செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

அகுஸ்த > அகஸ்த. A

ஓர் உகரச் சொல் அகரச் சொல்லாக மாறும் என்று கழறுவோம்.

என்ன ஆதாரம் என்று  நீங்கள் கடாவலாம்.

விடை காணமுடியாக் கடாவன்று இது.

ஐரோப்பிய மொழிகளிலும் இத்தகு மாற்றங்களைக் காணலாம்.

ஆங்கிலத்தில் பாருங்கள்: உப்பர் என்று எழுதிக்கொண்டு அப்பர் என்றன்றோ  வாயிக்கின்றனர்!  ( வாசிக்கின்றனர்:  ய~ ச திரிபு). upper.
இதிலிருந்து யாது தெரிகின்றது?   உகரத் தொடக்கம் அகர மாகும்.
உண்டர் என்றே எழுதிக்கொண்டு அண்டர் என்கின்றனரே!  under.

அதேபோல்தான் குட்டை என்பதும் கட்டை என்றும் வரும்.

குட்டையன் >  கட்டையன்.  க்+ உ =  கு;  க்+ அ =  க.

அகத்தியர் என்பார் குள்ளமுனி.

அகத்தியரை அகஸ்தியர் என்பார் புலவர் சிலரேனும்.

அகஸ்தஸ்  (அகத்தர்,  அகத்தியர்)

குட்டை >  கட்டை; குஸ்த > கஸ்த.

அகுஸ்த > அகஸ்த. AUGUST

ஐரோப்பிய மொழிகளில் இவை இரண்டுமே augustus  ........  என்று
வரவில்லையோ?

குஸ்த என்றால் குட்டை; கட்டை.

அவர்தான் குள்ளமுனி.    குட்டை = குள்ளம்.

குளம்பி அருந்திக் கிளம்புங்கள் வேலைக்கு.

குள்ளமுனி புகழோ மிக்க விரிவுடைத்தே.  அகஸ்த என்ற சொல்லுக்கே மிக்க மதிப்புக்குரிய என்ற பொருளும் உளதன்றோ.


அகஸ்திய :  அகஸ்டஸ்(இலத்தீன்):  அந்தக் குட்டையன்.
அ=  அந்த;   கஸ்த=  கட்டை(யன்).

குட்டை> கட்டை; குஸ்த > கஸ்த‌.


ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

சுந்தரி > சுந்தரன்

அரி என்றால் அழகு. இந்தச் சொல்  எப்படி அமைந்தது?

எல்லாம் கண்ணுக்கு அழகாய் இருப்பதில்லை. பல, இயல்பாகவே உள்ளன. ஆனால், பத்தில் ஒன்றிரண்டு மிக்க அழகுடையவாக‌
உள்ளன. இவை அரியவை.  அருமையானவை.

அரு>  அரி.  (அரு+ இ).

அழகில் மனிதனை உந்திவிடும் அழகும் உண்டு. கவர்ந்திழுக்கும்  அழகும் உண்டு. பருகும் பான்மையிலான அழகும் உண்டு  ----  என்று   பலர்
வரணனை செய்வர்.

உந்தும் அழகு:  உந்து + அரி.  இது உந்தரி  என்றாகும்.

உந்தரி >  சுந்தரி.  (   அகர  வருக்கம் சகர  வருக்கமாதல் )
சுந்தரி :  அழகி.
சுந்தரம் : அழகாகிய தன்மை.

சுந்தரி > சுந்தரன். (ஆண்பால்).

சில சொற்களுக்கு ஆண்பால் இல்லை. ஊர்வசி >  ஊர்வசன் என்று
காணமுடியவில்லை. அப்படி ஒருவன் கதைகளில் வரின் காண்க.




உக என்பது சுக > சுகம்

குணக்கி லிருந்துவரு கொண்டலே
தடவினை நீ என்னை,
உடலினில் சுகம் எத்துணை

என்று ஏதாவது ஒரு கவி எழுதலாம் என்று பார்த்தேன்.  என் சாளரத்தில் நின்று நோக்கின் இனிய கிழக்குக் காற்று வீசிக்கொண்டிருக்கிறது. இப்படி
எழுதினால், பலருக்குப் புரியவில்லை. அவர்களுக்காக எளிய சொற்களையே போட்டு எழுதினால் நாம் சொல்வதை எளிதில் அறிந்து
இன்புறுவார்கள்.. ஆனால் புதிய சொற்களைத் தெரிந்தின்புற வழியில்லை.

குணக்கு :  கிழக்கு
கொண்டல் : கிழக்குக் காற்று,

கொண்டல் என்பதே கிழக்குக்காற்று.  ஆக குணக்கிலிருந்து வரு
என்ற சொற்கள் தேவையற்றவை என்று சொல்லலாம்;  கொண்டல்  ~
சொற்பொருள் விளக்கத்திற்காக வேண்டுமானால் அப்படி எழுதலாம்

நான் சொல்ல வந்ததை மறந்துவிட்டு வேறு யாதோ மொழிந்துகொண்டுள்ளேன்.  ஆம்: உகத்தல் எனில் விரும்புதல்..
உக என்பது சுக >  சுகம் ஆகி விரும்பும் நிலையைக் குறிக்கும்.
அடு > அட்டி > சட்டி போல. அடுதலாவது சுடுதல். எனவே சட்டி
சுடவைக்கும் பாத்திரம். அகர முதலான சொல் சகர முதலானது.
அகர முதல் வருக்கமனைத்துக்கும் இது பொருந்துவது.  ஆக,
உகந்த நிலை  குறிக்கும் உக > சுக > சுகம்.        உகந்த >  சுகந்த,
சுகந்த சிருங்கார் என்ற ஒரு பத்தி இருந்ததாகக் கேள்வி.

will edit

சடக்கு சடு: அடிச்சொல். சடு, சட்டு

சடக்கு என்பது பற்றி முன் எழுதியதுண்டு.  அது சென்ற ஆண்டிலே எழுதப்பட்டமையினால், அழிபாடாது தப்பிற்று.

https://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_67.html

அழித்தலை எப்படிச் சாதித்தனர் எனின்,  ஓர் ஒட்டு மென்பொருளை
அறிமுகம் செய்வித்து, அதை ஏற்கும் படிச்  செய்தனர். பல உலாவிகளிலும் உள்ள கடிதங்களை எல்லாம் ஓரிடத்திலே காணலாம்
என்றனர். யாம் உலாவியைத் தொடங்கியவுடன் அந்த ஒட்டுமெல்லி  (Browser Add-on) அழிக்கும் தன்வேலையைத் தொடங்கி அழித்துக்கொண்டே இருக்கும். யாம் அறியாமல் இது நடைபெற்றது. பல சங்கப் பாடல்களுக்கு யாம் எழுதிய உரையும் அழிந்தன. அவை எம் பழைய கணினிகளில் இருக்கக்
கூடும்.  தேடிப்பார்க்கவேண்டும். அது நிற்க.

சடக்கு என்பதில் சடு என்பதே அடிச்சொல்.  சடு, சட்டு என்பன விரைவுக்குறிப்புகள். இம்மட்டோ?  இந்தச் சடுவும் அடு என்பதன்
திரிபன்றி வேறில்லை.  முன் இடுகையின் தொடர்பாகவே இதைப்
பார்த்தல்வேண்டும்.   https://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_67.html. a/m.  இடையீடின்றி அடுத்து அடுத்து நிகழ்வதே
விரைவு ஆகும். அடுத்தல் அடிப்படை வினை. விரைவு என்பது
அவ்வினை நிகழ்வின் வெளிப்பாடன்றி வேறில்லை என்று அறிக/

இங்கிருந்து,  சடக்கு என்பதைச்  சாலை என்ற மலேசியப் பொருளில் உணரலாம்.  பெரும்பாலும் சாலைகள் வீடுகட்கு அடுத்திருக்க அமைக்கப் பட்டிருந்ததாலும், வண்டிகள் விரைவு காரணமாகவும்
சடக்கு என்பது பொருத்தமான, சாலை குறித்த சொல் ஆகும்.

சடுகுடு பற்றிப் பின் பேசலாம்.

சனி, 25 பிப்ரவரி, 2017

சடங்கு என்ற சொல்

சடங்கு என்ற சொல் எப்படி அமைந்தது என்று பார்ப்பது நன்மை பயக்கும்.

ஒரு பெண் பூப்பு எய்திவிட்டால், அதற்கு அடுத்து நாம்  செய்தற்குரியது
என்ன என்று  சிந்திக்கத் தொடங்கிவிடுகிறோம். தெரியாத தாய்
தெரிந்த இன்னொரு மூதாட்டியிடம் போய் அடுத்து என்ன செய்வது
என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறாள்

அடுத்து என்ன?  அடுத்து என்ன? என்பதே கேள்வி.

சடங்கு என்ற சொல் எப்படி அமைந்தது என்று காண்போம்.

சடங்கு என்பதன் உள்ளீடு என்ன?  பெண்ணின் தலையில் நீரூற்றிக்
குளிப்பாட்டுவதா? சிறப்பான அணிகலன்களை அணிவிப்பதா?  ஓர்
அறைக்குள் போட்டுப் பூட்டி வைப்பதா?  இவற்றோடு பற்பல பிற‌
நிகழ்த்துவதா?  ‍‍~~~  என்று கேட்கின், நிகழ்வு பலவாதலினாலும், ஒவ்வொரு
சிறப்புநடபடிக்கும் இவ் உள்நிகழ்வுகள் வேறுபடுதலினாலும்
இனத்துக்கு இனம் நாட்டுக்கு நாடு சடங்குகள் வேறுபடுதலினாலும்
உள்ளீடு என்பதை முன்வைத்துச் சடங்குச் சொல்லாக்கத்தை நடைபெறுவிக்க இயலாது.

சடங்கு என்ற சொல் ஓர்  இயல்புவாழ்க்கை மனிதனால் உருவாக்கப்பட்டது.  புலவன் இதை இங்ஙனம் எளிமையாக‌ எண்ணிப்பார்த்திருப்பான் என்று நான் நினைக்கவில்லை.

இப்போது திரிந்தவிதம்  நோக்குவோம் .

அடு (அடுத்தல். அடுத்து நிகழ்தல்).
அடு > சடு > சடு+அம் + கு.= சடங்கு.
அம்   என்பது   ஓர் இடைநிலையாகவோ, அன்றி அழகு என்று
குறிப்பதாகவோ கொள்ளலாம். பெரும்பாலான சடங்குகள்
முன் நடந்த நிகழ்வைப்  பின் வந்து அழகுபடுத்துவன.

திருமணத்தில்  பாலியல் உறவை அழகுபடுத்தி   (மறைத்துக் )   குமுகத்தார்   அதனை ஏற்ப நடைபெறுவித்தல் போல

 ஆகவே அம் என்ற இடைநிலை நன்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றே நிலைநிறுத்தலாம்.

வேறொரு சமையம் விரித்துரை காண்போம்.

அமை > சமை > சமையம்.  (  a > cha interchageability )

இதை யாம் பல இடுகைகளில் எழுதிச்  சில பொறாதவர்களால்
அழிக்கப்பட்டுள்ளனவாகையின் விதந்துரைத்தல் விடுப்போம்.

Will edit later. We noticed that the moment OR is written (keys depressed)  the computer hangs and
has to be revived.  Interveners have spent much time to block what we are doing.  But it does not
affect the reader.  It is just one of the ways in which they are preventing edits and causing
nuisance. After posting, we hope our posts reach you as we have written and intended them.






உரோமம் என்ற சொல்

உரோமம் என்ற சொல்லைப் பற்றிச் சிறிது அளவளாவுவோம்.

பண்டைமக்கள், உடலின் தோலுக்கு ஆங்கு வளரும் மயிர், பாதுகாப்பு
அளிப்பதாகக் கருதினர்.  அவர்கள் அறிவியலாளர் அல்லர். ஆனால்
அவர்களின் கருத்தின்படி சொற்களை அவர்கள் அமைத்தனர்.

தோலின் மூலமே நாம் உற்று அறிகிறோம்.  உறுதல் என்பது தொட்டறிவு ஆகும். இது ஊறு எனவும் படும்.  உறு> ஊறு. முதனிலை ( என்றால்
சொல்லில் நிற்கும் முதலெழுத்து "உ" )  இங்கு நெடிலாக ஊறு என்று
மாறுவது.  உறு என்பதனோடு நின்றுவிடின் முதனிலை திரியாது நின்றது
என்போம்.

