வெள்ளி, 30 செப்டம்பர், 2016

முப்பது தாண்டுமுன்னே


http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_2.html

தொடர்ந்து படியுங்கள்:


முப்பது தாண்டுமுன்னே முழுத்தொப்பை வெளியேள்ள‌
அப்பனுக் கப்பன்போலே அசைந்தாடி நடப்பதென்னே!
கப்பலும் ஆடாதன்றோ இப்படிக் கடலின்மீதே!
செப்பினோம் ஐயேநீரே  சேமமே காத்துக்கொள்வீர்.

அளவின்றி உண்ணோம் யாங்கள்

அளவின்றி உண்ணோம் யாங்கள்;
அடிசிலைச்  சமன்செய் துண்போம்;
களவில்லை நெஞ்சில் ஊணைக்
கருதியே வாழ்வ தில்லை;
இளைஞர்கள்  இதைச்சொன்  னாலும்
இவருடல்  எடையால் வீங்கி
அளிகமும் நலமும்  தேய்தல்
அனைவரும் அறிந்த தொன்றாம் .

பருத்தலோ பயனே இல்லை
பருகிடும்  இன்பம்  நீங்க
ஒருத்தரும் விழைவ தில்லை;
உண்மையும் இதுவே தானோ?
திருத்தம் மேற்கொள்வீர் இன்றே
தின்பதில் கொழுப்பு  சீனி
நிறுத்தியே காணின் யாக்கை
நீங்குமோ நலம்சேர்  வாழ்வே 






வீங்கு  வீக்கு !    

புதன், 28 செப்டம்பர், 2016

ற்று > த்து திரிபுகள்

ஆய அற்றம் > ஆய அத்தம் > ஆயத்தம்.
வெறு வேட்டு > வெற்று வேட்டு > வெத்துவேட்டு.

ற்று > த்து திரிபுகள் எண்ணிறந்தன. இவற்றை முன்பு எழுதியுள்ளோம்.
இவை மீண்டும் மீண்டும் எழுந்து காட்சி தருபவை.

சிற்றம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம். இப்போது ஊர்ப்பெயர்.

ற்ற > த்த திரிபு.
ல > ர திரிபு.  plentiful in Tamil and other languages. includes SEA languages.

சட்டலாட்டம்

சிலர் ஒரு மாதிரியாக நடந்துகொள்வார்கள். எந்த அதிகாரத்திலும் இல்லை.
வெத்துவேட்டு.  ஒரு படைத் தலைவர் ( தளபதி )  போல பிறருக்கு ஆணை இட்டுக்கொண்டும்,  உத்தரவுகள் கொடுத்துக்கொண்டும் உரத்த குரலில் பேசிக்கொண்டும் பிறரை அதட்டிக்கொண்டும் இருப்பார்கள். எப்போதும் அமைதியாகப் பேசிப்பழகும் நீங்கள் இவர்கள் போலும் ஒருவரிடம் மாட்டிக்கொண்டால் திகைத்துப்போவீர்கள். சிலவேளைகளில்
சொன்னபடி செய்துவிட்டு அங்கிருந்து தப்பிவிடுவீர்கள்.


இது ஒரு மன நோய் என்று வல்லுநர் கூறுவர்.  அதிகாரம் ஒன்றும் இல்லை  ஆனால் ஏதோ இருப்பதாக ஓர் ஆணித்தரமான மனவுணர்ச்சி.
அது தவறு பொருத்தமற்றது என்று புரிந்துகொள்ளும் திறம் இல்லை. ஆனால் ஆளைப்பார்த்தால் தெரியாது. இயல்பான நிலையில் உள்ள ஒரு
மனிதன் போலவே தோன்றும்.  ஒரு மன நோய் வல்லுநரே இவரை
ஆய்ந்து நோயறிய இயலும்.

மன நோய் வல்லுநர்கள் நடத்திய ஒரு தொடர் சொற்பொழிவில் கலந்துகொண்டு அதன்மூலம் அறிந்தேன்.  பின் இதன் தொடர்பான சில‌
நூல்களிலும் படித்து இந்த அறிவைத் திறப்படுத்திக்கொண்டேன். மிகவும் சுவை தரும் நேரங்களாக இவற்றை அறிவது அமைந்தது.

சோதிடர்கள் அல்லது கணியர் சிலர்  இதனை முன்னமே அறிந்திருந்தனர். அவர்கள் இதைச் சட்டலாட்டம் என்று கூறினர்.  எனவே மனிதரிடையே இத்தகைய நடத்தையும் ஒருவேளை அதற்கான காரணங்களும் சோதிடமணிகளாலும் உணரப்பட்டிருந்தன.  சோதிடத்தின் மூலம் ஒருவர்
சட்டலாட்டம்  உடையவரா என்று அறிந்துவிடலாம். அந்தமாதிரியான நடத்தை உடையவரின் ஒரு வாழ்கணிப்பினை (ஜாதகத்தை ) ப்  படிக்கவும் அந்த நபரை அறியவும் நேர்ந்தது.  ஆகவே இது மேனாட்டு மருத்துவர்கள் மட்டுமே அறிந்த ஒரு மன நோய்  அன்று என்பதை உணர்ந்தேன்.

இப்போது சொல்லைப் பார்ப்போம்.

அடு > சடு >  சட்டம்
 இது சடு+ அம் = சட்டம்.  இங்கு டகரம் இரட்டித்தது.  அம் விகுதி
 பெற்றது.

அடு >  சடு >  சட்டல்.

 இது  சடு+ அல் =  சட்டல். இங்கும் டகரம் இரட்டித்தது.  ஆனால் அல்
விகுதி பெற்றது.

ஆட்டம் என்ற சொல் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு பொருட் சாயல்களைக் கொண்டுதரும் ஒரு சொல். "  கோயிலுக்கு வந்த பொம்பளை என்ன இந்த ஆட்டம் ஆடிவிட்டுப் போகிறாள்"  என்று பேசும்போது.  ஆட்டம் என்பதற்குக் கலைமுறைப் பட்ட ஆட்டம் என்ற‌

பொருள் கொள்ளப்படாது. திரைவானில் மின்னும் நடனமணியின்
கவின்படு ஆட்டம் வேறு, இது வேறு.  இதுவே ஒரு சட்டலாட்டமாகவும் இருக்கலாம்.

கோயிலில் இவள் எந்தப் பதவியிலும் இல்லை. ஆனால் ஆட்டம்
இருக்கிறது.

இவள் தன் வாழ்கணிப்பினை வரைந்து ஆய்ந்து பார்த்தாலோ ஒரு மன நோய் மருத்துவரின் ஆய்வுக்கு அவளை உட்படுத்தினாலோ உண்மை அறியலாம்.

கணியர் பெருமக்கள் கண்ட இந்தச் சட்டலாட்டம் என்ற  பதம்  அக்கரவரிசைகளில்  காணமுடியவில்லை.  எல்லா அகர  வரிசைகளிலும்  தேடி முடித்திட இயலவில்லை.  நீங்களும் தேடிப்பாருங்கள்.  கிடைத்தால் எழுதி உதவுங்கள்.

There is a system problem in editing this post.  The cursor starts jumping about.  Will look into this later.  For the moment read cautiously and read correction as necessary.
















சட்ட லாட்டம்

திங்கள், 26 செப்டம்பர், 2016

சட்டமும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அடுதல் என்பது சுடுதல் என்றும் பொருள்தரும். இந்த அடிப்படையில் எழுந்ததே சட்டி என்ற சொல்.  அடு> சடு > சட்டி இதை முன் எழுதியுள்ளோம்.


அகர அல்லது அதன் வருக்கங்கள் முதலாகிய எழுத்துக்கள் சகர அல்லது அதன் வருக்கங்கள் முதலாயினவாய்த் திரியுமென்பதைப்   பழைய இடுகைகளில் அறிந்து தெரியலாம். இதனை  வேறு ஆசிரியர்களும் விளக்கியுள்ளனர்.


சட்டம் என்ற சொல்லும் இதன்படி அமைந்தது.  அடு >  அட்டம் > சட்டம் என்று வரும். அடு >  சடு > சட்டம் எனினுமாம்.  இங்கு டகர இரட்டிப்பு நிகழ்கிறது.

சுடுவதுபோல் அல்லது தண்டிப்பதுபோல் சொல்லப்படுவதே சட்டம்.  இப்படி நடந்தால் உன்னை அதற்கேற்ப இப்படித் தண்டிப்பேன் என்று சொல்வது சட்டம்.  தண்டனை ஒன்றும்  சொல்லப்படாமல் இங்ஙனம் ஒழுகுதல் வேண்டுமென்று அதிகாரத் தோரணையில் தரப்படுவதும்  அதுபோன்ற பிறவும் சட்டமென்றே கொள்ளப்படும்.

In common parlance the tamil term includes legal as well as quasi-legal matters. It can also be
used figuratively as we shall see later/.

Will edit.

சட்டமும் சட்டலாட்டமும்

சட்டலாட்டம் என்பதையும் தொடர்புடையனவற்றையும்  தொடர்வோம்.    

ஆயத்தம் சொல்

ஆயத்தம் என்ற சொல்லைப் பற்றி உங்களுடன் சிந்திக்கலாம் என்று இரண்டு
மாதங்களுக்கு முன்னரே எண்ணியிருந்தாலும் அதற்கான வாய்ப்பு இப்போதுதான் கிட்டிற்று.

ஆயத்தம் என்பது தயார் நிலை, முன்னேற்பாடு என்று பொருள்படுவது. இச்சொல்லின் முன்னிருப்பது ஆய என்பது. ; மற்ற சொல் அற்றம் ஆகும்.

அற்றம் எனின் தருணம். தகுந்த நேரம்.

அற்றம் என்பது பேச்சு வழக்கில் அத்தம் என்று திரியும்.

இங்ஙனம்  திரிதல் தமிழில் பெருவழக்காகும். பேச்சில் இங்ஙனம் திரிவன‌
பல.  சிற்றம்பலம் >  சித்தம்பலம் >  சிதம்பரம் என்பது காண்க.

ஆய + அத்தம் =  ஆயத்தம்.

இங்ஙனம் சரியான தருணம் எனப் பொருள் தந்தாலும்,  வழக்கில் இது
ஏற்ற தருணங்களை உண்டாக்கிக்கொண்டு இருத்தல் என்று விரியும்.

இஃது இனிதாய் அமைந்த சொல் ஆகும்.

சனி, 24 செப்டம்பர், 2016

இரதிபதிப்பிரியா : " ஜெகத் ஜெனனி "

இரதிபதிப்பிரியா இராகத்தில் அமைந்த இந்த இனிய பாடல், சுத்தானந்த பாரதியாருடையது.  இதன் வரிகள் உங்களிடம் இல்லை யென்றால் இஙுகு
பாடல் உங்களுக்கு வந்து உதவுகிறது:  இதை இசையரசு  M.  M.  தண்டபாணி தேசிகர் பாடியுள்ளார்:.


ஜெகத் ஜெனனி சுகவாணி கல்யாணி  (ஜெகத் ஜெனனி)


சுக சொரூபிணி மதுர வாணி
சொக்க நாதர் மனம் மகிழும் மீனாட்சி

பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ‌
பஞ்சமி பரமேஸ்வரி

வேண்டும் வரம் தர‌
இன்னும் மனமில்லையோ
வேத வேதாந்த நாத சொரூபிணி    (ஜெகத் ஜெனனி )





இறைச்சி how derived?

இறைச்சி  என்பது பாலரும் அறிந்த சொல் ஆகிவிட்டது, ஞாயிற்றுக் கிழமைகளில் பலர் இறைச்சிக் குழம்பு  உண்ணும் பழக்கம் உடையோராய்
விளங்குகிறார்கள்.

இறைச்சி என்ற சொல் எங்கிருந்து வந்த தென்பதை அறிந்தால் அதுவும் இன்பமே.  உண்பதே இன்பம், சொல் உண்டானது அறிதல் வேண்டா என்பாரும் இருப்பர்.

