வெள்ளி, 19 டிசம்பர், 2014

நிலவடைந்து வெற்றிகண்டு.................

நிலவடைந்து வெற்றிகண்டு நிமிர்ந்து நின்றவன்--- இனி
நேர்வனைத்தும் நிலத்தினின்று புகுதல் என்றவன்!
குலவுபொருள் விரிவுறுத்தும் கலைகள் ஈண்டிட‌---  இந்தக்
கோளை நீங்கி நாளைபொன்னும் கொழிக்க வேண்டினன்.


ஒற்றைக்கோளை நம்பிக்கிடந்திவ் வுலகில் வாழ்ந்தவன்;--- இனி
ஓங்கிஎழுந்து  நிலவில்பொருளைக் குவிக்க வல்லனோ?
மற்றைக்கோள்கள் தம்மில்மனைகள் கட்டி வாழ்வனோ--- ஒரு
மங்கைமனைக்குத் தலைவியாக மதியைப் பெறுவனோ

நேர்வு  அனைத்தும்  =  நடக்கவேண்டியதெல்லாம்   
 ஈண்டிட  =  மிகுந்திட ;

நிலவடைந்து வெற்றிகண்டு:  சந்திரனைச் சென்றடைந்து அந்த வெற்றியைப் பரிசாகப் பெற்று;  ‍
நிமிர்ந்து நின்றவன் :  அதனால் பெருமிதம் கொண்டு புகழில் நிலைபெற்றவன்;
இனி நேர்வனைத்தும் : இதன்பின் நிகழத் தக்கன யாவும்;
நிலத்தினின்று புகுதல் என்றவன் :  பூமியிலிருந்து நிலவுக்குக் குடிபோதல் ஒன்றே என்றவன்; 
குலவுபொருள் விரிவுறுத்தும் : மனிதன் புகுதலைத் தொடர்ந்து ஏற்படும் பொருளாதார நன்மைகளை விரிவாக்கம் செய்கின்ற;
கலைகள் ஈண்டிட : எல்லாக் கலைகளும் வளர்ந்திட;
இந்தக் கோளை நீங்கி ::  இந்தப் பூமியை விட்டு விலகியதைத் (தொடர்ந்து)
நாளைபொன்னும் கொழிக்க வேண்டினன் :  அடுத்த நாளே அல்லது விரைவில் பொருளியல் நிலவில் செழித்தோங்க ஆசைப்பட்டவன்;


ஒற்றைக்கோளை நம்பிக்கிடந்திவ் வுலகில் வாழ்ந்தவன்  இதுவரை பூமியை மட்டுமே வாழ்விடமாக நம்பி வேறு யாதும் செய்யாமல் முடங்கிக் கிடந்தவன்;
இனி ஓங்கிஎழுந்து ‍‍:  இதன்பின்  உயர்ந்து மேலெழுந்து;
நிலவில்பொருளைக் குவிக்க வல்லனோ? :  நிலவில் ஒரு பெரிய பொருளியலை  நிறுவ முடிந்தவனோ?
மற்றைக்கோள்கள் தம்மில்மனைகள் கட்டி வாழ்வனோ‍‍‍:  ஏனைக் கோள்களிலும் குடியிருப்புகளை ஏற்படுத்த  இயன்றவனோ,
ஒரு மங்கை மனைக்குத் தலைவியாக மதியைப் பெறுவனோ : பெண்ணுடன் குடித்தனம் நடத்தும் 
( நிலையாக வாழும் ) அறிவினைப்  பெறுவானோ? (  நிலவு போலும்  பெண்ணை மனைவியாய் அடைந்து வாழ்க்கை நடத்துவானோ என்றும் இருபொருள் படும் ).  
'

The above poem was based on the following write up, more may  be gleaned from Space Daily:


Why we should mine the moon
by Ian Crawford, Professor, Planetary Science, Astrobiology, University of London
London UK (The Conversation) Dec 01, 2014


illustration only
To date, all human economic activity has depended on the material and energy resources of a single planet; understandably, perhaps. It is conceivable though that future advances in space exploration could change this by opening our closed planetary economy to essentially unlimited external resources of energy and raw materials.

Look up at the Moon this evening, and you might be gazing at a solution. The Earth's closest celestial neighbour seems likely to play a major role and already a number of private companies have been created to explore the possibilities.

It is important to stress that even now, 40 years after the Apollo missions, we still don't have a complete picture of the Moon's economic potential, and obtaining one will require a more rigorous programme of lunar exploration than has been undertaken to-date. In part, this is why proposed future lunar exploration missions (such as the recently announced Lunar Mission One) are so important.

Nevertheless, as a result of work over the past four decades, we do now know enough to make a first-order assessment of lunar resource potential. In doing so it is useful to distinguish between three possible future applications of such resources.

Digging deep

1. We have the option of using lunar materials to facilitate continued exploration, and future economic development, of the Moon itself. The concept is usually referred to as In Situ Resource Utilisation, or ISRU.

2. We could make use of lunar resources to facilitate scientific and economic activity in the vicinity of both Earth and Moon (so-called cis-lunar space) as well as future exploration deeper into the Solar System

3. We can consider the importation of lunar resources to the Earth's surface where they would contribute directly to the global economy.

Recent work - which I have summarised here - has shown that the Moon does possess materials suitable for ISRU. Most important in this respect is evidence for deposits of water ice and other volatiles trapped in cold (less than 100 Kelvin or minus 173 degrees Celsius) and permanently shadowed craters at the lunar poles. In addition to being required for human life support, water is also a ready source of oxygen (required for both life support and rocket fuel oxidiser) and hydrogen (a valuable rocket fuel).

In addition to possible ice deposits, it has been known since the early studies of the Apollo samples that the lunar soil contains volatiles, substances derived ultimately from the solar wind (e.g. hydrogen, helium, carbon, nitrogen, and at high latitudes, hydroxide and perhaps water), and these may also be exploitable for ISRU activities.

Although ISRU will undoubtedly benefit future scientific exploration, it is true that such activities will only make wider economic sense if further lunar exploration and development is able to yield net benefits to the global economy. It is here that the second of those three potential applications of lunar resources comes into play. Fuel's gold

Our global civilisation is already highly dependent on Earth-orbiting satellites for communications, navigation, weather forecasting and resource management, and this reliance is likely to increase. The high costs of these activities are largely dictated by high launch costs, and by the fact that failed satellites cannot currently be repaired or replenished in orbit. The availability of resources obtained from the weaker gravity conditions of the Moon would help mitigate these obstacles to further economic development in Earth orbit. Near-term lunar exports to a cis-lunar infrastructure could include the supply of hydrogen and oxygen as rocket fuel/oxidiser.

