ஞாயிறு, 31 ஜூலை, 2016

பவனி ஒரு தாக்கத்தை .....

பவனி என்ற சொல் எப்படி வந்தது?

பவனி செல்வதில் ஓர் அணியாகப் பரவுவர் அல்லது ஓரிடத்திருந்து இன்னோர் இடம் செல்வர்.

பரவு + அணி = பரவணி.இதில் ரகரம் எடுத்துவிட்டால், பவணி ஆகிவிடும்.
சொல்லைச் சுருக்கிவிட்டனர்.  அதுவும் ஒரு தந்திரமே.

ணி என்ற எழுத்து தமிழில் இருந்துகொண்டு பிறருக்குத் தொல்லை தருவது.
அதை  னி என்று மாற்றுவதும் சரிதான்.

பவணி > பவனி ஆகிவிட்டது.

ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு மனிதர்கள் மட்டுமா பரவுகிறார்கள்?

பவனி செல்வதே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத்தான். செல்வோர் கொள்கைகள், பழக்கங்கள், சடங்குகள், அணிகலன்கள்  அணி  முறைகள்    எல்லாம்
பரவுவதற்கே. ஆகவே பர என்பது பொருத்தமே பொருத்தம்.


சனி, 30 ஜூலை, 2016

நந்தா என்ற சங்கதச் சொல்லை....



நந்தா என்ற சங்கதச் சொல்லைக் கவனிப்போம். ஒரு சங்கதச் சொல் என்றால் அது தமிழிலிருந்து வந்ததாக வேண்டும்.  அல்லது பாகதங்களிலிருந்து போந்ததாகவேண்டும். அல்லது அவஸ்தான் உள்ளிட்ட மேலை மொழிகளில் ஒன்றிலிருந்து வந்ததாக இருக்கவேண்டும். நன்றாகச் செய்யப்பட்ட சமஸ்கிருதப் பொதுமொழி, தனக்கென சொந்தச் சொற்கள் இல்லாதது. தொடக்கத்தில் அரமாயிக் எழுத்துக்களை அது பயன்படுத்தியதாக ஜான் கே என்னும் வரலாற்றாசிரியர் கூறுவார்.

நந்தா என்னும் சொல்லோவெனின், சங்கதத்தில் பெருவழக்கு உடையது.
அதைத் தமிழினோடு தொடர்புறுத்த எந்த ஆய்வாளனும் கொஞ்சம் நடுங்கவேண்டுமே!

பின்+ தி > பிந்தி என்றும் முன்+தி = முந்தி என்றும் சொற்கள் அமைந்துள்ள படியாலும்  , அல்>அன்>அந்தி என்று வருவதாலும்
நந்தன் என்பதை எளிதாகவே கண்டுபிடிக்கலாம்.

நல் > நன் > நந்தன். அதாவது நந்தா என்பது, மகிழ்வு, நன்மை முதலியன அடிப்படையாக எழுந்த சொல்.  மகிழ்வு நன்மையாம், கொண்டாட்டம், களிப்பு, புல்லாங்குழல் முதலியன அடிப்படைப் பொருள்கள். குழலினிது என்று வள்ளுவம் கூறுவதால், அதுவும்  மகிழ்வின்   * தரவேயாகும் என்பதறிக.  *derived meaning from happiness.

இச்சொல் பலருக்குப் பெயராகவும், கண்ணனுக்குப் பெயராகவும் பயன்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததுதான். இதன் முழு விவரம் (கீழே) அடிக்குறிப்பாகத் தரப்பட்டுள்ளது.

அல் :  இரவு நேரம்.   அல் > அன்.  லகர  னகரத் திரிபு.  இன்னோர் எடுத்துக்காட்டு:  திறல் > திறன்.  ல் >ன்   பலமொழிகளில் காணலாம்.
சீனமொழியிலும் உண்டு.

இதைப் போலவே நல் (  நல்லது ) என்பதிலிருந்து  நன் வந்தது. பின்
தன் என்ற விகுதி பெற்று  நந்தன் ஆயிற்று. இதன் தன்மையை இங்கு
தொடக்கத்திலேயே விளக்கினோம்.

இந்தியச் சொற்கள் பலவும் தமிழிலிருந்தும்  முன்னைப் பாகதங்களிலிருந்தும் திரிந்தன.  முன்னை என்றால் சங்க‌தம் உருவாகுமுன் வழங்கிய பழம் பாகதங்கள்.

நன்மை மகிழ்வு. இதுவே அடிப்படை என்றுணர்க.




1nandam. joy , delight , happiness  a flute
. of one of Yudhi-shthira's  drums
of one of Kubera's  gems . ;
a son {nandana}) ;
of Vishnu
of one of Skanda's attendants
of a Na1ga  (also {-ka}) ;
of a Buddh. deity Lalit. ; of an attendant on Daksha . ;
of a son of Dhrita-rashtra (also -ka}) ;
 of a step-brother and disciple of Gautama Buddha  ;
of a son of Vasu-deva . ;
of the foster-father of Krishna and ancestor of Durga {-ka}.) ;
of a leader of the Satvatas  ; of a king of Patali-putra and founder of a dynasty consisting of 9 successive princes . Pur. Kathas. Pan;
of the number 9 (because of the 9 Nandas) Jyot. ;
of sev. scholars and authors
of  a mountain (cf. {-parvata} and {nandi-giri}) ; (A}) f. Delight , Felicity (personified as wife of Harsha ; cf. %{nandi}) MBh. i , 2597 ; prosperity , happiness L. ; a small earthen water-jar (also %{-dikA}) L. ; a husband's sister (cf. %{nanAndR}) L. ; N. of the 3 auspicious Tithis (1st , 6th , and 11th day of the fortnight) VarBr2S. ic , 2 (also %{-dikA} L.) ; of the 7th day in Ma1rgas3i1rsha Hcat. ; (in music) of a Mu1rchana1 ; of Gauri1 Hcat. ; of an Apsaras Hariv. ;
of a daughter of Vibhishan2a . ;
of a girl connected with Sakya-muni Buddh. ;
of the mother of 10th Arhat of present Ava-sarpini. ;
of the wife of Gopa1la-varman Rajat. ;
of a river flowing near Kubera's city Alaka ;
a kind of song or musical instrument ManG. ;
N. of the 6th day in a month's light half . ;
of Durga1 Devi1P. ; of Indra's city W. ;
a kind of house 

வெள்ளி, 29 ஜூலை, 2016

ரேணுகாவுக்கு தமிழல்லாத நூலோர் கூறுவது

சங்கத மொழியில் ரேணு என்பது தூசு என்று பொருள்காணப்படுகிறது. எனவே ரேணு ‍  தூசிலிருந்து தோன்றியது  என்று நினைத்துக்கொள்வர்.
இர்+ ஏண் (ஏணு) = இரேணு என்பது, இருள்தோன்றும்படி மேலெழுவது என்று தமிழ் அடிச்சொற்களின்மூலம் பெறப்படுவதால், தூசு என்று அவர்கள்  கூறும் ரேணுவும் தமிழ் தந்த சொல்லே ஆகும். இதில் தப்பி ஓட முடியவில்லை.

தேவி தோன்றுங்கால் மனிதன் பார்த்துக்கொண்டிருந்து, தேவியானவள் புழுதியினின்று தோன்றியதாகக் கூறுவது, இவள் உண்மையில் தொழிலாள‌
மக்கள் வழிபட்ட கடவுள் என்பதை உறுதிப்படுத்துகிறது. அவர்கள் வணங்கினர், அவர்களிடம் நாம் அறிந்து உண்மை கண்டு நாமும் வணங்கினோம் என்பதை மறைத்துக் கூறும் வழி இதுவாகும்.எப்படியாயினும் ரேணுகா தொழிலாளர் கடவுளே. அரசர்களும் பிறரும் அங்குபோய்ப்  புழுதியில்1 நிற்பது இயல்புக்கு மாறானதே.


----------------------------------------------------------------------------------------------------------------------------------

1  சில ஆலயங்களில், பூசைக்குப் பின் குங்குமம் தருவதில்லை;   வெட்டி எடுத்த மண்ணே தரப்படுகிறது. இவ்வம்மன் புழுதியிற் தோன்றியவள் (மண்ணில் வேலைசெய்வோரிடைத் தொழப்பட்டவள்) என்ற  தொன்மத்திற்கு ஏற்ப இது தரப்படுவது காண்க. ) இஃது இவ்விடுகையின் கருத்தை வலியுறுத்துவதாகிறது/.    அரிமாவிற்கு (சிங்கத்திற்கு)ப் பதில்

ஆ (பசு) போற்று விலங்காகிறது.  Also see: temple.dinamalar.com/New.php?id=594

2  https://www.facebook.com/rangammal/posts/422957651149491?stream_ref=10

3 இரு+ ஏணு + கா :  இது முன் இடுகையில் கூறப்பட்டது. இருகைகளும் இடுப்பில் வைத்திருக்கும் நிலை (மஹாராஷ்ரா – பண்டரிபுரம், கர்நாடகா – உடுப்பி)..  கா  - கை  என்பதன் திரிபு  எனினுமாம் ,

3    http://hinduspritualarticles.blogspot.sg/2015/10/blog-post_30.html?view=sidebar



4    எல்லையம்மாள்  > எல்லம்மாள் .  ஐகாரக் குறுக்கம் 


5    வெட்டியாரத் தொடர்பு:

      Easy further reading at : 

      http://tamil.thehindu.com/society/spirituality/புராணத்தைப்-போற்றும்-கெங்கையம்மன்
"      கட்டளையை நிறைவேற்றிய பரசுராமன் தந்தை முன்னால் நின்றான். மகனின் செயலை மெச்சிய ஜமதக்னி முனிவர், என்ன வரம் வேண்டும் கேள் என்றார். தந்தையே, உங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன். இறந்த தாய் எனக்கு வேண்டும். அவரை உயிர்ப்பித்துக் கொடுங்கள் என்றான். மகனின் ஆசையை நிறைவேற்றப் புனித நீர் கொடுத்து உன் தாயை உயிர்ப்பித்துக் கொள் என்றார். தாயின் உயிர் கிடைக்கும் ஆசையில் ஓடிவந்த பரசுராமன், வெட்டியான் மனைவியின் உடலில் தனது தாயின் தலையை வைத்தும், தனது தாயின் உடலில் வெட்டியானின் மனைவியின் தலையை வைத்து அவசரத்தில் உயிர்ப்பித்துவிட்டான். இந்த புராணக் கதையை விளக்குமாறு, கெங்கையம்மன் சிரசு திருவிழாவாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  "









புதன், 27 ஜூலை, 2016

அயம். அயச் செந்தூரம்.



இந்தச் சொற்களையும் தொடர்களையும் ஆயுமுன்,  இரும்பின் மேன்மையை அறிந்துகொள்ளுதல் வேண்டும்.  பொன்னைக் கண்ட மனிதன், அதனால் நகை, ஏனை அணிகலன்களையே செய்தற்கு  இயன்றது என்பது  அறிந்தானோ ?மாந்தனின் நாகரிக வளர்ச்சிக்குப்  பொன் செய்த புண்ணியம், நகை வளையல்கள் என்று உடலில் தொங்கியதும் பணம் எனப் பயன்பட்டதுமாகும்.

ஆனால் இரும்பால் விளைந்த பயன் மிகப் பலவாம். அதனால் கற்காலம் என்று ஒதுக்கிய  வரலாற்றாசிரியர்கள் இரும்புக் காலமும் மேலானதே  என்று முடிவு செய்தனர்.இரும்பால்  ஆயுதங்கள் செய்து மனிதன் முன்னேறினான், இல்லாவிட்டால் மனிதன் எங்கேயோ பிற்போக்காய்க் கிடந்திருப்பான்,   தமிழில் சொல் அமைத்தவர்கள் இதை நன்குணர்ந்து
பொன்னினும் பெரிதான இரும்பை இரும்பொன் என்றனர். அதுபின் இரும்பு என்று திரிந்துவிட்டது என்று அறிஞர் கூறுவர்.

ஆகவே மனிதன் இரும்பை  வியந்து போற்றினான் என்று உணர்க‌

ஐ என்பது வியப்பு,  வியப்புக் குரியதை அய் அல்லது ஐ என்பதும் காணலாம். மேன்மையும் அதுவாம் .

ஐ > அய்>  அயம்,    அய் +அம்  =  அயம் .


