ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

மேதினத்தை நெஞ்சினுள்ளில் மேனிலையில் வைக்க!

மேதினத்தை  நெஞ்சினுள்ளில் மேனிலையில் வைக்க!
மென்மையோடி யைபிலாத மிகையுழைப்பு மேவி,
சோதனையில் சோர்ந்திழிந்த காலந்தன்னை மாற்றிச்
சூழுநன்மை  தொழிலாளர் ஆழ்ந்தடைந்த  நாளே
யாதுநீவிர் செய்தபோதும் யாண்டும்யாண்டும் நன்றி
என்றுசொல்வீர் ஏதெனினும்  அவர்க்குநன்மை செய்வீர்.
போதுமென்ற  பொன்மனத்தைp பூதலத்தார் கற்கப்
போகவேண்டும் அவர்களாலே புசித்துவாழ்கி றோமே.



பனம்பாரனார்

இவர் தம் இயற்பெயர் அறிகிலேம்

இந்தப் பெயரே மிக்க அழகான பெயர்.  அதாவது பனை மரங்கள் மிகுந்த பரந்த நிலப்பகுதியினின்றும் போந்தவர் என்று பொருள்படுகின்றது. காரணப்பெயர்,
இவர் தொல்காப்பிய நூலுக்கு ஒரு பாயிரம் தந்துள்ளார்.  பாயிரம் எனின் முன்னுரைபோல் தரப்படும் ஒரு பாடல். தொல்காப்பியத்துக்கு நாம் போய் அப்படி ஒரு பாடலை எழுதமுடியாது, தொல்காப்பியரை அறிந்த இன்னொரு புலவர் ,  அவருடன் படித்த இன்னொரு புலவர்தான் அதைச் செய்யக்கூடும். யார்யார் பாயிரம் தரலாம் என்பதற்கு இலக்கணம் இருக்கின்றது,

பர > பரத்தல்.  விரிவாதல்.
பரம் : கடவுள்,  எங்கும் பரந்திருப்பவன்,
பரம்பொருள் :  கடவுள்>
பரம்>  பரன்.

சிற >  சீர் என்று முதனிலை நீண்டு பெயராகும்.  ரகர றகர வேறுபாடு
இங்கு தள்ளுபடி,

பனை பழம் : பனம்பழம் போல பனை பார் =  பனம்பார் ஆனது,
அன் விகுதி சேர்ப்பின் பனம்பாரன்1   ஆகும்,

1. Error rectified.   Reason for error unknown.  Original draft did not have this error.


சனி, 29 ஏப்ரல், 2017

கரப்பான்பூச்சி

கரப்பான்பூச்சிகளையும் கடவுள்தான் படைத்தார்.  ஆனால் ஏன் படைத்தார் என்று புரியவில்லை. வீடுகட்குள்  வந்தேறி பலவிதப் பொருள்கேடுகளையும் விளவிக்கின்றன. இவற்றை அவர் படைக்காமல்
இருந்திருந்தாலும் ஒன்றும் மோசமில்லை என்கிறார்கள்.

இரு பெண்கள், அவர்களில் ஒருவர் ஒரு பிள்ளையைத் தூக்கிக்கொண்டு
மருத்துவரின் கடைக்குச் சென்றுகொண்டிருந்தனர். பிள்ளை அழுது கத்திக்கொண்டிருந்ததால், அதை எப்படி அமைதியாக்குவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. சட்டென்று ஓர்  ஓரப் பொந்திலிருந்து
ஒரு கரப்பான்பூச்சி அங்கு வந்துவிட்டது. அந்தப் பெண்களில் ஒருவர், உடனே: " பார், கரப்பான் பூச்சி வந்துவிட்டது, நீ இன்னும் கத்தினால்
வந்து கடிக்கும்" என்றார். உடனே பிள்ளை அடங்கிவிட்டது. இதைக்
கவனித்துக்கொண்டிருந்த யான், " கடவுள் ஏன் கரப்பான் பூச்சியைப்
படைத்தார்  என்று இப்போது புரிந்துவிட்டது"  என்று அருகிலிருந்த‌
தோழியிடம் சொன்னேன். இதுதான் காரணமாக இருந்தாலும் இருக்கலாம்.

நிற்க, கரத்தல் என்றால் ஒளித்தல். கரப்பு என்பது ஒளிந்திருத்தல்
என்று பொருள்தரும். இந்தப் பூச்சிகள் பெரும்பாலும் ஒளிந்துகொண்டு
இருளில் வாழ்பவை. இரையை, நீங்கள் உறங்கச்சென்றபின் வெளிவந்து அலைந்து  தேடும். ஆனுதல் என்பது நீங்குதல்
என்று பொருள்தரும். கரப்பு = ஒளிந்திருந்து, ஆன் = நீங்கிவரும், பூச்சி =~  என்பது பொருத்தமாக உள்ளது.

கரப்பான் என்று ஒரு தோல்நோய் வகையும் உள்ளது; ஆனால் இப்பூச்சிக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.

வேண்டாதவற்றைத் தின்று அப்புறப்படுத்த இவற்றைப் படைத்தான்போலும்.  ஆனால் வேண்டியவற்றையும் இவை கெடுத்துவிடுகின்றன.



வெள்ளி, 28 ஏப்ரல், 2017

உரொட்டிக் கடைகள்


பழங்காலத்தில் (அதாவது இரண்டாம் உலகப் போரின் முந்திய காலத்தில் ) உரொட்டிக் கடைகள் வைத்திருந்தவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தானியர்கள் என்று தெரிகிறது. சிங்கப்பூரில் அவர்கள் நடத்திய‌  சுடுமனைகள்(bakeries)பலவிடங்களில் முன்னிருந்திருப்பினும் இப்போது அவை மூடப்ப்பட்டு அவ்விடங்கள் வேறு கடைகளாகவோ அடுக்குமாடி வீடுகளாகவோ மாறிவிட்டன. அவர்களில் பலர், பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டனர் அல்லது அவர்களின் பின்னோர் வேறு தொழிலர்கள்
ஆகிவிட்டனர்.

ஜொகூர்பாருவில் ஜாலான் டோபி என்னும் வீதியில் இன்னும் ஒரு கடை இருக்கிறது. இங்கு இன்னும் பழைய காலப் பாணியில் உரொட்டிகள் மற்றும் கறியுப்பிகள் (CURRYPUFFS) சுட்டு விற்கிறார்கள். யாம் சைவ‌ உணவினியாதலின், வெறும் உரொட்டியை இங்கிருந்து வாங்கியதுண்டு.

உரொட்டி சுடும் தொழில் இப்போது பெரிய குழும்பினர்களில் companies கைகளில் சென்றுவிட்டபடியால் பாக்கிஸ்தானியர் கடைகள் ஒருசில‌ மலேசியாவின் நகரங்களில் ஆங்காங்கு இருக்கலாம். இவர்கள் விட்டுப்போன இத்தொழிலைச் சில சீனர்கள் தொடர்ந்து வருகின்றனர். 

உரட்டி என்பது ஒருவகை அப்பமாகும். இதிலிருந்து திரிந்து ரொட்டி என்ற சொல் அமைந்தது என்பதை 2009க்குப் பின் வெளியிட்டு விளக்கமும் கொடுத்திருந்தோம்.1


ஓர் உருவாக அட்டு எடுத்தலால் அது உரு+ அடு + இ = உரட்டி ஆனது. 2 அடு என்பது இகரத்தின்முன் இரட்டித்தது. அட்டாலும் என்றால் சுட்டாலும் என்று
பொருள். அட்டு = சுட்டு (எச்சவினை). ஓர் உருவாகப் பிசைந்துகொண்டு சுடுதட்டில் ஒட்டி வேகவைத்து எடுப்பதாலும் உரு+ஒட்டி = உரொட்டி என்றாகி, தலையிழந்து ரொட்டி என்று வழங்கிற்று. இது பின் பிறமொழிகளிலும் பரவியது தமிழின் திறத்தை நமக்குக் காட்டுவதாகும். சொற்களை அமைக்க ஏற்ற எளிதான மொழி தமிழே ஆகும்.


சொல்லமைக்க வகர யகர உடம்படுமெய்கள் தேவையில்லை யாயின.


சொல்லமைந்த விதம் இங்ஙனமாக, பிரட் என்ற ஆங்கிலச்சொல், புரு (வடித்தெடுத்தல்) என்பதிலிருந்து வந்ததாக ஆய்வாளர் கருதுகின்றனர்.
ஐரோப்பிய மொழிகள் பலவினும், பர, ப்ரு என்றுதான் உரொட்டியின் பெயர்
தொடங்குகிறது.


புரத்தல் என்ற தமிழ்ச்சொல்லும் புர என்றபடியே தொடங்குகிறது. புரட்டுதல்
என்ற சொல்லும் புர என்றே தொடங்குகிறது. அவ்வராய்ச்சியாளர் இவற்றை
அறியாமையால், இவற்றைக் கருத்தில் கொண்டிலர். பலவகை அப்பங்களையும் புரட்டிப்போட்டுத்தான் சுடவேண்டியுள்ளது. இதிலிருந்தும் புரு என்ற மூலச்சொல் முளைத்திருக்கலாம் என்பதை அவர்கள் ஆராயவில்லை.

புரட்டா என்ற சொல்லும் இங்ஙனம் அமைந்ததே. பரோடா என்ற பாக்கிஸ்தான்
நகரத்தில், புரட்டா என்ற ரொட்டி இருந்ததில்லை என்று அறிந்த பஞ்சாபியர்
கூறுவதனால் அது அங்கிருந்து வரவில்லை. புரட்டா என்பது பஞ்சாபியர்
உணவன்று என்று அவர்கள் கூறுவர். பரோடாவிலிருந்து வந்ததனால் அது
பரோடா என்று பெயர்பெற்றதெனில், அது இங்கு வருமுன் அதற்கு அங்கு
என்னபெயர்? இவ்வகை ரொட்டிகளை ஆக்கியவர்கள் நம் தென்னிந்திய‌ முஸ்லீம்களே. அதை அவர்கள் ஆக்கியவிடம் சிங்கப்பூர் மலேசியா ஆகும். இங்கிருந்து அது இந்தியாவிற்குப் பரவிற்று. ஆனால் சிங்கப்பூர் ஜுபிளி உணவகம் உண்டாக்கிய மரியம் ரொட்டி பரவாது போய்விட்டது. இறைச்சி பெரட்டல் (புரட்டல்), கோழி பெரட்டல் என்றெல்லாம் சிலர் உண்பதனால், புரட்டுதல் உணவுவகையுடன் தொடர்புடைய சொல்லே ஆகும்.

------------------------------

அடிக்குறிப்புகள் :

1.   அவை அழிவுண்டன. இரண்டு உலாவிப் பொருத்திகளில் மென்பொருள் நிபுணர்களைக் கொண்டு மாற்றங்கள் செய்து எங்கள் உலாவியுடன் இணைத்து, அவை ஒவ்வொரு முறையும் யாம் உலாவியைப் பயன்படுத்தும்போது பல இடுகைகளையும் அழித்துவிட்டன. இவைகள் எதிரிகளால் செய்யப்பட்ட தாக்குதல்கள். கணினிக்குள் இருந்தவையும் பல‌
அழிந்தன.

2.   மாவை உருட்டிச் சுட்டுச்  செய்யப்படுவதால்   உருட்டி > உரட்டி >  ரொட்டி
என்பது இன்னொரு விளக்கம் .

3    புரத்தல் -  பாதுகாத்தல்.  உடலைப் பாதுகாத்தல் . புரதச் சத்து  என்பதில்
புரத்தல்  என்னும் சொல்  காண்க . 

will review and reedit

வியாழன், 27 ஏப்ரல், 2017

இழந்தவை இருப்பவை ........

பண்டைத் தமிழர் சிறப்புகள் பலவுடையராக வாழ்ந்தனர். எனினும் எல்லாச் சிறப்புகளும் அவர்களிடம் தங்கிவிடவில்லை. இன்று அவர்களிடம் உள்ள சிறப்புகளில் கருதத்தக்கது யாது எனின், மொழி ஒன்றே என்று கூறின், அதுவே உண்மையாகும். பிற சிறப்புகள்
பலவும் கழிந்தன.


