வெள்ளி, 29 ஜனவரி, 2016

அட்சய பாத்திரம்

அட்சயப்  பாத்திரம் என்பது ஓர்  அழகான பெயர்.  இது அள்ள அள்ளக்  குறையாது வழங்கிக்  கொண்டிருக்கும் ஓர் ஏனத்தைக்  (  utensil  ) குறிக்கும்.  பழைய  மணிமேகலைப் படத்தில்  " அட்சயப் பாத்திராமி தாருக்குச் சொந்தமே?   ஆனந்தமே" என்று  கே.பி. சுந்தராம்பாள் பாடுவார்.

இந்தச் சொல்லை ஆய்வு செய்வோம்.

எல்லோரும் வந்து உணவை அள்ளிக்கொண்டு போகும் ஐயப் பாத்திரம்.

ஐயம் = பிச்சை .

இப்போது மறுபுனைவில் ஈடுபடுவோம்,

அள்ளு + ஐய   பாத்திரம்,

அள்  சு  ஐய  பாத்திரம்.

அட்சு  ஐய  =  அட்சைய  பாத்திரம்.

> அட்சய பாத்திரம். (  சை > ச    )  ஐகாரக் குறுக்கம்)

அள்  என்பது  வினைப் பகுதி.     சு  ஒரு விகுதி 


அள் என்பது  அள்ளு என்று உகரத்தில் முடிகிறது. உ  ஒரு சாரியை. வினையாக்க விகுதி .எனலும் ஆம். எது என்ற ஆய்வு பின் ..

அள்ளையப் பாத்திரம் என்றால்  அள்ளு ஐயப் பாத்திரம் என்று  தமிழ்ப் பேச்சிலேயே தங்கிவிடும். வேலை கிட்டி வெளி நாடு செல்வோரை நாம் தடுக்கிறோமா? அதுபோலத்தான்.


இந்தச் சொற்புனைவில்  சிறிய மாற்றத்தையே செய்துள்ளனர்.

அள்ளு(தல் )>   அள்+ ள்​ +உ  >   அள் + ( ள் + ச்  + உ )  >  அள்சு  > அட்சு . இதில் ஒரு 
ச்  மட்டுமே நுழைக்கப்பட்டது.   மற்றவை இயல்பாக நிகழும் திரிபுகள்

ஒரே  ஒரு சகர ஒற்றைப் போட்டுப்  பெரிய மாற்றமாக வெளிப்பட்ட சொல் இதுவாகும். இதைப் புனைந்த புலவர் மிக்கக் கெட்டிக்காரர். இதுபோன்று புதுப்புனைவுகள் மேற்கொள்ளத்  திறன்பெறுதல் நன்று. 

இப்படியும் காட்டலாம்:

அள்ளு  ஐயப்  பாத்திரம்>
அள் சையப்  பாத்திரம் >
அட்சையப் பாத்திரம் >
அட்சயப் பாத்திரம்.

இதில் அய்ய அல்லது ஐய என்பது  சை ய  என்று ஆனது
அகர வருக்க -  சகர வருக்கத் திரிபு.
இன்னோர் உதாரணம்:  அமணர் > சமணர்.

திங்கள், 25 ஜனவரி, 2016

Tolkappiyam is not dependent on other languages

Tolkappiyam is not dependent on Sanskrit sources and a work that demanded not only vast knowledge but also a lot of thinking from its author, according to Alexander Dubyanskiy, veteran Tamil scholar from Moscow State University.


Read more:

http://www.thehindu.com/news/national/tamil-nadu/tolkappiyam-is-not-dependent-on-sanskrit-sources-tamil-scholar/article489121.ece



Also on Tolkappiyam


Sivamala: Tolkappiyam timeline




ஞாயிறு, 24 ஜனவரி, 2016

றகரம் ஷகரமாய் மாற்றப்படும்,

தமிழுக்கு ற என்னும் எழுத்து சிறப்பானது. இதுபோலவே, அயல்மொழிகட்கு ஷ, ஜ, ஸ என்பவை சிறப்பனவை. சிறப்பு என்றால் இவ்வெழுத்துக்கள் அம்மொழிக்காரர்களின் மனத்தை வெகுவாகக் கவர்ந்தவை. மற்றபடி, இவை எல்லாமும் மனித நாவினின்று வழிந்து பறந்து வெளிவந்து கேட்போனின் செவிப்பறைகளில் மோதுபவைதாம் . இவ்விடையத்தில் யாவும் ஒப்பனவாம்.