ஓம்புதல் என்பது காத்தல். இதன் அடிச்சொல் காத்தல் என்று பொருள்தரும் ஓம். இதுவே பல மந்திரங்களிலும் பயின்று வழங்குவதாகும்.

உறு + ஓம் + அம் (விகுதி).  = உறோமம் > உரோமம் ஆகிறது.

"உறும் உறுப்பாகிய தோலினைக் காக்கும் மயிர்" என்று வரையறவு
செய்யவேண்டும்.

இதை எழுதியது எனக்கு ஞாபகம் இருக்கிறது. கள்ளமென்பொருள்
அதனை அழித்துவிட்டது.


வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

BIRD : பற > பறடு > பெர்டு.!!

பக்கியும் பட்சியும்.

இச்சொல் வடிவங்கள் பற்றி உரையாடுவோம்.

ஒரு குருவிக்கு முன், பின், வலம், இடம் என்று நான்கு பக்கங்கள்
இருந்தாலும், சிறப்பாக விரிந்த பக்கங்கள் இடமும் வலமுமே ஆகும்.
இப்பக்கங்களில் இறக்கைகள் உள்ளன. பக்கங்கள் உடைமையின் அவை
பக்கிகள் ஆயின. இச்சொல் பின் பட்சி என்று திரிந்தது.

எனவே, பக்கி > பட்சி ஆகும்.

இனிப் புள் என்பது பறப்பது என்னும் பொருள்தரும்.  புள் என்பதில்
ஒரு சி விகுதி சேர்த்தால், புள்+ சி = புட்சி ஆகும். இச்சொல்லும்
திரிந்து, பட்சி ஆகும்.

ஆக:  புட்சி > பட்சி.

உகரம் அகரமாகும் இடங்கள் உள. எடுத்துக்காட்டு: குட்டை > கட்டை;
குட்டையன் = கட்டையன்.

 பட்சி என்பது இருவகையிலும் அமைவது.

இப்போது பேர்டு என்ற ஆங்கிலச்சொல்லைப் பாருங்கள்.
பறத்தல்:  பற > பறடு >  பெர்டு.  எப்படி?

தமிழ் பல மொழிகட்குத் தாயாகும் மொழி என்க.

அறிந்து மகிழ்க .

ரோகம்

உறு:   நோய் உறு.
அதாவது உறுவது நோய். வாத பித்த சிலேத்துமங்கள் குறைவது மிகுவது.

உறுவது ஓங்கினால்  ( கூடினால் )  அது : ஓங்கு > ஓகு. இது
இடைக்குறை.  ஓகு >ஓகம்.

உறு+ ஓகம் = உறோகம்.  அல்லது உரோகம் >  ரோகம்.

 சொல்: நோய். குறிப்பது

தமிழினின்று புனையப்பட்டது.

உறுவது  ஓங்குதல் :   உறு  ஓகம்   ;  உறு  - முதல்நிலைத் தொழிற்பெயர்;.  இது நோயைக் குறிக்கிறது.   ஓகம் :  மிகுதல்..    உ றோ க ம்  வல்லின றோ -வை மாற்றுக.   உரோகம்  தலையை வெட்டுக:  ரோகம் .

2009 இடுகை  அழிக்கப் பட்டது  கள்ள மென்பொருளால்.

குள்ளமுனி., குஷ்ட

அகஸ்தியர் என்பவர் குட்டையர் என்பர். குள்ளமுனி.

குட்டை > குட்ட > குஸ்த .
அ + குஸ்த =>  அகஸ்த > அகஸ்தி > அகஸ்த்ய.
(அந்தக் குள்ளையர் என்பது ),

நோய் பற்றிய குட்டை என்ற சொல்:
குட்டை > குட்டம் . (கைகால்களை முடக்கிக் குட்டையாக்கும் தொழுநோய்.)
இது குட்டம் > குஷ்ட என்ற திரியும்.







akaththiyar was a local Tamil.

அகம் என்ற சொல்லுக்கு மனம், வீடு, இடம் என்பன பொருளென்று ஆசிரியன்மார் கூறுவர். பல்கலைக்கழகப்   பேரகராதி பலபொருள் கூறும்.
அவை கீழே தரப்பட்டுள்ளன.

அகத்தியர்:  சொல்லமைப்பினைக் காண்போம்.
அகத்து. ~  வீட்டில்.
இயர் (இ + அர்):  இவற்றில், இ = இங்கு. இருப்பவர்.
அர் என்பது பலர்பால் விகுதி. அவரென்பது.

அகம் என்பது நாட்டையும் குறிக்கும். எடுத்துக்காட்டு: தமிழகம்.  என்றால் தமிழ்நாடு. இதைப் பல்கலைக் கழக அகராதி குறிக்கவில்லை.

அகம் என்ற சொல்லை ஆராய்வோம். முன் யாம் எழுதியுள்ளோம். இப்போது தேடிப்பார்க்கவில்லை. பழையதையெல்லாம் தேடிக்கொண்டிருக்க நேரம் போதாது.

அகம்:

அ =  அங்கு. (சுட்டுச்சொல்).
கு =  சேருமிடம் குறிக்கும் சொல். ஒரு இறுதிநிலை அல்லது விகுதி.
அம் = விகுதி.

அ+கு+அம் =  அகம்.
அங்கு அல்லது அடுத்து அல்லது உடனிருப்பதாகிய மனம்; மனை;
உட்புறம்.

இந்தப் பழஞ்சொல் நன்கு அமைந்த சொல்.

ஆக, அகத்தியர் என்பது பெயர்ப்படி பார்த்தால், உள்நாட்டுக்காரர்;
நாட்டவர் (தமிழ் நாட்டுக்காரர்).
அ மற்றும் இ என்ற இரண்டு சுட்டுச்சொற்களும் இருத்தலால், அங்கிருந்து இங்கு வந்தவர் என்று நீங்கள் சொன்னால் அதற்கும் சொல்
இடந்தரும்,

எனினும் "அகம்" என்ற முழுச்சொல், உள் என்றே பொருள்படுதலால்
அவர் உள் நாட்டுக்காரர் என்று முடிப்பதே இயல்பான பொருள் என்னலாம். ஆனால் அகத்தியர் கதை வேறுபடுகிறது.

அகம் = மனம் எனின் மனத்தால் எதையும் சாதித்தவர் என்று பொருள்
கூறலாம்.

அகத்தியர் என்ற தமிழ்ச்சொல் வேறு. அகஸ்தியர் என்பது வேறு. அகத்தியர் தமிழிலக்கணம் பாடினார்  என்பர்.  அகஸ்தியர் வேதங்களில் வருபவர்.
இவர்களின் வரலாறுகள் குழம்பி அறிதற்கு இடர்தருவனவாய் அமைந்துவிட்டன போலும்.


அகமென்பது ஆகமென்று மாறியும் பொருள்மாறாது வருதல்
உண்டெனக் கொள்க. இது ஆகம் என்ற நெடிற்சொல்லின் வேறானதாம்.

-------------------------------------------------------------------




1 akam 01 1. inside; 2. mind; 3. sexual pleasure; 4. breast; 5. agricultural tract; 6. house; 7. place; 8. ether; 9. love-theme; 10. being subordinate; 11. an authology of love-lyrics -> akanAn2URu part a loc. ending
2 akam 02 -> aKkam 01
3 akam 03 1. tree; 2. panicled babul -> velvEl ; 3. mountain
4 akam 04 1. sin; 2. impurity, pollution
5 akam 05 1. i, self; 2. egotism; 3. soul
6 Akam 1. body; 2. breast; 3. mind, heart
7 akam 01 1. personal faults, as attachment, hatred, etc; 2. that which is bad; evil (TLS)
8 akam 02 sulphur (TLS)
9 Akam calabash (TLS)

வியாழன், 23 பிப்ரவரி, 2017

கடலை அகத்தியர் குடித்தது

கடலை என்ற உணவு, எந்த நாட்டு ஆதி விளைபொருள் என்று முழுமையாகத் தெரியாவிட்டாலும், பிரேசில் என்னும் தேயத்தில்தான்
அது ஐரோப்பியர்களால் முதன்முதல்  காணப்பட்டது.  அங்கு வாழ்ந்த‌
பழங்குடிகள் 3500 ஆண்டுகளாக அல்லது அதற்குமுன்னிருந்து அதனைப்
பயன்படுத்தியுள்ளனர் என்று அறிகிறோம்.

கடலை ஆசியாவிற்குப் பின்னாளில் கொண்டுவந்து பயிரிடப்பெற்றது
என்றாலும் அதற்குத் தமிழில் நல்ல பெயர் அமைந்துள்ளது. கடு+ அல்+ ஐ என இருவிகுதிகள், அல் மற்றும் ஐ புணர்த்திய சொல் அமைந்துள்ளது.
புதிய பொருள்கள் கடினமானதாக இருந்தால், "கடு" என்ற பகுதியைப்
பயன்படுத்திச் சொல் அமைத்தனர்.  கடு+ தாது + இ >  கடுதாதி > கடுதாசி என்று அமைந்ததும் காண்க. தாது = தூள். இங்கு மரத்தூள். மர அரைப்பு.

கடு+அல்+ ஐ = கடலை என்பதும் அதுபோல அமைந்தது.

கடலை பிற்காலத்தில் வந்திருந்தால், அகத்தியர் குடித்தது இந்தக்
கடலையை அன்று என்பது உரிய முடிபு ஆகும்.

மேலும் கடலை குடிக்கும் பொருளன்று என்பதும் காண்க .

அகத்தியர் பற்றி இங்கும் உங்களுக்குத் தகவல்கள் கிட்டலாம்.


(சொடுக்கவும்:)


Unable to justify these paras  now.  They turn out to be disorderly owing to some inherent software fault. So we are resorting to centre alignment.   Apologies.


சைகை சைதன்யம்

சைகை என்ற சொல்லினைப் பார்ப்போம்.
புன்செய் என்பது புஞ்சை என்றும் நன்செய் என்பது நஞ்சை என்றும் வழங்குவதுடன் முன் சிலகாலம் இங்ஙனமே எழுதப்பட்டும் வந்தது.
சொற்கள் திரிதலை வாத்தியார்கள் ( இவர்கள் வாய்மெழிப் பாடங்கள்
சொல்லிக்கொடுப்போராதலின் இப்பெயர் பெற்றனர் : வாய்த்தி > வாத்தி > வாத்தியார், உப+ அத்தியாயி > உபாத்தியாயி, உபாத்தியாயர் என்பது
வேறு சொல்; குழப்புதல் வேண்டா) பெரும்பாலும் விரும்புவதில்லை.
ஆனால் மொழியே ஒரு திரிந்தமைவுதான். குகைமாந்தனின் காலத்தில்
சிறு சொல்தொகுதியாய் இருந்த மொழி, பின் திரிபுகளால் விரிந்தது
என்பதுமுணர்க. பல சொற்களையும் ஆய்ந்தால் இதை நாமுணரலாம்.
எனவே, செய்கை என்பது சைகை என்று திரிந்தது. செய்>சை.
இதன் தொடர்பில் சைதன்யம் என்ற சொல்லைக் கவனிப்போம். இதன்
பொருள்: தானே முயன்று அடைவது என்பதுதான். பிற பொருள் இதில்
ஏற்றிக் கூறுவது மனிதனின் பொருள்விரிப்புத் திறனேயன்றி வேறில்லை. தானே ஒருவன் முயன்று அடைவது எது? பல இருக்கலாம் எனினும் இங்கு காரண இடுகுறியாய், அறிவாற்றலைக்
குறித்தது. செய் + தன் + இயம் = செய்தன்னியம் > சைதன்னியம் > சைதன்யம் என்பது திரிபு. இது தமிழ்மூல அமைப்புச்சொல் எனினும்
வழக்கில் பிறமொழியில் மிகுதியாய் வழங்கியிருப்பதானால் அந்த‌
மொழிக்குத் தானமாய்த் தந்துவிடுவதில் இழப்பு ஒன்றுமில்லை.
அறிவே கடவுள் என்ற கொள்கையினால், சைதன்னியம் அறிவாகிய‌
கடவுளையும் குறித்துப் பின் பொதுப்பொருளிலும் வழங்கினது அறிக.
மனிதன் அறிவுவாழ்நன். (அறிவுஜீவி). எனவே அறிவுவாணனாகிய‌
மனிதனையும் குறித்தது

will  edi later.