நம் சிறப்புகளிற் சிலவற்றைப் பிறர் பெற்றுக்கொண்டு அதைப் போற்றிவைத்திருந்தனராயின், நாம் அவற்றை இழந்துவிடினும் அவர்களிடமிருந்து அவற்றைத் தெரிந்துகொள்ளலும் வேண்டியவிடத்து மீண்டும் கொணர்தலும் கூடும். முற்றும் அழிந்தவற்றை எவ்வாற்றானும் மீளப்பெறுதல் இல்லை. புட்பக வானூர்தி இவற்றுள் ஒன்றாக இருக்கலாம்; எனினும் இப்போது அவற்றினும் நல்ல வானூர்திகள் கிட்டுவதால், அவற்றை மறந்துவிட வேண்டியதுதான். பண்டைப் போர்க்கருவிகள் இன்று பயனற்றவையாய்விட்டன.

காட்டில் வேட்டையாடச் செல்பவன் சுடுகருவிகள் இல்லையேல் சில ஆயுதங்களையாதல் எடுத்துச்செல்லவேண்டும். ஈட்டி முதலியவை   இன்று போர்க்கருவியாகப் பெரிதும் பயன்பாடு அற்றவையாய்விடினும்  வேட்டைக்காரனுக்குப் பயன் உடையதாய் இருக்கக்கூடும்.

ஈட்டி என்ற சொல் வடிவே பெரிதும் இன்று பலரும் அறிந்தது. இதன் அடிச்சொல் இடு என்பது. பண்டைக்காலத்தில் ஈட்டியை இடுதல் என்பது வழக்காய் இருந்தது தெரிகிறது. இடு > இட்டி என்று சொல் அமைந்தது. இது பின்னர் ஈட்டி என்று முதனிலை நீண்டது.

ஈட்டி ஓர் ஆயுதம். ஆய்வதற்குப் பயன்படுவது ஆயுதம். ஆய்தலாவது சொற்களைப் பகுத்தும் தொகுத்தும் சேர்த்தும் கோத்தும் செய்வதுபோன்று பிறபொருட்களுக்கும் செய்தல். இது ஆய்+ உது + அம் என்றவை சேர்ந்து ஆனது. அது, இது மற்றும் உது என்பன சேர்ந்து பல சொற்கள் அமைந்துள்ளன. உது எனின் முன் நிற்பது. இங்கு சொல்லாக்க‌ இடைநிலையாய் நின்றது.

ஆய்தம் என்பது ஓர் எழுத்தின் பெயர். இதுவும் ஆய் அதாவது ஆய்தல்
என்ற சொல்லடிப்படையில் எழுந்ததே ஆகும். ஆயின் ஆய்+ த் + அம் என்ற முறையில் அமைந்தது. த் எனினும் து எனினும் விளைவு
வேறுபடாது. ஒரே அடியிற் தோன்றினும் இச்சொற்கள் வேறுவேறு ஆகும்.

இழந்தவை   இருப்பவை

விவசாயம்

விவசாயி

இச்சொல்லை முன் விளக்கியிருந்தோம், அந்த இடுகை காணப்படவில்லை. ஆகவே மறுபதிவு செய்கிறோம்.

விவசாயமே சிறப்பான தொழில். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்.

விவசாயம்: வி=  விழுமிய;  வ:  வாழ்வினை; சா: சார்ந்திருப்போர். அம் என்பது விகுதி. இதில் வ என்பது வா: வாழ்வு என்பதன் குறுக்கம். வாழ்த்துதல் என்ற சொல் வழுத்துதல் என்றும் குறுகும். விவ என்ற‌
இலத்தீன் சொல், விவா; விவோ, விவோஸ் என்றும் திரிதலை உடையது ஆகும்.

விழுமிய வாழ்வினைச் சார்ந்திருப்போர் விவசாயிகள் ஆவர்

சிறந்த தலைவர் மோடி......

சிறந்ததொரு தலைவரிந்தி யாவிற் கென்றால்
செவ்வியநன் மகன்மோடி இவ்வா றுண்மை,
உரந்தருமா றுரைப்பார்கள் உலகிற் பல்லோர்!
ஒட்டலுறு உரைஇஃதே  வெட்டல் இல்லை!
வரந்தருவார் கடவுளென்றார் தந்தார் காணீர்.
வந்தபெரு விளக்கினையே காத்துக் கொள்வீர்.
நிரந்தரமே மக்களாட்சி;  நேர்மை போற்றி
நில்புகழைப் பாடுமணி மோடி தாமே.

பழையமொழி பண்பட்ட தமிழே என்றார்
பாலியத்தில் படிக்கவிலை; அறிந்தேன் இன்றே!
இழைநாக ரிகந்தனிலே ஒளிரக் கண்டேன்;
எல்லோரும் அறிவதிலே நலமே உண்டே.
விழைவுறவே பிறமொழிகள் அறிக நீங்கள்.
வேறுபண்பா டென்றாலும் விரும்பிக் காண்பீர்.
குழைபடராத் தெளிநீர்போல் மோடி கூற,
கோதிலதாய்க் காதுக்குள் ஒலித்த கீதம். 

 


டில்லி நகராண்மைத் தேர்தல்களிலும் மோடி பெரும்பான்மை பெற்றுள்ளார்.

புதன், 26 ஏப்ரல், 2017

சமாதி - சொல்லின் அமைப்பு

யாராவது ஒரு பெரிய ஆன்மிகத் தலைவர் மறைந்து விட்டால்,அவர் சமாதி
அடைந்தார் என்பர். சமாதி என்ற சொல்லின் அமைப்புப் பொருளை இப்போது
கண்டு இன்புறுவோம்.

சமாதி என்ற சொல்லின் இறுதியில் இருக்கும் சொல், ஆதி என்பது. இது
தமிழே ஆகும். ஆதல் என்ற வினையினின்று எழுந்தது. ஆதல் என்பது
ஆக்கம். உண்டாதல். எதற்கும் உண்டாதல் என்பதே தொடக்கம் ஆகும்.
ஆதி என்பது தொடக்கம் என்னும் பொருளது.  ஆவது ஆதி ஆதலால், அது
சொல்லினடிப்படையிலும் பொருளினடிப்படையிலும் தமிழாகிறது.

இச்சொல், பிற மொழிகளிலும் வழக்கிலிருப்பின், இது அச்சொல்லின் திறத்தை
நமக்குக் காட்டுகிறது. பிற நாட்டின் செய்பொருள், நம் நாட்டில் பயன்படுமாயின், அது அப்பிற நாட்டின் தொழில்திறன் காட்டுதல் போன்றதே
இதுவாம்.


இச்சொல், பிற மொழிகளிலும் வழக்கிலிருப்பின், இது அச்சொல்லின் திறத்தை
நமக்குக் காட்டுகிறது. பிற நாட்டின் செய்பொருள், நம் நாட்டில் பயன்படுமாயின், அது அப்பிற நாட்டின் தொழில்திறன் காட்டுதல் போன்றதே
இதுவாம். நம் சொல் பிறமொழியரால் பயன்படுத்தப்படுவது சொற்பொருள் திறம் உணர்த்துவது ஆகும்.


இனி, "சம" என்பதன் அமைப்பு அறிவோம்.  அமை > சமை. இது அம்+ஐ
என்று அமைந்தது.  அம் என்பதே அடி.        அம> சம > சமன்; சமம் என்றாகும். சமம், சமன் என்பன " நிகர் " என்ற பொருளது. 
(அம் என்பதிலிருந்து தொடங்கின்,  அம்> சம்> சம்+அம்> சமம் என்பதையே
சுருங்கக் காட்டினோம்.)

இனிச் சமாதி என்பது.  ஒருவன் பிறப்புக்கு முந்திய நிலையில் உடலின்றி
ஆன்மாகவே மட்டுமே இருந்தான். இவ்வுலகில் வாழ்ந்து அவன் ஆன்மா
நீங்கிய காலை, உடல் கைவிடப்பட்டு மீண்டும் ஆன்மா ஆகிவிடுகிறான்.
சமாதி என்பது முன்னிருந்த நிலைக்குச் சமமான நிலை ஆகும். உடலற்ற‌
நிலை அது.அதுவே "சமாதி".

இனி மத நூல்களும் பிறவும் கூறும் பொருள் வேறு. அவற்றை ஆங்குக்
கண்டு தெளிக.

 யோகக் கலையில், உயிருடன் இருக்கும்போதே, ஆன்மாவை உடலைவிட்டுப் பிரித்து மேல் எழுப்புதல் முதலியவை பற்றியும் அது பற்றி
அறிந்தார்வாய்க் கேட்டுணர்க.  அதுவும் உடலுடன் இல்லாத முன் நிலைக்குச்
செல்லுதல் என்று பொருள் தருதல் காண்க.






கெச்சிரிவால் ஆனவரைக் கேட்டார்கள் ஏன் தோற்றீர்?

கெச்சிரிவால் ஆனவரைக் கேட்டார்கள் ஏன் தோற்றீர்?
நச்சரிக்கப் பட்டத   னாலோதான் === மெச்சவென்று
சொன்னார்பார் எந்திரங்கள் சோடையென்று! இல்லையெனில்
வென்றார்யார் எம்மை   என!

கெச்சரிவால் -  தில்லி  முதல்வர் ;
எந்திரங்கள்  -  வாக்கு  எந்திரங்கள்.

இந்தப் பாடல், அண்மையில் நடந்த டில்லி நகரவைத் தேர்தல்கள்
பற்றியது. அதில் கெச்சிரிவால் (கெஜ்ஜிரிவால்) கட்சி தோற்றது.
இதற்குக் காரணம், வாக்கு இயந்திரங்களே; அவை சரியாகக்
கணிக்கவில்லை என்று சொல்லிவிட்டார் கெச்சிரிவால்! இவர்
சொல்வதை நிறுவ இவரிடம் ஆதாரங்கள் ஏதுமிருப்பதாகவும்
தெரியவில்லை.(தெரிவிக்கவில்லை).

Owvayaar statue in Governor Palace. பாட்டிஒளவை

பாட்டிஒளவை வாழ்ந்தகாலம் பாரில்நாமும் இல்லை,
பலநூற்று நல்லாண்டு பாய்ந்துகால ஆற்றில்
மீட்டலின்றி ஓடியபின் மெல்லநாமு தித்தோம்!
மீண்டுபாட்டி மேனிதோன்ற மேடைபோடு வோமா ?
மூட்டமிட்டார் சென்னையாளும் மூப்பில்காட்சி ஆள்நர்;
மூதறிவோர் போற்றுவித்ய சாகரென்னும் பேரோர்!
ஓட்டமுற்ற வண்டிபோலும் ஈட்டம்கூட்டி னார்கள்;
ஒப்பில்சிலை மனைமுகத்து நிற்பவழி நேர்ந்தே.


மூட்டம்  -  தொடக்கம்  (   மூட்டுதல் )
ஆள்நர்  -   ஆளுநர்  (   governor )
 (
ஈட்டம் = வலிமை;
கூட்டினார்கள் ‍=  சேர்த்தார்கள்;
நிற்ப = நிற்க.   to  install.
நேர்ந்தே = திட்டமிட்டே. (   having   undertaken.)



செவ்வாய், 25 ஏப்ரல், 2017

When "U" (oo) changes to "A"

உகரத்தில் தொடங்கிய பல சொற்கள், பின்னாளில் அகரத் தொடக்கமாகிவிட்டன. எது முந்தி? என்று முடிவு செய்வதற்கு, சொல்லின் தொடக்க நிலையை ஆய்வு செய்ய வேண்டும்.

அம்மா என்ற சொல், உம்மா என்றும் தமிழரல்லாத வேறு மொழியினரிடையே
வழங்குகிறது. "அம்" என்ற அடிச்சொல். சீன மொழியில் வயதில் மூத்த‌ பாட்டிபோன்ற மதிப்பிற்குரியரை உணர்த்துகிறது. தமிழ் சீனம் முதலிய மொழிகளில் சொல் "அம்" என்றே தொடங்குவதால், அம் என்பதே மூலச்சொல்
என்று முடிக்கலாம்.