ஒரு விலங்கு இறந்தபின் கிடைப்பதே அதன் இறைச்சி. உயிர்க்கொலை செய்தாலே ஊன் கிடைக்கிறது.\

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 
எல்லா உயிரும்  தொழும்     (குறள் )

இறு > இற > இறப்பு.  இறுதல் என்பது முடிதல். கொல்லுதலும் இதில் அடங்கும் .
இறு   >  இறை.   முடிவு.

இறு > இறை >  இறைச்சி.

சி  என்பது விகுதி .    எழு > எழுசசி  என்பது காண்க ,

இறைச்சி  :  இறந்த அல்லது கொல்லப்பட்ட உடலில் கிடைக்கும் அதன் சதை.

இறு என்ற சொல்லுக்குப் பல பொருளுண்டு.  அவற்றுள் ஒன்றையே
இங்கு கூறினோம்.  அறிந்து மகிழ்க.

இறைச்சி என்பது உயிர் இல்லாமை குறிக்கும் தொழிற்பெயர்.  ஆகுபெயராய்
ஊனைக் குறித்தது.



உபாதை என்ற சொல்லை

உபாதை என்ற சொல்லையும் பொருளையும் கவனிப்போம்,

இதில் உ =  முன்னிருப்பது என்று பொருள்படும்.

பாதை என்பது பதைத்தல்.  

பதை >  பாதை.  இது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

சுடு என்ற சொல், முதனிலை நீண்டு, சூடு என்றாகி,  பெயர்ச்சொல் ஆகும்.
இதற்குத் தொழிற்பெயர் என்று பெயர். இதைப்போலவே, பதை என்பது
பாதை என்று நீண்டு  பெயரானது.

உ+ பாதை = உபாதை.  முன்னிருந்து தொந்தரவு செய்யும் வலி. அல்லது
மற்ற தொல்லை.

வழி என்று பொருள்படும் பாதை வேறு சொல்.

கடக இராசி. சொல்லமைப்பு.

கடகம் என்பது  நண்டு என்று பொருள் படும்.

நண்டு கடிய ஓட்டினுள் வாழ்கிறது.  ஆகவே அதற்கு ஒரு கணிக்கலைச்
சொல் அமைத்தல்  எளிதுதான்.

கடுமையான ஓடு:  " கடு ".

உள்ளிருப்பது:      "அகம்."

கடு+ அகம் ‍  =  "கடகம்."

இங்கு டகரம் இரட்டிக்கவில்லை.

சோதிடம் ஒரு தனிக்கலை ஆதலின், அக்கலைக்குரிய சொற்களைப்
படைப்பதே சரி.  அங்ஙனமே இச்சொல் படைத்துள்ளனர்.


https://sivamaalaa.blogspot.sg/2015/07/crab-and-its-qualities.html

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

ஜெயலலிதா நம் அன்னை. வாழ்க

தனக்கென வாழ்தல் இன்றிப்
பிறர்க்கென அரசில் வீற்றுக்
குணக்கடல் ஏற்றம் பெற்ற‌
ஜெயலலி தாநம்  அன்னை.
மணப்பெரு பொலிவே உற்ற‌
மாண்புறத் தேறித் தன் தோள்
முணக்குறு சுமைகள் வென்று
முதல்வருள் முதலாய் வாழ்க.

எந்திரன் என்ற சொல்லை,,,,,,,,,,,,,,,,,,,,பாராட்டவே வேண்டும்

https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_20.html



மேற்கண்ட இடுகையைத் தொடர்ந்து ===


சாமிநாத ஐயர் தோன்றாமலும் சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பிக்காமலும் இருந்திருந்தால், சங்க இலக்கியங்கள் இரா. அப்படியானால் இது தமிழ் இது அன்று என்று எவ்வாறு கண்டுபிடிப்பீர்,

எந்த இலக்கியமும் கிடைக்காத உலகத்துப் பல மொழிகளில் எப்படி ஒரு
சொல் அம்மொழிக்குரியது என்று கண்டு பிடிக்கிறார்கள்?

சங்கப் புலவன் பயன்படுத்திய ஒரு சொல் பிற மொழியிலிருந்து அவன்  அறிந்தது என்பதை எப்படி மறுப்பீர் அல்லது ஒப்புவீர் ?

இதற்கெல்லாம்  உங்களிடம் விடை  இருக்கவேண்டும்.  இது அறியாத போ து
இது தமிழ் இது அன்று என்பது கடினமே.

யாம் கவனிக்க விரும்பியது  எந்திரன் என்ற சொல்லை.  இந்தப் பெயரை ஒரு படத்துக்கு இட்டவர்களைப்  பாராட்டவே வேண்டும்

இயந்திரம் என்பது பொருள்    எந்திரன் மனிதனைச் சுட்டுகிறது .   அதாவது எந்திரத்தினாலான மனிதனுக்குப் பெயராகிறது.

அன்  விகுதி வந்தால் மனிதனைக் குறிக்கும்.  சில வேளைகளில் குறிக்காது:  எடுத்துக்காட்டு  :  சூரியன்.

எந்திரன் என்பது நல்ல தமிழ்.  இயந்திரம் > இயந்திரன் >  எந்திரன்,  இது திரிபுச் சொல் .

இயலாது என்பது ஏலாது என்று திரியுமே .

ஏலா இடர் ஒருவர் உற்றக்கால்  (நாலடியார் )

இயைய  > ஏய

 ஏய  உணர்விக்கும்  என்னம்மை  (  புலவன்  அம்பிகாபதி )

இவை நினைவில் முந்துபவை  ஆகும் .

இ + அம்   + திறம்  =  இயந்திரம் !!  \\

இ  :  இங்கே.

அம் :  அங்கு.      அ + கு =  அம் +  கு =  அங்கு.  மகரம் ஒரு சாரியை,

திறம் >  திரம்   போலிக் திரிபு.



 இங்கே இருப்பது தானேயோ நகர்ந்தோ சுற்றியோ எப்படியோ போனால் அதுவே  இயந்திரம் .அதாவது  மனிதனும் விலங்கும் இயக்கற்ற பிறவும் அல்லாதது.


The thoughts of ancient Tamils were extremely simple and direct. .

வியாழன், 22 செப்டம்பர், 2016

ஐயம் என்ற சொல்லையும்

https://sivamaalaa.blogspot.sg/2016/09/blog-post_69.html


http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_14.html



இவற்றைத் தொடர்ந்து :


முன்னிரண்டு இடுகைகளையும் ஊன்றிப் படித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் , ஐயம் என்ற சொல்லையும், சேர்த்து ஆய்வு செய்தல் நலம்.

ஒரு பொருளை அங்கு வைத்தோமோ இங்கு வைத்தோமோ என்பது போலும்
இருமுனை எண்ணங்கள் வரின், அதனை ஐயம் என்கிறோம்.

இச்சொல் அங்கு, இங்கு  என்ற இரண்டையும் உள்ளடக்கியது.

அ +  இ  + அம் =  ஐயம்.

அம் என்பது விகுதி.

அ + இ ‍=  அயி ஆகும்.   இது  அம் விகுதி சேர,  அயி என்பதிலுள்ள இகரம் கெடும். கெடவே  அய்  என்றே நிற்கும் ,   அய்  எனினும்  ஐ  எனினும்  வேறுபாடு இல்லை.

அய் + அம் ‍என்பது ஐ + அம் என்றாகும் பின் ஐயம் என்று முடியும்.

அங்கும் இங்கும் அலைந்து பிச்சை எடுத்தலும் ஐயம் எனவே குறிக்கப்பெறும்.  அங்கும் இங்கும் சுட்டு இவண் அலைதலைக் குறிக்க வரும்,

அங்கும் இங்கும் என்ற சுட்டுக்கள் இருமுனையையே விதந்து குறிப்பினும் பன்முனைகளில் எழும் ஐயமும்  இதிலடங்குவது ஆகும். தேவையில்லாமல் அதற்கு இன்னொரு சொல் அமைக்கவேண்டாமையின்,

அய் என்று நின்ற அமைப்பு இர் என்னும் வினையாக்க விகுதி பெற்று
அயிர் ஆகும்.  அயிர்த்தல் எனினும் ஐயம் கொள்ளுதலேயாம், உய்  >  உயிர் > உயிர்த்தல்  என்பது  இன்னோர்   எடுத்துக்காட்டு.

இதன் மூலம்  ஐயம் என்ற சொல் தெளிவுபடுத்தப்பட்டது.




"அயிச்சு" - மலையாள வினைமுற்று

இங்கிருந்து  தொடர்க: :  http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_69.html 


"அங்கு அனுப்பு ‍,  இங்கிருந்து "   என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்தது
"அயிச்சு"  என்ற மலையாள வினைமுற்று.

அ =  அங்கு;
இ =  இங்கிருந்து.


அ இ  =  அயி. (    ய்   :    யகர உடம்படு மெய்.)

இந்தச் சுட்டடிச் சொல்லை,ஐக்கியம் என்பதனோடு ஒப்பு செய்து ஆய்க.

அனுப்பு  என்பதும்  அகர ச்  சுட்டுத்தான் .   அண் >  அன்  >  அனுப்பு   ( அண்முதல்  கருத்து. )   

புதன், 21 செப்டம்பர், 2016

மார்க்கம் - சொல்லமைப்பு

நீங்கள்  திருச்செந்தூருக்குச் செல்வதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்  என்று முயல்கிறீர்கள். நீங்கள் கண்டுபிடிக்கும் எந்த வழியும் திருச்செந்தூரில் முடிவதாக இருக்கவேண்டும். அல்லது அங்கிருந்து வெளியேற நினைக்கிறீர்கள்.  நீங்கள் கண்டுபிடிப்பது அங்கிருந்து தொடங்குவதாகவே இருக்கவேண்டும், இங்ஙனம் அங்கு முடிகின்ற அல்லது தொடங்குகின்ற நிலையில் இல்லாத எதுவும் திருச்செந்தூருக்கு மார்க்கமாக ‍ அதாவது வழியாக இருக்க இயலாது.

இதைச் சுருக்கிச் சொன்னால், திருச்செந்தூரை மருவாத எதுவும் திருச்செந்தூருக்கு மார்க்கம் ஆகாது.  நீங்கள் செல்வது வான மார்க்கமாக இருந்தாலும், கடல் மார்க்கமாக இருந்தாலும் தரை மார்க்கமாக இருந்தாலும் அந்நகரை மருவாத, மருவிச்செல்லாத எதுவும் அங்கு செல்ல‌
மார்க்கம் ஆகாது.

ஆகவே மருவுதல்  கருத்திலிருந்து  மார்க்கம் என்ற சொல் பிறந்தது.  கொஞ்சம் சிந்தித்தாலே  தெரிவது  இதுவாகும்.

இந்தத் திரிபுகளை பாருங்கள்:

கரு > கார்      (கார் மேகம் ,  காரத் திகை . கார்  முகில் )
வரு >  வார்.    ( வாரான்,  வாருமே , வாரீர் ,   வாரம்  மீண்டும் மீண்டும் வரும் கிழமைகள் )
இரு >  ஈர்   ( ஈராயிரம் )
இழு > இரு > ஈர் >  ஈரத்தல்  (  ஈரல் )   (இருதயம் என்பதும்  ஈரத்தல் அடிப்படையானது ) 

இதன்படியே  மரு  மார் என்று திரியும்.
 மார் + கு+  அம்   =  மார்க்கம் .

செல்வதற்கு  அல்லது  நீங்குவதற்கு  மருவுதலைச்  செய்வது  மார்க்கம் ( அல்லது வழி )

வழிந்து  செல்வது வழி .  இந்தச் சொல்  நீரினோடு  தொடர்புள்ள சொல்.
மார்க்கம் என்பது  தழுவுதல்  தொடர்புடையது..

சொல்லமைப்பு

ஐக்கியம் என்ற சுட்டடிச் சொல்

அங்கிருப்பாரை இங்கு அழைத்து அவர்களை ஒன்றுபடுத்தினால் அதனை  
ஐக்கியம் என்கிறோம். இது ஐ மற்றும் இங்கு என்ற இருசொற்களைச்
செதுக்கிச் செய்யப்பட்ட சித்திரச் சொல்.

