திங்கள், 31 அக்டோபர், 2016

தீபஒளி மகிழ்ச்சி எல்லை தொட்டதுவே............

வாயிலுக்கு வந்தாரை வருக என்றோம்
வந்துணவு பெறுகமனம் மகிழ்க என்றோம்
போய்வருவீர் வந்தெமக்குப் பெருமை தந்தீர்;
புகன்றிட்டோம் நிறைந்துளமே நன்றி என்றே.
தோய்நறுந்தேன் தீபஒளி மகிழ்ச்சி எல்லை
தொட்டதுவே இருநாட்கள் தொடரும் கொஞ்சம்
ஆய்வினுக்கும் அரும்பணிக்கும் ஓய்வு கண்டோம்
அகமகிழ்வுத் தீபஒளி மலர்ச்சி யாமே.

சதிபதி என்ற தொடரில்..................

சத்தி அல்லது சக்தி என்பது பார்வதி தேவிக்கும் பெயர்.
சக்தி அல்லது சத்திக்குச் சிவனே பதி என்பது
சிவமதத்தார் கொள்கையாகும்,

சத்தி ( சக்தி ) என்பது இடைக்குறைந்தால் சதி என்று வரும்,
சதி என்பது பார்வதியையும் குறிக்கும்.  மனைவி என்றும்
பொருள் படும்.

சதிபதி என்ற தொடரில், கணவன்‍ மனைவி என்பது
பொருளாம் எனல் நீங்கள் அறிந்தது.

மனைவி அல்லது பெண்ணே ஆற்றலுடையாள்
 என்பது இதிலிருந்து பெறப்படுகிறது.  சதிபதி
 என்பதில் சதியே முன்வருதல் காண்க..


அசைவும் இயக்கமும் சத்தி ஆகும்.  இருப்பு
அல்லது அசைவற்ற நிலை சிவமென்பதும் கணவர்
- ஆடவர் என்பதும் இதிலிருந்து பெறப்படும்.

சதி என்ற சொல்லும் பிறவும் குடும்பத்துக்குப் பெண்
தலைமைகொண்ட‌ மிகப்பழங்காலத்தையே  
முன் கொணர்ந்து நிறுத்துகின்றன.

இதனைப் பதி  என்பதனுடன் ஒப்பிட்டு நோக்கவும்.

https://sivamaalaa.blogspot.sg/2016/10/blog-post_38.html  செல்க .

The world is made up of dynamic  and static forces.  Dynamic is சக்தி
 , சத்தி  அல்லது சதி .

வெள்ளி, 28 அக்டோபர், 2016

சுரர் என்போர் அறிவின் ஊற்றுக்கள்.

http://sivamaalaa.blogspot.com/2014/10/blog-post_22.html

நீரகத்துத் தோன்றிய சூறாவளியை நீரின் அமைப்பாகவும் (அம்ஸம்)  கடலாகவும் விண்ணாகவும் இலங்கும்  கண்ணன்
அடக்கினான். நீரக சூறா என்பதே நரகாசூறா > நரகாசுரா என்றானதை மேற்கண்ட இடுகையில் விளக்கி யிருந்தோம்.
.

இதில் வரும் அசுரன் என்ற  சொல் பிறழ்பிரிப்பு.
நல்லோர் என்று பொருள்படும் சுரன் என்பது  வேறு. அதன்
எதிர்ச்சொல் அசுரன்

இதனை அடுத்து விளக்குவோம்,

சுரர் என்போர்  அறிவின் ஊற்றுக்கள்.   அவர்களிடமிருந்து  அறிவு சுரந்து
மனித குலத்துக்குப் பயன்படுகிறது.    சுரர் அல்லாதோர்  அசுரர் ஆவர். ( which means "A  non-Sura or non-Suran  is Asuran:  suran - antonym : Asuran) 
ஆரிய என்ற சொல்லும்  அறிவாளிகள் என்றே பொருள் பட்டதுபோல்
இதுவும் அங்ஙனம் ( likewise )  அமைந்தது.

சொல் அமைப்பைப் பின் விரித்துரைப்போம்.

வியாழன், 27 அக்டோபர், 2016

தேன் வந்து பாயுது காதினிலே - மது


மது  என்பது ஒரு சொல்லின் இடைச்சுருக்கம்,  அதாவது:   ம ‍  து.
மயக்குவது,  மயங்குவது என்ற இரண்டில் எதிலும்  இடைநிற்கும் எழுத்துக்களை எடுத்துவிட்டால்  மது கிடைக்கின்றது;  பூவின் இடை
நிற்கும்  சாற்றை எடுத்து தேனீக்கள் மதுவைத் தருவது போல.

மது என்பது கள்ளையும் குறிக்கும்.  ஏனை மயக்குத் தேறல்களையும்
குறிக்கும்.  தேனையும் குறிக்கும்.

மதுவுண்ட வண்டானேன் எனின் ,  வண்டு  கள் குடித்தது என்று பொருள் ஆகாது.  வண்டு தேனை உண்டது என்பதே பொருள்.

மது  என்பது பொதுப் பொருளினது  ஆதலின் " பூமது "  " மது மலர்"  என்றெல்லாம் வரணனைகள்  ஏற்றப்  படுவதுண்டு.

"தேன்  வந்து பாயுது  காதினிலே" என்று பாடலில் வந்தால்,  தேன்  நாவிற் பட்டால்  ஆங்கு  உணரப்  படும் இனிமை போலும் ஓர் இனிமை,  செவிக்குள் சென்று பாய்கிறது  ,  என்பதே பொருள்.  தேனின் இனிமை `செவி உணராது
என்று குற்றம் காணலாகாது.  ஒரு சிறு கைக்குழந்தையைப் பார்த்து, Sweet   
என்று  நாம் மட்டுமா சொல்கிறோம் ?  சீனர்  மலாய்க்காரர்கள், ஏனை  மக்களாலும் சொல்லப்படுகிறதே;  குழ்ந்தை என்ன சீனியா  வெல்லமா ?  மொழிகளின் இயல்பும் மனிதனின் பொருள் உணர்ந்து உணர்த்தும் தன்மையும் அப்படி .எல்லா மொழிகளிலும் இவ்வகை ஒப்பீடு  உள்ளது  அறிக.

