புதன், 30 டிசம்பர், 2015

புத்தாண்டு வாழ்த்துக்கள்


ஈரா  யிரத்தினைக்  கூர்பதி   னாறணுக
சீரா யனைத்தும் செழித்தின்பம் ----  நேர்ந்திடுக;
வாரி அலைநில வல்நடுக்கம்  வாராவே 
சேருநற் பேரால்  சிற.


குறிப்புகள்:

கூர் =  மிகுக்கும்.  சிறப்பிக்கும் .
n. < கூர்²-. 1. Abundance, excess; improvement; உள்ளது சிறந்து மிகுகை. (தொல். சொல். 314.

 மிகுதல். பெரு வறங் கூர்ந்த கானம் (பெரும்பாண். 23). 2.)

பதினாறு  என்பது  16  செல்வங்களையும்  குறிப்பது.  அது  2000 என்பதைச்  சிறப்பிக்கிறது.

அணுக -  வந்துகொண்டிருக்க .

வாரி -  கடல்.   வாரி அலை  என்றது சுனாமியை.

நற்பேர்  -  நல்ல புகழ்  வந்து சேரட்டும்.  அதனால் சிறக்க  என்றபடி, 


விவேகமும் வெண்டைக்குழம்பும்.

ஒருவர் ஒரு புதுவிதமான வெண்டைக் குழம்பு வைத்தார். அதைச் சாப்பிட்டுப் பார்த்தவர்கள் மிக நன்றாக,  சுவையாக இருப்பதாகப் பாராட்டினார்கள். பாராட்டியது மட்டுமா? ,  நாலைந்து முறை வந்து சாப்பிட்டுவிட்டுப்  போனார்கள். அதற்குப் பணம் கொடுக்காமல் போனவர்களும் அங்கு வந்து சாப்பிட்டோர் பட்டியலில் இருந்தார்கள்.

அவர்களில் ஒரு மனிதர் அந்த வெண்டைக் குழம்பு எப்படி வைப்பது என்பதை நன்கு உசாவி அறிந்துகொண்டார். சில நாட்களின் பின்னர்,ஓரிடத்தில் குழம்பு வைக்கும் வேலை அவருக்குக் கிட்டியது. அங்கு அந்த வெண்டைக் குழம்பை வைத்துப் பெரும்புகழ் எய்தினார்.

அவர் வேலை பார்த்த நிறுவனத்தில்  அவருக்குப் பதவி உயர்வு கிடைத்து, நல்ல சம்பளமும் கிடைத்தது. சமையற்கலைமணி என்ற பட்டமும் அவர்க்கு வந்து சேர்ந்தது.

முதல் முதல் அந்த மாதிரி வெண்டைக் குழம்பு வைத்தவர், பாவம்.
அவர் எந்தச் சிறப்பையும் அடையாமல் ஒதுக்கப்பட்டுக் கிடந்தார்; வெண்டைக் குழம்பு வேண்டியவர்கள்  எல்லாம் அந்த இரண்டாமவரிடமே போய்ச் சாப்பிட்டார்கள்.

நான் தான் முதன்முதலாக இப்படிக் குழம்பு வைத்தேன் என்று ஒருசிலரிடம் சொல்லிப் பார்த்தார். கேட்டவர்கள்  யாரும் நம்பவில்லை. இவன் பார்த்துச் செய்கிறான் என்று திட்டினார்கள்.

வழக்குப் போட்டுப் பார்த்தார்.  அது ஆதாரமற்றதாகக் கருதப்பட்டுத் தள்ளுபடியில் முடிந்ததுடன்,  செலவு தொகை வேறு கட்டும்படியான தீர்ப்பு விளைந்தது. இவர் நொடித்துப் போனார்.

அந்த ஊர்ப் பள்ளியில் ஒரு வகுப்பில் வாத்தியார் பிள்ளைகளிடம் பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார். " பிள்ளைகளே, நீங்கள் எதையும்  கண்டுபிடித்தால்  தேசிய விருது பெறலாம். ஆகையால் கடினமாக உழையுங்கள் "  என்றார்.

வெண்டைக் குழம்புக்குக் கிடைத்த வெகுமதி என்னவென்று அவருக்குத் தெரிந்திருந்தால்தானே?  உலகம் திருட்டு உலகமென்று வகுப்பில் சொல்லமுடியாமா என்ன?

வேலைக்கென்றே சிலர் பிறந்திருக்கிறார்கள்.   புகழுக்கென்றே வேறு சிலர்  அமைந்திருக்கிறார்கள். இதை மாற்றிவிட முடிவதில்லை.


செவ்வாய், 29 டிசம்பர், 2015

சி போதம்: 4. பொருளுரை.

இது  முன் இடுகை   http://sivamaalaa.blogspot.sg/2015/12/4-preliminary-notes.html  -யின்  தொடர்ச்சி.


ஆன்மா அந்தக்கரணம்  அவற்றின் ஒன்று அன்று =  ஆன்மா என்பது  மனம், புத்தி, சித்தம்  அகங்காரம் என்ற நான்கு உட்கருவிகளில் ஒன்று ஆகாது; ( ஆகவே  அவற்றின் வேறானது ஆன்மா.)

சகச மலத்து உணராது =  இயல்பான கேடாகிய, ஆணவமென்னும் சகச மலத்தின் காரணமாக,  ‍தன் உண்மை விரிவு நிலையை உணராமையால்;

அரசு அமைச்சு ஏய்ப்ப ‍   =   அரசாள்பவன் தன் அமைச்சர்களுடன் கூடி அவர்கள் தரும் அழுத்தங்களால் உந்தப்படுதல் போல;

அவை சந்தித்தது நின்று  =  அவைகளுடன் கூடி  வாழ்தொறும் நிலையாய்  இயங்கி;

அஞ்சு அவத்தைத்து ‍=  ஐந்து  நிலைகளை உடையதாய் உள்ளது.
ஏ =  உறுதி கருதிய  ஏகாரம் ;  (தேற்ற  ஏகாரம் )

இவற்றுள்  சாக்கிரம் என்பது,  ஆன்மா  புருவங்களின் நடுவில் தங்கி , விடைய  நுகர்ச்சியில் மெத்தென  நிற்கு நிலையாம்,

சொப்பனம் என்பது ஆன்மா  கழுத்தில் நின்று  புலனுணர்ச்சிகள்  sense organs ஒடுங்கி எண்ணங்கள்  mind  ஓடும் நிலை.

சுழுத்தி   என்பது  முழு உறக்கம்;  இதில்  புலன்கள் முற்றிலும் ஒடுங்கி எண்ணங்களும்  ஒடுங்கிய நிலை.

துரியம் என்பது:   ஆன்மா  உந்தியில் நின்று கொண்டு  பிராணனுடன் ஒன்று பட்டு இயைந்து கிடப்பது. ஆகவே  பிராணன் என்னும் உயிர் வேறு; ஆன்மா என்பது வேறாம்.  ஆனால் உந்தியில் அவை இயைந்து நிற்கின்றன.

துரியாதீதம் என்பது:  ஆன்மா  மூலாதாரத்தில் நிற்பது.
துரியம் +  அதீதம் = துரிய + அதீதம் =  துரியாதீதம்.   துரியத்தைக் கடந்தது.
அதீதம்  =  கடந்து நிற்பது.  உந்தியைக் கடந்த இடம் ,    எனவே மூலாதாரம்.
துரிதல்  =  தேடுதல் . ( துருவுதல்  என்ற சொல்லுடன் தொடர்புடைய சொல்லாகும் .  )  ஆன்மா உயிரைத் தேடிக்  கண்டு, ஒன்றுபட்ட இடம்  துரியம் என்றும்  அது கடந்த இடம்  துரியாதீதம் என்றும் சொல்லப்பட்டது.
அதீதம் <   அது +  ஈது  + அம்  =  அதீதம். (முன்னிடம் அது ;  இவ்விடம் - ஈது ; அம்  = விகுதி  ).  அங்கு இருந்தது,  விட்டு  இங்கு வருதல் ,   அதீதம். எனவே கடந்த இடமென அறிக.


