செவ்வாய், 31 மே, 2016

சிருங்காரம், சிங்காரம் - அழகு.

Connected posts: https://sivamaalaa.blogspot.sg/2016/05/sind-and-silk.html

https://sivamaalaa.blogspot.sg/2016/05/blog-post_34.html


இனி:


சில் ,  சின் ,  சிறு  அடிச்சொற்கள் 

சில் என்ற அடிச்சொல் விளக்கம் கண்டோம்.  இதிலிருந்து  சின்  என்னும் அடிச்சொல்  தோன்றியது.  லகர -னகர   திரிபு.

சில் > சின்   > சின்ன .

சின்  > சின்னவன் .,  சின்ன .

சின்  >  சின்னம்மை. (ஒரு நோய் ).    \
சின்  >  சின்னம்மனூர் .    ஓர் ஊர்.
சின்  > சினனப்பா    ( ஒரு பெயர் ),  சின்னப்பிள்ளை .

கு என்பது ஒரு வினையாக்க விகுதி.    எ-டு :   மூழ் >  மூழ்கு.  பெரு >  பெருகு ,

சின்  >  சின் + கு  >   சின்கு  >   சிங்கு ,

சிங்குதல்  =   சின்னதாதல் .  சிறுத்தல்.

சிங்கு  >  சிங்கு +  ஆர்  +  அம்  =  சிங்காரம்.

 ஆர் : நிறைவு,பொருத்தம் ,  ஒப்பு,  தங்குதல் , அணிதல் . பிற பொருளும் உள .
அம : விகுதி .

சிறு உருவில்  மிக்க  அழகாக இருப்பது.  பின்  இப்பொருள் விரிந்து
"மிக்க அழகு"   என்பது  பொருளாயிற்று. " சின்மைக்" கருத்து ஒழிந்தது.

சிங்குதல்  =  இளைத்தல்  சிறுத்தல். மற்ற பொருளும் உள.

சிங்காணி  =   சிறிய வில்


சிங்கன்  =   குறவன்   ( சிறியவன் ).

சிங்கி  = குறத்தி . பிற பொருளும்  உள.

சிறு >  சிறுங்கு  >  சிறுங்கு + ஆர் + அம்  =  சிறுங்காரம். >  சிருங்காரம்
அழகு.(    சிற்றுருவில் தோன்றிய பேரழகு ).
இதன்  அடிச்சொல் கோலிய பொருள் மங்கிப் போயிற்று,

றகரம் ரகரம்  ஆனது முன் பல சொற்களில் எடுத்துக்காட்டப் பட்டுள்ளது

சிங்கியடித்தல் .

சிங்கத்திசை -   சிறிதாகிவிட்ட  தென் திசை .  ( கடல்கோளால் )
(சின் + கு +  அம் ,  மேல் காண்க .)

இவை  தமிழ்ப் பேச்சில் உருவான சொற்கள் . பேச்சு மொழியிலிருந்து  பிற மொழிகட்கும்  உதவியுள்ளோம். .






Abused Maid Killed Employer!


முடித்துக் கொள்ளவோ  இவ் வாழ்க்கை ?

கால  ஓட்டத்தின் வயப்பட்டோம்;
அதனால் அது  வயது/
நாளின் கடப்பில் அகப்பட்டோம்
அதனால் அது அகவை.

அகவை ஆன பின்னே
அகமும் உடம்பும் வலுவிழக்க
மகன்மகள் எல்லாம் தொலைவிருக்க
மனையில் வேலை செய்ய
வேண்டும் வேண்டும் ஒரு பணிப்பெண்.

வேண்டும்தான்  ஆனால்
விழைந்த படியெல்லாம் மிரட்டி அடிக்கலாமோ
ஆண்டான்  அடிமை காலமல்லவே!
காலம் மாறிவிட்டதே/////

படித்துப் பாருங்கள்  கீழ் வரு செய்தி
முடித்துக் கொள்ளவோ  இவ் வாழ்க்கை ?




Maid who killed employer alleged that she was abused for six days

https://sg.news.yahoo.com/maid-who-killed-employer-alleged-that-she-was-105537139.html




how to reach this blog

If by typing  Sivamala.blogspot   you are unable to reach this site, please type:

sivamaalaa.blogspot.com


Thank you.


Some 3rd party or a software attached to an add-on

had interfered with our settings.

We had done some rectifications and will monitor.


திங்கள், 30 மே, 2016

கூடு, கூட்டு, பெருக்கு

கூடு :

கூடு என்ற சொல்லின் இன்னொரு பொருளை நோக்குவோம்நம் உடலில்கண்,காதுமூக்குவாய் என்ற உறுப்புகளும் உள்ளுறுப்புகளும் கூடி அமைந்துள்ளனஆகவேஉடலையும் ஒரு கூடு எனலாம்.கூடுதல் ஒன்று சேர்தல்.மேல்தோலானதுபொருத்துவாய் தெரியாதபடி ஒன்றாய்க் கூடியுள்ளதுஇதனாலும் உடலைக் கூடு என்பது பொருத்தமாகிறது.ஆன்மாவை உள்பொதிந்து வைத்திருக்கும் இவ்வுடல்,ஆன்மாவிற்கு ஒரு கூடு ஆகிறது.கூட்டுக்குள் குருவி இருப்பதுபோலஉடலுக்குள் ஆன்மா உள்ளது.ஒப்பீட்டினாலும் ஏனை
உடலியல் அமைப்பினாலும் இது பொருத்தமாகவே இருக்கிறது.தேய்ந்து அழிதலின் தேகமாயது (தே தேய்கு தேய்கம் தேகம்போலுமேகூடு என்பதும் காரணப் பெயர்.
கூடுவிட்டு ஆவிதான் போனபின் ஆரே அனுபவிப்பார்பாவிகாள் அந்தப் பணம் என்ற செய்யுளில் கூடு எனற்பாலது பொருந்தவே இடம்பிடித்துள்ளது.

கூட்டுவதும் பெருக்குவதும்

தெருவை யாராவது பெருக்கும்போது நீங்கள் கவனித்திருப்பீர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடக்கும் காகிதம், சருகு, எறியப்பட்ட பிற என யாவற்றையும் கூட்டுமிலாரால் கூட்டி ஒன்று சேர்த்ததும் அவை "பெருகி" விடுகின்றன. அதாவது,எல்லாம் அங்கு கிடந்த குப்பைதான் - சேர்த்து நோக்க, அதிகமாகிவிடுகிறது. எனவே பெருக்குதல் பொருத்தமான பதம். கூட்டுதல் என்பதும் பொருத்தமானதே. இதில் ஒரு மீனைப் பத்து மீன்களாய் ஆக்கிக் காட்டினதுபோல மாயவித்தை எதுவும் இல்லை. என்றாலும் கூட்டுதல் பெருக்குதல் என்பன‌ பொருத்தமே.

கூடுதல், பெருகுதல் - தன்வினை.
கூட்டுதல் - பெருக்குதல் - பிறவினை.


கூடு, கூட்டு, பெருக்கு  

ஞாயிறு, 29 மே, 2016

குடு - அடிச்சொல் (குடும்பம் குடி )



kutu -   act of humans joining or things joined or tied together to make another object

குடு > கூடு > கூட்டம்.  (அம்)
குடு > கூடு > கூடை.
குடு > குடம்பை
குடு > குடுமி  hair joined together
குடு > குடலை
குடு > குடி  ( இ )
குடு > குடி > குடிமை
குடு   >  குடும்பம்

You may make an analysis of these terms.

அம்மிக்கும் ஆபத்து?

மின்னரைப்பான்   (mixie or mixer-blender )  இருப்பதனால் இப்போது  அம்மியைப் பற்றி யாரும்  நினைப்பதில்லை .

அம்  -   அம்மு .
அம்  -  அமுக்கு.