In addition, lunar surface rocks and soils are rich in potentially useful but heavy (and thus expensive to launch from Earth) raw materials such as magnesium, aluminium, silicon, iron and titanium. Therefore, if a lunar industrial infrastructure is gradually built up, the Moon may be able to provide more sophisticated products to Earth-orbiting facilities. Examples might include titanium and aluminium alloys for structural components, and silicon-based photovoltaic cells for solar power. The key business case for sourcing these materials on the Moon is simple. It takes about 20 times less energy to launch a given mass from the surface of the Moon into Earth orbit compared to launching it from the Earth's surface to Earth orbit.

Down to earth

This all seems pretty encouraging for any company or country considering drilling on the Moon, but opportunities for lunar resources to make a more direct contribution to the world economy by being imported to the Earth's surface are limited. This is because the Earth already contains the same basic mix of chemical elements as does the Moon, many of them in higher localised concentrations (i.e. ores), and we have a well-developed infrastructure for extracting and refining terrestrial raw materials.

The light isotope of helium (helium-3), which is implanted into lunar soils by the solar wind is often cited as an exception because it is perceived by some to be a potential fuel for future nuclear fusion reactors on Earth. However, sustainable nuclear fusion using helium-3 has yet to be shown to be practical, and even if it is, the concentration of helium-3 in lunar soils is so low (about ten parts-per-billion by mass) that strip mining and processing hundreds of square kilometres of the lunar surface would be required each year in order to make a significant contribution to Earth's future energy needs.

Other possible lunar materials which might conceivably be economically imported to the Earth include platinum group elements (currently valued at between $20,000 and $50,000 per kilo) extracted from iron meteorites that may have survived impact with the lunar surface, and materials (for example, economically valuable rare-earth elements which are known to be concentrated in some regions of the Moon) for which the environmental costs of terrestrial mining may one day make lunar sources more attractive.

Booster stages

When we pull together the evidence, it remains difficult to identify any single lunar resource that will be sufficiently valuable to drive a mining industry on its own. There is no simple solution. However, the Moon does possess abundant raw materials that are of potential economic interest.


We need to think of a hierarchy of future applications. This begins with the use of lunar materials to facilitate human activities on the Moon itself. We can then progress to the use of lunar resources to underpin a future industrial capability within the Earth-Moon system. In this way, gradually increasing access to lunar resources may help "bootstrap" a self-sustaining space-based economy from which the global economy will ultimately benefit.








வியாழன், 18 டிசம்பர், 2014

நினைத்ததும் இறைவனை மறந்ததும் அவனைநீ

பிஞ்சுக் கனிகள்தமைக் கொன்று குவித்தனை தோழா!
பெருவெடி தனிலென்பு நொறுங்கிச் சிதறின தோழா
கடவுள் மதமிவை தம்மொடு தொடர்பென்ன தோழா
பிஞ்சுகள் செய்திட்ட வஞ்சம் உரைகொள்கைத் தோழா!

கொலைபல செய்தார்க்கு வலைவிரித் தாட்கொளும் தோழா
சொர்க்கமன்றே சிறைசூழ் கம்பிகள் நரகம் அறி தோழா 
மலைபல கடந்தே அடைந்தனை மடமையில் தோழா\
நினைத்ததும் இறைவனை மறந்ததும் அவனைநீ தோழா

பிஞ்சுக் கனிகள்  :  வயதில் பிஞ்சு ;  கனிகள்  (பிள்ளைக் கனி  அமுது)  என்று  போற்றப்படும்  குழந்தைகள்;     ஆகவே:   இது  முரண் தொடை.(இலக்கணம்).
கனி = இனிமை தரும் சிறு பிள்ளைகள்.

சொர்க்கம் அன்றே =  சொர்க்கம் அல்ல; நரகம்;  இதுவும் முரண்.  
பின்  வரும் நரகம் என்பது  அதை உறுதிப்படுத்த.
நினைத்ததும் மறந்ததும் :  இதுவும் முரண் தொடை ஆகும். 
வயது ஒன்றே கருத்தாயின்  கிழவிகள் மட்டுமே கனிகள் என்று தகுதி பெறுவர்.  அது தவறு - அறிக.



இந்து என்று சொல்வதில் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


"எனக்கு வயது 70க்கு மேல் ஆகிவிட்டது. நல்ல பல அனுபவங்களோடு கூடிய போராட்ட வாழ்க்கை. எல்லாம் அறிவுப் போராட்டங்களே 
. அதில் ஒன்றே எனது சமயம் யாது என்ற போராட்டம். பல மத மாற்ற முயற்சிகள் அதனாலும் பல போராட்டங்கள் இப்பொழுது ஓர் முடிவிற்கு வந்துவிட்டேன். நான் ஓர் சைவன். இங்கு நான் ஓர் இந்து என்று சொல்வதில் கூட  எனக்கு விருப்பம் இல்லை, ‘இந்து’ என்பது மிகக் குழப்பமானது என்பதொடு வேதாந்த ஆதிக்கம் அதிகமாக இருக்கும் ஒன்று. மேலும் இப்பொழுது வடநாட்டு இந்துத்துத்வா ஆதிக்கம் வேறு. நான் விரும்பும் சிந்தனை சுதந்திரம் அங்கு இல்லை என்றும் நினைக்கின்றேன்."

-அறிஞர்  லோகநாதன்  


One can be a Hindu by default.  The pressure felt may be from one"s own mind. Hindu religion permits enquiry.  Many have enjoyed this freedom. No fatwa.

சாதி வேற்றுமை

சேர்தல்,  சார்தல் என்பன நுண்பொருள் வேறுபாடு உடைய பதங்கள். பொருள் பதிந்து நிற்கும் சொல்லே "பதம் " எனப்படுவது.  பதி + அம்  = பதம்.  தி என்ற எழுத்தின் இகரம் கெட்டுப் புணர்ந்தது.  இது நிற்க,   சார்தல் என்பது,  தனித்து நிற்க இயலாமல் மற்றொன்றுடன்  இணைந்தே நிற்கவல்லது  என்ற பொருளிலும் வரும். இதுவும் அதுவும் ஒரே வகையைச் சார்ந்தவை  என்று  சொல்கிறபொழுது,  சார்ந்தவை என்ற சொல்லுக்குப் பதிலாக சேர்ந்தவை என்ற சொல்லைப் போட்டாலும்,  பொருள்  மாறாமையினால்,  சேர்தல், சார்தல் என்பன ஒரு பொருட் சொற்கள், ஆனால் நுண்பொருள் வேறுபாடு  காட்ட வல்லன என்று அறிக.