வியந்து போற்றற்குரித்தாகிய இரும்பு. இரும்பொன் என்ற கருத்து
இங்கும் இலங்குகின்றது.

செந்தூரம் என்பது செந்தூளம் என்பதன் திரிபு ஆகும்,,

சிவப்புத் தூள் என்பதாகும்.  இதைப் பிற அறிஞர் கூறியுள்ளனர்.

செவ்வாய், 26 ஜூலை, 2016

"ரேணுகா" என்ற பெண்ணின் பெயரை....

இப்போது "ரேணுகா" என்ற பெண்ணின் பெயரை ஆய்வு செய்வோம்.
இது தமிழ்ப் பெயர். இந்தியப் பெயர் என்றும் வைத்துக்கொள்ளலாம். தமிழ் நாடு மட்டுமின்றிப் பிற மாநிலங்களிலும் வழங்கும் பெயர். அம்மன் பெயர்.

காளி என்றால் கருப்பம்மை என்று பொருள் என்பது உங்களுக்குத் தெரியும்.
கள், காள் என்பன கருப்புக் குறிக்கும் அடிச்சொற்கள். அதுபோலவே, இரேணுகா என்பதில் முன் நிற்கும் அடிச்சொல் இர் என்பது.

இர் ‍ >  இருள்.
இர்  > இரவு.

இர் > இராம(ன்)
இர் >  இராவண்ணன் > இராவணன். இடைக்குறை : ண்.

இப்போது ரேணுகா.

முதல் அடிச்சொல்; இர்.
அடுத்து: ஏண் >  ஏற்றம்;  கூடுதல்;  அதிகம்.
ஏணி என்ற சொல் இங்கிருந்து வந்தது,

கா என்பது அக்கா என்பதன் முதற்குறை.  (அக்)கா.  மூத்தவள்,

இர்+  ஏண் + கா ‍  :  கருப்பு மிகுந்த பெண்.  காளி அம்மன்.

ஏண் > ஏணு : உகரம் சாரியை.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இது வெட்டியான் கூட்டத்தினர் வணங்கிவந்த  அம்மன் என்பது தெரிகிறது,  இத்தெய்வத்தை வணங்கும் முறைகளில்  அவர்களின் பங்களிப்பு முன்னிற்கிறது.  சாவின் திரமறிதலே ( திறம்  அறிதலே ) சாத்திரம்  என்ற எம் முன் இடுகை காண்க.  மேலும் ஜமதக்நி
என்பதும்  சம+ தக்கவன+ நீ  என்ற தொடரின் வெட்டுச் சேர்க்கையும் வலிதிரிபும்    ஆகுமென்பது தெளிவாகும்.புராணத்தினால் வெட்டியான் தொடர்பை நீக்க  இயலவில்லை.

மாரி : மா= கருப்பு.     .மாரியும் கரிய கடவுளே ஆகும் .

வேறு சொன் முடிபுகள் 

இரேணுகை என்பது  இரண்டு உயர் கைகள் என்றும் பொருள் தரும். பின் விளிவடிவில் " இராணுகா"  ஆகுதல் கூடும் . இச் சொற்கோவை  பொருளில்   "  இரண்டு அருட் கைகள் ".- இரு + ஏண் + (உ )+ கை   அதுவாம்.   . உகை ‍-  எழுச்சி எனினுமாம்  இப்படிக் கொண்டால்  "இரு (அருட் ) கைகளின் உயர் எழுச்சி"  என்றாகி  ஆகுபெயராய்  அம்மனுக்காகும் ,


திங்கள், 25 ஜூலை, 2016

கிடையாது காதலென்று.............

திரையினிலே காதலிலே தேனாறே  ஓடும்;
தேர்ந்தெடுத்த நாயகியோ ஆணோடு பாடும்.
சிறைவீட்டுக்  கைதியெனச் சீர்கெட்டு வாடும்
சிறு அகவை ஆடவரும் பெண்களுமே தேடும்
ஒருசரக்கும் உளதென்றால் அதுதானே காதல்;
ஓடுகின்ற படச்சுருளில் கூடுவதாம் காதல்.
பெருநகரம் சிற்றூர்கள் யாங்கணுமே காதல்.
பெறவேண்டும் அதுவாழ்க்கை என்கின்ற ஆவல்.

பிள்ளைக்கும் பெண்ணுக்கும் முறைப்படியே பார்த்து,
பிறந்தநாளும் கோத்திரமும்  அறிந்தபடி சேர்த்து
நல்லநாளில் மணம்வைக்க பெற்றோர்கள் முந்த
நாங்களவை பேசிவிட்டோம் என்றுரைத்த‌ மக்கள்.
உள்ளபடி  அகத்துக்குள் எமன்புகுந்த நேரம்
ஒருவாறு தொடங்கியதே எனப்புகல வேண்டும்.
கள்ளத்துக் காதலென்று பெற்றவர்கள் சொல்ல‌
உள்ளத்துக் காதலென்று பிள்ளைபெண் சொன்னார்.

முடியாதென்  றேபெற்றோர் மணவினைந டாத்த‌
மூடியவாய் திறவாமல் மணமகளும்  காத்தார்
இடியாமல் குடிபுகுந்து படிபோற்றி  வாழ்ந்தார்
என்பதுபோல் உலகுக்கு வெளிக்காட்சி செய்தே
உடையாத காதலனோ டொன்றுபட்டுச் சூழ்ந்தார்
உள்வந்த புதுக்கணவன் உயிர்பிரிய வீழ்ந்தான்!
கிடையாது காதலென்று கிழித்துவைத்த கோடு
கேடென்றே உணர்த்தியதோ காதலரின் பாடு?

edited.26.7.16  TM 25.7.16 some words changed. reedited 2607160853

There have been several murders of  such plot occurring recently/  In these cases. the couples went
through mostly arranged marriages and later one party in the wedlock    tried to rectify the mismatch by killing the spouse to attain the desired life with the lover.  Parents arranging marriages should think carefully and should not imagine such events would not occur to their children.

ஞாயிறு, 24 ஜூலை, 2016

கலாம் ஐயாவின் சிலைநிறுவுதல்

நபிதந்த கொள்கைகளில் எபிரேய நூல்களில்
நாம்சில கண்டதில்லை;
தபுவழிகள் பிறழ்நிலைகள்  ஒருபோதும் இணையாத‌
தனித்தன்மை இசுலாமளித்
தபரமே தொழுதகவு நெறிபிறரும் தமிழரும்
தகுந்தபடி மதித்தல்கடனே;
விபரமே யாதெனில் வியன்புகழ் கலாமையா
சிலைநிறுவு செயல்காண்பிரோ.

தபு  - தப்பு  இடைக்குறை 
இசுலாமளித் தபரமே  : இசுலாம் அளித்த பரமே. என்று பிரிக்கவும்.

வியன்  மிகவிரிவு, பெருமை.
பரமே தொழுதகவு ‍--  இறைவன் ஒருவனே தொழற்கு உரியன் என்னும்கொள்கை
கலாம் ஐயாவின் சிலை நிறுவுதல்  :  கலாம் அவர்களுக்குச் சிலை வைக்கக்கூடாது என்பது இசுலாமிய‌
சமயத்தார் நிலைப்பாடு.  இதை மதிக்க வேண்டும் என்பது இப்பாட்டின் பொருள்

நிறுவுதல்

A footnote has been found deleted.  It will not be restored.

மந்த நிலவினில்

மந்த நிலவினில் என் தன்  புன்சிரி
கண்டு மயங்கினையோ கண்ணனே!
வந்த வனத்து வண்ண மலர்களில்
வாய்த்த இன்பம் மகிழ்வாய்
தந்த மணந்தனில் தலைகிறு
கிறுப்பினில் என்னில் இணைந்துருகி
செந்தமிழ் மலை ஊற்றில் கலந்திடத்
தீதொன்றும்  வந்திடாதே.

முன் கண்டிராத காணொளிகள்

மூவா  யிரத்துமுந் நூற்றின்மேற் பட்டரிய
முன்கண்டி ராதபடக் காணொளிகள் கைவரவே
யாவும் பார்த்துமகிழ் வெய்திடுதல் யாங்கினுமே
யார்க்குமிய  லாததுவே யாமும்சில பார்த்தறிந்தேம்
மேவும் வாழ்வினிலே மீதமின்றி இவைபார்க்க
மின்னலென விரைந்திடுதற் கெம்மிடமோர் திறனில்லை
நாவும்  நன்றியன்றி யாம்பகர யாதுளதோ
நல்லவுள்ளம் கொண்டவர்கள் நலம்பெறுக நனிவாழ்க.


முன்  கண்டிராத காணொளிகள்

பட்டரிய :   பட்ட அரிய
செய்யுளில் இது தொகுத்தல் .
கை வர : கைக்குக் கிடைக்கவே
நனி - நன்றாக


சனி, 23 ஜூலை, 2016

எழுத எதுவும் இயலாமை

எழுத எதுவும் இயலாமை  ஏனேன்
பழுதுறு மென்பொருள்  பாய்ந்துலவி உள்ளிருக்க
ஆங்கவை  தேய்த்தே அகற்றினோம் அன்பர்காள்
தாங்கித் தருகநெஞ் சம்.

பழுதுறு -  பழுதுறுத்தும்.  பழுது  உறு மென்பொருள் என்பது
வினைத்தொகை.  தேய்த்தே - அழித்தே.   தாங்கி - பொறுத்து.


அட்டவணை தன்னை அணுகியாம்  தொட்டதுமே
கொட்டிய பக்கத்தைக்  கூட்டியுள் சேமிக்கும்
செட்டுச் செயலே  இழந்ததே  இக்கணினி
நட்டுயாம் நாட்டியவை இல்.

அட்டவணை-  பட்டியல். இது இங்குள்ள பக்கங்களைக் (pages) குறிக்கிறது. தொட்டதுமே -  தொடங்கியதுமே. கொட்டிய - பகர்ப்புச் செய்து மேலேற்றிய. ( copy and pasted) கூட்டி - ஒன்றுபடுத்தி. ( collected from editing applications ) சேமிக்கும் - வைத்துக்கொள்ளும். (save)   செட்டு -  நேரத்தைச் செலவாக்காமல் நன்கு பயன்படுத்தும் முறையைக் குறிப்பது.  (time save measures)  நட்டு - வேறிடத்தில் இருந்து எடுத்துப் புகுத்தி.  நாட்டியவை - இடுகையாக்கியவை.  இல் - இல்லை.



1.Kindly report any errors generated by viruses and any typos/errors you may find. Thank you.
2.  நட்டு யாம் என்பதை நட்டியாம் என்று எழுதுவர். இங்கு யாம் அப்படி எழுதவில்லை.

வெள்ளி, 22 ஜூலை, 2016

"வம்மிசையம்" சுருங்கும் : "வம்மிசம்".

ஒரு குடியில் பிறக்கும்  குழந்தைகள்  வளர்ந்து வயது (அகவை) வந்தபின்பு திருமணம் செய்துகொண்டு, அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்து, பின் அவர்களும் மணவயதுடையவராகிப்  பின் அவர்களும் பிள்ளைகள்  பெற்றுக்கொண்டு, பின் அந்தப் பிள்ளைகளும்  அகவை எய்தி...........

இப்படியே வந்துகொண்டிருப்பதுதான் வம்மிசம்.

வருமின் >  வம்மின் என்று சுருங்கும். இடையில் உள்ள "ரு" மறைந்துவிட்டது. அவ்வளவுதான்.
வ+ மின் =  வம்மின்.
மின் ஒரு ஏவல் விகுதி. இதை வியங்கோள்  வினைமுற்றுக்குரிய விகுதி என்பார்கள்.  வரு+க = வருக என்பதில் ககரம் இறுதியில் வந்ததுபோல.

நாம் மின் என்ற விகுதியை இங்கு ஆய்வு செய்யவில்லை. ஆதலால் அதை விடுப்போம்.

வரு என்பது பகுதி; அது வ-  என்று சுருங்கும்.

மேலும் மேலும் தலைமுறையில் குழந்தைகள் பிறந்து அவர்கள் பிறப்பிக்கிற படியால் "மிசை" என்பதைச் சேர்க்க வேண்டும்.

ஆக, வ+ மிசை = வம்மிசை ஆகிறது.