இம் என்று ஒலி  எழுப்பும்போதே,  இரண்டு இதழ்களும் ஒன்றை ஒன்று தொட்டு அமுக்கியே  ம்  என்ற ஒலி  எழுகிறது.   எனவே,   ம் >  அம்  <  அம்மு -  அமுக்கு  என்பன மிக்கப் பொருத்தமாகவே  அமைந்த சொற்கள் ஆகும்.

அம்முதல் -   குழவியால்  அம்மியில்  அரைக்கும் பொருளை வைத்து அமுக்கி   அரைத்தல்   ஆகும் .

அம்மி என்பது தொழிற்பெயர்  ஆகும்.  அரைகல்லைக்  குறிக்கும்.

நாளடைவில்  அம்மி  மறக்கப்பட மாட்டாது .  காரணம்  "அம்மி மிதித்து அருந்ததி  பார்"  :க்கும் மரபு  இருக்கிறதன்றோ.  !

அதன்மூலம்  அம்மி வாழ்கிறது.

சுற்றுமசி  (mixie or mixer-blender ) வந்ததனால்  அம்மிக்கு  ஆபத்து   இல்லை  

சொம் - சொத்து - அதன் திரிபுகள்

சொம் சொத்து சொதந்திறம்.


பண்டை நாட்களில் முடியரசு இருந்தது. இப்போது குடியரசு நிலவுகின்றது. முன் மன்னராட்சி. இப்போது பல நாடுகளில் மக்களாட்சி. இப்போது மன்னர்கள் வீற்றிருக்கும் நாடுகளிலும் கூட, அவர்கள் ஆட்சிப்பொறுப்பிலிருந்து அகன்று வெறும் அடையாளமாகவே
உள்ளனர். ஓர்  அமைச்சரவை பரிந்துரை செய்வனவற்றை ஆமோத்தித்து (ஆம் ஆம் என்று ஓதிக்கொண்டு ) கையெழுத்திடுவோராக உள்ளனர். தேர்ந்தெடுக்கப் பட்டோரே முடிவுகளைச் செய்ய வல்லார் என்று அரசியல் அமைப்புச் சட்டங்கள் சொல்கின்றன.

மன்னர் ஆட்சிக்காலத்தில் மன்னனே சொத்துக்களுக்கெல்லாம் அதிபதியாய் இருந்தான். எல்லா அதிகாரங்களையும் தன்னுள்ளே அவன் பதிந்து வைத்துக்கொண்டிருந்ததால் அதி - அதிகாரங்களைப் பதி - பதிந்துவைத்துக் கொண்டவன். அதிபதி. சொத்துக்களை அவன் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொன்டான். அவனுக்கு மனைவிகள் பலர் இருந்தனர்.
முறைப்படிப்  பட்டம் சூடியவள் அரசி. மற்ற அவன் காதலுக்குரிய பெண்கள் மனைவிகளே ஆயினும், அரசியர் அல்லர். அவன் அந்தரங்கம் எல்லாம் அறிவீரோ? அந்த + அரங்கம் ! மன்னனின் மனையாட்டியர் அரங்கம் !. அதுதான் அரங்கம் .--- அந்தரங்கம் . அவர்கள் வாழ்ந்த இடம் - அந்தப் புறம். அரசியல் நடவடிக்கைகளுக்குப் புறமான இடம். அந்தப்புரம் ஆயிற்று அந்த : இது இடக்கர் அடக்கல் பிறகு . அங்குமின்றி இங்குமின்றி இருந்தவர்கள் அந்தரத்தில் இருந்தனர். அந்த அரிய இடம். அந்த+ அரு+ அம். அந்தரம். இதுபின் மேல் நோக்கியும் சென்று வெட்ட வெளியில் உள்ள அந்தர இடத்தையும் குறித்தது. அந்தரம் என்பதற்கு வேறு விளக்கமும் அமையும். புனைவுச் சொற்கள் வேறு பொருள்களிலும் சிலேடையாகவும் போதரும்.

அரசனுக்குப் பிறந்தோர் அவன் பிள்ளைகள். இளவரசுப் பட்டம் . அவன் பட்டத்து இளவரசன்.மற்ற அரசனின் பிள்ளைகள் இளவரசர்கள். இளவரசர் ஆகாதோர் வேறு பல பட்டங்கள், நிலங்கள், பொருள்கள் கொடுக்கப்பட்டனர். அவர்கள் பிள்ளைகள் என வழங்கப் பட்டனர். பிள்ளை என்பது ஒரு பட்டம் ஆயிற்று.

அரசன் கொடுப்பதே சொத்து, சொம்+ தம் = சொந்தம். சொம் + து = சொத்து.
அவர்கள் தம் சொம்முடன் (சொத்துக்களுடன் ) சொம்+ தம்+ திறமா க ( சொதந்திரமாக, இன்றைய வடிவம் சுதந்திரமாக ) -- அதாவது அரசனிடம் இருந்து கிட்டிய சொத்துக்களைத் தம் திறத்திற்கேற்ப
(திறம் காட்டி) நிறுவாகம் செய்து பிழைப்பார் ஆயினர்.

அரசர்கள் இருந்ததும் அவர்களுக்கு பல மனைவியர் இருந்ததும் சொத்துக்கள் இருந்ததும் சொத்துக்கள் பெற்றோர் சொம்+தம்+திறமாகச் செயல் பட்டதும் ஒன்றும் பெரியன  அன்று. இதில் சில சொற்களை விளக்கியுள்ளேன்.
அதைப் புரிந்து கொள்வீர்..பின்னர் வேண்டின் திருத்தப்படும்,.

சொம் சொத்து சொதந்திறம்.

வெள்ளி, 27 மே, 2016

ஆசாரம். ஆஸ்தி ஆதி

ஆசு  என்ற  அடிச்  சொல்  பல சொற்களில்
பயன்படுத்தப்பட்டுள்ளது.  அவற்றுள் சில இங்கு கவனிப்போம்.

ஆசு என்பதன் அமைப்பு முன் விளக்கப்பட்டுள்ளது.  அதை இப்போது சுருக்கமாக நினைவு கொள்ளுதல் நலம் பயக்கும்.

ஆ   >  ஆதல்.
ஆ  >  ஆதி    (ஆக்க  நாள்   தொடக்க நாள். )
ஆ  >  ஆசு,     எதையும் ஆக்குதற்கு  உதவுவது.    அது :
   ஆதரவு,  பற்றுக்கோடு.


( பற்றுக்கோடு  -   பற்றிக்கொள்ளுதல். பற்றத் தரும் பொருள்.  

ஒரு மரக் கொம்பு  பற்றி ஏறத் துணசெய்கிறது.  அதாவது பற்றக்கொடுக்கிறது.   அது பற்றுக்கோடு எனப்படும்.  கொடு > கோடு,  மற்றும்  கொள்+ து  = கோடு. இப்படி இருவகையிலும் வரும்.  )

ஆசு + தி  > ஆஸ்தி   (  ஆஸ்தி. இதில் தி என்பது தொழிற்பெயர் விகுதி.)
ஆசுதி > ஆஸ்தி.  ( ஆக்கப்பட்டு ஒருவனுக்கு உரிமையான பொருள்களின் தொகுதி.

ஆசுதி என்பது ஆஸ்தி என்று மாறி அமைந்ததால்,  ஆசுதி என்ற முதல் அமைப்புச் சொல் வழக்கில் இல்லையாயிற்று.   கடு> கட்டம் > கஷ்டம் என்ற திரிபில்,  கஷ்டம் வந்தபின் கட்டம் என்பது அப்பொருளில் உலவுதல் ஒழிந்தது.  அதுபோலவே.

ஆசு +  அருத்தல்  >  ஆசருத்தல்.

அருந்து > அருத்து:  ஊட்டுதல்.

ஆசருத்தல் > ஆசரித்தல்:     உ> இ  திரிபு.

ஆசரித்தல் >  கடைப்பிடித்தல்.  பற்றி  நடத்தல். (பற்று ஊட்டுதல் )

ஆசரித்தல் >ஆசாரம்.  (பற்றி நடக்கும் முறையமைப்பு).

