புதன், 31 மே, 2017

முதிர்வு. முது > முத்து > முத்தி

நாம் ஏன் நெடுநாள் வாழவேண்டும்? அப்படி உலகில் என்ன இருக்கிறது?
நாள்தோறும் வேலைக்குப் போவது,  அது முடிந்து வீட்டுக்கு வருவது,
சாப்பிடுவது, குளிப்பது, உறங்குவது, மீண்டும் எழுந்து வேலை....இதில்
என்ன இருக்கிறது! ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

கடவுள் ஏன் சிலருக்கு நூறு வயதையும் வேறு சிலருக்கு ஆறுவயதையும்
கொடுத்திருக்கிறான்? இதுவும் தெரியவில்லையா.......?

மனிதன் இறைவனை உணரவேண்டும். சிலருக்கு இவ்வுணர்வு ஏற்படுவதே
இல்லை. ஏற்பட நாள் ‍~   காலம் தேவைப்படுகிறது. இந்தக் காலத்தை
அவனுக்கு அருளி, இறைவனை உணரச்செய்தால்தான்  அவன் முத்தி பெறுதல் கூடும். எனவே அவரவருக்கு வேண்டிய கால அளவினை
அவனே அருளுகின்றான். இறைவனை உணர்ந்தவன் நெடுநாள் இங்கு
திரியவேண்டுவதில்லை. ஆகவே இறைவன் அவனை  எடுத்துக்கொள்கிறான்.

இவன் எப்போது கடவுளை உணர்ந்தான்? ஒன்றுமே அறியாதவன் ஆயிற்றே
என்று நீங்கள் கருதலாம்.  அது உங்கள் கருத்து. இறைவன் அறிந்த அனைத்தும் நீங்களும் அறிந்திருக்கவேண்டும் என நீங்கள் நினைப்பது தப்பு.

சிலர் விளம்பரம் உடையவராக இருக்கலாம்.  உண்மை அறிவுக்கு விளம்பரம் ஒரு சான்று ஆகாது. அறிந்தோனாகப் பலரால் நினைக்கப்படுபவர் ஒன்றுமறியாதவராக இறைவனால் தரம் அறியப்பட்டிருக்கலாம் அன்றோ?

இறைவன்பால் யார் உண்மைக் காதலுடையாரென்பதை அவன் அறிவான்.
அந்தக் காதல் இறையுணர்வின் முதிர்வு ஆகும். முது > முத்து > முத்தி.
இது பின் முக்தி என்று அழகுபடுத்தப்பட்டது ஆகும்.

செவ்வாய், 30 மே, 2017

கை தொடர்பாக எழுந்த சொல்வழக்குகள்

கை கால் தொடர்பாக எழுந்த சொல்வழக்குகள் உலகின்
எல்லா  மொழிகளிலும் காணப்படுவனவாகும்.. ஆங்கில
 மொழியில் கையை அடிப்படையாக வைத்து "ஹேண்டல்"
 (handle)  என்ற சொல் உள்ளது, ஊழியர்களைக் குறிக்க
மலாய் மொழியில்  "காக்கிதாங்ஙான்" என்ற‌ தொடர்
பயன்படுத்தப்படுகிறது. இதன் மொழிபெயர்ப்பு
 "கைகால்கள்" என்பதாகும். ஏனை மொழிகளையும் எண்ணிப்
 பட்டியலிட்டால் இன்னும் மிகுதியான செய்திகள் கிட்டும்.
 சில உதாரணங்கள்போதும்.

எண்ணம் நிறைவேறும்  என்பதற்கு " எண்ணம் கைகூடும்"
 என்றும் சொல்லலாம்.  ஒன்றைச் செய்தலைக் 
"கையாளுதல்" என்று  குறிக்கிறோம்.  இனி
 "கையகப்படுத்துதல்" என்ற வழக்கும்
கவனத்துக்கு உரியதாகும்,  ஒருவனைக்
 காவல் துறையினர்  பிடிப்பதை "கைது:" என்ற
 சொல்லாற் குறிக்கிறோம். இச்சொல் மிக்க எளிதாக 
து விகுதி மட்டும் சேர்த்து அமைக்கப்பட்டதாகும்.
பிடித்தல் என்பதும் கைது என்பதும் கை தொடர்பான
 சொற்களாகும். கைது என்பதை அரெஸ்ட்
 என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரானதாகப் 
பயன்படுத்துவர்.

கைம்மை, கைம்பெண் என்பனவும் கையடிப்படையில்
தோன்றியவை. கையறுநிலைத்துறை,  கையறவு என்ற
 இறப்பு, இரங்கல் குறிக்கும்பதங்களும் விளக்கத்துக்குரியவை.
 கை என்பது பக்கம் என்றும் பொருள்தரும்.   "அந்தக் கையில்
 இருக்கிறது" என்று குறிக்குங்கால் கை என்பது பக்கம் என்று பொருள்படுகிறது..

கைக்கூலி, கையூட்டு என்பன வழக்கில் ஊழல் குறிப்பவை.

கை என்ற சொல்லுடன் கூடிய சொற்கள் மிகப்பல.

அவற்றை அவ்வப்போது கண்டு மகிழ்வோம்.
அவற்றைப் பயன்படுத்தி இறவாமல் காப்பது
 தமிழறிவினார் கடன் ஆகும்.

ஞாயிறு, 28 மே, 2017

நேற்றுளார் இன்றோ இல்லை,

நேற்றுளார்  இன்றோ இல்லை,
நினைவினில் மட்டும் உள்ளார்!
கூற்றிலே பேரைக் கேட்டோம்
கூடிட வாய்ப்பே இல்லை!
ஆற்றிலே ஓடும் வெள்ளம்
அதுதனில் மூழ்கி மாய்ந்தார்!
ஈற்றிலே சென்று வீழ்தல்
இயல்பினுக் கென்ன செய்வோம்!

விளக்கம்:

கூற்றிலே ‍~  பிறர் கூறுதலிலிருந்து;
கூடிட ~ மீண்டும் கூடிப் பேச;
ஈற்றிலே ~  இறுதியிலே;
இயல்பினுக்கு ~  இயல்பு ஆகும்; அதற்கு....



Please note that our  internet postings are actively being blocked.
Please wait until current blocking activities cease.

சனி, 27 மே, 2017

poruL பொருள்: இச்சொல் எப்படி உருவானது?

சில வேளைகளில் பல பொருட்கள் வந்து  முன்
தோன்றுவதால், எதை எழுதுவது என்று தயக்கம்
 ஏற்படுகிறது. என்ன செய்யலாம்?  பொருள் என்ற
சொல்லையே விளக்குவோம். இதை யாரும் விளக்கி
நான் படிக்க‌ வில்லை. அவர்தம் விளக்கம் இருப்பின்,
 எமக்குத் தேவையுமில்லை. நீங்கள் அறிந்திருப்பின்
 பின்னூட்டம் இட்டு மேலும் ஒளிரச்செய்யலாமே.   பிறர்  அறிய !

பொருள்:

இதன்  மூல‌ அடிச்சொல் :  பொள் என்பது.

பொள் > பொள்ளுதல்  (=  பொல்லுதல் )
Present meaning: பொந்து, பொத்தல், கிழிதல், துளைத்தல்.