அம் என்ற சொல்லமைப்பு விகுதி சேர்த்தால்:  வம்மிசையம்
என்று வரும். இங்கு மிசை என்பதில் வரும் "ஐ"காரத்தைக் குறுக்கலாம். அப்போது

வம் மிச் அம் என்றாகும்.   ச்+ ஐ = சை.  அதில் ஐயைக் எடுத்துச் சையைக் குறுக்கினால்,  ச் மிஞ்சுகிறது.

வம் மிச் அம் =  வம்மிசம் ஆகிறது.

இது ஒரு பேச்சு வழக்குச் சொல். திட்டும்போது உன் வம்மிசம்
கருவத்துப் போக என்று கிழவி கத்துவதுண்டு. கொஞ்சம் பழங்காலக் கிழவிகளைச் சொல்கிறேன்.

இதுபின் "வம்ஸ"  என்று மெருகேற்றப் பட்டது.

மலாயில் வங்ஸ என்றிருக்கும். புத்திரி வங்ஸ என்றால்
குலமகள் இளவரசி.

வரு என்பது இறந்த காலத்தில் வ  என்று குறுகும். வந்தான், வந்தாள், வந்தது.

வம்மின் ஈங்கு ( புறநானூறு. 294.)  [  நினைவில் இருந்து.] தேடிப் பார்க்கவும்.   வம்மின் = "வா'ங்க"   (என்பது).

மிசை என்பது எளிய சொல்தான். மிசை > மீசை. உதட்டின் மீதிருக்கும் முடி.  மித : தண்ணீரின் மேல் நில் அல்லது உலவு என்று பொருள். மிதம் = பளு அற்ற நிலை; மிதப்பது.  மிதை > மிசை  த> ச போலி.  இது மோனையாகவும் வரும்.

மே ,  மேல் ,  மீ  மி  means up.

மலர்மிசை ஏகினான் ......குறள்.

தமிழ்  "வம்மிசையம்" வளர்க.

திருட்டில் திளைத்த

திருட்டில் திளைத்த உலகமென்றே  ஏசினாலும்
திருட்டை அகற்றித் தேர்கவெனப்  பேசினாலும்
கிடைத்த  பொருளைச் சுருட்டுவதில் பழக்கமுள்ளோன்
செவியில் இவையும்  சேர்பொழுதில்    திருந்துவானோ    ?




வியாழன், 21 ஜூலை, 2016

வசூல்

வசூல் என்ற சொல் நாம் அடிக்கடி கேள்விப்படுவதாகும். இது உருது மொழிச்சொல் என்றே நம் ஆசிரியர்கள் கற்பிப்பர்.

இதில்  நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்,  வரி, வருமானம், வருவாய் முதலிய சொற்கள் வகரத்தில் தொடங்குதல் போலவே இதுவும்
தொடங்குகிறது. ஆகவே ஒரு சிறு தொடர்பு தெரிகிறது.

சூல் என்பது தோண்டுதல் என்றும் பொருள்படும்.

சூள் என்பது ஆணை. சூலுதல்   : தோண்டுதல்,  அறுத்தல், சூளுறவு  என்றால் ஆணையிடுதல் என்றும் பொருள்.

எனவே  வருவாய் ஆணை என்று பொருள் கொள்ளலாம்.   இச்சொல்
மேலும் ஆய்வதற்குரியது ஆகும். இச்சொல் உருது மொழிக்கு எங்கிருந்து
வந்தது என்பது உட்பட,  அரபி மொழியையும் ஆய்வு செய்தல் வேண்டும்.

புட்பக விமானம்/ வானூர்தி

பூக்கள் செடியிற் பிரிந்து வெகுதொலைவுக்குப் பறப்பதில்லை. வெறும் பூக்களால் ஆன வானூர்தி அல்லது விமானம் பறக்கவியலாதது.
கடவுள்கள் பறப்பதற்கு விமானம் அல்லது வானூர்தி தேவைப்படுவதில்லை. அவர்கள் எப்படியும் பறக்கலாம்.

ஆகவே இலங்கை சென்ற  புட்பக விமானம் ஓர் இன்றியமையாத கருவியாகச் செயல்பட்டிருக்கவேண்டும். வெறும் பூக்கள் அல்ல.

புள் + பகம் = புட்பகம் ஆகிறது.

புள் என்பது பறவை.

பகம் என்பது பகுதி. பகு+ அம் = பகம். இவ்விமானம் அல்லது வானூர்தி  முன்பகுதி பறவை போன்ற  உருவிலானது என்பது பொருள்.

இது புஷ்பக என்று பிறழ உணரப்பட்டு , புஷ்பம் என்பதனோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.  புள் என்ற சொல் தெரிந்த வான்மீகியும் தமிழனாதல் வேண்டும்.சங்கப் புலவன்.  இராமகாதையில் பல சொற்கள் தமிழினுடன் தொடர்பு உடையவை ஆகும். இது முன்னர் நாம் கூறியதேயாம்.

புதன், 20 ஜூலை, 2016

மகாமாயா

இன்று ஒரு வகைத் திரிபுபற்றி  உரையாடி மகிழலாம். சொல்லிறுதியில் ளகர ஒற்றில் முடியும் ஒருசொல், யகர ஒற்றாய்ச் சில வேளைகளில் முடியும் என்பதே அது.  இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு:

மாள் > மாய்

என்பதாகும்.

இச்சொல் வடிவங்கள் இங்ஙனம் மட்டுமின்றி  மடி, மரி என்றும் வருதலை உணரலாம்.  மாள்தல், மாய்தல், மடிதல், மரித்தல் என்று ~தல் தொழிற்பெயர் விகுதி பெற்றும் வரும்.

மடிதல், மரித்தல் என்று மகரக் குறிலில் தொடங்கிய சொல் மாகாரமாக முதனிலை நீண்டு திரிந்தும் சொல்லாவது கவனிக்க வேண்டியதொன்றாகும்.

இவை அனைத்தும் பொருள் மாறாமல் இன்றுகாறும் வழங்கி வந்திருத்தலை அறியும்போது தமிழ்ச் சொற்கள் பிற மொழியின்   சார்பின்றித்  தாமே திரிந்து தமிழ்மொழி உருவாக்கம் பெற்றிருப்பதைக் கண்டு மகிழலாம்.  பொருள் மாறியிருந்தால் நாம் ஒரு வேளை கண்டுகொள்ள இயலாது போயிருத்தல் கூடும்.

இந்த நாலு சொற்களும் மகரத்திலேயே தொடங்கின..

இவற்றில் சில பிற மொழிகளுக்குள் தாவிச் சென்றன,

கேட்க இனிமையாகவும் சொல்ல எளிமையாகவும் விளக்கமாகப் பொருள்படுத்தும் திறமும் உடைய சொற்கள் பிறமொழிகளில் சென்று
வழங்குவது நாம் கண்டு களிக்கத் தக்கதே என்போம். மிக்கப் பழங்காலத்திலேயே நம் பேச்சும் சொற்களும் தெளிவு பெற்றிருந்தமையை இத்தகைய தாவல்கள்  நமக்கு அறிவிக்கின்றன.

உடல் மாய்தலே மனிதன் தொடக்கத்தில் உணர்ந்த மாய்தல். இதன் பின் வெகுகாலம் கழித்தே  அவன்  ஒருவற்கு  அறிவு  மாய்ந்துபோய் மனிதன் மடைமை அடைகிறான்  என்பதை  உணர்ந்துகொண்டிருத்தல் தெளிவாகி றது. மொழிநூலில் அணியியல் வழக்குகள் காலத்தால் பிற்பட்டவை. பொருள் உண்டாகி உறுதியடைந்த பின்னரே அதனை அழகுபடுத்தும் வகைகளும் கலைகளூம் தோன்றுதல் கூடும். குயில் தோன்றிய பின் தான் அது பறக்கவும் பின் பாடவும் அறிந்துகொள்ளும்.

மாய் என்பதிலிருந்து மாயம் மாயை மாயா முதலிய சொற்கள் பிற்காலத்தில் உருப்பெற்றன.  அறிவு மாய்தல் என்னும் விரிவு பின்பு  உணரப்பட்டது.   மாயம் செய்வோன் மாயன், மாயக்காரன் என்றும் குறிக்கப்பெறுவானா யினன். மாய் என்ற சொல் தமிழில் தோன்றி ப்  பல ஆயிரம் ஆண்டுகளின் பின் தான்  மாயா என்ற சமயக் கருத்தும் மாமாயா என்னும்  மகாமாயா ஆகிய  அம்மனின் பெயரும் உருப்பெற்றிருத்தல் கூடும். இவை அணிவகையில் ஏற்பட்டவையாகக் கருதவேண்டும்.-

to edit

செவ்வாய், 19 ஜூலை, 2016

நாதன், நாதம் பின் புலத்தை ............

நாதன், நாதம் என்ற சொற்களை நாம் முன்னரே ஆய்ந்து அறிந்துள்ளோம்   இவை நா அல்லது நாக்கு என்ற சொல்லினின்று பிறப்பிக்கப்பட்டவை ஆகும்.  இதையும் விளக்கியுள்ளோம்.

இதன் தொடர்பில் இவை எழுந்த பின்புலத்தை அறிந்துகொள்ளலாம்.
நாவிலிருந்து எழுபவையே மந்திரங்கள். இறையுருவம்  அல்லது இறைவன் இவற்றுக்கு இன்றியமையாதவை அல்ல. இறையுருவை மந்திரம் சொல்பவர் ஏற்படுத்திக்கொள்ளலாம்.  ஒரு பிள்ளையார் வேண்டுமென்றால் கொஞ்சம் அரைத்த சந்தனத்தை எடுத்துப் பிள்ளையார் பிடித்து ஒரு தட்டில் வைத்துக்கொண்டு  அதில் பூக்களை இட்டுத் தண்ணீர் தெளித்து மந்திரம் சொல்லத் தொடங்கிவிட்டாலும், மந்திரங்களின் ஆற்றலால் பிள்ளையாருக்கு ஒருவகையில் உயிர் உண்டாகிவிட்டது  அல்லது  அவர் எழுந்தருளிவிட்டார் ( ப்ரசன்னம்) என்றுதான் கொள்வர். ஆகவே மந்திரத்துக்குப் பிள்ளையார் பிடித்தோம் என்பதே சரி; அன்றி பிள்ளையாருக்கு மந்திரம் உண்டாக்கப்படவில்லை. வாய்மொழி மந்திரங்கள் முன்னரே முழு ஆற்றலுடன் இருந்துகொண்டிருப்பவை. இப்படிச் சொல்லும்காலை, இதில் பல கேள்விகள் எழவேண்டும். அவற்றை இங்கு விளக்காமல் விட்டுவிடுகிறேன்.  ஏனெனில் அவை சொல்லாய்வுக்குத் தேவையில்லை என்பதனால்தான்.

இது இங்கு ஏன் சொல்லப்படுகிறது  எனில், நாவின் முன்மையை அல்லது முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவே. நாவில் எழுவது நாதப் ப்ரம்மம் .  பிறமம் > ப்ரம்மம்.  நாவினின்று பிறந்தது.

நா> நாமம்
நா> நாதம் ( தம் நாவு)  ஆகுபெயராய்  ஓலி  குறிக்கும் .
நா > நாதன் ( தன் நாவில் எழுபவன் ).

நாவினின்று எழும் மந்திரங்களில்தாம்  நாதன் வாழ்கின்றான்.  நாவில்
நாதம் எழுகின்றது.

மீமாம்சம் என்பதில், ஓர் இறைவனின்றி மந்திரங்கள் உருக்கொள்ளும்.
மந்திரங்களுக்கு இறைவன் தேவைப்படுவதில்லை. மந்திரங்களில் கூறப்படும் தேவர்கள் அல்லது இறைவர்கள், வாழ்வது அந்த மந்திரங்களில்தாம். மந்திரங்களில் அல்லாமல் அவை வேறெங்கும் இருப்பனவுமில்லை, தேவைப்படுவனவுமில்லை.

இங்கு கூறப்பட்ட சொற்கள் அத்தகு பின்புலத்தில் எழுந்தவை.  மந்திரங்களுக்கு மூர்த்தி கட்டுப்படும் என்று இக்கொள்கையில் ஊன்றியோர் சொல்வர். இறைவனைப் பற்றிய கவலை இல்லாமல், மந்திரங்களையும் உரிய சடங்குகளையும் செய்துகொண்டிருந்தாலே தாம் எய்தவேண்டியவற்றை எய்திவிடலாம்  என்பது இக்கொள்கை. இச்சொற்களின்  அடிப்படை இது என்பதன்றி இக்கொள்கையின்  உண்மைபற்றிய தருக்கத்தில் ஈடுபடுதற்காக இதைச் சொல்லவில்லை என்பதறிக.

