திங்கள், 19 அக்டோபர், 2015

தாகம்

கம்  என்பதை ஒரு பின்னொட்டாகக் கொண்டு  தாகம் என்ற சொல்லினை ஆய்வு செய்யலாம்.

எடுத்துக்கொண்ட சொல்: தாகம்.

தாகம் என்பதில்  தா மற்றும் கம்  உள்ளன

உடலுக்கு நீர் தேவைப்படும் அறிகுறியாகிய  தாகத்தின் தா என்பதில்  இதற்கேற்ற பொருளில்லை. தா:  நீர்விடாயைக் குறிக்கவில்லை.

ஏன் ?

தண்ணீர் தவிக்கிறது என்கிறோம். தவித்தல் என்ற ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கொண்ட சொல்லின் திரிபுதான் தாகம்;

தவி + அம் = தாவம்.  இது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

தாவம் >  தாபம்,  இது வகர பகரப் பரிமாற்றத் திரிபு.

என் தாபம் நீ அறியாயோ ? என்கிறது ஒரு பாடல்.

மனத் தாபம்  (  மனஸ்தாபம் ) என்பது வழக்கு

தாபம் >  தாகம்.  ப பின் க வாகத் திரிகிறது/

ஆகவே கம்  என்பது இச்சொல்லில் ஒரு பின்னொட்டு அன்று.

Read also:

http://sivamaalaa.blogspot.sg/2015/10/blog-post_19.html

http://sivamaalaa.blogspot.sg/2015/10/blog-post_19.html




கருத்துகள் இல்லை: