திங்கள், 30 நவம்பர், 2015

வலியோன் என்ற சொல்

இச்சொல்  பல் வேறு வகைகளில் முடிவதை இப்போது கண்டுகொள்வோம்.

வல்+ இ+  ஒன்  =  வலியோன்

 இதிலிருக்கும்  லகர ஒற்று  (ல்)  இரட்டித்தும்  வரும்.

வல்  +  ல் + இ + ஒன்   =  வல்லியோன் .

இடையில் இகரம் தோன்றாமல்  வருதலும்  அமையும்,

வல் + ல் +  ஓன் =  வல்லோன்.

மேற்சொன்னபடி  லகர ஒற்றுப் பெறாமலும் வரும்:

வலோன் :     (  மதிவலோன்,  கலைவலோன் )/

வலவர் .  வலார்  என வரும் பிற  பின்னொரு நாள் காண்போம்.

இப்போது  வல்லியோன் என்பது வந்த ஓர்  எடுத்துக்காட்டு:

"இமைப்புவரை அமையா  நம்வயின் 
மறந்து  ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே ."

குறுந்  248.

  

வியாழன், 26 நவம்பர், 2015

"பண்டைப் புலவோர்" ஒரு கண்ணோட்டம்

புலவர் என்ற சொல் புலம் + அர்  என்றமைந்த சொல்லாகும் .

புலம் என்பது காட்சி என்றும் பொருள்படும். கட்புலம்  அதாவது  கண்ணின்  காட்சி  அல்லது காட்சித்திறன்,  அதுபோல்  செவிப்புலம்   என்றும்  அமையும் ,

புலம் என்பது  புலன் என்றும் வரும்.  இது போல வருதலின்  போலி எனப்படும்,
அதாவது புலம் என்ற சொல்லில் மகர ஒற்று வந்ததுபோல்  னகர  ஒற்று வந்து அதே சொல்லாய்ப்  பொருளோடு அமையும்.  புலன்  எ-டு :  ஐம்புலன்,   மெய்ப்புலன் .

புலம் என்ற சொல் புல் என்ற சொல்லிற் பிறந்தது.  புல்லுதல் என்றால் பொருந்துதல்.  காணும் திறன் உள்ள கண்ணோடு  காணப்படும் பொருள் சென்று ஒளியால் பொருந்துகிறது.  ஆகவே புல் > புலம்  ஆயிற்று .

புலம் + அர்  என்பதில்  மகர ஒற்று  மறைந்து   புல+ அர்  என்றாகி  வகர உடம்படு மெய்  தோன்றிப்  புலவர் என்று சொல் அமைந்தது.  அர்  விகுதி சேர்க்காமல்  ஓர் என்பதைப்  போட்டால்  புலவோர் என்று வரும்.  இரண்டும்  ஒன்றுதான் .
புலவர் என்பது  இப்போது பணிவுப் பன்மையில்  (மரியாதை ​​) வருவதால்
இக்காலத்தில் கள் விகுதி சேர்த்துப்   புலவர்கள் என்றாலே  பன்மையாகிறது,
ஆனால்  ஓர் விகுதி "கள்"  இல்லாமல் பன்மை காட்ட வல்லது.  ஆகையால்  மறைமலையடிகள் "  முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர் "  என்று தம் நூலொன்றுக்குப் பெயரிட்டார்.

புலவர்  என்பது  புலவு + அர்  என்றும் பிரியும்  ;  அப்போது புலால் உண்பவர்கள்
என்றும்  பொருள் தரும்,   புலவு = புலால் , இறைச்சி .

வடபுலவர்  என்று வரும் கூட்டுச் சொல்லில்  வடதிசையில் உள்ள மக்கள்;
வட திசையில் உள்ள புலவர்கள் ;  வடக்கே புலால் உண்போர்  என்று மூன்று விதமாகப் பொருள் கொள்ளலாம்;  காரணம் புலம் என்பது இடம் என்றும் பொருள் ஏற்கும் சொல்.இடம் நோக்கிப் பொருள் கொள்க.  மயக்கம் இன்றிப் பொருள் வரவேண்டுமானால் வடபுலத்தார்  தென்புலத்தார்  என்று இடம் சுட்டுவது நன்று     புலம் பெயர்ந்த மக்கள் என்ற தொடரையும் நோக்கவும் ,  புலவு என்பது இறைச்சி  அல்லது புலால் என்றும் பொருள் கூட்டுவது


ஔவைப்பாட்டி
"புலவு    நாறும்   என்  தலை தைவரு மன்னே"  என்று புற நானூற்றில் கையறு  நிலையில் ாடுதல் காண்க.

browser collapsed  will edit later




ஒரு புதிய கூட்டுச்சொல்

சக்கிலியன்  என்ற தொடரில்  கடைசி  இடுகையை எழுதிக்கொண்டிருந்த  போது,   இறைச்சி முதலியன  உண்ணுதல்  அல்லது  பேச்சு வழக்கில் :"கவிச்சி உணவு"  என்று சொல்லப்படுவதற்கு ஒரு புதிய சொல் தென்பட்டது,

மாமிசம் என்னும் சொல் தமிழன்று  எனப்பட்டாலும்  அதற்கு   மா மிசைதல் என்ற தனித்தமிழ்ச் சொற்றொடரே மூலம்   எனற்பாலது  யாம் காட்டினோம்.

ஆகவே  கவிச்சி உணவுக்கு "மாமிசைவம்"   என்று  ஒரு புதிய கூட்டுச்சொல்லை  நாம் படைத்துப் பயன்படுத்தலாம்,

ஆனால் இதில் ஒரு இரட்டுறல் உள்ளது,

எப்படி:

பிரித்தால்  மாமி + சைவம் என்று வரவில்லையா?


புதன், 25 நவம்பர், 2015

சக்கிலியன் iv

தமிழ் நாட்டுச் சாதிகளில் பலர் விலங்குணவு உண்பவர்கள்.  விலங்குணவு என்றால் பிண்ணாக்கு முதலிய விலங்குகள் உண்ணும் தீனியைச் சொல்லவில்லை .விலங்கையே கொன்று அதன் ஊன்  தின்போர்.  மா மிசையும்  தரத்தினர் . மா-  எனின்  விலங்கு .  மிசை -  உண்ணுதல்,
மா+ மிசை +  அம்  =  மாமிசம்.   மிசை என்பதில் உள்ள ஐ  கெட்டது  -  dropped,


ஒவ்வொரு சாதிக்கும் அறுக்கப் பட்ட விலங்கின்  பங்கு  போடப்பட்டு  ஒரு  பகுதி  தரப்படுமாம்,  இவர்களில் சலவைத்தொழிலாளிக்குத்   தலை ஒதுக்கப்படும்.   ஆகவே  வxxனுக்குத்   தலை கொடுப்பார்களாம் . அவன்  "ஆட்டுத்தலைக்குப்  பறந்தது போல" என்ற பழமொழி இதனைச்   சுட்டும் ,(உவமைத் தொடர் )

இது பழங்காலத்தில்  என்பர்.

சக்கிலியனுக்கு  இறைச்சியே தரப்பட்டது  என்பர்   .

சக்கிலி என்றால்  flesh eater என்று பொருள்படும்     சட் குலி  என்ற பெயரின்  திரிபு இது  என்கிறார்  அறிஞர்  வின்ஸ்லோ.  இது பிராகிருதம்  என்று சிலர்  நினைக்கின்றனர்  1

இச்சொல்லின்  மூலம் ஆராய்வதற்குரியதாய் உள்ளது   2


----------------------------------------------------------------------------------------------------------------------,

Notes:

1

from  Malayalam dictionary  also: as follows:-

. ചക്കു (page 340)
ചക്കിലിയന്‍ T. M. (f.— ലിച്ചി) A Tamil shoemaker. (T. fr. S. ശാഷ്കുലി "flesh-eater," Winsl.) Tj


2

The chakalas caste  also a low caste  is said to have derived their caste name from a telegu word   chaku which means to wash.  They worked as washermen in the villages,  The relationship of this word to  chakkili needs to be looked into.  In chakkusnana washing is also mentioned but of the deity's eyes,    ref:  Case and Tribes of South India.  In preparing leather for shoe -making, washing and other procedures are involved.

The chakkilian performed  duties as executioner  in respect of  caste  adultery offences  committed by
certain persons esp women.of certain castes,   (  Turnbull  )  
  They also functioned as guards over thottian girls attaining puberty  (as per  Madras Gazettier)

RSS

மாட்டைக் காக்கப் போனதனால் 
கோட்டை பறிபோய் விட்டாலோ 
நாட்டை நடத்தத் தகுதிதரும்
சீட்டைப்  பெறல்பின் எளிதாமோ?    

செவ்வாய், 24 நவம்பர், 2015

போட்ட குப்பையிலே.....

நீங்கள் போட்ட குப்பையிலே
நெளிகிற பூச்சி  புழுக்களையே
நீங்கள் வெறுத்த போதிலுமே
உங்களை வந்தே சேர்ந்திடுமே.