இ >  இங்கு.   இது இகரச்  சுட்டடிச்  சொல்.  இது இடைக் குறைந்து  இகு  ஆகும்.  பின் வினையாகி  இகுத்தல் எனவரும்.   அதாவது  இங்கு அழைத்தல் .

வீட்டுக்குப் போனான் என்ற வாக்கியத்தில் வரும் கு என்னும் வேற்றுமை உருபைக் கவனியுங்கள்.  அந்த கு- ‍விற்கு என்ன பொருளோ அதுவேதான்
இங்கு. இகு என்பனவற்றிலும் கு- விற்குப் பொருளாகும்.

இ + கு =  இங்கு

இ + கு =  இகு.  இதில் ஒரு ஙகரஒற்றுத்  தோன்றவில்லை. அவ்வளவுதான்.


ஐ என்பது  அய் ;   இது அ என்ற சுட்டிலிருந்து வருகிறது.   ய் என்பது

உடம்படுத்தும் ஒற்றெழுத்து.

அய்  + இகு + இய=  ஐக்கு + இய  =  ஐக்கிய .

ஐ + கு =  ஐக்கு  என வலி இரட்டித்து வந்தது/   இகரம்  கெட்டது  அதாவது மறைந்தது.

ஐக்கியம் என்ற சுட்டடிச்  சொல் சரியாக உணரப்படவில்லை .

இயம்  (இய )   விகுதி  (எச்சம் ).

continue at: 

http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_14.html


ஐ நா பொதுசெய லாளராய்...

தளபதி யாகவே இருந்துவிட்டால்
தலைவர் ஆவதும்  எப்பொழுது?
தலைவர் ஆகவே இலங்கிவிட்டால்
அமைச்சராய் அமர்வார்  எந்நாளிலே?
அமைச்சர் என்றே அமுங்கி இருப்பினே
அதிபராய் உதிப்பதும்  என்றுசொல்வீர்?
ஐ நா பொதுசெய லாளராய்  ஆகிட
ஆசையும் இல்லை  என்பருண்டோ?

இதைக் கவிதையாக  எழுதவில்லை.  ஆனால் ஒரு கவிதைபோல் வந்துவிட்டது. சிறு மாற்றங்கள் செய்தேன்.  அரசியலில் இருப்போருக்கு 
ஆசை இருக்கும்/  முன்னேற்றம்  காண .

திங்கள், 19 செப்டம்பர், 2016

வன்னிலை வாய்ந்த கொசு

கொசுவுக்குக் கூடுதல் கொல்புகை வீசி
இரவுக்குள் இன்பம் இயல ----- நிறுவினும்
எண்ணிய சின்னேரம் எங்கிருந்தோ வந்ததே
வன்னிலை வாய்ந்த கொசு



கூடுதல் = மிகுதியான

கொல்புகை -  கொசுக்களைக் கொல்லும் அல்லது விரட்டும்
ஒரு தணிப்புப் புகை. known as fogging.  spray of  smoky pesticide.

வீசி -  அடித்து.

இரவுக்குள் - இரவு நேரங்களில்.

 இரவு வருமுன்  எனினும் ஆம்.

இன்பம்-  கொசுக்கடி இல்லாத நிலை.

இயல -  வெற்றிகரமாக நடைபெறுமாறு .

நிறுவினும் - நிலைநாட்டினும்   .

எண்ணிய - கொcசுவைக் காணவில்லையே என நினைத்த.

சின்னேரம் - கொஞ்ச நேரத்தில்.

வன்னிலை -  வலிமையான நிலை.  வல்+ நிலை

சனி, 17 செப்டம்பர், 2016

அருந்ததியர் என்பது.........

அருந்ததியர் என்போர்  அதியமானுடன் தொடர்பு கொண்டோர்
என்று சிலர் கூறுவர்.

சில மன்னர்கள் ஒழுக்கத்து மேன்மை கொண்டோராய் விளங்கியிருந்தனர் என்று தெரிகிறது   மன்னருள் பலர்
பல மனைவியரையும்  மாற்றுத் தொடர்பு மகளிரையும் கொண்டிருந்தனர் என்று வரலாறு கூறுகிறது.  500 - 600 என்று
விரிந்த குழாம் உடைய மன்னர்களும்  வரலாற்றில் பலராவர்.

அத்துடன் கோயில்கள் பலவும் அவர்களால் நிறுவாகம் செய்யப் பட்டன. அவர்களுக்குத் தடைகள் யாதும் இல்லை.

அருந்ததியர் என்பது அருந்து+ அதியர் என்றும் பிரியும்.

சாப்பாடு அதிகம் உண்டோர் என்று இது பொருள்தரும்.

என்னவென்று தெரியவில்லை. மன்னர் அளித்த உணவு அதிகம்
பெற்று  உண்டவர் என்று கொள்ள, இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டியுள்ளது.

க என்பது ய என்றும் திரியும்.  மகன் என்பதை மயன் என்று
சிலர் சொல்வது கேட்டிருக்கலாம்.

பாரி வள்ளல். meaning of name

பாரி வள்ளல் பற்றிச் சிறிது சிந்திக்கலாமே.  தமிழிலக்கியத்தால் போற்றப்படுவோன் குறு நில மன்னனாகிய
பாரி வள்ளல்.

நமது அக்கறைக்குரியது பாரி என்ற சொல்;.

பார் என்பது பூமி என்றும் பரந்த இடமென்றும் பொருள்படும்.
இவ்வுலக நோக்குடையவன், பரந்த சிந்தனைகள் உடையவன் என்றெல்லாம் பொருள் விரித்தல் கூடும்.  இவன் பேருக்கேற்ப இவனும் கொடைவள்ளலாய்த் திகழ்ந்தான்.

பார் > பாரி.

பார் என்பது பர(த்தல்)  என்ற அடியின் முதனிலை நீண்ட தொழிற்பெயர்.

இதே அடியிலிருந்து திரிந்த ஏனைச் சொற்களை முன் இடுகைகளில் கண்டிபுற்றோம்.

சேனை என்ற சொல்

இப்போது சேனை என்ற சொல்லைக் கவனிப்போம்.

இது பல மொழிகளில் வழங்கும் சொல். சேனா என்றும் வழங்கும். தமிழில்
சேனை  என்று வழங்கும்.

பலர் சேர்ந்து போருக்குப் போவதே சேனை. எனவே சேர் என்பது சே என்று கடைக்குறைந்து திரிந்தது.

நை என்பது ஒரு விகுதியாகவும் இயங்கும்.  சேர்ந்து நைவித்தல் அல்லது நையச் செய்தல் எனற்பாலது நை என்றும் வரும்.

சே + நை =  சேனை ஆயிற்று.

இது தமிழ் மூலங்களை உடையது.

யானை, குதிரை காலாள் தேர் என்ற நான்கும் கலந்தது சேனை
எனவும் படும். இதுவும் சேர்தல் கருத்தேயாகும்.


இனிச் செரு என்னும் போரிடுதல் பொருள்தரும் சொல்லும் சேர் என்று திரியும்.

கரு > கார் என்று திரிதல் போலும் ஒரு திரிபே இது.

செரு என்பது சேர் ஆகி,  சேர் பின் சே என்று நின்று சொல்லைப் பிறப்பித்தது எனினும்  ஆகும்.

செரு > சேர் >  சே > சேனை

செருதலாவது போரிடுதல் .செருப்படை  செருபடை என்ற வழக்குகள் காண்க .

சே என்ற கடைக்குறைச் சொல்லினின்று பிறந்த இன்னொரு சொல்  சேமி என்பது .    சே > சேமி > சேமிப்பு .

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

அரசன் ஏன் பட்டம் பதவிகள் வழங்கினான்?



அரசன் ஒரு தனியன். ஆட்சிக்கு வந்தபின் அவனுக்கும் மக்களில் சிறந்து நிற்பவர்களின் துணை தேவைப்படும்.  தனியனாய் இருந்து ஆளுதல் இயலாத காரியம்.  ஒத்துழைப்போரின் உதவிக்கைகள் அவனை வலிமை பெறச்செய்பவை.

தனக்கு உதவுவோருக்கு அவன் நிலம் வழங்கலாம்.  வழங்கிய நிலம்
கொடையாகவோ மானியமாகவோ வழங்கப்படலாம்.  மா என்பது அளவு என்று பொருள்படும். நியம் என்பது:  நில் > நி என்பது கடைக்குறை.
அம் என்பது விகுதி.  மா+ நி + அம் = மானியம்.  அளவாகத் தரப்படுவது.
இப்படித் தந்த நிலம் பெற்றுக்கொண்டவருக்கும் அவர்தம் பின்னோருக்கும்
என்றும் முழு உரிமையாக வழங்கப்படுவதுண்டு.

அவன் தந்த நிலங்கள் பெரும்பாலும் என்றென்றும் உரிமைப்பொருள் ஆதல்
போலவே அவன் பட்டம் பதவிகளும் வழங்கினான். எல்லோருக்கும் நிலம்
வழங்குவது இயலாமையால், வேறு வழிகளைக் கையாள நேர்வது இயற்கை.  இப்படி அவன் வழங்கிய பட்டம் பதவிகளும் பெற்றுக்கொண்டவனின் பின்னோருக்கும் நிலத்தைப்போலவே உரிமையாகும்படி வழங்கினான். அப்போதுதான் அவை நிலக்கொடைக்கு ஈடாக நிற்கமுடியும். ஆகவே பெறுகிறவனுக்கு "மன் துணை" என்ற பட்டம் தரப்பட்டால், அவனின் பின்னோரும் அதே பட்டத்தை அணிந்துகொள்ள‌
இயலுமாறு வழிவகைகள் செய்யப்பட்டன.

இப்போது மன்னர் ஆட்சி போய்விட்டது.இப்போதைய அரசுகள் இங்ஙனம் பரம்பரையாகப் பட்டங்களையும் பதவிகளையும் வழங்குவதில்லை. இவை மக்களாட்சி முறைக்கு ஒத்து வராதவை. ஒவ்வொரு மனிதனும் தன் அப்பன் பெற்றதையே வைத்து அழகு பார்த்துக்கொண்டிராமல் தானே முயன்று தனக்குரிய நிலையை அடையவேண்டும் என்று மக்களாட்சி முறை விரும்புகிறது. எனினும் மக்களாட்சி முறைக்கு எதிரான நிலையில், இன்று புண்ணியமில்லாத பட்டம் பதவிகளின் பெயர்கள் மட்டும் அலங்காரப் பொருள்கள்போல் பலராலும் பல நாடுகளிலும் அணியப்பெற்று நிற்கின்றன. இத்தகைய நிகழ்வுகள் சில நாடுகளில் மிகக் குறைந்துவிடினும், வேறு சில நாடுகளில்
இன்னும் முன்னணியில் உள்ளன.

அரபு வணிகர்களிடம் எழுத்தர்களாகவும் மேல்பார்வையாளர்களாகவும்
வேலைபார்த்தவர் மேனோன் அல்லது மேனன் எனப்பட்டார். இது
மேலோன் என்பதன் திரிபு.  அரபு வணிகர்களும் இந்த வேலைகளைச்
சேவைக் குடும்பங்களுக்கே வழங்கிவந்தனர். இக்குடும்பங்கள் சிறிது கலப்பும் அடைந்து அகமண முறைகளை மேற்கொண்டு, ஒரு சாதியாயினர். இப்போது இது ஒரு சாதிப்பட்டம்.  அரபு வணிகர்களிடம்
ஊழியம் பார்த்த முன் வரலாறு மறக்கப்பட்டுவிட்ட நிலையில்,  அதைப்
போட்டுக்கொள்வது ஒரு மேன்மை எண்ணத்தைத் தருவதாக இருக்கிறது.

மற்ற நாடுகளில் சாதிகள் இல்லையாகையால், இது போன்ற பெயர்கள்
குடும்பப் பெயர்களாகப் பயன்படுகின்றன. சாதிப்பெயராக உள்ளதைக்  குடும்பப் பெயராகப் பயன்படுத்தக்கூடாது என்ற மறுப்பும் உள்ளது.

இன்று படைத்தலைவராக உள்ளவரின் மகன் அப்பன் பதவிப் பெயரைத்  தான் அணிந்துகொள்வதைப்   பிறர் ஏற்பதில்லை.

to edit.