மற்ற தொடர்புடைய சொற்களைப் பின் கவனிப்போம்.



ஆ+ சாரம் = ஆசாரம் :  சாரம் ஆவது;  சார்ந்து  நடக்கத் தக்கது.  வினைத்தொகையுமாகும்.

வாடகை வரும்படியும் முகவர்களும்

மலேசியாவில் வீடுகள் வாங்கிப் பலர்  வாடகைக்கு விடுகிறார்கள். இதைப் பற்றிக் கொஞ்சம் உரையாடுவோம்,

இப்போது புதிய மற்றும் பழைய வீடுகள் மிகப்பல வாங்குவதற்குக் கிடைக்கின்றன .  முழுமையான வீட்டின் விலைக்கான தொகையையும் கட்டி வீட்டை வாங்கலாம்,   ஆனால் ஒரு பெருந்தொகை  அதில் போய் அகப்பட்டுக் கொள்ளும்,  அதை விற்று மீண்டும் முதலாக்கும் வரை இந்த நிலை தொடரும்,  இப்படிச் செயல்பட இயலுமா என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். 

அடுத்து நீங்கள் செய்யத் தக்கது  வீட்டைத் தவணை முறையில் வாங்கலாம், அப்படி வாங்கினால் மாதாமாதம் தவணையைச் செலுத்தவேண்டும்.  உங்கள் மாத வருமானத்திலிருந்து  இதைச் செலுத்த முடியுமா என்று பார்க்க வேண்டும்   இதில் கொஞ்சம்  இடிக்கிறது  என்றால் அல்லது வேறு காரணங்கள் இருந்தால்  வாங்கின வீட்டை வாடகைக்கு  விட்டுவிடலாம்.

இங்குதான் பிரச்சினை தோன்றுகிறது.  பிற -  மற்ற,  சினை = உறுப்பு  அல்லது  காரணங்கள்.  பிற என்பது பின் பிர  என்று  மாறிவிட்டது. 

வீட்டில் குடியிருக்கும் கூட்டம் வீட்டைச் சின்னாபின்ன மாக்கிவிடுகிறது.   வீட்டுக் கம்பிகளைப் பேர்த்து எடுத்து விற்றுவிடுகிறார்கள்.  தரை ஓடுகளை உடைத்துவிடுகிறார்கள் ,  மின் கம்பிகளைச் சுவருக்குள் இருந்து வெளியில் இழுத்துத்  தொங்க விடுகிறார்கள்.  பின் வேலிகளை அகற்றிவிடுகிறார்கள்.   நீங்கள் நினைக்காதவை எல்லாம் செய்து விடுவார்கள்.  ஆக மொத்தத்தில்  வீட்டை வாங்கியதற்குத் தண்டனை கிடைத்தது போலத்தான்,  வந்த வாடகை  பத்தாயிரம் என்றால் இப்போது வீட்டைப் புதுப்பிக்க  ஓர் இலட்சம் செலவு செய்ய வேண்டும். புதிய வீடு ஓட்டை வீடாகி விடுகிறது . கதவுகளில் ஒரு  புட்டுக் கூட உடைபடாமல் இருக்காது.  சாவியை எங்கேயோ விட்டுவிட்டேனே  கதவை உடை.கண்ணாடியை  நொறுக்கி உள்ளே போ என்றபடி செயல் படுவர்/

மூன்று மாதமோ நான்கு மாதமோ வாடகைப் பாக்கி வைத்துவிட்டு ஓடிவிடுவார்கள்.  வீட்டின் சாவி உங்களிடம் இருந்தால் மீண்டும் உள்ளே புக அது பயன்படலாம்.  அவர்களை மேற்பார்ப்பது உங்கள் 24 மணி நேர வேலையாய் இருந்தால்  ஒருவேளை தப்பிக்கலாம்.  ஒரே தேதியில் வாடகை  வந்து சேராது.  இடையில் ஓரிரு மாதங்கள் இடைவெளியை ஏற்படுத்துவார்கள். 

மகிழுந்துகள் வைத்திருப்பார்கள். புதிதாக வாங்கி ஓட்டிவிட்டு  அதற்கும் காசு கட்டாமல் அந்த வண்டி நிறுவனம் வந்து இழுத்துக் கொண்டுபோய்விட்டால் இன்னொன்று  வாங்குவர் . அப்புறம் அதற்கும் அதே கதிதான்.

அப்புறம் முகவர்களைப் பற்றிப் பார்க்கலாம்.






வியாழன், 26 மே, 2016

Solomon Tamil சாலமன் > சொலமன் ?

எபிரேய மொழியில்  ஷெலோமோ என்றும்  ஆங்கிலத்தில் சொலமன்  என்றும்  அரபியில் சுலைமான் என்றும் வழங்கும் பெயரோ மொழிக்கு மொழி பலவேறு வடிவங்களில் வந்து முன்னிற்கிறது.  இந்த அரசன் மிக்கப் புகழ்ப்  பெற்று காலங் கடந்து மக்கள் மனத்துள் நிற்பவன். பெரிய அறிவாளி என்று புகழப் பெற்றவன்.  அவனைத்  திறனறிய விரும்பிய ஷீபா  அரசி  ஒரு காகிதப் பூச்செண்டையும் மணமலர்ச்  செண்டையும் காட்டி வினவிய காலை, சாலமன் சாளரங்களைத்  திறக்கச் செய்து தேனீக்களை புகச் செய்து  அவைகள் மொய்த்த செண்டே  உண்மையான மலர்ச் செண்டு  என அறிவுறுத்தினான் என்பர்.  மதி நுட்பத்திற்குச் சாலமன் என்பது  பண்டையர் முடிபாய்  இருந்து வந்துள்ளது.

ஷீபா அரசி  இவனுக்கு  ஒரு குழந்தை  ஈன்றாள் என்கிற கதையும் உண்டு. இவன் பல வெளி  நாட்டு மங்கையரை மோகங் கொண்டு மணந்து இல்லறம் நடாத்தினான்  என்ப/

பல மொழிகளையும் செவி மடுக்கும்  பேறு பெற்றிருந்தான் என்பதற்காகவே இதையெல்லாம்  கதைக்க வேண்டியுள்ளது.

மத்தியக் கிழக்குச் சொற்களிற் பல,  கிரேக்கமொழி வாயிலாகவே  நம்மை வந்தடைகின்றன . இயேசு என்பது  ஜீசஸ்  ஆனதும் கிரேக்கம் > இலத்தீன் வழி ஒழுகியதே ஆம். இதுபோலவே  சொலமன்  என்பது  கிரேக்க  நெய்யில் வாட்டி எடுத்த பதார்த்தம்  ( பதம் )/

சொலமனின் ஆயிரம் மனைவியரில் / வைப்பாட்டியரில் பிறமொழியார்  எத்துணை ?

எப்ரேயத்தில் பிறமொழிச் சொற்கள் கலவாமை  அருமையே.

சொலமன் என்றால்  அமைதியாளன் என்று பொருள் கூறுவர்.

சாலச் சிறந்தவன் இவன் .  சால என்பது தமிழில் வினை எச்சம்.  ஆகவே சாலும் மன்   -  சான்றாண்மை  உடைய மன்னன் .  சால்பு உடையவன்  என்று பொருள்.  பொறுமை உடைமை சால்புக்கு உள்ளீடு .

சாலுமன் >  சாலமன் > சொலமன் .

இம்மன்னன் பெயரின் பல்வேறு மொழித் திரிபுகளையும் இங்கு பட்டியலிட வில்லை.

பிரமனும்  பிரஹாமும் ( ஆப்ரஹாமும் )  தொடர்புடையன என்று  ஆபி டியூபா  கூறச் செவிபடுத்த பயனுடைய நாம்  சாலமன் சொலமன்  என்பவை
சால என்ற தமிழ்த் துண்டுச் சொல்லுடன் தொடர்புடைத்து என்றிசைப்பதில்  வழு ஏதும் வந்துவிடப்போவதில்லை .