சார்தி என்ற சொல்லே சாதி என்று இடைக்குறைந்தது.  இது போல் இடைக்குறைந்த சொற்களை முன்னர் காட்டியுள்ளேன். நேர்மித்தல் > நேமித்தல் :  ஒருவர் பெயருக்கு நேராக அவர் பதவியை எழுதி வெளியிடுதலே நேமித்தல். அரசர்  அல்லது அதிகாரி  அப்படி  எழுதுவதை இது குறித்தது. பின் அது நியமித்தல் என்று மாறியது. ரகர ஒற்று  மறைந்த இன்னொரு சொல் அது. 

சாதி என்பது முதலில் உயர்திணை  அஃறிணை  என எப்பொருளையும் தழுவி நின்றது.  "நீர் வாழ் சாதி"  என்ற தொல்காப்பியத் தொடர் காண்க.   நீரில் வாழும் சார்பினது  என்று பொருள். நீர் வாழும் வகை சேர்ந்தது என்று பொருள்.  சேர். சார்  :   சொல்லாட்சியை ஊன்றிக் கவனிக்கவும்.  

அணி இயலில்  வேற்றுமை அணி என்பதுமொன்று.  இவ்வணியில்  "சாதி வேற்றுமை"  என்ற வகை உள்ளது.  ஒரே வகைப் பொருட்களை வரிசையாகச் சொல்லி,  அவற்றுள்  வேற்றுமை தோன்றப் பாடலில் இன்புறுத்துவது  "சாதி வேற்றுமை" என்னும் அணியாகும்.  எ -டு :  கதிரவன்.  மதி ,  விளக்கு  இவை மூன்றும் ஒளி  காரணமாக ஒரே சார்பின  -   ஒரே சாதியின . ஆகவே,  இவ்வணி வகை  சாதி வேற்றுமையணி எனப்படும்.

இதற்குத்  தண்டியலங்காரம் தரும் ஒரு பாடல்:

வெங்கதிர்க்கும் செந்தீ விரிசுடர்க்கும் நீங்காது 
பொங்கு மதி ஒளிக்கும் போகாது;--- தங்கும் 
வளமையான் வந்த  மதிமருட்சி மாந்தர்க்கு 
இளமையான் வந்த இருள்.

இளமைக் காலத்தில் செல்வச் சேர்க்கையினால்  மதி  மருண்டுவிடுகிறது;  அதுவே இம்மாந்தர்க்கு இருள் !  ஆனால், இருளென்றால், சூரியனால் நீங்கவேண்டுமே!  நீங்காது .   நிலவொளியால்  விலகவேண்டுமே !   விலகாது.
விளக்கொளியால் போகவேண்டுமே! போகாது.    செக்கச் செவேர்  என்று எரிந்து சுடர் பரப்பும் தீயிலே தேய்ந்தொழிய வேண்டுமே!  ஒழியாது.ஏனென்றால், இவ்விருள் அகத்தின் இருட்டு.  வெளியே காணும் இருட்டு அன்று.

வேறுபட்ட ஒளி வகை;  வேறுபட்ட இருள்வகை. ஆகவே சாதி வேற்றுமை அணியாம்.




திங்கள், 15 டிசம்பர், 2014

மங்களம்

வெள்ளை  நிறத்துப் பொருட்கள் நாட்பட்டுவிட்டால், மங்கலாகி விடுகின்றன. அந்த நிலையில் அவை மஞ்சள் நிறத்தை அடைகின்றன.  தமிழில் மங்கல் என்ற சொல்லும் மஞ்சள் என்ற சொல்லும் ஒலிமுறையிலும் நெருக்கமாயுள்ளன. எனவே மஞ்சள் மங்கல் என்பன உறவுடையன என்பது தெளியக்கிடக்கின்றது.

மங்கல் >  (மங்கள் )* > மங்களம்.
மங்கல் > மங்கலம்.

சில சொற்களில் லகரம் *ளகரமாவதும் உண்டு.  செதில் ‍:  செதிள்.

மண்ணுமங்கலம், நாள்மங்கலம் முதலிய வழக்குகள் இலக்கியத்தில் உள்ளன.

ங்கு > ஞ்சு : திரிபு.

மங்கல் :  மஞ்சள்.

தங்கு > தஞ்சு  > தஞ்சம்.

அஞ்சியோ வேறு காரணத்தினாலோ,இடர் இல்லாத விடத்துச் சென்று தங்குதலே  தஞ்சம்  ஆகும்.

தன்னை ஓரிடத்தில் ஒப்புவித்தல் என,  தன் > தஞ்சு எனினும் அது ஆகும்.

தன் > தம் > தங்கு என்பதும் ஆய்வுக்குரியதே.

சனி, 13 டிசம்பர், 2014

வித்தகர்

விதை ஒன்று இட்டால் அது  சிறிது சிறிதாக   வளர்ந்து மரமாகிறது,

ஆசிரியன் ஒரு மாணவனுக்கு ஒன்றை விளக்கினால் அதிலிருந்து அது பெருகி அவனொரு புலவனாகிவிடுதல் காணலாம். விதைகள் சில உடன் முளைத்து வளரும், சில மெதுவாய் அல்லது பிற்காலத்தில் வளரும். கல்வி முதலியன குறிப்பதற்கு வித் (விது )  என்பது ஒரு சிறந்த அடிச்சொல்.

விது (வித்)  >  வித்தை.

விது  > வித்தகம்  (விது + அகம்).

இதை  விது  >  வித்து > வித்தகம் என்றும் காட்டலாம்.  எல்லாம் ஒன்றுதான்.

வித்து > வித்தகர்.  தம் துறை போகிய அறிஞர் .

more functions of suffix thu

து என்னும் பெயர்ச் சொல்லாக்க விகுதிபற்றி முன் இடுகையில் கண்டு மகிழ்ந்தோம்.
அங்கு விளக்கப்பட்ட விகுதி சேர்ப்பு  முறையையும் ஆக்கப்பட்ட சொற்களையும்   நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்  அதன் தொடர்பிலேயே சொற்கள்  சில காண்போம்.

வித் >  விதை.
வித் > வித்து.

இவற்றுக்கு அடிச்சொல் ஒன்றுதான். விதை என்பது ஐ விகுதி பெற்று வினைச்சொல்  ஆயிற்று. வித்து என்பது து விகுதி பெற்று பெயராகி விட்டது.

இங்கு பாருங்கள்;

கத் > கத்து. து பெற்று வினையாம்.

கத் > கதை.  வினையும் பெயரும் ஆகும்   கதை >   கதைத்தல். கதை என்பது முதனிலைத் தொழிற்பெயராகலாம்.