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்ற சிவவாக்கியர் போன்ற சித்தர்கள் இதற்கு மாறான கொள்கையர்  எனினும் சொல் அமைந்த சுற்றுச் சார்பினை  நீங்கள் அறிந்துகொள்ளல் வேண்டுமென்பதே ஈண்டுத்  தந்த விளக்கத்தின் குறிக்கோள் ஆகும் ,

Will edit. (polish up ).  Some editing has been accomplished.






தெர் ( அடிச்சொல் ).

தெர் என்பது ஒரு தமிழ் அடிச்சொல். காணுதல், தெளிவு என்பது இதன் பொருள். இதிலிருந்து பிறந்த வேறு சொற்களைப் பார்ப்போம் :


தெர் > தெருள்.   (உள் என்னும் விகுதி).    எ -டு:  உர் > உருள் ,   கட>   கடவுள்
தெர் > தெரி       ( இ ‍ : விகுதி )    தெரி > தெரிதல்.
தெர் > தேர்        (முதனிலை நீட்சி பெற்றது.)  தேர்> தேர்தல்.
                   வினைச்சொல்லாகவும் வரும்)     தேர் :    "காட்சி ஊர்தி  "
தெர் > தெரி > தெரி+சு+ அனம் > தெரிசனம். சு, அனம் விகுதிகள்.  அன் +அம்                                           =அனம்
               தெரிசனம் >  தர்ஷன்.
தெர் > தெரிவை. (தெரிந்து நடக்கும் பெண்  அல்லது பிறருக்குத் தெரிய நடமாடும் அகவையுடைய பெண்..)
தெர் > தெருட்டு > தெருட்டம்.      (தெருட்டம் > திருஷ்டம்)
              தெருள் + து =    தெருட்டு.   (எ -டு : உருள் + து  =  உருட்டு.)

தெர் > தெர்சனம் >  நிதர்சனம்.   நில்  > நி .  ~ + தர்ஷன் .    "நீங்காமல்  நிற்கும்  காட்சி "  அல்லது தெளிவான  உண்மை.

தேரை  <  திரை (திரைதல் )  not from the same root.




ஞாயிறு, 17 ஜூலை, 2016

எண்டிசை இணையம்

குளம்பி குடிக்கும் குறுகுகடை  உட்கார்ந்த்
த‌லசியெடுப் பாரரசுச்  செய்தி  ‍‍‍==== தொலையவது
வெட்டும் முடிவினைஞர் பேசுவர் இப்போதோ
எட்டுத் திசையுமிணை யம்.          ( 1 ) -

குளம்பி -  காப்பி 
 தொலையவது -  அது நிற்க 


அந்தவிருள் காலத்தும்  வீழ்ந்த‌  அணிபல‌வாம்
உந்துபொருள் இக்காலும் உண்டேகொள்  ‍‍=== நொந்தனையோ
எந்தக் கலிகாலும்  இஃதுண்டே மாறுமோ
பந்தம் குலையா வரை.           (2)

இக்காலும் -  இப்போதும்.
கலி காலும்  -  எழுச்சி காலத்தும்

உலகத்தின் பால்  பந்தம் கொள்வதால்  மனிதன்  பிறருடன்  முரண்படுகின்றான் .

ஆன அரசியல்  மென்குடி  வன்படை
மானும்  அறம்பொருள்  மாறாடக்   === காணிடங்கள்
எங்கும்வாய்  மூளை  எடுத்துச்  செலும்மாந்தன்
தங்கும்  நிலையோ  முரண் .        (3)

மாந்தன்   வாய்  மூளை  எடுத்துச்  செலும்  -   மனிதன் எங்கு சென்றாலும்  
வாயையும்  மூளையையும் எடுத்துச் செல்பவன்;    ( ஆகையால் )
ஆன அரசியல்  மென்குடி  வன்படை மானும்  அறம்பொருள்  மாறாடக்    காணிடங்கள்  -  அரசியல்  மென்மை உடைய குடி வன்மையுடைய   படை  அறம்  பொருள்  என எல்லா விடயங்களும்   அவன் மாறுபடும் படியாகக்  காணுமிடங்கள்  ஆகும்;  தங்கும் நிலையோ  முரண் -   அதனால்தான் அவன்  எதிலும் முரண் படுகின்றான் . ( உலகில்  முரண்பாடு  தங்குகிறது ,)

வாய் மூளை  இல்லாமலும் வாழ முடியாது; ஆகவே அவனைக் கடிவதில் பொருளில்லை .என்றபடி .




    


பங்காள முத்து

பங்காள  முத்து

இப்போது இந்த முத்து ஏதும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. மேற்கு வங்கம் உள்ளிட்ட முன்னைய  வங்காள தேசத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்த முத்துக்களையே  இது குறிக்கிறது. இவற்றைப்  பங்காள முத்து என்றனர். மன்னர்கள், குறு நில ஆட்சியாளர்கள் முதலானோர் இப்பெயரை இட்டிருத்தல் கூடும். (இவற்றை வாங்கினோர் என்பதால் )

தமிழ் நாட்டு முத்துக்களே உண்மையான மதிப்புமிக்க முத்துக்கள். முத்தாரம்  (முத்தியாரா )  என்ற சொல் இந்தோனேசியா மலேசியா முதலிய நாடுகளில் வழங்கும் மொழிகளிலும் ஊடுருவியுள்ளபடியால், தமிழக முத்துக்கள் உண்மையான உயர்ந்தவை என்பது பெறப்படும், மேலும் முத்து என்ற தமிழ்ச்சொல் மலாய் மொழியில் தகுதி என்றும் உயர்வு என்றும் பொருள்தருவது  இதை எடுத்துக்காட்டுகிறது.  பெர்முத்து திங்கி bermutu tinggi  (high quality ) என்ற மலாய்த் தொடர் இதனை வலியுறுத்தும்.

நாளடைவில் பங்காள முத்து என்றால் பொய் முத்து என்ற பொருள்
ஏற்பட்டுவிட்டது.  வங்காளம் என்ற சொல் பங்காளம் என்று திரிவது
வகர பகரப் பரிமாற்றமாகும். இதனைப் போலி என்று இலக்கணங் கூறும்.  போல இருத்தலின்  போலி.

வங்காளிகள் உண்மையில் "பங்காளிகள்" ; எப்படி எனில் இவர்கள் ஒரு பங்கு மங்கோலியக் கலப்பு உடையோர் என்பர். கூடிய மங்கோலியக் கலப்பு உடையோர் சற்று வெண்மையாகவும் குறைந்த கலப்பு உடையோர் சற்றுக் கருப்பாகவுமிருப்பதாகச் சொல்லப்படும். பங்கு  (part) 1 வெண்மைக் கலப்பினால் பங்காளிகள் ஆகி அது வங்காளிகள் என்றும் திரிந்ததென்ப. 3

ஆங்கிலேயர் வளையல்களை  அறிந்ததும்   வங்காள
நாட்டிலிருந்துதான். அதனால் வளையலுக்கு ஆங்கிலத்தில்
பேங்கிள்  bangle என்ற பெயர் உண்டாயிற்று.
Notes:
----------------------------------------------------------------------
1 அதாவது  தோல் மஞ்சள் நிறமும் இப்போது வெண்மையாகக்  கருதப்படுகிறது. வெளிறிய மஞ்சள்  என்பர் அறிஞர்   yellowish white.

2 edited.  will review.

3 திராவிட மொழி பேசிய  பங்கு  (bang) இனத்தவர் பெயரிலிருந்து இந்தச் சொல் வந்தது  என்பர்.   இவர்கள் பங்குத் (பாதித் )  திராவிடர்.  காலக்  கணக்கீடு  1000 BCE.   பங்கு பங்காளி முதலிய இன்னும் தமிழில் வழக்குடைய பதங்களாம்.


புதன், 13 ஜூலை, 2016

நல்ல ஓய்வே!

நாலினில் ஒன்று குன்றும்
நாட்களில் நல்ல ஓய்வே!
வாலினை ஆட்டும் நாயும்
வாய்மியாப் பூனை தானும்
சாலவே அன்பில் தோயும்
சலிப்பிலா நீக்கம்;  ஆக்கும்,
நூலினில் ஆடை போல‌
நுண்ணுணர் வொன்றாய் நண்பர்.

ஒவ்வொரு நாளும் வேறாய்
ஒழிந்திடில் உள்ளம் வேண்டும்
செவ்விய நன்மை; யாவும்
சேர்ந்ததே வாழ்க்கை ஆகும்.
துவ்விடும் ஊணில் நாளும்
தோன்றிடில் மாற்றம் நன்றாம்
அவ்விடுப் பெற்கே ஆற்றும்
அகவிரிக் கெல்லை இல்லை.


3 நாட்கள் ஓய்வு . நண்பருடன்
நீக்கம்  =  நாள்தோறும் நடப்பனவற்றிலிருந்து  விலகி இருத்தல். 
துவ்விடும்  =உண்ணும்   
எற்கே = எனக்கே .
அகவிரி -  மனத்தின் விரிவு .

சிவ போ பா.12 சிவனடியாரைப் போற்றுதல்


இனிச் சிவஞான போதத்தின் இறுதிப் பாட்டினை ( பாடல் 12) பாடிப் பொருளுணர்ந்து  உளமகிழ்வோம்.

பலவாறு முயன்றாலும் சிவத்தை அறிதல் எளிதில்  கிட்டுவதில்லை. அவன் என்னில்; நான் அவனில் என்னும் உணர்வுகூடத் தோன்றுவதில்லை. மும்மலங்களும் வந்து தடை செய்கின்றன. மாயை குறுக்கே நிற்கிறது. என்ன செய்யலாம் என்றால், ஒரு குரு தேவைப்படுகிறார். இறையன்பர்கள்  அருகில் நின்று  வழி காட்ட வேண்டியுள்ளது. கோவிலும் ஆங்கு  இறையை
அடுத்து நின்ற உருத்திராட்ச முதலிய அணிந்தோரும் தேவைப்படுகின்றனர். அவர்களுடன் பழகி, ஏற்ற அறிவுரைகள் பெற்று, இறையை இறுதியில் உணராலாம். அடையலாம். இதை இவ்விறுதிப் பாடல் விளக்குகிறது.

செம்மலர் நோன் தாள் சேரல் ஒட்டா
அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே.


செம்மலர் ‍:   செந்தாமரை மலர் போன்ற;
நோன் தாள் :  பெருமை பொருந்திய திருவடிகளை;
சேரல் ஒட்டா:  சென்று சேருவதைத் தடுக்கின்ற;
அம்மலம் :  அந்த கரிய வினைகளை;
கழீஇ :  விலக்கி;
அன்பரொடு மரீஇ :  இறைப்பற்றுடையாருடன் சேர்ந்து நின்று;
மால் அற :  மயக்கம் இல்லாத‌
நேயம் மலிந்தவர் :  இறையன்பு மிகுந்தார் பால் சென்று;
வேடமும் :  அவர் வேய்ந்திருக்கும் இறைப்பற்று குறிக்கும்
அணிகலன்களையும்;
ஆலயம் தானும் :  கோவிலையும்;
அரன் எனத் தொழுமே:  சிவம் என்று எண்ணித் தொழ வேண்டும்;
அப்போது சிவத்தை அடையலாம் என்றவாறு.

சிவனடியாரைப் போற்றுதல் சிவத்தைப் போற்றுதலேயாகும்.  சிவத்தை வணங்குதற்கும்   வணங்கி அடைதற்கும்  அடைந்து கலத்தற்கும்  வழி காணா  நிலையில்  சிவனடியாரைப் போற்றிச்  சிவத்தை அடைக   என்பது ஆசிரியர் கூறுவதாகும் .

சிவத்தின் தன்மையையும் ஆன்மாவின் தன்மையையும்  மும்மலங்களையும்  ஏனை விளக்கங்களையும் அறிந்திருந்தாலும்  சிவத்தை அடைந்துவிட இயலுவதில்லை.

பற்றுக பற்றற்றார் பற்றினை  அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு .

என்று கூறினது  அதனால்தான் என்றுணர்க.

