புதன், 30 செப்டம்பர், 2015

vASthu SASthiram

வீட்டினுள் புகவும் வெளியேறவும் வசதியான ஓர் இடத்தில்தான் வாயிலை அமைப்பான், வீடு கட்டுகிறவன்.  இதில் அவன் வெற்றிகாண்பதில் உறுதி தென்படுமானால். அடுத்து  இளம்பரிதியின் காலைக் கதிர்கள் வீட்டுக்குள் வந்து இல்லத்தில் வாழ்வோரின்  மேல் படவேண்டும், அதனால் உடல் நலத்துடன் மிளிரவேண்டும் என்றேல்லாம் விரும்புவான்.  இதற்கும் அடுத்து, வாயில் எங்கு அமைந்தால் போகூழால் புண்பட்டுப் புன்மை அடையாமல், வருவதனைத்தும் நல்ல உடல் நலமும் பணவரவுமாக இருக்கவேண்டும் என்று விரும்புவான்.. வாயில் அமையும் இடம் அதற்குத் துணை செய்யும்  என்றும் எதிர்பார்ப்பான்.

இது நல்ல நம்பிக்கையா, மூட நம்பிக்கையான என்பதல்ல கேள்வி.

இதைக்கூறும் வாஸ்து சாஸ்திரத்தில் வாஸ்து என்ற சொல் எப்படி அமைந்தது என்பதே நம் ஆய்வு.

தமிழில் வாய் என்பது பல பொருளொரு சொல். இச்சொல்லின் முன்மைப் பொருள் இடம் என்பது.
இது புகுமிடத்தையும் உட்கொள்ளும் வழியையும் குறிக்கும் என்பது நீங்கள் அறிந்ததாகும்.

வாய்+ இல் = வாயில். (இல்லுள் புகுமிடம்)
வாய் -   இடம்;  இல் =  வீடு.
வாயில் :  இல் வாய்.

திரிபுகள்:

வாயில் > வாசல்.
ய > ச திரிபுவகை.
யி என்பதில் உள்ள இகரம் மறைந்து  அங்கு ஓர் அகரம் தோன்றியது.

வாயிற்படி > வாசற்படி : >  வாசப்படி.(பேச்சு  வழக்கு).

வாய் >  வாய்த்து  (வாயிலுக்கு உரியது)

து என்பதும் ஒரு சொல்லாக்க விகுதி.

ஒ.நோ:  வரு > வரத்து,
முன் இடுகை (அந்தஸ்து ) காண்க.

வாய்த்து > வாஸ்து. வாயிலுக்குரிய சாத்திரம்,

இக்கலை வளர வளர வாயில் மட்டுமின்றி சுவர், தரை கூரை எல்லாவற்றையும் பற்றிக்கொண்டு விரிவடைந்தது.

( the base (foundation), column, entablature, wings, roof and dome.)








நெடிது வாழ மருந்து

எப்படி மரணமிலாப் பெருவாழ்வு வாழ்வது என்பது எல்லோரையும் எக்காலத்தும் சிந்தனையில் ஈடுபடுத்துமொரு விடயமாகும். இப்பொருள் பற்றிய ஒரு கட்டுரையைப் படித்து இன்புறுங்கள்:



http://www.medicaldaily.com/eternal-life-russian-scientist-anatoli-brouchkov-injects-himself-35-million-year-old-354756?rel=most_shared2


Eternal Life': Russian Scientist Anatoli Brouchkov Injects Himself With 3.5-Million-Year-Old Bacteria To Boost Longevity, Immune System

Pleasant Jaunpuri raaga

இனிமையான இராகம் யோன்புரி  (ஜோன்புரி.)     பல வடஇந்தியப் பாடல்களும் தமிழிப் பாடல்களும் வந்துள்ளன.

chandrakantha.com › Fundamentals of Rag › Film Songs

http://chandrakantha.com/raga_raag/film_song_raga/jaunpuri.shtml


A Raga's Journey — Jaunty Jonpuri - The Hindu

http://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-jaunty-jonpuri/article3408214.ece

நாதகிரத்திலும் நன்றாக இருக்கும்.

திங்கள், 28 செப்டம்பர், 2015

அந்தஸ்து

இன்று  அந்தஸ்து என்ற சொல்லைச் சற்று பார்ப்போம்.

இது தமிழ் நூல்களில் செய்யுளில் அந்தத்து  என்றும் வந்துள்ளது/

பல தமிழ்ச் சொற்களில் வட ஒலிகள் புகுந்துள்ளன என்பதை முன் இடுகைகளில் விளக்கியுள்ளோம்.  காட்டாக  குட்டம் என்ற சொல்  குஷ்டம் என்று மாறியதைக் குறிப்பிடலாம்  (see notes 2 below)/

வட ஒலிகளுக்குரிய எழுத்துக்கள் வரின் அவற்றை விலக்கவேண்டும் என்பது செய்யுளீட்டத்து விதியாகும் . " வடவெழுத்து  ஒரீஇ"  (தொல் )   என்பது  நீஙகள்  அறிந்தது ஆகும். வடவெழுத்து  விலக்கி ச்  சொல்லைப் பயன்படுத்துக " என்பது பொருள் .  அதன் காரணமாக  "ஸ் "  நீக்கப்பட்டு   "அந்தத்து" என்று வந்திருக்கலாம் ,அன்றி  முந்துவடிவமே  அந்தத்து என்பதாகவும் இருந்திருக்கலாம்,
  
(வட ஒலிக்குரிய ஆனால் அதற்குத் தமிழர் அமைத்த   எழுத்து   " வடவெழுத்து"      எனப்பட்டது.   தேவ நாகரியைக் குறிப்பிடவில்லை)  . 