தமிழில் "அம்மை" என்பதே இலக்கிய வடிவம் எனினும், விளிவடிவில் ( அழைக்கும் போது) அம்மா என்று ஆகாரம் பெற்று முடிகிறது. சீனமொழிச் சொல்லும் " அம்‍~" என்றே ஒலிக்கப்பெறுகிறது. அம்மாவைக் குறிக்க மலாய்
மொழியில் "ஈபு" என்ற ஒரு சொல்லும் உள்ளது. இது உரிய இடத்தில் "தலைமை" என்றும் பொருள்படும். பெண்கள் தலைமை தாங்கிய ஒரு காலத்தை இவ்வழக்கு நன்கு குறிக்கிறது.

உடங்கு என்பதிலும் அடங்கு என்பதிலும் உள்ள ஒற்றுமையையும் அறிந்துகொள்ளுங்கள்.

உடங்கு: கூடிநிற்றல்.
அடங்கு: இதுவும் ஒன்றில் இன்னொன்று கூடி உள்பதிவு ஆவதைக் குறிக்கக்கூடும். சொல் பயன்பா ட்டைப் பொறுத்து இப்பொருள் போதரும்.

அம்மை என்பது உம்மை என்றும் திரிந்து பொருள் மாறாமைபோல் இதுவும் கொள்ளப்படும் இடனும் உண்டு என்பதறிக.

உகல் என்பது கழலுதலைக் குறிக்கும். அகல் என்பது ஓரளவு பொருள் ஒற்றுமை உடையது. இரண்டும் அகலுதற் கருத்தினவாகும்.

உகளுதல் என்பது தாவுதல்; அகலுதல் என்பது நீங்குதற் பொதுக்கருத்து.

இவற்றை நன்கு ஆராய்ந்து, கருத்தொருமை வெளிப்படும் சொற்களையும் கருத்தணிமை வெளிப்படும் சொற்களையும் பட்டிய லிட்டுக்கொள்ளுங்கள்.


திங்கள், 24 ஏப்ரல், 2017

ஆஷ்டுக்குட்டி என்பதிலிருந்து (சமஸ்கிருதம்)

ஆட்டுக்குட்டி என்பதை ஆஷ்டுக்குட்டி என்று எழுதினால் தமிழ் இலக்கணியர்
ஏற்றுக்கொள்ளாத ஓர் ஒலியை நுழைப்பதாகப் பொருள்.  அதனால் ஆஷ்டுக்குட்டி என்பது அயற்சொல்லாகிவிடாது. ஒலியை மட்டுமே வைத்து
ஒன்றை அயலென்று கூறலாகாதென்பதற்கு இஃது  ஒரு  நல்ல எடுத்துக்காட்டாக‌ இருந்துவருகிறது. சட்டையை மட்டுமே வைத்து நம் வீட்டுப் பையனை அடுத்த‌ வீட்டான்  என்று கூறிவிடுதல் முடியாதன்றோ?

ஆடு என்பதன் அடிச்சொல் அடு என்பது.   அடு என்றால், ஒன்றாக உரசிக்கொண்டு அடுத்தடுத்துச் செல்லும் விலங்கினைக் குறிக்க, தமிழர்
மேற்கொண்ட சொல்லுக்குரிய அடிச்சொல் ஆகும். அடுத்தல் : அடு > ஆடு
என்று முதனிலை திரிந்த தொழிற்பெயரானது. தொழிலைக் குறிக்கும் இது
அத் தொழிற்குரிய விலங்கைக்குறித்தது ஆகுபெயர். இப்படிச் சொல்லாமல்
ஒரு தொழிலுக்கு இட்டபெயர், அத்  தொழிலைப் புரியும் விலங்குக்கும் பொருளுக்கும் பயன்படுத்தலாம், அது மொழியில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால்!!  என்று  முடிக்கலாம்.இது முன் சொன்னதையே  இன்னொரு விதமாய்ச் சொல்வதுதான்.

நாம் நினைப்பதுபோல் இல்லாமல்,  அடு என்ற அடிச்சொல்லையே கொண்டு
அஜ என்று பெயராக்கி, சமஸ்கிருதத்தில் பயன்படுத்தினர்.

அடு > அஜ (சமஸ்கிருதம்).  பொருள்:  ஆடு என்னும் விலங்கு.

ஆஷ்டுக்குட்டி என்பதிலிருந்து அதை மேற்கொள்ளாவிடினும், அடு   என்பதிலிருந்து   அஜ  என்று மேற்கொண்டமை, சிறப்பான செயல்பாடு ஆகும்


அடு >  அட > அஜ .
அடு > அட >  அடர் ..


ஆட்டுக்குட்டி என்பதிலிருந்து சொல்லைத் திரித்தால் அது திறனின்மையைக்
காட் டலாம்.. அடியை ஆராயவேண்டும். அடிச்சொல் அடு என்பது. அடு>அட>
அஜ. சொல்லாக்கும் பண்பறிந்த பெரும்புலவர்கள் இவர்கள்.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

தாசு என்பது தா (=கொடு) என்பதிலிருந்து..............

தாசன் என்ற சொல், மக்களுக்குப் பழக்கப்பட்ட சொல்தான். பல திரைக்கவிஞர்களும் இலக்கியகவிஞர்களும் இதனைத் தன் எழுத்துப்புனைப்பெயரின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக,  காளிதாசன், பாரதிதாசன், கண்ணதாசன், கம்பதாசன் எனப்பல காணலாம். ஜேசுதாசன் என்ற கிறித்துவப் பெயரும் உள்ளது.

என் சிற்றப்பனின் பெயர் தேவதாசன் என்பது. அன் விகுதியில் முடிந்த தேவதாசன் என்ற சொல், தேவதாசு (தேவதாஸ்) என்பதினும் சற்று
வேறுபட்டதுபோன்ற நினைப்பை ஏற்படுத்துகின்றது. இலட்சுமண தாஸ், ராமையாதாஸ் என்பனவும் உள்ளன.

தாசன் என்பதன் பெண்பால் தாசி எனலாம்; ஆனால் இது சொல் இலக்கணத்துக்குச் சரியாக இருக்கலாம். பொருள்வேறுபாடு
இச்சொற்களைத் தொலைவில் வைக்கின்றது.  தேவதாசி
என்பதோ  ஒரு குலத்தினரைக் குறிப்பதாகிறது.

கவிஞர்கள்" தாசன்" என்று குறித்துக்கொள்வது, இலக்கிய உலகில் பெரும்பான்மை, எடுத்துக்காட்டு: துளசிதாசர்.

தாசு என்ற சொல், நம் பழைய நூல்களிலும் உள்ளது. சுதாசு என்று  பெயரிலும் வரும். திரஸ்தாஸ்யு, திவோதாஸா முதலிய வேதங்களில்
உள்ளவை.

தாசு என்றால் அடியன் என்று பொருள்  என்பர்.  அடிமைகள் தாஸ்யு எனப்பட்டனர் என்பர்.  ஆனால் அசுரர்கள் என்றும் கூறப்பட்ட இவர்கள்
அரசர்களாக இருந்துள்ளபடியால், அடிமை, அடியர் என்பது முற்றும் பொருந்துவதாய்த் தோன்றாமை காண்க.

ஆரியர் என்பது வேறு. பிராமணர் என்பது வேறு. இப்போது பிராமணர் என்பது ஒரு  சாதிப்பெயர்.

ஆர்ய   என்பது ஓர் இனம் என்பது நிறுவப்படவில்லை. பிராமணர் என்பது
பூசுரத் தொழிலுடையார் பல்வேறு பிரிவினரைக் குறிக்கிறது. இவர்கள் பல பிரிவுகள்   தம்முள் உடைய தொழிலினர் ஆவர். பல்வேறு மொழி பேசுவோர்.

தாசு என்பது தமிழ்ச்சொல்லான தா (=கொடு) என்பதிலிருந்து வந்ததென்பதைச்
சில காலத்தின்முன் வெளியிட்டோம். உழைப்பையோ, பொருளையோ, பிறவற்றையோ கொடுப்போர் தாசு. தாசர் எனப்பட்டனர். ஆதரவு கொடுத்தோர்
எனவும் பொருள்கூறுதல் கூடும்.  ஆதரவு, ஆதாரம், ஆதாயம் என்கிற சொற்கள் ஆக்கொடைகளைத் தெளிவுபடுத்துபவை. இது ஆக்கொடையையும்
குறிக்கும். கொடை பலவகை.  தானம் என்ற சொல்லும்  (தா+ன் +அம்) என்பது தரப்படுதலைக் குறிக்கும்.  இதில் 0ன் என்பது  இன் என்பதன் தலைக்குறை ஆகும். தா+(இ)ன்+அம் ஆகும். தா என்பது பிறமொழிகளிலும் பரவியுள்ள
 தமிழ்ச்சொல்.


will edit.











சனி, 22 ஏப்ரல், 2017

கழுத்தூறி > கஸ்தூரி.

கஸ்தூரி என்பது ஒரு வகை நறுமணப்பொருள். இது ஒரு மானின் கழுத்திலிருந்து ஊறிவருவதாக முன்னர் நம்பப்பட்டதாகும். கழுத்தூறி என்ற‌
சொல்லிலிருந்து கஸ்தூரி என்ற சொல் அமைந்தது. இச்சொல்லில் ழு என்பது
ஸ் என்று மாற்றப்பட்டது,

இந்த நம்பிக்கையைச் சுட்டிய இணைய அகரவரிசைக் குறிப்பு  காணமுடியவில்லை, திருத்தப்பட்டிருக்கலாம்.
எமது பழைய இடுகைகளும் அழிந்தன.

எனினும் கழுத்தூறி >  கஸ்தூரி.

எமது பழைய இடுகையின் பகர்ப்பு வைத்திருப்போர் அன்புகூர்ந்து அனுப்பிவைக்கவும்.

posting feature may have been made difficult.  will edit later.

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

சிங்கைநகராம் இழைப்பதெலாம் வென்றி

அடுக்குமாடி வீட்டினிலே  சிங்கைநகர் மேவி
அமைதியாக வீற்றிருந்தேம் அங்குபல குப்பை
எடுக்கும்வேலை ஆற்றுகிற பளுவுந்து  வந்தே
ஏற்றபடி  அழுக்கவற்றை ஏற்றியகன் றார்கள்
நடுப்பகலோ காலையதோ  மாலயதோ என்று
நாடுவதும் இல்லையது தூய்மையொன்று நோக்கம்!
விடுப்பினிலே வேலையரும் விலகிநிற்பதுண்டோ ?
வினைசெயலே தலைக்கடனே வேறுளதோ   வியப்பேம்

உலகினிலே தூய்மையதாம் உற்றஒரு   கடனாய்
உழைப்பதுசிங் கைநகராம் இழைப்பதெலாம் வென்றி.

தூய்மை வாழ்க

குறிப்புகள்:

இருந்தேம்  ( இருந்தோம்  வியந்தோம்  :  ~ஓம் என்பதினும்  ~ஏம்  என்று  முடிவது  பொருத்தம் )

பளு வுந்து  :  லாரி .

வென்றி =  வெற்றி  
இச்சொல் வென்றி என்றும் வரும்.

 

வியாழன், 20 ஏப்ரல், 2017

பன்னீரா ? எடப்பாடியா?

உயரப் பறந்தது தேன்சிட்டு;
உயர்ந்து சென்றது வான்முட்ட!
அயர்ந்தன மற்றப் பறவைகளே.
அரசனும் ஆனேன் நானென்றது.

தமிழகத் தரசோ யாரென்பதை
தாமிகப் பறந்து கூவுமவர்
அமையும் பன்னீர் தெளிப்பவரோ?
அவர்முன் அமர்ந்த பாடியரோ?

இன்னும் சின்னாள் பொறுத்திருந்தால்
எதற்கும் விடையும் கிடைத்துவிடும்.
மன்னர்  இவரென் றறிந்தபடி
மாலை இலைநீர் அருந்திடுவீர்.

இலைநீர் ‍  : கொழுந்து இலைநீர், (தேயிலை நீர்)
















 

அக அத்தி அகத்தியர்

அத்தி மரம்தான் பெரும்பாலும் பாம்புகள் முட்டையிடும் இடமென்று
பாம்புபற்றித் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். இதுபற்றித் தெரிந்தவர்கள்தாம் சொல்லவேண்டும்.