து என்பது வினைக்கும் பெயருக்கும விகுதியாகும்,


வித் என்பது ஆய்வில் வெளிப்போந்த செயற்கை அடிச்சொல்  தமிழ் பேசப்படும் மொழி ஆதலின் சொற்கள் வித்,  கத் புத் என்ற வடிவில் அமையா.
விளக்க்குதற்பொருட்டு பாணினி முறையில் அமைந்தவை இவையாகும்.
தமிழில் இயற்கை அடிச்சொல் விது  கது  குது எ ன்றமையும். தமிழ் முறையில் கது என்பது இரட்டித்துக் கத்து என்றாகும்/ பிறவும் அப்படியே. அப்போது இறுதி து என்பது விகுதி என்று தமிழ் இலக்கணியர்  கொள்ளார். இது தமிழுக்கும்  ஏனை மொழிகட்கும் காணக்கிடக்கும் வேறுபாடு ஆகும்.  ஆய்வில் தெளிவின்பொருட்டு இங்கு வித் கத் என்பன காட்டப்பெறும்.  இதனை முன்பும் விளக்கின நினைவு உள்ளது.

வெள்ளி, 12 டிசம்பர், 2014

The birthday of a Tamil King.

பிறந்த நாட் கொண்டாட்டம் எனில் சிறாருக்கு மகிழ்வு பொங்கிடும். சிறந்த ஆடைகள் அணிந்து, சுவையான உணவு உண்டு ஆடிக்களிக்கும் நாள் அது. இப்படித் தனிப்பட்டவர்கள் மகிழ்ச்சிக்கடலில் மிதந்த கொண்டாட்டத்தைப்  பழந்தமிழ் இலக்கியங்களில் தேடிப்பாருங்கள்.  உண்டோ இல்லையோ, அரசர் பெருமக்கள் கொண்டாடியது பற்றிக் குறிப்புகள் காணக்கிடைக்கும்.  புறப் பொருள் இலக்கணத்தில் இது "நாள்மங்கலம்"  என்று சிறப்பித்துக் கூறப்பெறும்.  

"சிறந்த நாளினிற் செற்றம் நீங்கி 
பிறந்த நாள்வயிற் பெருமங்கலமும்."

என்பார்  தொல்காப்பிய  முனிவர்.

அரசன் பிறந்த நாளைப் பாடினால்  புலவரின் பாட்டு "நாள் மங்கலம்" என்னும் துறையுட்   படும் என்பது.   ( பாடாண் திணை.)

அறந்தரு செங்கோல் அருள்வெய்யோன் 
பிறந்த  நாட்  சிறப்புரைத்தன்று.

என்பது புறப்பொருட் கொளு.  (பு  வெ மாலை -  24:  212.)

இந்த விழா நாட்களில் அரண்மனைக் கதவுகள் திறந்து விடப்பட்டு,  உணவு விருந்துகள் நடைபெறுதல் மட்டுமின்றி,  அரசர்  பெருமானின் நட்பு விழைந்த பெண்டிரும் வரவிடப் படுவர். இத்தகைய நாட்களில் அரசருடன் நெருக்கம் விழைந்து திரிந்த பெண்களும் பலரென்பது தெரிகிறது. எனினும் அரசர்கள் கவனமாய் இருந்தனரென்று நாம் ஊகிக்கலாம்.

அரசன் -   அருள் வெய்யோன்.  அவனிடம் குளிர்ந்த அருளும் இருந்தது. கடத்தற்கரிய  வெம்மையும்  இருந்தது. 


I have not come across any narration of a woman  assasinating a Tamil king on an "Open House" occasion such as the above. We can therefore safely assume that the kings were careful and they properly screened persons entering the palace on such days.






தமிழனே கட்டினான் ஓர்கோவில்

தமிழனே கட்டினான் ஓர்கோவில் == அது
தங்கிடும் கீர்த்தியில் மக்கள்நாவில்;
இமிழ்கடற் க‌ப்பால் ஒருதீவில் == கொலை
இழைத்தோற் கருளுமோ இந்த நாளில்?

ஒப்பார் உலகினர் எங்கெங்குமே == மக்கள்
ஒன்றெனக் கொள்வதே தங்கமென்க;
நற்பார் அமைந்திட நன்மைபெற == மேலோர் 
நாடும் அதுவழி புன்மையற.

இம்மா உணர்வில் இழிகொள்கையன் ‍‍== அவற்
கிடமோ தேவனின் சிந்தைதன்னில்;
தம்மா றதன்தவ றாய்ந்துபோற்றான் == கோயில்
தன்னில் இறையருள் பெற்றதுண்டோ?

கீர்த்தி


மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது என்பர்.   கீர்த்தி என்னும் சொல் அமைந்தது எவ்விதமோ?  இதுபோது காண்போம்.

சீர் > சீர்த்தி.  (தி - விகுதி)
இது பின்பு கீர்த்தி என்று மாறியது.

சகர வருக்க எழுத்துக்கள் (ச, சா, சி ....எனும் தொடக்கத்தன )
ககர வருக்கமாகத்  திரிபும்.

எ-டு :  சேரலம்  >  கேரளம் .
            ( சீர்வாணி ) >  கீர்வாணி.
            தக்கிணை >  தச்சிணை > தட்சிணை.  (சேவைக்குத் தக்க  இணை  என்று பொருள் )

பல மொழிகளில் இத்தகு திரிபுகள் உண்டு.

புதன், 10 டிசம்பர், 2014

பீடம் என்ற சொல்.

பீடு என்ற தமிழ்ச்சொல் பெருமை குறிப்பதாம், எடுத்துக்காட்டாக பீடுநடை என்ற வழக்கினைக் காண்க. பெருமிதம் தரும் நடையை அப்படிக் குறிப்பர்.

தரை மட்டத்திலிருந்து சற்று உயர்ந்த இடத்தைப் பீடம் என்கிறோம்.
பீடு உயர்வு ஆதலின், பீடம் தரையிலிருந்து மேலெழும் ஓர் இடத்தைக் குறித்தது.

பீடு+ அம் = பீடம் ஆகும்.
ஆனால் நோய் குறிக்கும் பீடை என்ற சொல் எங்ஙனம் உருப்பெற்றது?

செவ்வாய், 9 டிசம்பர், 2014

ஆட்டோ என்ற பெயர்.

ஆட்டோ எனில் தானே இயங்கும் ஒன்றென்பது சொல்லமைப்புப் பொருள்.
ஆட்டோ என்ற முன்னொட்டுப் பெற்ற பல ஆங்கிலச் சொற்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக ஆட்டோமேட்டிசம் என்பது காண்க,
ஒருவகையில் எல்லா இயங்கி வகைகளும் ஆட்டோதாம் என்றாலும்
இப்பெயர் தென்கிழக்காசிய நாடுகளில் காணக்கிடைக்காத,  இந்திய நகரங்களில் மட்டும் உள்ள ஒரு மூவுருளை வண்டியைக் குறிக்கிறது.
இது பெரிதும் வாடகைக்குக் கிடைக்கும் வண்டிவகை யாகும். ஆட்டோக்காரன் என்பது அதனை ஓட்டுகிறவனைக் குறிக்கிறது.

இதனை ஒரு காரண இடுகுறிப்பெயராகக் கொள்ளலாம். நாற்காலி என்பது நால் கால் உள்ளது என்று பொருள்பட்டாலும் நாலுகால் உள்ள நாய் என்னும் விலங்கை அது குறிக்காது. இப்படிப் பார்த்தால் 
உலக மொழிகள் பலவும் குறையுடையவைதாம், சொற்புனைவுக்கு ஒரு  காரணமிருந்தாலும் அக்காரணம் முழுமையாய்க் குறிக்கும் பொருளைச் சென்று தழுவுதல் இல்லை.

ஆட்டோ என்பதைத் தானி என்று மொழி பெயர்த்துள்ளனர், இந்தச் சொல்லும் ஆட்டோ என்பதில் உள்ள குறை நிறைகளை உள்ளடக்கியவாறே அமைந்துள்ளது. அங்ஙனம் இன்றி ஒரு சொல்லை அமைத்தல் இயலாது என்பதால் அது ஏற்புடையதே ஆகும்.

ஆட்டோவைத் தானி என்று மொழிபெயர்த்தவர் பாராட்டுக்குரியவர்,

திங்கள், 8 டிசம்பர், 2014

கொலம்பஸ் பெயர்க்கு அரைவிடுதலைதான்.

கிரந்தி என்னும் பறங்கிப் புண் நோய்
புத்துல   கிருந்து இத்தரை வரைக்கும்
பரப்பிய கடலோடி கொலம்பஸ் என்றனர்,
பழைய எலும்புகள் ஆய்வு செய்ததில்
நிலையை மாற்றிக் கொண்டனர் அறிஞர்
ஐரோப் பியத்தில் அதற்கு முன்னர்
வாழ்ந்தோற் கந்நோய் இருந்தமை கண்டனர்,
கொலம்பஸ் அதனைக் கொண்டுவந் திருக்கலாம்'
வலம் அழி அந்நோய்   முனம்இருந்  திருக்கலாம்
பின்னது பெருவலை பின்னியு  மிருக்கலாம்
என்று பலவா றியம்பி நிற்பதால்
கொலம்பஸ் பெயர்க்கும்  அரைவிடு தலைதான்.
நிலம்பழி நிலைமை சற்றுகுறைந் ததுவே.



முனம்  =  முன்னம்   முன்பு.    வலம் =  வலிமை; உடல் நலம்.
பெருவலை ‍=  பலரையும் பிடிக்கும் வலைபோன்ற நோய்ப் பரவல்.
நிலம்பழி ‍= இவ்வுலகம் பழிக்கும்


ஞாயிறு, 7 டிசம்பர், 2014

the suffix "thu" a brief exploration

இப்போது  :"து " என்னும் பெயர்ச்சொல் ஆக்க விகுதியைப் பார்க்கலாம்

து என்னும் விகுதி தொன்று தொட்டுத் தமிழில் பல்வேறு வகைகளில் பயன்பாடு கண்டுள்ளது. சுட்டுப் பெயர்களான  அது  இது  உது என்பவற்றில் அது உள்ளது.  வினாப் பெயரான எது என்பதிலும் உளது. ஏது  என்பதிலும் இருக்கிறது.

ஆனால் மனம் என்ற சொல் "மனது"" என்று மறுவடிவம் அடைந்தபோது  அது (அதில் ஏற நினைத்த து விகுதி) வெற்றி பெறவில்லை.மனம் என்பது முன்னரே பெயர்ச்சொல் ஆகிவிட்டபடியால் அச்சொல்லில் உள்ள மகர ஒற்றைக் கெடுத்து, அதில் து விகுதியைச் சேர்த்ததில் தமிழாசிரியன்மாருக்கு  உடன்பாடு இல்லை.  து என்பது  சு என்று திரிவது விதிப்படியான திரிபு என்றாலும் பின்பு (மனது  > ) மனசு என்றானது  பேச்சு வழக்குச் சொல் என்றே கொள்ளப்படும். மனஸ் என்பது அடுத்தவீட்டுத் திரிபு. ( Pl see footnote  1 below)

ஆனால் வயது என்பது ஏற்றுக்கொள்ளப்படும் இது தமிழன்று என்று சொல்லிவிட்டால் அதை விளக்கிக் கொண்டிருக்கவேண்டியதில்லை. நேரம் மிச்சம். ஆனால் முன் இடுகை காணவும். 

திருடன், காவலனின்   கையிலகப்பட்டுக் கொண்டதைக் காட்டும் சொல்லாகிய "கைது " என்பதில் அது வழக்குப் பெற்றுள்ளது. விளக்குவதற்குத் தொல்லையான இதைத்  தமிழன்று என்றால் வேலை எளிதாகிவிடும். கை + து  = கைத்து  என்று ஏன்  வரவில்லை என்பது கேள்வி . கைத்து என்று வலி மிக்கு வந்தால் வேறு பொருளாகிவிடும்.

விழு > விழுது என்ற சொல்லில் அது அழகாக அமர்ந்து கொண்டுள்ளது காணலாம்.

மயக்கம் தருவது ..> ம(  யக்கம் தருவ) து >  மது . இடையில் உள்ளனவற்றை
விழுங்கிவிட்டால்  உங்களுக்கு மது கிடைத்துவிடும். இதென்னவாம்? இங்கு து விகுதியா??


-------------------------------------------------------------------------------

"ஆசைப் பட்டது நானல்ல என் மனது என் மனது 
அவசரப் பட்டது நானல்ல என் வயது , என் வயது"
என்பது ஒரு திரைப்பாட்டின் வரிகள்.  Hope I've rendered this correctly.  கவிகள் இப்படிப் புனையும்போது  தமிழாசிரியர் 
எத்தனை நாட்களுக்கு அவர்களை  எதிர்த்து நிற்க இயலும் 
என்று தெரியவில்லை. 

வெள்ளி, 5 டிசம்பர், 2014

வயது அகவை

ஆங்கிலத்தில் ஏஜ் என்பதற்கு நேரான பொருளுடைய வயது, மற்றும் அகவை என்ற இரு சொற்களையும் இப்போது நுணுகி அறிவோமே.