மோன் என்பதும் மகன் என்பதன் திரிபு  எனற்பாலது   கருதத் தக்கதே.

இயேசு பிறந்த ஞான்று  மூன்று கீழை நாட்டரசர் சென்று கண்டனர்.  அவர் இன்றையப் பாக்கிஸ்தானில் அடக்கமாகி உள்ளார்  என்ற  செய்திகளும்
தொடர்பு தரும் குறிப்புகளாம்.



 .  

மிராசு . : Arabic word?

மிராசு  என்ற சொல் தமிழ் நாட்டில் வழக்கிலிருக்கிறது,  இந்தச் சொல்லைச் சங்க இலக்கியங்களில் காணமுடியவில்லை.  இது  ஒரு உருதுச் சொல் என்று கொள்ளப்படுவது.

உருது என்பது இந்திபோலப் புதிய இக்கால மொழி.  அதன் சொற்கள் பழைய மொழிகளிலிருந்து திரிந்திருக்க வேண்டும்,  அல்லது  நெருங்கிய தொடர்புடைய அரபி முதலிய மொழிகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.  அல்லது  இம்மொழியில்  புதுப் புனைவுகளாக  இருக்கவேண்டும்.

பிற மொழிச் சொற்கள் வந்து வழங்குவது  எல்லா மொழிகளிலும் காணப்படுவது என்பது   ஓட்டோ ஜெஸ்பெர்சன் முதலிய மொழி நூலறிஞர்களின்  கருத்தாகும்.

தமிழைப் போலவே வேடமிட்டுவரும் ஒரு பிறமொழிச் சொல்லை விலக்கிப்
பேச்சு எழுத்து முதலியவற்றைக் கையாளுவதென்பது  பேசுவோன்  மற்றும் எழுதுவோனுக்கும்  கடினமே.   எல்லோரும் சொல் ஆய்வு செய்வதற்கு இடமும் பொருளும் பிறவும் துணை நிற்பதில்லை.

இவற்றை மனத்தில் இருத்திக்கொண்டு  இங்கு தொடர்வோம் .

அரசு என்ற சொல் இலத்தீன் முதலிய மொழிகளிலும் சென்று வழங்கி உள்ளது.  Rex  Regina   முதலியவை காண்க. தமிழுக்கும்  இந்த மேலை மொழிகளுக்கும் தொடர்பே இல்லாது இருந்திருந்தால்  அரிசி  இஞ்சி  முதலிய சொற்கள்  அங்கு சென்றிருக்க மாட்டா.   தோகை என்ற சொல்லும்
எபிரேய மொழியில் இடம்பெற்றிருக்காது.  சுமேரியா முதலிய இடங்களில் தமிழர் வாழ்ந்தனர் என்பதையும் மனத்தில் இருத்துக.

மீ ​+  அரசு  =  மீ + ராசு  =  மிராசு   ஆகும்.  முதல் எழுத்துக் குறுகிற்று,  அரசு என்ற சொல்  வழக்கம்போல் தலை இழந்தது. இத்தகு  திரிபுகள் பெருவரவு ஆகும் .

மேலாண்மை என்பது பொருள்.  பின் பரம்பரை  நிலத்து  மேலாண்மை குறித்தது.  மீ -  மேல்.   அரசு =  ஆட்சி .

இது :    தமிழ் >  அரபி  >  உருது>  தமிழ்   என்றோ,   தமிழ் > உருது >  தமிழ்   என்றோ   இதன்  செல்பாதை  அமைந்திருக்கலாம்.  இதுவே இனி  நுணுகி  ஆய்தற்குரியது    ஆய்வாளர்கள் இது தொடர்க,,  ஆர்வமிருப்பின்.


புதன், 25 மே, 2016

On Sri Lankan Tamil Muslims

You  may wish to read the following  just for knowledge, however,  the substances generally or on specific points may require proper verification before being accepted as facts.

Also,  this research may not be beneficial to the group of people being targetted.


Sri Lankan Muslims     -  Caste Tamil Hindu Converts Not Arab Descendants




Genographic Project

Genographic Project


https://en.wikipedia.org/wiki/Genographic_Project



அவசரம் என்ற சொல்.



அவசரம் என்பது தமிழில் பேச்சு வழக்கில் உள்ள சொல்தான். இது தமிழன்று என்று கொள்ளப்படுகின்றது.   இந்தச் சொல் எப்படி அமைந்தது என்று பார்க்கலாம்.   இதன் பொருள்  சுருக்கு (  சுருக்கா(க) ),  விரைவு என்பதாகும்.

இது ஒரு கூட்டுச் சொல்.  அவம் என்பதும் சரம் என்பதும் புணர்த்தி அமைந்தது.

அவம் என்பது  அவி+ அம் என்று  அவித்தலில் அம் சேர்த்து  அமைக்கப்பட்டு உள்ளது.  ஒன்றை அவித்தல் என்பது கெடுத்தல், அழித்தல் என்றும்,  நீரில் இட்டுச் சூடேற்றி  வேவித்தல் என்றும் பொருள்தரும்.

ஐந்தவித்தல் என்ற தொடரைப் பாருங்கள்.   ஐம்புல நுகர்ச்சிகளை விடுத்தல் என்று பொருள்.   அவித்தல் என்பது அழித்தல்.  வ-  ழ திரிபு.  அழி > அசி என்றும் மாறும். த(ன்) + து+ அம்+  அசி  =  தத்துவமசி என்ற புனைவும் கருதத்தக்கது.

அவம் என்பதில்  அவி +  அம்,  இதில்  இகரம் கெட்டு அவம் ஆகியது.  கேடு -சுருங்கக் கூறும் பொருள்.

சரம் என்பதும் இப்போது வழக்கில் உள்ள சொல்தான்.   பூச்சரம்.
சரவிளக்கு.   சரம் -  சரியாக அமைந்த வரிசை.  ஒன்றன் பின்  ஒன்றாக  ஒழுங்குடன் வைக்கப்பட்டிருப்பது.

ஒழுங்காக ஐந்து மணிக்கு வேலைக்குப் போகவேண்டும். நான்கு மணிக்கே வந்துவிடு என்று  அலுவலகம் உத்தரவிடுகிறது.
அமைந்த ஒழுங்குப்படி செல்லாமல், முன்கூட்டியே போவதென்றால், அது சரத்தின் கேடு ஆகும்.  வரிசைக் கேடு. எதன்பின் எது வருதல் வேண்டும் என்ற முன் அமைப்பில் ஏற்பட்ட கேடு ஆகும்.  ஆகவே  சரக் கேடு ஆகும்.  சரியாக அமையாத கேடு.
ஆகவே சர அவம்.  சரக்கேடு.  அவசரம்.


அவசர என்ற சமஸ்கிருதச் சொல் வேறு.  இதற்கு

1 அவசர the dominion or sphere or department of. ..

என்று பொருள்.  விரைவு என்பது பொருள் அன்று  என்றுதெரிகிறது , இது இருக்கட்டும் .

மற்ற  சொல் அமைப்புகள்:

அவ மானம்  -  மானக்கேடு
அவ மரியாதை  -  மரியாதைக் கேடு.
அவ தூறு  -  கெடுதலான தூற்றுதல்.
அவத்தம்  (  அவம் + து + அம்  ​ )
அவதி   ( கால அவதி =  காலாவதி   -  காலக்கெடு )

அவ மழை -  உரிய நேரத்தில் வராத மழை

அவமாக்கு  -  கெடுத்திடு  வீண்  ஆக்கு

எனப்  பல .