அகத்தியரின் வீட்டுக்கருகிலே ஓர் அத்திமரம் இருந்திருந்ததென்பாரும்
உண்டு. இதற்குத் தனிப்பட்ட ஆதாரம் ஏதுமில்லை.  அகத்தியர் என்ற‌
சொல்லை அடிப்படையாக வைத்தே இது சொல்லப்படுகிறது.

அகத்தியர் உண்மையில் "அக அத்தியர்" என்றனர் இவர்கள். அவர்
வீட்டிற்கருகிலே ஓர் அத்திமரமாம்.

மக்கள் அதை அவ்வீட்டுக்குரிய அத்தி என்ற பொருளில், அக அத்தி
என்றனர்.  அவ்வீட்டில் வாழ்ந்த குள்ளமுனி, அகத்தியர் எனப்பட்டார்.

எதுவும் இருக்கலாம். சில ஆயிரம் ஆண்டுகளின் முன் நடந்ததை
எப்படி அறிவது?  நேற்று நடந்ததற்கே ஆதாரம் கிடைக்காமல்
மனிதர்கள் திண்டாடுகிறார்கள்!   

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

முன்னிலை பெற்ற தொழில்கள்

மனித நாகரிகத்திலே முன்னிலை பெற்ற தொழில்கள் சில. நாம் பேச‌
விழைவது மனிதன் காட்டினனாக வாழ்ந்து, மரங்களின்மேல் குடியிருந்த காலத்தைப் பற்றியது. அப்போது அவன் வேட்டுவனாக இருந்தான். மரத்தில் கிடைத்த்வற்றை உண்டதுடன், விலங்குகளையும் வேட்டையாடித் தின்றுவிட்டு,இரவில் மரங்களில் வீடு அமைத்துக் குடியிருந்தான்.

பலவித இடர்களையும் விட்டுப் போய் வைகுவதனால் அவன் தங்கியது
"வீடு" எனப்பட்டது. குந்த ஓர் இடம் வேண்டாமோ?  மரத்திலவன் வைத்ததே (அமைத்ததே) அவனுக்கு "வை குந்தம்" ஆனது. அவன் பத்திரமாகக்
குந்திக்கொள்ளும்படி வைத்த இடம் : வைகுந்தம். அவன் இடர்களிலிருந்து வீடுபெற அவன் கும்பிட்ட சாமியும் வைகுந்தத்திலேயே இருந்துகொண்டார்.

வேட்டுவ வாழ்வை விட்டு நீங்கி, ஓரிடத்துத் தங்கி, பயிர்த்தொழில்
மேற்கொண்டு  , சில விலங்குகளை வீட்டின் புறத்துக்  கொட்டகையில் இருத்தி வளர்த்துப் பால், தயிர், மோர் முதலிய நுகரத்தொடங்கியது
பிற்காலத்து நாகரிகம் ஆகும்.  இக்காலங்களில் அவனுக்கு, மாடு, ஆடு, நாய் பூனை முதலிய நட்புடையவை ஆயின.


ஆதாரம் ( ஆக்களைத் தருதல்),    ஆதரவு ஆதாயம், முதலிய சொற்கள் அவன் மாடுசார்ந்த ஒரு நாகரிகத்தினன் என்பதை
நன்கு விளக்குவன ஆகும்.  அவன்றன் ஆவுறவை "ஆபோகம்" என்ற‌
சொல் விளக்கும்.  ஒரு மனிதன் போய்த் தேடும் சுகங்கள் "போகம்"
எனப்பட்டது.  அவன் ஆவினோடு கூடி வாழ்ந்த வாழ்வு "ஆபோகம்"
என்று சிறப்புப்பெற்றது.

பண்டமாற்றில் ஆவை விற்க, அது "ஆதாயம்" தந்தது.  ஆ‍ பசு;
தா =  தருதல். தாயம்: தருதல். தா +அம் = தாயம் ‍= தருதல். யகர‌
உடம்படு மெய்,

மனிதன் எத்தனை ஆக்களை உடையவனாய் இருந்தான் என்பதைக் கொண்டு அவன் செல்வனா, அல்லனா என்றபாலது தீர்மானிக்கப்பட்டது.மாடு என்ற தமிழ்ச்சொல்லுக்குச் செல்வம் என்ற‌
பொருள் இன்னும் மாற்றமுறாமல் இருக்கிறது. "மாடல்ல மற்றையவை" என்ற திருக்குறள் தொடரால் இது நன்கு புரியும்.

புதியோனாகக் குடிபுகுந்தோனுக்கும் இடர் அடைந்தோனுக்கும் தந்து
உதவத்தக்கது  ஆக்களே.  இதுவே "ஆதரவு"  ஆனது. ஆவைத் தருவதே ஆதரவு. அவனுக்கு வேண்டிய பால், தயிர் முதலிய தேவைகளை ஆக்களே தந்தன. ஆவின்றித் தரவில்லை.  ஆ தருவதே ஆதாரம்.

நாளடைவில் இச்சொற்களில் ஆவின்பங்கு  மறக்கப்பட்டு,  அவை
பொதுப்பொருளில் வழங்கின. மாடு என்பதே செல்வமானது.

ஏர்த்தொழிலுக்கு உதவியது எருது ஆனது..  எரு‍=  ஏர்.  எரு> எருமை.

எருமை மிகுந்த ஊர் எருமையூர்:>  மையூர் > மைசூர்.  தலைக்குறையும் திரிபும் ஆகும். ய>ச திரிபும் காண்க.  மை = மெய்,  ()உடல்..

இங்ஙனம் ஆ நாகரிகம் சிறந்த இடங்களில் ஏறு தழுவுதல் ஒரு
வீரவிளையாட்டானதும் பொருத்தமே.




திங்கள், 17 ஏப்ரல், 2017

கட்சிக ளுக்கு காசு முடை!!

கட்சிக  ளுக்குத் தமிழ்நாட்டிலே
காசு முடையென்று யார்சொன்னது?
பட்சிக ளுக்கிரை இல்லையென்று
பாரினிற் சொன்னால் அதுவுண்மையே.
இச்சை இலையெனப் பாடிவிட்டார்
இத்தனை கோடி புதுப்பணமே
நச்சுக் கடைக்கட்டு வந்ததென்ன?
நாடு நகரம் அசந்தனவே



பட்சி :  பறவை.
புள் > புட்சி > பட்சி.
இழுச்சை > இச்சை.  ஆசை.

இவை பின்னர் விளக்கப்பெறும்.

.






 

யானை கட்ட ஆலானம் வேண்டும்.

ஆலானம் என்ற சொல் இப்போது இயல்பான வழக்கில் வருவதில்லை என்றாலும்  ஆனை (யானை)ப் பாகர்கள் அறிந்த சொல். பிறருக்கு ஆனையினுடன் வேலைத்தொடர்பு ஒன்றும் இருப்பதில்லை ஆகையால் அவர்கள் அறிந்திரார்.

யானை கட்டும் கயிற்றுக்கு ஆலானம் என்று பெயர்.மெதுவாக‌
முயற்சி செய்து யானைகளைக் கட்டிவைப்பவர்கள் பாகர்களே.

யானை கட்டும்போது கயிற்றைக் கொஞ்சம் அகலவிட்டுக்
கட்டவேண்டும், அது பெரிதாகையால் கொஞ்சம் நடமாட‌
இடம்விட்டுக் கட்டுவர். ஆகையால் ஆலானம் என்ற சொல்லில்
முன் நிற்பது "ஆல்" என்பது.

ஆல் என்பது அகல் என்ற சொல்லின்  திரிபு.

அடுத்த சொல் ஆனை என்பது. இது ஐகாரம் கெட்டு. விகுதி
முன் "ஆன்" என்று  நின்றுவிட்டது.

ஆகவே ஆல்+ஆன்+ அம். இறுதி அம் என்பது விகுதி. இது
"ஆலானம்" ஆகிறது.

அரசரின் காலங்களில், யானைகள் மிகுதியான இருந்து,
யானைப் படையில் சேவை புரிந்தன. அப்போது இந்தச் சொல்
புழக்கதில் இருந்திருக்கும். தேவையான சொல்லாகவும்
இருந்திருக்கும். காலம் மாறி, பழைய அரசர்காலமும் போய்,
யானைகளை விலங்கு காட்சிசாலைகளில் காண நேர்கின்ற‌
இக்காலத்தில், இது பழம்பாடல்களில் வரும். அப்போது பொருளை
உணரலாம்.

புதிய சொற்களைப்  படைப்போர்,  இதில் கையாண்ட முறையைக் கைக்கொள்ளலாமே.  அதற்காக இதை அறிந்துகொள்ளுங்கள் .

யானை கட்ட ஆலானம் வேண்டும்.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

"ஞாலம்." எப்படி வந்தது?

ஞாலம்.

ஞாலம் என்பதற்கு உலகம் என்பது பொருள்.

இந்தச் சொல் எப்படி வந்தது என்பதைப் பார்ப்போம்.

ஞாலுதல் என்பது தொங்குதல் என்றும் பொருள்தரும். இதிலிருந்து
உலகம் என்று பொருள்படும் சொல் ஏன் வந்தது?

சிலர் உலகம் உருண்டையானது அல்லது வட்டவடிவம் உடையது என்று நினைத்தது போலவே வேறுசிலர் அது அண்டவெளியில்
தொங்கிக்கொண்டிருக்கிறது என்று நினைத்தார்கள். அதனால்
ஞால்+ அம்= ஞாலம் என்று ஒரு சொல்லால் உலகத்தைக் குறித்தனர்.

ஞாலம் என்பது வழக்கில் உள்ள சொல்லாகும்,

நீலம் (  நீலவானம் ) என்று ஒரு பாட்டெடுத்தால், அடுத்து
ஞாலம் ( ஞாலமீதில் ) என்று எழுதப் பொருத்தமான சொல்லாகும்.

ஞால என்பது தொங்க என்று பொருள்தரும்.


-------------------------


==============

ஞாலுதல் என்பது நாலுதல் என்றும் திரியும். நாலுதலும்
அதே பொருளை உடையது. தொங்குதல் என்பதே பொருள்.
நாலுதல் என்பது நாலல் என்றும் வரும். இந்த நாலுதலில்
உள்ள நால் என்ற அடி சி விகுதி பெற்று  நாற்சி என்றும் வரும்.
சி என்னும் விகுதி தொழிற்பெயரில் வருதற்கு இதுவும் ஓர் உதாரணம். (உது+ஆர்+அணம்). நாலுதல் தன்வினை; அது பிறவினையாக நாற்றுதல் என்று ஆகும். (  நால்+து+தல்).எனின்
தொங்கவிடுதல்.

நானிலம் என்பது பூமியைக் குறிக்கும். இதற்கு,  ஐந்து வகை நிலங்களில் பாலை நீங்கிய பிற நான்குமே சிறப்புடையது என்பதால் இவற்றை உள்ளடக்கி " நானிலம் " என்ற சொல் அமைந்தது என்பர்.
(  அறிஞர் க. ப. சந்தோஷம் ( மகிழ்நன் ) ).  எனினும் நால்+ நிலம் என்பது தொங்கு நிலம் என்றும் பொருள்கொள்ளும் என்பதறிக. இப்படி
நோக்கின், ஞாலம் என்பதே அதற்கும் பொருள் ஆகும்.

பூணூல் என்பது தோளிலிருந்து தொங்குநூலாதலால், அதற்கு நானூல்
என்றும் பெயர்.

நச்சினார்க்கினியர் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய காலத்தில்
மூன்று ஆரிய வேதங்களே  (ஆரிய, சிறந்தோர்; அறிவாளிகள் ). நான்காவது இன்னும் எழுதப்படவில்லை. அல்லது புனையப்படவில்லை.  எனினும் நானூலாரால் பயலப்பட்டமையின்
நான்மறை என்றனர்.  எனினும் குலை முதலியன ஒன்றாய்த் தொங்குவதுடையது.  தொகு (தொகை நூல் ) என்பது இடைவிரிந்து
தொங்கு ஆகும்.  பின்னர் நான்காகி   எண்ணிக்கை  நிறைவு பெற்றது.




‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍



சனி, 15 ஏப்ரல், 2017

ஆலானம் கொண்டே அடித்துப் பிணைத்தாலும்

ஆலானம் கொண்டே  அடித்துப் பிணைத்தாலும்
கோலானைத் தான்திருப்பிக் குத்தவரும் ‍‍‍==== கேளாக்
கொரிய வடக்கினர்க்குக் கோதில் அமைதி
தெரியுவழி தேர்ந்து செயல்.


ஆலானம்: இச்சொல்லின் விளக்கம் இங்கு வெளிவரும் . 
இது யானை காட்டும் கயிறு.

கோலான்:  கோல் பிடித்திருப்போன்.

கொரிய வடக்கினர் : வடகொரியர்.

கோதில்: குற்றம் இல்லாத.

பே+ து + அம் = பேதம்

பெயர்தல் என்றால் பொருள் பலவாகும்.    ஆடல், எடுபடல், திரும்பல்,பேர்தல், பிறழ்தல், வேறுபடல், சிதைவுறல், விடுதல், மீளுதல், மாறுதல், அசையிடுதல் எனப் பல்பொருள் ஒருசொல் ஆகிறது
இது.

பெயர்த்தல் எனில் வேறுபடுத்தல், போக்குதல்,  நிலைமாறச் செய்தல், பிரித்தல்,  கொடுத்தல், செலுத்துதல், சிதைத்தல், புரட்டுதல், கிளப்புதல்
என்றும் பொருள்.

பேரன் என்பது உண்மையில் "பெயரன்" என்பதினின்றும்  போந்தது  .  பெயர் என்ற பகுதி பேர் என்று நின்று அன் விகுதி பெற்றது. பேத்தி என்பதோ,  பே+தி = பேத்தி என்றானது.  எனவே,      பெயர் > பேர் > பே
என்று திரிவதைத் தெள்ளிதில் தெரியலாம்.

பேதம் என்பது வேறொன்றாவதைக் குறிப்பது.  மாறுபடற் கருத்தாகும்.

பே+ து + அம் = பேதம்.  து ‍விகுதி . அம் என்பதும்  விகுதி.
விகுதிமேல் விகுதி என்றோ, இடைநின்ற விகுதியை இடைநிலை என்றும்  இறுதி விகுதியை விகுதி என்றும் கூறினும் இழுக்கொன்றும்
இலது.

ஆகவே பேதம் நல்ல தமிழே.

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

உலகம்

மூத்தம்மா காலத்தில் இல்லாத முன்னேற்றங்கள்!
தாத்தாவின் காலத்தில் இல்லாத தடுமாற்றங்கள்!
முன்னென்றே ஒன்றுதான் இருந்துவிட்டால்
பின்னென்றே ஒன்றும் இருந்துவிடுமே!
இருந்தாலும் இவ்வுலகம்
சுழன்றுகொண்டுதான் இருக்கிறது.....
உலகம் சுற்றித்
தொடங்கின இடத்துக்கே
அடங்கிவந்து அமைந்ததுபோல‌
காரியங்கள் சில‌
தொடங்கிய இடத்துக்கே வந்துவிடுகின்றன.
சில தொடங்குவதே இல்லை...
சாதனைகள்
கொசு  கடிப்பதும்  சளி பிடிப்பதும் ......

உலகம் 












மூத்தம்மா * தாத்தாவின் * காலத்தில்

மூத்தம்மா காலத்தில் இல்லாத முன்னேற்றங்கள்!
தாத்தாவின் காலத்தில் இல்லாத தடுமாற்றங்கள்!
முன்னென்றே ஒன்றுதான் இருந்துவிட்டால்
பின்னென்றே ஒன்றும் இருந்துவிடுமே!
இருந்தாலும் இவ்வுலகம்
சுழன்றுகொண்டுதான் இருக்கிறது.....
உலகம் சுற்றித்
தொடங்கின இடத்துக்கே
அடங்கிவந்து அமைந்ததுபோல‌
காரியங்கள் சில‌
தொடங்கிய இடத்துக்கே வந்துவிடுகின்றன.
சில தொடங்குவதே இல்லை...
சாதனைகள் -----
கொசு  கடிப்பதும்  சளி பிடிப்பதும்.....!
வெற்றி கொள்ள இயலாத வில்லங்கங்கள் !












தொல்காப்பிய நன்னூல்" அட்டாவதானம் சபாபதி முதலியார் 1858

---
சாமுவேலென்னும் புலவர்  தொல்காப்பியத்தையும் நன்னூலையும் ஒப்பாய்வு செய்து " தொல்காப்பிய நன்னூல்" என்றோரு நூலை 1858ல்
வெளிப்படுத்தினார். இந்த நூல் இதுகாலை கிடைத்திலது. இதற்கு அப்போது அட்டாவதானம் சபாபதி முதலியார் என்னும் தமிழ்க்கொண்டல்
ஒரு பாயிரம் வரைந்தார்.

பூமிசை என்று தொடங்கிய இதில் தமிழ் நாட்டின் எல்லை கூறப்படுகிறது.
"வேங்கடம் குமரி ஓங்கிய மேல்கீழ், புணரிசூழ் வரைப்பின்
அணவிய முத்தமிழ்" என்று தமிழைப் புகழ்ந்துரைக்கிறார்.

மேற்சென்று, அகத்தியரின் மாணாக்கரே தொல்காப்பியர் என்ற வழக்கமாகக் கூறப்படும் "வராலாற்றை " முன்வைக்கிறார். இதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று அறிஞர் சிலர் தள்ளுபடி செய்துள்ளனர்.
அகத்தியர் எழுதியதாகக் கிடைக்கும் நூல், தந்துறை போகிய‌ ஓர் இலக்கண ஆசிரியர் பாடியதுபோல் இல்லை என்கின்றனர். எனினும்
பன்னிரு மாணவரை உடையவர் அகத்தியர் என்கிறார் அட்டாவதானம். அப்பகுதி வருமாறு:



அரும்பெறல் இயல்பெறீஇப் பொருந்திய பன்னிரு
மாணவக் குழாத்துள் நீள் நிலை கொளுவிய‌

ஒல்காப் பெருஞ்சீர்த் தொல்காப்பிய முனி
தன்பெயர் தோற்றி அன்புறத் தந்த‌
ஐந்திரம் நிறைந்த வியத்தகு நுண்பொருள்
தொன்மைசால் காப்பியத்து உள் மரீஇப் பொதிவன

எனபது தொல்காப்பியத்தைப் புகழும் பகுதியாகும்.

இதில் அகத்தியருக்குப் பன்னிரண்டு மாணாக்கர்; அவர்களுள்
தொல்காப்பியர் ஒருவர் என்கிறார்.

இப்போதைய நிலையில், தொல்காப்பியரைக் கொண்டே அகத்தியரும்
இன்னும் 11 மாணாக்கரும் புகழ்பெறுவதாகத் தெரிகிறது.

இவர்கள் பாடல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

வியாழன், 13 ஏப்ரல், 2017

President Trump and North Korea

வடகொரியா வழிகின்ற போர்வெறிசேர் நாடு
வம்புக்கு நானணியம் எனமார்பு தட்டும்!
இடம்பொருளோ டேவலெனும் எதுவேனும் உண்டோ?
இங்கிதமென் றேதேனும் பயில்தலைவர் உண்டோ?
குடவிளக்காய்த் தான்மறைவாய் இருத்தற்கு மாற்று
குவலயப்போர் தானுயர வழியென்றே முந்தும்!
அடடாதிரம் பங்குசென்றே அவர்வாய்தி றந்தால்
அதுதானும் கெடுநேரம் ஆகாமற் காக்க!


அணியம் =  தயார்.
இங்கிதம் = இதற்கு இது அமையும் என்கிற புத்தி.
குவலயப்போர் = உலகப்போர்
திரம்ப்  = அமெரிக்க அதிபர்,

The British united non-C& M as Hindus

இந்துமதம் ஒன்றுபட வெள்ளைக் காரன்
என்னஒரு நற்செயலைச் செய்து விட்டான்!
அந்தமணில் சிவப்பற்றர் விட்ணு பற்றர்
அழகம்மைப் பற்றரென ஆறு பல்கி
நொந்துபல சண்டைகளில் உந்தப் பட்டு
நோப்பிரிவால் உழன்றாரை ஒன்றாய் ஆக்கி
சந்துகளை அடைத்தொன்றாய்ச் சாலை உய்த்தான்;
சால்பினரும் செயலறியா மேன்மை வைத்தான்.

மணில் = மண்ணில்;
பற்றர் = பக்தர்கள்;
விட்ணு = விஷ்ணு;
அழகம்மை : அழகுடைய தேவி;
நோப் பிரிவு = துன்பம் தரும் பாகுபாடுகள்;
சந்து = வழி;
சாலை = யாவரும் கூடும் இடம்
சால்பினர் = நாட்டில் நம் உயர்ந்தோர்.


புதன், 12 ஏப்ரல், 2017

சாமி நாத அய்யரும் சமயக் காழ்ப்புணர்வும்

இப்போதெல்லாம், இந்துக் கோயில்களில் சிவனுக்கு உபயம் செய்கிறவரே
விட்ணுவுக்கும் மாலை அணிவித்து வணங்குவதைக் காண்கிறோம். இவர்
சிவ வணக்கம் செய்பவர், இவர் விட்ணு வணக்கம் செய்பவர் என்று பேதப்படுத்துவதில்லை. (பெயர்தல்> பே> பேதம்).

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பேதம் தலைதெறிக்க எழுந்து நின்றது. சிவனைப் பாராட்டிய வாழ்த்து நூல் தொடக்கத்திலிருந்தால், அதை
நீக்கிவிட்டு, விட்ணு பாடல் எழுதி நூலை அச்சிட்டனர். பழம்பாடலை வீசுவதால், அதிலுள்ள சொல்வளம் அறியாதவர்கள் ஆவோம்; வரலாறு தொலையும்; உண்மை அறியார் ஆவோம் என்று நினைத்தனரில்லை. புதுப்பாடலைப் பழம்பாடல் போல் முன்வைப்பது ஓர் ஏமாற்று என்பதையும் அவர்கள் உணர்ந்தனரில்லை. ஆசிரியர்களும் வேறு மதத்தாருக்குப் பாடம் ஓத மறுத்தனர்.

இப்படியேதான், சாமிநாத ஐயருக்கு, மீனாட்சி சுந்தரனார் பாடம்சொல்ல‌
மறுத்துவிட்டார். அப்புறம் வெங்கட்ராமன் என்ற அவருடைய வைணவப்
பெயரைச் சாமிநாதன் என்று மாற்றி, சிவமதத்தவரானபின், முறைப்படி
மாணவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இல்லாததனால், பல நூல்களும் கைவிடப்
பட்டன. அவை அழிந்தன.

இவை நிகழாமல் இருந்திருந்தால், நமக்கு இப்போது பல சான்றுகளும்
கிடைத்து நம் ஆய்வுகள் உயர்ந்து நிற்கும் என்பது காண்க.

சாமி நாத அய்யரும்  சமயக் காழ்ப்புணர்வும்

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

மூச்சிருத்தல்

மூர்ச்சை என்ற வழக்கில் உள்ளதாகும். இப்போதெல்லாம் இதற்கு
ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

ஒரு மனிதன் தன் நினைவிழந்து சாய்ந்தபின், மூச்சு இருக்கிறதா
என்று பார்ப்பார்கள்.மூச்சிருந்தால், அவன் மரணமடையவில்லை, வெறும் நினைவிழப்புத்தான் என்று  அறிந்துகொள்வர்.

மூச்சிருத்தல் என்பது மூர்ச்சித்தல் என்று மாறியமைந்தது. இதில்
நிகழ்ந்த மாற்றம்,  ருகரம் ரகர ஒற்றாகி, மூகாரத்துக்கு அடுத்து
வந்ததுதான்.  மூச்சிருத்தல் > மூருச்சித்தல் > மூர்ச்சித்தல்..
இது ஒலி இடமாற்றுத் திரிபு ஆகும். நாவொலிக்க நயமானது
காணலாம்.

இப்படித் தமிழுக்கொரு புதிய சொல் கிட்டிற்ற்று.


வித்துதல் சொல்லிலிருந்து எழுந்திருப்பினும்........வித்தகர்

வித்தகர் என்ற சொல் காண்போம்.