உருத்திராட்சமும்  காவியும்  பகிரங்கம்.  மனவுணர்வே  முன்மையானது.  என்றாலும்  மனம் ஈடுபாடற்றுக்  கிடக்கிறது.  ஆகவே பகிரங்கத்திலிருந்து மனத்திற்கு முன்னேற வேண்டும்.  உருத்திராட்ச முதலியவை  யாவருடனும் பகிர்ந்து கொள்ளும்படியாகத் தெரிய நிற்பது.  பகிர் + அங்கம்.  பகிரப்  படுவதைப்  பெற்று  மேல் செல்க    என்றபடி .



சீனாவுக்கு எதிரான தீர்ப்பு

தென்சீனக் கடலினிலே தீவுகளும் திட்டுகளும்
தெள்ளொளியில்  திண்மைதரு குணக்கிலெழு சீனநாடு
வன்மையுடன் அவைதிருத்தி வளமுறுத்தி உரிமைபெற‌
வழக்கநிலை மாறுகொள வழங்கியபல் நடபடிகள்.

எல்லாமும் பிழைதோன்ற ஏலாத நிகழ்த்தினமை
எதிர்வந்த தீர்ப்பதனால் புதிர்நீங்கப் புரட்டிவிட‌
சொல்லாலே படுசினமாம்! சூடான முட்டுரைகள்
சூழுலகம் இவைகண்டு சோராமை காத்திருக்கும்.

சட்டப்படி வருதகவுச் சாய்தலிலாத் தீர்ப்புரையை
முட்டிமுகம் சுளிக்காமல் ஒட்டிவரின் விரிநெஞ்சம்;
குட்டியொப்ப முரண்டியற்றிக் குறுமைசெயல் தவிர்த்திடுதல்
முற்றுவளர் நெறிசெலவே முயன்றிடுதல் மூதறிவே.


வன்மை ‍: வலிமை
குணக்கு : கிழக்கு.
நடபடிகள் : செயல்பாடுகள்
ஏலாத : ஏற்றுக்கொள்ள இயலாதவை
முட்டுரைகள் :  statements of rejection against the tribunal
சாய்தலிலா:  non-partisan
விரி நெஞ்சம் :  magnanimous
குட்டியொப்ப : இளமையில் தெளிவின்மை போல‌
மூதறிவே:  maturity

சீனாவுக்கு எதிரான தீர்ப்பு 


ஔஷதம் ஒளடதம்


இச்சொல் எப்படி அமைந்தது என்பதை ஆய்வோம்.

சில பொருள்களை இடித்துத் தூளாக்கி மருந்து செய்வார்கள். இவற்றைச் சூரணம் என்பர். சிலவற்றை  காய்ச்சி எடுப்பார்கள்.  இன்னும் சில புடம்போட்டுத் தயார் செய்யப்படும். இங்ஙனம் மருந்து செய்யப் பல வழிகளைக் கையாளுவதுண்டு.

தயார் செய்தும் சில சற்று இளகிய நிலையிலேயே இருக்கும். இவை உண்மையில் "இளகியம்" ஆகும். இச்சொல் திரிந்து லேகியம் ஆகிவிட்டதுடன், இளகியம் மறைந்துவிட்டது.

அவிழ்தல் என்பது இளகுதல்.  சொரிதல், மலருதல், விரிதல், உதிர்தல்,  நெகிழ்தல் என்ற பொருளுடைய வினைச்சொல்.

இதிலிருந்து  அவிழ்+ அது+ அம் =  அவிழதம் என்று அமைத்தனர்.
அமைத்தகாலை, இச்சொல இளகிய அல்லது நெகிழ்வாக இருந்த‌
மருந்துகளைக் குறித்தது. தூளாக இருந்தது  தூளம்> தூரம் > செந்தூரம் என்று குறிக்கப்பட்டது போல, இளகிய நிலை மருந்துகளும் அவிழதம், இளகியம் எனப்பட்டன.

இவற்றுள் இளகியம் லேகியம் ஆனதுபோல, அவிழதம்? அவுடதம் >
அவுஷதம் ஆகிவிட்டது.  இச்சொல்  இப்போது மருந்து என்ற பொதுப்பொருளில் குறிக்கப்படுகிறது.






உயிர்களிடம் அன்பு

விலங்கியல் தோட்டத்தில்
குரங்கிற்குத் தனியிடம்;
அரங்கொன்றில் அமர்ந்து
மரங்களிடை இலையுணவு.

குரங்கெனப் பிறந்தனவே;
வரங்கள்பல பெறுந்தகைமை
இருந்ததனால் உயர்ந்தனவே;
சிறந்தஇடம் நிரந்தரமே.

நீர்த்தேக்கம் அருகினிலே;
பார்த்தயரும் நல்லழகே'
கூர்த்தவிழிக் குட்டிகளால்
கூடிவரும் மகிழ்வெல்லை.

உயிர்களிடம் அன்புவைப்பாய்;
ஓங்கிவள ரும்வாழ்வே!
பயிர்கள்போல் பசுமைபெறும்
பைந்தமிழின் இனிமைவரும்.




திங்கள், 11 ஜூலை, 2016

விலங்குகள் சொல்லாத‌ வெற்றுரை

மனிதன் உயர்வென் றவனே மதிப்பின்
இனிது மதுவாமோ இவ்வுலகில் தோழரே
நாய்பூனை சொன்னாலே நல்ல திலையேலோ 
காய்பழம் காணல் அரிது.  1

நாய்பூனை நல்லுரை தாரா நிலையாலே
வாய்திறந் தானே வழங்கிக்கொள் சான்றிதழைக் 
கூயுரைத்துக் கும்மாளம் கொட்டுகிறான் அங்கினிப்
போய்மறுக்க உள்ளார் எவர்.  2


விலங்குகள் சொல்லாத‌ வெற்றுரை கேட்டுக்
கலங்குதல் மற்றும் களித்தலும் வீணே
நிலங்கவர் நெஞ்சத்தான் நில்லாத் திருடன்
நலம்பிதற்றல் நாணுத் தரும்.  3

பொருள்:


1.  இனிது மதுவாமோ   -   இனிமையானதும்   அதுவாகுமா ?
    நல்ல திலையேலோ -   நல்லது  இல்லையேல்;    ஓ -  அசை .
    காய்பழம் காணல்  -  ஏற்கத்  தக்கது ,  தகாதது  வேறுபிரித்து  அறிதல்.

2   தாரா -  தராத .
      கூய்  -  கூவி . 

3     நலம்பிதற்றல் - தன்னைத் தான் புகzந்து கொள்ளல்.  
      நாணுத்தரும்  -  வெட்கத் தக்கது . 


அகர ககர வருக்கத் திரிபுகள்

பல சொற்களில் 0கிரகம் என்றே முடிதலைக் கண்ட புலவர்கள்,, இவர்கள் எம்மொழிப் புலவர் ஆயினும், இறுதியில்  கிரகம் என்பதைத் தனிச்சொல்லாகப் பெயர்த்து எடுப்பதை ஒரு குற்றமாகக் கருதலாகாது. 

கின்று என்று ஓர் இடை நிலை இலது எனினும், அதற்கு ஒரு தனித்தன்மையை வழங்கி இடைநிலை என்று பவணந்தியார் அறிவித்திருத்தலைக் காண்கையில், இது தெள்ளிதின் போதரும்.  

இம்மேதைகளைப் பின்பற்றி நாமும் கிரகம் என்பதைத் தனிச்சொல் ஆக்குவோம்.

இரு + கு+ அம் =  இருகம் >  கிருகம்.   இருப்பிடம்.

பேச்சிலும் உலக வழக்கிலும் கிரகம்.

எமது சில இடுகைகளையாவது படித்தபின் இது புரியும் .

எனவே அகர வருக்க முதலாயின சகர வருக்கங்களாய்த் திரிதல்
போலுமே, ககர வருக்கங்களாகவும் திரியும் என்று வைத்துக்கொள்வோம். இதில் மோசம் போய்விடாது. இவ் வுத்தியையே சங்கத மேனிலையரும் பின்பற்றினரென்பது தெள்ளத் தெளிவாகிறது.

அகர  ககர  வருக்கத் திரிபுகள்  :  அகரம்  சகரமாதல்  இயல்பு.   சகரம்  ககரம்  ஆதலும்  இயல்பு.  அங்ஙனமாயின்  அகரம்  ககரம்  ஆதலும் உரித்தே ஆம்   

ஞாயிறு, 10 ஜூலை, 2016

நன்றி Gratitude

பலருக்கும் பாத்தூண் வழங்கிப் பயன்தரினும்
உலரும் பசியும்நீர் உற்றுழலும் பிற்பொழுதில்
நலம்பழ நாளெண்ணி நன்மனமே கொண்டுவந்து
நிலம்போலும் பேணஉமை நின்றிடு நன்றியர்யார்?

உரை:

பாத்தூண் : பகுத்து அளிக்கும் உணவு.
உலரும் பசி:  வயிறு உதடு முதலிய உலர்ந்துபோகும் பசி.
நீர் : நீங்கள்        பிற்பொழுதில் : பின்னாளில்/
நலம் பழ நாள் எண்ணி : முன்னாளில் செயத நன்மைகளை எண்ணிப்பார்த்து.
கொண்டுவந்து :  கொண்டு உவந்து;
நிலம்போலும்:  பூமியைப் போல் 
பேண உமை : உம்மைப் பேண ; உங்களைப் பாதுகாக்க‌
நின்றிடு நன்றியர்:  இருக்கின்ற நன்றியுள்ளவர் யார்,  யாருமில்லை

சனி, 9 ஜூலை, 2016

ஆசையும் ஆசத்தியும்.



மனம் என்று ஒன்று எங்கே இருக்கிறது என்று கேட்கலாம். "ஹார்ட்" என்று ஒன்று உள்ளது.  ஆனால் அங்கிருந்துதான் மனவுணர்வுகளெல்லாம் வருகின்றனவா ?  ஆதாரம் எதுவுமில்லை.  எல்லாம் மூளையிலிருந்து வருகின்றன என்கின்றனர்  மருத்துவ அறிவியலார். "ஹார்ட்" என்பது குருதியை உள்ளிழுத்தும் வெளிக்கொணர்ந்தும் தரும் ஒரு குழாயுறுப்பு.  ஈர்த்தல் அடிப்படையில் எழுந்த ஈரல், ஈருள் என்பனவும்  அதே அடிப்படை "ஈர்+து+ அ+ய்+ அம்" (ஈர்தயம் ? இருதயம்) என்பதும் இதைத் தெளிவிக்கும்.  அ= அது. ஈர் து = ஈர்ப்பது. அம் = விகுதி. யகரம் = உடம்படுமெய். ஈரலும் இருதயமும்  அக்கை தங்கைச் சொற்கள். ஈ > இ குறுக்கம். சாவு+ அம் = சவம் என்பதும் குறுக்கமே. சா> ச.

ஒன்றை நோக்கி மனம் அசைவது  ஆசை.  அசை > ஆசை.  முதனிலை  திரிந்த தொ.பெயர்.

ஆசத்தி:  அசை+ அத்து + இ = ஆசத்தி.  ஆசை.

இனி ஆசு + அத்து + இ  எனினுமாம்.

ஆக்கிரகம் -

பழ மூலங்களைக் கொண்டு ஒரு புதுமையைப் படைக்குங்கால் அதன் பழமை வெளிப்படாமல் அப்புதுமை முன்னிறுத்தப்படுமானால், இதனின் வேறு திறன் யாதே இருத்தல் கூடும்?  இது கூறினோம் .

இப்போது ஆக்கிரகம் என்ற சொல் அமைப்பினைக் கவனிப்போம்.

நாம் சொல்லுக்குப் பொருள் சொல்வதை நோக்கமாகக் கொள்ளவில்லை.
அகரமுதலி சொல்லும் பொருள் ஏற்கத் தக்கதாக இல்லாவிடின், அதையும் தூக்கி எறிந்துவிட்டு, உண்மையான பொருளைக் கண்டுகொள்ள வேண்டியது இன்றியமையாதது ஆகும். ஆக்கிரகம் என்பது எந்த மொழிக்குரிய சொல் என்பதும் நமக்குத் தேவையில்லை. அது எனது உனது என்று சொந்தம் கொண்டாடுவோனை நாம் கண்டுகொள்ள முனையமாட்டோம்.

இந்தச் சொல்லில் இறுதியில் நிற்கும் சொல் அகம் என்பது.  அகம்
என்பது உள்  என்று பொருள்படும். மனம் எனினும்  அமையும்.