பொள் >  பொளிதல் : இடித்தல், செதுக்குதல்,
துளையிடுதல், உளியாற் கொத்துதல்.


பொள் > பொது  ,(இது பல பொருளும் கலந்திருக்கும்
நிலை. இச்சொல்லுக்கு மனிதர்களையும் பொருள்களாகவே
கொள்வோம்  மனிதனைக் குறிக்கையில் மக்கள், மகன், மகள்
என்பவவற்றை ஏற்ப‌ இணைப்பதே  வழியாகும்)

பொள் > பொது > பொதி :   பொதிதல்.
 ( பொருளை அல்லது பொருள்களை உள்ளிடுதல்.

ஆதிமனிதன் மண்ணிற் துளையிட்டு, கைக்குக்
கிடைத்த பொருளை அந்தத் துளைக்குள் பொருத்தி
 மூடிவைத்தான். பொருத்தி உள்ளே வைத்தான். அது
 பொரு உள்  ஆனது, "பொருள்" ஆயிற்று.  இப்படி
உண்டான சொல்லே பொருள் என்பது.  இதனால்தான்
தமிழ் மிகமிகப் பழங்காலத்து  மொழி என்கிறோம்.
 வீடு, வாசல் வங்கி கிங்கி எல்லாம் காணப்படாத
காலத்து மொழி..

பொரு+ உள் =  பொருள்.

பொருத்தி உள்ளிட்டு பின் மீட்கப்படுவது பொருள்.
 இதுதான் அதன் மூல விளக்கம்

உள் பொதிந்து கட்டினால் அது மூட்டை.  துணியில்
வைத்து மற்றவற்றைக் கட்டும்போது தலைப்புகள்மூ
ட்டப்பெறுவதலால் மூட்டை ஆகிறது.)

(மூட்டைப்பூச்சியில் வரும் "மூட்டை" என்பது
 வேறு. )

பொள் > பொரு.

பொரு> பொருந்து.  (பொரு+ து ).(  வினைச்சொல் ஆக்கம்.)

பொரு+ உள் =  பொருள்.

இனி நேரம் கிட்டுகையில் தொடர்வோம்.  இதில் உள்ள
 விளக்கம் மிகவும் குறுக்கம்.  பின் பெருக்கிக் காட்ட
 எண்னம்.

BEEF EATING POPULATIONS

இது  மாட்டிறைச்சி உண்ணல், இந்தியாவின் நிலைமை பற்றிய  இந்து
தாளிகையின் ஓர் ஆய்வு ஆகும்.  படித்து இன்புறுவீர். தமிழ் நாடு மாநிலத்தில் இவ்வுணவுக்குத் தடை இல்லை என்று தெரிகிறது.

http://www.thehindu.com/news/national/‘More-Indians-eating-beef-buffalo-meat’/article16085248.ece



வியாழன், 25 மே, 2017

நிமையம் for minute.

இன்று நிமிடம் என்ற சொல்லை ஆராய்வோம்.

நிமை என்பது இமை. கண்ணின் இமை.  ஒருமுறை இமைகளை மூடித்
திறப்பதற்கும் அடுத்தமுறை அதைச் செய்வதற்கும் இடைப்பட்ட நேரத்தையே நிமிடம்  என்றனர்.  நிமை இடு அம் என்பவை இணைந்து
நிமிடம் ஆயிற்று. நிமை என்பதில்  ஐ கெட்டது. நின்ற மிச்சம்
நிம்.
இதனோடு இடு சேர்க்க, நிமிடு.  அம் விகுதி வர, டுவில் உள்ள  உகரம்
கெட்டது. ஆக,  நிம்+இட்+அம் ஆகி, நிமிடம் ஆனது.

இதை இப்படி விளக்க தொல்லைப்பட வேண்டியிருப்பதால், நிமையம்  என்னும் புதிய சொல் படைக்கப்பட்டது.

மினிட் என்பதை நிமிடம் என்றோ நிமையம் என்றோ சொல்லலாம்.

பிரபஞ்சம். = உலகம்


பிரபஞ்சம். இதன் பொருள் உலகம் என்பது. என்ன அழகான சொல். ஆனால் இது ஒரு பிற்காலப் புனைவு. குமரிகண்டத்துச் சொல் அன்று.
அதன் பின் உண்டாக்கப்பெற்று அழகாகத் தோன்றுவதாகும்.

பிறப்பு அஞ்சு. அஞ்சு என்றால் ஐந்து. ""க்கு ""வும் "து"வுக்குச் "சு"வும் வந்தன. பார்த்தீரா. இது சிற்றூரான் பேச்சுச் சொல். பிறப்பு என்பது இயல்பான தமிழ்ச்சொல்தான். இதிலென்ன விந்தை (மேஜிக்)?

பிறப்பஞ்சு? நிலம், தீ, நீர், வளி, விசும்பு ஆக ஐந்தும்தாம் முதலில்
கடவுளால் படைக்கப்பட்டன. ஆகவே பிறப்பஞ்சு என்பது ஓருண்மை.
நம்பான் கடவுள் எங்கே படைத்தார் என்பான். பாலில் நெய் தெரிகிறதா?
அது விரிக்கப் பரக்கும் ஆதலின், விட்டுவிடுவோம்.

பிறப்பஞ்சு > பிறபஞ்சு > பிறபஞ்ச!!

சொல்லில் வலிக்கும் பகர ஒற்றை எடுத்துவிட்டால் பிறபஞ்சு என்றாகும். இறுதியில் நிற்கும் உ‍~வைத் தூக்கி எறிக. அதற்குப்பதில் ஒரு அ‍~வை இடுக. இப்போது மீதமிருப்பது பிறபஞ்ச.

இனி என்ன? வேலை முடிந்துவிட்டதோ? இல்லை. சொல்லை
அழகுறுத்த (பாலிஷ்போட‌) வேண்டும்.

பிறபஞ்ச >பிரபஞ்ச + அம் > பிரபஞ்சம்.

சிறு சிறு வனைவுகள்தாம். குயவன் பானை வனைதல் போல.

அழகான சொல் கிடைத்திருக்கிறது.

ப்ரபஞ்சமெல்லாம் பெய்யே என்பது ஒரு பழைய திரைப்பாட்டு.

பிரபஞ்சம் என்பது தமிழன்று. பிறப்பு: செந்த‌மிழ்; அஞ்சு : பேச்சு
த்தமிழ்; ஆகவே பிறப்பஞ்சு என்றால் செந்தமிழும் பேச்சுத்தமிழும் கலந்த கலவை. அதைப் பின்னும் செதுக்கியும் பிதுக்கியும் பிரபஞ்சம் என்பது கொடுந்தமிழ். பின்னும் ப்ரபஞ்ச என்பது பாகதப்பாணி. கொடுந்திரிபுகளால் செந்தமிழ் என்ற நிலையைக் கடந்துநிற்பது.