இப்போது பாருங்கள், றகரத்துக்குப் பதில் ஷகரம் இட்டுச் சொல்லை உருமாற்றிவிடலாம்.   படிப்போன்  ‍‍

நூறாண்டு புழங்கினும் மாறின எழுத்துகள்
கூறாது விடிலோ கொஞ்சமும் அறியான்.

ஆகையால்,  இப்போது ஒரு பயிற்சியில் ஈடுபடுவோம்.


சிறு >  சிஸு

சிறியர்  > சிஷ்ய‌
பெரியவரான குருவிடம், சிறியவர்களான சிஷ்யர்கள் பாடங்கேட்பர்,
வயது ஆகியிருந்தாலும் அறியார் குருவிற்குச் சிறியவர்தான்.

சிறுமைக்குள் அறிவுக் குறுக்கமும் அகவைச் சிறுமையும் அடங்குவன.

இறைவர் > இஷ்வர் > ஈஷ்வர். அல்லது  ஈஸ்வர்   .இகர நீட்சித் திரிபு. (முதனிலை நீண்டு நடு திரிதல்)

ஒரு சொல்லை மாற்றுகையில் ஒலிக்க எடுப்பாகவும் எளிமையாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும், இல்லையேல் பயன்படுத்துவோரிடம் எடுபாடாது கெடும்,

புள் >  புட்சி  >பட்சி.   உகர அகரத் திரிபும்  ஓர் விகுதி பெறுதலும்.
கதை  > கிதை  > கீதை.  (  அகர   ஈகாரத்  திரிபு. )  கிதை  என்றே விட்டுவிட்டால்
இன்னா ஒசைத்தாகிவிடும்.  (அதாவது  ஒலி  நயக்  கேடாம் )

will edit 

அம்மாவாசையும் அயல்சேவையும்

அம் என்றால் அழகு. இந்த அடிச் சொல்லுக்கும் அம்மா என்ற தாய் குறிக்கின்ற சொல்லுக்கும்கூட ஒரு தொடர்பு இருக்கின்றது. நாம் தொட்டிலில் கிடக்கும்போது முதன்முதல் நாம் கண்ட அழகு அம்மாதான். அம்மை அழகு.

மா என்பது கரிய நிறம் குறிக்கும் சொல். சற்றுக் குறைந்த கறுப்பினை மா நிறம் என்பதுண்டு. மா>  மால். கரிய மால் உந்தியில் வந்தோன் என்று ஔவையாரின் பாடலொன்றில் வரும் தொடரை நினைவு கூர்க. திருமால் கரியோன், கறுப்புசாமி எனவும் படுவார்.

வாய் என்றால் இடம் என்று பொருள்.  இதில் ஓர் ஐ விகுதி சேர்த்தால் வாயை என்று வரும்.  யகரம் சகரமாக உரிய இடங்களில் வருதலை என் பழைய இடுகைகளில் கண்டு மகிழலாம்.  மறதி என்றால் ஒன்றிரண்டு காட்டலாம்,  வாயில்> வாசல்.  நேயம் >  நேசம், தேயம் > தேசம்.  தோயை > தோசை.  நீருடன் கலந்த அல்லது தோய்ந்த மாவினால்  சுடப்படுவது.  ஆகவே வாயை என்பது வாசை ஆகிவிடும். இதிலேதும் வியப்பில்லை/

இப்போது அமாவாசை என்ற சொல் காண்போம்.

அழகிய கருமை கலந்த இடமாகிவிடுகிறது  அம்மாவாசை தினத்தன்று
நம் ஆகாயம், ஆகாயமே ஆகாசமன்றோ?

அமாவாசையின் போது  அம் மா வாயை நம் வானம். அம் = அழகிய;  மா = கருப்பான;   வாய்  =  இடம்;  ஐ =  விகுதி .

இது பின் திரிந்தது.  அம்மாவாசை >  அமாவாசை. மகரம் கெட்ட இடைக்குறை.