அடுத்து முன் நிற்கும் துண்டுச் சொல் இரு என்பது. ஆகவே இரண்டையும் புணர்த்தினால் இரகம் என்று ஆகிறது. இரு+ அகம் = இரகம்.   இருவகம் என்று புணர்த்தினும் அமையும் ஆயினும், இந்தப் புணர்ச்சியில் வகர உடம்படு மெய் வரவில்லை. அறம் பொருள் இன்பம் என்ற சொற்களில் அறம் என்பதில் அறு+ அம் = அறம் என்று வகர உட்ம்படுமெய் எப்படி வரவில்லையோ, அப்படியே இங்கும் இரகம் என்பதில் வரவில்லை. அறு+ அம் = அற்றம் என்றும் வரும் ஆனால் அது இன்னொரு சொல். அங்கு இரட்டித்தது. அதை இங்கு மேற்கொண்டு குழப்ப வேண்டியதில்லை.  இரகம் என்பதில் இரட்டிக்க வழியில்லை. இவற்றை தெளிவின் பொருட்டுக் கூறினோம். இவை நிற்க.

இப்போது ஆக்கிரகம் என்பதன் முதல் துண்டுக்கு வந்துவிட்டோம். அது
ஆக்கு என்பது.

ஆக்கு + இரு + அகம். =  ஆக்கிரகம்.

இரண்டு வினைச்சொற்களை அடுத்தடுத்துப் போட்டான்;   இறுதியில்  அகம்  வைத்தான்.

ஆக்கிரகம் என்பதற்கு 1 உறுதி,    2.சினம்,    3.விடாப்பிடி,    4.  வீரம், 5  மேற்கொள்ளுதல் என்பன வா(ய்)த்தியார்கள் கூறும் பொருள். இவை எல்லாமும் மனவுணர்ச்சி வகைகள் என்பர். மனிதன் ஆக்கிக்கொள்ளும் இவ் வுணர்ச்சிகள் அகத்தில் இருப்பவை.  ஆகவே ஆக்கு இரு அகம் என்பதைக் கண்டுபிடித்து இன்புற்றீர்.

தமிழா? ...... இது தமிழில் பெரும்பாலும்  வழங்க‌வில்லை போலும்.

---------------------------------------------------------------------------------------------------------
குறிப்புகள் 
நம் ஆய்வின்படி இரு என்ற சொல் பல புனைவுகளில் பயன்பாடு கண்டுள்ளது.  இரு+அக(ம்)+சி+அம்;  இரு+ அவி (ழ்) + க் + கை;  இரு+ ஆசு + இ; இவ்வாறு பல எண்ணிக்கை உள்ளன. பழைய இடுகைகள் பார்க்க .



பராக்கிரமம்

பரத்தல் என்ற‌ சொல்லை நாம் இங்கு பார்ப்பது இது முதல்முறை அன்று. பர என்ப‌திலிருந்து பரமன் என்ற அழகான சொல் வருகிறது.

பர > பரத்தல்.
பர > பரமன் (பர+அம் = பரம்; பரம்+அன் > பரமன்.)
பரம் > பரம்பொருள் 


பரம் என்றாலே எங்கும் பரந்தது என்று பொருள். இறைவன் எங்கும் இருப்பவன் என்று சொல்லப்படுவதால், பரத்தல் என்ற அடியிலிருந்து அவனுக்குப் பெயரமைத்தது அறிவுடைமை ஆகும்.

"பரந்த" நீர்ப்பரப்பு எனப்படும் கடலும் பரவை எனப்படும். பறவை வேறு.

பர என்பதன் தொடர்பில் இன்னொரு சொல்லைப் பார்ப்போம்.

அது பராக்கிரமம் என்ற சொல்.

ஒரு மனிதனின் வலிமை  எங்கும் விரிந்து யாவராலும் உணரப்படுமாயின் அது பராக்கிரமம் ஆகும். இதை:

பர+ ஆக்கு+ உரம் + அம் என்று பிரிக்கவேண்டும்.

உரம் என்பது வலிமை. அது எங்கும் விரிய உணரப்படுதல் பர என்ற‌
அடியாலும் ஆக்கு என்ற வினையாலும் கொணரப்படுகிறது. அம் என்பது சொல்லாக்க விகுதி.

பராக்கு உரமம் என்ற சொல்லை அமைத்தபின், அதில் ஒரு சிறிய மாற்றம் செய்யவேண்டும். அதுதான், பராக்கு+ உரமம் = பராக்குரமம்
என்பதை பராக்கிரமம் என்று "எளிதாக்குவது". இது உரம் என்ற சொல் உள்ளிருப்பதை மறைத்துப்  பொருளை ஒருவழிச் செல்லச் செய்கிறது.
பராக்கிரமம் என்ற சொல்லைப் பயன்படுத்துவோன், உரம் என்ற சொல்லை நினைவு கூர வேண்டியதில்லை. நினைவு, பொருட் சிதறாமை ஆயவற்றை இது உறுதிப்படுத்துகிறது. இது ஒரு மூல மறை திறமை ஆகும்.

இது நாளடைவில் திரிந்ததா அல்லது புனைவுபெற்றதா என்பது கால இடைவெளியால்  திட்டவட்டமாகச் சொல்லற்கில்லை. எனினும் உகரத்திற்கு இகரம் போலியாக அல்லது மறுதலையாக (vice versa) வருதலுண்டு. எடுத்துக்காட்டுகள்  பழைய இடுகைகளில் காண்க. எளிய காட்டாக,  இதழ் <> உதழ் என்ப  காண்க.

எனவே இந்தச் சொல்லை நோக்குந்தோறும் அதன் தமிழ் மூலங்கள் உங்கள் சிந்தையில் வந்து தெளியும் என்பதை  இங்குக்   கண்டின்புறுவீர்.

பழ மூலங்களைக் கொண்டு ஒரு புதுமையைப் படைக்குங்கால் அதன் பழமை வெளிப்படாமல் அப்புதுமை முன்னிறுத்தப்படுமானால், இதனின் வேறு திறன் யாதே இருத்தல் கூடும்?


குறிப்பு:  பராக்குரமம்  என்பதை  பராக்ரம என்கையில்  இந்தத் தொல்லை இல்லை. இதுவே பிற மொழியிற் கையாளப் படுவது.  குகரம் களைதல் .






வெள்ளி, 8 ஜூலை, 2016

காயத்திரி திராவிடச் சொல்

Continue reading from http://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_8.html

based on the word:  காய்தல்  :  ஒளி வீசுதல் .

காயத்திரி என்பது ஒரு மந்திரத்திற்கும் பெயராய் உள்ளது. காயத்திரி
என்பதற்குச்  சமஸ்கிருதப் பேரகரவரிசைகள் பல ஆழ்ந்த பொருளுரைக்கும்.

ஆனால் இச்சொல்lலை  ஏனை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் காண இயலவில்லை .இது ஒரு திராவிடச் சொல்லே என்பது இதனால் தெளிவாகிறது.

காயா என்பது வெற்றிகொண்டது, பற்றப்பட்டது என்ற பொருளில் வரும்
ஒரு சொல்லாம். காயத்திரி என்பதற்கு அல்லது அதன் தொடர்புடைய  சொல்லுக்கு  ஒரு பாடல், ஒரு பா அடியளவு என்றும் பொருள் காணப்படுகிறது.

இவை எங்ஙனமாயினும் இதை ஒரு தென்சொல்லாகக் கொண்டால், காய ‍= ஒளி வீச, திரி = மாறு  அல்லது மாற்றம் தருவது என்று கொள்ளலாம். திரிதலாவது: மாறுதல் என்பதாம். இருள் திரிந்து ஒளியாய் மாறுவது
எனல் பொருத்தமே .

காயத்தை அதாவது உடலை; திரி  =  திரியாக எரியத் தருவது என்று
கூறினாருமுளர்.


தமிழிலும் இனிய பொருளே கிட்டுகின்றது என்பதறிக.  இது எந்தமொழிச் சொல்  என்பதன்று  ஆய்வு;   தமிழில் பொருள் கூறல்  இயலுமா  என்பதும் இயலுமாயின்  யாது பொருளாம் என்பதுமேயாம் .

காய் - காய்தல் வகைகள்.

தமிழில் காய்தல் என்பது சூடாதல், ஒளிவிடுதல் என்று பொருள்படும் ;
வெயில் காய்கிறது, நிலா காய்கிறது என்ற வழக்குகளையும் நோக்குதல் வேண்டும்.

இங்ஙனம் ஒளிசெய்யும் கோள்களும் நக்கத்திரங்களும்  காணப்படும் இடம் காயம் எனப்பட்டது.  காய்+ அம் = காயம். இதில் அம் என்பது விகுதியாகும். இக்காயச்  சொல்  தொல்காப்பியத்திலும்  காணப்படும் .

வெங்காயமும் காயம் எனப்படுவதே. இதற்குக் காரணம், இதன் தோல் காய்ந்து காய்ந்து எடுபட்டுக்கொண்டிருக்கும். உரிக்க உரிக்க அதில் தோல்தான் என்பார்கள்.  தொடக்கத்தில் காயம் என்றே  சொல்லப்பட்ட வெங்காயம், பின்னர் வேறுபடுத்தும் பொருட்டு "வெம்+காயம்" வெங்காயம் எனப்பட்டது.  வெம் (வெம்மை) அதன் நெடியையும் கண்களில் நீர் வரவைக்கும் தன்மையை யும்   குறிக்க எழுந்த அடைச்சொல் ஆகிறது.


பெருங்காயம் என்பது ஒரு மரப் பிசின். அது காய்ந்து கட்டியாகுவது,
அதுவும் காயம் எனப்பட்டாலும், வேறு படுத்தப் பெருங்காயம் எனப்பட்டது.  இது ஒரு மருந்துப்பொருள் ஆதலின், பெரும் என்ற அடைமொழி பெற்று விளங்குகிறது,   இது மலையாளத்தில் காயம் என்றே இன்னும் சொல்லப்படுகிறது.

காயம் என்பது புண்ணையும் குறிக்கும். புண்    ,  மேல்  (அரத்தம் ) காயும் தன்மை உடையது   ஆதலின் காயம் எனப்பட்டது.

காயங்கள் பலவாதலின், வான் என்னும் காயம் ஆகாயம் எனப்பட்டது.
ஆகாயம் என்றால் காயம் ஆவது. வினைத்தொகை.  ஆ‍ = ஆதல்.
இது பிறமொழிகளிலும் புகுந்துள்ளது.

நேயம் என்பது நேசம் ஆனதுபோல் ஆகாயமும் ஆகாசமாகும்.   ய - ச

காச நோய் இருப்பவர்களுக்கும்  இருமலுடன் காய்ச்சலும் வரும். உடம்பும்
காய்ந்து ஒல்லி ஆகிவிடுவர். இவற்றால் அது காய நோய் >  காச நோய் ஆயிற்று. யகர சகரப் பரிமாற்றம்.

இச்சொற்கள் தமிழே  ஆகும் .

தொடர்புடைய  அடுத்த சொல்  காயத்திரி .

continue at:   http://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_41.html

வியாழன், 7 ஜூலை, 2016

சுத்திகரித்தல்

meta-analysis of kariththal.
‍======================

இந்தச் சொல்லின் கரித்தல் என்பதன் பொருளையும் அச்சொல்லின் பிறப்பு அமைப்பையும் கவனித்து மகிழ்வோம்.

இப்போது கரித்தல் என்று முடியும் சொற்கள் சிலவிருப்பதாகத் தெரிகிறது. இவற்றுள் சுத்திகரித்தல் என்பது ஒரு முன்மை வாய்ந்த சொல்லாகும்.

சுத்தி என்பது சுத்தம் அல்லது தூய்மை. இது உகர முதலாகிய உத்தம் என்ற சொல்லினின்று திரிந்தது என்பது தெளிவு. = என்பது முன் உள்ளது என்றும் பொருள்படும் ஒரு முதன்மை வாய்ந்த சுட்டடி ஆகும். இதிலிருந்து உத்தம் என்ற சொல் தோன்றியது.

+ து + அம் > + த் + து + அம் = உத்தம்.

து என்பது உடையது என்று பொருள்தரும் ஒரு விகுதி.