புதன், 22 பிப்ரவரி, 2017

நட்சத்திரம்

நட்சத்திரம் என்பது அறிவோம்.

நகுதல் ‍~  ஒளிவிடுதல்.
ஒளிவிடும் திறம் உடையது  நகு+ அம் + திறம்.
அம் என்பதில் மகர ஒற்று மறைந்தது.
திறம் என்பது திரம் என்று திரிந்து ஒரு பின்னொட்டானது.
"ஆ" என்ற ஒலியுடன் திறமாக எழுந்து நடந்துகொள்வது ஆத்திரம்.
அதுபோல.

வேறு விளக்கெண்ணெய்க் கலப்பு ஏதும் நக்கத்திரத்தில் இல்லை.

இவற்றைத் தெரிந்துகொள்க.

பக்கி > பட்சி.
பக்கம் > பட்சம்.
தக்கிணை ( தக்க இணை) > தட்சிணை.
 அதுபோல்  நக்கத்திரம் > நட்சத்திரம்.

கோள் இராசி

நாளும் கோளும் என்பதோர் இணைமொழி. இதில் கோள் என்பதையும்
இராசி என்பதையும் அறிவோம்.

கோள் என்பது பெரும்பாலும் ஒளியைப் பிற கிரகத்தினிடமிருந்து பெறும்
ஒன்று.  கொள்ளுதலாவது ஒளியைக் கொள்வது அல்லது பெறுவது.
கோளம் என்ற சொல்லும் கோள்+ அம் என்று பிரிவதால், அது உருண்டை
வடிவிலானது  என்பதும் பெறப்படும். இப்படி இதன் பொருள் இரட்டுறலாக  (இரு பிறப்பினதாக) இருத்தல் தமிழ் சொல்லமைப்புத்
திறத்தைக் காட்டுவதாகும்.

இராசி என்பது இரு+ ஆசு + இ எனப்பிரியும். இது தலையிழந்து ராசி
என்று வரும். நிரம்ப என்பது ரொம்ப என்றும்  உரட்டி என்பது   ரொட்டி என்றும் திரிந்து ரொட்டி (சற்றுப் பொருளும் திரிந்து)  என்றும்  வருதல் போல. இவை
பல சொற்கள் தலையிழத்தலைக்  காட்டும். எருமையூர் என்பது மையூராகி
அதன்பின் மைசூர் என்றானதை சில ஆண்டுகட்குமுன் விளக்கியிருக்க‌
எதிர்க்க முடியாதவர்கள் கள்ள மென்பொருள்மூலம் எம் இடுகைகளை
அழித்தனர். இதுவும் தலையிழப்பே. அரு என்பது ரேர் என்று ஆங்கிலத்தில் திரிவது வரை செல்லலாம். அது நிற்க:

ஆசு என்பது பற்றி நிற்றல் என்பதாகும். இ விகுதி. ஒரு கோள் அல்லது ஒரு நக்கத்திரம் பற்றி இருக்கும் இடமே ராசி. அருமையான‌
தமிழ்ச்சொல்.

அறிந்து இன்புறுக.

பதிலெழுத முடியாத கோழிமுட்டைகள் அழித்துக்கொண்டுதான்
இருக்கும். பார்க்கலாம்

கோள்  இராசி
Some mischievous edits have been effected by outsiders. Pl read carefully. Pl report
if has been interfered.  What appeared is different from our original kept by us,


Corruption in a politician

Like a little white flower,
Blooming on the slopes of an
Inaccessible intractable mountain;
Like cold, clean and sweet water
Flowing straight but  
Along the curves in the stream
With music to our ears, downtown;
Untouched and unpolluted:
So should a politician be at all times.
Uncorrupted; incorruptible.



செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

இரகசியம்

இரகசியம் என்ற சொல்லைப் பற்றி அறிந்துகொள்வோம்.  இதன் இடுகை
இங்கு அழிக்கப்பட்டு இருந்தாலும், முன் இணைய தளங்களிலும் இதைப்
பற்றி உரைத்துள்ளோம்.

இரு +  அகம் + சி + அம் ‍= இரகசியம் ஆகும்

ஓன்Ru  அறியப்பட்டு மனத்துள்ளே இருந்தால் அதுவே இரகசியம் ஆகும்
இச்சொல்லில்  சி, அம் என்பன விகுதிகள்.

ஒன்றுக்கு மேற்பட்ட விகுதிகளைக் கொண்டு சொற்களைப் படைத்தல்
பெருவழக்கு ஆகும். பிற்காலத்து இவ்வழக்கு விரிவடைந்தது.

இது பற்றி எழுதப்பட்ட முன் இடுகைகள் அழிந்தன.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

VINAYAKAN விநாயகன்

விநாயகன்

2005 வாக்கில் விளக்கி எழுதியிருந்தேன். அதையே சில‌
ஆண்டுகட்குமுன் இங்கும் மறுபதிவு செய்தேன். பின்னது
இங்கு எதிரிகளால்  அழிக்கப்பட்டது.

வி+நாயகன் என்று  பிரிக்காமல், வினை+ ஆயகன் என்று
பிரிக்கவேண்டும். அப்படிச் செய்தால், வினைகளை ஆய்ந்து
(களைவோன்) என்னும் பொருள் கிட்டும். வினாயகன்
தமிழிலிருந்து செய்யப்பட்ட சொல். வி+ நாயகன் எனினும்
வி = விழுமிய, நய+ அகன் = நாயகன் எனத் தமிழாகும்.

வினாயகன் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் இல்லை என்று
அறிஞர் சிலர் தெரிவிக்கின்றனர். புத்த மதத்திலிருந்து இந்து சமயத்துக்குத் தாவியது என்பர். கணங்களின் அதிபதி என்ற மற்றொரு
குறிப்பும் உள்ளது.  கணம் என்ற சொல், கண் ‍: இடம் என்ற பொருளுடையதாகும், இப்பெயர்கள் கணபதி அல்லது வினாயகனுக்குத்
தமிழில் ஏற்பட்டவையாதல் வேண்டும், இந்த ஆய்வுக்குள் நாம்
செல்லவில்லை. இவற்றை அவ்வந்நூல்களில் கண்டுமகிழ்க.

சங்கச் செய்யுள்களுக்கும்  மதங்களுக்கும்  தொடர்பு இல்லை. மன்னனிடம் பரிசில் பெற நினைக்கும் ஒரு புலவன், அரசன் முன்னிலையில் மதத்தை எடுத்து விளக்க இயலாது.  மதம்பற்றிப் புலவர்க்குத் தெரிந்தது மன்னனுக்கும் தெரிந்திருக்கவேண்டுமே! அதற்கு அரசு துறந்திருந்த இளங்கோ அடிகள் முன் சாத்தனார் போலும் புலவரே பொருந்துவார். Such a situation did not prevail in the Sangam.  This is why Sangam poems seldom had any references to spiritual matters. சங்கத்துக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் விநாயகர் வழபடப்பட்டாரா இல்லையா என்பதற்குச் சங்கச் செய்யுள்கள் சான்றுகள்  ஆகமாட்டா. மொட்டைத் தலை வேறு, முழங்கால் வேறு.  

edited
அறிக மகிழ்க.


சனி, 18 பிப்ரவரி, 2017

இந்திய விண்வெளிக் கழகம். புகழ்பாடும்....

ஆழிடரால் தம்மின் அரசியல் கார்முகில்போல்

வீழிருளில் வீண்பட்ட போதுமே === ஏழ்கடலின்

எல்லாத்தே யங்களும் ஏற்றிப் புகழ்பாடும்

வல்லாக்க வானாய் களம்.


அரும்பொருள் :


ஆழ்  இடரால் :   ஆழ்ந்த துன்பங்களால்;
கார்முகில் :  கருமேகங்கள்.
வீழ் இருளில் :  ஏற்றம் தராத இருட்டில்.
ஏழ்கடலின் எல்லாத் தேயங்களும்:  பிற நாடுகள் எல்லாம்.
வல்லாக்க :  வலிமை மிக்க கருவிகளைப் படைக்கும்;
வான் ஆய் களம்: இந்திய விண்வெளிக் கழகம்.

அரசியலில் மக்களாட்சி முறையைக் கேள்விக் குறியாக்கும் பல‌
இந்தியாவில் நடந்தாலும், இந்திய விண்வெளிக் கழகம்
நன்றாகவே செயல்படுகிறது.  என்பது கருத்து.

உலகத்தின் உண்மை நிலை அவ்வளவுதான்

கம்ப இராமாயணத்தில் உள்ள எல்லாச் செய்யுள்களையும் கம்பரேதாம்
எழுதினாரா என்ற கேள்விக்கு அறிஞர் சிலர் விடை பகர்ந்தனர்.  சில‌
பாடல்கள் சுவையும் சொல்லழகும் குறைந்தவையாய்க் காணப்படுவதால்
அவற்றைப்  பிறர் எழுதி இராமாயணத்திற் சேர்த்திருக்கிறார்கள் என்ற‌
முடிவுக்கு வந்தனர்.

ஒருவ‌ரே எழுதினாலும் சில மிக நன்றாக அமைந்துவிடுகின்றன. சில சுவை குன்றிவிடுகின்றன.  ஆதலால் இதை அறுதியிட்டுச் சொல்வது
கடினம்.

தொல்காப்பிய இலக்கண நூலிலும் இங்ஙனம் பிறர் எழுதிச் சேர்த்தவை
உளவென்பர்.  காலக் கழிவு காரணமாக ஓர் இலக்கண நூலில் சில‌
பொருந்தாமை ஏற்படுங்கால் முற்றிலும் புதிதாக ஒன்றை எழுதிக்கொள்ளாமல் இருப்பதில் சில மாற்றங்கள் செய்து வைத்துக்கொள்வது ( அதாவது மாணவர்களுக்குப் பயிலத் தருவது )
என்பது ஆசிரியர் சிலர் மேற்கொண்ட நடவடிக்கையாகலாம். இப்படிச்
செய்தாவது அதை வைத்துக்கொண்டார்களே, இல்லாவிட்டால் எல்லாமும் அல்லவா வீசப்பட்டிருக்கும்?  முழுமையும் இழப்பதற்குச்
சில மாற்றங்களுடனாவது அது கிடைத்ததுபற்றி நாம் மகிழ்ச்சி கொள்ளலாம். அதேவேளையில் நாம் கவனமாகவும் இருக்கவேண்டுமென்பதே சரியான கொள்கையாகத் தோன்றுகிறது.

அப்போது நடந்தது பற்றி கவலைப் படும் அதேவேளையில் இப்போது
நடக்கும் முறைகேடுகளைப் பற்றி நம்மால் யாதும் செய்ய முடியவில்லை என்பதையும் எண்ணிப்பார்க்கவே வேண்டியுள்ளது.

ஊரெல்லாம் வெள்ளக்காடு;  கால் நனையாமல்  எப்படி நடப்பது என்று கேட்டாராம் நபிகள் நாயகம். உலகத்தின் உண்மை நிலை அவ்வளவுதான் ,
" ............ஆகுல  நீர பிற  "  என்றான் வள்ளுவன் ,












செய்வம் > சைவம்

சிவம் என்ற சொல் "சைவம்," என்று மாறி, சிவக் கொள்கைகளைக்
குறிக்கும். இங்ஙனம் மாறுவது, இந்தோ ஐரோப்பியத்தில் மிகுதி.
பைபிள் (பெயர்ச்சொல்) > பிப்ளிக்கல் (பெயரடை). ஆனால் சிவம், சைவம் என்ற இரண்டும் பெயர்வடிவங்கள்.