திருமந்திரத்தில்:

காயப்பை ஒன்று சரக்குப் பலவுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே    2122

என்று திருமூலர் சொல்கின்றார்.  இங்கு கள்வன் என்றது ஆன்மாவை.  சரக்கு - இதுவரை எடுத்தோதிய  கரணங்கள்  அவத்தைகள் முதலான பலவற்றைக் குறிக்கும். ("பலவுள " என்றார் ஆதலின் ).  மாயப்பை , மாயும் அல்லது இறக்கும் பை.  அங்கிருந்து புறப்பட்ட ஆன்மாவுக்கு,  மற்றுமோர் பை என்றது  மறுபிறவியிற் பெறும் உடலை. ஒழிந்த அல்லது மாய்ந்த பையோ, மண்ணாகிக் கலந்துவிடுகிறது -  இயற்கையுடன் .

மயங்கிய -  கலந்த .

ஆன்மாவைக் கள்வன் என்றது ஏன் ?  சொந்தமில்லாத ஓரிடத்தில் உட்புகுந்துகொண்டு  குடியிருக்கும்  ஒருவனை  அல்லது ஒன்றை -    புகுந்தது மட்டுமின்றி  என் உடல் , என் தலை, என் கால் கை  என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்போனை /  இருப்பதை,  பின் எப்படிக்  குறிப்பிடுவீர் ?
அவன் கள்வனேயாம். என்ன வியப்பு?  இந்தக் கள்வன் வேறோர் உடம்பைத் தேடிப் போய்விட்டால் இவ்வுடம்பு பாழ்.  மண்.



தொடரும்
will edit









திங்கள், 28 டிசம்பர், 2015

மித x அமித

மிதம், அமிதம் என்ற சொற்களின்  அமைப்புப் பற்றி  முன்பு எழுதியுள்ளேன்.

மிதத்தல் என்பது  தமிழில் உள்ள வினைச்சொல் . இதிலிருந்து:

மித +  அம்  =  மிதம்  என்ற சொல் பிறந்தது.  மித என்பதன் ஈற்று அகரம் கெட்டது  (மறைந்தது). 

கனம்  இலாதது மிதக்கும்.  கனமானது மூழ்கும்.  மிதமானது என்றால்  அளவுடன் அமைந்தது,  கனமாகி மூழ்கிவிடாதது  என்று அறிக.  இது படகோட்டிகள் , கப்பலோட்டிகள் ஆகியோரின் பயன்பாட்டிலிருந்து  வந்துள்ளது என்பது தெரிகிறது. 

இது பின் தனது அமைப்புப் பொருளினின்றும்  விரிந்து  பொதுப்பொருளில் வழங்கிற்று.  moderate என்று  இதுபோது பொருள் தருகிறது.

இந்தப் பொருட்கு எதிராக அமைந்தது  "அமிதம்"  என்பதாகும்.  அமிழ்தல் என்ற சொல்லுடன்  இதற்குள்ள தொடர்பு  கண்டறியத்தக்கது. அமுக்கு  என்ற சொல்லையும் மறந்துவிடலாகாது.

அமிழ்   >  அமிழ்தல்  >  மிழ்த  >  மித.      ஆகவே  அமிழ் x  மித.   

மித > மிதம் .
மித  >  மிதத்தல். 

மி என்பதோ  மே எனற்பாலதுடன்  தொடர்பு உள்ளது .   மி> மே > மேல். 

அமிழ் > அமிழ்தல் > அமித. 

மித  x  அமித    அ  என்பதை எதிர்ச்சொல்லாக்க முன்னொட்டாகக் கொண்டாலும் இழுக்காது என்று அறிக.  அல்  > அ .   கடைக்குறை .

சனி, 26 டிசம்பர், 2015

Christmas Day tragedy! Singaporean family burns to death ..



Christmas Day tragedy! Singaporean family burns to death ...

theindependent.sg › Top Stories
1 day ago - Singaporean family burns to death in car crash – appeal for next-of-kin ... A Singapore-registered vehicle, a Land Rover, heading for Mersing is  .

A Singapore-registered vehicle, a Land Rover, heading for Mersing is believed to have hit a road signboard at the Sungai Dohol bridge near Kota Tinggi and collided onto the oncoming Toyota Corolla. Both cars burst into flames upon collision.
According to the Johor Fire and Rescue Department, four people burnt to death in the accident which happened early this morning at about 6.30 a.m. The burnt body of a woman was recovered from the Toyota Corolla; while the burnt bodies of a man, a woman and a child, all 3 believed to be Singaporeans, were found in the Singapore-registered car.
tragedy1tragedy2
A witness to the accident and a resident of Kota Tinggi, Mr Yang Yu Hua reportedly said that when he drove past the site soon after the accident, he saw passengers from a Malaysian-registered car involved in the collision pulling a boy out of the wreckage.
Mr Yang stopped to help and took the boy who looked physically unscathed to the Kota Tinggi Hospital. The boy appeared to be no more than 5-years old said Mr Yang.
Meanwhile a Ms Hanni Wong has initiated a search on her Facebook for the next-of-kin of the boy.  For photos click and read:

வியாழன், 24 டிசம்பர், 2015

உ-ஓ ; இ > ஏ திரிபுகள்

கவனிக்க வேண்டிய திரிபுத் தொடர்புகள்

புதை >  போதை.  (வினைச்சொல்:  புதைத்தல்.
விதை >வேதம்     ( விதைத்தல்)
புசி  >  போசனம்   ( புசித்தல்)
புகு  >   போகம்    ( புகுத்தல்,புகுதல்) புகு>போ>போகம்,

இவை ஆய்வுக்குரியவை .

உ-ஓ ;  இ > ஏ 

புதன், 23 டிசம்பர், 2015

களத்திரம்

சுதந்திரம்  என்ற பிற சொல் எப்படித் தமிழ்ப் பேச்சு  நிலைக்களத்தினின்று முகிழ்த்து  அயன்மொழிகள் புக்கு மேனிலைச் சொல்லாய் முன்னின்றது என்பதை முன் இடுகையில் ஒருவாறு குறித்திருந்தோம்.

இதே சிந்தனையில் நிற்குங்கால் திறம்> திரம் இறுதி பெற்ற
இன்னொரு சொல்லையும் கண்டு மகிழ்வது பொருத்தமாக இருக்கும்

இது களத்திரம்1 என்ற சொல்லாம்,


நெற்களம், போர்க்களம் என்று எந்தக் களத்தை எடுத்துக்கொண்டாலும் இவை எல்லாவற்றினும் மிக்கத் திறத்துடன் கையாளவேண்டிய களம்  மனையாள் வீற்றிருக்கும் களமாகிய வீடுதான் என்பர். இதன் காரணமாகவே களத் திறம் < களத்திரம் என்பது மனையாளைக் குறித்தது.


மிக்க அருமையான சொல். கணியத்தில் அதாவது சோதிடத்தில் 

பயன்படும் சொல்லாகுமிது.


------------------------------------------------

Note

1   This word has several meanings in skrt  besides a wife.  Notable among them are:
1kalatran. a wife , consort  ; the female of an animal  ; the hip and loins L. ; ; a royal citadel *  , a stronghold or fastness . ; (in astronomy.) the seventh lunar mansion 

* களத்து + இரு + அம்  =  களத்திரம் ;  களத்தில்  அரசர்  இருக்கும்  உயர் இடம்   *a royal citadel 




செவ்வாய், 22 டிசம்பர், 2015

சுதந்திரத்தில் தமிழ்

பழந்தமிழில் சொம் ( property)   என்ற  ஒரு சொல் இருந்தது.  இந்தச்
சொல்லிலிருந்து சொம்தம்  என்ற சொல் ஏற்பட்டது. சொம்தம்  சொந்தம் ஆயிற்று. இது வல்லெழுத்துப் பெற்று சொத்து ஆனது. சொத்து என்பதன் அமைப்புப் பொருள் ஒருவனுக்கு சொந்தமான பொருள் என்பதே

( சொம்  + தம்   :   இதைத்  தம்முடைய  சொம்  என்று  முறைமாற்றிப்  பொருள் கொள்ளவேண்டும் . This is a reverse word formation technique.   ஆனால் நாளடைவில்  "தம் "  தன்  பொருளை இழந்து  வெறும் விகுதியாகப் பயன்பட்டது,  .