திருவள்ளுவர் பிராமணர்

திருவள்ளுவர் வழ்ந்ததாகக் கருதப்படும் ஈராயிரம் ஆண்டுகட்கு அணிமைத்தாகிய காலத்தின் முன் வாழ்ந்ததாகக் கருதத்தக்க 
வால்மிகி என்னும் தாழ்ந்த சாதியினர் என்றே கூறப்படுகின்றவர்
வால்மிகி   முனிவர். இவர் இராமாயணத்தைப் பாடினார்,    மீனவப் புலவன்
வேதவியாசன் மகாபாரதத்தைப் பாடினான். பாணன்  (பரையருள் ஒருவகை)ச் சாதியான் )  சமஸ்கிருதத்துக்கு முந்திய அதன் மொழிக்கூறுக்கு இலக்கணம் இயற்றினான்  இவர்கள் காலத்துச்  சாதிமுறைகள் இறுகிய நிலையில் இல்லை .  அகமணமுறைகள் வழக்கத்துக்கு வந்துவிடவில்லை. இவர்களைப் பிராமணர் என்பதே சரி.  இவர்கள் பிரம்மத்தை உணர்ந்ததனாலும்  அற்றை  நாட்களில்  அகமண முறை  இன்மையாலும்   பிராமணர் ஆயினர்.  கம்பன்  பண்டார  குலத்தான்.  ஓட்டக்  கூத்தன் பரையருள்  நெசவு தொழில் மேற்கொண்ட வழிவந்தோன். (கோலியன் )..  அரசர் காலத்தில் பதவி உயர்வென்பது  சாதி உயர்வு ஆகும் . 

 பழங்காலத்தவர்கள் பலர் பலவாறு மாறியிருத்தல் கூடும்.    நாட்டைப் புரட்டிப் போட்டு நடைபெற்ற போர்களலும் ஏனை நடவடிக்கைகளாலும் சாதிகளும் பிறழ்ச்சி அடைந்திருத்தல் இயல்பு .   புதிய சாதிகளும் உருவாகின.  இப்போதுள்ள சாதிகள் பல சங்க கலத்தில் இல்லாதவை.அப்போதிருந்த இயல்பான சாதிகளிலிருந்து இவை மேலெழுந்தவை என்பது
தெளிவு.

இவர்கள் பலருள்ளும்  பிராம்மணத் தந்தை உடையோர்  திருவள்ளுவரே . புலவர்கள் மற்றோரெல்லாம்  இயல்பு + இயல்பு.     திருவள்ளுவர் மட்டுமே  பிராமணர் +இயல்பு.   இந்திய மக்கள் கூறுகள்  பலவும்  10 முதல்   20 %    வரை பிராமணக்  கலப்புடையவை .(இது குருதி ஆய்வின் முடிவு.)   திருவள்ளுவர்  50% க்கு  மேற்பட்டவராகலாம்   என்று தெரிகிறது .  ஆகவே  திருவள்ளுவர் பிராமணர் என்பதே சரியாகும்.  மேலும் ஆதிஎன்பாளின் உறவுமுறைப்   பின்னோர் இப்போது மேல் சாதியினராய்  இருத்தல் கூடும்.

Notes:
(1)
Please note that the scientific reports do not use the word Brahmana. The author of the post uses
this word to fall in line with local  narratives concerning Thiruvalluvar.  The error of margin if any in using this term may not have affected the truth in the scientific reports. In the end it seeks to drive home the same point that the reports set out to prove but with a different set of narratives
(2)
”The fact that every population in India evolved from randomly mixed populations suggests that social classifications like the caste system are not likely to have existed in the same way before the mixture,”
 “Thus, the present-day structure of the caste system came into being only relatively recently in Indian history.”*
-- co–senior author Lalji Singh, 
currently of Banaras Hindu University, in Varanasi, India, and formerly of the CSIR-Centre for Cellular and Molecular Biology.

"But once established, the caste system became genetically effective,  Mixture across groups became very rare . An important consequence of these results is that the high incidence of genetic and population-specific diseases that is characteristic of present-day India is likely to have increased only in the last few thousand years when groups in India started following strict endogamous marriage,”

.. co–first author Kumarasamy Thangaraj, of the CSIR-Centre for Cellular and Molecular Biology, Hyderabad, India.**




வியாழன், 15 செப்டம்பர், 2016

ஆதி பகவன் மற்றும் பரையர்

பரை, பரையன், பரைச்சி என்பதன் ஓர் ஆய்வை இங்குக் கண்டீர்கள்.

http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_10.html

மேலும் 2000 ஆண்டுகட்கு முன் சாதிப் பகுப்புகள் இற்றை இறுகிய நிலையில் இருக்கவில்லை. அகமண முறைகளும்  (endogamy ) ஏற்பட்டுவிடவில்லை.
ஆகவே மாப்பிள்ளை கொள்வதோ பெண்கொள்வதோ தங்கள் குலத்துக்குள்ளேதான் செய்யவேண்டும் என்ற கட்டு இருக்கவில்லை.  இப்போது மற்ற நாடுகளில் இருப்பதுபோல, மற்ற தகுதிகளைப் பார்த்துத்
திருமணம் செய்துகொண்டனர்.   (   a community  not resisting integration and completely merging with surrounding populations )

சாதி வேறுபடுதலால் ஏற்படும் முரண்பாடுகள் எவையும் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.

1900 ஆண்டுகள் வரை, எந்த விதக்  கட்டுப்பாடுமின்றி, வெவ்வேறு குழுவினர் தங்களுக்குள் கொள்வனை கொடுப்பனை மேற்கொண்டனர்
என்று குருதி ஆய்விலிருந்து (டி என் ஏ ஆய்வு  blood analysis  )  நன்கு தெரிகிறது.
இந்த ஆய்வுகளின் சில குறிப்புகள் முன் இடுகைகளில் தரப்பட்டுள்ளன


எனவே பகவன் என்னும் பிராமணனும் ஆதியும் திருமணம் செய்துகொண்டிருந்தாலும். வெறுமனே சேர்ந்துகொண்டு வாழ்ந்திருந்தாலும் இதில் தற்கால சாதிமுறைக்  கட்டுப்பாடுகளுக்குரிய‌
அமைப்பியல்புகள் எவையும் இல. தீண்டாமைக் கட்டுக்களும் ஏதும் இல்லை.

ஒரு வள்ளுவக் குறு நில மன்னன் முன் ஒரு பிராமணன்  பாடிப் பரிசில்
பெற்றமையும் புற நானூற்றில் காணக்கிடக்கின்றது.

அதியமானுடன் ஒளவையார் கள்ளுண்டதையும் அவன் அவர்க்குத் தலை
வருடி அன்புகாட்டியதையும் புற நானூறு எடுத்துரைக்கிறது.

மிகப் பிற்காலத்து பழக்க வழக்களின் அடிப்படையில் அவை இல்லாப்
பழங்காலத்தை உணர்வது வழுவாகும் ,.

பரையரை ஒரு குடி  என்றே பழ நூல்கள் கூறுகின்றன .  குடி  எனின் குடிமகன் ./ குடிமக்கள் . நானிலங்களிலும் பரவி  (வியாபித்து )  வாழ்ந்தவன் பரையன் .குறிஞ்சியில் மட்டும் வாழ்ந்திருந்தால்  குறவன் , இப்படியே பிற நிலங்களிலும் கொள்க . பரவி நின்றவன் பரையன். பரையருள்  80 வகை இருந்தனர்  ஆதலின்  இவர்களில் பலர் வேறு சாதிகளாகி  இருத்தல் கூடும்.
அரசர்களே சாதிகளை நேமித்து நிறுவாகம் செய்தனர்.

will edit and introduce explanations as necessary later.


You may also like to read other posts of compatible and incompatible views:

http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post.html.பார்ப்பனர் 

http://sivamaalaa.blogspot.com/2016/08/manu-and-his-edicts.html

http://sivamaalaa.blogspot.com/2016/08/blog-post_31.html

http://sivamaalaa.blogspot.com/2016/06/why-castes-were-institutionalised-in.html  சாதிகள் தோற்றம்

http://sivamaalaa.blogspot.com/2015/03/blog-post_73.html  கலந்துபோன  இந்தியர்கள்

Amendments made as outsiders seem to have interfered in this post,.  Will be reviewed.
 5.4.18










செவ்வாய், 13 செப்டம்பர், 2016

செருப்பு என்ற சொல்.


செருகுதல் என்றால் ஒன்றில் ஒன்றை இடைநுழைத்தல் என்று பொருள்படும்.  தோல்வார்களை ஒன்றில் ஒன்று பிணைத்துச் சேர்த்துத்
தைத்தே செருப்பு உண்டாக்கப்படுகிறது.  செரு என்ற  அடிச்சொல்லில்லிருந்து செருப்பு என்ற சொல் தோன்றிற்று.

செரு > செருகு.
செரு > செருகுதல்:   இடைநுழைத்தல்..\

செரு >  செருப்பு.

செருப்பு > செருப்பல் :  இச்சொல் வழக்கில் இல்லை.

செ(ரு)ப்பல் >  செப்பல்.

இதில் ருகரம் இடைக்குறைந்தது.

செரு> செருமான்> செம்மான்.

இதுலும் இடை ருகரம் இடைக்குறைந்தது.

வரு என்ற வினைப்பகுதியும் சொல்லில் தன் ருகரம் இழக்கும்

வரு> வ > வந்தான்.

பெருமான் என்ற சொல்லும் பெம்மான் என்று இடைக்குறையும்.

கரு> (கருமாளன் ) > கம்மாளன்.

இடைவடிவங்கள் வழக்கிறத்தல் மொழியில் இயல்பு.

சில  சொற்களில் ருகரம்  போய் அதற்குப் பதில் ஒரு ரகர  ஒற்றுத் தோன்றும்:

கரு   > கருப்பம்  >கர்ப்பம் .
கரு நாக்கு >  கர் நாக்கு.  (பேச்சில் ).
கருப்பூரம்  >  கர்ப்பூரம்  > கற்பூரம்  (கல்+ பூரம் , மற்றொரு முடிபு )
கருமம் >  கர்மம் .
கருவம் > கர்வம் .(  not to be pronounced as garvam  no place for G)
கருத்தா >  கர்த்தா .   from /connected to கருத்து.
தருதல் :  தரு > தருமம் > தர்மம்  (கொடை )  



திங்கள், 12 செப்டம்பர், 2016

சங்கதத்தில் தமிழ்.

சமஸ்கிருத மொழியில்  மோனியர் வில்லியம்ஸ் ஆக்கிய அகரவரிசையில் 166,434 க்கு மேற்பட்ட சொற்கள் இருந்தன. .இவர் பிரிட்டீஷ் காலத்தில் இதை ஆக்கித் தந்தவர்.  பின்னாளில்  டாக்டர் லகோவரி  என்னும் பிரஞ்சு ஆய்வாளரும் அவர்தம்  ஆய்வுக் குழுவும் செய்த ஆராய்ச்சியின் படி . 1/3 பகுதி சமஸ்கிருதச் சொற்கள் திராவிடமொழிகளில். அதாவது பெரும்பாலும் தமிழிலிருந்து பெறப்பட்டு அமைக்கப்பட்டவை. அடுத்த 1/3 விழுக்காடு  மேலை ஆரியத்தோடு தொடர்புள்ளாவை. அவற்றின் மூலங்களைத் திராவிடமொழிகளில் தெளிவாகக் காண இயலவில்லை. ஈரான் முதல் மேல்நோக்கிச் செல்லச் செல்ல வழங்கும்  இந்தோ ஐரோப்பிய மொழிச் சொற்களோடு  தொடர்புகண்டவை. மீதமுள்ள 1/3 எங்கிருந்து வந்தவை என்று குழுவினரால் அறுதியிட்டு நிறுவ இயலவில்லை. மொழிநூல் சொன்னூல்  முதலிய கற்பாருக்கும் ஆய்வு செய்வார்க்கும் இவர்களின் ஆய்வுகள்  இன்றியமையதனவாகும்.