உணவு வகைகளில், "கவிச்சி" இல்லாத உணவு :  சைவ உணவு என்பர். சைவ உணவினை உண்போன், சிவத்தை வணங்குவோனாகவோ, நாராயணனை வணங்குவோனாகவோ, அம்மனை வணங்குவோனாகவோ இருக்கலாம். மேலும் சில சாதியார் இறைச்சி மீன் முதலிய உண்பதில்லை என்பதால், சிவக்கொள்கைக்கும் உணவுமுறைக்கும் நேரடித் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். தொடக்கத்தில் சிவத்தை வணங்கினோர், சைவ உணவு உண்டனர் என்று  கூறிச்   சமாளிக்கலாம்.

ஆனால் இப்படிக் கூறுவதினும் ,விலங்குணவு உண்ணாராய், நன்செய், புன்செய் விளை உணவுகளை உண்போரே  சைவ உணவினர்  என்பதே பொருந்துவது.

செய் > செய்வம் > சைவம். எனவே உணவுமுறை பற்றிய சைவம்
என்றசொல் வேறு. கடவுள் கொள்கை பற்றிய சைவம் என்பது வேறு
என்று கூறலாம்.

2009 வாக்கில் வெளியிடப்பட்ட இது அழிந்து மீட்டுருவாக்கம் பெற்றது.


வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

சைவ உணவு

சரிதானா சொல்வதெலாம் சாமீ நீங்கள்
சண்டையில்தான் பெரும்பாலோர் சாவார் என்றீர்.
அறியீரோ மாமிசமே ஆகும் தேகத்
தரிதான காப்புணவென் றயின்றார் பல்லோர்.

மாதமாறு மோதலின்றி வீரர் மாண்டார்
மாரடைப்புக் கூரலகால் மாநி லத்தில்!
சாதல்குறைத் தாதலுக்கே காய்கள் மிக்க‌ச்
சைவஉண விகத்தினிலே சரியென் பீரே.


tmdate

அரும்பொருள்

அயின்றார் ---  உண்டார்.
மாமிசம் ---- இறைச்சி .  
மா=   விலங்கு  .  மிசைதல்  = உண்ணுதல்.   ஆக   மா+மிசை +அம்  =  மாமிசம்.
இதில் ஐகாரம் கெட்டுப்  புணர்ந்தது.    "விலங்குணவு "

வியாழன், 16 பிப்ரவரி, 2017

சந்தேகம், சந்தேகித்தல்

சந்தேகம், சந்தேகித்தல் முதலிய சொற்கள் நம்மிடை வழங்குவன.
இறுதி ~தேகம் என்பதில்  கவுக்குப் பதில் ஹவும் எழுதப்படுவதுண்டு.

இச்சொல்லின் தேகம் என்பது உடல் என்ற பொருளில் முன் ஈண்டு
விளக்கம்பெற்றது.

தேகம் , இதன் சொல்லமைப்புப் பொருள்: தேய்வது, திறனழிவது என்பது
 இவ்  வடிவில்  அது உடலென்றும் பொருள்படும்.

சந்தேகம் என்பதில் நம்புதலாகிய உணர்ச்சியின் தேய்வு குறிக்கப்படுகிறது.  சம் என்பது சேர்தல், கூடுதல்.  இதுவும் இங்கு
விளக்கப்பட்டுள்ளது.

எனவே  சந்தேகம் ‍  நம்பிக்கையின் தேய்வு .  .  தமிழ் மூலங்கொண்டு
புனைவுற்ற சொல்லாகும். நாட்டு மக்களிடையும் வழங்குவதால்,
இது தமிழில் தோன்றிப் பிறவிடங்கட்குத் தாவிய சொல் என்பது
தெரிகிறது. ஐயப்பாடு,  அயிர்ப்பு என்பன தமிழுக்குரிய சொற்கள். இலக்கிய வழக்கினவாகும்.
  

நில் > நிரு > நிரூ ரூ, ரூ‍ப்

நிரூபித்தல் என்ற சொல், இந்தோ ஐரோப்பிய மொழியில் இல்லை. ஆகவே அது தமிழே ஆகும். அது ஒரு திரிபுச்சொல். இப்போது எந்த‌
மொழியிலும் இடத்திலும் பெரும்பாலும் வழங்கினும், தமிழே ஆகும்.

இது பற்றிய எமது இடுகை அழிக்கப்பட்டது.  ஆகவே சுருக்கமாக‌
மீள்பதிவேற்றுவோம்.

நில் > நிரு.
லகர  ஒற்றில் முடியும் எச்சொல்லும் இறுதி ருகர‌மாதல் உண்டு.

நில் > நிரு > நிரூ.

வினையாக,  நிரூவித்தல்.  நிரூபித்தல்  ( வ ‍ ப வகைத் திரிபு) என்றாகும்.

அறிஞர் பிறரும் இதை விளக்கியுள்ளனர்.

உரு என்ற தமிழ் ரூ, ரூ‍ப்  என்று திரியும்.  தொடர்புடை சொல்.

note:

புரூவ் என்ற ஐரோப்பியச்சொல் காண்க. அதில் பு எடுபட்டால் மிச்சமுள்ளது ரூவ், அல்லது ரூப்.. இதை ஆய்ந்து ஏன் பு -வில் தொடங்கிற்று என்று காணவும்,

புதன், 15 பிப்ரவரி, 2017

கட்சிக்கும் பணம் வேண்டும் !

ஊழலுக் குளபல காரணங்கள்
உலகினிற் பணமுடைத் தோரணங்கள்
நீழலுக் குளபல கட்டிடங்கள்
நிற்பன அவைபடர் தொற்றிடங்கள்.

ஒழித்திட நினைப்பதும் எளிதெனினும்
பிழைத்திட உழைப்பதன் கடினமதால்
பழித்திடத் துயர்களை விளைப்பதனைப்
பாரினில் மேற்கொளும் நிலைமையினார்.

தட்சிணை என்பதும் தக்க இணை;
தகுதியில் பெறுவதும் தொன்றுதொட்டே;
கட்சியை நடத்துவர் தேர்தலிலே
காண்பெறு நிலைவரப் பணமுதலே.

கட்சிக்கும்  பணம் வேண்டும் !


ஆவினைப்போல் சசிகலை,, predicament of Sasikala.

ஆவினைப்போல் தரித்துத்தம் தலைமேற் போற்றி
ஆடினர்நூற்  றுவர்மிக்கோர் அணியாய் நின்றே!
தேவதையாய்க் கோவிலினுள் அமரும்  முன்பாம்
திசைதிருப்பி இடம்தொலைத்த வழக்குத் தீர்ப்பே .
ஆவதினி யாவதுண்டோ   அழிந்த கோலம்;
அதுதானே சசிகலையின் இழந்த காலம்!
நோவதுயார் தமைஅங்கே நுதலின் கண்ணை
நூறுமுறை திறந்தாலும் மாறா நோவே.

அரும்பொருள் 

ஆவினைப்போல்  -  கோமாதாபோல் 
தரித்து ~  தாங்கி; அணிந்து;
அணியாய்  ~   (சட்டப்பேரவை உறுப்பினர்கள்)  வரிசையாய்;
யாவதுண்டோ ~  எதுவுமுண்டோ;
நுதல் ~ நெற்றி;
நோவு ~  துன்பம்

திங்கள், 13 பிப்ரவரி, 2017

மதுவும் மாபோ - வும்.

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் முன் கள்ளுக்கடைகள் நிறைய இருந்தன. தமிழரிடை சீர்திருத்தச் சங்கங்களும் தொண்டர்படைகளும்
தோன்றிக் கள்ளுக்கடை மறியல்களில் ஈடுபட்டுக் குடிப்பவர்களைத்
திருத்தப்பாடுபட்டனர் என்று முதுகிழவர்களுடன் உரையாடினால் தெரியவருகிறது. யாமேதும் குறிப்புகள் வைத்துக்கொள்ளவில்லை. ஆகவே கள்ளுக்கடைகள் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதும் வாய்ப்பு
இல்லை. இங்கு ஒன்றிரண்டு கூறலாம். ஏனைய, நம் இளம்  ஆய்வாளர்களே
கவனித்தற்குரியவை.

மயக்கம் தரும் தேறலுக்கு மது  என்ற சொல்லைப் படைத்து வெற்றி
கண்டவன் நம் தமிழன். மயங்குவது, மயக்குவது என்பவற்றில்
இடை எழுத்துக்களை நீக்கக் கிடைப்பது ம‍~து என்பதாம்.  இதுபோலும்
இடைவெட்டுச் சொற்களை இப்போது புனைவது குறைவு அல்லது
இல்லை என்னலாம்.

இரவில் குடித்துக்  காலையில் வரை ( "காலங் காத்தாலே") மயக்கம்
போகாமல் உளறிக்கொண்டும்  ஆடிக்கொண்டும் திரிந்த சில தமிழர்களை  இங்கு "மா‍~போ" என்றனர்.  மா= மயக்கம்; போ = போ
காதவர்கள். இது நாளடைவில் "மாபோக்"  (மயக்கம்) என்ற மலாய்ச்
சொல்லாயிற்று. மலாய்க்காரர்கள் முஸ்லீம்கள், குடிப்பதில்லை ஆகையால் இது தமிழர்களுக்காகவே உருவாக்கப்பட்டு, மலாய்மொழிச் சொற்றோகுதியை சற்றே விரித்த ஒரு சொல்லாகும்.

மது என்ற இடைவெட்டுச் சொல்லுக்கு நாளடைவில் நல்ல தகுதி (மவுசு) ஏற்பட்டு, பிறமொழி அகராதிக்காரர்களும் அதைச் சேர்த்துக்கொண்டனர். சொல்லைப் பார்த்ததும் உருவானவிதம்
கண்ணாடிபோல் தெரிந்துவிடப்போவதில்லை. பேராசிரியனுக்கும்தான்.
அச்சொல்லுக்குத் தேன் என்ற பொருளும் ஏற்பட்டு, மலாயில் ம~டு
என்பது தேனாயிற்று. இப்பொருள் தமிழிலும் ஏனைப் பிற்கால மொழிகளிலும் உளது. இந்த விரிவு நாம் அடையும் மகிழ்வு ஆகும்.


சிங்கப்பூரில் உதவிப் பிரதமராக இருந்தவர் அமரர் திரு இராசரத்தினம்,
அவர் தமது கம்போங் கிளாம் தொகுதிக்குச் செல்லும்போது சுங்ஙாய்
வீதியின் கள்ளுக்கடையைத் தாண்டிச் செல்கையில், அங்கிருந்த‌
கட்குடியர் ஆட்டம்போட்டு வண்டிகட்குத்  தொந்தரவு தந்ததனால், நாளடைவில் அங்கிருந்த கள்ளுக்கடை அகற்றப்படுவதாயிற்று என்பது
வாய்வழிச்செய்தி.  பின் நியூட்டன், தெம்பனிஸ் கள்ளுக்கடைகளும்
மூடுவிழாக்கண்டன என்பர்.






postings on etymology ( retrieved)

யாம் முன் எழுதியவை; இணையத்திலிருந்து கிடைத்தவை. இவை போல்வன தேடும் சமயத்தில் கிட்டுவதில்லை. தேடாமல் இன்று
முன்னின்றன. படித்து மகிழுங்கள்.

இவற்றுள் சில மீண்டுமிங்குப் பதிவாகியிருக்கக் கூடும். யாம் சரிபார்க்கவில்லை.

படித்து மகிழுங்கள். நன்றியும் வணக்கமும்.

சரி, இப்போது இராசி என்ற சொல்லாக்கத்தில் உள்ள துண்டுச்சொற்களை மாற்றிப்போட்டு விளையாடுங்கள்:

இரு+ஆசு+இ = இராசி > ராசி.
ஆசு+இரு+இ+அர் = ஆசிரியர். அதாவது, மாணவர்களுக்குப் பற்றுக்கோடாயிருப்பவர். மாணவர் பற்றிக்கொள்ளவேண்டியது ஆசிரியரை. இதுவே இதன் சொல் மூலமென்பதைத் தமிழாசிரியர்கள் கூறுவர். இது நான் கண்டுபிடித்ததன்று.

"பற்றுக பற்றற்றார் பற்றினை.." என்றார் வள்ளுவப் பெருந்தகை.

இனி, ஆசு+ஆன் = ஆசான் ஆகும்.

இ, அன், ஆன், ஆர், அர் என்பன என்றும்போல் விகுதிகள்.