மழையின்  நீரும் ஓடாமல்
வெள்ளப் பெருக்கால் கேடாமே!
உளையும் சகதியும் மிதமிஞ்சி
ஊர்க்குள் உயிர்கள் வதமாமே

ஏரியுள் கழிவுகள்  சேராவேல்
என்றும்,குடிக்க  நீராமே
மாரியும் உம்மைக் காப்பாளே
மாய்க்கும் நோய்களைத் தீர்ப்பாளே!

ஏரியுள் கூளம் எறிந்தாலோ
எடுத்திடச் செலவு  தெரிந்தாலோ.
காரியம் நல்லது கைக்கொள்வீர்
கடமை இதுவென மெய்சொல்வீர்.:

சிவனும் சிவப்பாலமும்

இந்த சிவப்பாலம் என்பது  சிங்கப்பூரில் கம்போங் ஜாவா சாலையில்  (road)  இருந்த ஒரு பாலம்.   சிவ எனும்  அடைமொழி பெற்றிருந்ததால் அங்கு சிவன் இருப்பார் என்றோ சிவன் கோயில் இருக்குமென்றோ  நினைக்காதீர் .  அது ஒரு சிவப்புச்  பூசிய பாலமாக இருந்ததுதான் காரணம்.  மலாய் மக்கள் அதை  Jambatan Merah என்று  கூறினதால், அதை மொழி பெயர்த்து  சிவப்புப் பாலம் என்றனர் தமிழர் .   அப்புறம்  அது  சிவப்பாலம்  என்று  குறுகி  அமைந்தது.  (மரூஉ )  jambatan  பாலம்    merah  சிவப்பு.

மலாய்க் கம்பங்கள்  அல்லது சிற்றூர்கள்  அருகிலிருந்தன.  இப்போது  இவைகள் அங்கில்லை.   பாலத்துக்கு வேறு  சாயம்  பூசியவுடன்  அங்கிருந்த merah puteh gang ( a secret society)  செங்கருமைக்  குண்டர்  கோட்டியினர்  எங்கு போயினர்  என்பதை யாரும் அறிந்திலர்.  குண்டர்கள்  தங்கள்  மண்டர் தகுதியை இழந்தனர் போலும். ( மண்டர்  {தமிழ் }-  champions.     திவாகர நிகண்டு காண்க.)

ஏன் வேறு சாயம் பூசினார்கள்?   ஒன்றுமில்லை;    இருந்த சாயங்களைப் பூசி
இனிமை  காண்பதற்கே.  கட்டுக் கிடையாய்க் கிடக்கும் சாயங்கள் கெட்டுப் போகும். பூசி மகிழ்க .

பாலம்  இருக்கிறது;  (மேம்படுத்தப் பட்டு).
பாடை  மறைகிறது.  பார்வை  மாறுகிறது.

இலுப்பை மற்றும் இனிமை


==========================

இலுப்பைக்கும் இனிமைக்கும் உள்ள தொடர்பினை அறிந்துகொள்வோம்.

இலுப்பைக் காய் பழுத்தவுடன் சர்க்கரை போலும் ஓர் இனிமை இதில் உள்ளது. யாம் சுவைத்துப் பார்த்தவை வியட்நாம், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாட்டில் விளைந்தவை. இதை மலாய் மொழியில் "சிக்கு"   chiku என்பார்கள்.  chiku  not siku. Do not mispronounce.  Now written as ciku. 

இலுப்பை என்ற சொல்லின் அடி, இல் என்பது. அது சிதைவு அடையாமல் சொல்லில் இன்னும் வாழ்கின்றது.

இனிமை என்ற சொல்லின் அடி இன் என்பது. இது, இன்> இனி> இனிமை என்று அமைந்தது. இன்மை (இல்லாமை) என்பதில் வரும் இன் - சந்தியில் தோன்றியதாகையால் அது வேறு என்க.


இல் என்பது இன் என்று மாறும். இவ்விரண்டில் இல் என்பதே மூலம். இல் என்பது பல்பொருள் கொண்ட ஓர் மூலச்சொல். இதன் எல்லாப் பரிமாணங்களின் உள்ளும் இங்கு யாம் புக முற்படவில்லை, பரிமாணம் ஆவது பரிந்து சிறப்பது. அதாவது தோன்றிப் போல இருப்பவற்றினின்று அழகுற்று வேறுபடுவது,, தோன்றிப் போன்மையின் வேறுபடல். மாணுதல் = சிறத்தல். மாண்> மாணு > மாணம். எனவே பரிமாணம். பரிதல் - வெளிப்படுதல். பரி > பரிதி. முன் வெளிப்பட்டதாகிய சூரியன். அதிலிருந்து வெளிப்பட்டன ஏனைக் கோள்கள். காற்றுப் பரிதல் ( வெளிப்படல்) என்னும் பேச்சு வழக்கை நோக்குக.. இத் தடப் பெயர்வு நிற்க



இல் = இன். l and n interchangeable  and not language-specific,
இல் >இலுப்பை
இன் > இனிப்பு.

இல்> இலுப்பு> இலுப்பை.
இன் > இனுப்பு > இனிப்பு.
இலுப்பு> இனுப்பு > இனிப்பு.

இனிப்பு என்பதைப் பேச்சில் இனுப்பு என்று பலுக்குவோர் பலர் உளர். அது இனிப்புக்கு முந்திய வடிவம்.

தமிழில் இனுப்பு என்பதை இனுப்பு என்றே பேசினோரும் அதை இனிப்பு என்று பேசினோரும் என இருசாரார் இருக்க, இனிப்பு என்பதே எழுத்தில் முதலில் வந்து நிலைத்துவிட்டது;

மொழி ஆய்வு வேறு. மொழியை தற்கால நிலைப்படி மரபு காத்தல் என்பது வேறு. பேச்சுக்குப் பிந்தியது எழுத்து. விரி வரிக்க - விவரிக்கத் தேவை இல்லை.


Shall meet and greet again.  Pl stay tuned.

Learn more:   பின் து  > பிந்து   முன் து >  முந்து;  மன் + திறம்  மந்திரம்   திறம் >  திரம் Said long ago a few times ........Enjoy.

திங்கள், 23 நவம்பர், 2015

Ancient Tamils:ஆசீவக மதம்

:திரு காந்தி வாண்டையார்   ஆசீவகம்  என்ற சமயம்  பற்றி  எழுதிய சில வரிகள்  இங்கு மீள்பதிவு  செய்யப்பட்டுள்ளன .   நமது  இவ்விடுகைக்கு  இது போதுமானது.  தமிழகத்தில் தோன்றி வளர்ந்த  இந்த  ஆசீவக  மதம்  தன்  சிறப்பியல்புகளில்  சிலவற்றைச்   சமண  (ஜயன )  மதத்திற்கு  வழங்கியுள்ளது.  இதன் கொள்கை ஒற்றுமையின் காரணமாக ஆசீவகத்தைச்  சமணம் என்று  மயங்குவர்  சிலர் .    வெளி  மாநிலம்  ஒன்றில்  முழுவளர்ச்சி  அடைந்த நிலையில்  சமணம் பின் தமிழகத்திற் புகுந்தது. (ACE_or After the Christian Era.) 

#370

F.S.Gandhi vandayar  F.S.G   

Tolkappiam & Thirukkural explicit the   ":Asivagam" 
and this religion was created by tamil 'Aasiriyans'. 

This religion was the base for all traditions in India. Even Buddha learnt Asivakam and included 

some of the concpets into his fold. Jainism never came into being in tamil land before common era. 

Jains also sweeped some of the concepts of Asivakam. All the Stone layouts in tamil land was 

belonging to Asivakam and not jainism. 

The athinathar Jains temples were created during 400 ACE and all of them were turned into siva 

temples now. 

The theory of Jainism in tamil land has been wrongly concluded so far. This has been re-

researched and latest conclusions have been made by scholars. Tamil Iyyanar tradition is the first 

form of Asivakam. 

A detailed topic shall be written by me after some time.

f.s.gandhi  3rd November 2006, 11:37 PM

ஆசீவகம்  பற்றி  மணிமேகலைக்  காப்பியத்திற்   குறிப்பிடப் படுகிறது 


ஆசீவகம்  என்ற சொல்லைப் பார்ப்போம் .


ஆசு  +  ஈவு  +  அகம்,

ஆசு  =  பற்றுக்கோடு;   ஆதரவு,  பற்றி  நிற்பது.

ஈவு  =   தருவது;   இது  ஈதல்  என்ற சொல்லிலிருந்து  அமைந்தது. 

அகம்  -   வீடு;  இங்கு  அமைப்பைக் குறிக்கிறது.

பற்றிக்கொள்ள  ஒன்றும்  கிடைக்காத  மனிதன்  பற்றி  நிற்க இடம்தரும்  கொள்கையமைப்பு.
ஆசிரியன்  என்ற சொல்லும்   ஆசு என்பதினின்றே  தோன்றியுள்ளது. 

இனி  முதற் பதமான  ஆசு என்பதைப்  பார்ப்போம்.