இது முன்பு சிறிது விளக்கம் பெற்றுள்ளது.

விதைத்தல் என்ற வினைச்சொல்லுடன், வித்துதல் என்ற வினைச்சொல்லும் தமிழிலேயே உள்ளது.

வித்துதலும் விதைத்தலே ஆகும்.

கல்வியையும் கருத்துகளையும் ஒரு பெரு மரம்போல் வளர்க்கத்தக்க விதையைத் தம்முள் வைத்திருப்பவர் ‍‍==  ஓர் ஆசிரியர் == வித்தகர்
ஆவர். பேரறிவாளர் என்பது பொருளாம்.

வேதம் என்பது வேய்தல் அடிப்படையில் எழுந்தது என்பது எம்
முடிபு ஆகும். ஆயினும் வித் (வித்துதல்) என்பதனடிப்படையிலே
எழுந்தது என்று மேலையர் கூறுவதால், வித்துதல் என்ற சொல்லிலிருந்து எழுந்திருப்பினும்   அதுவும் தமிழ் மூலமே ஆகும்.

வித்தகர் என்பது: வித்து + அகம் + அர் எனப்புணர்ந்து, வித்து+அக+ ர்
என்றாகி, சொல் அமைந்தது. அர் என்ற விகுதி, அகரம் கெட்டு ரகர‌
ஒற்று மட்டும் நின்றது. வித்து என்பதன் உகரமும் கெட்டது. எனவே
வித் + த் அ + அ +  கர் என்பதில் வித் (த்+) (அக)ர் = வித்தகர்
ஆனது. ஒழிந்த ஒலிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.
அகம்+அர் என்பது அகமர் என்று முடியாமல் அகர் என்றே வந்தது
காண்க. மகர ஒற்றுக் கெட்டு, அக+ வ் + அர் எனப்பொருந்தி, அகவர்
என்றும் வரவில்லை.

கல்வி, கலை ஆய இவற்றை வளர்க்கும் பெரு வித்தினை உடையவர்
என்று பொருளுரைக்கலாமே.










திங்கள், 10 ஏப்ரல், 2017

சேர்மி நேர்மி சோர்+தன்+ஐ


சேர்+ ம் + இ = சேர்மி என்பது சேமி, சேமித்தல் என்று வினையாகும்.
ஒரு புதிய சொல்லை உருவாக்கிய பின், இடையில் நின்று சொல்லை
நீட்டமாக்கிக் கொண்டிருக்கும் ரகர ஒற்றை நீக்கிவிடுதலென்பது ஓர்
இயல்பான திரிப்பு முறையாகும். ரகர ஒற்று நின்று ஆகப்போவது
ஒன்றுமில்லை; சேர் என்பதே பகுதி அல்லது முதனிலை என்பதை
விளக்க உதவலாம். சொல் எப்படி உருவாயிற்று என்பதைப் பேசுவோன்
அறிந்து ஆகப்போவது ஒன்றுமில்லை. சொல்லைப் பயன்படுத்திக்
கருத்தறிவிப்பதே பேசுதலின் தலையாய நோக்கு ஆகும்.

வழக்குக்கும் வாய்ப்புக்கும் மலாய், ஆங்கிலம் என்பவை எப்போதும்
பேசுவோனிடத்துத் தயார் நிலையில் உள்ளபடியால், பேசுவோனிடம்
அதிக முயற்சியையும் கருத்துத் தடைகளையும் வேண்டும் சொற்கள்
நளடைவில் நகர்ந்துபோய்விடும். இதனாலே, திரிபுகளுக்கு இதுகாலை
ஒரு தேவை உண்டென்றும் கூறலாம். பேசுவோனிடம் நெருக்கடி கொடுத்து மொழியை வளர்த்துவிடமுடியாது. ஊக்குவித்தல் என்பது
வேறு. பல திரிபுகள், சொற்களை எளிதாக்குபவை.

சேமித்தல் என்பதுபோல் அமைந்ததே நேர்மித்தல் > நேமித்தல் என்பதுமாகும். நேராக அழைத்து ஒருவனை ஒரு வேலையில்
வேலையிற் பணித்தல் என்பது ஆதி வழக்கமானாலும் இப்போது
பணிப்போலை மூலம் நேமித்தல் பெருவழக்கு ஆகும். இதுபற்றிய‌
எம் பழைய இடுகைகள் அழிந்தன.

சோதனை என்பதும் ஒரு சிற்றூர் வழக்கு. சோர்(தல்) என்பதினின்று
தோன்றியது இதுவாகும். ஒரு சோதனையானது, தன்னைச் சோர்வடையச் செய்துவிடும்.

சோர்+தன்+ஐ > சோ+தன்+ஐ = சோதனை.
அல்லது:

சோர் > சோ.
சோ+ தன் + ஐ = சோதனை.

தன் என்பது "தன்" என்ற முழுச்சொல்லாகவிருந்தாலும், து+அன் என்பதன் திரிதலாக இருந்தாலும், விளைவில் மாற்றம் இல்லை.

தன்  -  இடை நிலை;  ஐ  : விகுதி.






ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

94‍ஐ எட்டிய பூரணவடிவு அம்மையார் மறைந்தார்

94‍ஐ எட்டிய பூரணவடிவு அம்மையார் மறைந்தார்.  (சிங்கப்பூர் 6.4.2017)

இக்காலத்தில் ஒரு நல்ல வயதை எட்டுமுன்னரே மறைந்துவிடுவோர்
பலராவர். மேலும், நோய்களின் எண்ணிக்கையும் மிகுந்தள்ளது. இந்த நிலையில், பழங்கால முறைப்படிச் சத்துணவை உண்டு  உடலை நன்கு நலம் பேணி, நீண்ட நாள் வாழ்ந்துள்ளார் பூரணவடிவு அம்மையார்.

இவருக்கு ஏழு பிள்ளைகள். ஆண்கள் ஐவர்; பெண்கள் இருவர் ஆவர்.

இட்டிலி, வடை, சிலவகை அப்பங்கள், உளுந்துக் கஞ்சி என்று
செய்து உண்பதுடன் பிறருக்கும் கொடுப்பவர்.  அன்பு  கெழுமிய உள்ளம் படைத்தவர் .

இவர் உடற்பயிற்சி ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. பெரும்பாலும்
சமையல் வேலைதான். இறுதி நாட்களில், பணிப்பெண் உதவியை
ஏற்றுக்கொண்டார்.

பின்னாட்களில் இனிப்பு நீர் நோய் ஏற்பட்டு, கட்டுக்குள் இருந்ததாகக்
கேள்வி. இப்போது மாரடைப்பு ஏற்பட்டு   மறைந்துவிட்டார்.

இவருடைய மகன்களில் ஒருவர், முருகையன். முரு ஆட்டோ ட்ரேடிங்
(முரு உந்து வணிகம்)  என்ற நிலையத்தை நடத்திவருகிறார். சிங்கப்பூரில் உந்து வண்டி வணிகம் செய்பவர் இந்தியருள்   இவர் ஒருவரே.   இந்தியர் பிறரை இத்துறையில் காணமுடியவில்லை .

அன்புடையோரும் ஆதரவாளரும் பெருந்திரளாக வந்திருந்து அம்மையாரை
வழியனுப்பி வைத்தனர்.

பூரணவடிவு அம்மையார் ஆன்மா சாந்தி அடைய நாம் இறைவனை
வேண்டிக்கொள்வோமாக.

நாரணன் சிவனொடு வீறுடை அம்மனின் நல்லருள் பெற்றுயர்ந்த‌
பூரண வடிவெனும் பொற்பெயர் பூண்டவர் புன்னகை என்றுமுள்ளார்;
ஊருணத் தந்து தான்பிற குண்பவர் உள்ளில் விரிந்த அன்பு;
வேறுல கெய்தினர் வேண்டுவம் சாந்தியை விழைவம் அவர்பெறவே.





சனி, 8 ஏப்ரல், 2017

கம்பர் உவச்சர் அல்லது ஓச்சர் குலத்தில் தோன்றியவர்



இனி, உவச்சன் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பது காண்போம்.
இச்சொல் ஓச்சன் என்றும் வழங்குகிறது.

இந்த இரு வடிவங்களுள் எது முன் அமைந்தது என்று காணவேண்டும்.ஆனால் இதைத் தீர்மானிப்பது கடினமே.

 இதற்குள் புகுந்து இடர்ப்படாமல், இரண்டையும் முதலாகக் கொண்டு
ஆராயலாம்.

உவச்சன் என்பதை  உவ + அச்சன் என்று பகுத்துக் காணின், உவ =
முன் நிற்கும்;  அச்சன் = ஐயன்; தந்தை போன்றவன் என்று பொருள் வரும். உவ+அச்சன் = உவச்சன்; இங்கு ஓர் அகரம் கெட்டது. உவ என்ற (சுட்டடிச் ) சொல்லின் இறுதி அகரம் கெட்டதா? அன்றி, அச்சன் என்பதன் தலை அகரம் கெட்டதா என்று ஆராய்தல் தேவையில்லை.
அதைப் பண்டிதன்மாருக்கு விட்டுவிடுவோம்.

இனி ஓச்சன் என்பதை முந்து வடிவாகக் கொண்டு, ஆய்வு நிகழ்த்தலாம். ஓச்சுதல் என்றால் : எறிதல், ஒட்டுதல், செலுத்துதல், உயர்த்துதல், ஓங்குதல், பாய்ச்சுதல்,  மற்றும் வீசுதல் ஆகும்.  எனவே இறைவனை, இறைவியை உயர்த்திப் பாடுதல், ஓசைப்படுத்தல் என்பதாம்.  ஓசு என்ற‌
என்ற வடிவம் ஓச்சு என்பதன் இடைக்குறை . இது பெயர்ச்சொல்லாக,
கீர்த்தி (சீர்த்தி ), புகழ் என்றும் பொருள்.  ஓ > ஓசு > ஓசை என்பதும்
கருதத்தக்கது.

ஓச்சர் என்பார் பிடாரி கோயிற் பூசாரிகள். அவர்கள் ஒரு குலமாகச்
செயல்பட்டுத் தொழிலீடுபாடு கொண்டிருந்தனர்.  பிடார் என்ற சொல்லுக்குப் பீடு பெருமை என்பது பொருள்.  இது பீடு + ஆர் + அன் என்று உருவாகி, பீடாரன்> பிடாரன் என்று குறுகி அமையும் சொல்.

பெருமையுடையோன்  . இது பாம்பு பிடிப்போன், குறவன், வைத்தியன்
என்று குறிக்கும். பாம்பு பிடிப்பது, ஓர் அசத்தும் தொழில். வைத்தியமும்
இன்றியமையாத தொழிலே.

எனவே பிடாரி ( பீடுடைய பெருமாட்டி ) என்பது ஒரு சிற்றூர்த் தெய்வம்.  இங்குப்  பூசாரிகளாக வேலை செய்தோர் ‍‍உவச்சர்கள் அல்லது
ஓச்சர்கள்.

கம்பர் பெருமான் உவச்சர் அல்லது ஓச்சர் குலத்திற் தோன்றியவர். பிடா ரி
வழிபாட்டினர் இராம பத்தர்களாயும் இருந்தனரா என்று தெரியவில்லை. கம்பர் இராம பத்தப் பாடுநரானது மேலும் ஒரு காவியத்தைத் தமிழுக்களித்தது

----------------------------------------------------------------

பீடு என்பதன் அடியாகத் தோன்றிய ஒரு  தொன்மச்  சொல் பீஷ்மன் என்பது என்று முன்னரே இடுகை தந்துள்ளோம்.

பீடு+ மன் ‍= பீடுமன்; இயல்புப் புணர்ச்சி. பீடு‍= பெருமை; மன் = மன்னன். ஆகவே பெருமைக்குரிய மன்னன். காரணப் பெயராகிறது. இது டுகரத்தைக் களைந்த நிலையில் ஷ் என்ற எழுத்து நுழைக்கப்பட்டு, பீஷ்மன் ஆகும். ஓரெழுத்து மாற்றத்திலே சொல்லை அமைத்தது திறனே ஆகும்.