ஆசிரியர் > ஆச்சார்ய (சங்கதம்). Ref: p9

------------------------



பார்த்தல் என்ற சொல்லுக்கு அகரவரிசைகள், கண்ணுறுதல் (seeing) என்ற பொருளை மட்டுமே கணக்கிலெடுத்துக்கொண்டதாகத் தெரிகின்ற்து. பேச்சுத் தமிழில் இச்சொல்லின் பொருள் இன்னும் விரிவானதென்பதை நம் நேயர்கள் அறிவர்.

"பார்த்துப் போ'ங்கள்" என்றால் take care as you go or proceed என்று பொருள்படுவது தெளிவு.

"பெண் பார்த்தல்" என்பதற்கு வெறுமனே எந்தப் பெண்ணையும் கண்ணுறுதல் என்று பொருளன்று.

பார்த்தால் பசி தீரும் என்ற வரியில், அது நுகர்வுப்பொருள் தரும்.

"எதையும் பார்த்துத்தான் செய்யமுடியும்" என்கையில், "பார்த்து" = நன்கு ஆய்ந்து என்று பொருள்தரும்.

பல சமயங்களில், பேச்சுத் தமிழ் செய்யுள்வழக்கினும் விரிந்து செல்வது தெளிவு.


பார்வை ஒன்றே போதுமே. பல்லாயிரம் சொல்வேண்டுமா : இதில், பார்வை "நோக்குதல்" என்ற நுண்பொருள் உடையது. "கண்ணொடு கண்ணினை நோக்கு ஒக்கின்" (குறள்).்

பார்த்தல் என்பதையும் கண்ணுறுதல் என்பதையும் நிகராக நான் மேலே காட்டினாலும் இவை நுண்பொருள் வேறுபாடுடைய சொற்கள்.

இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் விளக்குங்கள் என்று நீங்கள் கேட்க, நானதற்குப் பார்க்கலாமென்றால் "நேரம் ஏனை வசதிகள் எல்லாம் இருந்தால் உங்கள் கோரிக்கை கவனிக்கப்படும்" என்று பொருள்படும். எவ்வளவு சொற்சிக்கனம் உடையது பேச்சுத்தமிழ் என்பது தெளிவாகியிருக்கவேண்டுமே? Ref: pg9
--------------------------------------------

ஆபத்து:

இதில் ஆ = மாடு. பத்து = பற்று என்பதன் பேச்சு வழக்குத் திரிபு.

பழங்காலத்தில், எதிரிகள் போர்தொடுக்கும்போது, நாட்டின் ஆக்களைக் கவர்ந்து செல்வர். ஆக்களை எதிரிகள் கவர்வது அல்லது பற்றிச்செல்வது "ஆபத்து" - அடுத்து முழுப்போர் வெடிக்கும். இப்படிக் கவர்ந்து செல்லும் மறவர்படை, " கள்ளர்" எனப்பட்டனர். இது பின் ஒரு சார்தி (ஜாதி) யாகிவிட்டது.

நாளடைவில், ஆவும் பற்றுதலும் மறக்கப்பட்டு, ஆபத்து என்ற திரிபு ஒருசொன்னீர்மை பெற்றது.

ற்று என்பது த்து என்று மாறுவது பெருவழக்கு ஆகும். வந்துழிக் காண்க.

பின் ஆபத்து என்ற சொல், பேரிடர் (danger ) என்ற பொதுப்பொருளில் வழங்கிற்று.


அபய, அப்வ என்ற சங்கதச் சொற்கள் வேறு. : "ஆபத்து" வேறு. pg 9

----------------------------------------

செகுத்தல் என்ற சொல்லின் அடியாய்ச் சாதி என்ற சொல் ன்றவில்லை என்று நான் நினைப்பதற்குக் காரணம், தொல்காப்பியர் காலத்தில் இச்சொல் நீர்வாழ் இனங்களுக்கே பயன்படுத்தப்பட்டது. "நீர்வாழ் சாதி" என்று வரும் தொல்காப்ப்பியத் தொடரால் இதனை அறியலாம். அதாவது நீர் சார்ந்து வாழ்வன என்று பொருள். நாம் போய்ப் பிரித்துவைக்குமுன்பே அவை அங்ஙனம் வாழத் தொடங்கி வாழ்ந்து வருகின்றன. ஆகவே பிரித்துவைக்கப்பட்டவை என்பதைவிட சார்ந்து வாழ்வன என்பதே பொருந்தும். சேர் > சார்: நீரைச் சேர்ந்தவை, நிலத்தைச் சேர்ந்தவை என்க.

சார்திகளை மனிதன் பிரித்துவைத்தான் அல்லது கடவுள் பிரித்தார் என்று கொள்வதை விட, தொழிலடிப்படையாகத் தோன்றி மெல்லப் பன்னூறு ஆண்டுகள் வளர்ந்து, உள்கட்டமைப்புகள் உருவாகி, பிற்காலத்தில் அதிகாரத்தில் உள்ளோரால் குமுக அமைப்புகளாக ஏற்கப்பட்டன என்று கொள்வதுதான் பொருந்துவது.

மேலும் சார்> சார்தி > சாதி என்பது ஒருபடி மாற்றம். Just one step word corruption or change.

செகு என்ற சொல் செகுதி - சாதி என்று மாறுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட திரிபுகள் தேவைப்படுகின்றன.

மற்றும் சார் என்ற அடிச்சொல் உலகவழக்கில் உள்ள எளிய சொல். மக்கள் பேச்சு வழக்கில் எளிதாய் நிகழ்ந்து மாறதலடையத்தக்கது,

மேலும் சார்தி என்பது சேர்வுக் கருத்தை உள்ளடக்கியது, பிரிவினைப் பொருளில் மிளிர்வது அன்று.

இன்ன பிற காரணங்களால், சார்தி > சாதி என்பதே பொருத்தமானது - உண்மையும் ஆகும்.

இத் திரிபை இங்ஙனம் விளக்கியோர் வேறு அறிஞர் ஆவார். அவர் பெயர் நினைவில் இல்லை.

செகு என்ற தமிழ்ச்சொல்லில் இருந்து sex என்ற இந்தோ ஐரோப்பியச் சொல் தோன்றியது என்று முன்னரே முனைவர் அரசேந்திரன் முடிவுசெய்தார். அவரும் சாதி என்பது செகு என்பதிலிருந்து வந்ததெனக் கூறியுள்ளதாக அவர்தம் நூல்களிலிருந்து நான் அறியவில்லை. (எனக்குத் தெரிந்தவரை). இந்த ஆய்விலிருந்து இராம கி மேல் சென்றுள்ளார் என்று தெரிகிறது. pg 9

-----------------------------

விழேடம் > விசேடம் > விஷேஷம்.


இப்போது "விஷேஷம்" என்ற சங்கதச் சொல்லின் மூலத்தினைக் கண்டுபிடிப்போம்.

இதை வி +ஷேஷம் என்று பிரித்து க் காட்டுவதுண்டு.

இதில் வரும் வி என்ற முன்னொட்டு, "விழு" என்ற சொல்லின் சுருக்கம்.

விழுமிய, விழுப்பம், விழுப்புண் என்ற சொற்களை மறந்திருக்கமாட்டீர்கள். விழு என்பது "சிறப்பு" என்று பொருள்படும் பழந்தமிழ் உரிச்சொல்.

விழு > வி.

விஷேஷம் என்றால் சிறப்பாக எடுத்துக்கொள்ளப்படுவது, சிறப்புக்குரியது என்று பொருள்.

விழு +எடு +அம் = விழேடம் > விசேடம் > விஷேஷம்.

எடு என்பது முதனிலை நீண்டு, ஏடம் என்றானது. சுடு+ அன் = சூடன் என்பதுபோல.

தமிழிலிருந்து சங்கதம் சென்ற சொல்லுக்குத் தமிழ் மூலம் பொருள் கூறுவது இழுக்கென்பர்.


இது நிற்க, ஆசிரியர் என்ற சொல்லின் மூலம் "ஆசு" என்பதை உடன்படாது நிற்பார், அஃது ஆதன், அத்தன்் என்ற சொற்களின் திரிபு என்று கூறுவர்.
பண்டையாசிரியரும் அச்சொல் ஆசு என்ற மூலத்திற் பிறந்ததாகவே கூறுவர் ஆதலின், அதுவே சரியென்பது தேற்றம்.

ஆதன், அத்தன் என்பன ஆசிரியர் என்றாவதற்குப் பல மடித் திரிபுகள் காட்டவேண்டும். ஆசு+"இரியர" என்று காட்ட பிரித்துக்காட்டுவதே போதுமானது.

இன்னும் ஆழச் சிந்தித்தால், "ஆ" என்பதே அடிமூலச்சொல். ்ஆஆஅஅஆ

ஆ > ஆதல்; ஆ> ஆகு >ஆகுதல்; ஆ > ஆதி (ஆக்க காலம்). ஆ > ஆய்.>ஆயாள். (ஆக்கியவள்) ஆ > ஆத்தாள்.
ஆ > ஆசு. இதில் சு என்பது விகுதி. ஆ >அ >அப்பு >அப்பன், >அத்தன்; >அச்சன். ஆ>அன்>அன்னை.

இப்படிப் பார்க்கப்போனால், ஆயிரக்கணக்கான சொற்கள் தொடர்புடையவை. சீன மொழி, யப்பானிய மொழிகளில்கூடத் தொடர்பு கிடைக்கும். நாம் அவ்வளவு தொலைவு செல்லவேண்டாம்.

சுட்டடிச்சொல் வளர்ச்சியை தேவனேயப்பாவாணர் ஏறத்தாழ முழுமையாகவே காட்டியுள்ளதால், அதை இங்குக் கூற வேண்டியதில்லை.

சில சொற்கள் சுருங்கிவிடுகின்றன. ஆ > அ > அப்பு> அப்பன் போல. சாவு > சவம். (சாவு+அம்).

சில நீண்டுவிடும்: படு > பாடு; விடு > வீடு.

அறிந்தின்புறுவோம். pg 9

------------------
விழேடம் > விசேடம் > விஷேஷம்.


இப்போது "விஷேஷம்" என்ற சங்கதச் சொல்லின் மூலத்தினைக் கண்டுபிடிப்போம்.

இதை வி +ஷேஷம் என்று பிரித்து க் காட்டுவதுண்டு.

இதில் வரும் வி என்ற முன்னொட்டு, "விழு" என்ற சொல்லின் சுருக்கம்.

விழுமிய, விழுப்பம், விழுப்புண் என்ற சொற்களை மறந்திருக்கமாட்டீர்கள். விழு என்பது "சிறப்பு" என்று பொருள்படும் பழந்தமிழ் உரிச்சொல்.

விழு > வி.

விஷேஷம் என்றால் சிறப்பாக எடுத்துக்கொள்ளப்படுவது, சிறப்புக்குரியது என்று பொருள்.

விழு +எடு +அம் = விழேடம் > விசேடம் > விஷேஷம்.

எடு என்பது முதனிலை நீண்டு, ஏடம் என்றானது. சுடு+ அன் = சூடன் என்பதுபோல.

தமிழிலிருந்து சங்கதம் சென்ற சொல்லுக்குத் தமிழ் மூலம் பொருள் கூறுவது இழுக்கென்பர்.


இது நிற்க, ஆசிரியர் என்ற சொல்லின் மூலம் "ஆசு" என்பதை உடன்படாது நிற்பார், அஃது ஆதன், அத்தன்் என்ற சொற்களின் திரிபு என்று கூறுவர்.
பண்டையாசிரியரும் அச்சொல் ஆசு என்ற மூலத்திற் பிறந்ததாகவே கூறுவர் ஆதலின், அதுவே சரியென்பது தேற்றம்.

ஆதன், அத்தன் என்பன ஆசிரியர் என்றாவதற்குப் பல மடித் திரிபுகள் காட்டவேண்டும். ஆசு+"இரியர" என்று காட்ட பிரித்துக்காட்டுவதே போதுமானது.