இயற்சொல், திரிசொல், வடசொல், திசைச்சொல் என
இவையனைத்தும் செய்யுள் ஈட்டச்சொற்கள் என்பார்
தொல்காப்பியனார். இவற்றுள் வடசொல் என்பது:

வடம்: கயிறு,  ஆலமரம்,  ஊர், வட்டம் என்று பொருள்.
வட்டாரத்தில் ஆலமரத்தடிகளில் மந்திரமொழியானது
வடமொழி எனப்பட்டது. வடமரமென்பது  ஆலமரம். தமிழ்
நாட்டின் வடக்கில் வழங்கிய மொழி என்றும் பொருள்படும்.
சமஸ்கிருதம் வடக்கில் மட்டும் வழங்கியதன்று. தெற்கிலும்

வழங்கிற்று. சமஸ்கிருதத்தைச் சங்கதம் என்பதே சரி.

வடமென்பதற்கு  ஏன் வட்டம் என்ற பொருள் உண்டு என வினவின்,
வட்டம் என்பதில் டகர ஒற்று எடுக்கப்பட்டால் வடம் என்று இடைக்குறை ஆகிவிடும். செய்யுளில் வட்டமென்பதை வடமென்றும்
பயன்பாடு கொள்ளலாம். எதுகை மோனை நோக்கிச் செய்வர்.

வடத்தடியில் கிளக்கப்படுவது வடசொல் ஆகும்.


You may be able to get more information from:   http://sivamaalaa.blogspot.com/2015/12/blog-post_10.html

Also see:https://sivamaalaa.blogspot.sg/2015/10/etc.html
;















புதன், 24 மே, 2017

மான்செஸ்தர் மாநகரில்.....


மான்செஸ்தர் மாநகரில் மாய்வு விளைத்தோர்தம்
கூன்சிந்தைக் கென்னநாம் கூறுவோம் ~~ வான்சிந்தும்
மாரியும் கண்ணீராய் மாறிற்றே சோரரும்
பாரில் திருந்தலெந் நாள்.


கூன் = குறையுடைய‌
மாய்வு =  மரணம்
மாரி = மழை;
சோரரும் =  மறைந்து குண்டு வைத்தோர்

செவ்வாய், 23 மே, 2017

விஷேஷம் விசேஷம் -. மிகவும் "விசேஷமான" சொல்

விஷேஷம்  விசேஷம்  விசேடம்  விழேடம்

சிறப்பான என்ற கருத்தை வெளிப்படுத்த ஒரு சிறப்பான
சொல் வேண்டும். நாம் விழுமியதாக எடுத்துக்கொள்ளத்
தக்க ஒரு சொல் வேண்டும். அதை எப்படி அமைப்பது
என்று ஓர்ந்தனர் (யோசித்தார்கள்). ஓர்ந்து இங்ஙனம்
அமைத்தனர்.

விழுமிய = சிறப்பான.  இதிலிருந்து விழு என்கிற
அடிச்சொல்லை எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்து,
 அதை விஷு என்று மாற்ற வேண்டும்.

அடுத்து "எடுத்துக்கொள்ளுதல்".  எடு+ அம் = ஏடம்
என்று ஆகும். இது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
முதலெழுத்து நீண்டு அமைகிறது.  சுடு+ அம் = சூடம்
என்பதுபோல. இன்னும் எடுத்துக்காட்டுகள் உள்ளன.
 அவை இருக்கட்டும்.  ஒரு பானை
சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம்!

இனி, ஏடம் என்பதை ஏஷம் என்று மாற்றவேண்டும்.

விழு+ ஏஷம் = விஷேஷம்,  இப்படிச் சொல் அமைகிறது.

இதை முன்னரே விளக்கி எழுதியிருந்தேன்.  தானே
 உணர முடியாத‌ மடையன் பகர்ப்புச் செய்வதற்காகக் கள்ளமென்பொருள்மூலம் அதனை
அழித்துவிட்டான். அவன் தொலையட்டும்.

இப்போது ஓர் அழகான சொல் உங்களுக்குக் கிடைத்
துள்ளது. அதுதான் விஷேஷம் என்பது. மிகவும்
விஷேஷமான சொல்.  விழு+எடு+அம்=
விழேடமான சொல். இந்தச் சொல்லின் உள்ளீட்டு
அழகினைச் சுவைத்தபடியே நீங்கள் கொழுந்துநீர் ( டீ )
குடித்து மகிழ்வீராக.


Internet connections are not in good state.  Will edit later.

திங்கள், 22 மே, 2017

ரப்பர் எஸ்டேட் -தோட்டக் காடு

தோட்டம் என்பது என்னவென்று ஏறத்தாழ எல்லாத்
 தமிழருக்கும்  தெரியும். காடு என்ற சொல்லும்
அப்படியே.

ரப்பர் எஸ்டேட் என்ற ஆங்கிலத் தொடரை, இங்குள்ள தமிழ்ப்
பத்திரிகைக்காரர்கள்   ரப்பர்த் தோட்டம் என்று மொழிபெயர்ப்பார்கள்.
ரப்பர் என்ற பொருளை விளைவித்துக் கொடுத்ததில் உலகில்
 பெரும்பங்கு இந்தியர்,     அதிலும் தென்னிந்தியருக்குச் சாரும்
என்பது சொல்லித் தெரிய வேண்டாதது ஆகும்,

ரப்பர் என்பதை இரப்பர் என்று எழுதலாகாது என்று பேராசிரியர்
சில‌ர் கருதுவர். இரப்பர் எனில் பிச்சை எடுப்பர் என்று
பொருளாகிவிடும் என்ற அச்சம் காரணமானது.

அறிஞர் பாவாணர், இதற்குத் தேய்வை   (rubber  )  என்ற ஒரு
 சொல்லை உருவாக்கினார்.

பேச்சுத் தமிழில் ரப்பர் எஸ்டேட் என்பதற்குத் தோட்டக் காடு
என்று சொல்வர். தோட்டம் வேறு, காடு வேறு எனினும்
தோட்டக்காடு என்று சொல்வோர் இன்னுமுளர்.

ஒரு மலேசியப் பத்திரிகையை வாங்கிக்கொண்டிருந்ததைப்
பார்த்த ஒரு தமிழர் அதில் எல்லாம் "தோட்டத்துச் செய்தி"
என்றார்.

இங்ஙனம் பேச்சுத்தமிழ் சொந்தச் சொல்தொகுதியை
உடையதாய் உள்ளது.  ஆனால் பெரிதும் ஆங்கில மொழியின்
தாக்கத்தால் இப்படிச் சொற்களையும் சொற்றொடர்களையும்
படைக்கும் ஆற்றல் மக்களிடையே குறைந்துவருகிறது. கங்காணி மறைந்துவிட்டார்; அவருடைய இடத்துக்கு "சூப்பர்வைசர்" வந்திருக்கிறார்.

Here we have illustrated  how in Spoken Tamil people fix somewhat conflicting
terms together to name a new development. An estate which looked more like a 
jungle with regard to the growing vegetation therein  but belonged to an entity 
which wanted the place developed in that manner instead of as a beautiful garden... 
People had to work in order to maintain that place in that way.  
What a fitting description!

Some errors keep on resurfacing in this post. Reasons not known. Will  review.
We have corrected  a few times.





ஞாயிறு, 21 மே, 2017

எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருந்தால்....................