ஆதல் :   தொடங்குதல்,   உண்டாகுதல்.   அமைதல்.  சரியாகுதல், விளைதல்,  முடிதல்.

ஆ >  ஆசு .  சு என்பது  தொழிற்பெயர் விகுதி. 

மா >  மாசு :   அழுக்கு.    மா  என்பது   கருப்புக்கு  அணிமையானது  என்று பொருள் படும்.

வினை அல்லாத சொல்லிலும்  சு  விகுதி  வந்தது.

மா  > மால்.   கருப்பனான  சாமி,
மா  - மா நிறம்
" கரிய மால்  உந்தியில்  வந்தோன்."     :     ஔவையார் 
.

இவ்வாறு  ஆசீவகம் என்ற சொல்லையும்  சொற்பொருளையும்  அறிந்து மகிழ்வீர் . 

வள்ளுவர் மதத்தைக் கண்டுபிடிக்க......

திருவள்ளுவர்  எந்த மதத்தைச் சார்ந்தவர்  என்பதுபற்றி  சில \ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாதம் நடந்தது.  அதில்  நானும் கலந்துகொண்டு  எழுதினேன்.  அங்கு எழுதியது:  29th August 2006, 10:02 PM

ஆய்வு என்றால் என்ன?

கவிஞர் பாபநாசம் சிவன், திருவள்ளுவரின் வழியைப் பின்பற்றித் தம் பாடல்களின்வாயிலாகப் பல நல்லறங்களைப் போதித்துள்ளார்!!
ஆனால், சிவனின் மதத்தை அவர் பாடல்களின் வழி நாம் நிறுவினால், PhD வாங்குவதுடன், உலகப் புகழும் அடைந்துவிடலாம்.

காந்தியைப் பற்றி எழுதிய சிவன். " அகிம்சைதனிலே புத்தரவர்" என்று ஒரு பாட்டில் எழுதியிருக்கிறார்.

இன்னொரு பாடலில் "புத்தரைப் போற்றுதல் நம் கடனே" என்றும் பாடியுள்ளார்.

ஆகவே, அவர் பௌத்தர் அல்லது, புத்த மதத்தின்பால் மனச்சாய்வு உள்ளவர்.

வள்ளுவர் மதத்தைக் கண்டுபிடிக்கச்  சிலர் கையாண்டுள்ள வழியைப் பின்பற்றி, எல்லாருடைய மதங்களையும் கண்டுபிடித்துவிடலாம்.

இதற்காக ஒரு தனித்திரி தொடங்கினால் பௌத்தர்கள் மகிழ்வார்கள். எப்படி என் கண்டுபிடிப்பு? ஆய்வு என்றால் இதன்றோ ஆய்வு

------------------------------------------------------------------
கீய்வு


அப்படியானால் பாடலை வைத்து, வள்ளுவன் என்ன மதம், இளங்கோ என்ன மதம், பாபநாசம் சிவன் என்ன மதம், கம்பதாசன் என்ன மதம், கண்ணதாசன் என்ன மதம் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியாது என்று நீங்கள் கூறுவதுபோல் தெரிகிறதே?

அப்படியானால், இங்கு நடந்துவரும் ஆய்வு உங்களுக்கு உடன்பாடில்லை என்கிறீர்களோ?

ஒரு பாடலை வைத்து, பாரதிதாசன் என்ன மதம் என்று கண்டுபிடித்துவிட்ட நிலையில், இது ஒரு பின்னடைவுதான்!!

பாருங்கள்:

"பின்னை ஒரு கடவுளைப் பேண நினையார்,
பேரொளியைக் காணுவாரென் றாடு பாம்பே!"

என்று பாரதிதாசன் பாடியுள்ளதால், அவர் பௌத்தர் என்று முடிவு செய்யலாம் என்றலவோ எண்ணிக்கொண்டிருந்தேன்!! பேரொளி என்றால் புத்தர்!! The Light of Asia என்றும் ஆங்கிலத்தில் கூறுவர்!!

கம்பதாசன்  - கண்ணதாசன் கிறிஸ்தவர்கள்!!
காளிதாசன் மட்டும் காளிபக்தர்!

பாரதி மட்டும் எந்த மதத்திலும் இல்லைபோலும். அவர்:

""யாரும் பணிந்திடும் தெயவம் -- பொருள்
யாவினும் நின்றிடும் தெயவம்.
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில்
பற்பல சண்டைகள் வேண்டா!"

என்று பாடி, எல்லா மதமும் ஒன்றுதான் என்கிறார்.

எப்படி என் ஆய்வு?

name as indicator of religion

என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

என் சொந்தக்காரன் ஒருவன் - பெயர் சுப்ரமணியந்தான். ஒரு மலாய்ப்பெண்ணை மணந்துகொண்டான். இரகசியப் பெயர் ஹாசான் அப்துல்லா!! அலுவலகத்தில், வெளியில் பெயர் சுப்ரமணியன். மலாய்க்காரி (விரிவுரையாளர் ) மனைவி: "abang hasan! abang hasan" என்று கூப்பிடுவாள்.

இன்னும் பல உதாரணங்கள் உள்ளன. இவனை விடக்கூடாது என்று நாங்கள் கோயில் பூசைக்கு வரி கேட்டோம். 61 மலேசிய வெள்ளி கொடுத்தான். கோவிலுக்கு வந்து எங்களைப் பார்த்து "ஹலோ" சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

நாடறியாத, இறுதி நாளில் வெளிப்பட்ட மதமாற்றங்கள் பல உள்ளன.

இந்திய நாடு போற்றிய ஒரு பெருந்தலைவர், திருமணத்தின்போது மதமாறிக்கொண்டார், பின்னர் அது மறைக்கப்பட்டது என்று இணைய தளத் தகவல்களில் முன் வந்தது அறிவேன்.

பெயர் ஓர் அடையாளக் குறியாகலாம். ஆனால், முற்றிலும் நம்பத் தகுந்தது அன்று.

இப்படி எழுதியபின் வாதம் ஓரளவு அடங்கிவிட்டது.
------------------------------------------------------------------------------------------------------------
கம்பதாசன் :   அருள்தாரும் தேவமாதாவே என்ற  புகழ்பெற்ற பாடலை  எழுதியவர்.

கண்ணதாசன் :  ஏசு  காவியம் பாடினார் .


சனி, 21 நவம்பர், 2015

mUshikam மூஞ்சூறு

உறுதல் என்ற சொல் தமிழில் மிகுதல் என்று பொருள்படுதல்.அறிவீர் .

மூஞ்சி  உறு >  மூஞ்சூறு  :  மூஞ்சி நீண்ட சிறு விலங்கு.1

இது கதவாணர்க்கு விளங்கியதோ இல்லையோ,  அவர்கள் அந்த விலங்குக்கு ஒரு சொல்லைப் படைக்க விழைந்து:

மூஞ்சி + இகம்1 ‍ மூஞ்சிகம்  அதாவது மூஞ்சி சற்று விரிந்த  விலங்கு என்ற பொருளில் ஒரு சொல்லைப் படைத்தனர். இச்சொல்லும் அழகுடன் அமைந்திருந்தது.  மூஞ்சிகம் என்பது வெளிப்படையாகத் தமிழாக இருக்கவே, 2

மூஞ்சிகம் >  மூசிகம் ஆனது. நன்றாக இல்லை. இறுதியில் மூஷிகம் ஆயிற்று,

ஒரு புதிய இனிய சொல் கிட்டியது......

குறிப்புகள்:


1. மூஞ்செலி   நச்செலி  என வருவன காண்க .

2. இகுத்தல் -  (பல பொருள் உடையது ).  இதிலொன்று:  விரிதல் (to spread out).  இகுத்தல்  >  இகம்  (இகு + அம் )

3 முன் > மூன் >  மூஞ்சி   தலை நீண்டு விகுதி பெற்ற சொல்.  இப்படித் தலை நீண்ட பலவும்  முன் இடுகைகளில் கண்டு பட்டியலிட்டுக் கொள்க.


மறப்புமங்கை

நினைப்பதை விடுப்பதோ மனமே‍=== நீ
மறப்பதில் ஒப்புயர்வு இலாதவளே!
இணைப்புறக் கருத்துகள் வாராமல் நிற்கையில்
முனைப்புற இழுத்துவா முன்னவற்றை


நினைப்பறைக் கதவுகள் சாத்திவிட்டாய்
மறப்புமங் கையுடன் கூத்தடித்தாய்
உனை ந‌ம்பி செயல்படத் தொடங்கிய எனை வெம்பிக்
கரைந்தழச் செயல்தகுமோ முறையோ


This is not about anything relating to my output for this blog or literary work.
It is about something you may never be able to guess. Just enjoy the riddle.

வெள்ளி, 20 நவம்பர், 2015

சக்கிலியன் III

சக்கிலியன்   என்ற  சொல்லைத் தொடர்ந்து நோக்குவோம்.