  எதுவாயினும்  ஆய்வு  தொடர்வோம்

இச்சொல்லில்  முன் நிற்கும் சொல்  அம்  என்பதாகும்    இது அழகு என்று பொருள் படும் .  அம்மை  அழகு .

இனி  தத்து அல்லது தஸ்து   (see notes,  1 below).

வரு என்பது வரத்து என்று  பெயரானது.   நீர் வரத்து போக்குவரத்து என்று வருவன காண்க.

அதுபோல தகு > தகத்து எனவரும்.  அப்படியென்றால் தகுதியானது  என்று பொருள்.

மேலும் தகதக என்பதும் ஒளிவீசுதற் குறிப்பு ஆகும்.

ஆகவே அம் தகத்து எனின்  அழகிய தகுதி யுடையது, அல்லது ஒளி வீசுவது என்று ஆகும்.

தகத்து என்பது இடைக்குறைந்து தத்து ஆகும்.  அகரத்துக்கு அடுத்த ககரம் குறைவது பெரும்பான்மை,

அகங்கை என்பது அங்கை ஆகிறதல்லவா? 

த என்பதில் ஈற்றில் அகரம்.  அதுவர ககரம் மறைவு எய்தியது.

எனவே அந்தகத்து  அந்தத்து  ஆனது.

இது பின் அந்தஸ்து என்று திரிந்ததில் வியப்பில்லை.




-------------------------------------------------------------------------------------------------------------
notes:  


1     தகு   >  தகம்   >    தகத்து 
See also examples given by Tamil Lexicon:  அது ஒரு தகத்தான இடம் .    அவனுக்கு இப்போது என்ன தகத்து வந்துவிட்டது?      தகத்து,  இங்கு பெருமை.

தகப்படு-தல் taka-p-paṭu-
, v. intr. < தகு- +. To be eminent, distinguished; மேன்மைதங்குதல். தகப்படுஞ் சராசனத் தனஞ்சயன் (பாரத. வாரணா. 80).


2  உயர்த்தி >  உசத்தி  > ஒசத்தி  >  ஒஸ்தி 

பிற திராவிட  மொழிகளிலும் இப்போக்குக்  காணப்படுகிறது.  

3   இவ்விடுகையையும் வாசிக்கவும்.    தழு என்ற சொல்லினை அடியாகக் கொண்டு இங்கு விளக்கப்பட்டுள்ளது.    தழு என்பதும் தகு என்பதற்கு  ஈடானதே     ஆகும்.      எடுத்துக்காட்டு:     தொகுதி =  தொழுதி.


http://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_22.html 



will edit

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

வள்ளுவரின் காலம்

வள்ளுவரின் காலம் யாது  என்ற ஆய்வு இன்னும் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது.  மணிமேகலைக் காப்பியத்தில் வள்ளுவரின் குறள் மேற்கோளாகக் காட்டப்பெற்றிருப்பதனால் திருக்குறள் நூல் மணிமேகலை  சிலப்பதிகாரம் முதலியவற்றுக்கு  முந்தியது என்று அறிஞர் முடிவு செய்தது சரிதான் , கண்ணகிக்குச் சிலை வைத்தபோது சேரன் செங்குட்டுவன் நடத்திய விழாவில் பல கனவான்கள் கலந்துகொண்டனர்.  அவருள் கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னனும்  இருந்தான்.  அவன் காலத்தை வைத்து வள்ளுவர் ஏறத்தாழ  ஈராயிரம் ஆண்டுகட்கு முந்தியவர் என்று அறிஞர் சிலர் முடிவுக்கு வந்தனர் 

ஆனால் இது சிலருக்கு மன நிறைவு அளிக்கவில்லை.  திருவள்ளுவருக்கு இரண்டாயிரம்  ஆண்டுகளா?  வேறு மொழிச் சார்பினருக்கு இதை மறு ஆய்வு செய்யத் தோன்றியது.  இலங்கையில் கயவாகு என்ற பெயருடன் ஒன்றுக்கு மேற்பட்ட  அரசர்கள் இருந்திருப்பதால்  அதில் கடைசியானவரை  எடுத்துக்கொண்டு வள்ளுவரை   ஆயிரம் ஆண்டுகள்   பின்தள்ளினர் .

இதில் குற்றம் ஏதும் இல்லை . ஆனால் தமிழ் இலக்கியத்தை முழுமையாக நோக்கும்போது பொருத்தமாக இல்லை


பேராசிரியர்  வையாபுரிப்பிள்ளை   , வள்ளுவர்   காலத்தைக் கண்டுபிடிக்கப்  புதிய  வழியொன்றை  மேற்கொண்டார்.  திருக்குறளில்  வந்துள்ள வடசொற்களாகக்  கருதப்பட்டவைகளை  எடுத்துக்காட்டி,  "ஆகவே   வடசொற்கள்  மலிந்துவிட்ட பிற்காலத்தவர்  வள்ளுவர் "   என்ற முடிவுக்கு வந்தார்.  அவர் சங்க காலத்தவர்  அல்லர் என்றும்  சொன்னார்.

முதற்குறளிலேயே வடசொற்றொடர் என்றார்.

ஆதி என்பது   ஆதல்  என்ற வினையடியாகப் பிறந்த சொல்.  ஆக்க காலம் என்று பொருள்.

பகவன் என்பதோ,  பகு > பகவு என்று அமைந்த  சொல்லின்  மேல் அன் என்னும் ஆண்பால் விகுதி ஏறிய சொல்.   பகவான் என்பது வேறு.

  

thirukkuRaL some verses


அரும் பிழைகள்


போற்றின் அரியவை போற்றல்; கடுத்தபின்,
தேற்றுதல் யார்க்கும் அரிது.
693.