முந்தாநாள் காலை நேரம் வீட்டிலிருந்தேன். அப்போது இரண்டு இந்தியர்கள் வீட்டின்முன் வந்தனர். ஒருவர் கத்தி
வைத்திருந்ததுபோல் தெரிகிறது. நான் வெளியில் செல்லாததனால்  தப்பித்தேன். வெளியில்  சென்று என்னவென்று கேட்டால் அணிந்திருந்த சங்கிலி பறிபோவதுடன்  கதவைத் திறந்துகொண்டு வெளியில் செல்லவேண்டுமென்பதால்,  அப்போது அவர்கள் வீட்டுக்குள்
நுழைந்துவிடலாம் அல்லவா?

ஆகவே அவர்களை  உள்ளிருந்தபடியே கவனித்துக்கொண்டு காவல் துறையை அழைத்துவிட்டேன்.  இந்த இருவரும் பார்த்தா ர்கள்.

கதவைத் திறக்கச் செய்யவேண்டுமே!   ஆகவே வீட்டின் முன் வளர்ந்திருந்த    வேப்பமரத்தின் கொம்புகளை வெட்டினார்கள். அப்போதும்
யாரும் வெளியில் செல்லவில்லை. அதற்குள் காவல்துறையினர் வந்துவிட்டதால், அப்புறம் நடந்ததை அவர்கள் விசாரித்தார்கள்.

இதுபோன்று செய்வோர் பலரும் திருடர்கள். எல்லோரும்
வீட்டுக்குள்ளேயே இருந்தால் அவர்களுக்குப் பிழைப்பு ஓடவில்லை.  ஆளிருக்கும்போது உடைத்துக்கொண்டு உள்ளே செல்வதென்பதும் அவர்களுக்கு இயலாது. ஆகவேதான் இந்தத் தந்திரம்
கையாளப்படுகிறது.

ஒரு சாவு வீட்டுக்குப் பூமாலை உட்பட  வே ண்டிய பொருட்களுடன் சென்று, பிணத்துக்குக்  கும்பிடு போட்டுவிட்டு,  அங்கிருந்த பெண்மணிகள் ஆடவர்கள்
ஆகியோரின் நகை, பணம் முதலியவற்றைப் பிடுங்கிக்க்ண்டு போன திருடர்களும் இருக்கிறார்கள்.

will edit


சனி, 20 மே, 2017

தீவனம்

காலநடைகள் தின்பதற்குத் தீவனம் தரும் வசதிகள் விவசாயிகளிடையே குறைவாகிவிட்டதென்று தாளிகைச்
செய்திகள் கூறுகின்றன. இந்தத் தீவனமென்னும் சொல்லைத்
தீ+வனம் என்று பிரிப்போமானால் பொருளற்றதாகிவிடுகிறது.

தீவனம் என்பது தீனியைக் குறிக்கிறது. தீனி என்பது தின்+ இ என்று பகுதி விகுதிகள் இணைந்து முதனிலை நீண்டு பெயராகிறது. தீவனம் என்பது தின்பன என்ற சொல்லிற் பிறந்தது ஆகும்..

தின்பன >  தீபன  > தீவனம் .

முதலில்  னகர ஒற்று க் குறைந்து முதல் நீண்டது.
பகர வகரத் திரிபு பெருவழக்கான  திரிபுதான்.

அகர இறுதி தமிழில் பெரும்பாலும் அம் விகுதியுடன் வருவது
பெரிதும் காணப்படுவதே ஆகும்.





ரு 

வெள்ளி, 19 மே, 2017

கூம்பு குவி கும்பம்.

சாவு என்ற வினை பெயராகும்போது, அம் விகுதி இணாந்து  அது சவம்
என்றாகும் என்பதை, ஒன்றன்று ~~  சில இடுகைகளிலாவது தெரிவித்திருந்தேன். அதைப் படித்து மகிழ்வெய்தியிருக்கின்ற நேரத்தில், அவ்வப்போது வேறு சில உதாரணங்களையும் தந்திருந்தேன்.

இப்போது மற்றுமோர் எடுத்துக்காட்டினை வழங்கும் சித்தமுடையேன்.
அது வருமாறு.

கூம்புதல் என்பது வினைச்சொல்.  அது அம் விகுதி ஏற்குங்கால்,
கூ என்ற நெடிலானது குகரமாய்க் குறுகுதல் அறிந்துகொள்க. சாவு
என்பதன் நெடில் சகரமாய்க் குறுகுதல்போலவேயாம்.

கூம்பு >  கூம்பு+அம் > கும்பம்.

படி + அம் = பாடம் என்பது இதற்கு மாறான எடுத்துக்காட்டு ஆகும்.
இங்கு முதனிலை நீண்டு, படி என்பதன் ஈற்றில் நின்ற இகரம் கெட்டு,
பாடமாயிற்று. ஒரு நூலைப் படிப்பது பாடம். இனி,  இறந்த‌
உடலைப்  "பாடம் பண்ணுவது" என்ற வழக்கும் உள்ளது. அது கெட்டுப் போய்விடாமல் இருக்க, அதன் .    உள்ளும் புறமும் படியுமாறு
பூசப்படும்.   அம்  மருந்தைப்  பூசுதலைப்   பாடம் பண்ணுதல் என்பர். பாடம் பண்ணுதல் என்பது பேச்சுவழக்கில் உள்ளதாகும். ஒன்றை நெட்டுருச் செய்தலை "மனப்பாடம் பண்ணுதல்" என்ற வழக்கும் உண்டு. மனத்திற் படியுமாறு செய்தலிதுவாகும்.

 போயிலை பாடம் பண்ணுதல் என்பதும் வழக்காகும்.

கூ என்பது இவ்வாறு மட்டுமின்றி,  கு என்று குறுகி, வி என்னும்
விகுதி பெற்று, குவி (குவிதல்) என்றுமாகும்.

கூ+பு = கூம்பு (கூம்புதல்).
கூ + வி = குவி > குவிதல்.

இனி மீண்டும் சந்திப்போம்.

வியாழன், 18 மே, 2017

Attack on our computer systems

Yesterday there was a virus attack on our computer that was in use. This has now been
repaired and it is running well.

But when writing an introduction to the term parikaram, the cursor and the typed paragraph
went missing all of a sudden..  Hence had to suspend the activity;

Considering using paper drafts and then get them typed.

Please inform us of any unusual activity .  Thank you,

தூ தூசு

காசு என்பது காக்கப்படுவது.  அதனால் அச்சொல்லை அமைத்தவர்கள் காத்தல் என்னும் பொருளுடைய  "கா" என்ற
ஓரெழுத்து ஒருமொழியாக இலங்கும் வினைப்பகுதியிலிருந்தே அதனை
அமைத்தனர். இதேபோன்று அமைந்த இன்னொரு சொல்லைக்
கண்டு இன்புறுவோமே.

பல சொற்கள் மொழியில் உளவேனும் சொல்லமைப்பு முறையை
அறிந்துகொள்வதற்காக, இன்னும் ஒன்றிரண்டை ஆய்ந்தால்
பொருத்தமாகவிருக்கும். இதற்குத் தூசு என்ற சொல்லைத்
தேர்ந்தெடுத்துள்ளோம்.

தூசு என்பது தூசி என்றும் வழங்கும்.  இங்கு சு என்னும் இறுதிநிலையை நாம் நோக்குவதால், "தூசியை"த்  தற்போது ஒதுக்கிவைப்போம்.

தூ என்பது தூவுதல் குறிக்கும் சொல். இரண்டு நாள் நம் கண்ணாடி நிலைப்பேழையைக் கவனிக்காமலிருந்துவிட்டால் தூசு படிந்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. நம்மையும் அறியாமல் இது தூவப்படுகிறது. இந்த வேலையைக் காற்று செய்கின்றது என்று நினைக்கிறேன். எப்படியோ தூசு தூவப்படுதல் உண்மை.

எனவே தூ என்ற அடியிலிருந்து தூசு என்ற சொல் பிறக்கிறது.தூ>  தூவு.  தூ> தூசு..

மற்றவை பின் .

தூ தூசு

புதன், 17 மே, 2017

காசு என்பது காக்கப்படுவது.

விரும்பாத எதனையும் எந்த மனிதனும் காத்து வைத்துக்கொள்ளுதலில்
ஈடுபடான்.  ஓர் ஆடவன் ஒரு பெண்ணின் அழகில் மயங்கி அவளைத்
தன்வயம் வைத்துக்கொள்ளவிரும்புகிறான். அதுவே காதல். இங்கு
வினைப்பகுதி யாவது "கா" என்பதே. அப்பெண் அவனைக் கவர்கிறாள்.
கா > கவ, கவ+ அர் = கவர். கா என்பது கவ் என்று திரியும். கவ் > கவ்வு. ஒன்றைக் காத்து எடுத்துக்கொள்வதாய் இருந்தால், இருபக்கமும்
நெருங்கி வந்து பொருளை அகப்படுத்தவேண்டும். அதைத்தான் எலும்பைக் கவ்வுகையில் நாய் பூனைகளெல்லாம் வாயால் செய்கின்றன.
கவை, கவடு என்ற சொற்கள் பலவற்றையும் விளக்கலாம் என்றாலும்
நம் இருவருக்கும் நேரம் போதாது.  காமம் என்பதும் கா> காம் > காமுறு என்பதும் காம் > காமம் என்பதும் இந்தக்காவில் வளர்ந்த‌
தமிழ்ப்பூக்களே. அறியார் பிறமொழி என்று அலமருவர்.


இவற்றை எல்லாம் முன்னரே இணைய தளங்களில் எழுதியதுண்டு.
அங்குக் கண்டின்புற்றிருப்பீர். இப்போது காசு என்பதை மட்டும்
ஆராய்வோம். மிக எளிமையான தமிழ்ச்சொல்.

வெண்பாவின் இறுதிச்சீர் காசு என்னும் வாய்பாட்டிலும் முடிவதுண்டு.
காசு என்பது மிகப் பழையசொல்.

காசு என்பது காக்கப்படுவது. அதனாலே அது சு விகுதி பெற்று காசு
ஆயிற்று, காசுக்கும் காதலுக்கும் நமது நூல்கள் தொடர்பு காட்டமாட்டா.  ஆனால் சொல்லமைப்பில் இரண்டும்    கா - ‍ காத்தல்
என்னும் அடியாகப் பிறந்த சொற்களே.

தலைப்பு: காசு என்பது காக்கப்படுவது.


செவ்வாய், 16 மே, 2017

எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் மேல் ஊழல்.....

எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் மேல் ஊழல் மற்றும் வருமான வரிச்
சட்டங்களின்கீழ் விசாரணையைப் பாய்ச்சுவதென்பது, மக்களாட்சியில்
எதிர்க்கட்சிளை ஒடுக்குவதென்று சில நாடுகளில் கூறுகிறார்கள். இதை
ஒத்துக்கொள்ள முடியவில்லை. எந்தக் கட்சியாயினும், விசாரிக்கவேண்டி நேர்ந்தபோது துவளாமல் விசாரிப்பதே சரியாகும். எதிர்க்கட்சிகளை விசாரிக்கக்கூடாது என்றால், அவர்கள் குற்றங்களில்
ஈடுபடும்போது விசாரிக்க இயலாமற் போய்விடுமே.  அப்புறம் என்ன‌
சட்டம், என்ன நீதி?  அதைப்பற்றிய கவிதை இது:

தூணாவர் மக்களாட்சிக் கெதிர்க்கட்சி என்று
தோன்றியதோர் தூயகருத் தொலித்திடுவர் நாட்டில்:
மாணாத செயல்களினால் மனம்கெட்டு மாட்டி
மக்கள்தரு ஆதரவை மாயுறுத்தும் காலை,
ஓணான்போல் பார்த்தபடி உட்கார்ந்தி ருக்க‌
ஒல்லுவதோ அரசினர்க்கு? கொள்ளாமை கண்டு
நாணாமல் அவர்களையே ஞாயமன்றில் ஏற்றல்
நல்லரசு எந்தநாளும் செல்லுவழி ஆமே.

மெசோபோட்டேமீயா,( "மிசைப்போதுமேய" )

வெள்ளைக்கார ஆய்வாளர்கள் ஆய்வினில் மெசோபோடேமியா என்ற‌
கூட்டுச்சொல் (Mesopotaemia   ) ஈராற்று நாடு என்று பொருள்படுவது
ஆகும். எனினும் வேறு காரணங்களாலும் இப்பெயர் வந்திருக்கக்
கூடுமென்பதை அவர்கள் ஆய்வு செய்தார்களில்லை.  தமிழ்மொழி அல்லது பழந்தமிழ் வழங்கிய பண்டை நிலங்களில் மெசோபோட்டேமியா வு ம் ஒன்று.

மெசோபோட்டேமியா என்பது மிசைப்பொழுதுமேவிய நாடு ஆகும். இதில் பொழுது என்பது போது என்று திரியும். மேவிய என்பது
மேய என்றும் திரியும். ஆகவே இற்றைத் தமிழில் "மிசைப்போதுமேய" என்று இதை வாசித்தாலும் மெசோபோட்டேமீயா,(  "மிசைப்போதுமேய" ) என்பதனோடு ஒலியொற்றுமை உடையதாகவே இலங்குவதாகும்.

பேச்சுத்தமிழில் சொல்வதானால், "சரியான வெயில் கொளுத்தும்
இடம்" என்று பொருள்தரும். ஆறுகள் எங்கும் உள்ளன. அது
ஒரு சிறப்பாகக் கூடுமென்றாலும், அங்கு வெயிலே வாட்டிவதைத்துச் சிறப்பை அடைந்துகொள்வது என்பதை
அறியவேண்டும். வெள்ளைக்காரனுக்குத் தமிழ்த் தெரியாத‌ காரணத்தால் அவனிதை ஆராயவில்லை. மேலும் தமிழர்கள் அங்கு அணிமையில் இருந்தனராதலின், இதுவும் பெயர்க்கொரு காரணமாதல் கூடுமென்பதை நுழைந்தாய்ந்திருக்க வேண்டும்.      அவன்
வகுப்பில் சொல்லிக்கொடுத்ததே வேதவாக்கு ஆகிவிடாது.

மிசை : மெசோ;  போடே: போதே (பொழுதே);  மியா:  மேய; மேவிய .  அதாவது:  மேலே, வெயில் (பொழுது); மேய: கொளுத்துமிடம்.