மயங்குவது என்பதை  ம - து  என்று சுருக்குவது  அதனை வெளிப்படையாகச் சுட்டாமையினால் ஏற்பட்டது,   இது  இடக்கர் அடக்கல் போன்ற ஒரு தேவையாகவோ  விரைந்து வணிகம் செய்தற்பொருட்டோ  ஏற்பட்டிருக்கக் கூடும்.  நாளடைவில் இது ஒரு தனிச் சொல்லானது,

இது பற்றி மேலும் அறிய:

https://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_2.html

மது என்பது மலாய் மொழியிலும் வழங்குகிறது.  அது  மா - டு  என்று  ஒலிக்கப்  பெறும் .தமிழ் மூலங்களிலிருந்து பிறந்த சொல்  பல வேறு திரிபுகளால், பிற மொழிகட்கும்  சென்று வழங்குதல் தமிழின் பெருமையே ஆகும்,  

செவ்வாய், 25 அக்டோபர், 2016

பதி பெண் வீட்டில் சென்று பதிந்து வாழ்பவனை............

பதி என்பது பலபொருளொரு சொல்.

இது அழுந்துதல், ஒடுங்குதல், கீழ்ப்படிதல். பணிதல்,பள்ளமாதல், ஊன்றுதல்,  ஆழ்தல், தங்குதல், நிலையாதல், எழுதல். ‍ என்று பல‌
பொருளுடைத்து.

பதி என்பது, உண்மையில் பெண் வீட்டில் சென்று பதிந்து வாழ்பவனைக்
குறிக்கிறது. அவனே கணவன்.( கண்போன்றவன்).  புருடன் ( புருவம் போன்று கண்ணாகிய பெண்ணைக் காப்பவன்.)

கண்  புருவம் என்பவை உடலிற்  பதிந்து பயன் தரும் உறுப்புகள்.

பழங்காலத்தில் பெண்களே தலைமை தாங்கினர். பெண்வழிக் குடும்பங்களே
நடைபெற்றன.  matrilineal.   இன்றும் உலகில் சில மக்கள் கூட்டத்தினர், பெண்மைத் தலைமையே போற்றுகின்றனர்.

பெண் வீட்டிற் சென்று ஆண் பதிந்து (புகுந்து) நின்ற படியால் அவன்
பதியானான். சொத்துரிமை உடையவர்களும் பெண்களே யாவர்.

பதிதல் என்பதன் பொருளைப்  பாருங்கள். அப்போது இது நன்கு தெளிவுறும்.

ஆணின் பெயர் அல்லது ஆணின் குடும்பப் பெயரைப் பிள்ளைகள்
தாங்கியதன் காரணம், பதிந்து நின்றவனை அடையாளம் தெரிவிக்கவே
ஆகும். பெண் நிலையாக வீடு நடாத்தியதால் அவள் பெயர் இடுதல்
வேண்டாமை உணரப்படும்.

கடவுள்  சீனிவாசனும் ஸ்ரீ  என்னும்  பெண்ணில் வசித்தவனே ஆவான் .

மனிதன் ஆரம்பமானது பெண்ணுக்குள்ளே  என்ற பட்டுக்கோட்டையின்  பாட்டும்  பொருள் பொதிந்தது ஆகும்.

பெண் அடிமை  பிற்கால நிகழ்வு.

அனைவர்க்கும் தீப ஒளி நல்வாழ்த்தே!

இனிதான தீபஓளிப் பண்டிகையே
இன்புதரும் பலகாரம் பலவகையே!
கனிவாகப் பெரியோர்முன் பிள்ளைகளும்
களிப்புடனே ஓடியாடி விளையாடும்.

தனியாக இருப்போர்க்கும் பெருமகிழ்வே
தமிழாலே தெய்வத்தை வாழ்த்திடுவீர்
பனியோடும் பகலோனைக் கண்டுவிடில்
பாரினிலே அதுபோலப் பயன்பெறுவீர்.

அனைவர்க்கும் தீப ஒளி நல்வாழ்த்தே
அகிலமெலாம் தீவினையின்  நீங்கிடுக!
மனையாளும் மக்களுடன் மகிழ்நனுடன்
மனம்போலே வாழ்வுபெறும் மங்கலமே

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

மரணமும் உடல் விறைப்பும்

ஒரு மனிதனோ அன்றி விலங்கோ இறந்து இயல்பான இயற்கைச் சூழ் நிலைகளில் ஏறத்தாழ நான்கு மணி நேரத்துக்குள் உடல் விறைப்பு ஏற்படுவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதனை ரிகோர் மார்ட்டிஸ்
 என்று  கூறுவர். பின்பு நேரம் செல்லச் செல்ல, அவ் வுடல் தளர்ந்து, பின்
அழுகிவிடத் தொடங்குகிறது.

இந்த இலத்தீன் தொடர்,மருத்துவத் துறையில் இறப்பு ஆய்வில் பயன்படுகிறது.

ரிக்கோர் மார்ட்டிஸ்:      

இறுகு  >  இறுகு ஊர் >  றுகூர்  >  rigor.


மரி தீர்  >   mortis

மரித்தல்  தீர்ந்ததும்  இறுகுதல்  ஊர்ந்தது .


ரகர  றகர  முதலாய சொற்கள் தம் இகர உகர  முதலெழுத்தை இழப்பவை .

இங்ஙனம் தமிழ்  இலத்தீனுக்குச் சொற்கொடை வழங்கியுள்ளது.