போற்றின் = காத்துக்கொள்ள வேண்டுமென்றால்;

அரியவை = அரும் பிழைகள் (நேராவண்ணம்);

போற்றல்= காத்துக்கொள்ள வேண்டும்;

கடுத்தபின் = அத்தகைய பிழைகளில் ஏதேனும் ஒன்று நேர்ந்துவிடுமானாலும்;

தேற்றுதல் = அப்புறம் போய் அதைத் தெளிய வைப்பது;

யார்க்கும் = எவருக்கும்;

அரிது= கடினமாகப் போய்விடும்

என்றவாறு.


அரிது என்று ஒருமையில் முடிந்ததனால், "பிழைகளில் ஏதேனும் ஒன்று நேர்ந்தாலும்" என்று உரைக்கப்பட்டது.


நீர் ஒரு பொறுப்பான வேலையில் இருக்கிறீர். உமக்குக் கீழிருப்பவர் சில பரிந்துரைகளைச் செய்கிறார். அதை நன்கு ஆராய்ந்து, " இதனால் தொல்லைகள் ஏதும் விளையுமா?" என்று நன்கு சிந்தித்து, பிறகு அப்பரிந்துரையை ஏற்றுச் செயல் படுவதா, அல்லது தள்ளுபடி செய்துவிடுவதா என்று முடிவு செய்ய வேண்டும்.

அப்படி ஆய்ந்து ஓய்ந்து பாராமல், பிழைபடும் ஒரு காரியத்தைச் சிந்திக்காமல் செய்துவிட்டு, பிறகு அதைச் சரிப்படுத்தி விடலாம் என்றால், அது எளிதன்று. அது முயற்கொம்பாகிவிடும்.

ஸ்பெக்றம் விவகாரம் இதற்கோர் எடுத்துக்காட்டு.

Here Naayanaar is not concerned with common or routine faults. Ariyavai = those faults which may lead to dire consequences....
Even one such fault will be enough to destroy you!!


ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல;
நாணுடைமை மாந்தர் சிறப்பு.1011



ஊண் = உணவு; உடை = ஆடை; எச்சம் =( உயிர்களுக்கு) உரிய பிற; உயிர்க்கெல்லாம் = உயிர்களுக்கெல்லாம்; வேறு அல்ல = ஒன்றேதான்;

நாணுடைமை = தகாதவை மனம், மொழி, மெய்களில் தொடர்பு படுதலை எண்ணி வெட்கி விலகுவது;

மாந்தர் = மக்கள் ஆவார்தம் ;

சிறப்பு = வேறுபடுத்திக் காட்டும் உயர்வு ஆகும்.

சில ஓலைச்சுவடிகளில் எச்சம் என்பது அச்சம் என்று உள்ளதாகக் கூறுவர் ஆய்வாளர்



20th January 2011, 02:23 PM

#463

which is its permanent residence?

ஒரு நாளைக்கு ஒன்று என்று குறளை ஓதலாம் என்றாலும், வாழ்வின் அன்றாட செயல்பாட்டு நெருக்கடிகளால், அதுகூட முடியவில்லை. ஆகவே நல்ல நூல்களை மிக முயன்று படிக்கவேண்டியுள்ளது.

இப்போது ஒரு குறளை ஓதியறிவோம். உடம்பில் உயிர் எங்கே இருக்கின்றது என்று அறிய முடிவதில்லை. நெஞ்சிலா? தலைப் பகுதியிலா? வேறு எவ்விடம்...என்று தேடிப் பார்க்கிறோம்.

உடலில் இருந்துவிட்டு, என்றாவது ஒருநாள் ஓடிவிடுகிறது...எங்கே போய் விடுகிறது?

இதையும் அறிய முடிவதில்லை.

நிலையான வீடு அமையவில்லை, உயிருக்கு!

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. 340.
B.I. Sivamaalaa (Ms)


28th January 2011, 03:46 PM

#464





bis_mala



Senior MemberSeasoned Hubber

Join Date Oct 2005 Location My Posts 1,790 Post Thanks / Like




How to avoid affliction, sorrow, distress, trouble, etc.....

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன் - 628

இன்பம் எனும் ஒன்றை விரும்ப மாட்டான்; துன்பம் என்பது என்றும் எங்கும் எவர்க்கும் வருவதுதான் என்பான்; அத்தகையவன் என்றும் துன்புறுவதில்லை.

துன்பம் என்பது வாழ்வில் இயல்பானது என்பதறிந்தால், பிறகு துன்புறுதல் இல்லையே!.

"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும்பேரின்பம்" என்கிறார் மணிமேகலையில், சாத்தனார். அது வேறு கருத்து அன்றோ? (just from memory....). Check the book for accuracy.

Will edit
























வியாழன், 24 செப்டம்பர், 2015

Spicy food very good



மிளகாய் மிளகுநச்  சீரகம்  மல்லி 
அழகாம் உடலுக்கே ஆமே ----  இளகா 
உரத்தோ டுலவ  உலகில்நூ  றெட்ட
நரத்துக்கு வேறில்லை நாடு,  



அழகாம் உடலுக்கு  --அழகு வேண்டும் உடம்புக்கு;
ஆமே  -  வேண்டியவை  நடக்கும்  
நரம் =  மனிதர் . நாடு =  தெரிந்துகொள் 






http://www.ba-bamail.com/content.aspx?emailid=16793

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

முக்காடு,

விகடம் என்ற பதத்தை  முன் இடுகையில் கூறியவாறு வடமொழி வழியாகக் காட்டாமல் தமிழிலேயே காட்டுவோம்:

விழு+ கடம் :  விழுகடம்>  விகடம்.