சொம் தன் திறம்  என்றால் தானே திறமாக நிற்றல், அதாவது . சொத்துப் பற்றோடு நிற்பது ;  செல்வமில்லாது   நிற்றல் , ஒரு நிற்றலன்று. எனவே  சொம்  முன் நின்றது  மிகப் பொருத்தம் ., 

சொம்  வெறும் சொ என்று  குறைந்து சொ +தம்+  திறம்  சொதந்திரம் என்று பேச்சு வழக்கில் வந்து  பின்  சுதந்திரம் என்று திருத்தப்பெற்று அயற்சேவை செய்யத் தொடங்கி ஓர்  உயர் நிலையை அடைந்தது.

சொம் >  சொ >  சொ + து  >  சொத்து . இங்கும் சொ என்று குறைந்துதான்  சொத்து ஆனது.  சொ தம் திறம்  என்பது  உண்மையில்  ஒரு தொடர். இப்படி  முன் நிற்கும் சொல் கடைக்குறைந்து  சொல்  அமைந்த இடங்கள்  என் முன் இடுகைகளில்  கண்டுகொள்க.

திறம்  திரம் சொல்லமைப்பில் ஒரு போலி,
சொ
இதில் முழு விளக்கத்தையும் நேரம் கிடைக்கையில் எழுதுவேன், 

சுதந்திரத்தில் தமிழ் ......................

" ஆனந்த  சுதந்திரம் அடைந்துவிட்டோம்  என்று  ஆடுவோமே" 
(பாரதி பாடல்)

"சுதந்திரக் கொடி  பறந்திடப் பார்,   சூழும்  இருளும்  ஒழிந்திடப் பார்"
(  ஓமந்தூர்  ரெட்டி பாடல் ). 

பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார் (பாரதி. தேசீய. 42)

இது  பல்வேறு  பொருட் சாயல்களை உடைய சொல்.   political independence   என்பது  அவற்றுள்  ஒன்று .   இச்சொல்லின்  தொடக்கப் பொருள்  தான் சொத்து வைத்துக்கொண்டிருப்பதற்கு  உள்ள   திறம்  அல்லது  உரிமை  அல்லது அரசால்   விடப்பட்ட  நிலையே  ஆகும். பின்னர்   இன்னொன்று  ஈவித்துக்கொடுக் கும் சுதந்திரம்.  மற்றொன்று  நெற்களத்தில் குடிமக்கள் முதலியோர்பெறுஞ் சுதந்திரம். (J.)     இப்படிப்   பொருட் சாயல்கள் விரியும் .

திங்கள், 21 டிசம்பர், 2015

மகளைத் தேடிப்போய் மறைவெய்திய தாய்

வெள்ளப் பெருக்கினிலே --- தம்
செல்ல மகளிர்  இடர்ப்படுவர்  என்றே
உள்ளம் பதைபதைத்து --- உந்தேறி
ஒடி இறங்கினள் நீர்விரை வீதியில் .

ஆறிதோ முந்நீரிதோ  ---  தாய்
அதனைக் கடந்தனள்  வீட்டிற் புகுமுன்பு
சூறாவ  ளிச்சுழல்போல் --- காலைச்
சுழற்றிச் சுழற்றி  இழுத்தது  சென்றது.

ஒருசில  நாட்களின் பின் --- உயிர்
ஓய்ந்த நிலையில் தொலைவிற் கிடந்தனள்;
பெருநகர்  சென்னைதனில் --- வந்த
பேரழி வுய்த்திட்ட வேலைப் பெருமழை


மனிதர்க் கியன்றதனை --- நாம்
மனிதர் செயமுனைந் துயரநின் றாலுமே
புனித இயற்கையன்னை --- அவள்
புலியினும் மிக்கச் சீற்  றந்தனைத்   தந்தனள்

தப்பும் வழியறிவோம் ---இடர்
தாங்கும் தகைபுரிந் தோங்கி விளங்கிட
உப்புக் கடல்பொங்கினும்  --- அதை
உப்பக்கம் கண்டிட ஒப்பி  வினைசெய்க


will edit and add meanings later.

இந்த எழுதி  முந்நீரிதோ என்பதை முன்னீரிலோ 
.என்றே எழுதுகிறது.  இதை  மாற்ற வேறொரு எழுதியிலிருந்து  தருவிக்க வேண்டியதாயிற்று.
முந்நீரிதோ  -  கடலிலோ.
உப்பக்கம் --பின்பக்கம்;   (எதிர் நின்று ஒரு தடையாக  இல்லாமல்  பின்னால்  தள்ளிவைத்தல் )



 .

   

வெள்ளி, 18 டிசம்பர், 2015

On starving the bacteria



“Active starvation responses mediate antibiotic tolerance in biofilms and nutrient-limited bacteria.”

http://www.washington.edu/news/2011/11/18/what-bacteria-dont-know-can-hurt-them/
What bacteria don't know can hurt them

Australian researchers have found that zinc can 'starve' one of the world's most deadly bacteria by preventing its uptake of an essential metal.

http://www.sciencedaily.com/releases/2013/11/131111091136.htm



weeping virgin Mary

Bangladeshis flock to 'weeping Virgin'
This statue in Italy was said to weep blood
By Alastair Lawson 
BBC correspondent in Dhaka
Thousands of people in the Bangladeshi port city of Chittagong are flocking to a Roman Catholic church where tears are reported to have been seen on a statue of the Virgin Mary.
 The marble statue is kept in a glass case which scientists say could lead to condensation appearing on the Virgin Mary's face


Many of those visiting the church are Muslims, eager to see what some locals believe is a sign of the Virgin's dismay over the recent outbreak of violence in the country and elsewhere in the world.
Roman Catholic believers say it is the first time in Bangladesh that tears have been seen on a statue of the Virgin Mary.
In a country which is overwhelmingly Muslim, it is unusual for a symbol of the Christian faith to attract much interest.
But so many people are gathering outside the Chittagong church that police have been deployed to ensure law and order is maintained.
'Inquisitive'
Muslims are queuing to see the statue even though the Koran warns believers against showing an interest in religious idols.
Roman Catholics in Chittagong say that most people are queuing up to see the statue because they are inquisitive.
Around 90% of Bangladesh's 130 million population is Muslim.
In Chittagong, the second-largest city in the country, there are only around 8,000 Christians in a city of over four million people.
Many churchgoers claim the cause of the Virgin Mary's tears is recent outbreaks of violence in Bangladesh.
They point out that she has had a lot to be upset about in the last week alone.
On Monday, five people were gunned down in local election violence in the south-western district of Jhenida and, before that, there were a series of bomb explosions in the northern town of Dinajpur.
Scientists have already said that one possible explanation for the tears is the fact that the marble statue is kept in a glass case, which could lead to condensation appearing on the Virgin Mary's face.

சிவஞான போதத்தின் 4‍வது பாடல் preliminary notes.

ஆன்மா உள்ளதென்று காட்சி அளவையால் நிறுவியபின்,  ஆன்மா உளதாயின் அதன் தன்மைகள்  யாவை என்ற கேளவி எழல் இயல்பு ஆகும்.  சிவஞான போதத்தின் 4‍வது  பாடல், இதற்குப் பதிலாக அமைகின்றது. 

ஆன்மாவிற்கு ஐந்து அவத்தைகள் உள்ளன. அவத்தையாவது, அதன் உள்ளெழும் இடர்ப்பாடு.  

அவத்தை என்ற சொல் அவம் என்பதினின்று எழுகிறது.   அவி+ அம் = அவம்.  அவிப்பதாவது, கெடுப்பது. பயன் குறைப்பது.   அவி+ அம்+ தை = அவத்தை,   அம் தை என்பன தொழிற்பெயர் விகுதிகள். நட > நடத்தை என்பதில் தை விகுதி வந்தது.   அறம் என்பதில் அம் விகுதி வந்தது. இந்த அவத்தை என்ற சொல்லின்மூலப் பொருளையயும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  இது, அவஸ்தை என்று மாறும்.  


அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று அவை 
சந்தித்தது  ஆன்மாச் சகச மலத்து உணராது
அமைச்சர் அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத்தைத்தே.

இது  நான்காம் பாடல்.  பாடல் பொருள் காணுமுன்  சில கருத்துகளைக் கவனிப்போம்.


பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் புல்லறிவாண்மை கடை என்றார் திருவள்ளுவ நாயனார். ஆன்மா அதன் இயற்கையான தன்மையில் மிகவிரிந்ததாகும். (வியாபகம் உடையது.)  ஆணவம் காரணமாக அது அணுப்போலும் மிகச் சுருங்கியதாகிவிடுகிறது. இத்துறை அறிஞர் கருத்தின்படி  அணு + அவம் =  ஆணவம் என்கின்றனர்.(சொல்லமைந்த விதம்‍ ‍‍: முதனிலை நீண்டது. உகர ஈறு கெட்டது ).  விரிபொருள் ஒன்று அணுப்போல் குறுகிவிட்ட கெடுதல்.
தன் விரிவுணராது குறுக்கம்பெற்று பொருளல்லவற்றைப்   ொருளென்று திரிபுணர்ச்சியில் மூழ்கி அல்லாடுதலே ஆணவ மா கும் என்பது காண்க. இது ஒரு கடைகெட்ட நிலையாம்.


ஆன்மாவிற்குச் சகசமாக அல்லது இயல்பாக உள்ள கேடாக ஆணவம்  உண்டாயிற்று.  ஆகவே அது ஆணவமலம் எனப்பட்டது. அதாவது ஆணவமாகிய கேடு. அது எதனால் ஏற்பட்டது  ? உண்மையில் மிகவிரிந்த நிலையில் நிற்கவேண்டிய ஆன்மா, அணுவளவில் குறுகிப்போய்,  அந்தக் குறுக்கத்தை ஆன்மா உணராது நிற்பதனால் ஏற்பட்டது.இதுவே அதன் அறியாமை அல்லது அஞ்ஞானம்


இவ்வுடலினுள் ஆன்மா நிற்குங் கால மட்டும் இது தொடரும், இதனைச் சகசமலம் என்றார் சகசம்  -  இயல்பு நிலை.

ஆன்மா உடலுள் புகுந்து வதியும் ஞான்று அது தனது முன் நிலையை மறந்து இயல்கின்றது. அந்த மறதியே அதன் அறியாமையை விளைக்கின்றது.

அந்தக்கரணம் என்பது மனம், புத்தி, சித்தம்,  அகங்காரம் என்பனவற்றை  உள்ளடக்கியது.இவை உட்கருவிகள்.  அந்தக்கரணம் <  அந்தர்க்கரணம்,   அந்தர் = உள். கரணம் = கருவி.
ஒரு விடையத்தை (பொருளை) நினைக்குங்கால்,  அக்கருவி மனம் எனப்படும்,

ஒரு விடையத்தை உறுதிகொள்ளுங்கால் அக்கருவி புத்தி எனப்படும்.

ஒரு விடையத்தைச்  சிந்திக்குங்கால்  அக்கருவி சித்தம் எனப்படும்.  

ஒரு விடையத்தை விரும்புங்கால், பற்றுங்கால்  அக்கருவி அகங்காரம் எனப்படும். 

தொடரும்.  Editor generates problems. Will continue later. Stay tuned and will be back as soon as possible.

புதன், 16 டிசம்பர், 2015

சிவஞான போதம் 3: பொருளை.......

சிவஞான போதம் 3-ம்  பாடலின் முன்னுரை இவ்விடுகையில்  http://sivamaalaa.blogspot.sg/2015/12/3.html கண்டு மகிழ்ந்தோம்.  

இப்போது அதன் பொருளை அறிந்துகொள்வோம்.


உளதில தென்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கத்து அறிதலின் கண்படில்
உண்டிவினை இன்மை உணர்தலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா.

உடம்பு  கண்ணால்  காணப்படுவது  ஆகும் .   ஆனால்   ஆன்மாவோ   கண்ணுக்குப்  புலப்படாததாய்  இருக்கின்றது.   புலப்படும்  உடலைக்கொண்டு    புலப்படாத  ஆன்மா வை    அறியும் வழியை  இப்பாடல்   தெரிவிக்கிறது.  இதை  அனுமானப் பிரமாணம்   என்பர்   பணடிதன்மார். 

மாயா  இயந்திரத் தனுவினுள்   ஆன்மா  உளது.   -   மாயையின்  விளைவினால் இயங்குவதாகிய  இவ்வுடம்பினுள்   ஆன்மா  இருக்கின்றது . மாயை  காரணம்;   உடம்பு   காரியமாகிறது, 


தனு   என்பது  உடல்.    தன் + உ =  தனு ,  தன்  -  தன்னுடைய .   உ  என்பது உடல்  என்பதன்  முதலெழுத்து .  தன்  + உ  ,  இரண்டும் கூட்டி  தனு  ஆனது.  ஒரு முழுச் சொல்லும் ஒரு குறைச்சொல்லும்    கலந்த  கலவை. தனு  எனவரும்  வேறு  பொருள்தரு  சொற்களும் உள்ளன.  அவை வேறு   இது வேறு.    ஆகவே  தனு  -  ஒரு இனிய புனைவுச் சொல்  ஆகின்றது.   தன்னுடல்  என்பதை  ஒரு மறைமுக வழியில்  குறிப்பிடுவது.    தேகம்  (தேய்+கு+  அம்  = தேய்கம் >  தேகம் ) தேய்தல் உடையது ;  அழிவுடையது .  அழி  உடலில்   அழியா  ஆன்மா  உள்ளிருக்கிறது.   இதைச்   சற்று  மறைவாகத் தனு  என்றது  மிக்கப் பொருத்தமாகும்.

  இலது என்றலின்   =   இல்லை  என்று சொல்வதனால்  .
இல்லாததை  எப்படி இல்லை என்று சொல்வது?   ஆன்மா இல்லை என்று சொல்லும் போதே   ஆன்மா  என்ற சொல் வந்துவிடுகிறதே  , உலகம்  அறியாத ஒன்றைக்  குறிப்பிட்டு  அதை இல்லை என்று சொல்ல இயலாது. முடியுமா என்று பாருங்கள்.

எனது  உடல்  என்றலின்  =   என்னுடைய உடம்பு  என்று சொல்வதனால் .
இவ்வுடல்  ஆன்மாவின் உடைமை  என்பது     பொருள் ஆகிறது அன்றோ.? 


ஐம்புலன் ஒடுக்கத்து அறிதலின்  -   கனவின் போது  கண்,  மூக்கு, செவி   வாய்,  தோல்  (மெய் ​) ஆகியவை ஒடுங்கி   விடுகின்றன.   ஐந்து உணர்ச்சிகளும் ஒடுங்கிப் போகின்றன.  ஆன்மா இருப்பதனாலன்றோ இப்படி நடக்கிறது என்றபடி.  சமாதி  பழகும் போதும்  ஐம்புலன்களும் ஒடுங்கி விடுகின்றன.  உடல் கட்டைபோல் கிடக்கிறது.   அப்போது   அறிவதனால் .(ஆன்மா   உள்ளது )

சமாதி  <  சம + ஆதி.     ஆதியில்  ஓர் உடலினுள்  ஆன்மா  இருக்கவில்லை.  அது பின்புதான்  உடலை எடுத்தது.  அது  ஆதி நிலைக்குத் திரும்புதல் போல  உடலினின்றும்   ஆன்மா  பிரிந்து எழுந்து  நிற்பதே  சமாதி. ( நிருவிகற்ப  சமாதி  முதலியவை நோக்குக ).   ஆதியின் ஒத்த  சம நிலை  சமாதி.  


  கண்படில்  உண்டிவினை இன்மை உணர்தலின் =   கண் படும்போது  (உறங்கும்போது)   உணவு  மற்றும் வேறு   எல்லாமும்  விட்டு க்   கிடக்கிறோம்.   உடல் அற்ற நிலையைப் போல   ஆதலினால்.

கண்படல்  = உறங்குதல்.