அம்மாவாசை தமிழ் வா(ய் )த்தியார்களுக்குப்1 பிடிக்காது,  அம்மா+ஆசை யா? சீ  அமாவாசை என்று எழுது என்று திருத்த,  அமாவாசை ஆகி, பின் அயல்சேவையும் செய்யத்தொடங்கிகிவிட்ட சொல்லை அறிந்துகொண்டதில் மகிழ்ச்சிதானே  ( 1, வாய்த்தியார்  வாய்ப்பாடம் சொல்லிக் கொடுப்பார் ,  உப அத்தியாயி  வேறு. என்னே குழப்பம் கற்பிப்போருக்கு ).

தைப்பூசத்தில் மகிழ்வு பொங்குக.

will edit

சனி, 23 ஜனவரி, 2016

"உபயம்"

கோயில்களில் பயின்று வழங்கும் "உபயம்"  என்ற சொல்லினை இப்போது  காண்போம்.

கம்ப இராமாயணத்தில் உபயம், என்ற சொல் ". உவைய முறும் உலகின் "(கம்பரா. நிகும். 156). என்று வந்துள்ளதாக அறிஞர் கருதுவர் . உவையம் என்பதே உபயம் என்றாயிற்று என்பது கருத்து.
அ , இ  உ  என்ற முச்சுட்டுகளில்  உ  என்பது  முன்னிற்றல்  குறிப்பது.

உபயம் என்பது ஒரு வரியையும் குறிப்பதால்,  உபயம்  முன் வைக்கப்படும்  கோயிலுக்கான தொகையைக்   குறித்தது என்பது சரியான கருத்து ஆகும் .

உ >  உவ .
உவ >   உவன்.     ஒ.நோ :  அ > அவன் .
உவ > உவச்சன் =  (முன் நின்று ஓதுபவன் ).
உவ > உவை .
உவை > உவையம் > உபயம்.

முன் நிற்புக்   கருத்துடைய  சுட்டடிச் சொற்கள் இவை.

உவ என்பதில்  வ்  வகர உடம்படு மெய் என்பதுமொன்று. எனின்  உவச்சன் என்பது  உ ​+ அச்சன் =  உவச்சன்  எனல்வேண்டும்,   இங்கு அச்சன் -  தந்தை என்று  கொள்க,  ஓதுவாரைத் தந்தை எனல் பொருத்தமே.   ஐ > ஐயர் எனல்போல.

பயம் என்பது பயன் எனினும் அஃது சரியானதே.  திறம் >  திறன்  என்பதில்  மகர ஒற்று  னகர ஒற்றாயிற்று ,  உ+ பயம் =  உபயம் ,   சொல்லமைப்புகளில்  உப்பயம் என்று வாராமல் உபயம் என்றே இயல்பாக வருதல் முறையே. அன்றி உப்பயம்  உபயம் என  இடைக்குறைந்து வருதலும் எடுத்துக் காட்டலாம். பொருள்  :  கோயிற்   பயனுக்கு முன் வைத்த தொகை என்பதே
இங்கும் பொருள்.

Notes:

Payattal can also mean yielding a certain result,  Vizumiyatu payattal.   is an example.  u+payam thus can mean to yield beforehand,  that is,  setting aside from your yield from fields a portion for tax payment for the king.


வியாழன், 21 ஜனவரி, 2016

கணினிச் சொற்கள்

இப்போது பயன்பாட்டிலுள்ள் கணினி /இனையம் தொடர்பான சொற்கள் சில:

குறுவட்டு =  CD Player
தரவிறக்கம் = download
முகப்புப் பக்கம் = desk top
குறும்படம் -  icon
சொடுக்கு =  click. 

சிவஞான போதம் பாடல் 5

உயிர் என்பது ஒரு பழந்தமிழ்ப் பதம்.  இது சீவன் என்றும் வழங்கி வருவதாகும். உயிருடையோன் அல்லது உயிரன்,  சீவன் என்றும் கு
றிக்கப்பெறுவதுண்டு. உயிரனுக்கு ஆன்மா உண்டென்பதையும்  அவ் ஆன்மா பேரான்மாவைப் போன்ற ஆனால் அதனின் சிறிதாகிய ஒரு துண்டு என்பதும் கூறப்பட்டது.