இதில் ஒரு ழு மறைந்துள்ளது.  விழு என்ற சொல்லை வி என்ற முன்னொட்டாகக் காட்டி கடம் என்று கொண்டு சேர்த்தாலும் அதன் உள்ளீடு தமிழ் என்பதை மறைக்கமுடியவில்லை

விழுகடம் என்பதில் ழு மறைவது ஓர் இடைக்குறை.

இயல்பு கடந்து விழுமியதாக நிற்பது என்று பொருள்.  வழக்கில் இது நகைச்சுவையைக் குறிக்கிறதன்றோ?

வேங்கடம்  என்ற சொல்லிலும் கடம் உள்ளது,  கடத்தல் அரிய வெம்மையான  இடம் என்பது பொருள்  கட  அம்  கடமாயிற்று,

இப்படி இடை ழுகரம் மறைந்த சொற்கள் உள ;   இன்னொன்றைப் பார்ப்போம்.

ஆடு >  ஆடை;  இங்கு ஆடை என்பது விகுதி பெற்ற தொழிற்பெயர்,

ஆடு என்பது  மட்டுமே நின்று பெயரானால் அது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும் /

முழுக்கு  ஆடு :  முழுக்காடு >  முக்காடு,  அதாவது தலை முழுவதும் மூடிய  ஆடை;   தலை முழுக்காடை.   முக்காடு என்ற சொல்லுக்கு  இறுதி  ஐ விகுதி 
தேவைப்பட வில்லை;  ஆடு என்ற தனிச்சொல் மட்டும்  ஆடையைக் குறிக்கவருமானால் பொருள் தெளிவின்றிப் போமிடங்களும்  தோன்றுதற்கு வாய்ப்பு  உண்டு . முக்காடு என்பதில் அவ இடையூறில்லை/

பிற பின் 

விகட

வடமொழி  எனப்படும் சங்கதத்தில் முன்னொட்டுக்களாம் துணைச்சொற்கள்    பல . சில முன் கண்டோம்.  

இன்னும் ஒன்று காண்போம் .

விழு-  என்னும் சொல் சிறப்பு குறிக்கும்.   விழுமியது என்றால் சிறப்பானது என்பதாம். இச்சொல்லின் முதலெழுத்து மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

விகட  :   exceeding the usual measure.  (and other meanings).

வி :  சிறப்பு.

கட  என்பது  கடந்த நிலையைக் குறிக்கிறது.

எனவே  விகட என்றது  சிறப்பாகக் கடந்தது என்று பொருள் .

இன்று காட்டப்பெற்ற சொல்லின் இரு கூறுகளும் தமிழிலிருந்து  எடுக்கப்பட்டு அமைந்தவை. ஆகும் .

இங்ஙகனம்  பல உள . 



ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

source of prefixes



தமிழில் பின்னால் கொண்டு ஒட்டப்பெறும் விகுதிகள் அல்லது பின்னொட்டுக்களே மிகுதி என்பது உங்கட்குத் தெரிந்ததே. தமிழிலும் முன்னொட்டுக்கள் உள்ளன எனினும் அவை
மிகக் குறைவே. ஏனைப் பிற்கால மொழிகளில் அவை பல்கிப் பெருகின. முன்னொட்டுக்கள்  பிற்காலப் புனைவுகள் என்று கொள்வதே சரியென்று தெரிகிறது.

கிராமம் என்ற சொல், சிற்றூர் என்று பொருள்படுவது. சிறிய ஊரைக் குறிப்பதற்குத்  தமிழில் பல சொற்கள் உள. (   ஊர்ப் பெயர்களை ஆராய்ந்தால் இது புரியும்.)  அவ்வசதி இல்லாத அல்லது குறைந்த  மொழியில் அதனை ஏற்படுத்தவே வேண்டும். எப்படி?

குறு” என்பது குறுமை அல்லது சிறியது எபதைக் குறிக்கும் சொல். இதை இன்னும் குறுக்கி. கு- என்று வைத்துன்க்கொள்ளுங்கள் .

கு + கிராமம் > குக்கிராமம்.

இதில் கு என்பது தமிழ்; கிராமம் என்பது அயல்.

அல் என்பது "அல்லாதது" என்று பொருள் படும். அல்ல, அன்று, அல்லன், அல்லள், அல்லை என்ற பல இதை அடியாகக் கொண்டவை.

இது:

அல் +திணை = அஃறிணை;
அல் + வழி = அல்வழி.

என்று முன்னொட்டாக நின்றது.

இது லகர ஒற்றை இழந்து பின் "" என்று மட்டும் நின்றது. அந்த நிலையில்:

+ நியாயம் = அநியாயம்;
+ க்ரமம் = அக்கிரமம்;
+ நீதி = அநீதி.

எனப் பல சொற்களில் முன்சேரும். அது முன்னொட்டாகி விட்டது.

unforeseen  என்பதில் அது இல்லையா?  அல் >  un

அல் என்ற தமிழ்ச்சொல் உலகிற் பல மொழிகளில் சென்று சேர்ந்துள்ளது.

இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினரே இதை முழு மூச்சாகப் பலவேறு வகைகளில் கடன்கொண்டனர்


=====================================================================

for authorls   use

note vivaram


re-edited after the appearance of  certain errors not in the original.








வெள்ளி, 18 செப்டம்பர், 2015

முழுச்சொற்கள் புணர்ச்சியும் சொற்புனைவுத் திரிபுகளும்

இதைப்பற்றி  ஆங்காங்கு சொல்லமைப்புக்களை விரித்துரைக்கும்போது குறிப்பிட்டிருக்கிறோம்.  என்றாலும் இங்கு மீண்டும் விளக்குவதில் தவறில்லை என்று நினைக்கிறோம்.