மரித்தல்  மடிதல்  என்பதன் திரிபு . இது முன் தந்த விளக்கம்.

மரணமும்  உடல்  விறைப்பும்

சனி, 22 அக்டோபர், 2016

சொல்: புரட்டாசி

பழைய நலமற்ற நிலைமைகளை மாற்றி, புதிய பற்றுக்கோட்டினைத்
தருவது புரட்டாசி  ஆகும்.

புரட்டிப் போடுவது என்ற பொருளில்  "புரட்டு"  என்ற சொல் வருகிறது.
புரட்டுவது  எனில் முழுதும் மாற்றிவைப்பது.

ஆசு என்பது பற்றுக்கோடு; ஆதரவு; சார்பு தருதல்.

இரண்டு சொற்களும் சேர்ந்து புரட்டாசி ஆயிற்று.  இறுதி இகரம்
விகுதியாகும்.

சகரத்துக்குத் தகரம் போலி யாதலின், புரட்டாதி எனவும் படும்.

இம்மாதம் விரத மாதமும்  ஆகும்.   விரதத்தினால் தீமைகள் விலகி நன்மை
உருவாகும்  என்பதும் மக்கள் நம்பிக்கை,

சொல்:  புரட்டாசி 

வெள்ளி, 21 அக்டோபர், 2016

சாறாயம் and arrack.


சாராயம் என்ற சொல்லை ஆய்ந்து முன் எழுதியுள்ளேன். எனினும்
அதற்குரிய இடுகையை இங்குக் காண இயலவில்லை.

அதை மீண்டும் பதிவு செய்வோம்.

சாராயம் என்பது உண்மையில் சாறாயம் ஆகும். பேச்சு வழக்குச்
சொல்லாகிய இதனை எழுத்தால் வரைந்தவர். றா என்ற எழுத்துக்குப்
பதிலாக ரா என்பதை இட்டு எழுதியதே இதில் கோளாறு ஆகும்.

என்றாலும், சார் என்பதிலிருந்தே சாறு என்ற சொல் தோன்றிற்று. ஒரு
காயைச் சார்ந்துள்ளதே அதன் சாறு ஆகும்.

ஆயம் என்பது ஆயது, ஆனது என்று பொருள்படும் ஒரு  பின்னொட்டு
ஆகும்.

சாறாயம் பல பொருள்களிலிருந்து எடுக்கப்படுகிறது. அரிசியிலிருந்து
எடுக்கப்படுவது உண்டு.

அராக் என்பதும் அர் : அரிசி;  ஆக் : ஆக்கு என்ற இரு சொற்களின்
சிதைவே ஆகும். இத்  தேறல்  பின் பிற பொருள்களினின்றும்   Molasses பெறப்பட்டது. இச்  சொல்லைப்
புனைந்தோர் திறமைசாலிகள்   ஆவார்.


சாற்றாயம் என்று வருதல் வேண்டுமன்றோ எனின், சொல்லமைப்பில்
இங்ஙனம் வருதல் கட்டாயமில்லை, இது சொற்கள் பல ஆய்ந்தபின்
அடைந்த தெளிவு ஆகும்.  அன்றியும் இடைக்குறை றகர ஒற்று எனினும்
ஆம்.

சாராயம் என்பது இவ்வாதத்தை ஒருவாறு போக்குவது ஆகும்.




புதன், 19 அக்டோபர், 2016

சாரணர் சொல்லமைப்பு

சாரணர்  என்பது நன்கு அமைந்த நற்றமிழ்ச் சொல்.

சார்தல் என்பதனடிப் பிறந்த இச்சொல், இவர்கள் ஒரு இயக்கத்தையோ, தலைவனையோ, ஒரு கூட்டத்தையோ சார்ந்திருப்போர் என்பதைத் தெளியக்காட்டுகிறது.

அணர் என்பது, பொருந்தி நிற்போர் என்பதைத் தெரிவிக்கிறது.

அண் + அர் =  அணர்

அண் > அணவுதல்,
அண் >அண்டுதல்.
அண் > அண்முதல் 
முதலிய சொற்களின் பொருளைக் காண்க.

சார்ந்து அணவுவோர்,  சார்ந்து அண்டி வினைசெய்வோர் என்பது
பொருளாம்.

மணிமேகலையில்  "நக்க சாரணர்  நயமிலர் "  என்ற தொடர்,   கள்ளும்  மனித ஊனும் உண்ணும் தீவு மக்களுக்கு  வழங்கப்பட்டது.


நகுதல் பல பொருளொரு சொல்.  சிரித்தல், ஒளிவீசுதல், மிக்க‌
மகிழ்வுடன் பாவச் செயல்களில் ஈடுபடுதலையும் குறிக்கும்.

நகு > நக்க. (பெயரெச்சம்)  தகு > தக்க  என்பதுபோல .

நக்குதல் ( நாவால் நக்குதல் என்பது வேறு)

பள்ளிகளில் சாரணர் இயக்கம்  scouts movement  உள்ளது.  நீங்கள் அறிந்தது இதுவாகும்.

நல்ல தமிழ்ச் சொல் இதுவாம்.

அணம்  விகுதி  பெற்ற  சொற்கள் ,   விகுதியின்  அமைப்பும்  பொருளும்::-

https://sivamaalaa.blogspot.sg/2015/09/suffix-anam.html


மற்றும் :  https://sivamaalaa.blogspot.sg/2016/02/blog-post_52.html  வாரணம் .

செவ்வாய், 18 அக்டோபர், 2016

திரிந்த பின் தம் வழி ஏகும் சொற்கள்

பேச்சு வழக்குத் திரிபுகளையும் எழுத்தில் உள்ள அவற்றுக்கான சொல் வடிவங்களையும் ஒப்பீடு செய்து, அவற்றைப் போலி என்று சொல்வதில்லை. பேச்சு வழக்கில் வருவனவற்றை இழிசனர் வழக்கு
என்று ஒதுக்கிவந்துள்ளனர்.