உண்டி வினை :   இது  உண்டியும்  வினையும்  என்று   உம்மை   (உம்  என்ற இடைச்சொல் )  விரியும்.   எனவே உண்டி வினை  என்பது உம்மைத் தொகை .  உண்டி - உணவு.      வினை  -  உடலுக்குத் தேவையான  மற்றெல்ல்லா  நுகர்வுகளும்,   (போகங்கள்  யாவும் ),  உடல்  உடையவன் வேண்டிப் போகும்  யாவும்  போகங்கள்.  ஆகவே  வினை  என்பது   ஏனைப்   போகங்கள்    என்று   பொருள்தரும்,

 இவ்வாறு   ஆன்மா  உள்ளதென்பதை சிவமதம்  நிலை நாட்டுகிறது,

இது  ஆன்மா இல்லை என்றாருக்கு அறிவுறுத்துவதாகிறது.

ஆன்மா இல்லை என்போனுக்குச் சூன்யாத்மவாதி  என்று பெயர்.
எனது உடல் என்பவனுக்குத் தேகாத்மவாதி என்று பெயர்.
ஐம்புலன் அன்றிப் பிறிதில்லை என்போன்  இந்திரியாத்மவாதி
கண்படுதல் காலத்து  அறிதல் ஒப்பாதவன் பிரணாத்மவாதி.
உணர்த்த உணர்தலின் ஆத்மா உண்மை மறுப்போன் அஞ்ஞானாத்மவாதி.

தான் ஆத்மா  இல்லை என்பதால் தான் இறந்தபின்  ஒன்றுமி ல் லை   என்பான்  சூன்யாதமவாதி .

இவர்கள் கொள்கைகளையெல்லாம் இந்நூல் மாறுத்து நிற்கின்றது. 

Some typos corrected and re edited.  Some  virus has made changes ,   These have been reverted.   கண்படும்போது   not  காணப்படும்போது.    Pl note comments if any  by readers do not reach us. 

செவ்வாய், 15 டிசம்பர், 2015

" வம்ச புத்திரி "

Taman Puteri Wangsa என்ற மலாய் மொழிப்  பெயரைத் தமிழில் சொல்வதானால் வம்சம் என்ற சமஸ்கிருதச் சொல்லை ப் பயன்படுத்தி  "  வம்ச  புத்திரி "  குடியிருப்புப் பேட்டை  என்று  சொல்லலாம்.  குல இளவரசி  ,,,,,,, என்றும் கூறலாம்,  ஒரு தலைமுறைக்கு மட்டுமின்றி  அந்த  அரச குலத்துக்கே  இளவரசிகளுக்கெல்லாம் ஓர்  இளவரசி ஆனவள் .......... என்று புகழுரைக்கலாம் ,

நல்லது.  இப்போது வம்சம் என்ற சொல்லை ஆராய்வோம். இது பற்றி முன்னர் யாம் எழுதியதுண்டு.  இப்போது சொல்வதில் சிறு மாற்ற வளர்ச்சி இருக்கக்கூடும். பெரும்பாலும் யாம் பார்த்து எழுதுவதில்லை. 

வருமின்  அதாவது  வாருங்கள் என்னும் சொல்  வம்மின்  என்று திரியும் .  வந்தான்   என்ற  இறந்த கால வினைமுற்று  வரு என்ற பகுதி  வ  என்று திரிதலைக்  காட்டுகிறது/  

இவை போல  வ  என்ற  பகுதி  வம்மிசம் அல்லது  வம்சம்   என்ற சொல்லில் முன் நிற்கிறது, உண்மையில்  இது  வருமிசம் என்று இருந்து  வம்மிசம் என்று திரிந்தது என்று சொன்னாலும்  உண்மையிலிருந்து தொலைவு  ஆகிவிடாது .

குழந்தைகள் பிறந்து  பல தலைமுறைகள் மென்மேலும் தொடருமானால் 
அதுதான்  வம்சம்  ஆகிறது.  , மேலும் என்ற சொல்லுக்கு ஈடானது  மிசை என்ற பழந்தமிழ்ச் சொல். 

வ  + மிசை + அம்   =  வம்மிசம் ஆகிறது.,

மிசை என்பதில் உள்ள  ஐ  கெட்டது.  ( விடப்பட்டது)

ஆகவே    வ + மிச் + அம்   =  வமிசம்  >  வம்சம் ஆகும்.  ச்  + அ  =  ச .

வருதல் எப்படி பிறப்புகள் தொடர்தலை க் குறிக்கும்.?    தொடர் குறித்தது மிசை என்னும் சொல்.  வருதல் பிறப்பு .

போக்கு வரவு என்ற தொடர்  பிறப்பும் இறப்பும் குறித்ததே சிவஞான போதத்தில்.  அதுபோலவே  ஆகும்.

வம்சம் என்ற சொல் பேச்சில் இன்றும் உள்ளது.  அவன் வம்சம் கருவற்றுப் போக என்று திட்டுகையில்  அது வந்துவிடுகிறது,  

அது மலாய் வரை பரவி மகிழ்வு தருகிறது..

puteri wangsa =  dynasty princess.  A nice phrase to hear.


திங்கள், 14 டிசம்பர், 2015

சிவஞான போதம் பாடல் 3

சிவ ஞான போதத்தின் மூன்றாவது பாடலைக் கண்டு மகிழ்வோம்,

உளதில தென்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கத்து அறிதலின் கண்படில்
உண்டிவினை இன்மை உணர்தலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா.

ஆன்மா உள்ளது, ஆன்மா இல்லை என்று இருவிதமாகப் பேசப்படுகிறது ஆன்மா இருக்கிறது.

எனது உடல் என்றும் சொல்வர். எனது எனப் படுதலால் நான் என்பது இவ்வுடல் ஆயின் என் உடல் என்று கூறுவதென்ன? நான் என்பதில் வேறுபட்டதாகவன்றோ உடலைச் சொல்கின்றனர். ஆகவே நான் உள்ளேன்; எனக்கு உடலும்  இருக்கிறது. நான் என்பது உடலினை வைத்திருக்கும் ஆன்மா ஆகிறது.   ஆன்மா  தேகி .  தேகத்தை உடையது,

கனவின்போதும்  ஐம்புலன்களும் ஒடுங்கி விடுகின்றன.அப்போது நான் இருக்கிறேன்,( உடல் செயலற்றுக் கிடக்கிறது. உறங்குவது போலும் சாக்காடு., இரண்டும் ஒப்புமை உடையன ) ஆதலின், உடலின் வேறான ஆன்மா இருக்கிறது.


உறங்குங்கால் உண்ணுதல் முதலிய ஏனைச் செயல்கள் நடைபெறுவதில்லை. நன்மை தீமைகளைப் பட்டறிய முடிவதில்லை. ஆனால் மூச்சு ஓடுகிறது. அதனாலும் ஆன்மா உள்ளது. மூச்சு வேறு; ஆன்மா வேறு.



யாராவது ஒன்றை நமக்கு உணர்த்தினால் அதனை நாம் உணர்ந்துகொள்கிறோம். அதனாலும் ஆன்மா உள்ளது என்பர் . ஒரு அறிவியலாளர், தாம்  அனுப்பிய துணைக்கோளம் செவ்வாயில் இறங்கிற்று என்கிறார். அவர் சொன்னதும் உங்களுக்கு விளங்குகிறது. அது புரிந்தது உங்களுக்கா? அல்லது உங்கள் உடலுக்கா? உணர்த்தியவுடன் நீங்கள் உணர்ந்தீர்கள் . ஆகவே உங்கள் உடலின் வேறான உங்கள் ஆத்மா உள்ளது. தற்கால முறைப்படி ஒரு மனிதனின் மூளையை அறுவை செய்து தேடினால் இந்த உணர்ந்த செய்தியை மூளையின் அணுத்திரள்களில் கண்டெடுக்க முடிவதில்லையே. அது  எங்கு பதிவாகியது

இவற்றை விளக்குகிறது இந்தப் பாடல். இதன் பொருளை அடுத்த இ
டுகையில் ஆராய்வோம் .
will edit 

சனி, 12 டிசம்பர், 2015

புத்திரி etc

மகள் என்பது குறிக்கும் புத்திரி,  மற்றும்  ஆண்பால் புத்திரன்,  பலர்பால் புத்திரர்  முதலியன  தமிழில் வழங்கும், இவற்றைத் தமிழாக ஏற்றுக்கொள்ளவில்லை   தமிழ்ப்புலவர்.

