வியாழன், 30 ஜூன், 2016

தீதும் உளதே

இரண்டாம் தலைமுறைக் கைப்பேசி  களைக‌,
மூன்றாம் நான்காம்  தலைமுறை கொள்வாய்
திரண்ட நலம்பல தேர்ந்திடும்  உனக்கே
முரண்டு செய்யாமல் இதற்கினி இணங்கே.

என்கிற படிதொலைத் தொடர்புக் குழும்புகள்
எழுச்சிப் பரப்புரை இசைத்திடல் கண்டோம்.
நன்கிது யாமும் எண்ணிடும் பொழுதினில்
நயப்பது நாற்புறம் வினாவெனும் விழுதுகள் /

புதிய தலைமுறைப் பேசிகள் வாங்கிடப்
புரப்பவர் பணத்தினை யாரிது காண்கிலம்
நிதியே நிற்க,  கரந்துறை மென்பொருள்
நின்று குலைத்திடும் தளம்பல இவற்றுள்.

மூன்றாம் நான்காம் தலைமுறைப் பேசி
முயன்று யாம்பெற நன்மைகள் பலவே
ஆன்ற அறிவுரை:  அணிபெறு இவற்றில்
அடைதகு நலத்தொடு தீதும் உளதே .

மக்கள் தொண்டினில் மூழ்குபவர்

அரசுப் பதவியில் இருந்தாலும்
அதிலும் துன்பம் பலப்பலவாம்.
குறைச்ச விலையில் எதையாரும்
குற்றம் கொடுப்பக் கொள்வதுவாம்,

இருந்திட வீடொரு முதற்பொருளே
என்றுமே இருப்பதோ வாடகைக்கு?
தகுந்ததைப் பார்த்து வாங்குகையில்
தருவிலை தீதடி தட்டுதலே.

சந்தை விலையின் தாழ்ந்ததனை
சட்டென வாங்கிப் போட்டிடிலோ
குந்தக முய்க்கும் அதுபிறகே
குலைத்திடும் நிற்கும் நிலைதனையே.

மன்றம் முறையே பகர்கையிலே
முற்றும் விடுவித் தசத்திடினும்
இன்றும் நாளையும் நினைவகல
என்றும் துணையாய் இசைத்திடுமோ?

மக்கள் தொண்டினில் மூழ்குபவர்
மாநில மிசையே வாழ்பொழுதில்
தக்கது யாண்டும் செய்திடுக!
தயங்கா மனக்கட் டுய்வுறுவீர்.

திங்கள், 27 ஜூன், 2016

வயோதிகன்.


கிழவன் என்ற சொல் இருக்கும்போது வயோதிகன் என்னும் சொல் ஏன்
தேவைப்பட்டது என்ற கேள்வி எழலாம். கிழவன் என்பது நாளடைவில் சற்று பணிவுக்குறைவானதாகத் தென்பட்டிருக்கலாம். கிழடன், கிழம், கிழடு, என்பனவும் இவற்றினின்று விளைந்த பிற தொடர்களும் முதியோரின்
ஆளுமையை இளைஞர் வெறுத்திருக்கக் கூடுமென்று காட்டுகின்றன. நாளடைவில் மூத்தோர் தம் மேலாண்மையை இழக்கவே, அவர்களின் மதியுரைகள் புறந்தள்ளப்பட்டிருக்க்க் கூடும். கம்பனின் அறிவுரையை அம்பிகாபதி கேட்கவில்லை, அரசன்மகளை விட்டு நீங்கவும் இல்லை, அதனால் அவன் மரணதண்டனைக்கு ஆளானான் என்பது போலும் கதைகள், மூத்தோரை இளையவர்கள் புறந்தள்ளியமையைத்தான் காட்டுகின் றன . மேலும் உவச்ச்ர் குலத்தவனுக்கு அரசர் குலம் பெண் கொடுக்க ஒருப்படவில்லை என்பதும் தெளிவானது.

இதுபோலும் குமுகச் சூழல்களால் கிழவன் என்ற சொல்லுக்கு ஈடாக வயோதிகன் என்ற சொல் தேவைப்பட்டிருக்கலாம்.

காலத்தின் வயப்படுவதே வயது என்பது. கால ஓட்டத்தில் அகப்படும் நிலையே அகவை. வயம் > வய > வயது. இங்கு வய என்பது அடிச்சொல். காவலனின் கைபட்ட நிலை கைது இதில் து என்பது விகுதி. கால அளவின் வயப்பட்ட நிலை வயது இங்கும் து என்பது விகுதி.

வய + அதிகன் = வயோதிகன் ஆகிறது.
வய + அதிகம் = வயோதிகம்.

இது இங்ஙனம் விளக்கமுற்றாலும், வய + அ என்பது வயோ என்று மாறியது தமிழ் மரபன்று என்பதே இதிலுள்ள மறுப்பு.    அன்றாயினும்,
தமிழ் மூலங்களைப் பயன்படுத்தி விளைந்த சொல்லே இதுவாகும். அதிகன் என்பது ஓதிகன் என்று நீண்டது குலைவு என்பதாம். ஆயின்  சங்கதத்தில்  அது இயல்பு  ஆகும் .

இந்தோ ஐரோப்பிய மொழிகட்கும் இது இயல்பே ஆகும்,   ஆங்கிலத்தில் politico-economics என்ற பதத்தை எடுத்துக்காட்டலாம்.  முன்னொட்டாக வருங்கால் politico என்று  நீண்டுவிடுகிறது.  மனுவின் நூல் என்னாமல் மானவ ஸாகித்யம் என்றால் மனு என்ற சொல் நீட்சி பெறுகிறது. இது தத்திதாந்தம் என்ற 1சந்திமுறையுட் படும். அர அர என்பது அரோஹர என்று வருவதும் இவ்வகையே.  அர்  என்பது இறைமை குறிக்கும் ஓர்  ஒலிக்குறிப்பு,   அர்  > அரன்\. 1 அர் >  அரி  (ஹரி ).  தமிழிலும் இவை போல்வன உண்டு.  காலாகாலத்தில் திருமணம் செய்துகொள்;  வேளா வேளைக்குத் தின்றுவிட்டுத் தூங்குகிறான்  என்பன காண்க.  இவை    தமிழ்ப் பேச்சு வழக்கை ஆராய்ந்து எடுக்கப்பட்டு அதினின்று நிறைவு செய்யப்பட்டு இந்தோ ஐரோப்பியத்தில் இப்போது தனிவளர்ச்சி பெற்றுப் பெருவழக்காகி விட்டது.

ஆகாரம்  ஓகாரம் ஒன்றிற்கு ஒன்று  ஈடாக நிற்குமிடங்களும் உள .


----------------------------------------------
1  அரித்தல் என்ற வினையினின்று பிறந்ததென்பர் மறைமலையடிகள்.
அரித்தலாவது, தீவினைகளை அரித்தெடுத்து விலக்குதல்.

தரா தரம்;  பிள்ளையோ  பிள்ளை .   ஆய்க . தமிழில் பெரும்பாலும் இரட்டித்து  வரும்   சொற்றொடர்களில் சொல்லிடையில்  வரும்.



========================================================================
It appears that a third party add-on is causing some interference and disruptions resulting in  some posts to disappear and others to be duplicated/  This matter is being looked into.  Apologies/



இராமன் திராவிட பரம்பரையினன் என்பதா?

எனக்கு அளிக்கும் வரம், எம்பிராட்டி! நின்

மனக் களிக்கு மற்று உன்னை அம் மானவன் -

தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ? -

புனக் களிக் குல மா மயில் போன்றுளாய்!'  கம்பன் 9931


புனத்தில் ஆடிக் களிக்கும் அழகிய குலம்   சிறந்த   ஈடற்ற மயில்போலும் பெண்ணாய்!
உன் மனம் களிக்க உன்னை மனுவின் பின்னோன்  ஆகிய  இராமனிடம் சேர்க்கும் பணியின் மேலான வேறு பணியும் உளதோ?

இவ்விராமாயணச் செய்யுளில் இராமன் மனுவின் சந்ததி என்பபடுவதாகவும் கூறுவர்/  மனு திராவிட அரசன் என்கிறது மனு நூல்.  அப்படியானால் இராமன் திராவிட பரம்பரையினன் என்பதா?

மனு >  மனு + அவன்  =  மானவன்   :  மனுவின் பின்னோன்

மானவன்  :  மானமுடையோன்  என்றலுமாம் ,

உச்சுக் கொட்டுதல்

continued from:-

https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_27.html

சிறு குழந்தைகளைக்    கொஞ்சம்  நீண்ட தூரப் பயணமாகத் தூக்கிக்கொண்டு செல்லவேண்டுமானால் பாதிவழியில் அவை கழிவை வெளிப்படுத்திவிடாமல் இருக்கத்  தாய்மார்கள் (முன்கூட்டியே வெளிப்படுத்த) ஒரு தந்திரம் செய்வர். உச்சு உச்சு உச்சு  (அல்லது உஸ்  உஸ்  உஸ் ) என்று வாயினால் ஊதுவர். இது காதில் விழவே குழந்தைகள் தம் கழிவை வெளிப்படுத்திவிடும், இப்படிச் செய்து வழியில் உண்டாகும் இடர்களை த் தவிர்த்துக்கொள்வர்.  இந்த உச்சு உச்சுவும் "உச்சர் " என்றே சங்கதத்தில் வரும். சமஸ்கிருதப் பண்டிதர்கள் உச்சர் என்பதற்கு மலங்கழித்தல் சிறு நீர் கழித்தல் எனு ம் பொருளை அகரவரிசையில் பதிவு செய்து கொண்டனர். உச்சு உச்சு என்பது ஓர் ஒலிக்குறிப்பு. கழிவுறுத்தல் என்ற பொருளில் வரும்போது இது பலமொழிகட்கும் உரிய சொல் எனலாம்.( பொதுச் சொல்)  .தூங்குவோனை எழுப்புதலுக்கும் உசுப்புதல் என்ற சொல் வரும்போது அதுவும் ஒலிக்குறிப்பினடிப்படையில் எழுந்ததே.

உச்சுக் கொட்டுதல் என்பதும் ஒலி  எழுப்புதலே ஆகும்,

இவை உச்சரித்தல் என்பதோடு  ஒருவகையில் தொடர்புடையவை.   சுட்டொலியாகவும்  ஒப்பொலியாகவும்  இருபுடைப் பொருத்தம் உள்ளவை .

Edited.  But text may change owing to interference by 3rd party.  A review will be done later. 


உச்சரிப்பு.

‍‍‍முதலில் உச்சரிப்பு தமிழா என்போர் உண்டு. உச்சரிப்பதென்பது தொன்று தொட்டு பேச்சு மொழியில் வழங்கிவரும் சொல் என்றே தெரிகிறது. இது சங்கதமொழியிலும் இருக்கிறது. உடலிலிருந்து வெளிப்படுத்துதல் என்பதே இச்சொல்லின் பொருளாதலின், மலங்
கழித்தல் உட்பட விரிந்த பொருளுடையதாய் உள்ளது. தமிழில் இது
நாவினால் ஒலித்தல் என்ற பொருளே உடையதாய் ஆளப்படுகிறது.

இதை நுணுகி ஆய்வோம். சரிதல் என்பதன் பிறவினை சரித்தல். சரிதலாவது சாய்வாக வீழ்தல். மலை சரிந்துவிட்டது, மண்சரிவில் சிக்கி மாண்டனர் என்றெல்லாம் வழக்கு இருப்பதை அறிவோம். சரித்தல் ‍ சாய்வாய் விழும்படி செய்தல்.

உச்சரித்தல் என்பதில் முன் ஓர் உ அல்லது உகரம் உள்ளது, இந்த உகரம் ஒரு சுட்டு. முன்வந்து விழுதல் என்பது தோன்ற உகரம் வருகிறது. சமஸ்கிருதம் என்றும் பேச்சுமொழியாய் எங்கும் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆரியர் என்போரும் சிறந்தோர், அறிந்தோர் என்ற பொருளில் வருதலன்றி ஓர் இனப்பெயராய் வருவதில்லை. பேச்சில்லாத இலக்கிய மொழியில் சுட்டுதல் தோன்றியதென்பதினும் அவை பேச்சுமொழியான தமிழில் தோன்றியதென்பதே பொருத்தமுடையதாம். .இடங்களில் நடமாடுவோரே அங்குமிங்கும் சுட்டிப்பேசுவர். இதனால்தான் சுட்டுக்கருத்துகளைத் தமிழில் எடுத்துக் காட்ட முடிகிறது.

சமஸ்கிருதம் சந்த அசை மொழியாக முன் அறியப்பட்டது. அதனால் அதன் முந்துபெயர் சந்தாசா அல்லது சந்தசைவு. அதாவது சந்தம் வெளிப்பட வாயை அசைக்கப் பயன்பட்ட மொழி. மொழி என்பதைவிட அதனை அசைகளின் தொகுப்பறை எனலாம். இன்ன கூட்டத்தார் பேசிய மொழி என்றில்லை. இன்று இதில் மந்திரம் பலுக்குவோரும் பல்வேறு தாய்மொழியினர்; கூட்டத்தினர். மங்கோலியப் பரம்பரையில் வந்தோர்கூட உள்ளனர் என்று அறிக.

பிராமணருள் பல சாதியாரும் பல மொழியினரும் பல நிறச்சாயல் உடையோரும் உள்ளனர். சமஸ்கிருதம் அவர்களின் அலுவல் மொழி.

தொடக்கத்தில் இதில் இலக்கியங்கள் படைத்தோர் ‍ வால்மிகி: தாழ்ந்த சாதியினன். ( அப்போது அவர்கள் சாதி உயர்ந்ததாய் இருந்திருக்கலாம், அல்லது சாதிகள் வரையறைப் படாமல் இருந்துமிருக்கலாம்.) வேதவியாசன் ‍ ( இது இவன் இயற்பெயரன்று, காரணப் பெயரே) மீனவன்; வேதங்களில் உள்ள பல பாடல் பாடியோரும் உயர்சாதியினர் அல்லர். இவர்களைப் பிராமணர் என்பது அவர்கள் பிரம்மத்தை உணர்ந்தவர்கள் என்பதனால். பிறப்பில் வந்த சாதியால் அன்று. பாணினி என்னும் சங்கத இலக்கணம் பாடியோன் ஒரு பாணன், அவன் பெயரும் காரணப் பெயரே. பாண் என்ற சொல்லோ பாணத் தொழிலைக் குறிப்பது. இசைஞர்களான பாணர் பெரும் புலவராயிருந்தனர். சாணான் ஆகிய சாணக்கியனும் பிராமணன் அல்லன், ஆனால் பிராமணன், அது பிரம்மத்தை உணர்ந்ததனால்.

துணைக்கண்ட முழுதும் பேசப்பட்ட தமிழ், பல்வேறு திரிபுகளை அடைந்தமை சொல்லித் தெரியவேண்டாதது. சமஸ்கிருதத்தில் உள்ள மூன்றில் ஒரு பங்கு சொற்கள் தமிழ் அல்லது திராவிடத் திரிபுகள். இன்னும் ஒரு பங்கு, திராவிடச் சொற்களோ என்று ஐயுறத் தக்கவை.
இறுதி ஒரு பங்கு ஏனை இந்தோ ஐரோப்பியச் சொற்களோடு தொடர்புற்றவை. இவ்விறுதி இரு தொகுதிகளிலும் தமிழ் மூலங்கள் இல்லை என்பது இதன் பொருளன்று. சமஸ்கிருதச் சொற்றொகுதி, தமிழிலிருந்தும் ஏனைப் பாகதங்களிலிருந்தும் கல்லி எடுக்கப்பட்ட தொகுதி என்பதறிக. அப்படித்தான் அது நன்றாகச் செய்யப்பட்டது.

சமஸ்கிருதத்தில் ஏன் தாழ்த்தப்பட்டோர் எழுதியவை முந்து நூல்களாய் உள்ளன என்பதை ஆய்ந்தறிந்தால், அது ஆரிய மொழி, வெளியிலிருந்து வந்தது என்பது ஆட்டங்கண்டுவிடும். \\

அதனால்  உச்சரித்தல் என்பது  எப்படி வந்த சொல்  என்பதே கேள்வி . முன் சரிந்து வந்து  வீ ழ்ந்ததே ஒலி, அதுதான்  உச்சரிப்பு.

continued at : https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_58.html







ஞாயிறு, 26 ஜூன், 2016

duplicated error post.

இணையம் வழியாய் பணமே திருட‌
 எத்தனை எத்தனை மூயற்சி!
நினையும் பொழுதில் பனைபோல் உயரும்
 புள்ளிகள் வரைதரு நுவற்சி!

இவர்களைத் தடுக்க இயன்றிடிற் பிடிக்க‌
 இதுவரைத் திறத்தவர்  இலரோ?
"தவறுகள் தவிர்த்து விழிப்பொடும் உயர்த்து"
 தந்தசெம் மதியுரை நமக்கு.

ஏய்ப்பதும் எளிதே!   ஏய்படல் கடந்தே
 வாய்ப்பது தான்மிகக் கடினம்.
காய்ப்புறு மரத்தில் கல்லடி காக்கும்
 கலைவர வேண்டும்நம் கையில்.

இனிமேல் இருந்தென் கணக்கது கண்ணால்
 கழுகெனக் கணினியில் உழுதே
கனிபறித் தனரோ கவிழ்ந்தயர்ந் தனரோ
  கள்வர்கள் காண்பம் இல்  பழுதே!.  

இணையம் வழி பணம் திருட‌.....

இணையம் வழியாய்ப்  பணமே திருட‌
 எத்தனை எத்தனை முயற்சி!#
நினையும் பொழுதில் பனைபோல் உயரும்
 புள்ளிகள் வரைதரு நுவற்சி!

இவர்களைத் தடுக்க இயன்றிடிற் பிடிக்க‌
 இதுவரைத் திறத்தவர்  இலரோ?
:"தவறுகள் தவிர்த்து விழிப்பொடும் உயர்த்து:"
 தந்தசெம் மதியுரை நமக்கு.

ஏய்ப்பதும் எளிதே!   ஏய்படல் கடந்தே
 வாய்ப்பது தான்மிகக் கடினம்.
காய்ப்புறு மரத்தில் கல்லடி காக்கும்
 கலைவர வேண்டும்நம் கையில்.

இனிமேல் இருந்தென் கணக்கது கண்ணால்
 கழுகெனக் கணினியில் உழுதே
கனிபறித் தனரோ கவிழ்ந்தயர்ந் தனரோ
  கள்வர்கள் காண்பம் இல்  பழுதே!.


திருத்தம்: 

#மூயற்சி திருத்தம் முயற்சி.

சனி, 25 ஜூன், 2016

சிவ- போத 11ம் பாடல்

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அவன்கழல் செலுமே.

இது சிவஞான போதத்தின் பதினோராம் பாடல்.
முதலில் இப்பாடலின் பொருளினைப் புரிந்துகொள்வோம்.

காணும் கண்ணுக்கு ‍: காண்பதற்கு ஏற்ற நிலையை அடைந்துவிட்ட விழிகட்கு;

காட்டும் உளம்போல் : காணுதற்கு உரியதைக் காட்டும் ஆன்மாவைப் போல;

காண உள்ளத்தை : காண முயலும்போது காணுதற்கு என்றும் உள்ளதாகிய சிவத்தை;

கண்டு : தானேயாகக் காட்சி பெற்று;

காட்டலின் : காணும்படி காட்டின காரணத்தால்;

அயரா அன்பின் : சோர்வு இல்லாத அன்பினால் அல்லது பற்றுக்கொண்டு;

அரன்கழல் செலுமே: சிவத்தினிடம் சென்று சேர்தல் கூடும்.


இங்கு உளம் அல்லது உள்ளம் என்பது உடலின் உள் நிற்கும் ஆன்மா
என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது என்பதறிக. உள்ளம் என்பது இடைக்குறைந்து உளம் ஆயிற்று. ஆன்மா இல்லாத வெற்றுடலில் கண்கள் இருப்பினும் அவை காணும் தகுதி அற்றவை. கண் ஒன்றைக் காண, அதை அக்கண்களுக்கு விளக்கி இது இன்ன பொருள் அல்லது இத்தன்மைத்து என்று காட்டுவது உள்ளிருக்கும் ஆன்மாவே ஆகும். இதையே "காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்" என்றார் போதத்தின் ஆசிரியர்.


வீடு எதையும் அறிவதில்லை; அதனுள் வாழும் மாந்தனே வீட்டினுள் யார் வந்தார் யார் சென்றார் எது இருக்கின்றது என்று அறிவதைப் போலவே உடலும் ஆன்மாவும் ஆகும்.


காணுமுள் ளத்தைக் கண்டு காட்டலின் : இந்த அடியில், வரும் சீர்களை, கா/ணுமுள் .. ளத்/தைக்....கண்/டு.... காட்/டலின் என்று பிரித்துப் பார்த்தால், உள்ளதை என்ற சொல் உள்ளத்தை என்று வந்தாலே பாட்டின் அடி நான்கு சீர்களாய் நிறைவு பெறும் என்பதால்
உள்ளதை என்பது உள்ளத்தை என்று ஒரு தகர ஒற்று மிகுந்து வந்தது.
இதனை வகையுளி செய்து அறிந்துகொள்க. உள்ளது என்பது என்றும் எங்கும் உள்ளதாகிய சிவத்தை. சிவமில்லாத இடமொன்றில்லை. சிவம் இல்லாத காலமொன்றில்லை. ஆதலின் உள்ளது சிவம் ஆகும்.
ஐ வேற்றுமை உருபு.


இறையன்பில் தொய்வு இன்றி நிற்றல் வேண்டுமென்பார், அயரா அன்பின் என்றார். சோர்வின்றி, இடையீடின்றி சிவத்தைப் பற்றி நிற்க வேண்டும். அப்போதுதான் சிவத்தை அடைதல் சித்திக்கும் ,

அவன் கழல் ‍: இறைவன் திருவடிகள்.

செலுமே: செல்லுவான் என்பது.

இறைவன் -  அதாவது  சிவம்,  எங்கும் நிறைந்தது;  இதனை  வியாபித்திருக்கிறது என்பர். வியன் -   விரிவு.   விய >  வியாபித்தல். ஆன்மா உடையோன்  அதனைக் காணலாம்.  பற்று வளர்ந்து முற்றிட வேண்டும். முற்று >  முத்து >  முத்தி .  இது திரிந்து முக்தி ஆகும்.  முது > முத்து >  முத்தி > முக்தி  எனினுமாம் .  பற்றுமுதிர்வே  முத்தி . சீவர்கள்  அல்லது ஆன்மாவுடன்  கூடி  நிற்போர்   முத்தி    பெறுதல்  -  சீவன்முத்தி  ஆகும்.  ஜீவன்முக்தி என்றும் சொல்வர்  ஒருவன் தன்னை அதற்குத் தகுதிப் படுத்திக்  கொள்வது  பற்று முதிர்வினாலேயாம். இதன் பின்பே கண்கள் காண்பன வாகும் . 






வெள்ளி, 24 ஜூன், 2016

ராகம் என்ற சொல்

இன்னிசை  பாடுதல் ஓர் அரிய திறன் என்று பண்டை மக்கள் கருதினர் என்பதை, ராகம் என்ற சொல் நமக்குத் தெரிவிக்கிறது.இப்படிச் சொல்லமைபு 1ஆய்வறிஞர் பல உண்மைகளை அறிந்து கூறலாம்.  இதன் மூலம் பண்டைக் கருத்தமைதிகளை நாம் உணர முடியும்.

பாடறிவு2 ஓர் அரிய திறனாதலின், இக்கருத்திலிருந்தே அதற்குரிய சொல்லையும் அமைத்தது நல்லறிவே ஆகும்,

அரு + ஆகு+  அம் =  அராகம்.

அரு + இ = அரி(து)  எனல்போலவே  அரு+ ஆ = அரா (கு, அம்) ஆகுமென்பது அறிதல் வேண்டும்.

இது முற்காலத்தில் கலிப்பாவின் ஓர் உறுப்பாக இருந்தது.  கலிப்பாவின் முன் பகுதிகளை வேறு பாணியில் பாடி, அராகம் என்ற உறுப்பின் இடத்திற்கு வந்தவுடன் இன்னொரு விதமாக இனிமை தோன்றப் பாடுவர் என்று தெரிகிறது,  அவர்கள் பாடிய   பதிவுகள்  இப்போது இல்லாமல் போனது நம் பாக்கியக்குறைவே ஆகும். அதாவது கெடுபேறு ஆம்.

அரங்கன் என்ற சொல்   இடைக்குறைந்து  ரங்கள் என்று நின்றது போலவே அராகமும் ராகமாகி  இசைவிதம் குறிக்க வழங்கப்படுகிறது.

முத்தமிழில் இசைக்கலை ஒழிந்து, அதன் சிதறல்கள் இன்னும் நம்மிடைக் குமிழ்த்துக்கொண்டுள்ளன.

குறிப்புகள்:

1சொல்லமைபு   -  சொற்கலை .  சொல்லமைப்பு -   ஒரு சொல் அமைந்துள்ள விதம்,   தமிழ்ச் சொல்லமைபு  என்பது  வேங்கடராஜலு  ரெட்டியார் எழுதிய ஒரு நூலின் பெயர்  

2பாடறிவு   பாட  அறிந்திருத்தல் .

கொலையும் காரணங்களும்

கொலைகள்  பலப்பல  கூறுவர்ஏன்  என்றுபல
கூறாது  மறைவுண்ட  ஊறுதளம்  உண்டுபல
கலையும்  இதுவாமோ கருத்துயர்ந்த மாந்தனுக்கே  
கண்டொழி   தண்டனையும் மரணமென விண்டதுவே

கொலைகள்  பலப்பல -  உலகில்  நடைபெறுங் கொலைக்குற்றங்கள்  அதிகம் .
கூறுவர்ஏன்  என்றுபல -  காரணங்கள்  பல  கூறுவர்  ஆய்வு செயதோர் .
கருத்துயர்ந்த மாந்தனுக்கே  -  பகுத்தறிவுள்ள மனிதனுக்கு
கலையும்  இதுவாமோ  -  காரணங்கள் உரைப்பதுவும்  ஒரு கலைதான் .அன்றோ ?
கூறாது  மறைவுண்ட  -  காரணம் கூறாது மறக்கப்பட்டு நம்  நினைவிலிருந்து
அகன்று போன ;
ஊறுதளம்  உண்டுபல  -   இக்கொலை  நிகழ்வுகள் எழும்      நிலைகளும் '  சார்புகளும் பலவாகும்;
மரணமென விண்டதுவே  ‍ மரணம் என்று சொல்லப்பட்டதுவே;
கண்டொழி   தண்டனையும்  ‍  அவற்றை கண்டுபிடித்து ஒழிக்கும் தண்டனையும் ஆகும் .

But critics have argued that even in countries where death is the only sentence for murder,  it has not been proven to be a deterrent! This the author is aware but not taking any stand on it.

வியாழன், 23 ஜூன், 2016

சமாளித்தல் - சொல் பொருள்

சமாளித்தல் என்ற சொல்லினைக் கூர்ந்து கவனிப்போம்.
இதைச் சமம் + ஆள் + இ என்று பிரிக்கவேண்டும்.

சமாளித்தல் என்றால் என்ன என்று கேட்டால், பதில் கூறுவது கடினமாகத் தோன்றுகிறது. ஆனால் அச் சொல்லை மூலங்களாகப் பிரித்துவிட்டால் எளிதில் பொருளைக் கூறிவிடலாம். வழக்குப் பொருளைக் கூறுவது எளிதாக இல்லாவிட்டாலும் சொல்லமைப்புப் பொருளை எளிதாகக் கூறிடுதல் இயலும்,

அது: சம ஆளாக நிற்றல் என்று பொருள்படும்.

சொல்லிறுதியில் வரும் இகரம் அதை வினைச்சொல்லாக்குகிறது. இது பழங்காலம் தொட்டே தமிழ் மொழியில் பயன்படுத்தப் பட்டுப் பெயர்ச் சொற்களை வினைகளாக்குவதற்குப் புழங்கப் பட்டுள்ளமை காணலாம்.

-------------------------------------


எடுத்துக்காட்டுகள் சில காண்போம்:

வழு > வழி > வழிதல், வழித்தல்.
கொழு ? கொழி > கொழித்தல்.
நெள் > நெளி > நெளிதல், நெளித்தல்.
படு > படி > படிதல் : மனிதன் பாயில் படுப்பதுபோலவே தூசு போய்
ஓரிட‌த்தல் படுத்துக்கொள்கிறது. ஆகவே தூசு படிகிறது என்கிறோம்.
படு > படி > படித்தல். கண்ணின் ஒளி அல்லது ஒளிபெறு தன்மையானது ஏட்டுடன் இனைப்பை ஏற்படுத்திக்கொண்டு பார்வையைப் படியச் செய்கிறது. இதை விளக்கத் தெரியாத அகரவரிசைக் காரனொருவன் படி என்பது தமிழன்று என்று எழுதினான். ஆராய்ச்சியின்மையே இதற்குக் காரணம்.

அக்கு சிந்தா பாடா மூ என்ற மலாய் வாக்கியத்தில், பாடா என்பதென்ன? படிதலேயாம். என் காதல் உன்மேல் படிகிறது, படுகிறது என்று தெளிவிக்கலாம். படு> படி, படு > பாடு என்பது
எத்துணை அழகிய தமிழ்.


தமிழிலும் படு என்பது துணைவினையாகப் பயன்படுவதாகும். செய்யப்படுதல் , சுடப்பட்டார், கூறப்பட்டது என்பன காண்க.

இப்போது சமாளித்தலுக்குத் திரும்புவோம். இறுதி இகரமே வினைச்சொல் ஆக்கியது. இவ்விகரமும் தமிழில் தொன்றுதொட்டு
பயன்பாடு கண்டதே ஆகும். இதுவே சமாளித்தலிலும் பயன்பட்டுள்ளது.

இன்னொரு சொல் ஓக்காளித்தல். ஓக்காளம் என்பது வினையாகும்
போது ஓக்காளித்தல் ஆகும். இகரம் வந்து வினைச்சொல் ஆனது.

சமம் என்றால் ஒன்றுக்கு மற்றொன்று இணையாக அல்லது ஒப்பாக‌
அமைந்தது என்பது. அமை> சமை > சம > சமம் ‍ சமன். அல்லது
அமை > அம > சம> சமம்.


தமிழிலும் படு என்பது துணைவினையாகப் பயன்படுவதாகும். செய்யப்படுதல் , சுடப்பட்டார், கூறப்பட்டது என்பன காண்க.

இப்போது சமாளித்தலுக்குத் திரும்புவோம். இறுதி இகரமே வினைச்சொல் ஆக்கியது. இவ்விகரமும் தமிழில் தொன்றுதொட்டு
பயன்பாடு கண்டதே ஆகும். இதுவே சமாளித்தலிலும் பயன்பட்டுள்ளது.

இன்னொரு சொல் ஓக்காளித்தல். ஓக்காளம் என்பது வினையாகும்
போது ஓக்காளித்தல் ஆகும். இகரம் வந்து வினைச்சொல் ஆனது.

சமம் என்றால் ஒன்றுக்கு மற்றொன்று இணையாக அல்லது ஒப்பாக‌
அமைந்தது என்பது. ஒத்தமைவு! அமை> சமை > சம > சமம் ‍ சமன். அல்லது அமை > அம > சம> சமம். இதற்கு அது அமையும். இதற்கு அது சமையும். இதற்கு அது சமம்.


அகரத்தில் தொடங்கும் சொல் சகரமாதல் பெருவரவு. முன் எடுத்துக்காட்டுகளைப் படித்தறிக. Pl see previous posts. அமை என்பதில் உள்ள இறுதி ஐ அகரமாவது ஐகாரக் குறுக்கம். உதை என்பது ஒத என்று பேச்சில் வரும். ஐகாரம் அகரமாவது ஏனைத் திராவிட மொழிகளிலும் ஏராளம்.

நவ -கடலையும் கடந்துவிட்ட சொல்

நவீனமென்ற சொல். தமிழில் வழங்குகிறது. நவீனம் என்பது புதுமை. நவீனம் என்ற பதம் (பொருளைப் பதிந்துள்ளது பதம்) ஏனை மொழிகளி லும் பரவியுள்ளது. இச்சொல்லை உலகுக்கு அளித்த பெருமை தமிழனது ஆகும். நியோ, நியூ என்பனவரை சென்றிருக்கின்றது என்றால் இஃதோர் ஆற்றல் மிக்க, ஆறுமலைகளையும் கடந்து நிற்கின்ற, கடத்தற்கரிய கடலையும் கடந்துவிட்ட சொல் என்றே கொண்டாடவேண்டும்.


அகர முதலவான சொற்கள், பிறமொழிகளில் இகர ஓகார முன்னிலையாகத் தொடங்குவது நீங்கள் கவனித்திருக்கலாம்.

நவ >       நோவல்டி   ( நாவல்டி )  novelty      
நவ > நோவோ.  trial de novo
நய > நியூ           new
நய > நியோ.        neo-colonialism

ஆனால் மேலைநாட்டுப் பண்டிதன்மார் இதை நவ்  (நோவா ) என்பதனோடுமட்டும் தொடர்புபடுத்துவதுண்டு.   எனின்  வகரமும் யகரமும்  உடம்படு மெய்களே; நய நவ எல்லாம் ஒன்றுதான்.

நல் என்பதினின்றே இவை பிறந்தன வென்பதை முன் சுட்டிக்காட்டி 
இருந்தோம்.


அதை மறுநோக்குச் செய்துகொள்ளுங்கள்.

அதன்படி, நன்மைக் கருத்தில் புதுமைக் கருத்து விளைந்தது.

இப்போது நவீனம் என்ற சொல்:

நவ = புதுமை.

நவ _+ ஈனு + அம் = நவீனம், அதாவது புதுமை பிறத்தல்.
ஈனுதலாவது பிறப்பித்தல்.

நவ என்பதன் இறுதி அகரமும் ஈனு என்பதன் இறுதி உகரமும் கெட்டன,

இப்படி நன்மை என்னும் சொல்லிலிருந்து உலகம் நன்மை அடைந்தது.



சங்கிலி யாது

இப்போது சங்கிலி என்ற சொல்ல்லைக்  கவனிப்போம்.

மிகப் பழங்காலத்து மக்கள் சங்குகளை நூலிலோ கயிற்றிலோ  கோத்துக் கழுத்தில் அணிந்துகொண்டனர். பின்பு சங்கு கோக்கும் பழக்கம் போய், சற்று முன்னேறிச்  சங்கு இல்லாத பிற கழுத்தணிகள் வந்தன.  இவற்றுக்கும் சங்கணி என்றே பெயர் வைத்துக்கொண்   டிருந்திருக்கலாம். சங்கு அதில் இல்லாமையாலும் சங்கு என்ற சொல் வழக்கி லிருந்துகொண்டு சங்கை நினைவு படுத்தி உறுத்திக்கொண்டிருந்ததாலும்
வேறு  பெயரிட முந்தாமல்,  "சங்கிலி"  என்றே  குறித்தனர்.

சங்கு +இல் +இ = சங்கிலி.  சங்கு இல்லாத அணி.  சங்கு இல்லாமற் போன அணி கண்டும் சிலர் கவலை கொண்டிருக்கலாம்  மஞ்சட் கயிற்றில் மாட்டாத தாலி கண்டு சிலர் கவல்வது போலும்.

கோயில் தொழுகை நடைமுறைகளில் சங்கிற்கு இன்றும் பெரும் பங்கு
இருக்கிறது.   பெருமிதத்துக்கு உரிய நேரங்களில் சங்கு ஊதுவதும், மணி காட்ட சங்கு ஊதுவதும் வழக்கம்.  சங்கில் பல, பெரியன, சிறியன,  நடுத்தரத்தன என்று வேறுபாடு காணலாம். சங்கிலிருந்து எழும் நாதம்  சங்க நாதம்.

தமிழர் முன் அறிந்தது நாவிலிருந்து எழும் நாதம்.  (நா> நாதம் )  தம் நாவில் எழுவது,  பிற பின் வந்தன.  வாயிலிருந்து வருவது வாயு ஆனதுபோல்  நாவில் எழுவது நாதம்.  இவற்றுள் வாய், நா என்பன‌
பின் தம் பொருள்குன்றின.

தங்கு என்பதினின்று சங்கு என்பது வந்தது,    த‍ > ச திரிபு.  ஓர் உயிர் தங்கும் கூடு.

இப்போது சங்கிலி யாது என்று புரிந்துகொண்டிருக்கலாம்.

புதன், 22 ஜூன், 2016

ஆப்கான் இந்தியர்.நாடு எது ?


புகுபிறப்பு  நாடேதாய்  நாடென்று  கொண்டு
தகுமுறையில் வாழ்வைத் தழுவினும் துன்பமாம்
வந்தேறி என்று வசைபாடி நாளடைவில்
சொந்தநா டொன்றின்றிப் போம்.


https://sg.news.yahoo.com/afghanistans-dwindling-sikh-hindu-communities-flee-abuses-232147252.html?nhp=1

Afghanistan's dwindling Sikh, Hindu communities flee new abuses
  

இன் > சின் > சிந்தி


முன் இடுகையில்  சின் 2  என்பது விளக்கியிருந்தோம்.
 இதற்கு முன்  அகர  வருக்கத்து த்   தொடக்கச் சொற்கள்  சகர  வருக்கத்தில்  ஏற்றபடி திரியுமென்பதைக்  கூறியிருந்ததும்  நினைவில் இருக்கும்.
நினைவை மீள்ஊற்றுவிக்கச்  சில :

அட்டி  >  சட்டி   ( அடுதல் :  சுடுதல் )
உகம்  >  சுகம்.
உகந்த > சுகந்த .
அவை >  சவை  > சபை
உவ  >  சுவை .
ஏமம் > சேமம் .
அகக்  களத்தி  > சகக்களத்தி

பட்டியல் பெரிதாகாமல்  தொடர்வோம்.

இவை போல :

இன்  > இனி
இன்  > இன்னும்.

இனி என்பது பின் வருவது.

இன்  >  சின் .

இனி என்பது பின் தோன்றுவது.

சின்  > சிந்தி   என்பதும் அதுவே. மனிதன் பின் எண்ணுவது.

முன்னரே எண்ணுவது  குறைவு.

ஒன்றிலிருந்து மற்றொன்று  தோன்றும்.   சின் >, சினைத்தல் என்பன இதை ஏற்புடன் குறிக்கின்றன ,

முன்னரே எண்ணவேண்டும் என்பது  சி/றந்தது (idealism )
ஒன்றில் இன்னொன்று விளைவது சொல்லமைப்புக் கருத்து.

will edit


       

சின்> சிந்தி. ( கருத்துகள் தோன்றுதல்).

முன் இடுகைகளில்  சிறுமைப் பொருளதாகிய "சின்"  என்ற சொல்லை ஆய்வுக்கு உட்படுத்தினோம். இதுபோது, தோன்றுதற் பொருளில் வரும் "சின்" என்ற வேறோர் அடிச்சொல்லை  அணுகி ஆய்ந்து மகிழ்வோம்.
வேறுபடுத்தி அறியும் பொருட்டு இவற்றை இப்படிக் காட்டுதல் நன்று:

சின்1 ‍=  சிறியது.

சின்2 =  தோன்றுதல்.

சின்1 சில் என்பதினின்று பெறப்பட்டது என்பதை முன் கண்டுள்ளோம்.

‍‍‍‍=========================

சின் >  சினைத்தல்:   தோன்றுதல்.  (சின்+ஐ)
சின் >  சினை         உறுப்பு.  மீன் முதலியவற்றின் கரு.
சின்>    சின்+து >  சிந்து.  (உகுத்தல், உதிர்தல், உதிர்த்தல் )
         சின் > சிந்துதல்.
ஒப்பு நோக்க:  பின்> பிந்து;  முன் > முந்து.  மன்> மந்தி. ( மன் அடிச்சொல்; மனிதன் போன்றது என்று பொருள்   மன்> மனிதன்)

சின்> சிந்தி.  ( கருத்துகள் தோன்றுதல்).
      சிந்தித்தல், சிந்தை, சிந்தனை.

சின் > சினத்தல். (கோபம் தோன்றுதல் ).
       சினத்தல் >  சினம்.

இவை தோன்றுதல் கருத்துச் சொற்களாகும்.


இகர  ஈறு  பெற்ற வினைகள் சில.

காண்  >  காணித்தல்  (மலையாள வழக்கு )
முயற்சி > முயற்சித்தல்  (முயலுதல் :  )   Some do not accept முயற்சித்தல்.
ஒழி , விழி . அழி . கழி  . அளி   சிரி   என உள்ளன .

will edit

செவ்வாய், 21 ஜூன், 2016

அக்கிரகாரம்.

பின்புலக் கருத்துக்கள் :


இச்சொல் சமஸ்கிருதத்துக்கு உரியதென்ப.  இது தமிழ்ச்சொல் என்று நிலைநாட்டுவதற்காக இதை எழுதவில்லை. இச்சொல்லில் தமிழ் மூலங்கள் உண்டா என்று கண்டறிய முற்படுவதே நோக்கமாகும்.

இந்தச் சமயத் தொண்டர்களின்  குடியிருப்புகள் அமைக்கப்பட்ட காலை
பெரும்பாலும் திருமணமாகாத பூசாரிகளே அமர்த்தப்பட்டதுபோல் தெரிகிறது.   அவர்கள் தங்குவதற்கு  வேண்டிய வசதிகள் உள்ள இடங்களே  அமைக்கப்பட்டன. இவை சிறிய இடங்களென்று தெரிகிறது. ஆனால் பூசாரிகள் எல்லாம் ஒரு வட்டத்துக்குள் அடக்கப்பட்டனர். அப்போதிருந்த பாதுகாப்புகள் மேம்பாடு அடையாமையும், மக்களுடன் சேர்ந்து வாழப் பிறர் ஒத்துக்கொள்ளாமையும் காரணங்களாகவிருக்கலாம்.  சொல் அமைந்த காலம் ஆய்வுக்குரியது என்றாலும் ஆய்வதற்குரிய சான்றுகள் மிகக் குறைவே எனலாம்.

அக்கிரகாரம். -  சொல்லாமைப்பு

அஃகுதல் ‍   :   குறைவு. சுருக்கம்.

இரு +அகம் ‍     இரகம்.   :  இருக்கும் வீடு

ஆரம் :   சுற்று, ஒரு மாலை போல சுற்றான இடம்.

அஃகு+ இரு + அக +  ஆரம் =   அஃகிரகாரம் ;  அக்கிரகாரம்.

குறைவான  குடி  இருக்கும் வீடுகள்  அமைந்த  சுற்றிடம்

இதை  அக்ர  agricola    என்ற  இலத்தீன் மொழிச் சொல்லுடன் தொடர்பு படுத்தி
உழவு செய்தோர் எனலாம்.  இவர்கள்   உழவில் ஈடுபட்ட தகவல் ஏதும்  இல்லை.

இவர்கள் முழு நேரம் பூசாரிகள் ஆனதால்  ஓரிடத்தில் இருந்தனர்.


அங்கு + இரு + கு + ஆரம்  =  அங்கிரகாரம்,   அங்கு அல்லது கோயிலுக்கு அருகில் அமைந்த குடியிருப்பு.  புணர்ச்சியில்,  அங்கு என்பது அக்கு என வந்தது,  இரும்பு + பாதை > இருப்புப்பாதை என்பது போலும் வலித்தல் விகாரம். கு என்ற சேர்விடக் குறிப்பு உருபு இங்கு இடைநிலையாக வந்தது.   ஆரம் _ கோயிலைச் சுற்றி அமைந்த குடியிருப்பு.  இவ்வாறு சில வகைகளில் விளக்கம் பெறவல்ல சொல் இதுவாம்.










திங்கள், 20 ஜூன், 2016

சுட்டடிச் சொற்கள் : இயங்கு, அவை.

அவை
 == = = =

ஒருவன் இன்னொருவனைக் கேட்கிறான்.

கூட்டத்தை எங்கே வைத்திருக்கிறார்கள்?
=
அங்கே,  அதோ அங்கே, எப்போதும் கூடுகிற இடத்தில் வைத்திருக்கிறார்கள்.

அ ‍=   அங்கே.  இது சுட்டுச் சொல்.

வை=  வைத்தல். (அ + வை)

அது  "அவை"   (அ + வை) ஆகிறது.  அங்கு சிறப்பான வேலைகளைச் செய்வோர் கூடியிருக்கிறார்கள்.

அவை என்பது சவை ஆனது.   அகரத்தின்முன் சகர ஒற்று ஏறியது.

"மேலாடை இன்றிச் சவை புகுந்தால் மேதினியில்..."

சவை>  சபை   வ> ப திரிபு. இத்தகு     திரிபுகள் மிகப்பல.


இப்படி மெய் எழுத்துக்கள் முன் நின்று திரிந்தவற்றை இங்கு அவ்வப்போது
காட்டியிருக்கிறோமே, மறந்திருக்கமாட்டீர்களே! மெய் எழுத்து முன் ஏறிநின்று  சொல் திரிந்தால். சிலபொழுதில் பொருளும் சற்று மாறும். சில வேளைகளில் பொருள் மாறுவதில்லை. பொருள் திரிபுக்கோர் எடுத்துக்காட்டாகச் சண்டை என்ற சொல் உள்ளது. பழைய இடுகைகளிற்
காண்க.

அடுத்து: இயங்கு.
================

இங்கிருப்பது இங்கேயே இருந்துவிடுமாயின்  அதில் என்ன இயக்கம் இருக்கிறது. இங்கிருப்பது அங்கு போகவேண்டும். அல்லது  சுற்றி வரவேண்டும்,  அதுவன்றோ இயக்கம் என்பது!

இடப் பெயர்ச்சியும்  இருந்தவிடத்திலேயே தன்னைத்தான் சுற்றிக்கொள்ளலும்  (சுழற்சி )   மற்றும் சுழற்சியுடன் கூடிய இடப்பெயர்ச்சியும்  இயக்கத்தில்  அடங்கும். நேர்கோடாகத் தரை நகர்வும்  மேலெழுகையும்  அடங்கும்.

Horizontal and vertical as well as circular --  all forms of movements are included.

இ =  இங்கு இருப்பது;
அங்கு =  அங்கு போகிறது.

இறுதியில் உள்ள கு என்பதற்கும் பொருள் உள்ளது.  அது பின்பு காண்போம்.

இ+ அங்கு =  இயங்கு.  இதில் யகர உடம்படு மெய் வந்தது.

இ + அ + திறம் >  இயந்திறம்  -   இயந்திரம்.

ஆறு + கரை =  ஆற்றங்கரை என்பதில் அம் வந்தது போலவேதான்.   அங்கு இது  சாரியை.

இ+ அ+ அம் +  திறம்  ( சுட்டு , சுட்டு ,  இடைநிலை, பின்னொட்டு )
இ + அ + ம்+ திறம்  ( ஓர் அகரம் கெட்டது  )
இ + ய் + அம் + திரம்  (யகர உடம்படுமெய் )  (  திறம் -  திரம்  திரிபு )
இயந்திரம்.

இயந்திரம்   - எந்திரம்.   இ > எ திரிபு.

தமிழை ஆய்வு செய்யச் செய்ய அது உங்களுடன் பேசத் தொடங்கிவிடும்.
காரணம் அது மூலமொழி ஆனதே.

Ignore any question marks appearing on your screen.

ஞாயிறு, 19 ஜூன், 2016

நவ்யா நய்யா names.

நல்   -  இது  நன்மை  என்று பொருள்படும் அடிச்சொல்.

நல்  என்பது ந  என்று மட்டும் வரின் அது கடைக்குறை எனப்படும்.

ந என்பது பின் பெயர்களுக்கு முன்  ஒரு முன்னொட்டாக வரும் .

ந + பின்னை  = நப்பின்னை   ( நப்பின்னையார் )

ந + செள்ளை  = நச்செள்ளை   (  நச்செள்ளையார் )

பழமை   காரணமாக    பொருள் கேடுறுமாதலின் ,  அது பழுது எனப்பட்டது.   இதற்கு மாறானது   நல்லது, பழுதற்றது.  பழுதில்லாதது  பழையதல்லாதது   ஆகவே புதியது.  

எனவே  நல்லது என்பதில் இயற்கையாகவே புதுமைக் கருத்துத் தோன்றியது.

நல்  >  ந >   ந +  அம்  =  நவம்  .   நல்லது.   புதுமை. :

ந +  அம்  =  நயம் . (நன்று )

ஆய்  >    ஆயா  >  ஆயாள் (  அம்மா )
ஆய்  >  ஆயி .

ஆயா என்பது முதற்குறைந்து   - யா   ஆகும்.

ஆயாவை  யா  என்றும் விளித்தல்  உண்டு.

ந +  யா =   நவ்யா    :   நல்ல  அம்மா ,   நல்ல ஆயா ,  புதிய  பெண் .  புதுமைப் பெண் .

ந + யா  =  நய்யா .  அதே பொருள் .

வகர யகர உடம்படு மெய்கள் .

நவ்யா   நய்யா என்ற பெயர்கள் வழங்கும்  -  சில இடங்களில் . 




அவள் அலையவில்லை; அவன் அலைகிறான்.

htps://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_17.html

மேற்கண்ட இடுகையிலிருந்து நாம் தொடர்கிறோம்.  நாம் சுவைத்துக் கொண்டிருப்பது குறுந்தொகை என்னும் சங்க இலக்கியத்தில் உள்ள சத்திநாதனார் என்னும் புலவர் இயற்றிய ஒரு பாடலை.

சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கி யாஅங்கு
இளையள் முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையளெம் அணங்கி யோளே.

இஃது பாங்கன் பால் ஒரு தலைமகன் கூறியதைக் கொண்ட பாடல்.

இதன் பொருளை முதலில் அறிவது நல்லது.

வெள் அரவின் ‍  =  வெள்ளைப் பாம்பின்;   சிறு அவ் வரிக் குருளை =
அழகிய வரிகளை உடைய ஒரு சிறிய  குட்டியானது ;  கான யானை = காட்டகத்தே உள்ள ஒரு பெரிய யானையை;   அணங்கியாங்கு ‍  பிடித்துக்கொண்டு கடித்துத் துன்புறுத்தியது  போல; இளையள் ‍  சிறு அகவையினள்; முளைவாள் ‍=  முளைத்து ஒளியுடன் விளங்கும்; எயிற்றள் ‍ =  பற்களை உடையவள். அதாவது: பல்லழகி;
வளையுடைக் கையள் =  வளையல்கள் அணிந்த கையை உடையவள்;
எம் =  எம்மை; அணங்கியோளே =  வருத்தியவள் ஆவாள்.
என்றபடி.

அவள்தன் ஈர்க்கும் இளமையும்  அழகிய பளிச்சிடும் பல்வரிசையும்,
கைவளைகள் எழுப்பும் ஒலியும் தம்மை வருத்தித் தாக்குவனவாகி,
த‌ம் ஆண்மை அவளுக்கு அடிமைப்பட்டதனால் "தந்நிலை தடுமாறித் திரிகின்றேம்"  என்கிறான் தலைவன்  பாங்கனிடம். 

 அவள் நிறம் வெண்மை. அவன் வயதிற் சிறியவள். அவள் வரிகளை
உடைய குட்டிப்பாம்பு.  வீரிய்த்தில் யாம் காட்டு யானை ஆயினும் அவள் கடிக்கு ஆளாயினேன். வரிகள் அவள் அழகினை உறுதிப்படுத்தும் குறிப்பு. வீழ்ச்சி எமதே என்கிறான்.

அவன் வீழ்ந்தபின், அவள் தேடி வரவில்லை போலும்.  மேலும்
வந்து சந்திக்கவில்லை போலும்.

வெள்ளைப் பெண்ணிடம் ஒரு சந்திப்பில் கெட்டான் அவன்.
அவன் பரிதவிப்பைப் காட்டுகிறது இப்பாடல்.

குட்டிப்பாம்புபோலும் ஒருத்தியிடம் தன் கட்டிளமை இழந்தவன் கதை இது. 

அவள் அலையவில்லை; அவன் அலைகிறான்.



வெள்ளி, 17 ஜூன், 2016

பால் பால்யம்

இப்போது பால் என்பதற்கும் பால்யம் என்பதற்கும் உள்ள தொடர்பினைச் சற்று சிந்திப்போம்.

பால் என்பது பாகம் அல்லது ஒன்றன் பகுதி என்று பொருள்படுகிறது. எனவேதான்  திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பால் என்ற பகுப்புகள் உள்ளன. இவை நூல் பகுப்புகள்.  நூலின்   உள்ளமைப்புகளுக்கு அத்தியாயம் என்ற பெயரும் உள்ளது.  ஓர் அத்தியாயம் முடிந்து, இன்னோர் அத்தியாயம் தொடங்குகிறது.  இதை உணர்ந்துகொண்ட பாணப் புலவனாகிய பாணினி ஓர் அத்தியாயம் அற்று இனொனோர் அத்தியாயம் இயைகிறது என்று அறிந்துகொண்டான்,  அறியவே அற்று > அத்து,  இயை  : இன்னொன்று தொடங்குபடி  ஆயம் :  ஆயது,  ஆனது என்று மூன்று சிறு சொற்களை இணைத்து அத்தியாயம் என்ற சொல்லைப் படைத்தான். இது ஓர் அழகிய சொல். ஆக இச்சொல்லின் அமைப்பிலிருந்தும் தமிழே மூல மொழி என்பது அறிந்துகொள்ளலாம், வேலை போய்விடுமே என்று பயந்து சில பேராசிரியர்கள் இதைச் சொல்லமாட்டார்கள்.  பாண்>  பாணன்;  பாண்> பாணினி, இவன் பாணர் பரம்பரையினன், அறிஞன்.

நூலின் பகுதி பால் என்றோம்,  அதுபோலவே  ஆன் என்னும் பசுவின்
உடலூற்றின் பகுதியே  பால் என்பதும் ஆகும்.  பால் ஆனின்  உடலினின்று பிரிந்து வருவது அன்றோ?

சொல்லமைப்புப்  பொருள் :  பகுதி = பால். பகு + அல் = பால்;  முதனிலை நீண்டு  குகரம் கெட்டது .   பகுதி = பாதி  என்பதிலும் முதனிலை  நீண்டது;   குகரம்  மறைந்தது.    திகரம்  இயல்பாய்  நின்றது.

பகு + அ  =  ப அ  >  பா .
ப அ = ப் அ அ =  ப் ஆ = பா ,  .Got  it  ?   This is quite  basic.

( We have to explain for those who do not comprehend at once.  Pl bear with us ).

பால் பெரும்பாலும் குழந்தைகட்கு உணவாகிறது,  குடித்த பால் கொடும்பில் இருக்கிறது என்பார்கள். பால் குடிக்கும் வயது என்பார்கள்.\\இக்கருத்திலிருந்தே பால்யம் என்ற சொல் அமைந்தது. பால்  இ  அம்  > பாலியம் >  பால்ய .   பாலன், பாலா என்பவெல்லாம் இதிலிருந்தே பெறப்பட்டவை.

 உறு என்ற சொல்லினின்று உறவு வந்ததுபோலுமே  பெறு என்ற சொல்லிலிருந்து  பெறவு என்ற ஒரு சொல்லை அமைத்தோமானால் பாலன் பாலா என்பன போன்றவற்றை நாம் பெறவுகள் என்று குறிக்கலாம்.

Author's edit  note:
Error (typo) :   உடலின்று   corrected to -   உடலினின்று.
Problem detected on the computer we are using now . Cursor jumps to unintended  locations. Types in unwanted places in the draft.  This is being looked into.

வெள்ளைப் பெண்ணால் வந்த வேதனை

இன்று சங்ககாலப் புலவர் சத்திநாதனாரின் சிந்தனையூட்டும் ஒரு சிறு பாடலைக் குறுந்தொகை என்னும் நூலிலிருந்து பாடி இன்புறலாமே!

இந்தப் பாடல் கூறுவது ஆண்மை மிக்க ஓர் இளைஞனைப் பற்றியது. இவனொரு வெள்ளை நிறமுள்ள அழகிய பெண்ணைக் கண்டான். இவள் உயர்ந்த குடிப்பிறப்பு உடையவள் என்பது பாடலிலிருந்து போதருகின்றது.
அழகான இதழ்கள்; இளம்பிறை போலும் எயிறுகள். மயக்கும் இளமுறுவல்.
இத்தனையும் இன்னும் பல் கவின்களும் உடையாள் இவள்.

இவளை எதிர்கொண்டு நட்புற்று அணுக்கமானபின் இந்த இளைஞன் முன்போல் தெளிவாக இல்லை.  ஏதோ இவனைப் பற்றிக்கொண்டது போல‌
அதனால் இவன் தடுமாறித் திரிந்துகொண்டிருந்தான். இதைக் கவனித்து இவனைக் கேட்க, இவன் கூறினான்:  ஓரு வெள்ளைக் குட்டிப் பாம்பு என்னைக் கடித்துவிட்டது; அதனால் துன்பத்தில் வீழ்ந்துவிட்டேன் என்று,
பெண்ணைக் குட்டிப் பாம்பு என்று இவன் கூறியதனால்  இவள் ஒரு பதின்ம அகவைப் பெண் என்பது பெறப்படுகிறது.

இனிப் பாடலுக்கு வருவோம்.

தொடரும்

வெள்ளைப் பெண்ணால்  வந்த வேதனை   will continue

வியாழன், 16 ஜூன், 2016

திருலோக சந்தர் மறைவு .

திருலோக சந்தரவர் மறைந்து   விட்டார்
திரைகளிலே பெயர்கண்டு தெரிந்தோர் பல்லோர்
பரலோகம் படர்தலுக்கும் வயதும் உண்டோ
பார்ப்போருள் நான்நீஎன் றியார்க்கும் நன்றே
இருலோகம் கால்வைத்தும் இருக்கும் தன்மை
இதுபிழையா தென்பதுவே உளது காண்பீர்
தரவேணும் மரிநாள்மேல் தாவும் காறும்
தமிழுக்கோர் நலம்தன்னைச் செய்தார் என்பர்

காணொளியில் யாமறிந்தார் கருதும் காலை
கல்விகலை நலம்செய்தார் கணக்கில் நண்பர்
மாணுறவே ஆள்கண்டோர் உளரோ இல்லை
மடிக்கணினி தாளிகைக்குள் மண்டி நிற்பார்
வீணுறவே பூண்காலம் கழிந்தி டாமல்
விளைத்திட்டார் கலை யின்பம்  இன்னோர்  எல்லாம்;
சாணளவே பயனெனினும்  முழமாய்க் கொள்வோம்
சாவினையே மேவுறினோ வீழ்புன் கண்ணீர்.


மாணுறவே ஆள்கண்டோர் உளரோ -அதாவது  என் வட்டாரத்தில் இவரை நேராகக் கண்டோர் யாருமில்லை.
பூண்காலம்:  பூணும் காலம் . நாம் பொருந்தி வாழும் இக்காலம் .
அதாவது   நாம் காலத்தின் வாயில்  அகப்பட்டது   -  அகவை;   நாம் வயப்பட்ட  அல்லது  நமக்கு வைக்கப்பட்ட காலம் வயது.  அதன்பின் நாம் சென்றுவிடுவோம்.  காலம் நம்மை இப்போது அணிந்துகொண்டிருக்கிறது,  பூணுதல் -  அணிதல்.  அல்லது நாம் காலத்தை அணிந்துகொண்டிருக்கிறோம் . அதனால் நாம் வயது குறித்துக்கொள்கிறோம்.  இந்த   இரு கருத்தும் பொருந்துவது  "பூண் காலம் "  என்னும் தொடர்.

புன்கண்ணீர்  -  துன்பக் கண்ணீர் .

தலைப்பு: திருலோக சந்தர் மறைவு 





உலகெங்கும் தமிழ்

எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றார் என்பதனை இணையத்தால்  உணர்ந்துகொண்டேன்;
பங்கிட்டே  பல்லரசும் ஓச்சுகின்ற கோல்வரைக்குள்
பதியாமற் கடந்து நின்றேன்;
தங்குற்றேம் ஓரிடத்தில் என்றபடி தவியாமல்
தமிழன்னை  தரணிபரவி
எங்குற்றும் மிளிர்கின்றாள் இதுவன்/றோ வளர்ச்சியிதை
எனைத்தானும் காத்தல்கடனே

கோல் வரை  :   செங்கோல் செலுத்தும் ஆட்சி எல்லை.
பதியாமல்  -   உள் அடங்கி  நின்றுவிடாமல்.
தங்குற்றேம்  -  தங்கிவிட்டோம் 
தரணி பரவி  =  உலகெங்கும் பரவி 
எங்குற்றும்   -  எங்கெங்கும் 
எனைத்தானும்  -  எப்படியாகிலும் .

உலகெங்கும்   தமிழ் 

வெயில் விழைவு :LongSunnyDay

பன்னிரண்டு மணிநேரம் பகலவன் ஒளிப்புனலில்
பயின்றவெலாம்  மறந்திருந்தேன்;
என்னிரண்டு விழிகளும் இறைஞ்சிய போதெல்லாம்
இருந்தநிழல் விருந்துமுண்டேன்;
அன்னியமோ கதிரவனே அன்னியமோ  வெண்ணிலவே
அன்னியமோ உடுக்களெல்லாம்
பொன்னிறமே பட்டொளிரும் எழிலியொடு   தென்றலுமே
மன்னுயிர்க்கெல் லாமினிமையே.

கதிரோனும் மறைந்திட்டான் கவிமெல்ல  இனிப்பாடு
காதுணவு விழைகின்றன;
மதிதானும் மாருதமும் மலர்களிலே வண்டினமும்
மருவினிய மாலையழகில்!
இதுநாளில் யான்பெற்ற இன்பங்கள் யாவுமினி
என்றென்றும் எனதுமாகும்
மெதுவாக எழுந்திந்த  இடம்நீங்கு  வேன்விரைவும்
உதவாத இசைந்தநாளே.

வெயில் விழைவு 

செவ்வாய், 14 ஜூன், 2016

காணிக்கை

தெய்வம்  காக்கவேண்டும் என்ற  வேண்டுதலில் தரப்படுவதே காணிக்கை.

இது  கா + நிற்கை  என்பதன் மரூஉ  ஆகும்.

கா =  காவல்.  தெய்வக்காவல்.

நிற்கை =  நிலைபெற விழைதல் .

காநிற்கை >   காணிக்கை  என்று மாறிற்று.

காவலுக்காக வேண்டிக் கட்டப்பட்டது  காப்பு.  இப்போது அது வளையல் என்ற பொருளுக்கு வந்துவிட்டது.  

கச்சிதம்

இப்போது கச்சிதம் என்ற சொல்லைச் சந்திப்போம்.

இதிலுள்ள சிதம் என்பது சித்தம் என்பதன் இடைக்குறை.

சித்தம் : பொருள்  :  இது பல பொருள் உடைய சொல். என்றாலும் அவற்றுள் ஒன்றான "பக்குவம்" என்பதே இங்கு கொள்வதற்குரிய பொருளாம்.

அடுத்து  "கச்" என்ற முன்பாதிச் சொல்.

இது கழு என்பதன் தேய்வு,   எ‍‍  டு :   கழுமணி,   தூயமணி.

கழு > கழுவு:   தூய்மை செய்.


கழு + சிதம் =   கழுச்சிதம்>   கச்சிதம்.

எழுதருகை என்பது எச்சரிக்கை  என்று திரிந்தது போலும் இதுவாகும்.

எழு > எச்
கழு  > கச்.

இதுதான் திரிபின் கதை.   வரலாறு.

தூய பக்குவமானது என்பது பொருள்.

எட்டாத தொலைவினிலே

எட்டாத தொலைவினிலே இருந்து கொண்டாய்
எனைப்பார்த்தாய் தினம்தோறும் அடித்தாய் கண்ணே
கொட்டாவென் இமைகள்சேர்  விழிகள் தம்மால்
குனியாமல் நாணாமல் உனைச்சேர் கின்றேன்
தொட்டேனும் பார்த்திடவே தொடர்ந்த ஆசை
துடைக்காமல் துவளாமல் பொறாமை கொண்டு
பட்டான வெள்ளாத்தாள்  மறைத்தாள் ஒட்டி!
பார்க்காமல் படுத்துறங்க முடிந்த  துண்டோ?

கவி காருண்யம் நூலுக்கு -, பண்டித சேகரம்பிள்ளை

பலவாறு பிளவுண்டு கிடந்த இந்திய குமுகத்தை ( சமுதாயத்தை ) ஒன்றுபடுத்துவதற்கு இந்தியர்களுள் பல தலைவர்கள் தோன்றிப் பாடுபட்டுள்ளனர். இத்தகைய குமுகச் சிற்பிகள் இந்தியருள் மட்டுமோ, சீனருள்ளும் மலாய் மக்களுள்ளும் தோன்றி ஒற்றுமையை வளர்த்துள்ளனர். இவற்றை இது .பற்றிக் கூறும் வரலாற்று ஏடுகளிலும் அவ்வப்போது வெளிவந்த ஏனை நூல்களிலும் காணலாம். இன ஒற்றுமை என்பது தானே ஏற்பட்டுவிடுவதில்லை. இன்று நாம் காணும் சிறப்புகள் குமுகத்தில் உளவென்றால் அவற்றுக்காகப் பலர் பாடுபட்டுள்ளனர் என்பதை நாம் மறந்திடுதல் ஆகாது.

அப்படிப் பாடுபட்டவர்களில் கவி காருண்யம் என்பவரும் ஒருவராவர். இவரைப் பற்றிய குறிப்புகள் இப்போது அவ்வளவாகக் கிடைக்கவில்லை. இவர் சிறம்பானில் இருந்தவர், அதுவும் இரண்டாவது உலகப்போருக்கு முன்.


கவி காருண்யம் ஒரு பாட்டு வாத்தியார் என்று தோன்றுகிறது. இவர் எழுதிய பாடல்களில் இராகங்கள் தாளம் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய காலம் 1038 வாக்கில் என்று நூலிலிருந்து அறியமுடிகிறது. இவர் கரகரப்பிரியா சங்கராபரணம் வராளி புன்னாகவராளி பந்துவராளி  தோடி  இன்ன பிற என்று பல கையாண்டுள்ளார். இவர் காலத்து மலேயாத் தமிழர்கள் தமக்கு வேண்டிய பாடல்களைத் தாமே புனைந்து பாடிக்கொண்டனர் போலும்.  இவர் நடத்தி வந்த இசை  அவையில்  ( சங்கித சபா )  இவை பாடப்பெற்றிருக்கலாம் .  இத்தகைய புலமை இப்போது குறைந்துவிட்டது என்று எண்ணத் தோன்றுகிறது. இதனைப் பாட்டுக் கட்டுவது என்று சொல்வர்.

பாட்டுப் போடுவது என்றால் இசை அமைப்பவர் நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் பாட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று தீர்மானித்து ஒருபாட்டைப் போட்டுப்  பார்ப்போரையும் கேட்போரையும் மகிழ்விப்பது. அந்தக் காலத்துப் பதிவிசைப் பெட்டியில் (gramaphone) இசைத்தட்டு ( record ) பொருத்தி இயக்குவதையும் பாட்டுப் போடுவது என்றுதான் சொல்வர். பதிவிசைப் பெட்டிக்குப் பாட்டுப் பெட்டி என்பது பேச்சு வழக்கில் ஏற்பட்ட அந்தக் காலப் பெயராகும். இப்போது பாட்டுப் பெட்டி என்றால் என்ன அது என்று கேட்கவேண்டிவரும்.
பாட்டுப்பெட்டி என்ற வழக்குச்சொல் பேரகராதி என்று சொல்லப்படும் லெக்சிகனில் இல்லை.


கவி காருண்யம் எழுதிய நூலுக்கு, பண்டித சேகரம்பிள்ளை (புதிய உலகம் மாத இதழின் ஆசிரியர்) ஒரு சாற்றுகவியால் மதிப்பு வழங்கியுள்ளார். நூலின் பெயர் சமத்துவ கீதம். நூலிறுதியில் நன்கொடை யளித்தோர் பட்டியலும் உள்ளது.

அப்போது கவி காருண்யம் ஒரு நோஞ்சான் போல் இல்லாமல் நல்ல கட்டுடலுடன் இருந்திருப்பார் போலும்.ஆகவே சேகரம்பிள்ளையார் அவரை: "புயவலியன்" என்று தம் சாற்றுகவியில் வரணித்துள்ளார்.

புயவலியன் ! கருப்பையா தந்தபுத்ரன்;
பூதலத்துச் சமுகச்சீர் திருத்தவல்லன்!

என்ற வரிகளில், காருண்யத்தின் தந்தைபெயர் கருப்பையா என்று அறியலாம்.
இந்நூல் குமுகச் சீர்திருத்தம் பற்றிய பாடல்களைக் கொண்டது.







திங்கள், 13 ஜூன், 2016

MUTILATIONS IN WORD BUILDING


சிதைவிலாக்கம் அல்லது சொற்சிதைவு

பழம் என்பது மரத்தைச் சிதைத்துக் கிடைப்பதன்று .ஓரிலையாய்க்  கொம்பாய் உயர்மரமாய்ச் சிறியதோர் வண்காயாயாய்த்  தின்பழய்மாய்  வருவது அதுவாகும் .  கோழி உண்பவன்  அதைக் கொன்று தோல் கிழித்து வெட்டிப் பலவாறு சிதைத்து மசாலை தடவி மெதுவாக்கி வேவித்துப் பின் தானே தின்று மகிழ்கிறான் .  ஒன்று இயற்கையை ஓட்டிச் செல்கிறது.  மற்றொன்று  இயற்கையை உருக்குலைத்துப் பின் வருகிறது.

சொற்களிலும் இவ்வாறு பல வழிகள் கையாளப்படுகின்றன .

இறைவன்   -  இது ஒரு முழுச் சொல்.  புழக்கத்தில் உள்ளது.  இறைவர் -  உயர்வுப் பன்மை .  இறைவர்  >  இஷ்வர் >  ஈஷ்வர் >  ஈஸ்வர் ,  இந்த உயர்வுப் பன்மையில் ஒரு ஒருமை ஆண்பால் விகுதி சேர்த்தால்  ஈஸ்வரன்,  என்னவாயிற்று?  ஒரு சொற்சிதைவிலிருந்து ஒரு புதிய சொல் அமைகிறது.
அல்லது அமைக்கப்படுகின்றது.

எரிமலை வெடித்துத் தீப்பிழம்பைக் கக்கி  எங்கும்  பரப்பிப் பின் குளிர்ந்து இறுகி வளமான  நிலம் ஏற்பட்டு மரஞ்  செடி கொடிகள் வளர்ந்து  மலர்கள் பூத்து அதை அழகான பெண்ணொருத்தி கொய்து தலையில் சூடிக்கொள்வதில்லையா ?  அதவாது சிதைவுகளும் நாளடைவில் இதந்தரும் மயக்கும் வண்ணப் பூக்கள் ஆகிவிடுகின்றன.

ஈஸ்வர் என்பதும் அப்படி ஒரு வண்ணமலராகி  அதனோடு வாசத் தென்றல் வந்து குலாவலாமே !

இருக்கலாம்  இருக்கலாம்   ஆனதுதான் எது   ஆகாததுதான் எது ?

வன்சிதைவும் ஒரு  நன்பதமே.

ஐம்பதின் மேற் கொன்றவன் -- பைத்திய உலகமே

தமிழ் எழுதிகள் ஏன் இன்று தத்தளிக்கின்றன என்று  தெரியவில்லை. எழுத்துக்கள் வரவில்லை ஆகையினால் வேறு உருமாற்றிகளைக் கைக்கொள்ள வேண்டியதாயிற்று,

பைத்தியம் என்ற சொல்லினை மீண்டும் ஆய்ந்து அதைப்பற்றிப் பேசலாம் என்று நினைத்தேன். விரிவாக்காமல், சுருக்கமாகவே எழுதிவிடுகிறேன்.

பண்டைத் தமிழர் பைம்மையே மனக்கோளாற்றுக்குக்  ஒரு காரணமாய் இருக்கலாம் என்று நினைத்தனர்.  பைம்மையாவது முதிர்ச்சி இன்மை.
பைம்மையும் பசுமையும் தொடர்புடைய சொற்கள். பைந்தமிழ் என்றால்
பசுமையான தமிழ். அதாவது என்றும் இளமையான தமிழ்.

இப்போது பைத்தியம் என்ற சொல்லைக் காண்போம்.


பை  >  பைத்து.

து என்பது உடையது என்று பொருள்.  குறியெதிர்ப்பை நீர துடைத்து
என்ற குறள் தொடரில் உடைத்து என்பதன் பொருள்   உடையது என்பதுபோல‌
பைத்து என்பது முதிர்ச்சியின்மை உடையது என்று பொருள்.

இயம் என்பது பெரும்பாலும் இயங்குதல் குறிக்கும் ஒரு விகுதி அல்லது பின்னொட்டு. இதைப் பின் தனியாக ஆய்வு செய்யலாம்.
இப்போது பின்னொட்டு என்று மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்.  தொல் காப்பு இயம் என்பதில் இயம் ஒரு பின்னொட்டு ஆவது காண்க,  தொன்மை காக்க இயங்குவது  தொல்காப்பிய இலக்கணம் .

ஆகவே பைத்தியம் என்பது முதிர்ச்சியின்மையினால் வரும் ஒரு நோய் என்று பண்டையர் கருதினர்.  அவர்கள் கருதியது மனமுதிர்ச்சி
இன்மை அல்லது மனப்பைம்மை. பையன் என்ற சொல்லும் பைம்மைக் கருத்தே. ஆனால் அகவை முதிர்ச்சி இன்மை குறித்தது.

அமெரிக்காவில் ஐம்பதின் மேற்பட்டோரைக் கொன்றவன் அறிவு முதிர்ச்சி இல்லாதவன்.  பைத்தியக்காரனோ அறியோம்,

அறிவு முதிர்வின்மையின்  அலைப்பட்ட இவ்வுலகு  பைம்மைத்தாய் இயங்கும்  பைத்திய உலகமே  அன்றோ.....?











ஞாயிறு, 12 ஜூன், 2016

உமா.



ஏமமும் ஓம்புதலும்.


ஏமம் என்ற சொல் தொல்காப்பியனார் காலத்தில் ஏம் என்று இருந்தது. சிறு சொல்லான இது பின் சற்று நீண்டது. அம் விகுதிபெற்று ஏமம் என்று வந்தது. காமம் என்ற சொல்லும் முன் காம் என்றுதானிருந்தது. இருக்கவே, உறுதல் என்ற துணைவினையைக் கொண்டு ஏமொடும் காமொடும் இணைக்க, அம் விகுதி தேவைப்படாது. ஏன் தேவைப்படாது? ஆக்ககாலத்திலேயே, அதாவது ஆதியிலேயே அங்கு அம் இல்லையன்றோ? எனவே ஏமமுறுதல் காமமுறுதல் என்று சொற்களை நீட்டிவிடாமல் ஏமுறுதல், காமுறுதல் என்று எழுதினார்கள், பாடினார்கள். " கற்றரைக் கற்றாரே காமுறுவர்" என்றார் நம் பண்டை மூதாட்டி ஒளவையும். இற்றைப் புனைவாயின் ஏமமுறுதல் காமமுறுதல் என்றுதான் இருக்கும்.   இவற்றின் வடிவிளிருந்தம் பழமையா புதுமையா என்று  ஒருவாறு தீர்மானிக்கலாம்.

சில மொழிகளில் சொற்கள் வரைகடந்து நீண்டுவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். இவற்றுள் சீனமொழி முன்னிலை பெற்றுத் திகழ்கின்றது. தாங் என்று வருவது, தமிழிற்போல் தாங்கு என்று கு விகுதிபெற்று நீளாமல் தாங் என்றே வருமாறு வைத்துக்கொண்டார்கள். மலாய் மொழியில் விகுதிகள் குறைவு,
பெர்காத்தாஆன் என்பதிற்போல, ஒன்றிரண்டு காணலாம். பெரிதும் முன்னொட்டுக்களே நிலைநின்றன. இதில் டச்சுமொழியின் ஆதிக்கமும் காணப்பெறும்.

அடிச்சொற்களின் திரிபு அறிய வேண்டுமென்றால், முன்னொட்டு ‍ பின்னொட்டுக்களை நீக்கிப் பார்க்கவேண்டும். எடுத்துக்காட்டாக,

ஏம் என்பது ஓம் என்று திரியும். இதனை எப்படி மெய்ப்பிப்பது?

ஏம் = காவல், பாதுகாப்பு.
ஓம் = காத்தல், பாதுகாத்தல்.

(ஓம் ஓம் என்று மந்திரங்கள் ஓதுதலிலும்  பாதுகாப்பு!  பாதுகாப்பு!   என்றே பொருள் ).

ஏம் > ஏமம்

ஓம் > ஓம்பு > ஓம்புதல்.

அடிச்சொற்களாய் இருக்கையில் ஒன்றுக்கொன்று எதுகைகள் போல நின்றாலும் விகுதிகள் பெற்றபின் அவை வெவ்வேறு திசைகளில்
சென்றவையாகிவிட்டன.

அம் > அம்மா.
உம் > உம்மா > உமா.


அம்மா ( தாய் என்பது ) சில மொழிகளில், கிளைமொழிகளில் உம்மா என்று வழங்கினும், உமா என்று வந்ததுபோல் அமா என்ற வடிவம் எழவில்லை என்று தெரிகிறது. எங்காவது ஒரு மூலையில் ஒரு வகுப்பாரிடை அமா இருக்கலாம். அல்லது விளியில், அன்றிக் கவிதையில் அப்படிச் சுருங்கலாம். அப்படி ஒலிக்குங்கால், அதைக் குறித்துக்கொள்ளுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்

சாத்திரம் > சாஸ்திரம்

தமிழ்போன்ற அல்லது அதனுடன் தொடர்புடைய ஏனை மொழிகளை ஆராயும் போது மனித வளர்ச்சி நூலின் கருத்துகளையும் மனத்தின் பின்புலத்தில் வைத்துக்கொள்வது இன்றியமையாதது ஆகும்,

இற்றை நாகரிக நிலையை அடையுமுன் அவன் பல வளர்ச்சிப் படிகளைக் கடந்துவர வேண்டியதாய் இருந்தது. குகைகளிலும் மரக்கிளைகளிலும் வாழ்ந்த காலத்தில் அவன் பயந்துகொண்டிருந்தது சாவிற்கே ஆகும். சாவினைவிட அவனையுலுக்கிய பெருஞ்சிந்தனைக்குரிய வேறொரு நிகழ்வு யாண்டுமிலது, அவனது மரண அச்சமே இறைவனைப் பற்றிய எண்ணங்களைத் தோற்றுவித்தன. இறந்தபின் வெற்றுடல் கிடக்க, இறந்தோனின் உயிர் எங்கே போயிற்றென்று அவன் கவன்றான். சாவின் திறமறிய அவன் முயன்று பல சிந்தனைகளையும் உண்டாக்கி சமயகருத்துக்களையும் காலம் செல்லச் செல்லப் படைத்துக்கொள்வானாகினான்.

சாத்திறம் > சாத்திரம் - சாஸ்திரம். சாவின் திறமறி கலை.


நாளடைவில் இது ஏனைக் கருத்துக்களையும் உள்ளடக்குவதாயிற்று.

மரணத்தின் பின் மனிதன் நிலை யாது?   சாவின் திறன் விளக்கிய   கலைஞர்
ஆன்மா வேறு  உயிர் வேறு என்றும்  ஆன்மா அழியாதது  என்றும்  அது இறைவனை  அடைதற்குரியது  என்றும் தெளிவிக்க முயன்றனர்.   அழியும்  நிலையற்ற  உடலுக்கு  அழியாத ஆன்மா ஒன்று இருப்பது ஒருவாறு சாக்கவலையைத் தீர்ப்பதாக நின்று  சாவு கண்டு மனம் இடிந்துபோன மனிதனைத் தேற்றுவதாய் அமைந்தது.  இதுவும் சாத்திறம் >  சாத்திரம் >  சாஸ்திரமே. சாத்திரம்  வளர்ந்தது/

இப்படி மனித வளர்ச்சியின் பல படிகளைக் காட்டும்  வரலாற்றுச் சொல்லாக 
சாத்திரம்  >  சாஸ்திரம் என்ற சொல்  அமைந்துள்ளது அறிந்து மகிழற்பாலதாம்.

சனி, 11 ஜூன், 2016

சொல் : தாற்பரியம்

கருத்து,  கருத்துரை என்று பொருள் படும்  சொல்தான்  "தாற்பரியம் "

தால்  -   நாக்கு.

பரி -    வழி ,  மிகுதி ,  பெருமை ,  செல்லுதல்,

பரி + அம்   =  பரியம்.

தால் + பரியம் =  தாற்பரியம் ,  நாவின் வழியாகச்  செல்வது,   நாவிற்குப் பெருமை தருவது,  நாவினின்றும்  மிகுந்து  வெளிப்படுவது.


தால் என்ற அடிச்சொல்  தொங்குதல் குறிக்கும்.   அது நாவையும் குறிப்பது எதனால்  எனின் ,   நாய் முதலிய விலங்குகளில்  நாவு  தொங்குதல் உடையது.
அன்றியும் நாக்கு வெளிப்படின்  அதனைத் தொங்கும்படியும் ஏனை உயிர்களால் செய்ய முடியும்.  அதாவது நீட்டவும் உள்ளிழுக்கவும் செய்யும் வசதி கொண்டது.

தாலி  -   கழுத்தில் தொங்கும் அணி .

தால் ,  ஞால் :   தொங்குதல்.

ஞால்> ஞாலம்     விண்ணில் தொங்கும்  இவ்வுலகம் ,

தால்  > தார்   (தொங்குவது:)    கழுத்தில் தொங்குவதான பூமாலை;  சிங்கத்தின்
பிடரி மயிர் (தொங்குவது )  இது லகர ரகரத் திரிபு.

தார் > தாரம் :  நாக்கு என்பதும் பொருள் .

தாலாட்டு  -  குழந்தையைத் தொட்டிலில் (தொங்குவது ) போட்டுப் பாடுவது .

எனவே தாற்பரியம்  புரியும்படியான    தமிழ்ப் பதமே.

இதைத் தாத்பரியம் என்று எழுதலாகாது.


வினோதம். சொல்லினழகு.

விநோதம் என்ற இனிய சொல் நம் தமிழ் மூலங்களிலிருந்து எப்படி அமைந்தது என்பதை இப்போது அறிந்து,  ஞாயிற்றின் ஒளியை வியந்து நுகர்ந்துகொண்டிருக்கும்  இந்த ஞாயிற்றுக் கிழமையில் மனமிக மகிழ்வோம்.

வி =  விழுமியது; வியப்புக் குரியது .  இரண்டும் "வி" என்றஎழுத்தில் தொடங்குவதால்  இது பொருத்தமான குறுக்கம்.  இங்கு முன்னொட்டாகப் பயன்படுகிறது.

நோக்கு என்ற சொல்லில்   இறுதி  "கு" என்பது   ஒரு விகுதி.    மூழ்கு,  (  மூழ் )  ,  பெருகு  (பெரு )    என்பவற்றிலும்  இவ்விகுதி சேர்ந்து சொல்லமைதலைக்  காணலாம்,

எனவே  நோக்கு என்பதில்  "கு" வை  எடுத்துவிட்டால்  மீதம்  "நோ "   இதுவே  அடிச்சொல்.  இந்த அடிச்சொல்லுக்கும்  நோக்குதலே  பொருள்.

வி + நோ +  து +  அம் .

வியந்து  (வி )  நோக்குதலுக்கு (நோ )   உரியது   (து )    அம்  -  விகுதி.   அழகு என்பதும்   ஆகும் .

து என்பது  ஒன்றன்பால் விகுதியும் ஆகும் .

வியந்து நோக்கற்  குரித்தே  வினோதம்.

என்னே இச் சொல்லினழகு.  

பிரேதம்

ஒருவர்  இறந்துவிட்டால் .  அவர்தம் உடலைச்   சிலர்  வீட்டுக்குள் வைத்து வேண்டியவற்றைச் செய்கிறார்கள்.

வேறு சிலர் வீட்டுக்கு வெளியில் பந்தல் போட்டு அங்கு கிடத்தி  வைக்கிறார்கள் .

சிலர் வீட்டுமுன் பந்தல் போட்டாலும்,   பிணத்தை வீட்டிலேயே வைத்து, பந்தலில்  வந்தவர்கள்  அமர்ந்திருக்க வழி செய்வர் .

இங்குச்  சீனர்கள் பிணத்தை வெளிப் பந்தலில்தான்  வைத்து,  சடங்குகளைச் செய்கிறார்கள்.

இந்தியாவில் எந்த இடம்  எந்த வகுப்பினர் என்பதைப் பொறுத்து  இருவிதமாகவும்  நடைபெறுவதும் உண்டு என்று  தெரிகிறது.



சென்ற நூற்றாண்டிலோ அதற்கு முன்போ இருந்த பழக்க வழக்கங்கள்

இந்த நூற்றாண்டில் மாறியிருக்கலாம் . ஆகையால் இப்போது நீங்கள்

கடைப்பிடிப்பது நீங்கள் பழமை என்று நினைக்கும் ஒரு புதுமையாய்

இருக்கக் கூடும் . நம்மனோர் இதை எல்லாம் எங்கே எழுதிவைத்தனர்?

இருந்தால் இலக்கியங்களிலிருந்து சலித்து எடுக்கலாம். இல்லாவிட்டால்

வெள்ளைக்காரன் எழுதிவைத்ததைப் படிக்கலாம். இது நிற்க:



சாவு ஒரு தீட்டு.    அதை  ஒதுக்கமாகக்  கவனிக்கவேண்டும்.  மனத்தாலும் செயலாலும் புறத்தே வைக்கவேண்டும் என்பது பொதுவாகத் தமிழர்  கொள்கை  எனில் அது தவறாகாது என்று நினைக்கிறோம் .  நேரம் ஆகிறது, சீக்கிரமாக  எடுங்கள்  என்று  உறவினர் கூவுவதையும் கேட்டிருக்கலாம்.

இவற்றைத் தவறு என்று  சொல்லவில்லை.  நிலைமை அப்படி .

இவனுக்கு இன்னும் கேடு வராமல் உலவிக் கொண்டிருக்கிறானே என்று சொல்லும் வசையில்  கேடு என்பது சாவையே குறித்தது.

ஏதம் என்பது கேடு.    பிணம் ஒரு ஏதம் .   பிணம் புறத்தே கிடத்த வேண்டிய ஏதம்.  அப்படியா?

புற ஏதம்  >  பிரேதம் ஆகிறது.  புலியைப்  பிலி  என்று சொல்லும் பேச்சுத் தமிழர்  அமைத்த திரிபு.   ஏதம் என்பது இப்போது பேச்சு வழக்கில் மறைந்தது.

ஆங்கிலமும் பிறவும் அனைத்துத் துறைகளிலும் ஊடுருவி விட்ட இற்றை  நாளில் புறமும் ஏதமும் தாக்குப் பிடிக்குமோ?

Paragraphs: justification fault inherent in this editor. We have tried  but  it could not be corrected.

வியாழன், 9 ஜூன், 2016

கக்கூசு என்ற சொல்.

கக்கு  என்ற சொல் தமிழில் இருப்பது,   அடிப்படைக் கருத்துகளைத்   தன்சொற்களால் தரும் தகுதியுள்ள செம்மொழி இது  என்பதை காட்டுகிறது

இதுபோலவே  ஊசுதல் என்பதும்.  அழுகுதல்,  நாறுதல் என்றும் பெருள் படும்.  வடை முதலியன  கேட்டு விசுவதையும்  குறிப்பதுண்டு,

உ \\- ஊ  என்பன சுட்டடி  மூலங்கள்.   முன்னெழுதல்  மேலழுதல்    முதலிய  குறிக்கும்  தமிழ்.  ஊசல் என்பது  இருதலைக் கருத்து.  Rising and falling between two fixed or flexible points,  (concept ).

நாற்றமென்பது ஓரிடத்தினின்று  இன்னோர் இடத்திற்குப் போகும் கெடுகாற்று. கெட்டதிலிருந்து  கிளம்பும்  காற்று,  அங்கிருந்து  மூக்கைச் சென்று அடைகிறது.   ஆகவே  அது "ஊசல் "  ஆகிறது.

கக்கினது என்பது பெரும்பாலும் வாய்வழி வந்த     வயிற்று உட்கோள்  என்று பொருள்படும்.     ஆனால் எரிமலை தீமண்ணைக் கக்குகிறது  என்றும் சொல்கிறார்கள்.   ஆதலால்  வாயாலேடுப்பதை மட்டுமின்றி  வேறு வழிகளில் வெளிப்படுவதையும்  கக்குதலில் அடக்கலாம் என்பது தெளிவு.

கக்கினது   நாறும் . அதாவது   கக்கினது  ஊசும் .

கக்கு  +  ஊசு   =  கக்கூசு  ஆகிறது.

நாறும் வாந்தி என்பது,  மலக்கழிப்பு  இடத்திற்குப் பயன்படுத்தப்படுவது ஒருவகை  இடக்கர் அடக்கல் ஆகும்.  வெளிப்பட்ட கழிவு  அது கழிக்கப்படும் இடத்திற்கு ஆனது  ஆகுபெயர்.

வறுமையில் துன்புறுவாரை  " நல் கூர்ந்தார் "    " தரித்திரர் "   ( தரித்திறர்   அல்லது  திறம்பட  அணிந்தவர் " )   என்பதுபோன்ற மாறுபட்ட பயன்பாடு ஆகும்,

கக்கூசு  என்ற சொல்.   


செவ்வாய், 7 ஜூன், 2016

குறுந் : கேள்விக்கென்ன பதில்?



இது கீழ் வரும் இடுகைகளின் தொடர்ச்சி:

https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_6.html

https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_11.html

https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_46.html


பாடிய புலவர், இந்தக் குறுந்தொகை அகப்பொருட் பாட்டில் என்ன சொல்கின்றார் எனில், தெளிவாக ஒரே ஒரு கேள்வியை மட்டுமே தோழி  வாயிலாக விடுக்கின்றார். அந்தக் கேள்வி நாடன் நம்மை விட்டு அமையுமோ என்பதுதான். அதாவது தலைவன் நம்மை விட்டு நீங்கிவிடுவானோ என்பதுதான். நீங்கான் என்பது எப்படிச் சொல்வது ?


பாட்டில் உள்ள மற்ற யாவும் விலங்குகள் பற்றிய செய்தியும் முகில் பற்றியதும் ஆகும். இயற்கையை மட்டும் அழகு வரணனை செய்த பாட்டுகள் சங்க இலக்கியத்தில் இல்லை. இயற்கை எப்போதும் அகம் புறம் என்று வகைப்படும் செய்திகளில் பின்புலமாகவே நிற்கும்.


ஒரு கேள்வியே பாட்டில் உள்ள படியால் வேறெதுவும் வெளிப்படையாகக் கூறப்படவில்லை. கேள்வியும் பதிலை உள்ளடக்கியதாகத் தெரியவில்லை/ .

பாட்டின் கேள்வி எப்போது நிகழ்கிறதென்றால், வடக்கு தந்த வாடையும் முகிலும் தெற்கு நோக்கி வந்து தண்மை செய்யும் பனி தொடங்கிவிட்ட காலத்திலேதான்.

வடக்கு வாடை வந்து சேர்ந்துவிட்டது, பிரிந்து அயற் புலம்
சென்றுவிட்ட தலைவன். திரும்பிவிடுவானென்பதை நன்கு குறிப்பால் உணர்த்துகின்றது. திரும்பாமல் அங்கேயே இருந்துவிடுதல் கூடுமா என்ன:? பனியோ வந்து படர்ந்துவிட்டது, முகில் வந்து மேலூர்கிறது. அவன் வந்துவிடாமல் அமைதல் இயலுமோ:?


பெண்மரையை நீங்கிப் போய் நெல்லிக்கனியை மேய்ந்து பசியாறிய காட்சி போன இடத்தில் சம்பாதிக்க வேண்டியதைச் சம்பாதித்து விட்டனன், மீண்டு வருவன் என்பதைத் தோற்றுவிக்கிறது. குடல் நிறைவும் மன நிறைவும் அடைந்த நிலையில் மரை ஏறு பெண்ணிடத்துத் திரும்பிவிடும். மீண்டும் இரு மரைகளும் ஒன்று சேரும்/ அதுவே இன்ப நாளாகும். உள்ளம் இன்னிசையில் மயக்குறும் என்பது குறிப்பால் உணர்த்தப் படுகின்றது.

ஓங்குமலை ஊற்று ஓடையில் நீர் அருந்தி விடாய் தீர்ந்த நாடன் அல்லனோ அவன். அந்த ஊற்றின் தண்மையையும் பசுமையையும் அது அவனுடலுக்குத் தரும் தெம்பையும் அவன் மறந்துபோதல் எங்ஙனம்? மீண்டு வந்து அஃது அவனருந்துவன் என்கிறது பாட்டு - குறிப்பினால்.

சொல்லாமலே எல்லாம் சொல்லிவிட்ட நல்லிசைப் புலவனின் பாட்டு இது.
இயற்கையையே சித்திரமாக்கி, எழுப்பிய கேள்விக்குப் பதிலையும் அதனுள் வைத்துத்] தந்த இன்னிசையாளன் அவன்.

தலைவிக்குத் தோழி கூறுவதாய் அமைந்த இந்தப் பாடலைப் பல முறை படிக்கவேண்டும். அதனழகும் பொருளும் அப்போதுதான் தெளிவாகும்..

பயில் தொறும் நூல் நயம் போலும் ........என்றான் வள்ளுவன்.

குறுந் : கேள்விக்கென்ன பதில்?