இவ் ஆன்மா உடலில் வதியுங்கால் எவ்வாறு பேரான்மாவாகிய சிவனைக் கண்டுகொள்கிறது என்பதே ஐந்தாவது சிவஞானப் பாடல் எழுப்பும் கேள்வியாகும்,  அப் பேரான்மா கட்புலனுக்கு தெரிதலுறாமல் மறைந்தன்றோ உள்ளது?   அப்படி மறைவாயிருத்தலும் அப் பேரான்மாவின் இயல்புகளில் ஒன்றாயிற்றே!

சிவமோ  எங்கும் முழு நிறைவாகி இலங்குகின்றது. இம் முழு நிறைவைத்தான் பரிபூரணம் என்கின்றனர்.  ஆனால்  இதை இயல்பாக  ஓர் உயிரனின் ஆன்மா உணர்ந்துகொள்ள முடிவதில்லை.  வழிபாட்டுத் தலங்களில்  தெய்வச் சிலைகள் நிறுவப்படுதல் மூலமாக  கடவுளிருத்தல்  சிறப்பாக எடுத்துரைக்கப்படுகிறது, நிறுவுபொருட்களால்  சொல்லுதலும்
பதிவிசை மூலம் சொல்லுதலும் எனச் சொல்லுதல் பலவகை.  உணர்த்த உணர்வது ஆன்மாவின் இயல்பு ஆகும் .

கண்  வாய் மூக்கு  செவி மெய் முதலிய கருவிகள்  (  இந்திரியங்கள் ) தாமே எதையும் உணரமுடிவதில்லை. அவைகட்கு சீவன் அல்லது உயிரன்  ஒருவன் வேண்டும்.  அவனுடன் ஒன்று கூடி நின்று அவை நிகழ்வுகளை அறிகின்றன,
இந்த "நிற்பியைபு"  இன்றியமையாதது  ஆகும் . இதுவே  சந்நிதானம் எனப்படும். உயிரனும் தானே எதையும் உணர முடிவதில்லை.  முழு நிறைவாயுள்ள  சிவம் அல்லது  இறைமை  உயிரனைச் சூழ நிலவுகின்றது. அதனால் உயிரனும் செயல் பட்டு உணர்ந்துகொள்பவனாகிறான்.   இது விசேட சன்னிதானம் ஆவதாம் . சிவமில்லையேல்  உயிரன் சடம் .  உயிரன் இல்லையேல் ஐந்து இந்திரியங்களும் சடம்  ஆவனவாம்.

இதனை ஐந்தாம் பாடல் உணர்த்தும்.  பாடலை அடுத்துக் காண்போம்.

விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு 
அளந்தறிந்து  அறியா  ஆங்கவை போல 
தாம் தம் உணர்வில் தமியருள் 
கா ந்தங் கண்ட பசாசத்து  அவையே ,

விளக்கம் அடுத்து  \வரும்  இடுகையில். 

>
















ஞாயிறு, 17 ஜனவரி, 2016

ஜல்லிக்கட்டு

மாடு பிடிக்கின்ற  மாவலியோர் சட்டத்தின்
ஏடு படித்துயர்   ஏற்றறிஞர் ‍‍‍=== கூடிமன்றில்
போடும் தடையாற்  புகவில்லை கட்டுக்குள்! 1
நாடும் அவர்பக்கல் நன்று.

வீர விளையாட்டில் 2புக்குதம் தோள்களின்
வீறு வெளிக்காட்டும் வேணவா‍‍  ‍‍==  ஊறுபடச்
சீறு செழுங்காளை சேர்ந்து முடங்கிவிட‌க்
கூறு படலான தே


ஏறு தழுவும் எழுச்சி இளைஞர்மான்3
தேறு நிலைவருக தெள்ளிய ‍‍‍=== நீரினைப்போல்!
நேரும்  துயரனைத்தும் நீங்குக இல்லங்கள்
தோறுமே பொங்குநல் நாள்

அடிக்குறிப்புகள் :

1. கட்டு = ஜல்லிக்கட்டு. : ஜல் ஜல் என்று மணியொலியுடன் பாய்ந்து வரும்   மாடுகளை அடக்கிக் கட்டுதல்.  இந்த ஜல் ஓர்  ஒலிக்குறிப்பு.  ஜல் என்பது  குறைவுபட நின்ற  முதற்குறை . என்று இலக்கணம் உரைக்க .
2 புக்கு = புகுந்து 
3 மான் = மனம்,   மன்+அம் = மனம்; மன்>மான்,  முதனிலை நீண்ட பெயர்ச்சொல்
ஜல் ​+ இக்கட்டு =  ஜல்லிக்கட்டு;   ஜல் என்ற ஒலியுடன்  விரையும் மாடுகளால்  இக்கட்டு=  அதாவது  இடர் என்றும்  வேறு பொருளும் தரும் .. 

 will edit.  