இப்போது "மக்கள் "  என்ற  பழந்தமிழ்ச் சொல்லை எடுத்துக்கொள்வோம். இச்சொல் தமிழிற் பண்டை நூலாகத் திகழும் தொல்காப்பியத்திலும் இடம்பெற்றுள்ளது.

இச்சொல்லில்  பிரிக்குங்கால் முன் நிற்பது  மக என்ற அடிச்சொல்லே.  மக என்பது  தாய் தந்தையிலிருந்து  பிறந்தது என்று பொருள் தரும்.

மக என்பதனுடன் "கள்" என்ற  பன்மை விகுதியைக் கொண்டு சேர்க்கும் போது 

மக + கள் =  மகக்கள்  என்று வரவில்லை.

மக்கள்  என்றே வந்தது.

ஏன்  மகக்கள்  என  வந்திலது  என்று  கேட்க வேண்டும். 

கள் என்பது ஒரு விகுதியாக இல்லாமல் முழுச்சொல்லாய் இருந்தால், இரு முழுச்சொற்கள்  ( நிலைமொழியும்   வருமொழியும் ​)  புணரும் புணர்ச்சியாக  இருக்கும்.  அப்போது  "மகக்  கள் "  என்று வருவதே சரி . கள் என்பது ஒரு குடிபொருள் ஆதலின்  மகக் கள்  என்பது  பிள்ளைக்குரிய குடிக்கும் கள் என்று 
பொருள் போதரும்.

கள் என்பது விகுதியாதலின் மக​ + கள் =   மக்கள் என்றே சொல் அமைந்தது.

இதேபோல்  மக+ அன்  என்பது  மகவன் என்னாது  மகன்  என்றே வரும்.  மகவன் என்று வகர உடம்படு மெய் வராது, 
வந்தால் "மகவினை  உடையோன் "  என்று பொருள்தரும். வேறு சொல்.

இதேபோல் :

அறு +  அம் -=  அறம். (தருமம் )
அறு + அம்  =  அற்றம். (தருணம்)

விகுதிப் புணர்ச்சி நிலைமொழி வருமொழிகளின் புணர்வின் வேறுபட்டதென்று  உணர்க.




வியாழன், 17 செப்டம்பர், 2015

அட்டணம் "தளவாடம் "


அட்டணம்  இச்சொல்  தமிழில் வழக்கில் உள்ளதாகத் தெரியவில்லை, சங்கதத்தில் இது போர்க் கருவிகளைக் குறிக்கிறது.

அடு+ அணம்  =  அட்டணம்    ஆகும்,

அடுதல் -  பல பொருள் உள்ள சொல்.  சமைத்தல்,  நெருப்பில் இட்டுச்  சூடேற்றுதல்   என்பவை மட்டுமின்றி,    எதிரியை வெல்லுதலும்,  வருத்துதலும்  இதன் பொருள்.

போர்த் தளவாடங்கள்  வெல்லவும் வருத்தவும் உதவும் கருவிகள் ஆதலின் அட்டணம்  இப்பொருளைப் பெற்றது.

அடுதல்  வினைச்சொல்.  அணம்  என்பது தொழிற்பெயர் விகுதி

அடுதல்  என்ற வினை   முதனிலை  நீண்டு  ஆடு என்று தொழிற்பெயராகும்

தளவாடம் :.

தளத்தில்   வைக்கப்பட்டிருக்கும்  கருவிகள் அல்லது பொருட்களுக்கு  "தளவாடம் " என்பர்.

தளம் + ஆடு+ அம்  > தளவாடம் .     வகர உடம்படுமெய்  பெற்ற சொல். முதலில்  போர்க்கருவிகள் என்று பொருள்தந்த இத்தொடர்,  இப்போது பொதுப்பொருளில்  "உதவும் பொருட்கள் "  என்று  பொருள் விரிவு கண்டுள்ளது..


புதன், 16 செப்டம்பர், 2015

Protests in Malaysia

Suffix aNam அணம்

அணம் என்ற   தொழிற்பெயர் விகுதி தமிழில் பல சொற்களில் வருகிறது.
அவற்றுள் சிலவற்றைச் சிந்திப்போம்.  வினை அல்லாதனவும் இவ்விகுதி பெறுதல்  உ ண்டு. இவ்விகுதி பெற்ற சொற்கள் சில பிற மொழிகளிலும்  சென்று ஆட்சி பெற்றுள்ளன.

ப ட்டணம்
ஆரணம்
கட்டணம்
ஏரணம்
காரணம்
(சாரணம்)>   சாரணர்

தோரணம்
வாரணம்

என்று அவை பலவாம்.

இங்கு  அணம் என்ற விகுதியைமட்டும் ஆய்வு செய்வோம்.

அ என்பது சுட்டு. இச்சுட்டு அந்த அது , எனல் தொடக்கத்துப் பலவற்றின் மூலம்.   

அ >  அண்.

அண் என்ற அடிச்சொல் அடுத்திருத்தலையும் குறிக்கும்

அண் > அண்முதல்.  அண்மித்தல்.
அண் > அண்டை.
அண் > அண்மை.
அண்> அணிமை.
அண்> அணை.

அண் >  அணைத்தல்.
அண் >  அணை>    அணைக்கட்டு.
அண் > அணி >   அணிதல்.
உடலை அடுத்து நிற்பது ஒருவன் ஆடையும் அணிகலன்களுமே.

சேலை முதலியன உடலை அணைத்துக்கொண்டு நிற்பன.  சேலை இடையையும் கால்களையும்  அணைத்து நிற்பது. = >  >

கருவி  >   செய்தற்கு உதவும் பொருள்.
கரு    செய்தற்கருத்து உள்ள பழஞ்சொல்.