சகக்களத்தி என்ற சொல்  சக்களத்தி  என்று மாறியுள்ளதை முன்மாதிரியாகக் கொண்டு இதனை நோக்கினால்  சக்கிலியன் என்பது  சகக்கிலியன் என்று இருந்திருக்கவேண்டும். அப்படியானால்  அதற்குப் பொருள்  அஞ்சி ஒடுங்கின பிறருடன் தாமும் அஞ்ச்சினவர்கள்  என்று பொருள்.

கிலி என்பது  அச்சம். பௌத்தம்  மற்றும் சைவம் ஆகிய சமயங்களின் போட்டியின் போது  சைவத்திற்கு மாற  அல்லது பௌத்தத்தை விட்டு மாற அஞ்சினவர்கள்   என்பதாக பொருள் கொள்ளுதல் பொருத்தமானதாகும்.  இம்மக்களைப் பாதித்த வேறு வரலாற்று  நிகழ்வுகளையும்  ஆய்வது   இன்றியமையாதது.

தொடரும்

முன் இடுகைகளையும் காண்க  

செவ்வாய், 17 நவம்பர், 2015

கற்பழித்தவனை..........

Indonesian newlyweds ate alleged rapist's genitals: police

A police chief (L) speaks to suspected murderers Rudi Efendi (C) and his wife Nuriah, who were arrested over claims they dined on the genitals of the woman's suspected rapist after her husband allegedly murdered him and cut off his private partsView Photo

Couldn't they deal in a civilised manner.............?

Read more at:

https://sg.news.yahoo.com/indonesian-newlyweds-ate-alleged-rapists-genitals-police-073323976.html 

திங்கள், 16 நவம்பர், 2015

Plant bombs NOTIN MY NAME

https://sg.news.yahoo.com/singaporean-muslim-facebook-post-paris-031039821.html

Read the above post  wherein a Singaporean Muslim has  spoken up.

Islam is a religion of peace,  there is no place in it for setting up  bombs,

https://sg.news.yahoo.com/singaporean-muslim-facebook-post-paris-031039821.html

சக்கிலியன் II

http://sivamaalaa.blogspot.sg/2015/11/blog-post_15.html

மேற்கண்ட  (முன்) இடுகையிலிருந்து தொடர்கிறோம். ]

நாளடைவில்  சக்கு என்பது சக்கு  நீராட்டுதலைக் குறித்தது  ஆகுபெயர்.

சக்கிலியர் அரசாண்டதாகவும் கதை இருக்கிறது.  அவர்களில் ஒருவர்  3 மணி நேரமே  கொலு வீற்றிருந்தார் என்றும் பின் பதவி  துறந்தார் என்றும் கூறுவர்.

  இவர்கள் சாக்கிய முனியைப் பின்பற்றினர் என்றும்  ஆகையினால் இப்பெயர் பெற்றனர்  என்றும் கூறுகின்றனர்.
சாக்கியர்  >  சாக்கிலியர் >   சக்கிலியர்  என்று வந்தது  என்பர் போலும்.
இங்ஙனம் முடிவு  செய்வதாயின் சக்கிலி   என்பது முழுச்சொல்லின் திரிபு  என்றும்  இலி  என்பது  பின்னொட்டு அன்று என்றும்  கொள்ளவேண்டும்,

அவர்கள் தொழில் எப்போது  மேற்கொண்டனர் என்ற கேள்வியும் உள்ளது.

Errors occurred and we could not continue.  Shall develop later. 

ஞாயிறு, 15 நவம்பர், 2015

சக்கிலியன்

சக்கிலியன் என்ற சொல்லை இப்பொழுது  சற்று பார்ப்போம்..

இது ஆய்வு செய்து உடன் அறியக்கூடிய சொல் அன்று.

வண்ணான் என்பது  ஒரு சாதிப் பெயராகவும்  ஒரு தொழில்செய்வோனின் பெயராகவும் ஒருங்கு காணப்பெறுவது போன்று  சக்கிலியன் என்பது அத்துணை தெளிவாக இல்லை.    வண்ணான் எனில் துணிகட்கு வண்ணமூட்டுபவன்  என்று எளிதில் அறியலாம்.   சக்கிலியன்  என்பதை  அங்ஙனம் உடன்கூற இயலவில்லை.

சக்கிலியன்  என்பதை  சக்கு  இலியன்  எனப் பிரிக்குங்கால் சக்கு என்பது இப்போது  வழக்கில் இல்லை. ஆனால்  அது யாழ்ப்பாணத்து அகரவரிசைகளில் சக்குஸ்நானம்  என்ற சொல்லில் பொதிந்து காணப்படுகிறது:  அதன் பொருள்:

 n. < சக்கு¹ + ஸ்நானம்  Ceremonial washing of the eyes of a deity in a temple; விக்கிரகத்தின் கண்களை நீராற் சுத்தி செய்யும் பூசைவகை

 இலியன்  என்றால் இல்லாதவன் என்பது பொருள்.  இலியன்  அல்லது இலி  என்பது வரும் பல சொற்கள் உள.   அவற்றைக் காண்போம்:

ஒப்பிலியன் >  உப்பிலியன்   (உப்பிலியக் குடி )
இறையிலி 
பிறப்பிலி 
இறப்பிலி 
கட்கிலி   invisible,  God. (கண் + கு​ + இலி ​)
என்பிலி  எலும்பிலி  ( புழு )
தப்பிலி 
போக்கிலி > போக்கிரி    திரிபு:  ல > ர 
நெய்ப்பிலி ( a flaw in precious stone,  esp  ruby)
பொருவிலி   (= ஒப்பிலி )
அறுகிலி  ( ஒரு பூண்டு ) 

எனப் பலவாம்.

சக்கிலியன் என்று  அன்  விகுதி  பெற்றால்  ஆண்பால்;  சக்கிலிச்சி என்று பெண்பாலில் வரும். 

எனவே மேற்சொன்ன பூசை  சக்கிலி என்னும் தோல்வினைஞர்கட்கு 
விலக்கப்பட்டது  என்று  பொருள்படும்.  பின்பு  முற்றிலும் விலக்கப்பட்டனர்  போலும்.  இது மேலும்  ஆய்தற் குரியது. 

தொடரும் 



சனி, 14 நவம்பர், 2015

paris attacks

பாரீஸ்  படுகொலைகள்  பாவமென்றும் பார்க்காத 
யாரவர்கள் நோக்கம் எதுவெனினும்----வீரமற்ற
கோழைச்  செயலே கொடுமை உகப்பவனோ 
ஆழிசூழ் ஞாலமாள் வோன்.

வியாழன், 12 நவம்பர், 2015

"இவ்விடம்" அடிக்குறிப்புகள் இலத்தீனில்

இப்போதெல்லம் பல நூல்களில்  அடிக்குறிப்புகள்  தரப்படுகின்றன,   பெரும்பாலும் ஆராய்ச்சி  நூல்களில் இவை இன்றியமையாதவை  ஆகிவிட்டன,  குறிப்புகளைக் கட்டுரையினுள்ளேயே  புகுத்தலாம் என்றாலும்  வாசிப்போருக்கு அது  ஓட்டத் தடையாய் அமைந்து  படித்து முடிப்போருக்கு  மிகுதியான  நேரச்செலவாகவும்   விளைந்துவிடுதல் கூடுமென்பதை    நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.  சிறு எழுத்துரைகளுக்கு  இவை தேவைப்பட மாட்டா.

அடிக்குறிப்புகட்கு வசதி தரும் வெளியீடுகளில்    ஒரே    நூலிலிலிருந்து  ஒரே பக்கத்தில்  ஒன்றுக்கு மேற்பட்ட குறிப்புகள் தரும்படி நேர்ந்தால்  அதே நூலின் பெயரை திரும்பவும்  அச்சிட்டு  மறுதரவுகள்   உண்டாக்குவதை  எப்படி விலக்குவது ?  

அடுத்த குறிப்பில்  முழுவதையும் மீண்டும் எழுதாமல்,    எடுத்துக்காட்டாக  Ibid,  p 27  என்று குறித்து  படிப்போர்  எழுதுவோர் அச்சுக்கோப்பவர்   ஆகியோர் நேரத்தையும் கருத்து ஓட்டத்தையும்  இடையூறு இல்லாமல் செலுத்தலாம், 

இப்போது  இபிட்  ( Ibid  )  என்பதன்  பிறப்பினைத்  தேடிப்  பார்ப்போமே!

இபிட்  என்பதோ ஒரு வெட்டுப் பட்ட பதம்.  அதன் முழுமை  ibidem   என்பதாகும். இது ஓர்  இலத்தீன்  சொல்.

சரி  இந்த  இலத்தீன் சொல் எப்படி எங்கிருந்து வருகிறது?

இவ்விடம் >  இபிடம்   ஆயிற்று.

வகர -  பகர  திரிபு.   வ்வி  > பி .    b

இத்தகைய திரிபுகளில்    p,  b  வேறுபாடில்லை .  சில ஐரோப்பிய மொழிகளை  ஆய்ந்து  இதனை அறிக.