நாம் இதுவரை சில சொற்களைத் தாம் இங்கு ஆய்வு செய்துள்ளோம். அவை சொற்பமே. அதாவது கொஞ்ச நேரத்தில் சொல்லியோ படித்தோ முடிக்கக்கூடிய தொகையின. ஆகவே சொற்பம் ( சொல்+பு+ அம்)..

அற்பத் தொகையின என்றும் சொல்லலாம்.   அதாவது ஆங்கிலத்தில் negligible.  அல்+பு+அம் = அற்பம்.  தன்மையிலும் தொகையிலும் குறிப்பிடத் தக்கவை அல்லாதவை.

சமஸ்கிருதம் நன்கு செய்து திருத்தப்பட்ட மொழி.  பல ஆய்வாளார்கள் முயன்று முடித்துவைத்த மொழி.  அதன் பெயரே அதைத்  தெளிவிக்கும்.

சமஸ்கிருதச்  சொல்லமைப்பு  தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகட்கு முன்னும் பின்னுமாய் நன்கு நடைபெற்றன. பல சொற்கள் அமைக்கப்பட்டன. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரும்  இதனை விவரித்துள்ளார்.

கமில் சுவலாபெல் கணக்கிட்டபடி  ருக்கு வேதத்தில் 800 தமிழ்ச் சொற்கள் உள்ளன.  அவர் ஆய்வின்பின் வேறு சிலரும்  சில கண்டுள்ளனர்.

சங்கதத்தில் தமிழ்.

You may also like:

வாத்தியம்





சாய்த்தலும் ஆற்றலும் 








பர என்ற அடிச்சொல்லில்.....

பர  என்ற  அடிச்சொல்லில் திரிந்த சொற்கள் சிலவற்றை முன் இடுகைகளில் கண்டு மகிழ்ந்தாலும் . இன்னும் பல உள்ளன. அவற்றைப் பற்றி நேரம் கிட்டுங்கால் கண்டு இன்புறலாம்.

இப்போது சில,முன் கூறியவை, பொழிப்பாக:

பர > பரவை   பரந்தது:    கடல்.
பர > பரமன்   பரந்தது:    கடவுள்.
பர > பரயன் >பரையன் > பறையன்
               ஐவகை நிலங்களிலும் பரந்து காணப்படுவோன்.
பர > பராக்கு  கவனம் பரவ நிற்றல்.

பர > பற      ஓரிடத்தினினின்று  இன்னோர் இடத்துக்கு வானிற்
போதல்.

பர > பரன்   எங்கும் பரந்திருப்போன்.

பர > பார் :  பரக்க நோக்குதல்.

பர > பார்  (பரந்த இப்பூமி ).

பர  > பார் >  பாரித்தல்    பரவுதல் .

பர > பார்ப்பு:  பார்த்துக்கொள்ளவேண்டிய பருவத்தின.  குஞ்சுகள்.

பர > பார் > பார்ப்பான்.  கோயிற்காரியம் பார்ப்பவன்.(வேறு பொருளும்
       கூறுவர் ). அரசின் பார்வை பெற்றோன் .

பர > பரயன் > பரையன் > பறையன்.
       ஐந்து நிலங்களிலும் பரந்து காணப்படுவோர்.  செய்தி பரப்புவோர்.

பர > பறை > பறைதல் : சொல்லுதல்  ( செய்தி பரப்பு )

பர > பரை > பறை:  அடித்துச் செய்தி பரப்பும் கருவி.

இவை அனைத்தையும் அவ்வப்போது தொட்டு மேலும் ஆய்வோம்.

இவற்றுள் "பரவு , பரப்பு" என்னும் கருத்துக்கள் எந்த அளவுக்குத் தெளிந்து காணப்படுகிறது ?


 



ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

பராக்கு ! ‍ கவன ஈர்ப்பு



பராக்கு என்பது ஒரு கவன ஈர்ப்புச் சொல். பராக்கு என்று அணித்தலைவன்
கத்தினால் மறவர்கள் கவன நிலைக்கு வந்துவிடவேன்டும்.

பர > பரத்தல்.  ஓரிட‌த்திலிருந்து  பரவுதல்.
பர > பார் :  முதனிலை திரிந்து தொழிற்பெயர் ஆனது. குறிப்பிட்ட இடத்தை நோக்காமல் பரக்கக் கண்ணுறுதல்.  பார்த்தல்
Compare difference between Look and See in English.  Also tengok, pandang, nampak in Malay.
"Attention!"  in Malay is "Sedia"  as drill command.

பர + ஆக்கு : >  பராக்கு > பராக் .    இங்கு ஆக்கு என்பது முதனிலைத் தொழிற்பெயர். பரவலாகப் பார்வை செலுத்து என்பது பொருள்.

சனி, 10 செப்டம்பர், 2016

பரையர் பறையர்

http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_9.html

தொடர்ந்து:

திருவள்ளுவர் தமிழரென்பது  தெரிகிறது, ஆனால் எந்தச் சாதியினர் என்று அறிந்து கொள்ளுதல் உண்மையில் தேவையில்லாதது  ஆகும் ,  அவர்தம் குறளில் அவர் சிறந்த கருத்துக்களையும் வழிகாட்டுதல்களையும் அளித்திருக்க, அவர் குறளைப் பின்பற்றி நடத்து கொள்வது ஒன்றே வேண்டற்பாலதாகும். எனினும்  அவர் யார் என்று ஆராய்தல்  இன்றி யாரும் மன  நிறைவு கொள்ளார்.

இதன் காரணமாக, நாமும் இதில் சிறிது உள்நுழைந்து பார்க்க முனைகிறோம்

நம்மை வந்தடைந்த பல கதைகளின்படி (அல்லது வரலாறு எனினும் இருக்கட்டும்)  அவர்தம் தந்தை ஒரு பிராமணர் என்று சொல்வர். எந்தப் புலவரின் தந்தையும் பிராமணராக இருக்கலாம். இதில் ஏதும் மறுக்கத்த‌க்க  
கோளாறுகள் உள்ளே இல்லை. யார் அவர்தம் தாய் என்றால் ஆதி என்னும்
பறைப்பெண் என்று கதைவருகிறது. இதிலும் ஏதும் இல்லை. காரணம் ஒருவரின் தாய் பறைச்சியாகவும் இருக்கலாம். இதில் எழும் கேள்வி என்னவென்றால் ஒரு பறைச்சி எப்படிப் பிராமணனைத் திருமணம் செய்துகொண்டாள் என்பதுதான். இருக்கமுடியாது, பிராமணன் பறைச்சிகளை மணந்துகொள்வதில்லையே!  ஆகவே, சேர்ந்துகொண்டதாக இருக்கவேண்டும் என்பது பெறப்படுகிறது,  அது கதையில் எழும் முரண்பாட்டினைத் தவிர்ப்பதற்கான முயற்சி. 


இற்றைக்கு ஏறத்தாழ 1800லிருந்து 2000 ஆண்டுகளின் முன், சாதிகளின் நிலைமை என்ன என்று முழுமையாகத் தெரியவில்லை. இப்போதுள்ளதுபோல் செட்டியார், கவுண்டர், தேவர், கள்ளர் என்றெல்லாம் சாதிகள் இருந்ததாகத் தெரியவில்லை;  குலங்கள் இருந்திருந்தாலும் அவர்கள் இப்பெயர்களால் அறியப்பட்டனரா என்பது தெரியவில்லை; ஈராயிரம் ஆண்டுகளுக்கு இடையில் எப்போது எது எது ஏற்பட்ட தென்று சட்டென்று தெரிந்துகொள்ளும்படி ஆதாரங்கள் கிடைக்கவில்லை. வணிகர்களுக்கு அரசு எட்டிப்பூ அணிவித்து எட்டியார் என்று பட்டம் தந்து அது பின் செட்டியார் என்று (சொல் நூல் படி சரியாகத்) திரிந்துவிட்டது என்று அறிகிறோம். இப்படி இவர்கள்   ஓர் அகமணக் குலமாக மாறுவதற்குக் காலம் பிடித்திருக்கலாம்; அது எப்போது  "மூடிய" குலமாக மாறிற்று  என்று அறிவது எளிதாக இருக்கவில்லை. போர்மறவர்கள் இருந்தனர்  என்றாலும் அவர்களுக்கும் அவர்கள் தேவர்ப் பட்டத்துடன் எப்போது "  நிறைவை " அடை ந்தனர் என்பதும் தெரியவில்லை.  சமண மத‌ ஆசிரியர்களுக்கும் தேவர் என்ற பட்டம் இருந்திருக்கிறது.  எடுத்துக்காட்டு: திருத்தக்கதேவர். 

மிகப்பழங்காலத் தமிழகத்தில் நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பகுத்து அவ்வடிப்படையில் அங்கு வாழ்ந்தோர் அறியப்பட்டனர்.  எடுத்துக்காட்டு: குறிஞ்சி என்னும் மலையும் மலை சார்ந்த இடங்களிலும் வாழ்ந்தோர் குறவர் என்ப்பட்டனர். குன்றுவாழ்நர் என்ற கருத்து மாறிப் பிற்காலத்தில் குறவர் என்பது ஒரு சாதியாக மாறிவிட்டது.இடம் வாழ்நர் என்ற கருத்து மாறிப் பிற்காலப் பகுப்பில் தொழில்புரிவோர் என்ற அடிப்படையில் சாதிகள் எழுந்தன, இப்படி எழுந்த பகுப்புகளையே குமுகக் கட்டமைப்புகளாக மாற்றி, அகமண முறை மேற்கொள்ளுதலுடன் சாதிகளாக நிலைநாட்டப்பட்டன.   வெவ்வேறு அரசுகள் எழுந்து அலுவலர்களை அமர்த்தி அந்த அலுவலைச் செய்தவர்களும் சாதிகளுக்குள் வைக்கப்பட்டனர். இது களப்பிரர் அல்லது களப்பறையர் காலத்தில் ( பிற்காலம் ) விரிவு அடைந்தது.

பண்டைத் தமிழர் அறிந்த நிலங்கள் நான்குவகை ஆகும். (பாலை சேர்க்காமல் ).  அதனால் பூமிக்கே "நானிலம் "  என்ற பெயர் ஏற்பட்டது.   இந்த நானிலப் பகுப்பு  முன்மை உடையது என்பதை இது தெளிவாக்குகிறது.

பறையர் என்போர் இதில் எந்த நிலத்திலும் ஒடுங்கி விடாமல், எங்கும்  பரவி இருந்தவர்கள்.  இங்கு கொஞ்சம்  அங்கு கொஞ்சம் என்று பரவி வாழ்ந்ததால் 
இவர்கள் "பரயர் "  அல்லது   பரையர் "  எனப்பட்டனர்.   இது பின்னர்  பறையர்  என்று எழுதப்பெற்றது .  தமிழில் சில சொற்கள் ரகர றகர  வேறுபாடின்றி எழுதப் பட்டன . இவற்றுள் பரயர்  பரையர்  என்பன மறைந்தன .

பறை முழக்கிச்  செய்தியை வெளியிடும் போதும்  அதுவும் ஒரு தகவல் பரப்புதலே ஆகும். எங்கும் பரவி வாழ்ந்த காரணத்தினாலேயே  இவர்களிடம்  செய்திப் பரப்பு  ஒப்புவிக்கப் பட்டது என்று தெரிகிறது.  பறைதல்  என்பதும் அடி நாளில் பரைதலாகவே  இருந்தது  தெளிவு.  பறத்தல் என்பதும் பரத்தலின்  வேறன்று. ஒரு குருவி ஒரே இடத்தில் இருப்பது அது பறத்தல் ஆகாது. 

பரமன் என்ற சொல்லும்  பர  என்பதன் அடிப்பிறந்த சொல்லே.