கரு+ அணம் =  கார்+ அணம் =  காரணம்.1
கரு+ இயம் > கார்+இயம் =  காரியம்.

வருமொழி முதல் உயிர்வர கரு கார் ஆனது.

செயலை அடுத்து நிற்பது அதன் காரணமே.

அணம்  -    அடுத்தற்கருத்து உள்ளமை காண்க.

அண்+ அம் =   அணம்.

இங்ஙனம்  அமைந்த்ததுவே  அணம் விகுதி.



--------------------------------------------------------------------------------------
1.  Expounded by Dr  G Devaneyap Pavanar.

திங்கள், 14 செப்டம்பர், 2015

Pak neither Nation nor State!!

This is a good book to read. It is written by  Sumit  Ganduly. You may wish to read and enjoy:


Pakistan :  Neither a State nor a Nation.


What is then the definition of a State or a Nation?  Any difference in meaning?

https://books.google.com.sg/books?id=UDi9e0F-zoIC&pg=PA95&lpg=PA95&dq=the+strength+of+pakistan+claim+on+kashmir&source=bl&ots=YqKpxAZTiL&sig=w8ZxSF1tB6oLZg1dv0jtxGM0v3o&hl=en&sa=X&ved=0CDwQ6AEwBWoVChMI17zilIj4xwIVUo6OCh0drQKz#v=onepage&q=the%20strength%20of%20pakistan%20claim%20on%20kashmir&f=false

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

ANOTHER WORD FOR EXAMPLE காண்மானம்

காண்மானம் என்ற  சொல்  பேச்சு வழக்கில் இருந்த சொல்.   இது ஏறத்தாழ எடுத்துகாட்டு,  உதாரணம் என்பவை  போன்ற பொருளை உடைய சொல் ஆகும்.

மானம் என்பது ஒரு தொழிற்பெயர் விகுதி.  மான  என்பது ஓர் உவம உருபாகவும் இருக்கின்றது. மானுதல் என்பது ஒத்திருத்தல் என்னும் அடிப்படைப் பொருளை உடையதென்பதையும் கவனிக்கவேண்டும்.

மா என்ற மூலச்சொல்  அளவு என்றும் பொருள்தரும்.

வெப்பமானி  என்ற கருவியின் பெயரில்  "மானி":   அளவுக்கருத்து உள்ளது/

காண்மானமென்பது  காமானம் என்று பேச்சில் திரியும்.

ஆங்கில அறிவு படைத்தோரின் வழக்கில் இச்சொல் இல்லை என்னலாம்.

"மானம்"  விகுதி பெற்ற வேறு சொற்கள்
--------------------------------------------------------------
39. மானம்  3189)
(தேவா. 1200, 10).
மானம்
; தொறுப்பொருளில் வரும் இடைச்சொல். தினமானம் இது நடந்து வருகிறது.


 தீர்மானம்,  பிடிமானம்,  சாய்மானம் பெறுமானம்    எனப் பல உள.

சனி, 12 செப்டம்பர், 2015

ஜீரணம்

செரிமானம் என்ற சொல் பற்றி முன் யாம் எழுதியதுண்டு.  ஆனால் அதை இப்போது  மறுபார்வை செய்துகொள்ளவில்ல்லை.  இங்கோ அல்லது ஏதேனும் வலைத்தளத்திலோ அது காணப்படலாம்.  புதிய இடுகை  அதே சொல்பற்றி வெளிவந்தவுடன்,  யாம் முன்னாளில் எழுதியதை எமக்கு அனுப்பி உதவியவர்களும் உளர்.


உண்ட பின்பு   குடலிற் சென்று  உடலால்   ஏற்றுக் கொள்ளப்பட்டு மீண்டும் பசி வந்தால் முன் உண்டது செரித்துவிட்டது என்று பொருள்.  இதைச் செரிமானம் ஆகிவிட்டது என்பதும் உள்ளது .

இப்போது  இதை "ஜீரணம்"  என்பதுமுண்டு.    இதற்கு எதிர்ச்சொல் 'அஜீரணம் "என்பது.  இதுவும் வழக்கில் உண்டு

கற்றோரிடை  digest  என்றும் ஆங்கிலச்சொல் பயன்படுத்தப்படுகிறது;  அதுவே  "நாகரிகம்"  என்பாருமுண்டு. (Usage of people who are "civilised"  or  "townified".)

செரி  என்பதுடன்  "அணம்"  என்னும் விகுதியை இணைத்தால்,  "செ "
  நீண்டு விடுகிறது.  நீண்டு  "சேரணம் "  ஆகும்.  

அணம் என்ற விகுதியை  "கட்டணம்" என்ற சொல்லில் காணலாம். பல அணம்  விகுதிபெற்ற  சொற்கள் உள்ளன.

முதலெழுத்து நீண்டு பெயர்ச்சொல் ஆவதை  (சுடு) > சூடு  என்பதில்  காண்க.

சேரணம்  பின்  ஜீரணம் என்று மாற்றப்பட்டது.

இது ஜீரணம் சொல் அமைந்த கதை.

edited   1732 hrs  129.2015

Note:

Some intermediate  word forms have been lost in the language.

ஜீரணம்  is  a good example.  The intermediate form  "சேரணம்"   has been lost.

You may compare  this phenomenon with another word   :  பேசு  >  பேசை  >  பாசை   (மொழி ).    மற்ற வடிவங்கள்:  பாழை,  பாடை  பாஷை .
துவிபாஷி  >  துப்பாஷி   interpreter 


வெள்ளி, 11 செப்டம்பர், 2015

நானோர் நன்கொடை!

எங்கிருந்தோ வந்தேன் ----  நானோர்
நன்கொடை!
எங்குசென்றேன் அமர்ந்தேன்  -----   இன்றிது
வெளிப்படை!