பன்னூல்களும் பயன்படுத்தும்  இதனைத் தந்த பெருமை  தமிழினதாகும்.

இலத்தீன்  ஆசிரியர்கள்  இதில் " இபி "   இங்கு  என்பதாகவும்     டெம்   விகுதி என்றும் கூறுவர் .
ஆனால்  இ  என்பதே   சுட்டு  என்றும்   இடம்  தலம்  குறிக்கும் முழுச்சொல் என்றும்  யாரும்  அறிந்ததுதான்.

  

புதன், 11 நவம்பர், 2015

மரா மரா மரம் தமிழென்று,,,,,,,,,,,

வான்மீகியார் தம் இராம காதையைத்  தொடங்கும்போது  ராமர் ஆண்ட நகராக  எந்த நகரைக் கூறுவதென்பது ஒரு தீர்வுக்குரிய பொருளாக வந்து முன்னின்றது.  ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் எந்த எந்த நகரங்கள் இருந்தன என்பதும் அவற்றுள் எது ராமரின் நகர் என்பதும் சிந்திக்க வேண்டியவாயின, .

முனிவர் வான்மீகி வாழ்ந்த நகருக்கு  அல்லது காட்டுக்கு  அது  அயல்  ஆயிற்று  ஆகவே அயல் என்பதை வைத்துக்கொண்டார் முன் இராமர் ஆண்டதாகக் கொள்ளப்படும் எந்த நகருக்கும்  அது அயலே ஆகும்.  ஆனால் அந்த நகர் அவர்  கதைக்கு ஒத்து வரவேண்டும்  ஆகவே    ஒத்து என்ற  சொல் தேர்வு செய்யப்பட்டது. 

 அய(ல்) +ஒத்து  + இ  -  அயோத்தி  என்ற சொல் பிறந்தது.

இராமனின்  நாடு  நகரம் முதலானவற்றுக்கு  அயலானதும்  ஆனால்  ஏனை  எல்லா  முறையிலும்   அவற்றை  ஒத்துமிருக்கும்  இடம் என்று பொருள்,  இறுதி  இ விகுதி   சொல்லிறுதியாகவும்  இடம் என்றும் பொருள் தரும்,

நாட்டை விட்டுக்   காடு சென்றோனுக்கு  நாடு அயல் என்பதும் குறிப்பு,  அவனில்லாத போதும் அவன் இருப்பதை ஒத்த  ஆட்சி  என்பது  "ஒத்து"  என்பதன்  அடுத்துவரு  குறிப்பு.   

அயல் என்பதை அய என்று  வெட்டியது சரிதான்.   பயல்  பய என்றும் வயல் வய என்றும்  தமிழ்ப் பேச்சில் வருதலால்  அய என்ற வடிவத்தையே மேற்கொண்டு சொல்லைப் படைத்து ஒரு நகர்ப் பெயர் ஆக்கினார். நிகழ்வுக்கு  அயலான  நகராயினும்   இராமகாதைக்குரிய  அசலிடத்துக்கு  முற்றும்  ஒத்த நகரம் .  

வால்மீகி ஒரு தமிழன் தான்.   வால் என்றால் தூய்மை;  மிகு +  இ    = மிகி  ஆயிற்று. தூய்மை மிக்கோன் என்பது பொருள். இவர்  ஒரு  சங்கப் புலவர்.

வால் மிகி   என்பதைத் தமிழில்  பொருளுரைத்தால்  ஓர் உன்னதப் பொருள்  கிடைக்கிறது.   சரி,  கிருதத்தில்  பிரித்துப் பார்த்தாலும்  " வளர்ந்த புற்றில்  அமர்ந்த  மேதை "  என்று  உயர்ந்த பொருள்தானே வருகிறது  என்று  வாதம் செய்யலாம்.   கதைப்படி  அவர் பிறந்தது  "பால்மிக்கி"   ( வால்மிக்கி)   என்ற  முன்னரே  அந்தப் பெயருடன் விளங்கிய ஒரு காட்டுச் சாதியில்.   அவர்களுக்கு எப்படி அந்தப்பெயர் கிட்டியது?  அவர்கள் எல்லோருமா  புற்றில் கிடந்து  அந்தப் பெயர் பெற்றார்கள்?   பின்புதான் சாதிப்பெயர் என்றால்  இத்தகைய ஓர்   உலகப் புலவனைத் தந்த கூட்டத்திற்கு  வால்மிகி   என்ற காட்டுச் சாதி  என்ற தகுதிதானா பரிசு ?   காட்டில் அவர் படித்ததாக  புலமை பெற்றதாக  எந்தச் செய்தியுமில்லை. கடவுள் அருளால் எழுதினார் என்பது  நம்பிக்கையாகலாம்  ஆனால்  வரலாற்றுச் செய்தியாவது எப்படி   -----  என்றெல்லாம்  கேள்விகள் எழலாம்  

வட இந்தியாவில் பால்மிக்கி என்றொரு காட்டுவாசிக் கூட்டம் வாழ்ந்து வந்தனர்.   இவரை அந்தக் கூட்டத்துடன் தொடர்புபடுத்திக் கதை புனையப்பட்டது.   அவருடைய  நூலிலும்  இடைச்செருகல்களைச் செய்தனர்.

மரா மரா என்றால் ராம ராம என்று வந்துவிடும் என்றனர்.
மரம் என்பதே தமிழென்று தெரியவில்லை?


முதலில் அது தமிழில் எழுந்து பின் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருத்தல் வேண்டும்.  தமிழ் மூலம் அழிந்தது.அப்போது எழுத்துள்ள மொழி தமிழ்மட்டுமே.

சீதையைக் கடத்த அண்மையில் உள்ள தமிழ் நாடே மிக ப்
பொருத்தமான இடம். புட்பக விமானம் எல்லாம் கதை.

சீர் >  சீ>  சீதை.

பின் சீதை  >  ஸ்ரீ தை  >  ஸ்ரீதா.

இராமாயணத்துப் பெயர்கள் பலவும் காரணப்பெயர்கள்.

http://sivamaalaa.blogspot.sg/2015/11/valmiki-and-his-mother-tongue.html

செவ்வாய், 10 நவம்பர், 2015

vAlmiki and his mother tongue,

இந்தப் பெயர்களைப் பாருங்கள்:

இர்  >  இராமர் >  ராமர்.
இர் >   இரா வண்ணன் > இராவணன் >  ராவணன்.
விழு + பீடு + அணன் >  வி + பீடணன் = விபீடணன்.>  விபீஷணன் 
கை கேசம் இ  > கைகேசி >< கைகேயி.
ஆழ்ந்த நேயம் >  ஆழ்ந்தநேயர் >  ஆஞ்சனேயா
ஆய்ந்த நேயர் > ஆஞ்ச நேயர்  என்றும் வரும்,  
ஆய்ந்த =  தேர்ந்தெடுத்த;  "  ஆய்மயில் கொல்லோ?":  குறள். 
மரை  ​+ ஈசன் =  மரையீசன் >  மாரீசன்   ;  மரை -  என்பது மான்  தமிழ்.
இறைவர் >  இஷ்வர் > ஈஷ்வர் > ஈசர் /  ஈசன் 

காட்டு வாசியான வால்மீகி  பிராமணர் அல்லர் .  பால்மீகி >  வால்மீகி  என்பது  ஒரு  தாழ்ந்த சாதியின் பெயர்,   அன்று உயர்வானவர்களாய்  இருந்தனர்!?  இதில்  நமக்குக் கவலை இல்லை.  அவர் என்ன மொழி பேசினார்?   சமஸ்கிருதம்  பேசினர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.  சமஸ்கிருதத்தை  அவர்தம் காட்டுவாசிக் குடும்பம் பேசியதா?

அண்மைக் காலம்வரை பல்வேறு  திராவிட மொழிகள் வட இந்தியாவில் வழங்கி  வந்தன.  இவை பலுச்சிஸ்தானம் வரை நீண்டு வழங்கின.  எழுத்து  இல்லாத மொழிகள்.  அவற்றுள் பல அழிந்தன.  1970ல் வழங்கின  சில 
இப்போது  இல்லாதொழிந்தன .

இந்த ஆதிப்புலவர் எந்த மொழியில் எழுதினார்?   சம்ஸ்கிருதத்துக்கு அப்போது  எழுத்துக்கள் இல்லையே!.

ஏன் தமிழில் பிரிக்க,  பொருள் கிடைக்கிறது?

இவற்றைக்  கண்டு  தெரிவிக்கவும்.    
   

வேசி சொல்லமைப்பு

வேசி என்ற சொல் ஓர் இழிவழக்கு என்று சொல்லத் தக்கதாகும்.தமிழரிடைச் சிற்றூர்களில் இன்னும் வழக்கில் உள்ள பதம் ஆகும்.  பொருள் பதிந்தது  பதம். பதி + அம்  =  பதம். பதிதல் -  உள்புகுந்து இருத்தல். 