எழுத்துமொழியில் ஒரு கருத்தைக் குறிக்கச் சரியான சொல்லை அறிய இயலாமல் ஒருவரிருக்க, அவரே பேச்சில் அதைத் தொல்லை ஏதுமின்றி உரிய சொல்லைப் பயன்படுத்திக் கருத்தை அறிவித்துவிடுதலையும் ஊன்றிக் கவனித்தறியலாம்.

ஓவர்சியர் என்ற ஆங்கிலத்துக்குப் படித்தவர்கள் உரிய தமிழை மொழிபெயர்த்துக் கூற கடின முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, பேச்சுத் தமிழ் அதைக் கங்காணி என்று எளிதில் கூறிவிட்டது. பண்டிதன்மார் பின் அதனைக் கண்காணி என்று திருத்திக்கொண்டு ஏற்றுக்கொண்டனர். இப்படிப்பட்ட திருத்தங்கள் தமிழுக்குப் பெரிய‌ ஊதியம் எதையும் கொண்டுவந்துவிட்டது என்று கூறுவதற்கில்லை.

பிடித்து என்ற எச்சம், பேச்சில் பிடிச்சு என்றே இதுவரை வழங்கிவருகிறது.  மலையாளமும் பிடிச்சு என்றே வழங்குகிறது.  ஆனால்
த ‍ > ச பரிமாற்றம் எழுத்திலும் உள்ளது.

இன்னும், டகரத்துக்கு ரகரம் வருவது குறைவாகவே உணரப்படுகின்றது.
பிடித்திடுவாள் என்பது பிடிச்சிருவாள் என்று வருகையில் டு> ரு திரிபு
கண்டுகொள்ளப்படாலும் போய்விடும்.

சில உணவுகளை, அல்லது ஊணையே கொஞ்சம் விலக்கிவைப்பது
உண்மையில் விடதம் ஆகும். டு> ரு போல. ட> ர ஆகி, விடதம்
விரதம் ஆனது பலர் அறியார்.

விடு+ அது + அம் = விடதம்.
விடதம் > விரதம்.

மடிதல் சொல்லில் மடி > மரி என்று திரிதலை, புலவர் சிலர் அறிந்துள்ளனர்.  இங்கு டகர ரகரப் பரிமாற்றம்.

விடு >  விடி  >  விரி >  விரித்தல் .  விரிதல்  

ஒன்றானது விடுபட்டு  விரியும்.

சில வேளைகளில்  டகரம் ரகரமாய் மாறிப், பொருளும் சற்று வேறு நிலைக்குத் தாவிவிடும். இடும் பொருள், இருக்கும்.  இட்ட இடத்தில்
இருக்கும். ஒன்று செயல், மற்றொன்று செயலின் விளைவு.  ஆக.
இடு இரு என்பதன் முன் வடிவம் என்று அறிக.

மரி என்பது மடி என்பதன் திரிபு எனினும், மடிதல் மரிதல் என்று ஆகாது.
மரித்தல் என்று த‌கரம் இரட்டித்தே வரும். மரி என்பதனோடு அணம் விகுதி சேர்ந்து, மரணம்  ஆவ‌துபோல், மடி > மடணம் ஆவதில்லை.
சொற்கள் திரிந்தபின் தம் வழிப்  போய்விடுகின்றன. என்பது உணர்க.


புலவு  என்பது இறைச்சி.  எனினும் புலவர் என்பது பெரும்பாலும் இறைச்சி உண்பவரைக் குறிப்பதில்லை. ஒரு விகுதி மட்டும்தானே
மாற்றம். ஏன் இத்துணை பொருள்மாற்றம்?

புலையர் என்போரும் புலவு உண்டவர் என்பர், எனினும் புலவு உண்போர்
பலர், அவர்கள் எல்லோரும் புலையரல்லர். பொருள் பொருத்தமாக‌
இல்லை. இவர்கள் முன் காலத்தில் ஐயர்கள் போலும் சில  மந்திரங்கள் சொல்லி, இறைச்சி முதலியன இட்டுப் படைத்துச் சடங்குகள் செயதனர்
என்று தெரிகிறது.  ஆகவே சிறிய ஐயர்கள். புன்மை = சிறியது.
புல்+ஐயர் >  புல்லையர் > புலையர் (இடைக்குறை)  புல்லையா என்றபெயர் உள்ளோரும் உளர். இவர்கள் வரலாறு ஆய்வுக்குரித்து.








  

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

தாமதம்

தாமதம் என்ற சொல் பற்றிப் பத்தாண்டுகட்குமுன்னரே எழுதியிருந்தது
இன்னும் நினைவிலுள்ளது. ஆனால் அது இங்கு கிடைக்கவில்லை. எழுதி வெளியிடும்போதே அதை அழித்துவிடும் ஒட்டு மென்பொருள் கள்ளத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தபடியினால், அது அழிந்திருக்கக் கூடும்.

இப்போது அதை மீண்டும் காண்போம்.

செய்ய ஒதுக்கப்படும் நேரத்தை மதிப்பிடும்போது, உரிய அளவிலான நேரத்தை ஒதுக்காமல் தாழ்த்தி மதிப்பிட்டு, குறைந்த நேரத்தையே ஒதுக்குவோமாயின், வேலையைத் தொடங்கிப் பார்க்குங்கால், நேரம்
போதாமையினால், ஒரு தாமதம் ஏற்படுகிறது.  நாலு நாள் வேலைக்கு
இரண்டு நாள் ஒதுக்கினால், இரண்டு நாட்களில் வேலைமுடியாமல்
தாமதம் ஏற்படுகிறது.