எ - டு :  முதல் + து =  முதற்று  (முதலாக  உடையது )

இதில் இரண்டாவது நிலையில் ஒரு தகர ஒற்றுத் தோன்றியது. இது
எழுத்துக்களைப் புணர்த்தியதனால் தோன்றிய தகர ஒற்று ஆகும்.

இது இன்னும் நீண்டது. இரண்டாவது அம் விகுதி பெற்றது.

உத்தம்+ அம் = உத்தமம்.

ஒன்று மட்டும் இன்றி இரண்டாவது, மூன்றாவது நான்காவதென்று
விகுதிகள் பெற்ற சொற்களும் பல. விகுதிகளைக் கொண்டு சொற்களை மிகுத்தல் தமிழியல்பு ஆகும்.

உயிர் முதலாகிய சொற்கள் மெய் முன்னில் ஏறித் திரிதல் முன்னர் விளக்கப்பட்டுள்ளது. அவ்விடுகைகள் காண்க.

உத்தம் > சுத்தம். சுத்தம் > சுத்தி,

இச்சொல் முன்னர் விளக்கப்பட்டுள்ளது.

ஆறு நீர்நிலை முதலிய தூய்மைப் படுத்துவோர், அங்கு பிடித்துள்ள அசடுகளை அரித்தெடுத்தல் இயல்பு.

சுத்திக்கு அரித்தல் > சுத்திக்கரித்தல் > சுத்திகரித்தல்.

இங்கு ஒரு ககர ஒற்று மறைந்தது. நாளடைவில் அரித்தல் கரித்தல்
ஆயிற்று.

ஒப்பீடு: கார்+ ஆக்கு+ இரு + அகம் = காராக்கிரகம் இதிலிருந்து
கிரகம் என்ற சொல் பிறழ்பிரிப்பால் தனிச்சொல் ஆயிற்று.

அதுபோல் கரித்தல் தனிச்சொல் ஆகி, சுத்தி என்பது சுத்தம் ஆனால் கரித்தல் என்பது செய்தல் என்று உணரப்பட்டு, கரித்தல் செய்தலானது.

ஆனால் உப்புக்  கரித்தல் என்பதில்  கரித்தல்  சுவையைக்  குறிப்பதாகும் .  அது வேறு.   

இதன்பின் செய்தல் என்ற துணைவினை தேவைப்படும் சொற்களில்
கரித்தல் செய்கைப் பொருளில் சேர்க்கப்பட்டது.


‍‍‍

புதன், 6 ஜூலை, 2016

கங்கையில் முருகன் .

http://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_10.html

தொடர்ந்து:


முருகன் ‍  அழகு என்று பொருள்.  எங்கெங்கு காணினும் அழகு. எங்கெங்கு நோக்கினும் அவன் அருள். அவனில்லாத இடமே இல்லை.
அவன் பழனியில் மட்டுமா இருக்கின்றான்.பரந்த உலகெங்கும் உள்ளான்.
கங்கையிலும் இருப்பான், காவிரியிலும் இருப்பான். இப்படிப் பார்த்தால்,
அவன் கங்கைக்கும் உரியவனே. சிவன் வேறு, முருகன் வேறு அல்லனென்று அருணகிரியார் அறைந்திடவில்லையோ  அவர் பாட்டில்?

நெஞ்சக் கன கல்லு எங்கெங்கெல்லாம் நெகிழ்ந்துருகுமோ அங்கெல்லாம்
அவன் இருப்பான்.  அண்ணாமலை அடிகளாரின் கருத்து .

கங்கை > காங்கேயன்.

இப்படி வருதலும் உரித்து. இது தந்திதாந்த நாமம் என்பர். மனு> மானவன் என்பதை விளக்குமிடத்து முன் இடுகையில் தத்திதாந்த நாமம் பற்றி எடுத்துரைத்துள்ளோம்.



குமரகுருபரரும் ஒளரங்ஜேப் மாமன்னரும்



This is reposted as half of our post was not visible when we posted it earlier on. There is some bug

causing visibility problem. Hope this appears clear.

சகலகலாவல்லிமாலை




திருப்பனந்தாள் என்ற ஊரில் குமரகுருபர அடிகள் நிறுவிய சைவமடம் உள்ளது. இவர் பாடிய நூல் சகலகலாவல்லிமாலை என்னும் வணக்கப்பாடல்கள் கொண்டது. இந்நூல் தில்லி மாமன்னர் ஒளராங்ஜேப் அவர்களின் அவையில் அரங்கேற்றம் கண்ட பெருமையை உடையது.

இதனைப் பெருமைப் படுத்தும் வண்ணம் இம்மாமன்னர் காஞ்சியில் உள்ள குமரகுருபர சுவாமி மடத்திற்கு மடம் கட்டிக்கொள்ள இடமும் அதனைப் பிற்காலத்தில் நிறுவாகம் செய்யப் பல வேலி நிலங்களும் அளித்துள்ள‌
வரலாறு இந்நூலின் பழைய ஏடுகளில் காணப்படுவது குறிப்பிடத் தக்கது.


இதை அறிந்தின்புறு இவ்வேளை அம்மாலையினின்று ஒரு பாடலைச் சுவைத்தல் பொருத்தமாகுமன்றோ :


நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும் பொற்கொடியே கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலா வல்லியே.

உரை:

நாடும் ‍: இறைப்பற்றில் பயன்பெறுவோரும் கவிவாணரும் சிந்திக்கின்ற,

பொருட்சுவை, சொற்சுவை தோய் தர ‍: பொருளின் இனிமையும் சொல்லின் இனிமையும் நிறைவாகின்ற;

நாற்கவியும் ‍: நான்குவகையான ( வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய ) பாடல்களும்;

பாடும் பணியில் ‍ : இயற்றுகின்ற செயலில்,

பணித்தருள்வாய் : எம்மை அமர்த்தி அருள் செய்க;

பங்கயாசனத்தில் கூடும் பசும் பொற்கொடியே ‍: தாமரை மலராகிய இருக்கையில் அமர்ந்துள்ள வாடாத பொன்னின் வல்லியே;

கன தனக் குன்றும் ‍: சுமையான செல்வமென்னும் குன்றினையும்;

ஐம்பால் காடும் : ஐந்து நிலங்களிலும் அமைந்துள்ள வனங்களையும்;

சுமக்கும் கரும்பே ‍   -   தூக்கி வைத்திருக்கின்ற இனியவளே;

சகல கலா வல்லியே = எல்லாக் கலைகளையும் தருகின்ற கொடிபோன்றவளே.

என்றவாறு.

Further reading:

1, On Aurangzeb and his interest in Languages:   read http://www.thehindu.com/opinion/interview/scholar-audrey-truschke-aurangzeb-is-a-severely-misunderstood-fig

‘Aurangzeb is a severely misunderstood figure’


2  . பொன்முடி திரையில் குமரகுருபரர்:

இப்படத்தில் கதையில் குமரகுருபரர் கதைமாந்தர் வாழிடத்திற்கு வருகை புரிவாதாகக் காட்சி வருகின்றது.  அதில் அவர் டில்லி செல்வதாக அறிவிக்கிறார். அவருடைய நூலை அரங்கேற்றவும் மடம் கட்டுவதற்கு நிதி பெறவும் அவர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று அறிக.



செவ்வாய், 5 ஜூலை, 2016

காங்கேயன்

 இப்போதெல்லாம் சிங்கப்பூர் மலேசியா வெங்கும் ஒரே காங்கையாக இருக்கிறது.  அதைத் தணித்துக் கொள்வதற்கு  என்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.  குளிர்ந்த நீரை அருந்துவது ஒன்றே நான் அறிந்தவழியாகும். நிலக்கோள் வெப்பமடைந்துவிட்டது என்று அறிவியலார் சொல்வர்.

நாம் வழிபடும் தெய்வங்களிற் சில, நீருடன் இயைந்தவை.  எடுத்துக்காட்டாக விஷ்ணு,  கடல், காயம் ( ஆகாயம் )  ஆகியவை
இயைபாகக் கூறப்படும். " இங்கு வாராயோ என் கண்ணனே, மேக நீல\வண்ணனே, ஒய் ரம்பனே"   என்ற பாடல் இனிமையானதுதான். வேறு சில தெய்வங்கள் வெப்பம், எரிதல், தீ, காங்கை என்பவற்றுடன் இயைந்தவாகக் கூறப்படும். கண்ணன் அல்லது விஷ்ணு நீரின் அமைப்பு அல்லது அம்சம்  ஆனதுபோல இவை எரியின்   அம்சம் அல்லது அமைப்பு.

விஷ்ணு என்பது விண்ணு என்பதன் திரிபு. இதைப் பழைய இடுகைகளிற் காணலாம்.  அழிக்கப்பட்டனவா என்பது தெரியவில்லை.

முருகன் அல்லது அழகு எப்போதும் தீயினுடன் தொடர்புறுத்தப்படுவது.  தமிழ்க்கடவுள் என்று போற்றப்படுவது.ஒளவை இத்தெய்வத்தை " எரிதவழ் வேலோய்" என்று விளித்துப் பாடுவதிலிருந்து இதை அறிந்துகொள்ளுதல் எளிதே ஆகும்.

இவற்குக்  காங்கேயன் என்பதும் பெயராகும்.  காங்கை என்பது எரித் தொடர்பினது. காங்கை ஏயவன் காங்கேயன். இனிய தமிழ்ப் பெயர். ஏய்தல் என்பது இயைதல். ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விப்பவள்  என் அம்மை. ஆய என்பதற்கு ஏய என்பது எதுகை ஆதலால்  அது அழியாமல் தப்பித்த சொல். ஏய என்பதை உங்கள் எழுத்துக்களில் பயன்படுத்துங்கள். அப்போதுதான் தமிழ்ச் சொற்கள் மறையாமல் நம்மிடை இருக்கும். இன்னொரு தமிழச்சியிடம்  ரொம்ப பனாஸாக இருக்கிறது என்னாமல், காங்கையாக இருக்கிறது என்க. மலாய்க்காரப் பெண்ணிடம் பேசுங்கால்  மலாய் பயன்படுத்தவும்.பனாஸ் = சூடு, காங்கை.

வேய்ந்தன் என்பது வேந்தன் என்று திரிந்ததுபோல்,  அதாவது ஒரு யகர ஒற்று மறைபட்டது போல,  காய்ங்கை என்பது காங்கை ஆயிற்று. சில மாற்றங்கள் நிகழ்ந்ததனால் சிறுவன் பெரியவனாதல் போல, சில எழுத்துத் திரிபுகள் வேண்டும்.  அவற்றைப் போற்றுவோம். சொற்கள் தனித்தன்மை பெற, புதிய சொன்னீர்மை பெற இத்தகைய திரிபுகள் இன்றியமையாதவை என்றுகூடச்  சொல்லலாம். திரிபுகள் கருத்தில் வளரும் மனத்தடைகளை விலக்குபவை.  ஆனால் அதற்காக எல்லாவற்றையும் திரித்துச் சொல்லவேண்டும் என்பது பொருளன்று. பாய்ம்பு என்பது பாம்பு என்று மாறாவிட்டால், பாய், பாய்தல், பாய்‍‍ தலையணை எல்லாம் நினைவுக்கு வந்து கருத்துக்கு ஒரு மனத்தடையை உண்டாக்கும். தொடர்பற்றவைகளும் தோன்றி வருத்தும். நகைச்சுவை முகிழ்க்கலாம். ஆகவே திரிபுகள் வரவேற்கத்தக்கவை. மோர்மிளகாய் போல. வேண்டிய வேண்டியாங்கு ஏற்பது அறிஞர் கடன்.


கண்ணயரத் தெம்புவந்ததே!

இலெனோவா என்பதொரு புதுமைஎனப் பொருள்படுமே
இருந்த இடம் வேறிங்கே இணையமதிற் கிட்டவிலை
இயலவிலை எதுசெய்தும் இயைந்தவிழி உறக்கமுடன்
என்செய்வேன் உறங்கிவிட்டேன்!
கலைநாவில் கவிதையொன்று கருதியதும் விரைந்துவரக்
கலைமகளும் அருளவிலை காண்தகவுத் தொலைக்காட்சி
கண்டயர்வு கொண்டபடி கவலைஎன்ன ஒன்றுமிலை
கண்ணயரத் தெம்புவந்ததே!