சேர்விடத்தில் சுவரின்    --- முகட்டில்
ஒட்டடை!
கூர்படு பார்வையரின் ------ கண்களில்
தெற்றடை.

ஊரிலெங்கும் யார்க்கும் ----  பெரும்
தலைவலி
பார்முழுதும்  பரவிய  -------  செய்தியால்
ஒருநலி



Quorum reached at Malaysian Bar EGM discussing 1MDB, RM2.6b donation



https://sg.news.yahoo.com/quorum-reached-malaysian-bar-egm-discussing-1mdb-rm2-033400332.html.


-----------------------------------------------------------------------------------------------
ஓர்  -    ஓர்தல்  :   சிந்தித்தல்   .   ஒன்று என்றும் பொருள் . தெற்றடை -  குற்றம்  அடைதல்;
நலி  -   துன்பம்.

வியாழன், 10 செப்டம்பர், 2015

மகாதீர்மேல் காவல்துறை விசாரணை:


முன்னாள்   தலைமை அமைச்சர் மகாதீர்மேல்  காவல்துறை விசாரணை:


Ex-PM Mahathir to be questioned 'soon' over Bersih 4 comments: Malaysia police chief

http://www.channelnewsasia.com/news/asiapacific/ex-pm-mahathir-to-be/2097382.html?cx_tag=similar#cxrecs_s

what is paavam?

தமிழுக்கே சிறப்பாக உரியது  ழகரம் ஆகும்.  தமிழின் உடன்பிறப்பாகிய மலையாளத்திலும்  அது  தனித்தன்மை பெற்று இலங்குகிறது.  ஒரு தமிழன்  "மளெ "  வந்துவிட்டது என்பதைக் கேட்ட மலையாள நண்பன் "  என்ன மளை,, மழை என்று சொல்" என்று திருத்துமளவிற்கு அது மலையாளத்தில் "தனித்தன்மை" பெற்று இலங்குகிறது.

தமிழ்ப் பேச்சு மொழியில்  (colloquial )  வாழ்க்கைப் பட்டாள் என்பதை வாக்கப்பட்டாள்     என்றுதான் திரிக்கின்றனர். 
இதுபோலவே 

கீழ்க்கடை  >  கீக்கடை;
தாழ்க்கோல் >   தாக்கோல் 

என்பவும் (=என்பனவும்)   அத்தன்மை உடையனவாம்.

வாத்தியம் என்பது  வாழ்த்தியமே.  ழகர  ஒற்று மறைந்து வாத்தியம் ஆயிற்று. 
இதில் கிருதம் ஒன்றும் இல்லை.  மங்கல நாளில் வாழ்த்தி( இசை)  இசைக்கப்பட்டதால்  வாழ்த்தியம் எனும் சொல் அமைந்தது. 

வாழ்த்தியம் என்பதில் உள்ள இறுதி  "இயம்"  
இயம்>  இயங்கு;  இயம் > இயக்கு.:   வாழ்த்தியக் கருவிகள் இயக்கப்படுவன .
வாழ்த்தியம் என்பது எத்துணை அழகமைந்த சொல் !  இதை  அறிஞர்  ஆய்ந்து உரைத்துள்ளனர் . 

அறியாத் தமிழன் அயலெனில்  அது தமிழென்று புகட்டுவோம்.   

பாவம் என்ற சொல்லும் அப்படியே.   பாழ் + வு+  அம் = பாழ்வம்  > பாவம் .  இங்கு வு ,அம்  என்பன விகுதிகள். 

Do you know that when you do something bad or evil today, it takes away or nullifies the good deed you performed yesterday?  So  yesterday's good became பாழ் .  That then is the பாழ்வம் or  பாவம்  in it.   It tarnishes you  just as a black spot in a white fabric.   "The good .doth is interred with your bones!"  (to follow Shakespearean language to some extent.)

பாவம் என்பதன் சொல்லமைப்புப் பொருள் இதுவே. 











ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

நோட்டு and note

2008க்கு முன்பிருந்தே சொல் திரிபுகளை பல நோட்டுப் புத்தகங்களில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.  ஆனால் இப்போது அங்கு நான் குறித்துவைத்துள்ளவற்றை எடுத்துப் பார்ப்பதில்லை. மேலட்டைகளை மட்டும் துடைத்து மீண்டும் அடுக்கி வைப்பதுண்டு.  அதுவும் வேறெதையும் தேடும்போது அதையும் செய்வேன்.   அதற்காக மெனக்கெட்டுச் செய்வதில்லை.

மேலே "நோட்டுப் புத்தகம்" என்ற தொடர் வருகிறது.  இங்கு "நோட்டு"  என்பது  ஆங்கிலம் அன்றோ?   என்று வினவுங்கள். அதைப் பற்றிப்  பேசுவோம்.

"நோடுதல் "என்பது  ஆய்தல் என்ற பொருள் உடைய சொல்.இந்தச் சொல் அப்பொருள்  உடையது என்பதை எளிதில் அறியலாம். எப்படி ?

நோடு >  நோட்டம் . (நோடு +  அம்  )

ஆடு > ஆட்டம் என்பதில்போல டகரம்  இரட்டித்தது.  அதாவது:  டு +அ  = ட்ட .

நோடு  >  நோட்டு >  நோட்டம்.

பாடு > பாட்டு  ( அதுபோல  நோடு >  நோட்டு )

நோடு என்பதை முதனிலைத் தொழிற்பெயராய்க் கொண்டு  நோடு+ புத்தகம் என்று புணர்த்தி  நோட்டுப் புத்தகம் என்று புணர்ச்சித் திரிபாகவும் காட்டலாம்.