செவ்வாய், 24 மே, 2016

கோணல் உலகினை நேர்செய யாருளர்

எண்ணூற்றெண் பத்திரண்டு ---- எல்லாம்
என்னால் இயன்றதென் றியங்கிய மார்க்கோசு
கொன்றொழித் தாடுதொகை ---- இதைக்
கூறிடுங் காலோர் கொலைஞன்முன் வந்தனன்


இலங்கையில்  (இ ) ராச பக்சே  - இவன்
ஏற்றிய போரினில் நூற்றுறழ் ஆயிரம்
கலங்கு  தமிழர்களைக்--- கொன்று
களைந்தனன் காட்டும் கணக்கினைக் காண்பிரோ

காலமே யாதாயினும் ---- ஒரு
கார்முகில் மேல்வந்து சூழ்தரல் போல்அலங்
கோலம் விளைப்பவர்கள் ----- வாழும்
கோணல் உலகினை நேர்செய யாருளர்


This may not appear correctly on your screen owing to a bug herein.

ஞாயிறு, 22 மே, 2016

சிந்தும் சில்க்கும் Sind and Silk

சிந்தும் சில்க்கும்

சிந்து என்பது தமிழ்ச்சொல். சிந்து என்பது  தமிழ் யாப்பிலக்கனத்தில் வரும் பாவடிக்கான  ஓர் அளவீடு ஆகும். ஓர் அடியில் மூன்று  சீர்கள் இருந்தால் அது சிந்து.  " செந்தமிழ்/ நாடென்னும்/ போதினிலே" என்று வரும் பாட்டில் மூன்று சீர்கள்  உள்ளன.  ஆகவே அது சிந்து
காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து என்ற தொடக்கத்தில் சிந்துகள் பல.
நான்கு சீர்கள் இருந்தால் அதுவே ஓர் அடிக்கு அளவு ஆகும். அது அளவடி எனப்படுவது.

சிந்து என்னும் சொல்  சில்+ து  என்ற ஒரு பகுதியையும் ஒரு விகுதியையும் கொண்டது, சில் என்பதற்குச் சிறு என்றும் பொருள்.
அளவடியுடன் ஒப்பிடும்போது சிந்தடி சிறியது. அதனால் அது
சிந்தடி எனப்பட்டது. இந்தியாவில் உள்ள பல மொழிகட்கு இலக்கியமே இல்லாதிருந்த காலத்தில் தமிழில் பாட்டுகள் இருந்தன.
மேலும் தமிழில் கிடைத்த பல நூல்கள் எல்லாம் பாட்டாகவே இருந்தன. இருக்கின்றன   பேச்சு ஏற்பட்டு, எழுத்து ஏற்பட்டு, சொற்கள் ஏற்பட்டு, வாக்கியங்கள் அமைந்து.இலக்கணங்கள் அமைவதற்கு மொழியானது
பல நிலைகளைக் கடக்கவேண்டும், ஆகவே  தமிழ் தொன்மையானது என்பதை அறியலாம்.  அறியவே சிந்து என்ற இலக்கணக் குறியீடும் மிக்கப் பழமையானது ஆகும்.

சில் து என்பது சொல்லாகும் போது சில் என்பது சின் என்று மாறிப்
பின் விகுதி ஏற்கும்.  சின் ‍  =  சின்னது.   சின்+ து =  சிந்து,   முன் தி  என்பது முந்தி என்று ஆனதையும் பின் + தி என்பது பிந்தி என்றும் வந்ததையும் ஒப்பிட்டு அறிவுபெறலாம். மன் திறம் மந்திரம்
என்றும் தன் திறம் தந்திரம் என்றும்  காணலாம். ஒழுங்காக ஆராயமலே சிலர் அகரவரிசைகள் முதலியன புனைந்துள்ள படியால்
அவர்கள் இதை அறிந்தாரில்லை.

சிந்து என்பது ஒரு துணியின் பெயராகவும் இருந்தது என்பதை
வரலாற்று ஆய்வாளர் கூறியுள்ளனர். இந்தத் துணி, பாக்கிஸ்தானிலுள்ள மொகஞ்சதரோ ஹரப்பா பகுதிகளில் நெய்யப்பட்டது, இதை கா. அப்பாத்துரையாரின் தென்னாடு என்ற‌
நூலில் அவர் பதிவு செய்துள்ளார். இதை ஆராய்ந்து சொன்னவர்
அறிஞர் பி.டி  சீனிவாச ஐயங்கார்.  அதனால் அந்தப்  பகுதியில்
ஓடிய ஆற்றுக்குச்  சிந்து என்றும் அந்த நிலப்பகுதிக்குச் சிந்து என்றும்
மொழிக்குச் சிந்து என்ற பெயரும் ஏற்பட்டன.  சிந்து மொழி தமிழுடன் நெருங்கிய தொடர்பு உடையது என்று இப்போது கூறியுள்ளனர்.  அதுபற்றிய ஓர் இடுகையை யாம் இங்கு ஒரு மூன்று ஆண்டுகளின் முன் போட்டிருந்ததாக நினைவு. இப்போதுதேடிப்பார்க்க  நேரம் கிடைக்கவில்லை. இது இனி நடைபெறும்,

சில் என்பது சிந்து என்று உருவாகியது.  சில் என்பது சில்க்
என்றும் ஆனது.  ஆகவே அடிச்சொல் ஒன்றுதான்.  சில் து,  சில் கு.  துவும்  குவும் தமிழில் இன்னும் விகுதிகளாகவே உள்ளன.

சிந்து வழிதான் சில்க் ரூட்.

கொடுத்த குறிப்புகளைத்  தேடிப் பிடித்து நீங்களும் ஆய்வு செய்யலாம்.

அங்கெல்லாம் தமிழ்ச்சொற்கள் வழங்கியது உண்மை.  மிகச் சிறிய நூலால் ஆன துணி  சிந்து,  சில்க்/

சனி, 21 மே, 2016

அன்னையின் இன்பத் தாலாட்டு


நள்ளிரவில்  வாழ்த்தியம் 
நாட்டு வெப்பம் தணித்திட‌த் 
தம்மனை  அனுப்பிய தண்ணருள்.
நானுறங்கப் பார்த்தும்
நல்லிரு விழிகள் மூடவில்லை;
மழை  சொரியக் 
குழைந்தன என் இமைகள்!
கூடுதல் வேகத்தில்
மூடிக்கொள்ள முனைந்தன.
குளிரூட்டிய அறையில்
தளிராகப் படுத்திருந்தேன்

மழைதந்த குளிரால்
விளைந்த ஊதியமென்ன?

ஒன்றுமில்லை ஒன்றுமில்லை

பின் ஏன் உறக்கம் இப்போது
முன்வந்து எனையணைக்க 
முயல்கின்றது.?

அந்தச் சலசல ஒலி
கூரைகளின் மேலே தடதட...
விழுந்தும வழிந்தும் ஓடியும்
என் தாயின் தாலாட்டினை
செவிக்குள் செலுத்தின,

சலசல தடதட வரவர‌ தரதர  

இயற்கை அன்னையின்
இன்பத் தாலாட்டு.

ஊழல் புரிந்தோர்

ஊழல் புரிந்தோர் ஓளிவதோ  எங்கேபோய்?\
ஆழ்கடல் தாண்டவும் ஆகாதே === வீழ்ந்தோரும் 
கூழே குடித்துக் குறுக்குற்ற கம்பிகள்பின்
பாழே அடைந்தனர் வாழ்வு. 


https://sg.news.yahoo.com/tai

 

Taiwan's ex-president Ma faces lawsuits as immunity ends





Coin a new word for our astrology

கணியம் என்னும் சோதிடக் கலை தமிழருடைய தன்று என்று பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கூறுவார். அவர் இப்படிக் கூறியதற்குக் காரணம் பணபரம், ஆபோக்லீபம் முதலிய பதங்கள்  கிரேக்க மொழியினுடையவையாக இருந்தமைதான். சில அயற்சொற்களிருப்பதனாலேயே  எல்லாம் கடன் வாங்கியனவாக இருக்கும் என்ற முடிவு  ஏற்புடைத்தன்று.   ஒரு முடிவை நிலைநிறுத்த ஆதரவான  வேறு காரணங்களும்  தேவைப்படும். கோணுகோப்பிய என்ற கிரேக்கச் சொல்  கோண(ல்)  + கோப்பை என்ற தமிழ்ச்சொற்களின் இணைப்பில் உருவானதாகத் தெரியவில்லையோ? இஞ்சிவேர்  என்பது ஜிஞ்சர் வரை செல்லவில்லையா? அது நிற்க.

நிற்க  ஒரு  கலை என்றால்  அதற்கே சிறப்பாக உரிய சொற்களை உருவாக்க வேண்டியுள்ளது. சோதிடம் என்பதும் ஒரு கலை அன்றோ? இராசி என்ற சொல் பற்றாக இருக்குமிடம் என்று பொருள்படும் ராசி1 என்ற சொல்லுக்கு வழிவகுத்தது. இரு + ஆசு+ இ = இராசி ஆகிறது.  இராகு என்ற கோளின் பெயரைப் படைக்கையில்  இர் என்ற அடிச்சொல் முன் நிற்பது தெரிகிறது.   இர் >  இருள் ;  இர் + ஆகு =  இராகு.  இருளான அல்லது நிழற் கோள் என்பது பொருள்.   மதுரை என்பது மடுரை என்று ஆங்கிலத்தில் அழுத்தப் படுவதுபோல  கேடு  என்பது கேது ஆயிற்று.(a reverse corruption).  இதற்குக் காரணம் கேதுவும் ஒளி கெட்ட கோள்தான். கணியர் சிலர் 7 கோள்களையே வைத்து எதிர்காலம் கூறினர்.  சரியாகச் சொல்வதற்கு இன்னும்  இரண்டு கோள்கள் கணக்கில் வராமை கண்டவர்கள்,  அந்தக் கோள்களை வருவித்துகொண்டனர்.  ஆகவே ராகு கேது நிழற் கிரகங்கள் என்பர்.

இப்படிச் சொற்களைப் படைத்துக்கொண்டமை நோக்குங்கால், கணியம் தமிழரின் சொந்தக் கலையாகவே உறுதிப்படுகிறது.  இக்கலையில் சில மேற்பூச்சுகள் வெளிவரவாக  இருக்கக் கூடும்.

சரி,  இப்போது, ஒரு பயிற்சி செய்வோம்.

ஆடு என்பது தமிழ்ச் சொல்.  அதுகூட சமஸ்கிருதத்தில் ஆஜ என்று மாற்றமடைந்து வழங்குகிறது.

ஆடு என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் அதற்குப் பதிலாக  வேறு  ஒரு சொல் உருவாக்க வேண்டும்.   எப்படி?

ஆடு மே மே என்று கத்துகிறது.  ஆகவே மே என்பதைத் தலை எழுத்தாக்கிக் கொள்வோம்.
மே,   அப்புறம்  ஆடு என்பதில் உள்ள டு என்பதை எடுத்துக்கொள்வோம்.

மே+  டு =  மேடு ஆகிறது.

மேடு வேறு;  ஆடு வேறு ,மேடு இருக்குமிடத்தில் ஆடு  மேய்ந்தாலும்  இது மேலும் கவனிக்க வேண்டியதாகிறது.  தொடர்வோம்.

 இப்போது  அம் என்ற விகுதி சேர்ப்போம்.

மே+  டு+  அம் =  மேடம் ஆகிறது.

மேட இராசி என்பது பொருத்தமாக வந்துவிட்டது.

ஓர் எழுத்தை மாற்றினால்,.....

மேஷம் ஆக்கிவிடுவோம்.

ஆகவே ஓர் இராசிக்கு ஒரு சொல் கிடைத்துவிட்டது.

மகிழ்ச்சியாக ஆடுவோம்.  வெறும் ஆட்டை விட்ட நேரம்  மே மே என்று கத்தும்  ஆட்டைக்   கைக்கொண்டிருக்கிறோமே. அதற்காக!


edited.  will review.



வெள்ளி, 20 மே, 2016

பழக்கப்போன்மையும் பழம்பிறவியும் Deja vu and .....


நேற்றோ அதற்கு முந்தியோ நடந்தவைகளையும் அவை நடந்த இடங்களையும் நாம் நினைவு கூர்கிறோம்.  இந்த இடங்களில் நாம் உலவியது உண்மை; ஆனபடியால் அவை இப் பிறவியில் நாம் சென்ற இடங்கள்
முன்னர் நாம் சென்றிராத  இடங்களில் நாமிருக்கையில்  எப்போதோ அங்கிருந்ததாக மிக்கத் தெளிவான உறுதியான நினைவு ஏற்படுகின்றது.
உண்மையில் நாமங்கு சென்றதில்லை. எப்படி இந்தத் திறமாமான எண்ணம் உண்டாகின்றது?.

இதற்கும் உளநூலார் சில விளக்கங்களை அளிக்கிறார்கள் என்றாலும்
அது மன நிறைவு தருவதாக இல்லை..

சுவாமி விவகாநந்தரைக் கேட்டால்,  நீ முற்பிறவியில் அங்கிருந்ததற்கு அது சான்று என்பார்.

முற்பிறவி உண்டென்பதற்குப் புத்தமத அறிஞர்கள் பல ஆய்வுகளைச்
செய்து நிறுவியிருக்கின்றனர். இந் நூல்கள் ஆங்கிலத்தில் உள்ளன.

ஒருவற்கு எல்லாம் தெரிந்துவிட்டதென்று கூறுவது  மடமை ஆகும்.
ஆகவே அப்படித் தான் அனைத்தும் கண்டுவிட்டதாக எண்ணிக்கொண்டு முற்பிறவி இல்லை என்று வாதாடுவதும் தவறே.

இந்தியாவில் புத்த மதம் பயின்றவராகச்  சில மேலை ஆசிரியர்களால் கருதப்படும்  இயேசு பெருமானும்  முன் பிறவியில்  எலையஸ்  என்னும் இறைமுன்னுரைஞராய்  இருந்தார்  என்று  அவர்காலத்திலேயே  சிலர் கருதியுள்ளனர்.  Art thou Elias come again  என்று அவர் வினவப்பட்டார்.

விவிலிய நூலில் முன் பிறவிகள் பற்றிய குறிப்புகள் உள.  இவை ஆயும் நூலகளும் சில உள

இருக்கலாம் , இல்லாமலும் இருக்கலாம் என்பது அறிவுடைமை.

முற்பிறவி உண்டென்பதே எம் நூல் துருவல்களிலிருந்து யா ம்  அறிந்தது. நீங்கள் நம்பலாம், நம்பாமலும் இருக்கலாம்.  அதனால்  ஒன்றுமில்லை    இப்போது பழக்கப்போன்மை பற்றிய ஒரு கட்டுரையையும்   படித்தறிவோம். டித்தறியுங்களேன்.

https://www.psychologytoday.com/blog/ulterior-motives/201001/what-is-d-j-vu






வியாழன், 19 மே, 2016

சில் என்ற அடிச்சொல்


சில் என்ற அடிச்சொல் தமிழில் இன்னும் அறியக்கூடிய வகையில் இருக்கின்றது.

ஒரு கல்லை உடைக்கும்போது அதிலிருந்து ஒரு துண்டு பறந்துவந்து விழுந்தால்  ஒரு சில் வந்து விழுந்தது என்போம்..  இந்தச் சொல் இன்னும் வழக்கிலுள்ளது.

சில் என்பதிலிருந்து சிலாம்பு என்பது அமைகிறது.  இது சில்+ பு என்ற பகுதி  விகுதிக்கிடையில் ஆம் (அம்)   என்ற இடையீடு பெற்றது.

சில்> சில்+ ஆ,ம்+ பு =  சிலாம்பு.  

இது மீன் செதிளையும்  மரப்பொருக்கையும் குறித்தது.

இது சில் > சிலுக்கு  என்று  கு விகுதி பெற்றும் வரும். இடையில் ஒரு உகரச் சாரியை வந்தது.  மரப் பொருக்கையும்  அறுக்கும் வாளின் பல்லையும்  குறிக்கும்.    வேறு பொருள்களும் உள.

சில் > சிலும்பு என்றுமாகும். மரச் சிராம்பையும் குறிக்கும்.

சில் >  சில்லம்:    இது துண்டு என்றும் பொருள்படும்.

சில் > சில்லி என்றுமாகும். பொருள் துண்டு. பிற பொருளும் உள,

மரத்தைச் சில்லுகளாக   ( அதாவது மிக மிகச் சிறிய சில்லுகளாக
அரித்தெடுக்கும் கறையானுக்குச்  சில்லான் என்பர்.

சுள்ளான் என்ற மாதிரியில் அமைந்தது சில்லான்.


சில் > சில்லு என்றுமாம்.

சலித்தெடுக்கும்  வலைக்கண்கள் அமைந்த  கருவிக்குச் சில்லியடைஎன்பர். சல்லடை எனவும் படும்.

சில் >  சிலை.   சில்லுச் சில்லாய்   அடித்தெடுத்து   ஓர் உருவில் அமைவது.

சில் > சில்லி > சல்லி   ( உ - அ  திரிபு)     சல்லிக்கல்

செந்தமிழ் இயற்கை சிவணிய  நிலத்து வாழ்நர் இச் சில்  சொல்
மறப்பரோ?

To take over a State Administration

இன்னொரு கட்சி  ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஒரு மாநிலத்தை  நாம் எண்ணிகொண்டிருக்கும்  மற்றொரு கட்சி போய்  அக்கட்சியை அகற்றிவிட்டு  நிறுவாகத்தை  மேற்கொள்வதென்பது மிகுந்த கடினமான வேலை என்று சொல்ல வேண்டியுள்ளது .  அதிலும் அந்த நிறுவாகம் நட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தால் அதை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில்  செலுத்துவ தென்பது மிக மிகக் கடினமென்றுதான்   சொல்லத் தோன்றுகிறது .

புஷ் அரசிலிருந்து விலகும்போது  பொருளியல் நிலை நன்றாக இல்லை.  ஒபாமா அதை மேற்கொண்டபோது  அதற்கு  அவர்  பாடுபட  வேண்டியிருந்தது .

நடந்து முடிந்த தேர்தலுக்கு முன் கிடைத்த சில செய்திகளைப் பார்த்தால் தமிழ் நாடு  அரசு இப்படி நட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது என்று தெரிகிறது .
மற்றொரு கட்சி போய் அங்கு அமர்ந்தால் நிதி நிறுவாகத்தை  சரிப்படுத்த வேண்டிவரும்,  அதற்குப் பணம் வேண்டுமென்றால் கடன் வாங்க வேண்டும் அல்லது  வரிகளை உயர்த்த வேண்டும் அல்லது  வேறுவகைகளில் பணத்தைத் தேடவேண்டும்,

ஆகவே  மற்றொரு கட்சி வராமற் போனது  அந்த வராத கட்சிக்குத்  தலைவலி  குறைவு என்று சொல்லத் தோன்றுகிறது.   அந்த இடத்தில் போய்  அமராத காரணத்தினால்  அந்தச் சுமை இல்லையாகிவிட்டதன்றோ ?

இதில் வியப்பு என்னவென்றால்  அந்த  எரியும் நாற்காலியில் போய்  அமருவதற்கு  பல கட்சிகள் முண்டியடித்துக் கொண்டு  ஓடுவதுதான்.  ஏன்
இவர்கள்  ஓடுகிறார்கள் ?    ஆட்சி  முடிந்தபின்  இறங்கிவிடும்  நிலையில்  இதை ஏன்  செய்ய வில்லை  அதை ஏன் முடிக்கவில்லை  என்று
யாரும் கட்டிப்போட்டு  அடிப்பதில்லை !  அதனால் விரும்பி  அங்கு செல்ல முனைவோர்  அதிகமாகவே உள்ளனர் .

இதை அறிந்த மக்கள்  வெகு கவனமாகவே  அன்புமணி, விஜயகாந்த்  முதலியவர்களைத் தேர்வு செய்ய வில்லை என்று சொல்லப்படுகிறது.

 .
,


இனிதாகப் பணிவாகப் பேசு வானோ?

பன்றிகழு தைமாடு நாய்கள்  எல்லாம்
பாவமவை தம்விதியை நொந்த வண்ணம்
உண்டுகிடந்   துறங்குவன மாந்தர் தாமே
ஒழியாம லவைபெயரால் திட்டு வார்கள்
பண்டுமுதல் இன்றுபயின் றோங்கு மாந்தன்
பண்பட்டு மாறிடினும்  மாற வில்லை!
என்றவற்றை இழுக்காமல் நன்று கற்றே
இனிதாகப் பணிவாகப் பேசு வானோ?



Did you say ‘pigs ’.............? 

https://sg.news.yahoo.com/did-pigs-dap-guan-eng-asks-hadi-063300534.html

புதன், 18 மே, 2016

வெள்ளத்தின் சீற்றம்

வெள்ளத்தின் சீற்றம் விலக்கற்கு நீர்தங்கும்
பள்ளங்கள்  குட்டை குளங்களோ  டேரிகளை
மெள்ளத்தூர் வாரித்தான்   மேன்மை புகுத்திடின்
எள்ளனைத்தும்  வாரா  திடர்.

தெரிந்தும் இதற்குத் தெருள்தீர்  வதனைப் 
புரிந்து முடிக்காமல் புண்ணியமொன் றில்லை 
வரிந்துகட்டு  வல்லேசெய்  வான்விரைசே  வைமற்
றெரிந்துபடும் துன்பம் எலாம்.       

சி. போ.10 சிவம் ஆன்மா பாகுபாடு

Read last post and continue:




எங்குமிருக்கிறது எனப்படும் சிவம் தானே என்ற உள்ளூணர்வு ஏற்படுதல் வேண்டும், தானே என்ற பதம் ஆன்மா என்பதை மறத்தல் ஆகாது. இங்ஙனம் சொல்லாலும் எண்ணத்தாலும் அறிந்த நிலை கடந்து சிவம் ஆன்மாவாகிய தானே என்கையில் ஏற்படும் காணுதலே ஆன்ம தரிசனம் என்பதாகும்.

இங்ஙனம் நடைபெற்றாலும், ஆன்மா ஓரிடத்திலேயே (உடம்பினுள்ளேயே) இருக்கிறது என்ற ஒரு வரம்பு அளாவிய எண்ணம் நீங்கிவிடுவதில்லை. இது நீங்குவதாயின் சிவமாகிய தான் (ஆன்மா) எங்குமிருக்கிறது என்று உள்ளத்துள் நிலைநாட்டிக்கொள்ள வேண்டும். இது சாதனை ஆகும். இங்ஙனம் நடைபெறவே, சிவத்துக்கும் ஆன்மாவிற்கும் இடை நிற்கும் பாகுபாடு முற்றுப்பெறும். அபேதம் சித்திக்கும்.



மேலும் சிவத்தின் ஆன்மாவுடன் கூடிய முழுமுதன்மை சுட்டி அறியத்தக்கதன்ன்று. சுட்டாது உள்ளுணர்வோடிருக்க, பாகுபாடின்மை திறம்பெறும்.




சி.போ,10 அவன், தான், தத்வமசி

அவனே தானே  ஆகிய அந்நெறி
ஏகன் ஆகி இறைபணி நிற்க‌
மலமாயை தன்னொடு வல்வினை இன்றே

‍=======  சிவஞான போதம் பாடல் 10

இதன் பொருளாவது:

அவனே ‍‍-  சிவமே;   தானே ‍-  ஆன்மாவாய்;  
ஆகிய ‍ - ஒன்றுபட்டிருக்கும் , 
அந்நெறி ஏகன் ஆகி  -  அந்தப் போக்கிலே 
இரண்டற்ற நிலை அடைந்து; 
இறைபணி நிற்க ‍-  இறைவனின் செயலாய் 
மாறாமை அடைய; 
மல மாயை தன்னொடு - மலம், மாயை
ஆகியவற்றுடன் கூடிய; 
வல்வினை இன்றே  -  கர்மவினையும் ஆகிய
மூன்றும்  இல்லையாய் ஒழியும்.