ஞாயிறு, 3 ஜூலை, 2016

ஊழ்வினை உன்னை விட்டுவிடாது,

ஒரு வீட்டை வைத்துக்கொண்டு அதற்குப் பல தொகைகளையும் வரியென்றும் கட்டணங்களென்றும் கட்டிக்கொண்டு இருப்பது தொல்லை,  என்ன செய்யலாம். வீட்டை விற்றுவிட்டால் தொல்லைகள் நீங்கிவிடும், என்று ஒருவன் எண்ணினான். விற்றுப் பணமாக்கினான.  அதன்பிறகு அவனுடைய முட்டாள் மனைவி தன் தம்பிகள் தங்கைகள் எல்லோருக்கும் மறைமுக உதவிகள் செய்யலானாள். கொஞ்சம் கொஞ்சமாக இப்படிப் பெற்றுக்கொண்டிருப்பதை விட ஒரு மொத்தமாக எடுக்கலாம் என்று நினைத்த அவள் தம்பி தங்கைகள் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து அவள் நகைகளை முதலில் கொள்ளை இட்டனர்.
கொள்ளை அடிப்பவர்கள் அதனைக் கண்டுபிடிக்க இயலாதவாறு செய்து வெற்றிபெற்றனர்.   நகை போன துயரத்தில் இருந்த அவளிடம் மெதுவாகப் பேசி ஐயப்ப பூசையில் கொண்டுபோய்ச் சேர்த்தனர்,  அங்கு அவள் மன அமைதி ஒருவாறு அடைந்தாள். கொஞ்சம் தேறியவுடன் இழந்த பணத்தை மீண்டும் பெற ஒரு வழி கூறி ஓர் இலட்சத்தை வாங்கி, வட்டி வியாபாரம் நடத்துவதாகக் கூறினார்.
சிலமாதங்கள் கழித்து, இடையில் இருந்த தரகன் பணத்துடன் ஓடிவிட்டான் என்று நாடகமாடிவிட்டனர். இப்போது அவனுக்கும் அவளுக்கும் கையில் காசில்லை.

இப்போது விடயத்துக்கு வருவோம்.  வீட்டை விற்றுவிட்டால் தொல்லைகள் முற்றுப்பெறும் என்று எண்ணியது நிறைவேறியதா?

ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்றார் இளங்கோவடிகள். தொல்லைகளிலிருந்து தப்பிவிட முடியாது. இருந்தாலும் முயற்சி
திருவினை ஆக்கும் என்றார் வள்ளுவர். முயன்று கொண்டிருங்கள்.

சோவியத்தை உடைத்துவிட்டால் சடாம் உசேன் கிளம்புகிறான்; சடாமினை  ஒழித்துவிட்டால்  ஐ எஸ் கிளம்புகிறது, ஏ மனிதனே
உன் ஊழ்வினை உன்னை விட்டுவிடாது,

ஆனால் மெய்வருத்தக் கூலி ஒன்றிருக்கிறது,  அது கிடைத்தாலே போதும் என்கிறாயா?

சாம் > சாமி

சாமியை கீழே விழுந்து ( சாய்ந்து அல்லது முன்னாகத் சாய்ந்து) வணங்குவது இன்றும் உள்ளது, பிற மதத்தாரும் முன் வீழ்ந்து வணங்குதல் காண்கிறோம்.  சாதல் என்பதும் சாய் என்ற சொல்லிலிருந்து பிறந்ததே.  மொழியில் இவையெல்லாம் கருத்து வளர்ச்சியில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

சா >  சாய்,  சாய்தல்.
சா >  சாதல்.
சா >  சாம் >  சாமி >  சுவாமி >  ஸ்வாமி,

சாம் என்பதே மூலம் என்பதை பிற தமிழறிஞரும் கூறுவர்,

சாம் என்ற மூலம் தமிழில்மட்டும் காணப்படுவது. இங்கு யாம் கூறுவது சாம் என்ற மூலத்திற்கு மூலமாவது‍  அதாவது அடிமூலம் சா என்பது.  அத்துடன் அதன் பின்னணிக் கருத்தையும் விளக்கினோம்.

சாமி  : பெறப்பட்ட பொருள்:   சாவு முதலிய நடப்புகளைத் தீர்மானிப்பவன் ;
வணக்கத்திற் குரியவன் . 

தொடர்புடையன

https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_12.html

https://sivamaalaa.blogspot.sg/2016/07/blog-post_3.html




அதிகாரி பெரிய நாய்

ஒவ்வொரு மொழியிலும்  நாம் அறிந்து நினைவில் கொள்ளத்தக்க சிறப்பான சொல்லாக்கங்களும் சொல்லாக்கத் தொடர்களும் உண்டு.

அடியார் என்ற சொல்லைப் பாருங்கள்.  அடி என்பது காலின் ஒரு பகுதி. இதிலிருந்து  பரமனைப் பணியும் பற்றருக்கு ( பக்தருக்கு)ப் பெயர் அமைந்தது பொருத்தமே. இதை மனப்பதிவு முறையில் அமைந்தது என்று ஒதுக்கிவிட முடியாது.  அடிகள் என்பதை சுவாமிகளுக்கு வழங்கியதும் பொருத்தம்தான்.  சுவாமி என்பது சாம் என்ற பழந்தமிழ்ச் சொல்லிற் பிறந்தது. சாம் என்பது கடவுள், அடிகள் என்று பொருள்படினும் இது சாதல் என்பதிலிருந்து வந்ததாகத் தொடர்புபடுத்துவதில் தவறில்லை. பல மதங்களும் மதம் கடவுள் பற்றிய பதங்களும் சாவினுடன் நெருங்கிய கருத்துக்கள் கொண்டவை.
இதை முன்  இடுகை ஒன்றில் விளக்கியுள்ளோம். அவண் காண்க.  Click the link below.

https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_12.html

சா> சாம்;  ஒ. நோ.  தே >  தேம்> (  தேன். )



தேம்பாய உண்டு தெவிட்டு மனம் என்றான் கம்ப நாடன்.

மலாய் மொழியில் காக்கி தங்ஙான் என்றால்   அலுவலக ஊழியர்.  இதன் சொற்பொருள் கால்‍ கை என்பது.  ஸ்டாஃப்  (staff  -  English )  என்பது கம்பு, குச்சி
என்று பொருள்படுவது. இன்று அக அலுவலரைக் குறிக்கிறது.

சீன ஹொக்கியன் கிளைமொழியில் நாய் என்பது நாயான விலங்கையும்  அதிகாரியையும் குறிக்கும்.  அதிகாரி என்றுகுறிக்கையில் பெரிய நாய் என்று அடைமொழி தரப்படும். "துவா காவ்" என்பது அது.

அமைச்சரவை என்று பொருள்படும் கேபினட் என்பது பேழை என்று பொருள்படும்.  அவைத்தலைவரைப் பேசுநர்   speaker  ( Mr Speaker Sir )  என்றன்றோ சொல்கிறார்கள். பேரரசியிடம் அந்தக்காலத்தில் சென்று பேசும் தகுதி அவருக்குமட்டுமே இருந்தது. ( The Lords always had  been accepted for Royal Audience but the Commons could only speak through the Speaker, elected by themselves. )  He spoke for them.  இதெல்லாம் வரலாற்று வழிவந்த சொற்கள்.

அடியார், அடிகள், அடிமை என்ற சொற்கள் திறம்பட அமைக்கப்ப்ட்டுள.
அறிந்து மகிழ்வீர்.
------------------------------------------------------------------------------------------------------------------------

  நாங்கள்    மகிழ்வீர்   என்று தட்டச்சு செய்தால் இது  மக்கீஸ்விற்  என்று அடிக்கிறது.  இதைச் சிலர் நோண்டி  இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்கள் வாழ்க‌.  ( வாழ்க‌ என்பதை வாஸ்க்கா என்கிறது. )   If there are mistakes appearing after the posts are created and uploaded. these chappies are responsible, 99 percent. However we review whenever possible.

சனி, 2 ஜூலை, 2016

பெண்களுக் கெதிரான வன்முறைகள்

பெண்களுக் கெதிரான வன்முறைகள்
பேர்குறிப்   பதுவீணே எந்நிலத்தும்
கண்களுக் கெதிர்நேர்வ தென்றபோதும்
கண்டவர் விழிமூடி நின்றுபோகும்
அண்புது  நடப்பேபல் எண்படுமாம்!
ஆழ்கவன் றூர்கண்னீர் சிந்திடவே
மண்புதை கொடுமைகள் கண்டிடிலோ
மன்னுயிர் களும்வாடும் நெஞ்சுநிற்கும்.



Notes:

வன்முறை  -   violence  
எந்நிலத்தும் -   எந்த நாட்டிலும், கண்டத்திலும்
விழிமூடி நின்று போகும் ‍-  கண்னை மூடிக்கொண்டு  நின்றுவிட்டு அங்கிருந்து  அதன்பின் அகலும்.
அண்புது ‍ - அண்மையில் நடந்த புதிய‌
பல் எண்படுமாம்  :  பல எண்ணிக்கையுள் படும்; அல்லது பல‌
எண்ணிக்கையுள் அகப்படும்
ஆழ்கவன்று   -  ஆழ்ந்து கவன்று; ( கவலைப்பட்டு.)
மண்புதை ‍-  மண்ணிற் புதைக்கும்.( நரபலி முதலியவையும். கொல்லப்பட்டுப் பபுதைப்பதும் அடங்கும்)









வெள்ளி, 1 ஜூலை, 2016

அதுபின் ப்ரசங்கம்.....

ஒரு மனிதன் தன் வீட்டினுள்ளேயே இருந்துகொண்டு தனிமையில் பேசிக்கொண்டிருக்கலாம்.  அவன் பேசுவது வேறு யாருக்கும் கேட்கப்போவதில்லை. (தற்காலத் தொலைத்தொடர்புகளைக் கணக்கில் கொள்ளவேண்டாம்.)   அவனுடைய சொந்த வீட்டாருக்கே கூட அதைக் கேட்டுக்கொண்டு கைதட்டி ஆரவாரம் செய்யும் செயலுடையாராய் இருக்கவியலுமோ என்பது   ஓர்  ஐயப்பாட்டுக்குரிய கேள்வியாகும். ஏசு நாதரேகூட இவ்வாறு சில கூறி அறிவுறுத்துகையில்  இவர் நம் அடுத்த வீட்டுத் தச்சர் மகனல்லரோ ,  இவர் யாது நம்மிடம் கூறவேண்டியுள்ளது என்று பேசிக்கொண்டனர் என்ப.  எனவே  பேசுகிறவன் வெளியில் சற்றுத்  தொலைவில் போய்ப்  பேசினால் ஒருவேளை எடுபடலாம்.  சும்மா பேசாமல் ஒரு சங்கையும் கொண்டுபோய் ஊதிக்கொண்டு பேசினால் நாலு பேர் கூடி நின்று கேட்பார்கள். இதனை புறத்தே ஊதப்படும் சங்கு
என்ற பொருளில் புறசங்கம் என்றனர்.   இவ்வழக்கே நாளடைவில்  ப்ரசங்கம் என்று கொஞ்சம் திரிந்து வழங்கியது,  சங்கு என்பதும் சங்கம் என்பதும் ஒரு பொருளனவாகும்.

இதுபோலும் திரிசொற்களைச் செந்தமிழில் சேர்த்துவிடாமல் அவற்றை வேறொரு தொகுதியில் சேர்த்து வைத்ததும் ஒரு பாராட்டுக்குரிய செயலே ஆகும்.

எனினும் இவைபோல்வன தமிழ் மூலங்களை உடைய சொற்களே ஆகும், சங்கு என்பது பல்வேறு திரிபுகளுடன் பல மொழிகளிற் பரவிப் பெருமை சேர்க்கிறது. அவற்றைப் பட்டியலிடல் வேண்டாம்,

புற சங்கம் > ப்ரசங்கம்.

புறத்தே சங்கு ஊதிக் கூட்டத்தைக் கூட்டிப் பேசுவது  புறசங்கம்,  அதுபின் ப்ரசங்கம்.

குறிப்பதிற் குழப்பமே.

ஒப்புமை நோக்கில் தப்பினைச் செய்தார்
செய்தது பிழையே வைதனர் அவையோர்
அவையோர் அறிவித் தனர் அர சருக்கே
அரசர் ஆணை பதவிப் பறிப்பே.
பறிப்புக் குரியோன் குறிப்பதிற் குழப்பமே.



https://sg.news.yahoo.com/selayang-mosque-chairman-faces-axe-inviting-non-muslim-040600866.html