சனி, 16 ஜனவரி, 2016

பொன்னாள்தைப் பொங்கலே greetings


போற்றும் திருவுடைய 
பொன்னாள்தைப் பொங்கலே
ஆற்றும் செயலனைத்தும் சீர்மிக்கு---
நேற்றினும்
இன்று சிறந்தினி 
நாளையும் புத்தொளியால்
நின்று நிலைபெறுக 
நேர்.

நேர் -  நேர்க;  நடைபெறுக. (ஏவல் வினை )
சீர்மிக்கு  =  சீர் மிகுந்து 

anti biotics

நுண்ணுயிர்க் கொல்லி மருந்தின்றேல் நோய்ப்பட்டுப்
பண்ணழிந்து வாழ்வும் பழுதாகும் === விண்ணிற்
பறந்துயர் எண்ணங்கள் பாழ்மிகும்  வேறு
சிறந்துயர் செல்வழி இல்.

வியாழன், 14 ஜனவரி, 2016

வேண்டவில்லை நீங்கள் தடை தாண்டிவந்தீர்!

விட்டுவிட்டுப்  பெய்தமழை நீர்த்துளிகாள்
எனைத் தொட்டுதொட்டு நீங்கி நின்ற இன்பக்கைகாள்.

வேண்டவில்லை நீங்கள் தடை தாண்டிவந்தீர்!  நானும்
தூண்டவில்லை  நீங்கள் துணிந்து வந்தீர்.

மலர்களைத் தளிர்களை  மரங்களின் இலைகளை
உலர்வறத் தழுவினும் எமக்கு நீரே.

உங்களின் பரத்தைமை வெறுக்கவில்லை
உங்கள் தொடர்பினை நறுக்கவில்லை

தீண்டுங்கள் எனைவந்து மீண்டுமீண்டும்;
தென்றலுடன் கூடி உலவுவீரோ
என்றனை மறவாது நெருங்கிவந்தே
ஒன்றென இயைவதில் இன்புகண்டேன்.

செவ்வாய், 12 ஜனவரி, 2016

பொறுக்கிக் கடைத்தெரு - இறுதியாக ஒரு,,,,,,, பார்த்துவிடுங்கள்.

பழசான காரணத்தால். பழுதினால்
ஓடாத எந்திரமும் பாடாத பாட்டுப்பெட்டியும்
ஓடவைக்கும் உதிரிப் பொருட்களைத்
தேடிக் கைவரச் செய்யும் இடமொன்று
சிங்கப்பூரில் உள்ளதென்றால் சிரிப்பீரோ கேட்டு?

பொறுக்கிக் கடை என்றும் புகல்வதுண்டு!
திருடர் சந்தை என்பர் சீன நன்மக்களும்.

வீசி வீணாக்குதல் கேடு
கெட்டுவிட்ட உட்பொருட்கு
அங்கு போய்ப் பெறுவீர்  ஈடு.

விசிறியின் சுற்றுத் தட்டு உடைந்தால்
அசர வேண்டாமே  அங்கு கிடைக்குமே.

புகழ்ப்பெற்ற பொறுக்கிக் கடைத்தெரு
பல்லாண்டு பழமை வாய்ந்த நல்லிடம்.
வீதிகளிலும் சந்துகளிலும் பொருட்கள் குவியல்.