காலச் செலவின் பிடிகளுக்குள் இடையீடின்றிச் சிக்கித் தவிப்பவன் மனிதன்.அதன் வயப்பட்டு இருப்பதும் இறுதியில் இறப்பதும் அவனுக்கு விதிக்கப்பட்டுள்ளது.  இந்த விதியை மதியால் சற்று அகற்றி வைக்கலாம் எனினும் முற்றிலுமாக நீக்கிவிடுதல் இயலாது.


ஆகவே காலச்செலவு, அல்லது காலக் கழிவுக்கு அவன் வயப்பட்டுக் கிடக்கிறான். அது அவனை ஆட்டிப்படைக்கின்றது.  

காலத்தை வென்றவன் என்பது காலம் கடந்து மக்களின் நினைவில் வாழ்கிறவன் என்று புலவர் புனைந்துரைப்பதுவாகும். 

காலக்கழிவில் வயப்பட்டுக் கிடப்பவனுக்கு, அங்ஙனம் அவனை வயப்படுத்தும் ஒவ்வோர் ஆண்டும்  ஒரு வயது என்றனர். வயம் > வயது.
வை > வய் > வய்+அது > வயது.  வய் + அம் = வயம். 
அதாவது மனிதன் வயமாய் வீழுங்காலை, ஏதோ ஓர் ஆற்றல், அவனைப் பிடித்து அங்கே வைக்கின்றது. வைக்கப்படுவதே, வயப்பட்டுக் கிடப்பதாம்.
காலச் செலவுக்கு வயப்பட்டுக் கிடப்பது, தேய்வது, அழிவது என்று பலவாறு 
விரிக்கலாம். எல்லாம் அதுதான்.வயப்படுவது மட்டுமன்று, காலக் கழிவில் அவன் அகப்பட்டுக் கொள்கிறான்.
விடுபடுதல் இல்லை. இதற்கு அகவை என்ற சொல்லும் மிக்க அருமையாய் அமைந்த சொல்லாகும்,  வயது என்பதுபோலும் அதே கருத்தினடிப்படையில் அமைந்ததே அந்தச்சொல்லும்.

அகம் > அக > அகவை.

அகம் : உள்ளே. வை : வைக்கப்படுகின்றான்.  அகவை --. வை என்பதோ  எனின், அது ஒரு விகுதியாகவும் மற்றும்  உள் இடப்படுதலின் ஒரு குறிப்பாகவும் விளங்குதல், தமிழினிமை ஆகும்.

நாளை வைப்பதாகவும் காலத்தினை வைப்பதாகவும் கூறலாமோ?
வைப்பது என்பது ஏதேனும் ஒரு பருப்பொருளை வைப்பதுதான், அந்தப் பருப்பொருள்  வைப்பிலிருந்து நுண்பொருள் வைப்புக்கும் கருத்து, காலம் முதலிய கையில் பிடிக்கமுடியாதவற்றை வைப்பதற்கும் மொழிகள்
முன்னேறி பன்னெடுங்காலம் ஆகிவிட்டது தோழியரே!

விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கின்றானே ஒரு மறவன். அதனைக் குறளில் கண்டின்புறலாமே!


There is much philosophy in many of our Tamil words.  Well, other languages too. 

உலகத்தில் பொருளியற்குத் தூணாம்



ஒன்றிணைந்த அமெரிக்க மாகா  ணங்கள்
உலகத்தில் பொருளியற்குத் தூணாம் இன்றோ
நின்றிருந்த நிலைபோக நேர்ந்த தொன்று
நேர்கீழாய் இறங்கியதே முன்மை வீழ்ந்து
குன்றியிரண் டாமிடத்தில் சேர்ந்த தாலே
குறைவேதும் ஏற்படுமோ ஞால மீதில்?
நன்றியுடன் நானிலமும் அத்தே யத்தை
நல்லமுதல் இடத்திற்கே உய்க்கு மோபார்


  1. useconomy.about.com  › Blog  › Bl2008
    Let About.com send you the latest from our US Economy Expert. Thanks for signing up! ... The U.Seconomy is growing, but just not as fast as the EU.
  2. Brett Arends"/>
    Chinese economy overtakes the U.S.’s to become the largest
    Reuters A Bank of China branch under construction early this year in Guangzhou, Guangdong Province. A C D MA MB MC MD ME MP
.............................................................

மாணவி கற்பில்

மாணவி கற்பில் மகிழ்ந்திருந்த வாத்தியார்க்குப்
போனதடி சிங்கப்பூர் வாழ்வுரிமை === ஏனிவனே
குற்றச் செயலில் குறுமதி கொண்டலைந்தான்
முற்றும் திருந்தானை மொத்து


Malaysian law lecturer in sex-for-grades scandal loses Singapore PR case

.


https://sg.news.yahoo.com/malaysian-law-lecturer-sex-grades-scandal-loses-singapore-012942320.html


A Malaysian law professor, embroiled in a sex-for-grades scandal, has lost his bid to have his Singapore permanent resident status reviewed after it was revoked last year, reports The Straits Times today.
Tey Tsun Hang lost his PR status when he left the country without a re-entry permit (REP).
The former National University of Singapore (NUS) lecturer had been convicted in June 2013 of corruptly obtaining sex and gifts, including a Mont Blanc pen and an iPod, from his former student Darinne Ko, as an inducement to give her better grades.
Tey, 43, was accused of "clearly and systematically" taking advantage of Ko and had even impregnated her.
More at the website.....................

செவ்வாய், 2 டிசம்பர், 2014

குது என்னும் அடிச்சொல்

இப்போது குது என்னும் அடிச்சொல்லைப் பற்றிச் சிந்திப்போம்.

குது என்பதன் அடிப்படைப் பொருள், தொடுதல் என்னும் கருத்தே ஆகும்.
தொடுதலிற் பலவகை.சற்று கடுமையாகச் சென்று தொடுதல், மென்மையாகத் தொடுதல் என்று சொற்களை ஆய்ந்து அறிந்துகொள்ளலாம்.

குது என்ற சொல், இடைவிரிந்து குத்து என்று ஆகும்.  கூரான பொருளால் குத்துதல்,கூரற்ற பொருளால் குத்துதல் என்று வேற்றுமையுண்டு.

குது >  குத்து.

தகர ஒற்று வல்லினம். குத்துதல் என்பது வன்மையாகத் தொடுதலாகும்.
அதுவே மென்மையுடன் நிகழுமாயின், அதற்கேற்ப வல்லினத் தகர ஒற்று மெல்லினமாகி விடும்.