ஈராக் என்பதும் ஈராற்று, ஈராத்து    (ஈராக்கு ) என்பதனோடு ஒற்றுமை உடையது.
ஈராறுகள் ஓடும் நாடு.

அறிந்தின்புறுவீர்.


திங்கள், 15 மே, 2017

உவமை உவமானம் உவமேயம்

உவமை என்பது தமிழ். ஆனால் உவமானம் உவமேயம் என்பன‌
பற்றிச் சிலருக்கு ஐயப்பாடு உள்ளது.

உவமை + ஆன +  அம்( விகுதி )   : உவமானம்.

அதாவது, உவமைதான் உவமானம்.  இந்தச் சொல்லில்,  "ஆன"என்ற சொல் வந்து,  புணர்ச்சியால் மான என்று தோன்றுகிறது.  இதில்
மானம் ஒன்றுமில்லை. கற்பனையாக, உவமிக்கப்படும் பொருளின்
அளவு (மான ) என்று சொல்லலாம். இதிலொரு புதுமை இல்லை.

பெண்ணுக்கு உவமை மயில். அதுவே  உவமை.  உவ  என்பது
உ என்னும் சொல்லிற் பிறந்தது. முன் நிற்பது என்று பொருள்.

உவமையிலிருந்து நோக்க, அதனோடு ஏயது : பெண். இதில் பெரிய‌
செய்தி ஒன்றுமில்லை. மயில்போலும் அழகுடையாள் என்பது
ஒரு கருத்து. ஆடவன் மனமிக மகிழ்ந்து பெண்ணை மயில் என்கிறான்.  அவள்  ஆடும் அழகு,  மயில் போன்றது என்பது கருத்து. உருவொற்றுமை ஒன்றுமில்லை.

அதிலும், ஆய்மயிலாக இருத்தல் வேண்டும், எல்லா மயிலும்
அல்ல.  "அணங்குகொல், ஆய்மயில் கொல்லோ?" தேர்ந்தெடுத்த‌
மயிலே பெண்ணுக்கு ஒப்பு.

உவமை + ஏய + அம் = உவமேயம், இது உப என்று திரிந்து,
உபமேயம் என்றுமாகும்.  வ > ப திரிபு. உவமையோடு  இயை  பொருள். இங்கு பெண் ஆவாள்.

ஏய ‍ இயைய.

இவற்றைத் தமிழ்க்கண்ணாடியால் பார்த்தால், இந்த உண்மை
புலப்படும்.

தமிழில்  பொருள் சொல்ல இயலாதவிடத்தன்றோ  இந்தோ ஐரோப்பியத்தை  நாடவேண்டும் ?   இங்கு அது தேவையில்லை.  மற்றும் சமஸ்கிருதத்துக்கு
இலக்கணம் வகுத்தவன்  ஒரு தமிழ்ப் பாணனாகிய "பாணினி". ( பாண் +இன் + இ )..

ஆரியன் என்பதும் தமிழ்ச் சொல் .  வெளி  நாட்டார்  வந்துள்ளனர்.
அவ்வப்போது.!!   அவர்கள்  "ஆரியர்"  அல்லர்.  சமஸ்கிருதம்  இந்திய  மொழி.
அதிலிருந்து  சொற்களை  மேற்கொண்டு பயனடைந்தோர் பலர்  பன்மொழியினர் ..


உவ + ம் +  ஐ ‍=  உவமை.
உவ + ம் + ஏய + அம்  =  உவமேயம்,
உவ + ம்  + ஆன + அம் =  உவமானம்,

உவமானம் என்பது உண்மையில் ஓமானம் என்ற சிற்றூர் வழக்கு, புலவர் இதனை மேற்கொண்டு, உவமானம் > உபமானம் ஆக்கினர்,

உவமை என்பது இலக்கிய வழக்கு,.

உவமேயம் என்பது புலவர் புனைவு. இயைதல், ஏய்தல் என்பன‌
சிற்றூரார் வழங்காதவை என்று தெரிகிறது.

ஆன, ஏய என்பனவற்றை எச்சங்களாகக் காட்டாமல் வினைப்பகுதிகளுடன் இணைத்துக்காட்டலாம்.  வேறுபாடில்லை.

உவ+ மெய் என்று காட்டுவது பேரா மு வரதராசனார் கொள்கை.




ஞாயிறு, 14 மே, 2017

உகர அகாரத் தொடக்கச் சொற்கள்

உக ரத் தொடக்கமான சொற்கள் பெரும்பாலும் அகரத் தொடக்கச் சொற்களாக மாறிவிடுகின்றன என்பது முன் சில இடுகைகளால்
விளக்கப்பட்டது. ஆனால் ஒருசிலர் இதனை ஒப்புக்கொள்ள நேரம் எடுத்துக்கொண்டனர்.  புதிது ஆவதை உடன் ஏற்றல் உலகிற் குறைவு
ஆகும்.

ஆங்கில மொழியில் யு என்று ஒலிக்கும் எழுத்து பல சொற்களில் அகரமாக ஒலிப்பதைக் காணலாம்.  பி‍ யு என் என்பது புன் என்னாமல்
பன் என்றே ஒலிபெறும். இங்ஙனம் உங்களுக்குத் தெரிந்த ஆங்கிலச்\சொற்கள் பலவற்றை முன்நிறுத்தி பிற மொழிகள்
இந் நெறிமுறையைத் தொட்டியல்வதை உணர்ந்தின்புறலாகும்.

முன்னுதல் (சிந்தித்தல் ) சொற்புனைவின்போது மன் என்று மாறிவிடுகிறது.  அதன்பின் திறம் என்பதினின்று அமைந்த‌
திரம் என்பதனோடு கூடி, மன்+திரம் என்று கூடி மந்திரம்
என்று வழங்குகிறது.

முன் என்பதன் பொருள் யாது  என்பதைத் தமிழ்றிந்தார் எளிதில்
காணலாம். எனவே  முன்னுதல் என்பது முன் கொணர்தல் என்பதே
அன்றி வேறில்லை.  அகர வரிஷைகள் பல் இப்போது வழக்கில் உள்ள சொற்களின் பொருளைத் தெரிவிப்பவை. இவை சொல்லின்
முற்பொருளை விளம்புவன அல்ல. அதை நாம் உன்னி உணர‌
வேண்டும்.

மறந்திருக்கும் ஒன்றை மீண்டும் நினைவுக்கு மூளையில் முன்
கொணர்தலே முன்னுதல் ஆகும். இப்படிக் கொண்டுவந்து அது
உச்சரிக்கப்படுகிறது. அதுவே மந்திரம். மந்திரங்கள் ஏற்கனவே
புனைவு பெற்றவை. இப்போது மீண்டும் முன்கொணர்ந்து ஒலிக்கப்
பெறுகின்றன.

சிந்தித்தல் என்பதும் சிந்துதல் அல்லது ஒன்றன்பின் ஒன்றாக‌
வெளிக்கொட்டுதல். சிந்து +இ  = சிந்தி என, வினையினின்றும்
இன்னொரு வினை தோன்றிற்று.  இது உண்மையில் கணித்தல்,
உதித்தல் என்பனபோலும் ஓர் அமைப்பே.  இதில் பெரிய‌
விடயம் ஏதும் இல்லை.