வளர்ச்சிப் பணிகளின் நிறைவுக்காக‌
வரைந்து வைத்த திட்டங்களின்படி
இக்கடைத் தெருக்களும் சந்துகளும் இனி
இல்லாமற் போய்விடும்.
இறுதியாக ஒருமுறை சென்று பார்த்துவிடுங்கள்.
காலம் தாழ்த்தினால் அப்புறம்
படங்களில்தாம் பார்க்கலாம்,

Click here for more information:

https://sg.news.yahoo.com/6-singapore-landmarks-you-will-not-see-in-2017-003745950.html

From typewriters to a microscope set, you can find it all at this gem of a flea market. But the place, which is also known as Thieves’ Market to some, is running out of time as Singapore moves ahead,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

There is similar but a smaller place  in Johor Bahru near City Square but not for ladies.  Thieves and pickpockets too many,,,,,

திங்கள், 11 ஜனவரி, 2016

bacteria சின்கோலிகள்



ஞால மனைத்துமே  தாமே   இயைந்துள்ள
கோலம் கொழிக்கும்சின்  கோலிகளே  --- ஏலா
இடரும் தருவன ;  இன்பமும் சேர்க்கும்
சுடருமோ  இல்லையேல் வாழ்வு .  




சின்கோலி  =  bacterium;





மைக்ரோபு  நுண்புகள்

சனி, 9 ஜனவரி, 2016

கடைக்கண் இரங்கும் உளம்

முடக்கம் உறுவது முட்டுப் படுதலால் அஃதொழிக‌
அடக்கம் அடைதல் பணிவெனில் யாண்டும் அதுவளர்க‌
இடுக்கண் விளைப்பவர் இல்லா உலகெனில் பற்றிடுக‌
கடைக்கண் இரங்கும் உளம்பெறும் மாந்தர் வலம்பெறவே

வியாழன், 7 ஜனவரி, 2016

மனித வால்

நாய்க்கிருக்கும் நன்றியதோ யார்க்கும் இல்லை;
நரிக்கிருக்கும் பரிக்கிருக்கும் மாந்தர்க் கில்லை
நாய்க்கிருக்கும் வாலாட்டி  நன்றி சொல்லும்;
நரர்களுக்கு நன்றியில்லை; வாலும்  இல்லை .
பேய்க்கிறுக்கு மனிதன்முன் வாலும்  உள்ளான்;
பிழைபட்டு நன்றிகொன்றான் வாலை  விட்டான் .
நோய்க்கிறுக்கும் நுண்கிறுக்கும் வாய்க்கப் பெற்று
நுழைபெறுவான் வல்லரசுக் கழகத் துள்ளே.

According to anthropology,  humans had tails before.


அலைந்தலைந்து குலைந்திடுமோர் துன்பம்

போர்த் தந்தி    ரம்என்றால் புரிவோன்    செய்யும்
புதுத்தன்தி      றம்அன்றிப்      பிறிதொன் றுண்டோ
பார்த்தயர்ந்தான்  தன்விழியை  அவித்து விட்டுப்
பரதேயத் துள்புகுந்தான்  அலைக்க    ழிப்பான்.
ஊர்ச்சுவரே தாண்டிடுவோர்  ஒன்றி ரண்டே
உறுதி இது வென்றாலும் பட்ட நாட்டான்
ஆர்த்தெழுந்தான் ஆயிரம்பேர் தம்மைக் கூட்டி
அலைந்தலைந்து குலைந்திடுமோர் துன்பம் கொள்வான்.

பட்ட - அனுபவித்த .

The Pak strategy is quite simple. Send some crack shooters to inflict injury  in some important place or installation. Those are spotted and neutralized.  After that, send a few more to walk around in certain places .....They are sighted, but later disappeared. In pursuit of them, the affected country has to mobilize a large number of the forces for search operation.

The purpose for Pak is achieved......The affected country, their people and their forces --  all would be unduly burdened and their national and original focus shattered.

On their own, every country is suffering many diversions to their national focus,  many of them domestic in nature.   The terrorists are creating extra diversions.

Countries are no different from individuals.  If your neighbour is jealous of you, he will start creating some kind of "diversion" for you.

Each longs to see the other's downfall or at least fallback.
























புதன், 6 ஜனவரி, 2016

அணிகுண்டும் தனித் திறனும்.