குது > குந்து என்று ந்  வந்து மென்மையானது.

குந்தும் போது உடற் பின்பாகம் தரை தொடுகிறது. என்றாலும் இது வன்மையாக நிகழ்வதன்று என்பது சொல்லவேண்டுவதில்லை.

உட்காருங்கால் தரையிற் படும் உடற்பின்பாகம் குறிக்கும் சொல், வல்லின ஒற்றின்றி, மெல்லின ஒற்றுமின்றி ஒரு சொல் பெற்றது.

குது >  குதம்.  (குது + அம்).

குதம் என்பது செயல் ஒன்றும் குறிக்காத உடற்பகுதி.  எனவே அது
வலிக்கவோ மெலிக்கவோ செய்யாமல், அடிச்சொல்லிலிருந்தே அமையலாயிற்று.

இனிச் சாய்வு ஏதுமின்றி தரைதொட்டு நிற்கும் செயலுக்குச் செங்குத்து என்ற சொல் பயன்பட்டது. செம்மை முன்னொட்டு சாய்வின்மை குறிக்கின்றது.

குது > குத்து >  செங்குத்து. (செம் + குத்து).  முழுச்சொற்களாய்ப் புணர்பெறுதலையே இலக்கணியர் போற்றினராதலின், செம் என்பதனோடு மை விகுதி சேர்க்கப்பட்டு, செம்மை + குத்து எனவந்து, பின் மை கெடுத்து, செங்குத்தாக்கினர்.

செங்குத்தாக நீட்சியுள்ள ஒன்றை (தடியை)ப் பிடித்துக்கொண்டு அணிவகுத்துச் செல்வது படைமறவரிடத்து நடைபெறுமொரு நிகழ்வு.
இது காண அழகாய் இருக்கும். அதற்கேற்ப, செங்குத்து என்பதிலுள்ள‌
வல்லினத் தகர ஒற்று, நகர ஒற்றாக (  ந்  )  மாறி அமைந்தது; ஆக‌

செங்குத்து > செங்குந்து > செங்குந்தம் என்றாகும்.

இதைப் பிடித்துக்கொண்டு, முதல் வரிசையிற் சென்ற படைஞர், செங்குந்த முதலியார் எனப்பட்டனர்.

வாழ்க்கையும் ஓர் இயங்கு திறமுடைய ஓர் இயந்திரமே ஆகும், இக்கருத்து சரியோ தவறோ ‍== அது நின்றுவிடின், அது நிலைகுத்தி விட்டதென்பர்.  நிலை குத்துதல் என்பதில் குத்து என்பதைக்  கவனிக்கவேண்டும்.  குத்தி நிற்பது, ஓடாமல் நிற்பது. வாழ்க்கை ஓடுகிறது; ஓடாதபோது நிலை குத்தி நிற்கின்றது.  அது ஓரிடத்தில் உட்கார்ந்து போய்விட்டதெனலாம். ஆதாவது குந்திவிட்டது. குந்துதல் தொடர்பில் அமைந்ததே:

குந்துதல் :  குந்து > குந்தகம் ஆகும்.

இருவர் (அல்லது அதனின் மேற்பட்ட எண்ணிக்கையுடையோரோ) சேர்ந்து நிகழ்த்தும் ஒரு செயல்பாட்டில், கருத்துகளும் நடைமுறைகளும், செய்ம்முறைகளும் அங்குமிங்கும் வழவழ என்றில்லாமல் வரையறவு உடையனவாய் இருத்தல் வேண்டும். அதுவும் வணிகம், வியாபாரம், நிதி நிறுவாகம் முதலியவற்றில்  இன்றியமையாதது. ஒப்பந்தங்கள் ஏற்பட்டபின், இந்த நெகிழ்வு நிலை   ஓடிக்கொண்டிராமல் குத்தி நிற்கும்.

குத்து >  குத்து + அகம் + ஐ = குத்து+ அக + ஐ =  குத்தகை.

குத்தி நிற்கும் வரையறைக்குள் நெகிழ்வு நிலை அகப்பட்டுக் கொண்டதென்பது பொருள்.  சில்லறையாக இல்லாமல், கொத்தாக (மொத்தமாக)ப் பிடிக்கும் வணிகத்தில்   கொத்து > கொத்தகை > குத்தகை  என்றும் காணலாம் ஆகையினால் இச்சொல் ஒரு இருபிறப்பி எனலாம்.

குது என்பது தொடுதற் கருத்தாதலின், பிறனுடலை வன்மையாகத் தொடும் ஒரு விளையாட்டுக்குக் குத்துவிளையாட்டு என்றனர். அதுபின் குத்திவிளையாட்டு , குஸ்தி விளையாட்டு என்று திரிந்தது.

குத்து >குத்தி > குஸ்தி.

கால்களால் வன்மையாகத் தரையைத் தொடுதல், குதித்தல் ஆகும்,

குது > குதி > குதித்தல்.

குதித்தாடுதல், கூத்து:

குது > குத்து > கூத்து.  தரையில் கால்கள் சற்று வனமையாய்க் குத்துவதுமாம்.

குத்து : > குத்தாட்டம்.


கூத்து என்பது குத்துதல் என்பதன் முதனிலை நீண்ட தொழிற்பெயர் என்பதைக் கண்டுகொள்ளலாம்.

நிற்றல், நடத்தல், ஆடுதல், ஓடுதல்,   ஓடுதலும் நிற்றலும் மாறிமாறி வருதல், என‌ இன்ன பிறவும் நடனத்தின் பல்வேறு உறுப்புகள்.

நில் > நிறு > நிரு > நிருத்தம்.  றகரம் ரகரமாகவும் திரியும்.
நட > நடம் > நடன் > நடனம்,  இவற்றில் விகுதிகளை ஒன்றாய்க் கட்டி, நட + அனம்  நடனம் எனினும் அதுவேயாம்.


நிற்றல், நடத்தல், ஆடுதல், ஓடுதல்,   ஓடுதலும் நிற்றலும் மாறிமாறி வருதல், என‌ இன்ன பிறவும் நடனத்தின் பல்வேறு உறுப்புகள்.

நில் > நிறு > நிரு > நிருத்தம்.  றகரம் ரகரமாகவும் திரியும்.
நட > நடம் > நடன் > நடனம்,  இவற்றில் விகுதிகளை ஒன்றாய்க் கட்டி, நட + அனம்  நடனம் எனினும் அதுவேயாம்.

நடு>  நடுதல்,
நடு > நட > நடத்தல்: கால்களைத் தரையில் நட்டு, நட்டு முன்செல்லுதல்.  நட > நடனம்.
குத்து > கூத்து : கால்களைக் குத்திக் குத்தி யாடுதல்.