முன் இடுகைகளில் யகரம்  சகரமாகத் திரியும் என்று கண்டோம்.  மயக்கு > மயக்கை>  மசக்கை  என்பது  முன் இடுகைகளில் நீங்கள் கண்டவற்றுடன் கூடுதல் ஒன்றாக வைத்துக்கொள்க.

வேய்தல் என்றால்  மேல்  போடுதல் ;   மேல்  அணிதல் .  மேலிட்டுக்கொள்ளல்.  .  கூரை வேய்தல் ஓர்  எடுத்துக்காட்டு.   பொது மகளிர் தங்கள் மேனியில்  வாசனைப் பொருள்களைப்  பூசிக்கொள்வதும்,  அழகிய ஆடைகளை  அணிந்துகொள்வதும் மை இன்மணக் குழம்புகள் முதலியவை பூசிக்கொள்வதும் ஆகியன செய்வர்,  தலையிலும்  கழுத்திலும் மார்பிலும்  கைகளிலும் அணிகள் கூடுதலாகத்  தரிப்பர்   இதனால் இவர்கள் வேய்ந்து கொள்பவர்கள் .  மைவிழியார் மனையகல் என்றாள்  ஔவைப்பாட்டி,

கிண்கிணி தண்டை சதங்கை சிலம்பொலி 
எங்கும் இசையுடன்  முழங்க ----  கால்கள் 
தகதிமி தகதிமி தகதிமி தகவென தாளம் போட 
மைவிழி  கைவளை யாட 
மரகத மணி வளை ஆட 
உம்முடன் ஆடுவேன் 
புதுமலர்  சூடுவேன் 
புலவி மன மகிழக் குலவி  அனுதினமும்
புதுமலரணைதனில்  கூடிடுவேன் 

என்பது  கவிஞர்  சந்தானம்  வரைந்த பாடல்.   தேவரடியாள்  தன்    வாடிக்கையாளனிடம்  மலர்க்கணை தொடுப்பவள் என்கிறார்  கவி பாப நாசம்  சிவன் .

ஆகவே :

வேய்தல் >(  வேயி  ) >  வேசி    

என்றமைந்ததே  வரைவின்மகளிரை ( வரம்பு கடந்த மகளிரை ),  பரந்து  ஒழுகும்  பரத்தையரைக்  குறிக்க வந்த  குறைதரம் உடைய சொல்.

வேய்ந்து  மயக்கும் வேயியரை  வேசியர் என்று கண்டுகொள்க .  

இப்போது  மேல் யாம் குறித்த "வரைவின்மகளிர் " என்ற தமிழ்ச்சொல்லை, சமஸ்கிருதத்தில்  எதிர்கொண்டு  மகிழ்ச்சி கொள்வோம்,    வரைவு  =  வரம்பு,  வரையறை.  இல் = இல்லாத,  மகளிர் =  பெண்கள்.  வரைவின்மகளிர் என்பது தமிழில் அமைந்த ஒரு சொன்னீர்மைப் பட்ட தொடர்,  இதை vAravanitA  "வாரவனிதா " என்று   கிருதமொழி  எடுத்துக்கொள்கிறது. இல் என்ற நடுச்சொல்  இல்லையானதுடன், மகளிர் என்பதுக்குப் பதிலாக "வனிதா " என்ற அழகிய சொல் கூட்டப்பெறுகிறது,  வனிதா என்பதும் வனப்பு என்ற தமிழுடன் தொடர்பு உள்ள சொல்.  வாரவனிதா ஈரானிய மொழியில் உள்ளதா என்று தேடிப்பார்க்கவும்.

 வேசி  என்ற தமிழ்ச்சொல்லும்  கிருதத்தில் சென்று  பொருதுகின்றது,  இதனால் கிருதவளம்  பெருகுவதாயிற்று,  வேசி  குறிக்க   27  சொற்கள்  கிருதத்தில்        உள்ளன ,
  ஷுண்டா  என்ற கிருதமொழிச் சொல் மலாய் மொழியில் "ஸுண்டால் "  (பொருள்  வேசி )   என்று திரிந்து வழங்கும்.   "பெரெம்புஅன்  சுண்டால் "
என்பர்

ய  -  ச  திரிபு:    கூடுதல்   எடுத்துக்காட்டுகள் 
http://sivamaalaa.blogspot.sg/2015/11/blog-post_5.html 

http://sivamaalaa.blogspot.sg/2015/11/blog-post_5.html

Tamil words for screw and spanner etc

இவற்றுக்கான   தமிழ்ப்பெயர்கள் இப்போது  மறக்கப்பட்டு வருகின்றன.

இவைகளைப் பயன்படுத்துங்கள்.

screw nail  = மறையாணி ,   திருகாணி 

spanner =  மறைமுடுக்கி   (  மறைமுடிக்கி என்கிறது தமிழ்ப் பேரகராதி )

screw  driver  -   திருகுகோல்,  திருகி,  திருகோட்டி,  மறைக்கோல்.  தக்கைமுறுக்கி. மறையிறுக்கி. 

திங்கள், 9 நவம்பர், 2015

மழை நிற்க மந்திரத்தால் வேண்டி.....

பட்டுப் பட்  டென்று பட்டாசு  வெடியென்றால்
எட்டும்  தொலைவனைத்தும்  கொட்டு மழைவெள்ளம்,

வாங்கிவைத்த வெடிச்சுருள்கள்  வாங்குவார் இல்லாமல்
ஏங்குகின்ற கடைக்காரர் தாங்கு நட்டம் ஈடெங்கே?

சாலைகளில் குண்டுகுழி  கோலெடுத்துச் சென்றாலும்
நாலுபுறம் வெள்ள நீரால்  நடப்பதெங்கே கடப்பதெங்கே

சென்னை வாசிகட்கு சேர்ந்தபடி இரண்டு நாளாய்
என்ன இது  படுதொல்லை! இனிக்குறைய வாய்த்திடுமோ?

மழை இல்லை மழைஇல்லை என்றிருந்த நாள்போக
மழை நிற்க மழை நிற்க மந்திரத்தால் வேண்டினரே

எல்லாம்  அவன்செயல் என்றிருக்க லாமென்றால் 
நல்லாப் பெய்மழையால் நாடெங்கும்  காட்டாறு..

ஈண்டும் இயற்கைதரு இத்தகைய துன்புகளை
தாண்டிடவும்  இயலவில்லை வேண்டிடவும் விளைவுண்டோ? 

ஞாயிறு, 8 நவம்பர், 2015

நீரக சூறா > நரகா சூரா. Deepavali Greetings

 தீபாவளி கொண்டாடும்  அனைவருக்கும் எம்  தீபாவளி வாழ்த்துக்கள் .

தீபாவளி என்ற சொல்லுக்குப் பல பொருள் கூறப்படுகிறது. இச்சொல் எங்ஙனம் அமைந்தது  என்பதில் குழப்படி நிலவுவதால்  இச்சொல் மிக்கப் பழமை வாய்ந்த ஒரு சொல்லாய் இருக்கக் கூடும் என்று  எண்ணத் தோன்றுகிறது.

தீபாவளி என்பதை   தீப + ஆவலி  என்று பிரித்தல் கூடும்.   ஆவலம் கொட்டுதல் என்றால் சுற்றி நின்றாடுதல்.  தீபத்தை ஏற்றி வைத்து  சுற்றி நின்று கைகொட்டி ஆடுதலை இது குறிக்கிறது.   ஆவலம்> ஆவலி .  ஆவலம்  -  விளக்கை வலமாகச் சுற்றி  ஆடுதல். .  இது ஆயர் குலப் பெண்களிடத்து நடைபெற்றதென்பர்.  இவர்கள் கண்ணனை வழிபட்டதால்,  கண்ணன் இருளகற்றி  ஒளியூட்டுபவனென்பது இதிலிருந்து பெறப்படுகிறது.

ஆவலி  என்பது விளக்கு வரிசையைக் குறிக்கும் என்றும் கூறுவதுண்டு.

இப்பண்டிகையுடன்,  நரகாசுரன் கதையும் உடன் கூறப்படுவதுண்டு.
நரகாசுரன்  யார்?  அவன் கண்ணனின் மகன் என்றும் கூறுவர்.
கண்ணன்  மகாவிட்ணுவின்  தோற்றம்.   அவன்  நீல நிறம்.   கடலும் ஆகாயமும் நீல நிறம்.  அவன் நீரின் அமைப்பு அல்லது அம்சம்.

கடல் நீரில் தோன்றுவது  கடற்புயல் அல்லது  சூறாவளி.  கடவுளான  கண்ணன்   நீரக சூறாவளியை அடக்கினார்.

நீரகத்தே தோன்றிய சூறாவளி  " நீரக சூறா":  அல்லது நரகாசூரா எனப்பட்டது
அவன்" அடங்கியதும்"    நரகா சூரா வீழ்த்தப்பட்டான் எனப்பட்டது.  (உருவகம்​​) கடலில் தோன்றிய சூறா(வளி  கடலில் பிறந்தது;  ஆகவே கடலுக்கு மகன் ஆயிற்று/  ஆயினான் .  கடல்வண்ணன் கண்ணன் ஆதலின் "கண்ணனின் மகன்,"

சூறாவளி  வீசத் தொடங்கிவிட்டால்  நீரகமாகிய கடல்,  நரகம் ஆகிவிடுகிறது.
அதைவிட வேறு நரகம்  ஏது? நீரக சூறா >  நரகா சூரா.