நோட்டுப் புத்தகம் :   என் சொல் நோட்டங்களைக் கொண்ட காகிதக் கட்டு  அல்லது சுவடி. 

note book என்பது ஆங்கிலம் அன்றோ என்று நீங்கள்  எழுப்பும்  நாவோசை  என் செவிகளுக்கு எட்டுகிறது .( எண்டே  செவியிலு  எத்துன்னு  :  மலையாளம் )
ஆமாம்,  ஆங்கிலமும்தான் ,

நோட்டுப் புத்தகம் என்கையில் அது ஆங்கிலமாகவோ  தமிழாகவோ இருக்கலாம்.

எழுதியவர் , எழுதுபொருள்,   கட்டுரை எழுந்த சுற்றுச்சார்பு ,  எழுதினவர்  எண்ண ஓட்டம் முதலிய பல கொண்டு தீர்மானிக்கவேண்டியது.

note  என்பது nota  என்ற  இலத்தினிலிருந்து வருகிறது.   இதிலிருந்து உங்கள் 
ஆய்வு தொடங்கலாமே ., 

படுகொலை நிகழ்விடம் கோவிலாகிவிட்டது

ஏழு இந்தியர்கள் படுகொலை நிகழ்விடம் இப்போது  கோவிலாகிவிட்டது,

இதைப் பாருங்கள்:


https://sg.news.yahoo.com/murder-scene-now-temple-062519928.html


WHAT was formerly the scene of one of Johor’s most gruesome mass murder is now a Taoist temple, with a huge following.

read more by clicking the link


வெள்ளி, 4 செப்டம்பர், 2015

ழகர ஒற்று மறைந்த சொ/ற்கள் சில.

மகிதலம்


மகிழ் என்ற வினை.  உவகை கொள்ளுதலைக் குறிப்பது. இதிலிருந்து மகிழ்தல், மகிழ்நன் எனல்தொடக்கத்துப் பல சொற்கள் அமைகின்றன.

மகிழ்நன் என்பதில் உள்ள ழகர ஒற்று மறைந்து,  நகரம் ணகரமாகி பின்வருமாறு  அமைகிறது.

மகிழ்நன் >  மகிணன்.

மகிழ்நன் என்பது தமிழன்றோ?  அதிலிருந்து அமைந்த  மகிணனும் தமிழ்தான்.சொற்களை அடையாளம் கண்டுகொள்வதில்  சிறிது முயற்சியும் கவனமும் வேண்டும்.

மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்று தொல்காப்பியனார் அழகாக அறிவுறுத்துகிறார். விழித்தவுடன்  (ஒரு சொல்லின்மேல் உங்கள் விழிகள் பட்டவுடன் ) தெரிந்துவிடாது,  கவனமாய் ஆராய்வேண்டும் என்பது அவர் அறிவுறுத்துவது ஆகும்.

நாம் வாழும் இப்பூவுலகு, ஒரு மகிழ்ந்து வாழும் உலகம் என்றனர் நம் முன்னோர். காட்டு விலங்குகளையும் ஏனை இடர்களையும் வெற்றிகண்டு நிலையாக ஓரிடத்தில் தங்கி வாழும் வசதி உண்டான பின், மனிதன் இப்புவி மகிழ்வுக்குரிய தலம் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டிருப்பான். இதை எந்த ஆய்வாளனும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. துன்பம் மிக்க உலக்ம் என்று சொன்னவன்,  துன்பகாலத்தில் ஊன்றியவன் என்பதும் தெளிவு.

மகிழ்தலம் > மகிதலம்.

மகிதலம் என்பதற்கு இப்போதுள்ள பொருள் "பூமி"  என்பதாகும். இதன்  சொல்லமைப்புப்  பொருள் "மகிழ்தற்குரிய இடம்"என்பதாகும்.  அச்சிறப்புப் பொருளை இழந்து இப்போது இச்சொல் வெறும் நில உலகு என்ற பொருளில் மட்டும் வருகிறது.

ழகர ஒற்று மறைந்து திரிந்த சொற்கள் பல.  அவற்றைக் கண்டுபிடியுங்கள்.

சிறிய சிங்கை தன்னிலும் தேர்தலே!

மக்கள் ஆட்சி மலர்ந்த  நாடுகளில்
தக்க காலத்தில் தவிர்க்க இயலாத
தேர்தல் நிகழ்வோ ஆர்வம் தருவதே!
ஒபாமா  உலகின் உயரிருக் கைவரு
அவமில் நாளில் அனைவரும் களித்தனர்.
மன்னர் ஆட்சியில் இன்னதோர் புதுமை
மகிழ்தலம் மண்ணிதில் நடப்பது முண்டோ?
பெரியன  நாடுகள் தேர்தலைப் போலவே
சிறியது  சிங்கை தன்னிலும் தேர்தலே!
கட்சிகள் பலவாம்! கத்தல் பெருக்கிக்
கருவிகள் பொருத்திய கூட்டமும் பலவாம்.
வேடிக்கை காண விழைந்திடும் பலரும்
கூடி மகிழும் ஒருபெரும் தருணம்
தேர்தல் நிகழ்வுகள் வாழ்க
ஊர்தரும் மகிழ்வை யாரும் பெறுகவே, 

இது ஆசிரியப்பா.   ஆனால் சீர்களை வகையுளி செய்யவில்லை. அதாவது " மக்கள் ஆட்சி மலர்ந்த நா  -  டுகளில்:"  என்று பிரிக்கவில்லை. அது தேவையற்றதும் ஆகும். வெண்சீரும்
வந்து  ஒலி சிறக்கிறது

கத்தல்பெருக்கி :  ஒலிபெருக்கி.  கத்து   என்பதன் பொருள் ஒலி செய் என்பதே.
இதை முன் நான்  விளக்கியதுண்டு.