இவையெல்லாம் நடனம் இன்றைய உன்னத நிலையை எய்துமுன்
பழங்காலத்தில் அமைந்த சொற்கள்.

இவற்றை அமைத்த மக்களைப் பாராட்டவேண்டும். இற்றை நிலையில் இப்படி அமைக்க இற்றை மக்களும் புலவர்களும் திணறியிருப்பார்கள்.


[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[

இறையனார் அகப்பொருளிலிருந்து "சென்றே ஒழிக"

சென்றே ஒழிக  வயலணி ஊரனும் தின்னத்தந்த‌
கன்றே  அமையுங் கல்வேண்டா பல்யாண்டு கறுத்தவரை
வென்றான் விழிஞம்கொண் டான்கடல் ஞாலம் மிக அகல் இது
அன்றே அடியேன் அடிவலங் கொள்ள  அருளாகவே (275)

இறையனார் அகப்பொருளிலிருந்து  ஓர்  உதாரணப்1 பாடல்.

இந்தப் பாடல், பரத்தையிடம் போதற்குப் பிரிந்த தலைமகன் பற்றியது என்ப‌. But please see  last few paragraphs herein. அவன் போய்விட்டாலும் அவனுக்காகத் தலைமகளிடம் பேச, ஒருவன் வருகிறான். அவன் யாரென்பது, பாட்டிலிருந்து வெளிப்படையாகத் தெரியவில்லை.அவன் தலைமகளிடம்  பேசியதாக வருகிறது இந்தப் பாடல்.


சென்றே ஒழிக வயலணி ஊரனும்:  அழகான வயல்கள் நிறைந்த ஊரை உடைய‌ அந்தத் தலைவன்   போனால் போகட்டுமே! (அப்படி உங்களை விட்டு
எங்கே போய்விடப் போகிறான் என்பது)

தின்னத் தந்த கன்றே அமையும் :  புல், பிண்ணாக்கு முதலிய தீனிகள் அளித்ததுக் கொண்டிருக்கிறானே, உங்கள் கன்றுகட்கு! உங்கள் வீட்டின் பாலுள்ள அன்பையும் கவனிப்பையும் அவன் மறந்துவிடவில்லை என்பதை, இந்த அவன் செய்கை காட்டுகிறதே. புல் பிண்ணாக்கு தவிடு முதலிய தின்னத்தந்த கன்றுகள் சான்றாய் அமையும் என்றபடி,

கல் வேண்டா: அவன் போய்விட்டானென்று நீங்கள் உயிர் விடுவதா? கல் ‍ நடுகல்;( நீங்கள் நடுகல்2 ஆகவேண்டாம்.)

பல்யாண்டு கறுத்த வரை வென்றான்:  அவன் கறுத்துவிட்ட பழைய மலையை வென்றவன்; ( பல்லாண்டு சினந்து போர்செய்து மலையை வென்றவன் எனினுமாம். ) கறுத்தல் ‍ சினத்தலும் ஆகும். Rocks become darkened  owing to raining for a long time.  (old rocky mountain ) வரை:  mountain.
...
விழிஞம் கொண்டான்:  கடற்போரிலும் வென்றவன்; ( உங்கள்   தலைவன், வீரன்; நாட்டுப் பற்று உடையவன். அவன் வென்ற  இடங்களை விட்டு நீங்கிவிடமாட்டான்.)


அடியேன் அடிவலங் கொள்ள -  அடியேனின் அடிகள் வலமாகச் -சென்று தேடுவதற்கு,  அடிவலம்கொள்ள -: நடந்து  சுற்றித் தேட‌

கடல் ஞாலம் மிக அகலிது அன்றே :  கடலால் சூழ்ந்த இவ்வுலகு மிகவும் அகன்றது அன்றோ?

(ஆகவே விரைந்து ஒன்றும் நடந்துவிடாது, காலம் தேவை.  இப்போது எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறானென்பதை  உடனே அறிந்து கொள்வதும் அரிதே ஆகும்.)

அருள் ஆகவே: யாவும் நன்று ஆவதற்கு அருள் உண்டாகட்டும் என்றபடி


தலைமகன் எதுகாரணமாகச் சென்றுவிட்டானென்பதற்கு இப்பாடலில் வெளிப்படைக் குறிப்பு எதுவும் இல்லை, பரத்தை காரணமாக என்பது உரை எழுதியோர் கூற்றேயாகும். கல் வேண்டா என்றதால் பிறபெண்ணை நாடிச்சென்றிருத்தல் கூடுமென்பதும் அவள் பரத்தையாய் இருப்பாள் என்பதும் ஊகமாம்.(யூகம்). உண்ணுதல் என்னாது தின்னத் தந்த என்றதனால் புல் முதலியன கன்று ( or கன்று புல் முதலியன....... ) தின்னத் தந்த என்பது பெறப்படும். வீட்டில்  கன்றுக்குத் தீனி உட்பட எல்லாவற்றையும் கவனிப்பவன் என்பதனால் கவலை கொள்ள வேண்டாமை அறிகிறோம். பாடலுக்கு உரையாசிரியர் உரை ஏதுமில்லை.தலைப்புத் தந்ததே உளது அதுவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாய் இல்லை. பாடல் புனைந்தவர் யாரென்பது தெரியவில்லை.

தலைமகள் வீண்கவலை காட்டுவது இப்பாடல்.

அருள் ஆகவே என்றதனால் வந்தவன் முதியோனாய் இருக்கலாம். தான் தேடிக் கண்டுபிடிக்க நாளாகலாம் என்பதால் அவன் தலைமகனால் அனுப்ப‍ப்பட்ட தூதுவனல்லன் என்பதே சரியாகும்


1 உதாரணம் என்பது மிக்க அழகாய் அமைந்துவிட்ட ஒரு சொல். அது இது உது என்பவற்றில் உது:  முன் நிற்பது; ஆர் : நிறைவு; அண் : பொருளால் அண்மையில் இருப்பது; அம் : விகுதி;  ஆகவே உதாரணம் என்றனர்.

2 þíÌ ¯¨Ã¢ø ¿Î¸ø ±ýÈÐ À¢½õ Ò¨¾ò¾À¢ý Ò¨¾ò¾ þ¼ò¾¢ø
¨Åì¸ôÀÎõ «¨¼Â¡Çì ¸ø¨Ä. Not used here in the sense it has
been used in ancient grammar works. (Not a "technical term" or "term of art" in the commentary herein). The writer at this point was neither referring to nor having any interest in those works for her purpose of interpretation.  

Footnote 2 added on 12.3.2018.
Will edit later