அணிகுண்டு  என்பதை நீங்கள் கேள்விப் பட்டிருக்கமாட்டீர்கள்.  குண்டு என்பது வெடிக்கும் ஆதலால்  அணிதற்கு உரித்தானதன்று .  ஆயினும்  தீவிர வாதிகள் எனப்படுவோர் அணிந்துகொண்டு  அடுத்த நாட்டிற்கோ அல்லது பிற இடத்துக்கோ சென்று குண்டை வெடிக்கச் செய்வதனால்  அதை  அணிகுண்டு என்று சொல்லலாம்.   அணுகுண்டு போடும் சண்டைக்குப் பதிலாக  அணிகுண்டு கொண்டு செல்லும் போர்த் தந்திரம் இக்காலத்தில் நடப்பில் அதிகரித்து வருகின்றது.   .அறிவுடையோர்  கவலைப்படுதற்குரியது   இதுவாகும் .   குண்டு புழங்குவோர் சிலர் இதுபோது  உலகப்புகழ்  எய்திவிட்டனர். நடிப்பினால் புகழ் பெற்றோரை விஞ்சி விட்டனர் வெடிப்பினால் புகழ் பெற்ற ஒசாமா போன்றவர்கள்.

உடம்பில் கட்டிக்கொள்ளும் குண்டுக்குத்   தமிழில் வேறு பெயர்களும் வைப்பதற்கு நல்ல வசதிகள் மொழியில் உள்ளன .  உடுகுண்டு; வேய்குண்டு ;
புனைகுண்டு ;  கட்டுக்குண்டு ;  செருகு குண்டு ;  இடுப்புக்குண்டு; இடுபடை  என்றெல்லாம் சிந்தித்து  இவற்றுள் பொருத்தமானது என்று  படும் சொல்லை  மேற்கொள்ளலாம். இவைகள் உங்கள் மேலான சிந்தனைக்கு ஆம் .
உடம்பில் இடைவாரில் குண்டு வைத்துக்கொண்டு வந்து இறந்துவிட்டவனை வெடிகுண்டு வல்லுநர்  ஆய்வு செய்து  அவனுடம்பிலிருந்து  அதையகற்றும் பணியில்  அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ,  அது  எதிர்பாராத விதமாக வெடித்து  அவர் மாண்ட செய்தி  அண்மையில்  நாமறிந்தது ஆகும்.   இது  இந்தியா -  பஞ்சாப்  பதங்கோடு  வானவூர்தித் தளத்தில் நடந்தது.   அவ்  வல்லு நரின் குடும்பத்துக்கு நம் இரங்கல். குண்டகற்றுக் கலையில்  தனித் திறனுடையவர்  எனினும் குண்டு அவரை ஏமாற்றிவிட்டது.

இதுபோன்ற வேளைகளில் குண்டை அகற்றிய பின்புதான்  உடலைக் கைப்பற்ற வேண்டுமென்பது  விதி போலும். இல்லையேல் அது பின்னர் வெடித்துப்  பலரைக் கொல்லக்கூடும்.  ஆனால்  இனி,  வெடிகுண்டு அணிந்த உடலைக்  குண்டுடன் சேர்த்து மணல்மூட்டைகளுக்குள் வெடிக்கச் செய்து பின்பு மாமிசத் துண்டுகளைக்  கைப்பற்றுவதே  வழி  என்பதில் ஐயமில்லை.
தீவிரவாதிக்கு அதிக மரியாதை கேட்கும் மனித உரிமைக் குழுக்கள் புதிய வழிகளைச் சொல்லட்டும் .
இப்போது ஒரு கதை.  ஒரு காவல் நிலையத்தில்   ஓர்  இருகோடர் (கார்ப்பொரல் )  கடமையில் இருந்தார்.  வெளியில் தனியாக நடைச் சுற்றுக்காவலுக்குச் சென்றிருந்த ஒரு  புதிய  காவலர்  ஒரு குண்டு ஒன்றைக் கண்டு  தம்  நடைபேசியின்   walkie-talkie  மூலம் என்ன செய்வது என்று (மலாய் மொழியில் ) கேட்க, இருகோடர் விளையாட்டாக "தைரிய மிருந்தால் தலையில் சுமந்து கொண்டுவா" kalau berani boleh angkat kepala  என்று கூறி விட்டார்.    அவரும் அதைக் கொணர்ந்து   நிலையக் குறுக்கு மேசையில் இட,  பார்த்த இருகோடர் நிலையத்தை விட்டு ஓடிவிட்டார்.   நீ ஏன்  இப்படிச் செய்தாய்   என்று கேட்ட கடமை அதிகாரியிடம் :  "அவர் சொன்னார் , நான் செய்தேன் " என்றார் காவலர்.