புதிய சொற்களை எப்படி அமைப்பது என்பதைப்  பெரும்புலவன் வால்மிகி
யிடத்து ம்  மற்றும் வேத வியாசனிடத்தும்   கற்றுக்கொள்ளவேண்டும்.



.You may refer to other works on the history of uvachchars. We are only concerned here  with word
derivation.

Edited.















ரக்க > ரக்ஷ. ஜெகன்மாதா


இரக்கம் >  ரக்க >  ரக்ஷ.    பொருள்: இரக்கம்.
இகம்  (இ(வ் வுல) கம்)  > ஜெகம்.
அம்மா, தாய் >  ~மா + தா~  = மாதா.
ஜெகம்+ மாதா = ஜெகன்மாதா.

அம்மா என்பதில் "மா" மட்டும் எடுக்கப்பட்டது;  தாய்  என்பதில்  "தா " மட்டும் வந்து சேர்ந்து கொண்டது. ஆகமொத்தம்:  மாதா ஆனது. அருமையான புனைவு ஆகுமிது.

ஒப்பு நோக்குக: ஆய் + தாய் = ஆ +தா  =  ஆத்தா.

ரக்ஷ ரக்ஷ ஜெகன்மாதா = இரக்கமுடைய  உலகத் தலைவியே.

பழந்தமிழ்ச் சொற்கள் அழகாகச் செதுக்கப்பட்டு, புதிய சொற்கள்
படைக்கப்பட்டன.

ரக்ஷகர் : மனமிரங்கிக் காப்பாற்றுகிறவர். (ஏசுநாதருக்கு வழங்கும்
பெயர்.)

ஒரு மொழியை வளப்படுத்த  எம்முயற்சியும் நன்முயற்சியே.

வியாழன், 6 ஏப்ரல், 2017

பூமி நேரானதன்று ..கோணி.......

நாம் வாழும் பூமி நேரானதன்று. பல கோணல் நெறிகளைக் கொண்டிருக்கிறது. நாம் கவனத்துடன் செல்லாவிடின், கோணுதலும்
குறிக்கோள் தவறுதலும் நிற்சையம்.( 1 )

கோணிச் செல்வதற்குப் பலவழிகளையும் வலைபோல் விரித்து வைத்திருக்கும் இந்தப் பூமி, ஒரு கோணியே  அன்றோ?  நடப்பதில் கூட‌
இடையில் மேடு, பள்ளம், ஆறு, குளம், கடல், மலை, கட்டை, விட்டை என்று எண்ணிலடங்காதன, குறுக்கிட்டு, நம்மைக் கோணிச்செல்ல, விபத்தைத்2 தவிர்க்கப் பணிக்கின்றன .

இத்தகைய பல கோணல்களையும் உள்ளடக்கிய பூமிக்குக் கோணி என்றுதான் பெயர்வைக்கவேண்டியுள்ளது.

நாம் இனி வைக்கவேண்டாம். முன்னரே வைத்துத் தமிழில் அது
இன்னொளி வீசிக்கொண்டிருக்கிறது.  கோணி என்றால் அதன்
பொருள்களில் பூமியும் ஒன்றுதான்.

இயற்கையால், இறைவனால் வைக்கப்பட்டதனால், வையம், வையகம்;
தோன்றியதனால்:  பூமி. (பூத்தல் = தோன்றுதல் ). நிலைகொண்டிருத்தலால்: நிலம்.  உருண்டையானதால் : உலகு, உலகம்.  (உல் = உருண்டை, கு: விகுதி. ).  உணவு தருவதனாலும் நீர் தருவதனாலும் தரை. (தரு+ஐ = தரை). இங்ஙனம் சொற்கள் பல. அவற்றுள் கோணிக் கோணிப் போகவேண்டியிருப்பதால் அது
கோணியும் ஆகும்.


அடிக்குறிப்புகள்.

1.  நில் > நிற்சை (நில் + சை + அம் ):  நிற்சையம்   நிற்பது , நிலைபெற்றது, மாறாமை உடையது.  சை, அம் என்பன விகுதிகள்.
புளி  > புளிச்சை  (கீரை ).  சை  விகுதி.   அன் >  அனிச்சை .  அல் > அன் . (மோப்பம் .பிடிக்க அல்லாதது ).  இ > இச்சை :  இங்கு மோப்பம் பிடித்து வருவது : இகரச்  சுட்டு, இங்கு என்பது பெண்மை இடக்கர்  அடக்கல் .
இத்தகு சொற்கள் இப்போது பொதுப் பொருளிலே  வருகின்றன.

2.  விபத்து . இதன் முன் வடிவு: விழு பற்று.  ழுகரத்தை
எடுத்துவிட்டுப் பற்று என்பதை சிற்றூர்ப் பேச்சின்படி
பத்து என்றாக்கினால்,  விபத்து கிடைக்கிறது. இது
அப்படி அமைந்த சொல். பற்றுதல் : ஒரு தொல்லை
உங்களைப் பிடித்துக்கொள்ளுதல்; தொடர்தல், நடத்தல்.
விழுதலே பண்டை நாட்களில் விபத்து. இப்போது
விபத்துகளும் காரணங்களும் முன்னேறிவிட்டாலும்
நாம் இவற்றுக்குப் புதிய சொற்களைத் தேடவேண்டாமே. 

ஆன்மாவும் இறுமாப்பும்


இருப்பதோ உண்மை? இறப்பதே உண்மை!

இறுமாத்தல் ஏனோஇவ் வாழ்வில்

--- உருமாறிக்

கூட்டுப் புழுப்போல் குலைவாக்கம் 

காண்கிலம்

தீட்டிதான் மாக்குத் தெளி.


தீட்டிதான் மாக்கு =  தீட்டு  இது ஆன்மாவுக்கு .
கூட்டுப்  புழு :  cocoons 
குலைவாக்கம் :  ஒரு உரு குலைந்து இன்னோர் உருவை மேற்கொள்ளல்.
(கூடு  வீட்டுக் கூடுபாயும் ஆற்றல் இந்தப் புழுக்கட்கு உண்டு,   ஆனால் வரையறைக்குள் .)

Went to a funeral recently. These lines came up in my mind. Share these with you.

If not properly aligned, please see.  But  it comes well only in small font size.



இருப்பதோ உண்மை? இறப்பதே உண்மை!

இறுமாத்தல் ஏனோஇவ் வாழ்வில் --- உருமாறிக்

கூட்டுப் புழுப்போல் குலைவாக்கம்  காண்கிலம்

தீட்டிதான் மாக்குத் தெளி.



வினியோகம்

 வெகு திறமையுடன் அமைக்கப்பட்ட சொற்களில் வினியோகம் என்பதொன்று.  இதில் யோகம் இருக்கிறதே!  ஆம், பொருள் விலையின்றி விநியோகிக்கப்பட்டால், யோகம்தான். அதிக விலையானால் யோகமில்லை. அதுவன்று நாம் நுழைந்துகாண விரும்பியது, இப்போது யாது அது என்பதனை விரைவாக அணுகிவிடுவோம்.

வியன் என்பது விரிவு என்று பொருள்படும் ஒரு தமிழ்ச்சொல்.
"விரிநீர் வியனுலகு" என்ற தொடரை எங்குக் கண்டீர்கள் என்பதை
எண்ணிப்பாருங்கள். வியன் என்ற சொல்லோடு ஓகம் என்ற சொல்லைச் சேர்த்தால் அது வியனோகம் என்று வரும். அதாவது விரிவாக ஓங்குதல் என்பதே இதன் பொருள்.

பொருட்களை விரிவாகக் கொண்டு சேர்த்தல், வியன் ஓகம் ஆகும்.
அது விரிவு மிகு தன்மையைக் குறிக்கும்.  ஓகம் என்பதும் நல்ல‌
தமிழ்ச்சொல். ஓங்கு+ அம் = ஓங்கம்;  இதில்   ஙக‌ர‌ ஒற்று இடைக்குறைந்தால் அதுவே ஓகம்.  அதாவது மிகுதியாகுவது.  ஓகம் என்பது அகரவரிசைகளில் காணப்படும் சொல். அமைந்ததும் கூறியபடியே ஆகும்.

வியனோகம் என்ற கூட்டுச் சொல், பின் எழுத்து முறைமாற்று
செய்யப்பட்டது. விசிறி என்பது சிவிறி என்றும், மருதை (மருத நிலம் நிறைந்த ஊர் அல்லது நகர் ) என்பது மதுரை என்றும் மாறினும்  பொருள் மாறாமை போல், இந்த வியனோகம் என்பது வினயோகம்
என்று மாற்றப்பட்டு, பின்  0னகரம்  நிகரமாக மாற்றப்பட்டுச் சொல்
அமைந்தது.

1. எழுத்து நிரல்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  யனோ > 0னயோ.
2. 0னயோ > 0னியோ என்று மாற்றம்பெற்று, பலுக்குதல் (உச்சரித்தல்) எளிமைசெய்யப்பட்டுள்ளது.

வியனோகம் (பரக்க ஓங்குதல்) வினியோகமாகி, இப்போது
சேவையாற்றிக்கொண்டுள்ளது.

இதிலுள்ள வி என்பது விரிவுணர்த்தும்.

வியனோகம் > வினயோகம் > வினியோகம்.

இதை வெளியிடாமல் வி+ நியோக என்று பகுத்துப் பொருள் கூறிவிடலாம். அப்போது வந்தவழி மறைவுறும்.

புதன், 5 ஏப்ரல், 2017

இராக்கம்மா.

ராக்காயி, ராக்கம்மா.

இர் என்பது இருள் குறிக்கும் ஒரு தமிழ் வேர்ச்சொல்.

இர் > இருள்
இர் > இரா  ( ஆ விகுதி)
இர் > இரவு (  வு  விகுதி. அ இடைநிலை)
இர் > இரா + அத்து + இரி = இராத்திரி.
 (இரு> இரி: திரிபு.)
இர் > இரா > இராக்காட்சி > ராக்காச்சி. (இரவில் வந்து கடிக்கும்
ஒரு வகைக் கொசு )

இனி, இர்> இராமர். இர்> இராவணன். இர்> இராகுலன் (இரவில்
இயங்கிய போராளிக் கோட்டியினன் ) எனப் பல உள்ளன.

இரவையும் பகலையும் ஆக்குபவள் அம்மை. அத்தேவியின்
ஆற்றலைக் குறிக்கும் வண்ணம்,

இர் > இர்+ஆக்கு+ஆயி =  இராக்காயி > ராக்காயி என்ற‌
சொல் பிறந்தது. சிற்றூர் வரவு இச்சொல்லாகும்.

இர் > இர்+ஆக்கு+ அம்மா ‍=  இராக்கம்மா.

இர் > இர்+ ஆக்கு + இ = இராக்கி.

இரவு என்ற சொல்லின் "வு" விகுதியை எடுத்துவிட்டு அமைக்கப்பட்ட‌
சொற்கள் இவை. சொல்லாக்கத்தில் இத்தகு விகுதிகளை எடுத்துவிடுதல்
ஓர் உத்தியாகும்.

இரவில் பகலவன் இல்லை. பகவோனை அப்புறப் படுத்தி, இரவினைத்
தருபவள் அம்மை. அங்ஙனம் சொல்கையில், அம்மை முழு வல்லமையும் பொருந்தியவள் என்பது இச்சொற்களால் புலப்படுத்தப் படுகின்றது. சிவம் ‍எனற்பாலது செவ்வொளி. முருகனும் செவ்வொளியே. இங்கு நடுநாயகியாக விளங்குபவள், அம்மை அல்லது ஆதிபராசத்தி யாவாள்.

பேச்சாயி ( பேச்சுக்கு ஆயி ) என்ற அழகிய சொல்லமைப்புப் போன்றது
இது.

ரா= ராத்திரி; தா = (ஆத்)தா;  ஆகவே "ராக்தா" என்றோரு சொல்லை
ஆக்கி மக்கள் மன்றத்திலே உலவ விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? அதுவும் "பரவாயில்லை."

இறைமை ஒன்றுதான்; வெளிப்பாடுகள் அல்லது  முகிழ்த்திகள் (மூர்த்திகள் ) பலவும் நாமங்கள் ( நாவினால் விளிப்பவை) பலவும்
ஆயின.

Will edit to review autocorrect and third party interference after 5th inst.