இன்னும் ஆழச் சிந்தித்தால், "ஆ" என்பதே அடிமூலச்சொல். ்ஆஆஅஅஆ

ஆ > ஆதல்; ஆ> ஆகு >ஆகுதல்; ஆ > ஆதி (ஆக்க காலம்). ஆ > ஆய்.>ஆயாள். (ஆக்கியவள்) ஆ > ஆத்தாள்.
ஆ > ஆசு. இதில் சு என்பது விகுதி. ஆ >அ >அப்பு >அப்பன், >அத்தன்; >அச்சன். ஆ>அன்>அன்னை.

இப்படிப் பார்க்கப்போனால், ஆயிரக்கணக்கான சொற்கள் தொடர்புடையவை. சீன மொழி, யப்பானிய மொழிகளில்கூடத் தொடர்பு கிடைக்கும். நாம் அவ்வளவு தொலைவு செல்லவேண்டாம்.

சுட்டடிச்சொல் வளர்ச்சியை தேவனேயப்பாவாணர் ஏறத்தாழ முழுமையாகவே காட்டியுள்ளதால், அதை இங்குக் கூற வேண்டியதில்லை.

சில சொற்கள் சுருங்கிவிடுகின்றன. ஆ > அ > அப்பு> அப்பன் போல. சாவு > சவம். (சாவு+அம்).

சில நீண்டுவிடும்: படு > பாடு; விடு > வீடு.

அறிந்தின்புறுவோம்.

--------------------------------- pg 9

அது மட்டுமன்று; நன்செய், புன்செய் என்ற சொற்களே உலகவழக்கில் நஞ்சை, புஞ்சை என்றே வழங்குகின்றன. நஞ்சை புஞ்சை என்றே எழுதுவாரும் அவற்றை நன்செய். புன்செய் என்றே எழுதல் வேண்டுமென்று "திருத்துவாரும்" உளர். நம் கருத்து: செய் என்பது சை என்று திரியும் என்பதை இது நன்கு எடுத்துக்காட்டுகிறதல்லவா!

நிற்க, மலாய் மொழியில் மரக்கறி வகைகளுக்கு " sayur " (sayur-sayuran) அதாவது: சையுர் (சாயுர்) என வழங்குகிறது. தமிழர்கள் "சைவர்" என்பர் - மலேசியாவிலே! சைவர் = மரக்கறி.

சைவரு >" சைவர"் > சாயுர். sayur (M).

நன்செய், புன்செய் ஆகிய "செய்யிலிருந்து" (சையிலிருந்து) வரும் உணவு என்று பொருள். சை+வரு; செய்வரு பொருள். நன்செய் வரு பொருள்; புன்செய் வரு பொருள்.

சைவர் (சைவரு) - (சையுர்) என்பன இச்சொல்லின் வரலாற்றை அறிய உதவக்கூடும்.

தென்கிழக்காசிய மொழி(கள்) பேசுவோருடன் தமிழர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். ஓராயிரம் ஆண்டுகட்கு மேலாகவே.

சையுறு பொருள் ( செய்யுறு பொருள்) எனினும் இழுக்காது. (பொருத்தம்தான்). சையுறு/ சைவரு > sayur (Malay)

செய் என்ற சொல்லின் திரிபாகிய சை (சாய்) துண்டுகள், சைவருடன் / சாயுருடன் தமிழிலிருந்து மலாய் மொழிக்குச் சென்றிருக்கலாம்.

எங்ஙனம் ஆயினும், சைவம் (மதம்) வேறு; சைவம் (உணவு) வேறு. இவை வெவ்வேறு பிறப்புக்களை உடையன என்பது தெளிவு.


மலாய் மொழியில் "செய்" "சை" முதலிய தனிவடிவங்கள் இல்லை.
copyright. Pl acknowledge below before reproducing this elsewhere.

-------------------------------

இதுபற்றி முன் மன்ற மையத்தில் நடந்த உரையாடல்களில், விளக்கப்பட்டுள்ளது -- என்று நினைக்கின்றேன்.

சிவம் > சைவம். ( இ, உ, எ -->ஐ)
words of similar pattern:
மிதிலா > மைதிலி,
கேரளா > கைராளி,
புத்த(ர்) > பௌத்த(ம் ),
குமாரி > கௌமார(ம்)
விஷ்ணு > வைஷ்ணவ(ம்)்

என்று வரும் திரிபுகள் சங்கத்தத்தில் பெருவழக்கு. இப்படித் தமிழிலும் உண்டு என்று காட்டுவர் சில ஆய்வாளர்கள். எனினும் தமிழில் குறைவு.
சிவ (<சிவத்தல்) என்ற மூலச்சொல் தமிழில் உண்டு. எனவே சிவம் > சைவம் தமிழ்த்திரிபும் ஆகலாம்.

சிவன் உருக்குவேதக் கடவுள் அல்லன் என்பர். ( see German Slater's research ). உருத்திரன் என்று வேதம் கூறுவது சிவனே என்பார் மறைமலைஅடிகள். ஆனால் சிவன் தமிழர் கடவுள் என்பது என் கருத்து.




QUOTE (mithulan @ Jul 2 2008, 04:48 AM)


சிவம் என்பதிலிருந்து சைவம் திரிந்தது என்றால் அது சங்கதத் திரிபா இல்லை தமிழ்த் திரிபா?


தமிழிலும் அப்படித் திரியக்கூடும். மேலே காண்க.




QUOTE


உங்களிடம் இன்னொரு சொல்பற்றியும் கேட்கவேண்டும், சிந்துவெளி என்பதில் உள்ள 'சிந்து' என்ற சொல் சிந்து என்ற ஆற்றின் பெயரால் வந்ததா? இல்லை சிந்து மரங்கள் நிறைந்த காடு அங்குள்ளதால் அந்தப் பெயர் தோன்றியதா? இல்லை சிந்து என்ற ஆடையைப் பழங்காலத்தில் அங்கிருந்த மக்கள் நெய்ததால் அந்தப் பெயர் தோன்றியதா?
சிந்து என்பதின் வேர் யாது?



சிந்து என்பது தமிழ் இலக்கணத்திலும் இசையிலும் உள்ள பழைய சொல். சிந்து என்பது நீட்டம் குறைந்த பாடல் வகையையும் குறிக்கும், (எ-டு) காவடிச் சிந்து. சிந்தியல் வெண்பா. சிந்தடி
இது சிறிய வகை நூலால் ஆன துணிவகையையும் குறிக்கும் என்பர் அறிஞர் சீனிவாச ஐயங்கார். இதுவே பின் ஆற்றுக்கும் சமவெளிக்கும் பெயரானது என்பார். அவர் சிந்து தமிழ்ச்சொல் என்பார்.

சில் > சிறு.
சில் > சில.
சில் > சின் > சிந்து. (து விகுதி).
சில் > சின் > சின்ன.




QUOTE


பெரும்பாலான ஈழத்து ஊர்ப்பெயர்களிற்கு தாவரவியல் வேர் உள்ளது. தமிழகத்திலும் அவ்வாறா எனத் தெரியவில்லை.


தமிழ் நாட்டில் அப்படியில்லை.

நேரம் கிடைத்தால் விளக்குவேன் மிது.

--------------------------------pg 9




பசுந்தமிழ் > பைந்தமிழ்.

இச்சொல்லில் அ (ப்+அ) என்பது பை (ப்+ஐ) என மாறிற்று.

திரிபுகள் ஏற்படும்போது:


பொருள் மாறியமையலாம்;
மாறாமலும் இருக்கலாம்.

இதற்கு தமிழில் சான்றுகள் பல.

இதையும் கவனிக்க வேண்டும்:

அத்தை > ஐத்தை (சில கூட்டத்தாரிடம் பேச்சு வழக்கு).


--------------------------- pg 9





பித்தம் > பைத்தியம். இதுவும் தமிழ்த்திரிபுதான்.

ஒப்பு நோக்குக: சிவம் > சைவம்!!

தமிழிலும் இத்தகைய திரிபு உண்டு: ஒப்பியன் மொழிநூல், பக்.217.

--------------------------



பித்து > (பித்து+அம்) > பித்தம்.
பித்து > (பித்து +இயம்) > (பித்தியம்) > பைத்தியம்.

பித்தியம் எனற்பாலது பழங்காலத்திலேயே பேச்சு வழக்கில் பைத்தியம் என்று திரிந்தது எனினும் இழுக்கில்லை. பிற்காலத்தில் இத்திரிபினின்று (அல்லது இதுபோன்ற வேறு திரிபினின்று ) இ>ஐ என்ற திரிபுவிதி உண்டாக்கப்பட்டு, சங்கதமுதலிய மொழிகளில் சொற்கள் பல படைக்கப்பட்டிருத்தல் கூடும்.

இயம் என்ற பின்னொட்டு இ+அம் ஆகிய இரு விகுதிகளின் கூட்டு.

அம் என்ற விகுதி, "அமை" (அமைதல், அமைப்பு) என்ற வினைச்சொல்லின் அடிச்சொல் என்று கூறலாம்.

சொற்கள் பிறந்து வழக்கில் உலவும்போது. அவற்றின் அடிச்சொற்கள், முன்வடிவங்கள் முதலியன சிலவேளைகளில் மறைந்துவிடுகின்றன. இப்படி, பித்தியம் என்பதும் மறைந்துவிட்டது எனக்கோடல் வேண்டும்.

சிவம் என்ற கடவுட்பெயர், ஆகுபெயராய் சிவநெறிக்கும் வழங்கிப் பின் "சைவம்" என்னும் வடிவத்தை அடைந்தது. வடிவம் மாறியபின் அது சிவ நெறியை மட்டுமே குறித்தது.

மரக்கறி உணவைக் குறிக்கும் சைவம் என்ற சொல் வேறு. அது முன் விளக்கப்பட்டது.



------------------------ pg9

அதற்கு வருமுன், ஒரு திரிபுச்சொல்லை உங்களுக்குக் காட்டவேண்டும்.

தஞ்சம் என்ற சொல் தான் அது.

தங்கு > (தஞ்சு) > தஞ்சம்.

இங்கே > இஞ்சே ( இஞ்சை) என்பதையொட்டி.

தங்க இடமின்றி ஓரிடத்தில் சென்று இடம் கேட்டு இறைஞ்சிப்் புகுவதைத்தான் தஞ்சம் புகுதல் என்றனர். உண்மையில் அது தங்கப்் புகுதல் தான். அஞ்சி ஓடிக்கொண்டிருந்தவன் ஓரிடத்திற் சென்று தங்குகிறான், அங்கு பாதுகாப்புடன் இருக்கலாம் என்று கருதி. இப்போது அது அடைக்கலம் புகுதல் என்ற பொருளுடையதாகிறது. இச்சொல் வடசொல் என்றும் பிறழ உணரப்பட்டது.

ஒ.நோ: இங்கே - இஞ்சே (சிலர் பேச்சு வழக்கு)

செய்து - செஞ்சு என்று வருவது வேறொரு வகை.










தொடர்வோம்.























ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

மலைத் தென்றலை............

மலையிலிருந்து சற்றே தாழ்வான நிலப்பகுதிக்கு வீசும்  காற்று, கவிகள் பாடத்தகுந்த இனிமைத் தென்றலாக இருக்கவேண்டும். இல்லையென்றால் இந்தச்  சொல் ஏன் இப்படி அமைக்கப்பட்டது?

அசலக் கால் ‍ இதுதான் சொல்.

ஆசலம் என்றால் மலை. இது எப்படி அமைந்தது என்பதை நாம்
ஆய்ந்துள்ளோம்.

இங்கே: http://sivamaalaa.blogspot.com/2017/01/blog-post_65.htmlhttp://sivamaalaa.blogspot.com/2017/01/blog-post_65.html  ஆசலம்  (சொடுக்கவும் )

இது பின் அசலம், அசலை என்றெல்லாம் குறுக்கமடைந்தது.

ஆகாரம் அகரமானது:  ஆசலம் >  அசலம்.

அசலம் >  அசலை.  (அம் விகுதி இழந்து, ஐ விகுதி பெற்றது ).

காற்று என்ற சொல்லின் அடி கால். கால்+து = காற்று.

து என்பது ஒரு விகுதி.  து விகுதி வந்த சொற்கள்:  கைது  (கைக்குள் கிட்டுதல் ), விழுது,  வயது (காலத்தின் வயப்படுதல்).

கால் எனின் காற்று என்றும் பொருள்.