உகர  அகாரத்  தொடக்கச்  சொற்கள் 

Metro Rail extended in Chennai.

மின்விரைவுத் தொடரியுமே சென்னைவர என்னவொரு
பாக்கியமே என்றுபாடு;
முன்வரவே வேண்டியதாம் மண்மகிழ நன்முறையில்
வந்ததின்று வென்றியாடு.

சென்னையொரு பெருநகரம் சீருடனே ஏற்றமெலாம்
நேர்படுதல் வேணும் வேணும்;
பின்னைவரு நல்லிளைஞர் பெருமிதமே கொள்ளுவணம்
பேறுகளைப் பொழிதல்வேணும்.

அடையாறு முனம்போனேன்;  அவண்தொடரி தனிலேறி
அழகான பயணம்செய்தேன்;
இடைநாளில் நீடுறவே இயலாது பாடுறவே
இருந்ததது சிறந்ததின்றே.

நகர்ச்சென்னை வாசியலேன்; நான்சுற்றுப் பயன்விழைவேன்;
நகரங்கள் வளர்கவென்று
புகரின்றி விழைவதனால் புகல்கின்றேன்; இறையருளே
பொழிபெறுக வேண்டிநின்றேன்.

தொடரி  : ரயில் வண்டி .



  

சனி, 13 மே, 2017

பல்கலையின் கணினிகளுள் புகுந்துவிட்டார்............

இணையத்தில் கள்வர்கள் அலைகின் றார்கள்
எங்காவ துடைத்துள்ளே புகலாம் என்று!.
நனையத்தான் வேண்டுமடி மழையே வந்தால்!
நல்லவெயில் என்பதென்றும் எரிவ தில்லை.
வினையைத்தான் ஏற்போரும் கணினி கட்குள்
வேண்டியவா றேநுழைந்து விளையாட் டுற்றார்.
தினையேனும்    நீங்காத திறத்தில் நின்றார்
திருடாரே.திறமபலிலை அறமே,  உண்மை.

பல்கலையின் கணினிகளுள் புகுந்துவிட்டார்!
பகர்ந்தேனே பலதிருடர்...உணர்ந்து கொள்வீர்.

அச்சுப் பிழை திருத்தப்பட்டுள்ளது.


தினையேனும்  =  தினை நீங்கினால்   தானியத் தொகை குறையும். நற்குணங்களில்  திருடாமை என்னும் ஒன்று குறைந்தாலும்,  அறத்தின் திறம்  அவர்மாட்டுக் குறைவுபடும் என்றவாறு.

பல்கலை என்றது  பல்கலைக் கழகத்தை.

இன்றைய சிங்கை நாளிதழ்கள்  செய்தி  காண்க.


வியாழன், 11 மே, 2017

பந்தம்

பந்தம் என்பது:


பல் என்ற சொல்லின் தொடக்க காலப் பொருள் பொருந்தியிருப்பது
என்பதே.  பல் எங்கிருந்து வந்தது என்பதை இங்கு நான் விளக்கப்போவதில்லை. எல்லாவற்றையும் விளக்கி எழுதினால்
இப்போது பகர்ப்புச் செய்பவர்களுக்கே  (காப்பி  அடித்தல்) அது
பயன்பட்டுவிடுகிறது. ஆகவே அது இருக்கட்டும்,

ஆதி மனிதன், வாயினால் பற்றிக்கொண்டான்; கைகளினாலும் பற்றிக்கொண்டான்.  அவன் கால்கள் பற்றுவதற்குப் பெரும்பாலும்
பயன்படுவதில்லை. போதுமான பயிற்சியுடன் கால்களையும் பற்றுவதற்குப் பயன்படுத்தலாம்.

பற்றுவதென்பது பொருந்துதல் பொருத்துதல் என்பனதவிர வேறில்லை.  இதில் ஒரு நுட்ப வேறுபாடு இருக்கலாம். பற்றுகிற‌
மனிதன் பற்றப்படு பொருளைச் சற்று வலிமை காட்டிப் பற்றுவான்.
பற்றப்படுபொருள், இன்னொரு மனிதனாய் இருப்பினும் பொருளாய்
இருப்பினும் விட்டுக்கொடுப்பதாக இருக்கும்.  ஆனால் பொருந்துதல்
என்பதில் இந்த வலிமை இல்லாதது போல் தோன்றுவது தெளிவு.

பற்று என்பது பல்+து என்பன இணைந்த சொல்.

பந்தம் என்பது எந்தப் பக்கம் வலிமையைக் காட்டுகிறதென்பதைக்
கருத்தில் கொள்ளாமல் ஒன்று மற்றொன்றைப் பற்றிக்கொள்வதை
உணர்த்துகிறது.   பல் என்பது பன் என்றும் திரியும். அன்றியும்
பல் + து என்பன, பற்று என்று வல்லோசை தழுவாமல்  மெலிவாகி
பந்து > பந்தம் என்றும் உருக்கொள்ளும்.


பற்று > பத்து > பந்து > பந்தம் எனினும் அஃதே ஆம். பலவழிகளில்
விளைவு அதுவே வருகின்றது.

இதை எடுத்தொலிப்ப்தனால் அது வேற்றுமொழி ஆகிவிடாது.
Say pantham, Not Bantam.

Just like kumpal being mispronounced as Gumbal.

புதன், 10 மே, 2017

புறக் குலைவு ( remote interference )

போலிக்கடவுச் சொற்களைக் கொண்டு எந்த இணைய
வலைப்பூவிலும் நுழைந்துவிடலாம்.  இப்படி வெளியாரின்
உள்நுழைவு இருப்பதாகத் தென்பட்டதால், நாம் கடவுச்
 சொற்களை மாற்றியுள்ளோம் ,.

முட்டை என்றும் நாம் எழுதியதை மூட்டை என்று
 மாற்றிவிட்டாலே நாம் எழுதுவது  பொருளற்றதாகிவிடும்.
இதைத் தடுப்பதற்காகப் , பணம் செலவிட்டு மென்பொருள்
வாங்கிப் பயன்படுத்தினோம். இரண்டு ஆண்டுகள்
 ஓடவேண்டியது ஒரு மூன்று மாதங்கள் கூட
ஓடவில்லை.அதையும் ஓர் உலாவியையும் புறக் கலைப்பு
 ( remote interference ) மூலமாகக் கெடுத்துவிட்டார்கள். நச்சுமென்பொருள் தடைக்கருவியும் உலாவியும் ஓடாமற் கிடக்கின்றன.
 இனிமேல்தான் அவற்றைச் சரி செய்யவேண்டும்.

நாம் மாடு என்று எழுதியதை அவர்கள் ஆடு என்று
மாற்றிவிட்டால் உங்களுக்கு ஏன் தவறாக இருக்கிறது
என்பது தெரியப்போவதில்லை.

ஏதேனும் தவறுகள் தென்பட்டால், அவற்றைத்தெ
ரியப்படுத்துங்கள். ஒரு, ஓர் மற்றும் ஆங்கில or
என்பவற்றிடையே தன்திருத்த மென்\பொருள் நாம்
விழையாத மாற்றங்களைச் செய்துவிடுகிறது. யாம் என்ன
அனுப்பினோம் என்பது யாம் அறிவோம். பகர்ப்புகள்
உள்ளன.ஆனால் அது உங்களைச் சென்று சேருமுன்
 எத்தகைய‌ மாற்றங்களுக்கு உட்பட்டுவிடும்படி
 செய்யப்படுகிறதென்பதை யாம் அறிய வழியில்லை.