ஆனால் பறையருள் எல்லோரும் பறை முழக்க வில்லை.  ஒரு சிறு தொகையினரே  இதனால் பிழைத்தனர் போலும்.   செத்துப் போனதைப் பரப்புவதும் எப்போதும் கிடைக்கும் தொழில் அன்று.  போரும் அடிக்கடி வருவதில்லை .  ஓர் அரசனின் காலத்தில் ஒரு முறை போர் வந்தால் அந்த ஒரு முறை பறை அடிக்கலாம்.  இது ஒரு பெரு வாய்ப்புள்ள தொழிலன்று. ஆகையால் இதனால் இவர்களுக்குப் பெயர் ஏற்பட்டிருக்க முன்மைக்   காரணங்கள் எவையுமில்லை.   மேலும் 80 க்கும் மேற்பட்ட பறையர் வகைகளில் எல்லோரும்  பறை அடிக்கத் தெரிந்தவர்கள் அல்லர். பறை அடித்தததனால்  பெயர் ஏற்பட்ட தென்பதை வெள்ளைக்கார   ஆய்வாளரும் ஏற்கவில்லை .

ஆகவே பரையருள்  பறையர் (பறை அடித்தவர் )  ஒரு சிலரே.  அவர்கள்  உண்மையில் common people என்ற பொருளில் இருந்து வழக்கு இழந்த பரையர் என்ற சொல்லுக்கு உரியோர்.   People who could be found in all places and not restricted to any one of the four kinds of lands  of ancient Tamil division.

பரையர்  என்பது  பர  + ஐயர்  என்றும் பிரியும். பரந்து  பல இடங்களிலும் தொழில் பார்க்கும் பூசாரிகள்  என்று பொருள் கொள்ளவேண்டும் . இதுவும் இவர்களின் வரலாற்றுடன் பொருந்துவதே.    சொல்லை ஆயும்போது கட்டுப்பாடுகளை  விதித்துக் கொண்டு  புகுந்தால் உண்மை காணுதல் கடினம் .

இதை உணர்ந்து கொண்டு  மேலும் தொடர்வோம்,

பரையர்  பறையர்

குறிப்பு:  ஒரு ஓர் மாற்றங்கள் இரண்டு இடங்களில் மேலே கண்டுபிடிக்கப்பட்டுத் திருத்தம்பெற்றன. ஏனைப் பிழைகள் காணப்படவில்லை. இடுகை மேலேற்றுவதற்குச் செலவு ஆவதால் பின்னர் கவனிக்கப்படும்.  தன்-திருத்த மென்பொருளால் அவை திரிந்துவிடலாம். கவனத்துடன் படிக்கவும். மறுபார்வை நாள் 29.12.17
.
  







Unqualified engineer.....!

அவ்வப்போ மழைபெய்யும் வெயில்காயும் கம்மல் ஆகும்;
அவற்றினிடர்  பல்லாண்டு பொறுத்திருந்து வாழ்ந்த  மக்கள்
எவ்வௌவால் பறந்தாலும் கவலையிலார் தென்கீழ்த் திக்கில்.
இருப்பதுபோல் யானுமிங்கு எழுதிகெட்டே ஓய்ந்து   நின்றேன்
எவ்வித்தை தானெனினும் அறியாமல் கண்கள் மூட
ஏதேதோ செய்திட்டேன் மீண்டுமது   நன்றாய்  ஆகி,
கவ்வித்தன் பழநிலைக்குச் சென்றதுவே காணக் காணக்
கற்றலிலாப் பொறியியலில் கலைஞையென வீங்க லுற்றேன்..

எழுதி =  text editor in computer.
அவ்வப்போ -   அவ்வப்போது .

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

வள் என்ற அடிச்சொல்லை....

continue from https://sivamaalaa.blogspot.sg/2016/09/blog-post_16.html


வள்ளுவர் திருவள்ளுவர் என்ற பதங்களில் உள்ள வள் என்ற அடிச்சொல்லைக் கவனிப்போம்.  வள் >  வளம் என்பது செழிப்பைக் குறிக்கிறது.  வள் என்பதனோடு அல் விகுதி வந்திணைந்து வள்ளல் என்ற சொல் அமைகிறது. வள்ளியோன், வள்ளியன் என்ற வடிவங்களும் வள்ளல் என்பதே.  வள் : அதனோடு இ விகுதி சேர்ந்து வள்ளி என்ற பெண் பெயர் அமைந்து முருகனுடன் கூடிவரும் வள்ளி நாய்ச்சியைக்  குறிக்கிறது.  வள்ளியம் :  குழல், மரக்கலம், மெழுகு என்பன பொருள். இவற்றுக்கும் வள்ளியம்மைக்கும் யாது தொடர்பு என்று கேட்கத் தோன்றுகிறது?   வள் அடி அம் விகுதி பெற்று வள்ளம் என்றாகி தோணியைக் குறிக்கும்,  தொன்னை, அதனுடன் ஓர் அளவுக்கும் அது பெயர். வள்ளம் என்பது வட்டில் என்றும் பொருள்தரும். வள் > வள்+து = வட்டு.  வட்டு+இல் : வட்டில்.  வள் பு விகுதி பெற்று, வள்பு என்றாகித்
தோல் குறித்து,  பின் உரம் என்ற சொல் ஏறி வள்ளுரம் ஆகித் தோலுடன்
சேர்ந்த  புலால், இறைச்சி முதலியவும் குறித்து, மகிழ்விக்கிறது!  வள்ளை என்பதோ ஒரு கொடியையும் குறித்து ஒரு பாட்டினையும்
குறிக்கிறது.

வள் > வளி  காற்று. அதிலிருந்து சூறாவளி வந்துவிடுகிறது.
வள் > வளை > வளையல் , வளைவி :

வளை என்பது வள் என்பதிலிருந்து வந்த மற்றோர் சிறந்த அடியாகும்.


இப்படி வள் அடிச்சொல் ஆய்வு செய்து, வள்ளுவர் ‍ திருவள்ளுவர் யார்
என்று கண்டுபிடிப்பது  முயற்கொம்புதான். திருவள்ளுவருக்கும், வள்ளுவக்குலத்துக்கும், தோலுக்கும், இறைச்சிக்கும் முரசுக்கும் ஏதும்
தொடர்பு இருப்பது   அயற் சிந்தனைகளை உள்ளே புகுத்தாமல் சொல்லாய்வு ஒன்றையே கொண்டு  கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆய்வு தொடரும்.


வியாழன், 8 செப்டம்பர், 2016

வள்ளுவர் என்ற சொல்லமைப்பையும்...

திருவள்ளுவ நாயனார் ஒரு வெறும் வள்ளுவர் அல்லர்; அவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். அவரை வெறுமனே "வள்ளுவன்" என்று சுட்டலாகாது என்பது திருவள்ளுவமாலையால் அறியப்படுகின்றது. இதற்குக் காரணங்கள் உள்ளன. முதலாவது: அவர் ஆதிபகவன் என்னும்
தம்பதியினருக்குப் பிறந்தவர் என்றும் அவர்களில் ஒருவர் பிராமணர் என்றும் கூறப்படுவது. ஆகவே அவர் உயர்வான குடும்பத்தில் பிறந்தவர் என்று கொள்ள இடமுண்டு.  எனின்  அவர் திருவள்ளுவர் ஆகிறார். இரண்டாவது அவரெழுதிய உலகப் பொதுமறை ஈடு இணையற்ற நூல். இத்தகைய உயர் நூலை இயற்றிய அறிவாளி, அவர் யாராயினும் மிக்க உயர்வு உடையவரே ஆவார் . அதனாலும் அவர் திருவள்ளுவர் ஆகிறார்.

திரு என்ற அடைமொழியின்றிச் சுட்டினால் அது அவரைக் குறிக்காது
என்று திருவள்ளுவமாலை சொல்வதுபோல் தோன்றுகின்றது. அப்படியானால் "வள்ளுவன்" என்பது திருவள்ளுவர் பெயரில் வருகையில் அது சாதிப்பெயர் ஆகாது  என்பதுபோல் தெரிகிறது. வள்ளுவர் என்போர் அறிவிப்பாளர் என்று  பொருள் படுவதாலும். திருவள்ளுவர் அப்பெயரைப் புனைப்பெயராய்க் கொண்டிருந்திருந்ததனாலும்  அவர் எங்கும் காணப்படும்
குல வள்ளுவரல்லர்; அறிவு பரப்பிய அறிவிப்பாளர் ,அக்குலத்தினர் அல்லர் என்பதாகவுமிருக்கலாம்,  அரச குடும்பத்தில் பிறக்காத ஒருவர்
தம்மை அரசு என்று குறித்துக்கொள்வதுபோலும்,  (அதாவது உயர்வாக),
அடிமைக் குலத்தில் தோன்றாத ஒருவர் தம்மைத் தாசர் என்று குறித்துக் கொள்வது போலும் ( எடுத்துக்காட்டு: துளசி தாசர் ),  தொண்டர் தலைவராய் இருப்பவர் ஒருவர் தம்மைத் தொண்டரடியார் என்பது போலவும் ஒரு சொல்லாட்சி இது என்பதை விளக்கவே, திருவள்ளுவமாலைப் புலவர், திருவள்ளுவரை வள்ளுவர் என்பான் பேதை என்று விளக்கியுள்ளார் என்றும் நாம் நினைக்க இடமுண்டு.

வள்ளுவர் என்ற சொல்லமைப்பையும் பின் ஆராய்வோம் ,

தொடரும்.

சிக்காவில் சிக்கின் விதி.!

சிக்காது சிங்கப்பூர் சீர்கேடு நோய்களிலே
சிக்காவில் சிக்கின்  விதி.

பசுவில்லை சாணியில்லை பக்கத் தழுக்கில்
கொசுவந்த தெப்படியோ கூறு.

மருந்தும் அடிக்கணும் கொல்லோ இரத்த
விருந்தே விழைந்த கொசுக்கு!

திருந்த மருந்துண்டு தீர்ப்பீரே சிக்கா
அழுந்திப் பழிவாங்கு முன்.

நீரிற் பிறந்து நிலத்திலும் கோலோச்சிப்
பாரிற் கொசுபெற்ற தென்.

கொதுவைப் படைத்தானே கூட   நதிநீரை
விட்டானோ ஊரகத்தில்  இல்!


வேண்டாத வேலைகள் செய்கடவுள் ஆங்கவர்க்கு
வேண்டாமை யாருரைப் பார்?

கொசுக்கொலை என்றிறைவன் கூறினும் அன்ன
நசுக்குதல் நல்லோர் கடன் .

சிறுமண்டைப் பிள்ளைகள் சீரில்பின் வாழ்வு
தருகொசுவைக் கொல்லல் கடன்.

கொசுவொழிப்புச் செய்து குவலயத் தேறின்
பசுவெனினும்  பாராட்டும் காண்.

பசுவுக்கு வால்தந்து பார்த்தான் கொசுவுக்குக்
.கட்டுப்பா டாக்கல் பொருட்டு.








புதன், 7 செப்டம்பர், 2016

பூக்காரியைச் சுட்டிய புறநானூற்றின் இனிமை

https://sivamaalaa.blogspot.my/2016/09/blog-post_7.html

குறித்த முன் இடுகையைத் தொடர்ந்து:

நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாணுடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
எம்மினும் பேரெழில் இழந்து வினை எனப்
பிறமனை புகுவள் கொல்லோ
அளியள் தானே பூவிலைப் பெண்டே.


இப்போது என்ன நடந்தது?   மறவர்களை நோக்கி ஓர் இனமானம் காக்கும்
ஏவலன்றோ வீசப்பட்டது?  பகை அழிக்கப் போருக்குப் புறப்படு என்ற ஆணையன்றோ அந்தத் தண்ணுமையால் எறியப்பட்டது? இது நன்கு வெளிப்படும்படியாக: 'குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை" என்று புலவர் இனிமை தோன்றத் தெளிவிக்கிறார்.  ஆகவே இதிலேதும் இரங்கலுக்கு இடமில்லை என்பது முன்வரு குறிப்பாயிற்று.  குறும்பர் -  மறவர் . குறு  என்ற இக் குறுமைச் சொல்  அடித்தளப் போர்மறவரைக் குறிக்கும் பொருள்பொதிந்த சொற் பயன்பாடு.  அவர்களே நாடு காவலர்கள் .


இந்தத் தண்ணுமைத் தட்டொலி இரக்கத்தையா வரவழைக்கிறது?  யாருக்கு
அந்த இரக்கம் வேண்டும்? போருக்கு அஞ்சியவர்களாய் வாழ்ந்து சாகும்
நாணுடை மாக்கட்கு அது வேண்டும்!  மக்கட்கு அன்று,  அந்த மாக்கட்கு!
அவர்கட்கு வேண்டுமானால் இது இரங்குதலைத் தரும்.  எமக்கன்று, யாம்
மறக்குலத்து மாது என்பது தோன்ற: " நாணுடை மக்கட்கு இரங்கும்" என்றார் புலவர்.


எப்போதும் பூச்சூடிக் கொள்பவள். இன்று அது சூடவில்லை. தன் அழகில்
கொஞ்சத்தை அவள் இழந்துவிட்டவள்தான்.அழகிய மலர்கள் சூடி மணச்சாந்துகள் இட்டுக் கணவன்முன் நின்றால் அழகு அழகுதான். ஆனாலும் என்ன? போருக்குப் புறப்பட்ட கணவனைக் கண்டு உள்ளம் பூரித்து அது முகத்திலும் கண்களிலும் வெளிப்பட்ட அந்த அழகு அந்த இழப்புக்கு ஈடு செய்யவில்லையோ?  "அதனால் யாம் இழந்தது சிறிதே. எம்மினும் மிகுதியாய் தன் பேரெழில் இழந்து, என்ன வினை ஆகிவிட்டது என்று நொந்துகொண்டு இன்னொரு வீட்டுக்குள் புகுந்து பூவிலை கூற முனைகிறாளே,,, அவள் இழந்தது அதிகம்; அதிகம். இன்று பிழைப்பே அவளுக்குக் கேள்விக்குறி ஆகிவிட்டதே! வினை ஆகிவிட்டதே. பாவம் பாவம் அவள்தான் பாவம் என்கிறாள் இம்மறவர் மாது. யான் இரும்பு வருக்கத்துப் பெண் என்கிறாள் இவள்.


 ஆயின்
எம்மினும் பேரெழில் இழந்து வினை எனப்
பிறமனை புகுவள் கொல்லோ
அளியள் தானே பூவிலைப் பெண்டே.

என்பதைப் பாடி இன்புறுக.






புறநானூறு :" பூக்காரிக்கு இரங்கு, எனக்கன்று"


இது புறநானூற்றுப் பாடல். 293. அழகிய இப்பாடலை நொச்சியூர் நியமங்கிழார் பாடியுள்ளார்.சங்க காலத்தில் இவ்வூர் நொச்சிநியமம் என்றிருந்தது என்பர்.

திணை: காஞ்சி. துறை: பூக்கோள் காஞ்சி.

நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாணுடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
எம்மினும் பேரெழில் இழந்து வினை எனப்
பிறமனை புகுவள் கொல்லோ
அளியள் தானே பூவிலைப் பெண்டே.

சினம்கொண்ட யானையின் மேலமர்ந்து தண்ணுமை (போர்க்கழைக்கும் பறை) முழக்கி, மறவர்களை அழைக்கின்றான் ஒருவன். மறவர்கள் அது கேட்டுக் காஞ்சிப் பூச்சூடி, அரணைச் சூழ்ந்துள்ள பகைப்படையை அழிக்கப்
புறப்பட்டு வருகின்றனர்.

அங்ஙனம் போந்த மறவன் ஒருவனின் மனைவி, வீட்டில் இருக்கிறாள். அப்போது அங்கு வந்த பூக்காரி, பூ வாங்குக என்று அவளிடம் கேட்கிறாள்.
காஞ்சி சூடிச் சென்றுவிட்ட கணவனை எண்ணியபடி, தான் பூச்சூடிக்கொள்ளாமல் இருந்த அவளுக்கு, அந்தத் தண்ணுமை ஒலி இரக்கம் காட்டுவது போலிருக்கிறது. தண்ணுமை ஒலியே!  எனக்கு இரங்காதே!.
அந்தப் பூக்காரிக்கு நீ இரங்கு. இந்த ஒலியால், அடுத்தடுத்து உள்ள மனைகளிலும் எந்த மறவனின் மனைவியும் பூ வாங்கமாட்டாளே. பூ விற்க முடியாத அவள் அல்லளோ இரக்கத்திற்கு உரியவள்......?

இவ்வாறு பாடுகிறார் நொச்சி நியமங்கிழார்.
தண்ணுமை ஒலிக்கிறதே, அது இரக்க உணர்வினை மேலெழுப்பும் ஒலி.
அந்த இரக்கத்திற்கு உரியோர் மறவர்களின் மனைவிமாரல்லர். பூக்காரிகள்
தாம்.  மறக்குலத்துப் பெண்டிர் இதற்கெல்லாம் அஞ்சுவதில்லை.


தண்ணுமை முழக்குவோனும் அஞ்சுவதில்லை. அவனிருப்பது யானையின்
மேல். கீழ் நிற்கும் பகைவர் அவனைக் குத்த முடிவதில்லை." நிறப்புடைக்கு
ஒல்கா"  யானையின் மேலிருக்கிறான்.   கீழ்  நின்ற படி புடைத்தல் ‍ நிறப்புடை.
நின்ற> ‍ நிற.  னகர ஒற்றுக் குறைந்தது. புடைத்தல் ‍:  பக்கத்திலிருந்து குத்துதல். நில் > நிறு > நிற எனினும் அதுவே. அடிச்சொல் நில்.








செவ்வாய், 6 செப்டம்பர், 2016

இடக்கர்ப் பொருள் வரு தமிழ்

தமிழில் சொல்லும்போது இடக்கராகத் தோன்றும் சில சொற்களையும்
தொடர்களையும் அவை தமிழ் என்னாமல் வேறு மொழியினுடைய என்று கூறிவிட்டால் அந்த இடக்கான பொருள் மேலெழாது அடங்கிப்போகும். சிலவிடத்து இவ் வுபாயத்தை அல்லது ஆம்புடைமையைக் கையாண்டுள்ளனர் இந்திய இலக்கியவாதிகள். இது ஒரு செயலாற்றுத்
திறன் என்றே உயர்த்தவேண்டும். எந்த எந்த இடங்களில் அவ்வாறு செய்துள்ளனர் என்று விரித்து விளக்கலாம். ஆனால் அது புதைத்ததை மீண்டும் கிண்டி மேலெடுத்தது போலாகிவிடும்.

ஆனால் எடுத்துக்காட்டாக மட்டும் ஒன்றைக் காட்டி முடித்துவிடலாம்.
அது சாணக்கியன் என்பதே. பிரித்துப் பார்த்தால், சாண் நக்கியன் என்று
இடக்கர்ப் பொருள் வருகிறது.  ஆகவே இவன் தமிழனே ஆனாலும்
இவனை வடதிசைக்குப் பெயர்த்துவிடின் தொல்லை இராது.

இவன் எழுதினான் என்று சொல்லப்படும் அர்த்தசாத்திரமும் தமிழிற்போந்து பின் சமஸ்கிருத மொழியிற் பெயர்க்கப் பட்டதென்றே
தெரிகிறது. தமிழ் மூலம் தொடர்பு துண்டிக்கப்பட்டுக் கிடப்பதாகக்
கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் குமரசாமிப் பிள்ளை இதனை மீண்டும்
அழகிய வெண்பாக்களாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அவற்றைப் பாடி
இன்புறுக.

எடுத்துக்காட்டுக்கு:

ஆடையால் மற்றை அணியால் அலங்கரித்துப்
பீடடைய வந்த பெருமூடர்  -நீடவையில்
எத்துணையும் பேசாது அடங்கி இருப்பரேல்
அத்துணையும் மேன்மை அவர்க்கு ".

(சாணக்கிய நீதி வெண்பா)

இது அவையடக்கம் வலியுறுத்தியது. பேச வேண்டிய சமையத்துப் பேசவேண்டும்.  இன்றேல் " நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய 
மாட்டாதவன் நன்மரம் "  என்று குற்றமாகும் .  இ
துபோலும்  கருத்துக்கள் மன்னர் அவைக்குரிய என்றாலும் இன்றும் பொருந்துவனவாம் .

திங்கள், 5 செப்டம்பர், 2016

வனதாய் > வனிதை. காடு வனம் & கொடுந்தமிழ்

காடு என்பது காக்கப்படுவதாகிய மரங்கள் செடிகள் கொடிகள் அடர்ந்த இடம்.

கா (காத்தல் )  >  காடு.  (டு விகுதி).

ஒப்பு நோக்குக:  மா >  மாடு.  மா‍ = விலங்கு;  மாடு: ஒரு குறிப்பிட்ட‌
விலங்கு;  ஆக்கள்.

கா> கான் > கானம் > கானகம்.   (காடு).

கடு > காடு.  முதனிலை நீண்டசொல்.   கடுமையான (கடத்தற்கரிய இடம்)

கடு > கடம்.  (வேங்கடம்).  கடத்தற்கரிய வெம்மை மிக்க இடம்.

 வல் > வன்  (லகர  னகரத் திரிபு.)

வன் > வனம்.   காக்கப் படும் இடமாகிய காடு.

வனப்பு >  அழகு.   வனம்+ ஆம் + தரம் =  வனாந்தரம்.  (காடு என்னும்
தரமுடைய இடம்).  வனம் ஆகும் தரம்.  ஆகுபெயராய் வனம் குறித்தது.

வனப்பு > வன + தாய் >  வனதா > வனிதா.  

இங்கு அழகு குறிக்கும் வன என்ற அடி வனி  என்று திரிந்தது.

வனதாய் > வனிதை. வலிமிகாச் சொற்புனைவு.

செந்தமிழில் வனத்  தாய் என்று வரவேண்டும் .  கொடுந்தமிழில் வனிதா என்று திரிந்தது.  கொடுந்தமிழில் திரியும்.   கொடு  = வளைவு . கொடுந்தமிழ் = வளைந்த தமிழ் .   ஆயினும் தமிழே.  கொடுந்தமிழ்  மேலும் திரிந்து பாகதங்கள் ஆயின.

காடு வனம் & கொடுந்தமிழ்

அவனி அழகிய தோட்டம்

அவனி என்ற சொல்லைப் பார்ப்போம்.

அவம் =  கெடுதல்.  அவிந்து கெட்டது அவம்.
நி =  நிற்பது.  நில் என்பதன் கடைக்குறை.  நி =னி.

ஆக,மனிதன் இறைவனை அடையக் கெடுதலாக முன் நிற்பது இவ் அவனியாகும்.

இன்னொரு பொருள்:

 அம் > அ.   அழகு.   அ: முதலெழுத்துமாகும்.

வனம் =  அழகு.  வனப்பு = அழகு.

 வனம்  > வனி.   அழகு. பெருந்தோட்டம் அல்லது காடு.    இவற்றை உடையது உலகு.

அவனி =  அழகிய தோட்டம் அல்லது வனம்.

ஆக, இருபொருட் சொல்.

சிக்காவொரு கொடுநோயாம்......

உச்சத்து நாகரிகம்
எத்திக்கும் புகழ்பரப்பி,
மெச்சப்பல அருஞ்செயல்கள்
மெத்தத் திறமையொடு
நிகழ்த்திய சிங்கையிலும்
சிக்கா நோய் நுண்மம்
அகத்துப் புகுந்ததுவே
அஃதொரு பெருவியப்பே!
பரப்பும் கொசுக்களையே
இறப்பில் இடுமுயற்சி
இறப்பக் கடினமேனும்
சிறப்ப அமைதல்வேண்டும்.
சிக்காவொரு கொடுநோயாம்
எக்காலும் அதனுறவே
ஓக்காதே ஒழிந்திடுக.
கொசுக்களின் இனத்தினையே
நசுக்கியே நலம்பெறுக!

உபாயம்.

இனி உபாயம் என்ற சொல்லின் அமைப்பை அறிவோம்.

இது ஒரு சுட்டடிச்சொல்.

உவ:  முன்னிற்பது. இங்கும் அங்கும் தவிர்த்த இடம்.
அ.இ.உ என்பன மூன்றும் சுட்டுகள்.  அங்கு, இங்கு,  "உங்கு"  என்பன அதிலிருந்து
பிறப்பிக்கக் கூடிய சொற்கள்.