ஆக, மலைத் தென்றலை "அசலக் கால்" என்றது மிக்கப்
பொருத்தம் அன்றோ.


மரியாதை

மரியாதை  என்பது முன் விள க்கப்பட்ட சொல் .  அழிந்தது.

மரு +  யா  +  தை .

சுருக்கமாக:

மரு   = மருவுதல். கட்டிப் பிடித்தல்.

யா = யாத்தல்.  கட்டுதல்.

தை   விகுதி .

ரு   என்பது யாவின் முன் ரி ஆகும்.

ஒருவனைப்  பணிவின்  காரணமாகத் தழுவிக்கொள்ளுதல்.

ஒரே பாலார் தமக்குள் மருவிக்கொள்ளுதலே இங்கு குறிப்பது.   இது பின்பு
பொதுவான பணிவு குறிக்கப் பொருள் விரிந்தது.

இது முன் யாம் எழுதிய இடுகையின் சாரம் .

மருவி யாத்துக்கொள்ளுதல் மரியாதை.

மருவுதல்  உடற் செய்கையையும் யாத்தல் தம்மில் ஒருவராய் ஏற்றலையும்
குறித்தன. யாகம் : மனிதனையும் இறைவனையும் கட்டும் சமய நிகழ்வு,  கட்டுதல் -  சேர்த்தல்.

பேச்சில் மருவாதை என்பர்/


சமம் > சமன்

அம் அடிச்சொல்.

அம் > அமை.
அம் > தம்.

தம்முடன் இருப்போன், தம்முடன் அமையத்தக்கவன், ஒன்றாக‌
இருக்கக்கூடியவன்.  அதனால் அம் என்பதிலிருந்து தம் தோன்றியது.

தம்முடன் கலந்திருப்போன், தம்முடன் சமமாக இருப்பவன். ஆகவே
தம் என்பதிலிருந்து சம் > சமம் என்ற கருத்துகள் தோன்றின.

தம் > சம் > சமம்.

அமை > சமை.

அமைத்தல் > சமைத்தல்.

அமையாதன  ஒன்றாக்கிச் சமைத்தலாகாது.

சமம் > சமன்.  திறம் > திறன் போல.

இங்ஙனம், சமம், சமன் என்பன தமிழ்ச்சொற்கள். இதில் ஐயம்
உறுநர் உணராதோர்.

சம் தம் -மிலிருந்து வந்த கதை.

பல "தன்கள்" ஒன்றாக நின்றால் "தம்" என்பது தமிழ்மொழி

அவன் தன் தொழுகையைத் துவங்கினான் என்பது எல்லாம் ஒருமை. அதையே பன்மையில் மாற்றுவதானால் 

அவர் தம் தொழுகையைத் துவங்கினார்

எனல் வேண்டும்

அகத்தியர் காலத்திலும் தொல்காப்பியர் காலத்திலும் இல்லாத பணிவு (மரியாதை)ப் பன்மை இப்போது இருப்பதால் "கள்" சேர்த்துக்கொள்ள வேண்டியதாகிறது.

"கள் "  இல்லாமல்  பன்மையை உணர்த்தப்  பாருங்கள் .

இப்போது பலரும் விரும்புவது:  "தங்கள் " என்னும் வடிவம்.

தாம்  > தம் .
தாங்கள்  >  தங்கள். 

தம் இன்னும் பன்மையாக நம்மிடம் இருக்கிறது. அது கூட்டு என்பதைக்
குறிக்கிறது. அதுவே "சம்" என்று மாறி மனிதர் கூட்டைக் குறியாமல்
பொதுவாக கூட்டு என்று பொருள்படும் அடிச்சொல்லாக மாறி
இந்தோ ஐரோப்பிய மொழிகள் உள்பட பலவற்றையும் வளப்படுத்தியதே
உண்மை.


இதை மேற்கொண்டு பின் ஆய்வோம்.

தம் தாம் என்பன எங்கிருந்து வந்தன?

சம்  தம் -மிலிருந்து வந்த கதை.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

தீயானியைத்தல் தியானம்

தியானம்  என்பது ஒரு குறித்த பொருளின்மேல் மனத்தை நிலைநிறுத்துதல் ஆகும். அப்பொருள் இறைவனாகவே
பெரும்பாலும் இருக்கும்.

இதற்கு இடையில் இன்னொரு பொருளை உதவியாக வைத்துக்கொள்ளலாம். அந்த உதவிப்பொருள், இறைவன்பால் மனம்
செல்லுதலை எளிதாக்குகிறதென்று உணரப்படுகிறது. இடைப்பொருள்
இருக்கலாகது என்பதொரு வாதம். இடைப்பொருள் வைத்து வெற்றி
கண்டோர் உளராதலின், அது இருத்தலாகாது என்பது முற்றிலும்
ஏற்புடைத்தாகத் தோன்றவில்லை.

தொடக்கத்தில் இடைப்பொருளாகப் பலரும் தீயையே தேர்ந்தெடுத்தனர்.
ஒரு விளக்கைக் கொளுத்திவைத்து, தீபத்தை நோக்கி, இறைவனை
எண்ணினர். சில மணி நேரம் இப்படி மனம் நிலைநிறுத்தம் பெறவே
தியானம் வெற்றியடைந்ததாகக் கொண்டாடினர்.

கோயிலில் விளக்கேற்றும் வழக்கம் இதனாலேயே ஏற்பட்டது. ஓமம்  (தீ )
வளர்த்தும் மனம் ஒருநிலை அடைந்து இன்புற்றனர்.

ஆகவே "தீயான் இயைத்தல்" ஒர் முன்மைக் கொள்கையாய் ஆயிற்று. ஏதேனும் ஒருவகையில் தீயின்றி இறைவணக்கம் நடை
பெற்றது குறைவு.

தீ -  மனத்தை இறையுடன் இயைக்கப் பயன்பட்ட இடைப்பொருள்.
தீயான் இயைத்தல் > தீயானியைத்தல் > தியானித்தல்.
தியானி > தியானம்.

நீரும் பூவும் என வேறு இடைப் பொருள்களும் உள . நீரிலிருந்து  நீராயினன் > நாராயணன் என்பதும் பூ  என்பதிலிருந்து பூசை  (பூஜை)  என்பதும்  ஏற்பட்டன .

தீ யால் =   தீயான்    (  ஆல்  =   ஆன்   வேற்றுமை உருபுகள் )

நிகழ்ந்த திரிபுகள்:

தீயானியைத்தல்  >
தியானியைத்தல்  ( முதல் எழுத்து  குறுகிற்று )
தியானித்தல்  (  யை  கெட்டது ,  அல்லது மறைந்தது ).
தியானி    (  ஒரு வகையில் இது ஒரு போலி வினைச் சொல் )
தியானித்தல்  ( பின் உருவான வினைச்சொல் )
தியானி + அம்  -  தியானம் .(  தொழிற்பெயர் )
தியானம் >  தியான (  பிறமொழித் தாவல் )

இச் சொல் "தீப்"  பொருளை  இழந்து   இதுகாலை பொதுப்
 பொருளில் வழங்குகிறது )

Posted without further elaboration.   This may be in danger of getting deleted externally. Hence we post first.


What is needed is a good govt in TN

மக்களுக்குத் தொண்டுசெயல் ஒன்றே நோக்கம்;
மண்டைபல துண்டுபடச் சண்டை அன்றே!
தக்கவழி தனைக்கண்டு போட்டி தீர்ந்து
தகைமையொடு நல்லாட்சி தளிர்போல் தோன்றி
எக்கரையின் மாந்தர்களும் போற்று மாறும்
இன் தமிழர் மாநிலத்தில் அரசு தோன்ற
சிக்கலின்றி அமைந்துவிடில் அதுவே நன்று
சீரான ஆட்சியொன்றே குறிக்கோள் செல்வீர்........ 

வியாழன், 9 பிப்ரவரி, 2017

அயர்தல்அசதி அசா அசத்துதல் .

அயர்தல் என்பது நல்ல தமிழ். அயர்ந்து உறங்குகிறாள் என்று சொல்வதுண்டு.  பேச்சில், யகரத்துக்குச் சகரம் வரும். அது வாடிக்கையான திரிபு. பல சொற்களில் வரும் என்று முன்பு எழுதியுள்ளோம். பல அழிந்துவிட்டாலும், மறந்திருக்க மாட்டீர்கள்.

அயர்தல் > அசர்தல்.  அசந்து தூங்குகிறான் என்பர்.  அயர் > அசர்.
அசர்ந்து என்பதில் உள்ள ரகர ஒற்று மறைந்து, அசந்து என்று பேச்சில்
வருகிறது.

ஒரே அசதியாக இருக்கிறது என்பார்கள்.  ஆக, அயர்> அசர் > அச > அச+ தி (விகுதி) > அசதி ஆகிறது.  அயர் என்ற முதற்சொல்லினின்று
திரிந்திருப்பினும், அசர்தி என்று வருவதில்லை. ரகரத்துக்கு
வேலையில்லாமல் போய்விடுகிறது.


திரிபுகளே இல்லையென்றால்,  பல சொற்களும் பல இனமொழிகளும்
தோன்றியிரா என்பதைச்  சிந்தித்து உணர்க.

அச என்பது அத்துடன் நின்றதா?

ஓர் ஆகார விகுதி பெற்று,  அசா என்று ஆனது. அச + ஆ = அசா.
ஆ விகுதி வந்த சொற்கள் பல. ஓர் உதாரணம். கல் (படித்தல் )+ ஆ
கலா. (கல்வி).  பல்+ ஆ = பலா (பல சுளைகள் உடைய பழவகை, அது காய்க்கும் மரம்)  என்பதும் இன்னொரு காட்டு ஆகும்.

அயர் > அயா > அசா என்று காட்டினும் அமையும்.

அயர்  >  அயர்த்து  (பிறவினை ) >  அசத்து .

மிகக் சிறந்த ஒன்றைப் பார்த்து  நம்மால் முடியுமா என்று "அயர்வு "  கொள்ளும்படி  செய்தல் .  அசத்துதல் .

தமிழ் நாட்டின் முதலமைச்சர் யாரோ?

தமிழ் நாட்டின்  முதலமைச்சர்  யாரோ  என்றால்
தமிழ் நாட்டில் தேர்தலின்றே  இல்லா நாளில்
அமைப்புவிதி யாதென்றே  அண்மி  நோக்கி
அதன்படியே ஒருவரையே அமர்ந்து வார்கள் .
எமைஎடுத்துக் போடுமென்றே இருவர் நின்றால்
என்செய்தல் என்பதற்கும் விதிகள் உண்டு.
நமை ஈர்க்கும்  இச்செய்தி நயந்து கேட்போம் 
நமக்கிதிலே செவிக்கொன்றே நாட்ட ம்  ஆமே.  

வலிமிக்கும் . வலி மிகாதும் வரலாம்: "அகண்"

இப்போது ஒரு சொல்லை  ( "அகண்" என்பதை )   அணுகி ஆய்வோம்.

இச்சொல் இப்போது பேச்சு வழக்கில் இல்லை. யாம் பேச்சில் என்று
குறிப்பிட்டால், அது ஏறத்தாழ 50 ஆண்டுகட்குமுன் வழங்கியதாக‌
நம்பப்படுவனவற்றையே குறிக்கும். இன்றையப் பேச்சுவழக்கில் என்று
எடுத்துக்கொண்டால், பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களே விரவி வருகின்றன. ஆக ஆங்கிலத்தையா ஆராய்வது?

அகண் என்பதில் "கண்" இடம் என்று பொருள்படும்.  அதன்கண், இதன்
கண் என்று வரும் இலக்கியவழக்குகளில்,  அவ்விடத்து, இவ்விடத்து
என்று பொருள்படுகின்ற நிலையில், கண் என்பது இடம் என்பதை
உணரலாம்.  முதற்கண் வணக்கம் என்ற தொடரில், முதலிடத்ததாக‌
என்று பொருள்.

ஆயிடை என்பது அவ்விடத்து என்று பொருள்தரும். இது குறுகும்போது அவ்விடை, அவ்விடம் என்று வரும்.  ஆ என்பது
அ என்று குறுகுதல்போல்,  ஆகண் என்பது அகண் என்று குறுகிற்று.