இதுவே தாழ்மதித்தல் ஆகும்.  இதிலுள்ள ழகர ஒற்று மறைந்து   தாமதித்தல்
தாமதம் என்றானது.   தாழ் மதி >  தாமதி >  தாமதி + அம்  =  தாமதம் .

நேர அளவீடும்  வேலைச் செயல் அளவீடும்  ஒத்து இயலாமைதான்  தாமதம் என்பது.  இங்கு மதி என்பது அளவிடுதல் குறித்தது.

ஆங்கிலத்தில்  டிலே என்பதற்கு என்ன பொருள் ?  டி  என்பதென்ன?  லே
என்பதென்ன ?  டி =  கீழே?   லே = வைத்தல் ?  இச்சொல்லையும்  ஆய்ந்து
அறிதல்  நலம்.

தாழ  என்பதையே  "டி " -யும் குறிக்கும்.

இதுபின் எவ்வகையான காலத் தாழ்த்தையும் குறிக்கலாயிற்று. 

  



சனி, 15 அக்டோபர், 2016

கடாட்சம்

மனிதனாய்ப் பிறந்தவன் தன் வாணாளில் பல துன்பங்களை அடைகிறான். துன்பம் தாங்கொணாத போது, அவன் இறைவனைப் பலகாலும் வேண்டுகின்றான். இறைவன் உடனே வந்து அருள்புரிதல்
கதைகளில்கூட பெரும்பாலும் வருவதில்லை. இறுதியிலேயே வருகிறான்; துன்பத்தை நீக்கி அருள்கிறான்.

ஒருவர் மலையினின்று விழப்போகுங்காலைதான் அவன் வந்தான்;
இன்னொருவர் கண்ணைப் பெயர்த்து அவன் கண்ணிலப்பினபின் தான்
வந்தான்! இனி வாழேன்; இனித் தாளேன் என்று அலறியபின் தான் வந்து
அஞ்சேல் என்று அருள்புரிந்தான்.

கடைசியில் ஆள்வோன் அவன்!

அது கடாட்சம் எனப்பட்டது.

கடை +  ஆள் + சு +  அம்  =  கடாட்சம்   ஆனது.

கடை  என்பதன்  ஐகாரம் கெட்டது    கட  என்று நின்றது.

எவ்வளவு  தொலைவிலும் கடந்து வருவோன் ;  மலைகளும் காடுகளும்
அவனுக்கு   ஒரு பொருட்டல்ல . கட  என்பதற்கு இப்படிப் பொருள்கூறினும்
அமையும்.

கட  + ஆள் + சு + அம் =  கடாட்சம் . கடந்தும் வந்தாள்வோன் தந்த அருள் .

கடாட்சம் தமிழ்.

வெள்ளி, 14 அக்டோபர், 2016

சிகிச்சை


புகழ்ப்பெற்ற முதலமைச்சர் அம்மா அவர்களின் சிகிச்சை பற்றிப் பலரும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.  காணொளிப் படங்களும்
வெளிவந்துள்ளன.  இதுகாலை,சிகிச்சை என்ற சொல்லைப் பற்றி எழுதியதைத் தேடிப் பார்த்தேன். எழுதியது அழிக்கப்பட்டுவிட வில்லை. இன்னும் உள்ளது.

அதனை இங்குக் காணலாம்.

http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_14.html

கள்ள ஊடுருவிகளால் அழிபடாதிருக்கும் அதைப் படித்து இன்புறுங்கள்


வியாழன், 13 அக்டோபர், 2016

பசுமதி மணமுள்ள அரிசி

பசுமதி என்ற  சொல்லை ஆய்வோம்.

இது நல்ல மணமுள்ள அரிசி வகையாதலால் இப்பெயர் பெற்றது என்று
எண்ணுகின்றனர். வாசம் என்ற சொல்லிலிருந்து இது பிறந்ததென்பர்
வாசித்தல் நீண்டு செல்லும் வழி என்று பொருள்படும் வாய் (வாய்க்கால்)
என்பதிலிருந்து அமைந்தது. இது சமஸ்கிருதத்திலும் சென்று தங்கியுள்ள படியால், அம்மொழி அகரவரிசையை மட்டும் தேடிப்பார்த்தவர் அதைச் சமஸ்கிருதம் என்று முடிவுசெய்வது இயல்பு.   வாசம்  அல்லது மணம் ( பலவும் ) என்பவை புறப்பட்ட இடத்திலிருந்து  நீண்டு  பரவும் தன்மை உடையவை தான்.

வாய் >  வாயித்தல்
வாயி  > வாசி > வாசித்தல்.

ஆனால் வாசம் என்ற சொல்லினின்று வாசமதி என்று அமைந்து பின்பு அது வசுமதி ஆகி பின்னர் பசுமதி ‍> பஸ்மதி என்றானது என்பது "இருக்கலாம்" என்று சொல்லத்தக்கது என்றாலும், அது பசுமை+ மதி என்ற இரு சொற்களின் புனைவு என்பதே பொருத்தம் என்று முடிக்கலாம்.

பசுமையானது, புதியது, வாசமுள்ளது.  பசுமை மாறிய பொருட்களே
தீய நாற்றமெடுப்பவை. ஆகையால் பசுமை என்பது  வாசம் என்பதையும் உள்ளடக்கி, புதிது என்றும் பொருள்படுவது.மதி என்பது எங்கும் விரும்பப்படுவது என்றும் மதிக்கப்படுவது என்றும் பொருள்படும்.

எனவே,

பசுமை+ மதி = பசுமதி என்பதே உண்மையான சொல்லமைப்பு ஆகும்,

இது வட இந்தியா, பாக்கிஸ்தான் முதலிய இடங்களில் விளைந்தாலும்,
இவர்கள் இதை விற்பனைப் பொருட்டு விளைவிப்பவர்கள். அரிசி இவர்களின்  நிலைத்த உணவன்று. கோதுமையே இவர்கள் உணவு.
இது அங்கிருந்த தமிழர்களால் புகுத்தப்பட்டது.