இந்தியத் துணைக்கண்டத்துப் பெயர்கள் பலவும் தமிழ்த் திரிபுகள்.   ஒரு காலத்தில் தமிழே எங்கும் வழங்கியது;  அதுதான் காரணம்.

ஒரு காலத்தில் நாம் இயற்கையை வணங்கியவர்கள்.  அதனால் நம் தெய்வப் பெயர்கள் பல இயற்கையின் பெயர்கள்.

விண்  >  விண்ணு >  விஷ்ணு.
கரு >  கரு+ உண்+ அ  >  கருண >கர்ண >

கண்ண.  (கருப்பு சாமி )
சிவப்பு >  சிவன்.  ஒளி
கரு:  இருள்.

இந்தப் பெயர்களைச் சங்கதச் சாயலில் மாற்றித் தருவதன் நோக்கம் என்ன?தமிழன் சாமியைக் கும்பிடுகிறோம் என்ற எண்ணம் மனத்தில் தோன்றுமாயின் கும்பிடுவோனுக்கு  வெறுப்பு தோன்றக்கூடும். அதைப் பொதுமொழியில் தருவதன்மூலம் இக்கசப்பு  உணர்ச்சியை         மாற்றி இறை  நெருக்கத்தை ஏற்படுத்தவே  ஆகும்.

இவை முன்பு விளக்கப்பட்டுள்ளன.

சனி, 7 நவம்பர், 2015

valmiki caste

சில வட இந்திய மக்கள் கூட்டத்தின் பெயர்த் திரிபுகளைப் பார்ப்போம் 


ரபிதாஸ்  =  ரவிதாஸ் >  ரோகிதாஸ் 

இங்கு ப  > வ > க  என்று திரிந்தன.

தர்கர் >  தரிகர்   இங்கு இடையில் ஓர்  இகரம் ரகர ஒற்றின் மேல் ஏறியது.

ரோஹிது  ரோகிதாஸ் 

இங்கு து ஈற்றில்  ஆஸ் என்ற இறுதி வந்து மிகுந்தது.


பால்மிக்கி  >  வால்மிகி  ப > வ திரிபு.

வால்மீகி என்பவர்கள்  வேட்டுவச் சாதியினர்.  வால்மீக முனிவர் இந்தச் சாதியினர்.   இவர் பின் சில பிராமண[ப்  பின்வாரிகளை உருவாக்கினார் 
இவரே  முதல் முதல் இராமாயணம் பாடியவர் என்று கதைகளால் தெரிக்கிறது . 

இவரது சொந்தப் பெயர் "ரத்னாகர" என்று  கூறப்படுகிறது.  எனினும்  வால்மீகி என்ற  சாதிப்பெயராலேயே  அறியப்படுகிறார்.   இதை ஒருவாறு மறைத்து  தியானத்தில் இருந்தபோது புற்று வளர்ந்து இவரை மூடியபடியால்  இப்பெயர் ஏற்பட்டது  என்பது, மறுபொருள் உரைக்கும்  நன்முயற்சி  ஆகும். சில காட்டுவாசிகள்  ஈசல் உண்பவர்கள் என்று தெரிகிறது. இதை இப்போது விரித்துரைக்க வேண்டியதில்லை.  வால்மீகி  பெரும்புலவரும்  அறிஞரும் 
ஆவார் என்பது ஐயத்துக்குரியதன்று.

 ஆனால் இராமர் வாழ்ந்த காலமும்  வால்மீகி வாழ்ந்த காலமும் வெவ்வேறு  என்று  தோன்றுகிறது.   இராமர்  வால்மீகிக்கு 5 ஆயிரம்  ஆண்டுகள்  முற்பட்டவர் என்பர் .  இராமரைப் பற்றிய சிதறிய குறிப்புகள்  பல்வேறு  நாடுகளிலும்  கிடைத்துள்ளபடியால்  இவை நன்கு ஆராயப்படுதற்  குரியவை  ஆகும் .   வால்மீகிக்கு  முன் எழுந்த வேதங்களிலும் இராமரைப் பற்றிய குறிப்புகள்  கிட்டுகின்றன என்பர்/  ஆதலின்  வால்மீகி  இராமருடன் சம காலத்தவர்  என்பது  பின்னர்  வால்மிகியின்  நூலில் நிகழ்ந்த   இடைச்செருகள்களையே  தெரிவிக்கின்றன  எனின்  ஆய்விற்குரியதே.   முஸ்லிம்  நோன்பு மாதம்    ரமதான்   ( இராமதானம் ​    )    ரம்ஜான்  ( ராம ஜென்மம் ​)   என்பனவும்  ஆய்தற்குரியவை  என்பர்  ஆய்வாளர் சிலர்.  
  இவற்றை இப்போது  தொகுத்தளித்தற்கு    தருணம்  இல்லை   
  






வியாழன், 5 நவம்பர், 2015

வாசித்தல் படித்தல்

 இவ்விரண்டு சொற்களும்  ஏறத்தாழ  ஒரே பொருளுடையவை .

வாசித்தல் என்ற சொல்லைப் பார்ப்போம்.

இச்சொல்  வாயி என்றே மலையாள மொழியில் வருகிறது.  அதாவது எழுத்தில் இருப்பதை வாயினால்  வெளிப்படுத்துதல் என்று பொருள்.

வாய் >  வாயி  >  வாயித்தல் >  வாசித்தல்.

யகரம்  சகரமாக மாறும் என்பதை   முன்னரே பல இடுகைகளில் எடுத்துக் காட்டியுள்ளோம்.

எ-டு:  வாயில்  >  வாசல்.
            நேயம்  >  நேசம்    
             தோயை > தோசை .  ( நீரில் தோய்த்து  அரைத்துச் செய்த  சிற்றுணவு,)                   தோயல். 
             தேஎம்>  தேயம் >  தேசம். ( தேஎம்  என்பது  பழந்தமிழ் )                 
            ஒயனை  >  ஒசனை  
( ஓய்தல் >(ஆய்ந்து ஓய்ந்து பார்த்தல் )  >  ஒயனை  >  ஆல் + ஓசனை =  ஆலோசனை : ஆலமரத்தடியில்  சிந்தித்தல் . இதில்  அகல்>  ஆல்  ஆகி  அகலச் சிந்தித்தல் எனினும் ஆகும். )

            ஒயனை >  ஓசனை    இதுபின் யோசனை ஆயிற்று.
             ஆனை  >  யானை;     ஆண்டு >  யாண்டு.   இவை  கண்டு  இத்திரிபு                  உணர்ந்து கொள்க.
             காயல் > ( காசல்) >  காசம் .   இருமல், காய்ச்சல்  முதல் பல அறிகுறிகள் காட்டும்  என்புருக்கி  நோய்.  காச நோய். காயல் + நோய் =  காயனோய் > காச நோய் <  காசம் + நோய்  என்ற பிறழ் பிரிப்பு ,  காசம் என்ற சொல்லை  ஈன்றது .   

படித்தல் என்பது  நூலில் உள்ளபடியே  கற்று அல்லது வாசித்து அறிதல்.  படியே உணர்தல் அறிதல் அல்லது ஓசை செய்தல்  படித்தல் என்க,

படி + அம்  =  பாடம் ;  முதனிலை நீண்டு  அம்  விகுதி பெற்ற தொழிற்பெயர். இதில் படி என்பதிலுள்ள இகரம் குன்றியது ,  நடி + அகம் =  நாடகம்  என்பதிலும் 
இகரம் குன்றி முதனிலை நீண்டு விகுதி பெற்றது.   இப்படிப்  பல உள,


----------------------------------------------------------------------------------------

ஆம் >  ஓம் ,  அம்மை > உம்மை;  அம்மா> உம்மா > உமா  முதலிய திரிபுகளை 
மறத்தலாகாது.  ஆமை  >  ஏமை > ஓமை ;   ஓம்  அடிச்சொல் : ஓமை;  ஓம்பு. 
ஏமை also connected to  ஏமம்.   ஓமம்  a medicinal seed that protects you.  Notice the central concept of protection. Will explain when opportunity arises.  

புதன், 4 நவம்பர், 2015

இலஞ்சம்

தெலுங்கிலும் கன்னட மொழியிலும்  லஞ்சம் என்றசொல்லே  வழங்குகிறது.மலையாளத்தில் மட்டும்  கையூட்டு என்ற நல்ல தமிழ்ச்சொல்  பயில்கின்றது.
சட்டைக் கையால் கொடுத்தல் என்று ஜப்பானிய 
 மொழியிலும் எண்ணணெய்  இடுதல் என்று  கிரேக்க மொழியிலும் சொல்வார்கள் என்று தெரிகிறது. மாமூல் என்று கூறுவதுண்டு ஆனால் இது தமிழன்று.  உருது என்பர், தமிழிலும்  லஞ்சம் என்ற சொல் வழக்கு உள்ளது.