செவ்வாய், 4 ஏப்ரல், 2017

Tamil words for legal pleading ( a brief view)

ஓர் உரிமை வழக்கை (civil pleading    )   பிறப்பிக்கும்  அமைவுரை, ஆங்கிலத்தில் "பிளீடிங்" என்றும் சொல்லப்படும். பீளீட் என்றால் "வேண்டிக்கொள்ளுதல்" "முறையிடுதல்" என்றும் சொல்லலாம்.

பழங்காலத்தில் "தெவ்வுதல்" என்றொரு சொல் வழங்கியது.  இதற்கு
மன்றாடுதல் என்று பொருள்.  மன்று = முறை வழங்கும் மன்றம்; ஆடுதல் = அங்கு முறையிட்டுச் செயல் வேண்டுவது.

ஆகவே தெவ்வுகை என்பதை மறுபயன்பாடு செய்ய முயலுதல்
நன்று ஆகும். இது "பிளீட்" என்பதற்கு நேர்.

பிராது என்ற சொல்லும் உள்ளது. இது "பிறப்பிப்பது" என்ற சொல்லின்
நடுச்சுருக்கு ஆகும்.  பிற~து என்று சுருக்கி, நன்கு ஒலிக்க வசதியாக,
பிறாது என்று ஆக்கியது ஒரு திறமைதான்.  அதைப் புரிந்துகொள்ளத்
திறனற்றோன், அது உருது, அதில் றகரம் போடக்கூடாது, ரகரமே வரும் என்று திருத்திப் பிராது ஆக்கினான். இஃது அறியாத் திருத்தம். அப்புறம்,
சின்ன வகுப்பில் சின்னவாத்தி சொன்னதையே பெரும்பட்டதாரி ஆனபின்னும் பற்றுமையுடன் பற்றிக்கொண்டிருந்த புலவன், உருது உருது என்றதால், உருது அகரவரிசைக்காரனும் அதை அங்கு எழுதி வைத்துக்கொள்வான். நீங்கள் உருது அகராதியைப் புரட்டினால் அது அங்குக்  காட்சிதாராது போமோ?

கண்போன திக்கற்றவன் "கபோதி" ஆனதுபோலவும் விழுமிய வாழ்க்கை ஆகுவது "விவாகம்" (வி +வா+ ஆகு+ அம்  )    ஆனதுபோலவும் பிறாதும் பிராது ஆகி வேற்றுலகச் சான்றிதழைப் பெற்றுவிட்டிருக்கின்றது.

இல்லறமே சிறந்தது. விழுமியது.  இதைச் சொல்லே சொல்கிறது.  இதைப்  பிறமொழி  என்றதில் இவ் விழுமிய பொருண்மை மறைவுண்டது.


திங்கள், 3 ஏப்ரல், 2017

ராட்டினம் என்ற சொல் அமைந்ததெவ்வாறு?

இராட்டினம் அல்லது ராட்டினம் என்ற சொல் அமைந்ததெவ்வாறு?

இவ்வியந்திரத்தை  ஏறுசுழலி என்றும் சொல்லலாம்.

இந்த "இராட்டினத்தில்" உள்ளீடாக இருப்பவை இரண்டு எளிய  சொற்கள் தாம். அவை இரு + ஆட்டு என்பன.

இன் + அம்  என்பன விகுதிகள்..  இன்  என்பது  உடைமைப் பொருளினதும்   ஆதலின் இங்கு பொருத்தமாகக் கையாளப்பட்டுள்ளது.

ஏறி அமர்ந்ததும் (அதில் இருக்கும்போது ) அது ஆட்டுகிறது. அதாவது
"விளையாட்டு" உண்டாக்குகிறது.  இச்சொல்லில் வரும் ஆட்டு என்றது "விளையாட்டு" எனற்பொருட்டு. ஆகவே இருக்கும்போது விளையாட்டு
உண்டாகும்படிச் சுழல்கிறது.

நாளடைவில் இச்சொல்லின் இகரம் கெட்டது. வெறும் ராட்டினம் ஆயிற்று.

புலவர்கள் பிற்காலத்தில் "ராட்டு" என்ற போலி முதனிலை கண்டு
மருண்டனர். பிறமொழிச்சொல்லாகவிருக்கலாம் என்று மயங்கினர்.

தமிழன் எழுத்துக்களை விழுங்கிவிடுவதைத் தமிழனே மறந்தான்.

பிற்காலத்தில் சுற்றும் வேறு சில இயந்திரங்களுக்கும் இப்பெயர்
பொருந்தியது. நூற்கும் இயந்திரம், நீரிறைப்பான் முதலியவையும்
இப்பெயர்க்குரியவாயின.

இரு என்ற இருத்தற்சொல், மிகவும் பயன்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக
இரு+ஆசு+ இ = இராசி என்பதில் "பற்றி நிற்குமிடம்" என்ற பொருளில்
சொல்லமைய, இரு என்ற சொல் உதவியுள்ளது காண்க. ஆசு எனில்
பற்றிக்கொள்ளல்.


அந்தம்

அந்தம் என்ற சொல் பற்றிச் சிந்தனையைச் செலுத்துவோம்.

இதை அறிந்துகொள்ள நாம் இன்னொரு சொல்லினைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அச் சொல்: " அன்றுதல்" என்பது. இதன்
பொருள் யாது என்பதை நாம் அகரவரிசைகளிலிருந்து அறிந்து கொள்வோம். இதன் பொருள்: மாறுபடுதல், கெடுதல், கோபித்தல், பகைத்தல் என்பன.

இது ஒரு சுட்டடிச்சொல். இ என்கின்ற இவ்விடத்திலிருந்து தொடங்கிய‌
ஒன்று, அ என்னும் அவ்விடத்துச் சென்று முடிந்துவிடுகின்றது. அவ்விடத்து முடியுமுன் அவ்விடத்தை "அடுத்துச்" செல்கிறது; அப்புறம்
முடிகிறது.  இதுகண்ட தமிழர், அணுகுதல், அடுத்தல், அன்றுதல் முதலிய சொற்களை அ என்ற சுட்டடியிலிருந்து உருவாக்கிக் கொண்டனர். இவை மூன்றும் உதாரணங்களே; இன்னும் ஆயிரக்கணக்கில் உள்ளன. (உது + ஆர்(தல்) + அணம் : உதாரணம், அணம் விகுதி).

அன்றுதல் : இதைப் பகுத்தால்,  அன் + து + தல்  என்று பிரியும். இவற்றுள்  அன் என்பதே முதனிலை அல்லது பகுதி; பிற விகுதிகளே.

அன்+ து = அன்று ஆயிற்று.

அன்று என்ற சொல் முடிந்துபோன நாளைக் குறிக்கிறது. அன்று அலர்ந்த‌
செந்தாமரை என்ற தொடரில் அன்று என்பது முந்தாநாளுக்கும் முந்திய‌
நாளைக் குறிக்கிறது. முந்தா = முந்திய.  முந்தாத என்று பொருள்படுகிற‌
முந்தா வேறு.

அன்று என்பது வினைச்சொல்லாகி, (அன்றுதல் ஆகி),  முடிதல் என்றும்
பொருள்.

அன்று என்பதை,  அன்+து என்று கண்டோம். இதையே அந் + து என்றும்
எழுதலாம் ; எழுதின் அந்து ஆகும்.  அந்து என்பதும் முடிவு குறிப்பது.ட்

அந்து :  நெல்லை அழிக்கும் (முடிக்கும்) ஒரு பூச்சி.
அந்தி :  பகல் முடியும் நேரம்.
அந்தில்:  அவ்விடம் (இங்கு சுட்டடிப் பொருள் மாறவில்லை)
அந்தரி:  முடித்துவைப்பவள்; தேவி.
அந்தரித்தல்: கெட்டொழிதல்.
அந்தன் : யமன்; உயிரை முடிப்பவன்; பார்வை முடிந்துபோனவன்.
அந்திய காலம் : முடிந்துபோகிற காலம்.
அந்தியர்: தங்கள் மேன்மை முடிந்து கீழ்மக்கள் ஆனவர்கள். அரசு வீழ்ந்தோர்.
அந்திரன்:  தேவன். மேலிறுதியில் உள்ளோன்.( இறுதி இருபக்கம்
அன்றோ!)

இப்படிச் சொற்கள் பல.

இப்போது சிவனை மறக்கலாகுமோ? அவனே எல்லாவற்றுக்கும் தொடக்கமும் இறுதியும் ஆனவன். அவனை:

அந்திவண்ணன்

என்போம்.  யாவற்றுக்கும் முடிவானவன்; முடித்து வைப்பவன்;  அந்தியின் நிறமே அவனுக்கும் நிறம்; சிவப்பு; சிவன்.

சிவந்தான் என்பது அவன் பழைய பெயர்.

இனி,அந்தம் என்பது தெளிவோம்.

அன்+து+ அம் = அந்தம். இது ஒருவகை மெலித்தலில் மெலித்தல்
ஆகும்.

வல்லொலி யாகிய றகரத்தை எடுத்துவிட்டு, தகரத்தைப் போட்டால்
அந்தம் என்றாகிறது.

தகரமும் வல்லொலி ஆயினும், நகர ஒற்றுடன் கூடி,   தன் வன்மையை
இழந்துவிடுகிறது.

முன் தி : முந்தி; பின் தி : பிந்தி ;    இன் து : இந்து என்பன காண்க.

இந்து: நிலா; இனியதாகிய நிலா. இன் = இனிமை; து: விகுதி.
"இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை!!"

இங்ஙனமே அன் து என்பது  அன்று என்றும் அன் து  அம் என்றுகூடி  அந்தம்
எனவும் வந்து மகிழ்விக்கின்றன.

previous post  on topic lost.
cursor jumps -  noted.  will edit.











ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

ஆதித்தன் ஆதியில் தன்னிலையாய் இயங்கியது

பூமி முதலிய கோள்கள் உருப்பெறு முன்னரே பகலோன் என்னும்
சூரியன் வான்வெளியில் தோன்றிவிட்டான்.  அவனிடத்து ஏற்பட்ட‌
ஒரு வெடிப்பின் காரணமாகவே பல துண்டுகள் பறந்து சுழன்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோளாகிவிட்டது . அதில் நம் பூமியும்
ஒன்று. இது ஒரு வானநூல் கருத்து. (தெரிவியல் :theory  தியரி என்பர்
ஆங்கிலத்தில். )

இதன்படி, சூரியன் ஆதியிலிருந்தான். அதிலும் தானே இயங்கினான்.
இப்போது இக்கருத்தை அவன் தன் பெயர்களுள் ஒன்றான ஆதித்தன்
என்பது நம் ஆய்வில் தெரிவிக்கிறதா என்று நுணுகி ஆராய்வோம்.

ஆதி: இது முதலில் இருந்தது என்பதைக் குறிக்கும். ஆகவே இந்த‌
வான நூல் கருத்தைத் தெரிவிக்கிறது.

ஆதித்தன் என்ற சொல்லில் அடுத்த சொல் " தன்" என்பது. ஆம்
தனியே தானாக இயங்கிக்கொண்டிருந்தது என்பதைத் தன் என்ற‌
சொல் நன்றாகவே தெரிவிக்கிறது.

எனவே ஆதித்தன் என்றால் ஆதியில் தன்னிலையாய் இயங்கியது
ஆதித்தன் ஆகிறது. இந்த அரிய சொல்லை இப்படி விளக்காமல்
வேறு மொழி என்று உரைத்து உண்மைக்குப் புறம்பான கதைகளைக்
கூறிக் குட்டை குழப்பாமல், ஆதி + தன் = ஆதித்தன் தமிழே என்றும்
அது அறிவியல் அடிப்படை உடைய சொல் என்பதும் அறிந்துகொள்ள‌
வேண்டும்.

இந்த அறிவியல் தெரிவியலை தமிழர் எங்ஙனம் அறிந்திருந்தனர் என்று
வினவலாம். இது தமிழரின் வானநூல் அறிவாழத்தை நன்கு காட்டுகிறதென்பதை ஒப்புக்கொண்டால் இக்கேள்வி எழாது. தமிழர்
அப்படி எண்ணினர்; அது சரியாக அமைந்துவிட்டது என்பதே சரி.