இவற்றின் அடிச்சொல்லைக் கண்டு பிடிப்போம்.

புதல்வன் என்பதன் அடியை முன் இடுகையில் ஒரு பத்தியில் குறித்துள்ளோம்.

http://sivamaalaa.blogspot.sg/2015/12/blog-post_63.html

இதுவும் அதே புது என்னும் அடியினின்று வருவதே.

புத்திரி புதியவளாக  வந்து இருப்பவள்.  அதாவது   குடும்பத்தில்   பிறந்து  புதிய உறுப்பினளாய்  இவ்வுலகில்  வந்தவள்-.   தாய்  தந்தையர்  முன்னரே தோன்றிப்   பழமை எய்திவிட்டவர்கள். முதலில்  பிறந்த குழந்தையைக்  குறித்துப்  பின் வளர்ச்சி பெற்றுப்  பெரியவர்கள் ஆனோரையும் குறித்தது இச்சொல்.  

புது + இரு + இ =  புத்திரி.  ( தகரம் இரட்டித்தது. )
புது + இரு + அன் =  புத்திரன் .
புது + இரு+ அர்  = புத்திரர்.  

இரு என்ற சொல்லை இடையில் செருகி அமைந்த இன்னொரு சொல்:

நம் + புது+  இரி =  நம்பூதிரி.

இதில் பூதிரி  என வந்தது  முதலெழுத்து நீண்டதனால். 

முதனிலை திரிதல் தொழிற்பெயரிலும் பிற பெயரிலும் வரும்,,

புத்திரி  என்ற சொல் மலாய் மொழியிலும் உள்ளது.  அங்கு அதற்கு "இளவரசி " என்று பொருள்.  பல மொழிகளிலும் புகுந்துள்ள இந்தப் புத்திரச் சொல்லை அமைத்து வழங்கிய  பெருமை தமிழினது ஆகும் . 

வெள்ளி, 11 டிசம்பர், 2015

பிற மதங்களும் சிவஞானமும்

முன் இடுகையிலிருந்து  தொடர்வோம்.

http://sivamaalaa.blogspot.sg/2015/12/blog-post_11.html


இதனைச் சிறிது ஒப்பாய்வு செய்வோம்.


இஸ்லாமிய மார்க்கத்திலும் கிறித்துவ சமயத்திலும்கூட,   ஆன்மா இருப்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது,   ஆனால் இந்து மதத்துக்கும் அவைகட்கும் ஒரு வேறுபாடு உண்டு,     அவற்றின் கூற்றுப்படி  ஒருவன் பிறக்குமுன் அவன்தன்  ஆன்மா இருக்கவில்லை.  அவன் பிறக்கும்போதுதான் அவன் ஆன்மாவும் உண்டாகி அவனுள் இருக்கத் தொடங்குகிறது.முன்பிறவி  இல்லையாகையால், முன் அவன் ஆன்மாவும் இல்லை.


அவன் இறக்கும்போது, அது அவனைவிட்டுப் போய்விடுகிறது. எங்கு போயிற்று என்பது தெரியவிட்டாலும்,  இறைவனிடம் சென்றுவிட்டது என்பர் அம் மதத்தினர்.


இந்து மதத்தில் நம் ஆன்மா முன்னும் இருந்தது. பின் இந்த உடலை எடுத்தோம். இதைப் பிறவி என்றும்  சென்மம்  (ஜென்மா)   என்று,ம் கூறுவர்.  இந்த உடலை விட்டுச் சென்றுவிட்டபின்னும் இருப்போம்.  ஆன்மா என்றும் இருப்பது.  கடவுளும் என்றும் இருப்பவர்.    இதில் கடவுளுக்கும் ஆன்மாவுக்கும் உள்ளதோர் ஒற்றுமை.தெளிவுபடுகிறது .


கடவுள் என்பவர் பெரிய ஆத்மா.  நாமோ சிறிய துண்டு ஆதாமாக்கள். எப்படித்  துண்டுகள் ஆனோம்?  அதை வேறொரு சமயத்தில் சொல்வோம்


We shall also look at the Christian concept of purgatory  later. 

சிவஞான போதத்திலிருந்து...(பாடல் 2)

இப்போது சிவஞான போதத்திலிருந்து ஒரு பாடலைக் கண்டு
இன்புறுவோம்,

இது அந்நூலின் இரண்டாவது பாடல்.

அவையே தானேயாய் இரு முதலின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே.   (2)

அவை என்றது:  உலகில் உள்ளவற்றின் தொகுதியை.
தானேயாய் :  (அவை அனைத்தும்) தானேயாக  
நீக்கம் இன்றி:  வேறுபடாதவாறு.
நிற்கும் :  நிலவும், இயங்கும் என்பது.

போக்கு என்றார் இறப்பினை,
வரவு:  பிறப்பு.

இரு முதலாவது நன்மை தீமை அல்லது நல்வினை தீவினை.
இருமுதலின் ‍-  நல்வினை தீவினை ஆகிய காரணங்களால்.

ஆணையின் : என்பது இறைவனின் ஆற்றலினால் என்றற்கு 

. தானவ னாகிய தற்பரந் 2தாங்கினோன்
ஆனவை மாற்றிப் பரமத் தடைந்திடும்
ஏனை யுயிர்வினைக் கெய்து மிடஞ்சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே..    2134   

என்பது  திருமந்திரம்.

அவையே  தானேயாய்  என்ற போதப் பாடலினோடு ஒப்பிடுக.   2தற்பரம்   என்பது  தானே பரமென்று  உணர்தல்.   தன்  + பரம் = தற்பரம்.    பர + அம்  =  பரம்.  எங்கும்  பரந்து  நிற்கும் இறை .

பிறந்த குழந்தையைப் புதுவரவு என்றும் கூறுவதுண்டு.  புதல்வர் என்பது இக்கருத்தில் அமைக்கப்பட்ட சொல் ஆகும்.  புது + அல் + வு + அர்   =  புதல்வர் .  இங்கு  அல்.  வு. அர்  மூன்று விகுதிகள் புகுத்தப் பட்டுள்ளன  இந்தப் பாடலில் வரவு  என்பது புதுவரவு  போன்ற கருத்தமைப்பே  ஆகும், பேச்சிலும் போய்விட்டார் என்பது இறப்பு  குறிக்கும்,    தொடர்ந்து நடைபெறுவதால் போக்கு வரவு என்றார்.

இவ்வுலகின் அனைத்தும் இறையாகிய அவனே ஆகி  நீக்கம் அற நின்று   தன்  ஆற்றலினால் இருவினைகளின் பயனாய்ப்  பிறப்பினையும் இறப்பினையும் நிகழ்த்துகின்றான் என்றபடி.  ஆணை என்பது ஆற்றல் .
நீக்கமற  நிறைந்திருக்கும்  பரிபூரணானந்தம்  என்று இறைவனைப் போற்றினார்  தாயுமானவரும் 

அன்றே  :    இது அசைச்சொல்.  ( இடம் நிரப்பிப்  பாடலை  நிறைவு செய்துவைக்கும் சொல். )   அல்லவோ   அல்லோ என்பனபோல்.   கேட்போனின் இசைவை  வெளிக்கொணரப் பயன்படுத்தப்படும்  சொல் எனினும்  அது,  

இது  தொடர்[பான கருத்துகள் சில  அடுத்த இடுகையில்  காண்போம்,

ஆன்மா  அல்லது ஆத்மா பற்றிப் பேசுவோம்   .

வியாழன், 10 டிசம்பர், 2015

பிரபஞ்சம் அஞ்சுகம் அஞ்சாலி

உலகம் என்பதைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் உள்ளன.   ஆனால் பிரபஞ்சம்  அல்லது ப்ரபஞ்சம்  என்ற பதத்தையும் பயன்படுத்தி வருகிறோம்.

இந்தச் சொல் எப்படி அமைந்தது என்பதைக் காண்போம்.