முருங்கைக்காய்  வேம்பு முதலியவை மலாய்க்காரர்கள் அறிந்துகொண்டது போன்ற நிலையே.  ஒரு மலாய் நண்பர் முருங்கை மரத்தை வெட்டு என்கிறார்.  அதைப்  பற்றிய நன்மைகளைப்  பத்து நிமிடம் யானெடுத்துக் கூறின பின்
இப்போது முருங்கைச் சாறு சாப்பிடுகிறார்.    ( rebus  பண்ணுகிறார். )   இது என் வட்டாரத்தில் பரவி , ஒரு நாள் நான்  வீடு  சென்று சேர்ந்த காலை  முன்புறத்திருந்த  மரத்திலிருந்து சில கிளைகளை ஒடித்துக் கொண்டிருந்தார்கள்.  நல்லன பரவும்.

பசுமதி  -   நெல் விளைத்த தமிழர் இட்ட பெயராக வேண்டும். பசுமை மணம்  பரப்பும்  நெல் வகை.

புதன், 12 அக்டோபர், 2016

சளிபிடித்து மூன்றுநாள்

மூக்குச் சளிபிடித்து மூன்றுநாள் யானிளைக்க‌
நாக்கும் சுவையுணவு நாணிற்றே ‍‍‍=== பார்க்குமோர்
தேக்கினைப் போலும் திடத்தினர் என்றாலும்
ஊக்கம் இழப்பரே உண்டு.

திங்கள், 10 அக்டோபர், 2016

பொத்தகம், book

புத்தகம் என்ற சொல்லுக்கு நேரானதாக , ஆங்கிலத்தில் "புக்" எனப்படுகிறது.

புத்தகம் என்பதினும் பொத்தகம் என்பதே சரியானது என்று தமிழ் ஆர்வலர் கூறுவர்.

பொதி + அகம் ‍=  பொத்தகம்  எனின் ஏடுகள் ஒன்றாக சேர்க்கப்பட்ட கட்டு என்று பொருளாகும்.  பொதி என்பது பொதிதல். உள் வைத்துக்
கட்டுதல்.  இதில் ஒரு இகரம்  கெட்டது;  பொதி < பொத்+ இ.
பொதி என்பது கட்டுச்சோறு என்றும்  பொருள்படும்.

பொத் > பொது.  ( பலர் ஒன்று சேர்தல், சேர்ந்திருத்தல்).
பொத் > பொதி.  (கட்டு)

பொத் > பொத்+ அகம் = பொத்தகம்,  ஏட்டுக்கட்டு. கட்டேடு.  கட்டோலை.

பொத்துதல் : இது கட்டுதல் என்றும் பொருள்.

பொத் என்பது ஒரு அடியன்று . விளக்கும்பொருட்டு   , இவ்வடிவு
காட்டப்பட்டது.

புதை என்பது பேச்சில் பொ தை   என்று வடிவு  கொள்ளும்.   புதைப்பதும்  ஒரு துளை  செய்து.  மண்கட்டுக்குள் ஒன்றை இடுவது ஆகும்.   இங்கு வரும் கட்டுப் பொருளைக்  கவனிக்கவும் .

பொத்துதல் = கட்டுதல்.
பொத்து + அகம்  எனினும் அதுவே ஆகும்.   = பொத்தகம் .

புத்தகம் எனின் புதிய அகம்  ஆகும்!!

பொத்தகம்  என்பதைச் சமஸ்கிருதம் புஸ்தகம்  ஆக்கிற்று.  அது பின் தமிழில்
புத்தகம்  ஆனது.

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

சுட்டடிச் சொற்கள் : உ முதல் துதித்தல் வரை

உகரம் முன்னிருப்பதைக் குறிக்கிறது என்பதைப் பல இடுகைகளில் அவ்வப்போது சுட்டிக் காட்டியுள்ளோம்.

உவன் :  முன் இருப்பவன்.
உன்:   முன் இருப்போனுக்கு உரிய.  (எடுத்துக்காட்டு: உன் புத்தகம். உன் வீடு என்பன ).
உது:  முன் இருப்பது.

உதி:
உது என்ற முன் இருப்பது என்னும் க‌ருத்தினின்று உதி என்ற சொல் தோன்றிற்று என்பதைக் கூர்ந்துணர்க. உதி > உதித்தல்

உது > உதை:  கால் முன் சென்று ( பிறிது ஒன்றை அல்லது ஒருவனைத் )தொடுதல்.

உ > உய் > உய்தல்.    முன் செல்லுதல்  முன்னேறுதல்.
உ > உது > உந்துதல்.   முன்செலவுறுத்துதல்.

உ > உது > உது + அ + அம் =  உதயம்.  முன் தோன்றி அங்கு
செல்லுதல்.  அ = அங்கு. யகரம் : உடம்படுமெய்.  (  எழுதல் .)

உதையம் > உதயம் எனினுமாம். ஐகாரக் குறுக்கம்.

உது >  நுது > நுதல்.  முன்னிருக்கும் நெற்றி.

உயிரின் முன்  ஒரு நகர மெய் தோன்றிற்று.

நுது > நுதி : புகழ்தல்.

--

நுது > நுதல் > நுதலுதல் ,  ஏதேனும் சொல்லும்போது ஒரு கருத்தை
முன் வைத்தல். விடையம் ‍ > விடயம் > விஷயம். விடுக்கும் செய்தி.
நுதலுதல் : விடயம் உரைத்தல்.

நுது > நுந்து > நுந்தல்.  கொட்டுதல், முன் இறைத்தல், பொழிதல்.
 (உது > உந்தல் போல).

உ> நு > நுவலல்  : சொல்லுதல். முன்னாக மொழிதல்.