"மூளையைப் பயன்படுத்த வில்லையா?"  என்று................. அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது .

அப்புறம் வெடிகுண்டு வல்லுநர் வந்து அதனைத்  தக்க பாதுகாப்புடன் செயலிழக்கச் செய்யும்போது நிலையத்தின் மேசை நாற்காலிகள் சாளரக் கண்ணாடிகள் முதலிய  நொறுங்கின , பக்கத்துக் கட்டடங்களிலும் இவை போன்ற  சேதங்கள் . எல்லாம் பின் சரி செய்யப்பட்டன,

இரண்டாம் உலகப் போருக்குப் பின் தென் கிழக்காசியா முழுவதும் வெடிக்காத குண்டுகள் பல கிடந்தன . இவற்றிலெல்லாம் தப்பிப் பிழைத்தோர்  நம் தாய் தந்தையர் .  அவர்களுக்கு நம் வணக்கம்.


சனி, 2 ஜனவரி, 2016

வருத்தப் படுவிய க - ய etc

இது ஒரு பேச்சு வழக்குத் தொடர். இதில் ,முதற் பதத்தில் திரிபு ஏதும் இல்லை.
வருத்த  என்பதை வலுத்த என்றால் பொருள் மாறிவிடும்.

இப்போது படுவீர்கள் என்பதைப் பார்ப்போம்.

படுவீர்கள்  > படுவீ (ர் ) க (ள் ) >  படுவீக.

ர்  என்ற ஒற்றெழுத்து  மறைவதைப் பலசொற்களில் எடுத்துக்காட்டியுள்ளோம்.

நினைவு கூர்க:

சேர் >  சேர்மி  >  சேமி.  சேமித்தல்.

ஆனால் ஒருமித்தல் என்ற சொல்லில் இப்படி வராது.

நேர் >  நேர்மி  > நேர்மித்தல். > நேமித்தல். இங்கு  அமையும்.

:ள்  வழக்கமாய்  மறைதல் உடையது .

அவள் >  அவ .

இனி,  க என்ற எழுத்து ய  என்று திரிவது காண்க. (படுவிய )

இதுபோல்  க - ய  என்று திரிந்த சொற்களைத் தேடுங்கள் .

மகன் என்பதைப் பேச்சில் சிலர் மயன்  என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா?  க - ய  திரிபு  அன்றோ?  

அகன் :  அகத்தில் உள்ளவனாகிய கடவுள்.  பெருமான் : பிரம்மன்.
          பிறவாதவனாகிய கடவுள்.   from akam.

அகன் > அயன்.  க > ய

இதையும் ஆய்வு செய்க.
இது போல்வன பிற -   தேடுங்கள்.

நல்லதொரு  பயிற்சியாய் இருக்கும் .

எம் பழைய இடுகைகளைப்  படித்தால் சில கிடைக்கலாம்.


வெள்ளி, 1 ஜனவரி, 2016

மனம் குறிக்கும் "மான்"



மன்னுதல் என்பதொரு வினைச்சொல்.  இது முன்னுதல் ‍  அதாவது
சிந்தித்தல்  என்ற சொல்லின் திரிபு. அன்றி  மன்னுதல் என்று இன்னொரு சொல்லும் உள்ளது. அதற்கு நிலைபெறுதல் என்று பொருளாம்.

முன் > மன் >  மனம்.  (அம் விகுதி ).

சில சொற்கள் முதனிலை நீண்டு விகுதிபெறாமலும் தொழிற்பெயராகும்.

இப்படி அமைந்ததே மான் என்னும் சொல். மான் எனின் மனம் என்று பொருள். மான் என்னும் விலங்கு,  ஏனை மான்கள் ஆகியவற்றுக்கும்  இதனுடன் தொடர்பில்லை


2அத்தன் அமைத்த உடல் இரு கூறினில்
சுத்தம் அது ஆகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரச கந்தம்
புத்திமான் ஆங்காரம் புரி அட்ட காயமே   (  திருமந்திரம் )

இங்கு  புத்தி மான்   எனின்  புத்தியும்  மனமும்  ஆங்க்காரமும் என்பது.  .
.