குற்றத்திற்காகப் பிடிபட்ட ஒருவனோ  அல்லது ஒரு காரியம் ஆகவேண்டி மிகவும் ஆழ்ந்து விரும்புகிறவனோ இரப்பது போல் வேண்டிக்கொண்டு அதற்கு ஏதேனும்  ஊக்கத்தொகை தருவதே லஞ்சம் என்னலாம்,

இரந்து :  இலஞ்சு  என்று வரும்
குறைந்து ;  குறஞ்சு.   நிறைந்து >  நிறைஞ்சு  என்றெல்லாம் வருகின்றன அல்லவா?  ரகர லகரப் பரிமாற்றம் பல மொழிகளில் காணப்படுகிறது,

இறைஞ்சுதலும் இரந்து வேண்டிக்கொள்ளுதல் போன்றதே

ஆகவே இலஞ்சு  > இலஞ்சம் என்று அமைந்துள்ளது.

வேதங்களில் இச்சொல் இல்லை. லஞ்ச வழக்கம் பிற்காலத்தது என்று தெரிகிறது.  சங்க நூல்களிலும் இல்லை

=========================================================================
లంచం    lanjam telugu
ಲಂಚ      lancha kannada''

also in Skrt

kimpaLam  in Tamil colloquial...

திங்கள், 2 நவம்பர், 2015

To the Hero who started coming at nights

இது தலைவியிடம்   தோழி சொல்வதுபோல்  அமைந்த பாட்டு,    தோழி தலைவனைத் தனியே  எதிர்கொண்டபின்   தலைவியிடம் வந்து பேசுகிறாள்.  தலைவி   அவள் தாய் விதித்த வீட்டுக் காவலுட் பட்டு  உள்ளிருப்பவள்.  பாடல்   வருமாறு:-

தினைகிளி கடிக எனில்  பகலும் ஒல்லும்;
இரவு நீ வருதலின் ஊறும்  அஞ்சுவல்;
யாங்குச் செய்வாம் எம் இடும்பை நோய்க்கு என
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து
ஓங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற
ஐதே காமம் யானே
கழிமுதுக் குறைமையும் பழியுமென்  றிசினே   ( குறுந்  218)

இப்பாடலைப் பாடியவர்  தங்கால் முடிக்கோவலனார்.

பொருள்:

தினைகிளி கடிக எனில்  பகலும் ஒல்லும் -   தினையில் வந்து அமரும் கிளிகளைப் போய் விரட்டு என்று அம்மா அனுப்பினாலும் ( அவனைப்)  பகலிலாவது  காண முடியும்;

இரவு நீ வருதலின் ஊறும்  அஞ்சுவல்; -  நீ ( தலைவன்) இரவில் வருவதால், (  அவனுக்கு) ஏதேனும் துன்பம் நேருமோ என்று அஞ்சுகின்றேன்;

யாங்குச் செய்வாம் -  என்ன பரிகாரம் செய்ய இயலும்?

எம் இடும்பை நோய்க்கு என  -  எமது   காதலால் வந்த துன்ப நோய்க்கு என்று;

ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து - அப்படி நான் சொன்ன அனைத்திற்கும்   வேறுவழியிற் சிந்தித்து;

ஓங்குமலை நாடன் உயிர்த்தோன் -  பெருமை பொருந்திய மலை நாட்டினன் ஆகிய தலைவன்  பெருமூச்சு எறிந்தான்;

மன்ற ஐதே காமம்  -  மிகவும் நுட்பமானதே இக்காதல்;

யானே கழிமுதுக் குறைமையும் பழியுமென்   றிசினே.  -- மிக்கமுதிர்ந்த அறிவுடைமையும்  ஆனால் ஊரார் பழித்தலும் உடையது  என்று  கூறினேன் ( என்பவள்  தோழி). 

The hint here is about eloping. Solution is there.
Can it be implemented without the affect of  good reputation hitherto maintained....?

எம் இடும்பை  என்பது:    யான்  என்றவிடத்துத் தலைவி  தன்னைச் கட்டிக்கொள்கிறாள்.  எம்  என்கையில்  தலைவியுடன் தன்னையும்  உட்படுத்திக்  கொள்கிறாள்.  இது  தலைவி  உழக்கும்  தனித்துயரைத்   தனக்கும் சேர்த்து  வந்ததாகக் கூறும்  பண்பாடு ஆகும்.   காதல் வயப்பட்டு அவள் கிடக்கின்றாள் என்று பேசுதல்  தோழிக்குரிய பண்புடைமை ஆகாது என்பது இப்பாடலில்  மிக்க  நுட்பமாக உணர்த்தப்பெறுகிறது.

கழி முதுக்குறைமை:  ஒப்பீடு:

சிறுமுதுக்குறைமை. Precociousness; இளமையிற் பேரறிவுடைமை. இனியசொல்லான் சிறுமுதுக் குறைமை கேட்டே (சீவக. 1051).
சிறுமுதுக்குறைவி n. < id. +. Precocious girl, a term of endearment; சிறுபிராயத்தே பேரறிவுடையவள். சிறுமுதுக்குறை விக்குச் சிறுமையுஞ் செய்தேன் (சிலப். 16, 68).   These are cited for comparison.

கழி =  மிகுந்த .

"குறைமை "   :  நிறைந்த அறிவுடைய ஒருவரை " அவர் கொஞ்சம் அறிவாளி ;  எதில் ஈடுபடுவது எதில் ஈடுபடக்கூடாது  என்று தெரிந்தவர் . " என்பதைக் கேட்டிருப்பீர்கள். இங்கு கொஞ்சம் என்றது உண்மையில்  நிறைந்த அல்லது போதிய என்று பொருள்.

சூழ்நிலை :  கிளி விரட்டக்கூட வெளியிற் செல்லமுடியாத வீட்டுக்காவலில்  தலைவி துன்புறுகின்றாள். தலைவன்  இரவில் மட்டுமே வந்து அவளை யாருமறியாமல் சந்திக்க முடிகிறது.  " இப்படி நீ வருவதால்  உனக்கு ஏதேனும்
துன்பம் நேரலாமே . புலி கரடி  மேடு பள்ளம் எல்லாம் உள்ளனவே.  எத்தனை
நாள் இப்படிக் காலம் கடத்துவாய் ?"    என்று  தலைவனைக் கேட்டேன்,  தலைவியின் துன்பத்திற்கு என்னதான் பரிகாரம்? என்றேன்.   எங்காவது  போய்விடுங்கள்  என்று  அறிவுரை வழங்குவது என் நோக்கமன்று.  அவனே பெருமூச்சு எறிந்தான் . வேறுமாதிரி நடந்து கொண்டால்  (ஓடிவிட்டால்  )  அதுதான் அறிவுடைமை  ;  பழிச்சொல்லுக்கு  அஞ்சிப் பயனில்லை என்று தலைவனிடம் சொன்னேன் .  ஆனாலும் அது அவன்  உட்கிடக்கையே அன்றி  என்  அறிவுரை அன்று.  வேறு வழி ஒன்றுமில்லை.  என்று தலைவியிடம் தோழி சொல்கிறாள்.

தலைவனின் பெருமூச்சுக்குத் தோழி கொண்ட பொருள்மேல்  இந்தப் பாடல் செல்கிறது .  காதலோ  மிக்க நுட்பம்  உடையது.   இதை முற்றும் உணர்ந்தவள்  தோழி  போலும்.  உணர்ந்தவள்போல்தான் உள்ளது அவள் கழறியவை.  தலைவி  பேரறிவு உடையவள்   (  கழி முதுக்குறைமை )  என்று  தோழியே சொல்கிறாள். ஒடிப்போவதை அவள் விரும்பமாட்டாள் என்று  உணர்ந்துகொண்டவள்  "என் கருத்தன்று   அவர்  அப்படி  எண்ணிப் பெருமூச்சு  விட்டார." என்று தற்காத்துக் கொண்டு  பேசுவது  புரிகின்றதன்றோ?

வீட்டுக்காவல் முதலியவை  நடந்தும்  இதுவரை  ஓடிவிடாமல்  இருந்தது  தலைவியின் பேரறிவு உடைமை ; இனி ஒடிப்போவதை  மேற்கொள்வதே  உனக்குப்  பேரறிவுடைமை என்பது  தோழியின்   அறிவுறுத்தல் , அதைத்  தயக்கத்துடன் வெளிப்படுத்தினாலும்.   

Under such pressure the hero should proceed to arrange for marriage. Elopement is not a clear solution. A matter only for discussion. The poet ends his poem well before coming to such realities as marriage.

நல்ல இனிய பாடல். படித்து இன்புறுங்கள்.

Shall review to make the import of this poem clearer.
Note: There are some  bugs here.  Certain words appear in unintended colour(s). A  letter T appears on the screen in the stanza and refuses to be erased.  Pl ignore this.