நுவலம் > நுவனம்:  நூல்.     ஒ நோ: கவல் > கவலம்> கவனம்.

உ > து >  துப்பு:  முன் உமிழும் எச்சில்.

உ > து > துப்பு: முன்மை உடையதாகிய உணவு.
உ > து > தூவு:  முன் தெளித்தல்.

உ >  து  > துய் .  துய்த்தல் .  முன் சென்று அடைந்து அதில்  மகிழ்தல்

உ> து> துதி.   முன்வைத்துப் புகழ்தல்.  துதி > ஸ்துதி.

துதிக்கை .

உ >  ஊ

ஊகம் .  யூகம்   அறியாததை மனத்தால் எண்ணி அறிவது.  நேரடியாய் அறியுமுன்  எண்ணி அறிவது.


ஊங்கு:  விட.

அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை. (குறள்.)


உ > ஊ > தூ > தூவு   தூவுதல்.

தூவு > தூவம் > தூபம் :  பொடி தூவிப் புகை கூட்டுதல்.   வ> ப .

எல்லாம் விளக்க நேரம் போதாது. இவற்றினின்று பலவற்றை நீங்கள்
தெரிந்துகொள்ளலாம்.

இவற்றைத் தமிழ்ப்புலவன்மாரும் கூறியுள்ளனர்.

ஆய்ந்து  விரித்துணர்க .



சனி, 8 அக்டோபர், 2016

மதியும் அறிவும்

மதி என்பது அறிவு குறிக்கும் தமிழ்ச்சொல்.  இதற்குரிய வினைச்சொல்
மதித்தல் என்பது. மதித்தல் என்ற வினைச்சொல் தமிழிலிருப்பதனால்
மதி என்பது தமிழ்தான். அறிவு என்பது அறிந்துகொள்ளும் செயல் அல்லது திறன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

திருக்குறளில் உள்ள ஒரு சிறந்த பா இதுவாகும்.

மதியும் அறிவும்  இப்போது ஒப்பாக வழங்கப் படுவதுண்டு;   இது காலப் போக்கில் பொருளிழப்பு  ஆகும்.

முயலுக்கு மூன்று கால்கள் என்று யாராவது சொல்லி அதை ஒருவன்
நம்பினால் அவனுக்கு அறிதிறன் தேவைப்படுகிறது என்றுதான் கொள்ளவேண்டும். ஒருகாலை இழந்துவிட்ட  முயலானால்   அதுவும்
முயல்தான்;  அதை மாற்றுத் திறனுடை முயல் எனலாமா ?

மதி என்பது ஒப்பிட்டும் அளவிட்டும்  அறியும்  மேலான  திறனைக் குறிக்கிறது.
ஆகவே  அறிவு  மதி ஆகிய சொற்களிடையே  ஒரு சிறு வேறுபாடு உள்ளது.
நிலவு  காலத்தை அளவிடுவதால்  அதற்கு  மதி  என்பது பெயராயிற்று .


மதியைக் கொண்டு அளவிட்ட காலம்  மாதம் எனப்பட்டது. மதி +  அம் = மாதம்.  இது முதனிலை நீண்டு விகுதி பெற்று, இடைநின்ற இகரம் கெட்ட பெயர்.  இதைப் போன்ற இன்னொரு சொல் படி+ அம் =  பாடம் ஆகும்,

சுடு+ அம் = சூடம்  என்ற சொல்லில்  முதனிலை நீண்டு உகரம் கெட்டு விகுதி பெற்றது. அறு >  ஆறு  என்பதில்  முதனிலை நீண்டு பெயரானது,  ஏனை விகாரங்கள் யாவையும் இல்லை .

இவற்றை நன்கு மனத்திலிருத்திக் கொள்க.

நுதி  என்பதும்  அறிவின் கூர்மை குறிக்கும் பழஞ் சொல்லே.




வியாழன், 6 அக்டோபர், 2016

காய்ச்சலென்றால்

காய்ச்சலெனில்  மாத்திரையைப் போட்டுக் கொள்வாய்
கடைகளிலே பலவிதங்கள் கிட்டும் கேட்பாய்!
நாயுறக்கம் கொண்டாலும் தேக நன்மை
நாடுவது கடனன்றோ நாளும் நாளும்.
போய்க்கிடந்து மருந்துண்ண மாட்டே  னென்று
புலம்புவதாற் பயனுண்டோ இன்றேல் சென்றே
நோயகற்று மருத்துவரின் நுட்ப  ஆய்வில்
நுவல்மருந்து பெற்றருந்தி நூறு  காண்பாய் .



நுறு :  நூறாண்டு .







  

புதன், 5 அக்டோபர், 2016

இறந்துகொண் டிருப்பாரை

இறந்துகொண் டிருப்பாரை இறவாமல் பிழைப்பிக்கப்
ப‌றந்துவானில் கோள்தொட்ட பயன்மாந்தன் அறிந்திலனோ?


அறிந்திருந்தால் அன்புடையார் அவ்வுலகு செல்கையிலே
புரிந்துணராத் தான்மாய்தல் புரிவானின் வீண்மையுமேன்?

வீண்மைபல‌ தாம்விலக்கி வெற்றிகண்ட அறிவியலார்
காண்மரணம் பொய்யாக்கிக் கதிஉயர்த்தல் விளையாரோ?

விளைத்தபல விந்தைகளில் நிலைத்தியலா மனிதவுயிர்
பிழைத்திருக்கும் விந்தைதனை  இழைத்துயர்ந்து சிறவாரோ ?


தலைவன் இறக்கத் தொண்டன் தன்னை மாய்த்துக் கொள்கிறான் .
மரணம் [இல்லாப்  பெரு வாழ்வினை அறிவியலார் தரமுடியுமானால் 
பாவம், இத்தகு   தொண்டர்களை எல்லாம்  காப்பாற்றிவிடலாம் ,  அவர்களின்  தலைவர்களுடன் !!

