழுத்தை  அழித்துவிட்டால்: STar என்று வருகிறதே!

விண்மீன்கள் என்பவை வானத்தில் சுடர்பவை. இந்த ஒலி ஒற்றுமையும் பொருள் அணுக்கமும் எங்ஙனம் விளைந்தன?


*.  Also written as : cuTar (kyoto convention spelling)  or simply as chudar.  "s"  for c or ch will demonstrate it  better.

மன்னரைப் பழிக்காதே.........


நீ  தாய்லாந்தில்  இருந்தால்: 

மன்னரைப் பழிக்காதே ‍‍---அவரை
மதிப்பதை மனத்துள் ஒழிக்காதே!
பின்னிய கம்பிகட்குள் ---அகப்பட்டுப்
பெரும்பழி அதைநீ சுமக்காதே.

பதவிகள் யாதுமில்லை --- எனினுமப்
பரந்த தாயகம் ஒன்றிணைப்பார்;
உதவஎப் போதுமுள்ளார்  --- மக்கள்
உளத்தின் நாயகம், நின்றிணைப்பார்.

கண்டவை  விண்டதனால் ‍‍--- அந்த‌
காரத்தில் வீழ்ந்தவர் மிகப்பலரே!
உண்டதைத் தக்கவைப்பாய் --- சீயத்துள்
உள்ளனை வாழ் நிலை நிற்கவைப்பாய்

கண்டவை  -- கண்டபடியாக வாய்ச்சொ//ற்களை ;
விண்டதனால் -- வெளியிட்டதனால் ;
அந்தகாரம் - இருள் ;
உண்டதை -  முன் சாப்பிட்டதை  (உணவை);   தக்கவைப்பாய் -- இனியும் கிட்டும்படியாக உறுதி செய்துகொள்வாய் .
சீயம் --  சீயத்துள் :  தாய்லாந்தினுள்;.
 வாழ் நிலை  -  வாழ்க்கையின் நிலைத்தன்மையை;  நிற்க வைப்பாய் -   குலைத்திடாமல் சரிசெய்து கொள்வாய்.. 





Thai coup leader warns against insulting the monarchy - See more at: 

http://www.themalaysianinsider.com/world/article/thai-coup-leader-warns-against-insulting-the-monarchy#sthash.WZ1DeJ1f.dpuf




Thai junta leader Prayut Chan-O-Cha Friday said his regime would use legal, psychological and technological measures to protect the monarchy against defamation in his first official policy speech as premier.
The warning came as Amnesty International said an "unprecedented" number of people have been charged with insulting the royals since the coup, with 14 Thais indicted under the controversial lese majeste law in less than four months.
Revered King Bhumibol Adulyadej, 86, is already protected by one of the world's toughest royal defamation laws – anyone convicted of insulting the king, queen, heir or regent faces up to 15 years in prison on each count.
Since seizing power on May 22, the army and junta chief – who was also appointed as prime minister last month – has emphasised his commitment to protecting the monarchy.
"The monarchy is the key pillar of our country... to create national unity," Prayut said Friday.
The king has no official political role but is seen as a unifying figure in a country that has been frequently riven by political violence, particularly since a military coup in 2006.
Last month a 28-year-old musician was sentenced to 15 years in jail for writing insulting Facebook posts about the monarchy between 2010 and 2011.
In another recent case a taxi driver was jailed for two and a half years after his passenger, a university lecturer who recorded their conversation on a mobile phone, accused him of expressing anti-royal views, Amnesty said.
Under the law anyone can make an accusation of insulting the monarchy and the police are duty-bound to investigate.
Critics say the legislation has been politicised, noting that many of those charged in recent years were linked to the "Red Shirts" protest movement, which is broadly supportive of fugitive former premier Thaksin Shinawatra.
On Thursday junta spokesman Winthai Suvaree denied there had been an increase in royal defamation charges under military rule.
Prayut has said the army was forced to take control after months of protests against former premier and Thaksin's younger sister Yingluck left 28 people dead and hundreds injured, effectively paralysing her government.
But critics say the protests provided a pretext for a power grab in the latest chapter of Thailand's deep political divide.
The long-running political conflict broadly pits a Bangkok-based middle class and royalist elite, backed by parts of the military and judiciary, against rural and working-class voters loyal to Thaksin.
Thaksin was toppled in a coup in 2006 and lives in self-exile to avoid prison for a corruption conviction. – AFP, September 12, 2014

அம்மனுக்குப் பூசையிலே கட்டுங்கள்-

அம்மனுக்குப்  பூசையிலே கட்டுங்கள்--- என்றே
ஆயிரத் தைந்நூறு வெள்ளிக்கே,
செம் மனத்தில் ஆர்வம்தான் மட்டின்றி ---சேலை,
குள்ளைய  ரிடம் தந்தேன் துள்ளித்தான்.

பூசையே முடிந்ததும் சேலைதான் ‍‍-- போற்றும்
பூவாமென்  கைகளுக்கு வரவேண்டும்;
நேசர்கள் எவரிடமும் போகாமல் ‍--- நான்
நேர்ந்தபடி என்னிடமே தரவேண்டும்:

என்றவர்க்குக் கூறிவிட்டேன் மறுநாளே---  ‍‍நானும்
எதிர்கொண்டேன்  ஐயரிடம் கேட்குங்கால்,
நன்றவர்தான் சொன்னபதில் வெகுநீளம் ‍--- "காணோம்,
நானதனை மீட்டிடுவேன் பார்க்குங்கால்."

சில நாட்கள் சென்றபின்பு வருகின்றாள் --- ஒருபெண்
சேலைதனை அழகாக அணிந்தபடி!
"குலமாதே! அழகிதுவே" என்கின்றேன் ‍--- சேலை
"குட்டையர்" விற்றதென்றாள் பணிந்தபடி!

அந்த ஐயர் செய்ததென்ன? கோலமிதே--- ‍‍அவரை
அடுத்தமாதம் அனுப்புகிறார் ஊர்ப்பக்கம்!
இந்தவிடை ஏற்காத ஆலயத்தின்--- மேலோர்;
இஃதவர்க்கே ஏற்றதொரு நேர்ப்பக்கம்.

A friend told me of this event, which I have retold in the above stanzas.

மட்டின்றி =  எல்லை இல்லாமல்.  சேலை = சேலையை  
.குள்ளையர் = குள்ளமான ஐயர் .  இவரைக் "குட்டையர் "  (குட்டை ஐயர் "  ) என்பதும் உண்டு.
இந்த விடை :  சேலையைக் காணவில்லை  என்ற விடை.
மேலோர் என்றது ஆலயத்  தலைவர் செயற் குழுவினரை .