இதில் கவனிக்கத்தக்கது, ஆ+கண் > அகண் என்று வர, அக்கண் என்று வலிமிகவில்லை.

சொல் படைப்பில், வலிமிக்கும் வரலாம். வலி மிகாதும் வரலாம்.
வலி என்பது வல்லெழுத்து.






புதன், 8 பிப்ரவரி, 2017

வாழ்வினொரு பாகமென்ப அரசின் ஓட்டம்,,,,,,,

ஒருமன்னன் வீழ்ச்சியிலின் ‍னொருவன் வந்தான்;
ஒளித்தமிழர் இடைஇதுவோ பழக்கச் செய்தி;
திருமன்னர் தமைநினைந்து விழிநீர் சொட்டி
தேறாமல் திரைபோலும் அலைந்தார் பல்லோர்;
பெருமக்கள் குடியரசாள் இதுநாள் கூட‌
பெருநிகழ்வு தானிதுவாய் நடத்தல் கூடும்
வருதக்க  துன்பமெலாம் வரவே செய்யும்
வாழ்வினொரு பாகமென்ப அரசின் ஓட்டம்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

தொண்டு மனத்தவராய்த் தோய்ந்துமுன் ............

தொண்டு மனத்தவராய்த் தோய்ந்துமுன் நிற்பினும்
நின்றுசூழ் வாருமது கொண்டணைக்க வேண்டுமே!
ஒப்பார்முன் தோன்றுதல் ஒல்லாதே செய்தொழிலும்
தப்பாகக் கொள்வரே காண். 

திங்கள், 6 பிப்ரவரி, 2017

இறைவனே இவ்வுலகிற் கிறங்கி.....

இறைவனே இவ்வுலகிற் கிறங்கி வந்த‌
இன்பழமைக் காலத்திற் கேகி நாம்போய்
நிறைவான சண்டையிலா உலகம் தன்னை
நிறுத்தின்றிக் காலயரத் தேடி  னாலும்
குறைவான பலன்கூடக் கிடைக்கா தம்மா
கோதற்ற போரற்ற ஞால மில்லை;
வரைவின்றிப் பலவாறு கருதிப் பேசும்
வளமூளை மனிதனதே ஆன தாலே.

சனி, 4 பிப்ரவரி, 2017

சாங்கியம்

சாங்கியம்

சாத்திரம் என்ற சொல் சா என்ற அடிச்சொல்லிலிருந்து
தோன்றியது போலவே சாங்கியம் என்ற சொல்லும்
சாவின் பொருட்டுச் செய்யப்படும்  நடபடிகளை
முதலில் குறித்துப் பின் அவைபோலும் உயிருள்ளோருக்கு
இயற்றபப்டுவனவற்றுக்கும்  புழங்கப்பட் டதென்பதை எளிதின் உணரலாம்.

மதங்களும் கடவுட் கொள்கைகளும் சாவின் தன்மை அல்லது திறம் உணரப்புறப்பட்ட மனிதன் நாளடைவில்
மேற்கொண்டவை என்பது மனிதவளர்ச்சி நூலாரின்
கொள்கையாகும்.  வரலாறும் அஃதே.

சா+கு+ இ + அம்.

இ அம் என்பன விகுதிகள்.
கு சொல்லமைப்பு இடைநிலை.
ஙகர ஒற்று:  மெலித்தல் எழுத்துப்பேறு.

சா  :  சாவு , இறப்பு.
சா +கு =  சாவுக்கு. இது திரிந்து சாங்கு என்று மெலிந்தது.
மா+ கா = மாங்கா(ய்) என்பதுபோலும் புணர்ச்சி.
இ + அம் = இயங்குவது.  இயம்.  இது இறுதிநிலை ஆனது.


ஆகவே சாங்கியம் =  சாவுக்கு இயங்குவது.

வாந்தி என்பதில் ந் என்னும் எழுத்துப்பேறு போல்வதே.

My previous post prior to 2010 has been  deleted by persons who wanted
to copy it or opposed the explanation,  but surreptously.

உடம்புச் சொற்கள் .....

உடம்பு என்ற சொல் பொருண்மை மிக்குடைய தமிழ்ச் சொல். நம்
ஆன்மா இவ்வுடம்பை உடுத்திக்கொண்டிருக்கிறது என்ற பொருள் இச்சொல்லில் பொதிந்துகிடக்கின்றது. இதில் உள்ள அடிச்சொல் "உடு" என்பது ஆகும். இத்தகைய ஆன்மிகப் பொருளை விரும்பவில்லை
என்றால், உள் உறுப்புகளைப் போர்த்திக்கொண்டு உள்ளது என்று பொருள்
கூறிவிடலாம்.

உடம்புக்கு மெய் என்ற பெயரும் உள்ளது, இது : "மே"  அல்லது மேல்
என்ற அடியிலிருந்து வரும் சொல். சிலர் உடலை மேல் என்றும் சொல்வர். மேலெல்லாம் ஒரே அரிப்பாக இருக்கிறது என்பது கேட்டிருக்கலாம். மேல் > மேலி > மேனி என்ற சொல்லையும் ஆய்ந்து
நோக்கலாம்.லகரம்னகரமாய் மாறுவதுடையது.  மே> மெய்.  இதற்கு
உண்மை என்ற பொருளும் உள்ளபடியால், மரணத்தால் பொய்த்துவிடும் உடலினை எங்ஙனம் மெய் என்பது என்ற தத்துவக்
கேள்வி எழுகின்றது. மலம் என்னும் கேடு ஊறித் ததும்பும் இதனை
எப்படி மெய் என்பது எனத் தாயுமான அடிகள் கேட்கின்றார். மெய் மெய்யன்று; அது பொய்யே ஆகும். உயிர் போன பின் ஒரு நாளில்
புதைக்கவில்லை என்றால் நாறத் தொடங்கிவிடுவதால், பாடம்பண்ணினாலே தாக்குப்பிடிக்க முடியும்.  அழிபொருட்களை
உண்டுவளர்ந்த உடலாதலால் உயிர் நீங்கியபின் அதுவும் அழியத்
தொடங்கிவிடுகிறது.  ஆகவே மெய்யினை மெய் என்று கொள்ளாதீர்.
இது அழிதலை உடையது. இறைவனையே நம்புக என்ற தத்துவத்துக்கு
வந்துவிடுகிறோம்.

தேகம் என்பது, தேய்தல் என்ற சொல்லினின்றும் போந்தது.
தேய்+ கு+ அம் = தேய்கம் > தேகம் ஆகும். பல சொற்களில்போல‌
யகர ஒற்று, மறைகிறது அல்லது கெடுகிறது. தேய்தல் அல்லது
அழிதலை உடையது தேகம்.  நிலையாமையை உணர்த்தும் சொல்
இதுவாகும்.

யாத்தல் என்பதன்  அடியாகத் தோன்றியது  யாக்கை. யாத்தல் என்பது கட்டுதல் . பல உறுப்புகளையும் உள்ளடக்கிக் கட்டப்பட்டிருப்பது யாக்கை;
அன்றி  ஆன்மாவைக் கட்டி வைத்திருப்பதும் அதுவாம் 

புறக்கட்டு என்ற சொல்லை....................

இனி பேச்சு வழக்கிலிருக்கும் புறக்கட்டு என்ற சொல்லைக் கவனிப்போம்.
இதைப் புற+ கட்டு என்று பிரித்து,பின்புறத்துக் கட்டுமானம், அல்லது
அஃது உள்ள இடம் என்னலாம். பின்புறம் என்றும் பொருள்.

இது எழுத்தில் வந்துழிக் காண்க.

இதை புற + கண் + து என்றும் பிரிக்கலாம். இங்கு கண் என்பது இடம்
என்று பொருள்படும்.  கண்+து = கட்டு என்றும் வரும்.  கண்ணது என்றும் வருதல் உண்டு.

இது வெளியிடத்தது என்று பொருள்தரும். பேச்சிலும் இது அருகியே வருகிறது.

சொல் அமைப்பை அலசும் போ து இலக்கிய வழக்காக உள்ள இது  "சொல்
நாகரிகம் "  உடைய கோவையாகத் தோன்றவில்லை என்பதே இதில்
வியப்பாக உள்ளது.

புற வலம் the external strength. ப்ரபல

ஒருவன்,  தன் வீட்டுக்கு வெளியே,  அதாவது வெளியுல்கில் புகழுடன்
விளங்கவேண்டும். வீட்டில் யாரும் புகழ்ந்தால் என்ன? புகழாவிட்டால்
என்ன என்று இருந்துவிடலாம். வீட்டிலிருப்போர் ஒருவனை மெச்சுவதும்
நல்லதுதான். அதற்கும் பலன்கள் உண்டு. என்றாலும் வெளியுலகப் புகழே பலரும் விரும்புவது என்று சொல்லலாம்.

புறத்தே புகழ் இருப்பின், அவன் வலிமையுடன் இருக்கிறான் என்று பொருள்.  அதற்கு ஒரு சொல் அமைப்போம்.

புறம் :  இதை ப்ர என்று மாற்றுங்கள்.
வலம்: இது பலம் என்பதன் வேறன்று.  வலிமையே வலம். புகழே வலம்.  வலமே பலம் ஆகும். பலம் என்பது பல என்றும் அம் இறுதியின்றிப் பிறமொழியில் நிற்கும்.

ஆகவே,  புற வலம் என்பது ப்ரபல அல்லது ப்ரபலம் என்றாகும்.

ப்ரபல என்ற சொல்லமைப்புக்குப்  புற வலம் என்பது அடித்தளம். எனினும் அது வழக்கில் இல்லை. தமிழில் ஒழிந்த நூல்கள் பல. அவற்றிலெங்காவது இருக்கலாம். கிட்டாததைப் பேசி என்ன கிடைக்கிறது!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

பாணன், பறையன் குடி

துடியன், பாணன், பறையன், கடம்பன் என்றுஇந்நான்கல்லது குடியும் இல்லை’’— புறம்.              335 

இப்பாடல் வரிகள் புற நானூற்றில் வருவன . இங்குக்   குடி என்ற
சொல் பயன்பாடு கண்டுள்ளது. குடி என்பது குடும்பத்தையும்
குறிக்குமேனும். அது ஒன்றுக்கு மேற்பட்ட இணைந்த - ஒன்றாய் வாழ்கின்ற மக்களைக் குறிப்பதாகும். வம்மிசம் என்ற சொல் ஓரளவு இதே கருத்தை விளக்கும் சொல் ஆகும்
மிசை மிசை வருவது வருமிசம் > வம்மிசம் ஆகும். வம்மிசம்
முன் இங்கு   விளக்கப்பட்ட சொல் ஆகும்.

இச் சொல்லை அறிய  கீழே தரப்பட்டுள்ள  தொடர்பினைச் சொடுக்கவும் 
இந்த நான்கு அல்லது வேறு குடிகள் இல்லை என்று புறம்
கூறுவதால், இவர்கள் அகமணம் புரிந்து வாழ்ந்தனர் என்று
கருதவேண்டும்.
இந்த வரிகள் எழுந்த காலத்தில், ஏனையோர் இன்னும் குடிகள் ஆகிவிடவில்லை. அதாவது வண்ணானோ குயவனோ தொழிலர்களாய் இருந்தனரே அன்றி, அகமணம் புரியும் வழக்கத்தினராய் வம்மிசங்களாக ஆகிவிடவில்லை.
அது பின்னர் நிகழ்ந்திருக்கும்.
1900 ஆண்டுகட்கு முன்பு வரை கலப்பு மணங்கள் நிகழ்ந்து
வந்தன எனக் குருதி ஆய்வுகள் புலப்படுத்துவதால், இப்பாடல் பகுதியும் 1900 ஆண்டுகட்கு முற்பட்டதாகல் வேண்டுமென்பது தெளிவு

காண்க 
வம்மிசம்
.https://sivamaalaa.blogspot.sg/2016/05/blog-post.html



But it wasn't until about 100 B.C. that a holy text called the Manusmruti explicitly forbade intermarriage across castes.
The study doesn't suggest that either the ancestral North or South Indian group formed the bulk of the upper or lower castes, Witzel said.
http://www.livescience.com/38751-genetic-study-reveals-caste-system-origins.html