உவ:  உவன்:   முன்னிருப்பவன்

உ :   உன்.   உம்

உவ:  >   உவமை.

ஒரு செயலுக்கு முன் நிற்பது  செய்யும் உபாயம்.   சொற்பொருள்:  முன் ஆவது.

உவ + ஆய(து)  + அம் =  உவாயம்.

பின் வகரம் பகரமாய்த் திரிந்தது.


உவாயம் >   உபாயம்.


ஒன்றைச் செய்யுமும் அதை செய்யும் வழி அறியும்  செயல்.   ஆமாறு.  ஆம்புடை.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

நிவர்த்தி என்ற சொல்

நிவர்த்தி என்பது நம்  வழக்கில் உள்ளதாகும். என் மகளுக்குக் கல்யாணம்
செய்யத் தடைகள் ஏற்பட்டுக்கொண்டே உள்ளன, ஏதேனும் நிவர்த்தி செய்தல்  வேண்டும்  என்று பேசுவது நம் காதில் கேட்கிறது. நிவர்த்தி என்றால் என்ன,இச்சொல் எப்படி அமைந்தது?  ‍  என்பதைக் காண்போம்.

தொடர்கின்ற தடைகளை நிறுத்தவேண்டும்.  நில் > நிற்பு,  நிறுத்து என்பதற்கு  நி போட்டுக்கொள்ளுங்கள்.

மந்திரம் செய்வீர்களோ, ஏதேனும் மாயம் செய்வீர்களோ ‍:   இந்தத் தொல்லைக்கு ஒரு முடிவை வருவிக்க  வேண்டும்.  வரு . வருத்து, (வரச் செய்தல்).பிறவினை . இதன் தொடர்புடைய  சொல்  வரத்து என்றும்  வழங்கும்.  எ-டு :  போக்குவரத்து.   இனி  வருத்து > வருத்தகம் > வர்த்தகம்  பொருள் வருவித்து வணிகம் செய்தல் ;  பின்பு  பொதுப்பொருளில்  வழங்கியது ,

(வருத்தம் அல்லது துன்பம் வரச்செய்தல் அன்று ,  அது வேறு  ).

வரு > வருத்து > வர்த்து,   வர். (அடி)

இதை   (நிவர்த்தியை )  நிகழ்த்த ஒரு திறம் வேண்டுமே!  திறம் > தி.

ஆக, நி+ வர்(த்து) + தி.


நிவர்த்தி என்ற சொல் கிடைத்துவிட்டது.

இறுதி நிலை, வர்+தி என்றாலும் வர்த்து+ இ என்றாலும் வேறுபாடில்லை.  இருவழிகளும் ஒரு முடிபு கொள்கின்றன.

வர்+ தி என்பது வலித்து வர்த்தி ஆகும்

நிவர்த்தி :  நிறுத்தம் அல்லது நிற்றல் வருமாறு செய்யும் திறம்
 அல்லது நடவடிக்கை,

அறிந்து இன்புறுக.


சனி, 3 செப்டம்பர், 2016

உதிரம்

சொல்லமைப்பு:உதரம் ‍  உதிரம்

இங்கு குறித்த இரு சொற்களில் உதிரம் என்ற சொல்லை முதலில் எடுத்துக்கொள்வோம்.

உடலில் எப்பகுதியில் வெட்டு, கீறல் முதலியன ஏற்பட்டாலும் , இரத்தம் வருகிறது.  அரத்தம் என்பதே சரியான சொல் என்பதும்,  அர் என்பது
சிவப்பு நிறம் குறிப்பது என்பதும்,  அர்+அத்து+அம் = அரத்தம், இதுபின் ரத்தம் என்று தலையிழந்து, பின் ரகரத்தில் சொல் தொடங்கக் கூடாது என்பதால்
இகரம் சேர்த்து இரத்தம் ஆனது என்பதும்  நமக்கு முந்திய ஆய்வாளரால் நிறுவப்பட்ட ஒன்றாம்.

அரத்தம்   சொட்டும்,  வடியும்  அல்லது உதிரும் தன்மை உடையது. அதனால் அது உதிர்+அம் = உதிரம் எனப்பட்டதென்பது  அறிதற்குரியது.

போரில் இ/அரத்தம் அல்லது உதிரம் சிந்தியோருக்கு  மன்னர்களால் வழங்கப்  பட்ட நிலம்  உதிரப்  பட்டி  எனப்பட்டது  காண்க.

அரத்தம் =  குருதி எனவும் படும்.

உதரம் என்பது வயிறு. இதை அடுத்துக் காண்போம்.


கேடிகள்

பேச்சுத் தமிழில் மிகுதியும் வழங்கும் ஒரு சொல் கேடி என்பதாகும்.
கேடி என்ற சொல்லுடன் ஒருவனின் பெயரையும் இணைத்தும் குறிப்பதுண்டு. சிங்கப்பூரில் பெயர்பெற்ற கேடிகள் யாரும் இருப்பதாக நாம்
கேள்விப்படுவதில்லை. மலேசிய நகரங்களில் உள்ளனர் என்பது பலரும்
அறிந்ததே. பிற நாடுகளில் மாஃபியா என்னும் பெரிய கேடிகள் இருப்பதாகத் தெரிகிறது.

கேடி என்ற சொல் தமிழா என்று முன்னர் ஒருவர் கேட்டதுண்டு. சுருக்கமாகச் சொல்வோம்/

கேடு + இ =  கேடி   கேடு செய்வோன் என்பது பொருள்.

முன்  அஞ்சடிக்காரன் என்று ஒரு வழக்கு இருந்தது.  கடைவீடுகளுக்கு வெளியே ஐந்து அடி அகலமுள்ள நடை இருக்கும். வெயில் மழை படாமல் இவற்றினூடே நடந்து செல்லும் வசதி இருக்கும்.  இவ்விடங்களில் படுத்து உறங்கி  வீட்டுக்காரர்கள் தரும் உணவை
உண்டு வாழ்ந்தவர்கள் இப்பெயரால் அழைக்கப்பட்டனர்.

முன் ஒரு தமிழன் ஒரு மலாய்க் குடும்பத்தின் வீட்டின் அஞ்சடியில்
இரவில் படுத்துறங்கிக் காலங்கழித்து வந்தான்/ அந்த வீட்டுத் தவழும்
குழந்தை அதன் தாய் அறியாமல் வெளியில் வந்து தூங்கிக் கொண்டிருந்த‌
அவனைத்  தட்டிற்று.  அவன் அதை ஒரு கம்பால் அடித்துக் கொன்றான்.. பாவம், ஒரு பெரிய துயர நிகழ்வாகிவிட்டது,  இப்போது
அஞ்சடிக்காரர்கள் யாரையும் காண முடியவில்லை.

இவர்கள் கேடிகள் அல்லர்; ஆனால் சிலர் பித்தர்கள் என்று தோன்றுகிறது.

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

Narayana and Water, நீராயினன்

நாராயணன்

நீராயினன் என்பதே பிற்காலத்தில் நாராயணன், நாரா என்று மாற்றம் பெற்றதென்பதை இணையத்தில் எழுதி வெளியிட்டிருந்தோம்.  இது சில‌
ஆண்டுகளின் முன்.  இது இங்கும் பதிவு பெற்றது.

ஆயினான் என்பது ஆயணா.

இது பிறரால் இங்கு புகுந்து அழிக்கப்பட்டுள்ளது.  இதை மீண்டும் பதிவு
செய்கிறோம்,

மேலும் புதிய இடுகையும் கீழே குறிக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள் :

பரந்தாமன்     https://sivamaalaa.blogspot.sg/2016/05/blog-post_7.HTML

நீராயினன்  >  நாராயணன்

மனு  Part 1  Ch  1  :  10. The waters are called narah, (for) the waters are, indeed, the offspring of Nara; as they were his first residence (ayana), he thence is named Narayana. Translated by George Buhler.  
If you have a copy of the old post, you may kindly transmit it to us.



வியாழன், 1 செப்டம்பர், 2016

பார்ப்பனர் இன்னொரு விளக்கம்



Of the non-Asian mtDNA haplotypes found in Indian populations, most are of West Eurasian origin (Table 2; Torroni et al. 1994; Richards et al. 1998). However, most of these Indian West-Eurasian haplotypes belong to an Indian-specific subset of haplogroup U, that is, U2i (Kivisild et al. 1999), the oldest and second most common mtDNA haplogroup found in Europe (Torroni et al. 1994----------http://genome.cshlp.org/content/11/6/994.long

ஆரியர் என்று பெயருள்ளவர்கள் இந்தியாவிற்குள் யாரும் வரவில்லை என்று வரலாற்றாசிரியர் சிலர்  கருதுவர். (1)ஆனாலும் வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டுப் பலர் வந்துள்ளனர். இவர்களையெல்லாம் "ஆரியர்" என்ற பெயருக்குள் நுழைத்துவிடமுடியாது. வேத நூல்களிலும் பின்வந்தவற்றுள்ளும் ஆரியர் என்பது அறிவாளிகள் என்ற பொருளில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆரிய மொழிகள், இந்தோ ஆரிய மொழிகள் என்ற பதப் பயன்பாடுகளில் ஆரிய என்பதோ மொழிக்குடும்பங்களுக்கும் பெயராக வழங்கப்படுகின்றது.

பார்ப்பனர் :  3

பார்ப்பனர் என்ற சொல் பலராலும் விளக்கப்பட்ட்டுள்ள சொல் ஆகும். அது இங்கும் முன்னர் விளக்கப்பட்டுள்ளது.அதற்கு இன்னொரு விளக்கம் இப்போது காண்போம்.

பார் ‍ : உலகம், பரந்தது.

பர : இது புகழ்தல் என்று பொருள். புகழானது எங்கும் பரவுதற்குரிய‌

நற்செய்தியை அன்றோ குறிக்கும்!

" அயோத்தியர் கோமானைப் பாடிப் பர!" 

பர என்றால் புகழ்தல்.

பர> பார் > பாராட்டுதல். அதாவது புகழ்தல். இதில் ஆட்டுதல் என்பது ஆற்றுதல்,செய்தல் என்பதினும் வேறன்று.

ஆகவே பார் என்பது புகழ்தல், பாராட்டுதல் என்ற சொல்லும்  பொருளும் தமிழில் உள்ளது தெரிந்ததே .

பன்னுதல் : திரும்பத் திரும்பச் சொல்லுதல்.

பார்ப்பன்னர்: இறைப் புகழைத் திரும்பத் திரும்பச் சொல்லும் வேலையைச் செய்பவர் என்று பொருள்.

பன்னர் என்பது பின் பனர் என்று குறைந்தது.

இதுவரை கூறப்பட்டவற்றோடு இதுவும் சேர்ந்துகொள்ளட்டும்,

அடிக்குறிப்புகள் ;

(1) ரோமிலா தாப்பார், வரலாற்றாசிரியர் .

(2)http://blogs.discovermagazine.com/gnxp/2013/08/what-the-harappa-ancestry-project-has-resolved/#.V8fz8

(3) The similarity is so large that Tamil Brahmins are not counted as a distinct racial group

(4) சாதிகள் தோற்றம்  https://sivamaalaa.blogspot.sg/2016/06/why-castes-were-institutionalised-in.html

(5)  பார்ப்பான்  http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_30.html

(6)   அரசனின் பார்வைக்குரியவர்கள் என்ற பொருளில் பார்ப்பார் என்றும் வந்திருக்கலாம். அவர்களுக்கு ஆதரவு (மாடு தருதல்) அரசனால் செய்யப்பட்டது. ஆ= பசு; தரவு = தருவது.   ஆதாரம்  என்பதுமதுவாம் . பார்ப்பு : இது குருவிக்குஞ்சு என்றும் பொருள். எனவே அரசன் பெரிய குருவி; பார்ப்பனர் கவனிக்கப்படும் குஞ்சுகள் என்பது பொருள்.  பிள்ளைப் பட்டம் போன்றது. அரசனின் பிள்ளைகள்  என்பர்.  அக்கிரகாரம் என்ற சொல்லும் கவனிக்கக்கூடியது.  http://sivamaalaa.blogspot.com/2016/06/blog-post_86.html