நிலம், தீ, நீர், வளி விசும்பு என்ற ஐந்து பூதங்கள் . பூதங்கள்  என்றால் இறைவன் புதிதாகப் படை த்தவை.  புதிதாக என்றால் தொடக்கமாகப் படைத்தவை.  புது + அம்  = பூதம்.  இன்னொரு வழியில் சொல்லவேண்டுமானால் முன் இல்லாதிருந்த நிலையில் புதிதாகத் தோன்றியவை.

இந்தப்  புதியனவாய்த் தோன்றிய  ஐந்தும் கலந்த அமைப்பே உலகம்.
தொல்காப்பியர் சொன்னபடி :

"நிலம்தீ  நீர்வளி விசும்போ டைந்தும் 

கலந்த மயக்கம் உலகம் ஆதலின். "

ஆகவே உலகம் பிறக்க ,  முதற் பிறந்த ஐந்துமே உலகம்.


ஐந்து என்பது அஞ்சு என்று திரியும். பேச்சிலும் அஞ்சு என்பதே வழங்கும்.  

எடுத்துக்காட்டு:

" அமைச்சு  அரசேய்ப்ப  அஞ்சவத் தைத்தே " (   சிவ . போ , 4  )

அஞ்சுகம்:   அஞ்சு ​+  உகம் ,

உகம் <=  உக + அம்  ,   உக என்பதில் ஈற்றகரம்  கெட்டுப்  புணர்ந்தது.  ஐந்தை உகந்தது என்று பொருள்.(   ஒரு கிளி, ஒரு மெல்லாடை   )

அஞ்சாலிகள் añcālikaḷ  வரவை ஐந்தால் வகுப்போர். அஞ்சு +  ஆல் + இ.n. < அஞ்சாலி. Cultivators, so called because they are entitled to only one-fifths of the produce of their cultivation, the remainder being paid to the king; நிலவருவாயில் ஐந்தி லொருபங்கை மட்டும் வைத்துக்கொண்டு நான்கு பங்கை அரசனுக்குக் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்படும் குடிகள். (R.)    (பேரகராதி )  

இனி,   பிரபஞ்சத்துக்கு வருவோம்.

பிறப்பு + அஞ்சு + அம்  =  பிறப்பஞ்சம்  >  பிரபஞ்சம் >  ப்ரபஞ்சம் .

முதலில் ஒரு "ப் "  நீக்குக.

அப்போது பிறபஞ்சம்  வரும்.

தமிழில் உள்ள இந்த "ற -வுக்குப் பதில் "ர "-வைப்  போடுக .

இதில் ஒரு பெரிய மாற்றம் இல்லை.  பிரபஞ்சம் ஆகும்.

அப்புறம் ப்ரபஞ்சம்  என்று அழகாக வரும்.

இனிப் பிரிக்கும்போது  ப்ர  +  பஞ்ச  என்று  மாற்றிப் பிரிக்க.

சொல் அமைந்த விதத்தையே  மறைத்துவிடலாம்.

அதுதான்  திறமை.


 Note:Hackers have changed the spelling  of   certain words in this post   and rendered it   unintelligible. in certain respects.  We have restored it   We shall review it after an interval. 



இது 26.12.2017ல்   மறுபார்வை   செய்யப்பட்டது.      ஆனால் எதையும்  மாற்றவில்லை.    மீண்டும்  பார்க்கப்படும்.

செவ்வாய், 8 டிசம்பர், 2015

வாய்தா

வாய்தா என்ற சொல் உருது மொழியிலும்    வழங்குகிறது.   தமிழ்  நாட்டிலும்  சிற்றூர்களில் வழங்குகிறது.  நிலம் வைத்திருப்போர் கட்டவேண்டிய வரியை இது குறிக்கின்றது.

வருவாயின் அல்லது நிலத்தின் வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட தொகையை  இறுத்தலே வாய்தா ,   இது மிகவும்  அழகாக அமைந்த ஒரு சொல்.  நாட்டு வழக்காகிய இச்சொல்லை  அமைத்து  அசத்தியவர் யார் என்பது தெரியவில்லை,  உருதுமொழிச் சொல் என்று தமிழாசிரியர் கருதினர்.

இந்தச் சொல்லைப் பற்றித்   தமிழ் வாத்தியார்கள்  சிந்திக்கத் தொடங்கியது முஸ்லீம்  அரசர் காலத்தில்.  ஆகவே   அவர்கள் உருது என்றனர்.  அதற்குமுன் சங்க காலத்தில் பேச்சு வழக்கில் அது இருந்ததா என்பதை  அறிய வழி ஒன்றுமில்லை.  சங்கப் புலவர்களின் சொற்றொகுதியில்  இலக்கியங்கள் வாயிலாக கண்டுகொள்ளப்படாத சொல்லைப்   பேச்சில் வழங்கியதா என்று கண்டுபிடிக்க வழி இல்லை.  தமிழாகவும்  இருக்கலாம்.  அல்லாமலும் இருக்கலாம்.

உருது மொழி பிற்காலத்தது.  தெக்காணி  மொழியில் இருந்து உருவாகியது
என்பர்.  இப்படிச் சொன்னால்  மேன்மைக் குறைவாகப் படுவதால்  இதைச் சிலர்  மறுப்பர்.  தென் + கணம்  >  தெற்கணம்  >  தெக்கணம் >  Deccan >  DeccANi >  தெக்காணி  > தக்காணி.   எனவே  தென் கணத்தே தோன்றி வளர்த்ததே உருது,  இதைப் பேசியவர்கள் முஸ்லீம்கள்.   அரபி எழுத்துக்களை பயன்படுத்தி எழுதினர்.  அரபியில் குர் ஆன்  வாசிக்க அறிந்தோருக்கு இந்த நிலை மிகவும் வசதி,

வருவாயிலிருந்து தரப்படும் தொகையை  வருவாய் + தா      என  அமைத்து    அதைச்  சுருக்கி   (வரு என்பதைக்   குறைத்து )  வாய் + தா  =  வாய்தா என்றனர்.
கணக்கு எழுதும்போது   வருவாயில் தந்தது  என்று  முழுவதையும் எழுதி நேரத்தை  ஒழித்துக்கொள்ளாமல்  வாய்*தா  என்று எழுதிக்கொண்டு  மிச்ச நேரத்தில் சுக்கு நீர் அருந்தி மகிழலாம்.  இலக்கணம் விளக்கெண்ணெய் எல்லாம் புலவன்  பேசிக்கொண்டிருப்பான்.     என்ன என்ன விளைந்தது என்று எழுதவேண்டுமானால்  து பரு ;  க பரு  என்று எழுதினால் போதாதா?     துப் பரு =  துவரம்பருப்பு ;  கப்பரு =   கடலைப் பருப்பு. என்று  புதுமை  செய்துகொள்ளும் திறனுடையார்  வணிகர்.

உபரு :     உளுத்தம்பருப்பு. என்றும்  எழுதலாம்.   தாள்  மிச்சம்.

வாய்தா   என்ற சொல் போல் அமைந்தது தான் che'Gu  என்ற மலாய்ச் சொல்லும்,    Incik  Guru   ( Mr  Teacher)     என்பதே  அங்ஙனம் அமைந்தது,   இதில்   பாதி.  அதில் பாதி.   இதைப் பற்றி  முன் எழுதியுள்ளோம்.

http://sivamaalaa.blogspot.sg/2015/10/etc.html

You will find more examples of similar word formation at the above post,



திங்கள், 7 டிசம்பர், 2015

சென்னை வாசிகள் இயல்பு நிலைக்குத் திரும்பி......

சென்னை வாசிகள்,
மிகுந்த  நெஞ்சுரம் கொண்ட மக்கள்.
ஊரையே உருட்டிப்  புரட்டிப் போட்ட வெள்ளத்தில்
உள்ளே வீடுதேடி வந்த பம்புக்குட்டியை
ஈரத்  துணியை முறுக்கிப் பிழிவதுபோல்
சூரத் தனமாய்த் திருகிக் காட்டுகிறார்கள்.