இதில்  அந்தாதித் தொடை பயன்படுத்தப் பட்டது.

திங்கள், 3 அக்டோபர், 2016

கண்டதோர் கொள்கை

கண்டதோர் கொள்கை ஒன்றே
கருதுமோர் உண்மைக் கொள்கை
என்பதோர் படியில் நின்றே
எனைத்துமே போற்றிக் கொண்டு
மன்பதை அனைத்தும் பின்னே
மடங்காது வருக வென்பான்
ஒன்பதில் ஒன்று நீங்கின்
உன்கழுத் தறுத்தல் நீங்கான்.

தீயினில் விரைந்து  வீயும்
ஆயவை  அனைத்தும் போலே
தீவிரம் அதனில் மாயும்
ஆய்விலர் கருதும் யாவும்.
தாவுறும் அனைத்தும் நன்மை
தாவில  அனைத்தும் புன்மை
மேவின புரட்டிப் போட்ட
மிகைபடு பிழைக்கும் செல்கை .     

தீவிரம்  விலகிச்  செல்வீர்
தீவினை கடன   கற்றல் ;
நாவினில் பிழைத்த  லின்றி
நல்லன கடைக் கொள்    வீ ரே;
தேவினை  அடைந்தோன்  போலும்
பாவனை  புனைதல்  தீதாம் ;
ஓவமே  பலரும்  கூடி
ஒத்திருந் தகலுள்  போற்றல் .


 குறிப்புகள்:

கண்டது:  கண்ணாற்  கண்டதும்  மனத்தாற்  கண்டதும்  ஆகியவை;
அவன் காணாத  கொள்கைகள் பல உலகில் உள என்பது  கருத்து.

ஓர்  கொள்கை:   வினைத்தொகை;   ஓரும்  கொள்கை .  ஓர்தல் :  மூளையில்  தோன்ற   அறிதல் .

ஒன்றே  :   மட்டுமே.

கருதுமோர்   உண்மை:    அவன்  ஏற்கத்தக்க  ஒரே  உண்மை.

என்பதோர்  படி:   பிடிவாதமாகிய  ஒற்றைப் படி.

எனைத்துமே -   எதையாகிலுமே.    பிற  குப்பைகள்  பலவற்றையும் .

தா  :   குற்றம்.

செல்கை  :  போம் வழி .

கடன  கற்றல்:   கடன்  அகற்றல்  =   அகற்றல்  கடன் .

பிழைத்தல் :  பிழை படுதல் .

தேவினை  =  கடவுளை.

ஓவம் :   ஓவியம்.


சனி, 1 அக்டோபர், 2016

வருந்தா நிலமேல் வாழ்விதுவே !

வீட்டின் நாளைத் தலைவர்யார்
விரிந்த கவலை நாம்கொள்ளோம்!
கூட்டில் கிழடும் இறந்திட்டால்
குருவிகள் கவலை கொள்வதில்லை!
நாட்டின் தலைமை நன்பொருளாம்
நாளும் அதையே சிந்தனையாய்
ஏட்டில் பேச்சில் விரித்திடுதல்
இற்றை உலகின் செய்ம்முறையே.

இற்றை இயற்கை நாளையையே
என்றும் கவலை கொள்வதில்லை.
மற்றைப் பொருளில் மனம்செல்ல‌
மனமாய்ப் பொருளும் அதற்கில்லை
இறந்தான் எனவே நாம்கவல‌
எழுந்தான் பகலோன் முனம்போலே!
வரந்தான் கடவுள் தரவில்லை
வருந்தா நிலமேல் வாழ்விதுவே ! 

சட்டாம்பிள்ளை.

சட்டாம்பிள்ளை.

தமிழறிஞர்கள், இச்சொல்லை ஒரு மரூஉ என்று கருதுவர். அதாவது சட்ட நம்பிப் பிள்ளை என்பதே மருவி  சட்டாம்பிள்ளை என்று வந்தது என்பர்.
சட்டநம்பி(ப்பி)ள்ளை  >  சட்டாம்பிள்ளை.    முதலில் இரு பிகரங்களில்
ஒன்று மறைந்து,  பின் சட்டநம் என்பது சட்டாம் என்று திரிந்தது.  தம்பி என்பது தம்பின் என்பதன் கடைக்குறை;  இதேபோல் நம்பி என்பது நம்பின் என்பதன் கடைக்குறை.

சட்டம் + பிள்ளை =  சட்டாம்பிள்ளை;   இதில்  டகரம்  நீண்டது  ( திரிதல் )  என்பதும்  ஆம் .   குளத்தங்கரை  என்பதைக்    குளத்தாங்கரை  என்று நீட்டினாற் போலும் ,

இத்தகு திரிபுகளால்  தமிழ் புதிய சொல்லுருவங்களைப் பெற்றதுடன் வளமும் அடைந்தது என்று கூறவேண்டும். மொழிகள்  திரிந்தமைவுகளே எனல் அறிக.

எந்தச் சொல்லும் திரியாமல் இருக்குமாயின்  சொற்கள் பல்கியிருத்தல் இயலாமை காண்க.  தோன்றல் திரிதல் கெடுதலும்  குறைப்படுதல்களும்  இவ் வளம் உய்த்தன.

நம்பி என்பதன் பெண்பால் வடிவு  நங்கை என்பது. இச் சொற்களில் போதரும்
நம்,  தம் என்பன தம் அடி நாட் பொருளை  நாளடைவில் இழந்தன. போலும்.

சட்டம்  என்பது ஈண்டு  ஒழுங்கு  குறித்தது.  இதன் மற்ற பொருள்களை முன் இடுகைகளில்  குறித்துள்ளோம். அவை :  

http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_85.html

http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_28.html