சிவமும் ஆன்மாவும் ஒன்றுபடுதற்கு,  இரண்டு மாறுபாடுகள் நீங்குதல் வேண்டும்; 
ஒன்று யானே இயற்றுவோன் என்னும் எண்ணம்;  இன்னொன்று யானே 
எல்லாப் பயன்களையும் அடைவோன் என்னும் எண்ணம்,  இவை இரண்டும்
மாறுகோள் ஆதலின் நீங்கினாலே சிவம் தான் ஆகும்.  எல்லாவற்றையும் 
இயற்றுபவன் அவனே.   எல்லாவற்றின் பயனும் அவனுக்கே ஆம்.
ஊனக்கண்ணால் சிவம் (இறை ) தான் (ஆன்மா)  ஆன இரண்டும் வேறு வேறு 
என்றுதான் காண முடிகிறது. ஞானக் கண்ணால் மட்டுமே  இவை இரண்டும்
வேறுபாடோ பாகுபாடோ அற்ற ஒன்றேதான் என்பதைக் கண்டறிய இயலும். 
இதை " அவனே தானே ஆகிய  அந்நெறி ஏகனாகி"  என்னும் தொடர் விளக்குகிறது. 

"தத்துவமசி"  என்னும் பெருமொழி இதனையே நன்கு எடுத்தொளிரச் 
செய்வது ஆகும்.  

இதைத் தமிழால் பொருள்கூறின்,  தன் + து+  அம் +  அசி > தத் + து+ அம் + அசி > 
தத்துவமசி ஆகும்.  தன் என்பது த என்று கடைக்குறைந்து,  து என்ற 
விகுதியுடன் புணர்ந்தது பின் தத்து ஆனது. .  அழி என்பது அசி என்று திரியும்.
அதாவது தான் என்பதை அழித்தல் ஆகும்,  தான் அழிய, அவன் வேறு 
தான் வேறு  அல்ல எனற்பாலது பெறப்படும்.

இது சந்தோக்கிய உபநிடதத்திலும் கூறப்படுவதாகும்.
 Chandogya Upanishad 6.8.7  சமதகிருதத்தில் இது பல்வேறு 
வகைகளில் விளக்கப்படுவது ஆகும்.





will edit   There is some software error in this post which cannot be cleared at the moment.

செவ்வாய், 17 மே, 2016

செருப்பணிந்து கோவில் செல்லுதல்


செருப்பை அணிந்தொரு கோயிலிற் சென்றால்  இறைவனையே
மறுப்பதற் கொத்தல் செருப்பினைக் கள்வார் எனக்கவன்றே
இருப்ப திதுமனம் கொள்வாய் இதற்கணி யாதுசென்றால்
இழப்பதொன் றில்லையொண் பாதங்கள் மட்டுமே எண்ணினையே.


செருப்பை அணிந்து ஒரு  கோயிலிற் சென்றால்  --  காலணிகளை  அணிந்துகொண்டு ஓர்  ஆலயத்திற்குப்  போனால் ;

செருப்பினைக் கள்வார்  என  =  (வெளியிற் போட்ட ) செருப்பினை யாராவது திருடிவிடுவார்கள்  என்று ;

கவன்றே இருப்பது  -   கவலையோடே  உள்ளே அமர்ந்திருப்பது;

இறைவனையே மறுப்பதற்கு  ஒத்தல் -   கடவுளையே இல்லை யென்று  சொல்வதற்கு  ஒப்பாகும்;  (  காரணம் இறைப்பற்றில்  ஈடுபடாதிருந்தமை ;)

இது மனம் கொள்வாய்  - இதைப் புரிந்து கொள்வாயாக;

இதற்கு-   இப்படிச் செய்யாமல் ;

செருப்பு  அணியாது சென்றால்  -    செருப்பே போடாமல் போனால்;

இழப்பதொன்றில்லை  -   நீ  அடைந்த நட்டம் ஒன்றுமில்லை;


ஒண்பாதங்கள் மட்டும் எண்ணினையே -    செருப்புக் கவலை ஒழிந்து  இறைவன்  பாதங்களை மட்டுமே  உன் எண்ணத்தில்  நிறுத்தி  நீ  வெற்றி கண்ட காரணத்தினால்.

என்றபடி 

.A GIFT OF LOVE FOR POPE'S WORKERS

கட்டளைக் கலித்துறை


பெற்றவை முட்டைகள் பெற்றியர்  அப்பனார்   தம்முளத்தே
உற்ற மகிழ்வினில் உண்டன ரோவெனின் உண்ணவில்லை
நற்றவத் தண்ணலர்  வீட்டின் நலம்பெறு  ஊழியர்கள்
முற்றும் மிசையக் கொடுத்தனர்  மூண்ட த‌ருட்கொடையே.


அப்பனார்  :   போப்பாண்டவர்
நற்றவத்தண்ணலர்  :   அவரிடத்தே ஊழியராய் வேலைபார்க்கத்தவர்கள்; :  அது மேலைத் தவத்தினால் என்பது குறிப்பு.
மிசைய  =  உண்ண
மூண்டது :  உண்டானது

\

ஞாயிறு, 15 மே, 2016

A great act in diplomacy

சுகத்து லாந்தில் சொந்தக் கோழிகள்  இட்டமுட்டை
அகத்தி லன்பின் கொடையாய்  மேதிரு வப்பருக்கே
தகைத்த கும்முடி  அரசி  எலிசபெத்  தந்தநலம்
நிகர்த்த  அரச நல்லுற வாவதோர் நிகழ்விலையே .

அரும்பதவுரை: 

சுகத்து லாந்தில்  -  in Scotland
மேதிரு வப்பருக்கே -   Most Holy Father the Pope as he is most of the time addressed/\
தகைத்த  கும் முடி   =  தகைத்தகும்  முடி.    தகை -  மேன்மை ;  தகும் -  தகுந்த 
இது ஒரு மீமிசைச் சொல்லாட்சி.  மிக்க மேன்மை பொருந்திய என்று கொள்க. 

இது  ஒரு கலித்துறைப் பாட்டு.  பெரிதும்  ஆசிரியத் தளையால் ஆனது.


சொல் : அர்த்த நாரீஸ்வரர்.

  அர்த்த நாரீஸ்வரர். அமைந்த விதம்:


அர்த்த    பொருள்:  பாதி .    மூலம்:   அறுத்த.

(  அரை என்று பொருள்படும் பாதி என்ற சொல்லும்  பகு >  பகுதி > பாதி  என்று வந்ததுதான் . இதற்கு அரை என்ற பொருள் வரக் காரணம் மக்கள் பேச்சு வழக்கு, )

நாரி   பொருள்:  பெண்.

நர்  >  நருள் ;   நர் >  நரன்;   நர்  >  நாரி  (  முதனிலை நீண்டது )

இறைவர் >    இஸ்வர்  >  ஈஸ்வர்
முதனிலை  நீண்டது.
றை  என்பது  ஸ்  என்பதற்கு வழிவிட்டது.

ஆம்  புதிய சொல் பிறந்தது.   மகிழ்வோம் .

இவை பிறரும் முன் அறிந்தவைதாம்.  

Marathi is not derived from Sanskrit

For your reading pleasure to enhance your linguistic knowledge:

Marathi language has not originated from Sanskrit’

Twenty five languages are spoken across Maharashtra, not one of them have originated from Sanskrit, he added.

- See more at: http://indianexpress.com/article/cities/mumbai/marathi-language-has-not-originated-from-sanskrit/#sthash.23xs3XT6.dpufhttp://indianexpress.com/article/cities/mumbai/marathi-language-has-not-originated-from-sanskrit/


http://indianexpress.com/article/cities/mumbai/marathi-language-has-not-originated-from-sanskrit/


Researchers also have come to the view that Sindi is apparently close to Tamil  and may have derived from it. This was posted by me some time back. It may be available here. I  will provide ref when it becomes available.