ஒரு சாலை மேம்பாலத்தைத்  தொட்டுச் செல்லும்
பெருவெள்ளமும்  ஏற்படக் கூடுமென்பதை
இப்போதுதான் கண்டிருக்கிறோம்.

உயிரிழப்புகளும்  பொருளழிவுகளும்  நேர்ந்து
பஞ்சு படாத பாடு படுகின்ற மக்களையும் காண
நெஞ்சு சுக்கு நூறாகிவிடும்
உணவுப் பொருளும் உதவிப் பொருளும் கொண்டுவந்தோரை
உதைத்தனர்  சிலர்;   அது
பதைத்து  நிற்கும் மக்களை
மறைத்து முன் நிற்கும்  காட்சி !
இதைத் தானா நாகரிகம் என்பது?

விரைவில் இயல்பு நிலைக்குத்   திரும்பி
துன்பம் களையப்பட்டு
அன்பு நிலையமாய்ச்
சென்னை செழிக்க
இன்னருள் இறைவன் தருக .


.


வியாழன், 3 டிசம்பர், 2015

சாமர்த்தியம்

இப்போது சாமர்த்தியம் என்ற சொல்லைக் கவனிப்போம்.

இதனை சா+ மரு(வு) +  து + இயம் என்று பிரிக்கவேண்டும்.

ஒரு மனிதன் சாவை மருவி நிற்கும் சூழ்நிலையிலும் எதிர் நீச்சல் போட்டு, அந் நிலையினின்று
வெற்றிகரமாக விடுபட்டு, இயல்பு நிலைக்குத் திரும்புவதே சாமர்த்தியம் எனப்படும்.

சொல் இக் கருத்தில் புனையப்பட்டபின்,  ஏனைத்  திறன் வேண்டும் சூழ்நிலைகளையும் குறிக்க வழங்கப்பட்டுப்,
பொருள் விரிவடைந்தது.

இப்போது சொல்லமைப்பை  மீண்டும் கவனிப்போம்.

சா + மரு + து+  இயம்.

சா + மருத்து + இயம்.

சா + மர்த்தியம்

சாமர்த்தியம்.

இயம் என்பது ஈண்டு விகுதியாய்ப் பயன்படுகிறது.  எனினும் இவ்விகுதி  இயங்கு என்பதன் அடிச்சொல்லும் ஆகும்.   சாவு மருவு நிலையிலும் இயங்கி வெல்லுதல் என்று  இயம் என்பதற்கும்  பொருள் விளங்கும்படியாக  அமைந்துள்ளது  அறிந்து மகிழற்பாலதாம். பின் நாளில்  இயம் என்பது வெறும் விகுதியாகவும்  சொல்லமைக்கப் பயன்படுவது காணலாம்.

து என்பது பலசொற்களில் இடை நின்று சொல்லமையும்.  எ-டு:  பரு (த்தல்) +  (அ)து +   அம்  =  பருவதம்.  பரிதாகிய மலை,  1

சொல் அமைந்த விதமே இங்கு விளக்கப் பட்டது.   அமைந்த சொல் எம்மொழிக்குரிய து என்பதை  இவ்விடுகை தொடவில்லை.  இச்சொல் தமிழிலும் வழங்குவது.

இதனை  வேறு வழியிலும் விளக்கலாம்,    ஆங்கு புகாது விடுப்போம், 2


-----------------------------------------------------------------------------------------------

Notes:

1.   அது , இது  என்பன  "து "  வெனக்    குறைந்தியலும் . மலாய்  மொழியிலும் இங்ஙனம்   தலைக்குறையும்.  cf.   itu  >  tu.   e.g.  Sakitnya tu  disini.  (Cita Citata ). இது  (Tamil) =   itu  (Malay)  >  tu.   In English :   it is  >  'tis  (in poetry).   இது  (Tamil)  compares with  it (English).  There is no doubt Tamil இது  is original.

2.  சம(ம்) +  ஆர்த்து  +  இயம்  = சா மர்த்தியம் ;   ஆர்த்தல்  (வினைச்சொல் ).. 
also  சம + அறுத்து +  இயம் .   அறுத்தல் (வினைச்சொல் ). In each case 'sama'  would be shown to have become elongated as  'saama'.  On the other hand,    ஆர்த்து    shortened to  அர்த்து.   &  அறுத்து   transformed  to  அர்த்து. respectively  in such proposals.

புதன், 2 டிசம்பர், 2015

A problem that kicks the leadership

Sadly, governance in Tamil Nadu is nil. The water this year was not abnormal or an aberration. It is Chennai's residents who suffer at the end of the day," he said. Tamil Nadu may have received `940 crore from the Centre for flood relief measures. How this as well as other sources of funds are put to use will determine the fate of the bustling cosmopolitan city. 

Read more at:
http://economictimes.indiatimes.com/articleshow/49963247.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

http://economictimes.indiatimes.com/articleshow/49963247.cms?


நகர்த்தூய்மை புரத்தலிலே நாட்டமிலை புறத்தகற்றா
நகர்க்குப்பை அடைப்பதனால் நடுக்குறுத்தும் படுவெள்ளம்
தகர்த்தேரி புடைத்துவரும் தண்ணீரும் இடைக்கலந்து
தாளமிட வைக்கிறதே தலைவர்தலை  உதைக்கிறதே

ஃபித்னா: இஸ்லாமிய (அரபுச்) சொல்லின் பொருள்.

சோதனைக் கெதிராகக் கிளர்ந்து போராடுதலும் வெற்றி கொள்ள முயலுதலும் ஆகிய செயல்முயற்சிகளைக் குறிப்பதாகக் கூறுகின்றனர். ஒருவனை சோதனைக்கு உட்படுத்துதலையும் இது குறிக்கும் என்பர்.

பண்டை அரபியில் இதன் பொருளுக்கும்  தற்கால அரபியில் இதற்குள்ள பொருளுக்கும் வேறுபாடுகள் உண்டு என்று சொல்லப்படுகிறது. பொதுச்  சொன்னூற்  ( general lexical )  பொருளையும் தனியே கருதுதல் வேண்டுமென்பர்.

இது 34 முறை ஃபித்னா என்றே முழுச்சொல்லாக திருக்குர் ஆனில் பயன்பாடு கண்டுள்ளது. 26 முறை பல்வேறு தொடர்புடைய வினைச்சொல் வடிவங்களில் அந்நூலில் வந்துள்ளது என்பர் குர் ஆனில் புலமை பெற்றோர்.


Temptation, trial; sedition, civil strife,  of    a ‘trial’ (or ‘temptation’)  ,  in the sense of    ‘testing’ someone. என்றெல்லாம் ஆங்கில எழுத்தாளர்கள் பொருள் கொண்டுள்ளனர்.

நிலையான அரசாட்சியில் அமர்ந்துள்ளோனை எதிர்த்து நிற்றலையும் இது உள்ளடக்குமாம். ஆனால் கிளர்ச்சிக்கான காரணங்கள் அல்லது அடிப்படைகளை இது குறியாதென்பர்.

"Fitnah is also commonly used in the accusatory meaning of the word, esp directed at people who seek to create schisms or exacerbate schisms within the Muslim community as a whole."

என்றும் அறிந்தோர் கூறுவர்.

வரலாற்றில்  நெடுநாட் பயன்கண்டுள்ளதும் பலவேறு பொருட்சாயல்களையுடையதுமான ஒரு சொல்லை மொழிபெயர்த்துத் தமிழில் தருதல் அத்துணை எளிதென்று கூறிவிட இயலாது.  

செவ்வாய், 1 டிசம்பர், 2015

The Chennai floods

இருப்பதற்கோ இடமில்லை வீட்டுக்குள்ளே
இடுப்பளவு தண்ணீரில் படுப்பதெங்கே
உடுப்பதற்கும் உடையில்லை உணவுமில்லை
குடிப்பதற்குக் கிடைப்பதெலாம் வெள்ள நீரே
வெடிப்புகளும்  வீழ்குழியும்  வீதியெங்கும்
வேலையில்லை கூலியில்லை வேகுமுள்ளம்
நடிப்பினொடு நலம்கேட்பர் போலும்  காணோம்
நாளைக்கும் மழையென்றால் நசிப்பர் அந்தோ