மறைமுக எதிர்ப்புகள் இருக்கையில், இவற்றைத் தாண்டி
 வெல்லுதல் என்பது கொஞ்சம் கடினம்தான். ஒரு  சமயம்
 தமிழறிஞர் ஒருவர் நூலெழுதினார். தாம் எழுதியதன்
 மூலம் பல குழப்பங்கட்குத் தீர்வு ஏற்படுமென்று அவர்
 நம்பினார்.  அவர் நூலை, ஓர் அச்சகத்தவர் விலைக்கு
 வாங்கிக்கொண்டார். ஒப்பந்தத்தில் வெளியிடும் உரிமை
முழுவதும் அச்சகத்தவருடையது. எழுதியவருக்குப் பணம்
 மட்டும்தான் என்பது தெளிவாக இருந்தது. நூலை
 வாங்கியவர் பின்னர் வெளியிடவே இல்லை. பணம்
 கிட்டியதேதவிர, நூலை வெளியிட்டு உலகைக்
கலக்கிவிடலாம் என்று எண்ணிய தமிழறிஞர் வீழ்ச்சி
 அடைந்ததே மிச்சமானது. இப்படி, குலைவு செய்வோர்,
சில வேளைகளில் எந்த விலையும் கொடுக்கத் தயாராய்
 இருப்பார்கள். அவர்களை நாம் வெல்வது கடினமே.

(பு றத்திருந்து  விளைத்த  குலைவு)

செவ்வாய், 9 மே, 2017

பெரிய ஊழல் , ஏந்திய கை.....

நெல்லைக்குள் அமெரிக்கா  நீங்கி 
நிறுவுதொழில்
எல்லைக்குள் நில்லாமல் இடம்விட்டு 
உருவினதே!
செல்லவும் ஆயினரோ சீர்சான்ற 
ஆந்திரத்துள்!
கொல்லவும் செய்ததெது வல்லூழல் 
ஏந்தியகை.


தமிழ் நாட்டில் அதிக இலஞ்சம் கேட்டதனால்
ஓர்  அமெரிக்க நிறுவனம், ஆந்திரா சென்று நிறுவியுள்ளதாகச்
சொல்லப்படுகிறது. வாழ்த்துக்கள் ஆந்திராவுக்கு.


நெல்லை = திருநெல்வேலி மாவட்டம்.
அமெரிக்கா நீங்கி ‍:  அமெரிக்கவிலிருந்து (முதலீட்டுடன்) வந்து;
இடம்விட்டு உருவினதே :  அங்கிருந்து கழற்றிக்கொண்டு போய்விட்டதே.
கொல்லவும் : தொழில்வளர்ச்சியைக் கொல்லவும்.
வல்லூழல் = பெரிய ஊழல்.
ஏந்திய கை =  இலஞ்சம் வேண்டிய அலுவலர்.


இதுபற்றி அமெரிக்காவில் ஒரு விசாரணை நடைபெறுகிறதாம்.


hacker's blogspot BY THE SAME NAME etc

Readers, please ensure that you are referred to this blog

when you click for Sivamala. We are informed that there is

a hacker's  blogspot which misdirects to another website

intended to disperse our readers.

Thank you.

Internet expensive in USA?





Even though the Internet was invented in the United States, Americans pay the most in the world for broadband access. And it’s not exactly blazing fast.

---  Hannah Yi

This is how Internet speed and price in the U.S. compares to the rest of the world




Surprisingly in Malaysia, you can in certain instances get it free without restriction.

பைக்கட்டும் packet-டும் ( ஒத்தொலிச் சொற்கள் )


ஒத் தொலி ச்  சொற்கள்

பைகளை ஒன்றாகக் கட்டிவைத்தால் அதைப்   "பைக்கட்டு" எனலாம். அல்லது சாமான்கள் பைக்குள்ளிட்டுக் கட்டப்பட்டிருந்தாலும் "பைக்கட்டு" என்ற சொல் அதைக் குறிக்கப் பயன்படுவதில் தவறில்லை.

ஆனால் இச்சொல் "பாக்கட்"  packet  என்பதனுடன் ஒலியொருமை கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். மற்றும் "பை" என்ற சொல்லுடன் "பாக்" என்ற சொல்லும் தலையொன்றி இருப்பதையும்
நீங்கள் காணலாம்.

மிகப் பழங்காலத்து மனிதர்கள் மரங்களில் பைபோலக் கட்டித் தொங்கவிட்டு இரவில் அதனுள் ஏறி உறங்கினர் என்பர்.  சில‌
காட்டுவாழ்நர் இன்றும் இங்ஙனம் வாழ்தலைச்  சில நாடுகளில்
காணலாம்.  நல்ல வீடு கட்ட அறிந்து தரையில் பாய்போட்டுப்
படுக்கத் தொடங்கியபின் பை என்ற சொல்லிலிருந்து பாய் என்ற‌
சொல் திரிந்ததாகத் தெரிகிறது.

பை > பாய்.

ஆனால் தரையில் பரப்பியதுபோல் இடப்படும் காரணத்தால் "பாய்" என்ற சொல் பிறந்தது என்றும் ஆய்வு செல்கின்றது.

பர > பரப்பு.
பர > பார் (பரந்த உலகம்).
பலகை

பத்திரம் (இலை, ஆவ்ணம்)
பாழ் (பரந்த விளைதல் இல்லா நிலம். பயனற்ற இடம்).
பட்டை
பட்டயம்
பட்டாங்கு
பட்டியல்
பட்டோலை
படு, படுக்கை.

இங்ஙனம் பல சொற்கள்  ஆங்கிலத்தில் "ஃப்ளாட்" என்ற சொல்போல நிலத்தி  ற் படிதல் போன்ற நிலையில் உள்ளவையாய்
காணப்படுதல்,  யாரும் ஆய்தற்குரியனவாகும்.

இவற்றைப் பின்னர் ஆராயலாம்.

சீனமொழியிலும்  "பாவ்" என்றால் கட்டுதல்.. பைப்பொருள் குறிக்கிறது; இதையும் கவனிக்கவேண்டும். ("தா பாவ்")

இவை நிற்க,பைக்கட்டும் பாக்கட்டும் கொண்டுள்ள ஒற்றுமை
மட்டும் குறித்து நிறுத்திக்கொள்வோம்.



திங்கள், 8 மே, 2017

பிற்காலத் தமிழில் பிறமொழிச் சொற்கள்

சில சொற்கள் எந்த மொழியிலும் நிலைமைக்கு ஏற்ப உயர்ந்த இடத்தைப் பிடித்துப் பயன்பாட்டுத் தகுதியை அடைந்துவிடுகின்றன.
இத்தகைய சொற்களில்  தகவல் என்பது ஒன்று என்று கூறினால்
அது மிகையாகாது.

இது தகவல் பரிமாற்றம் ஒரு முன்மையான இடத்தைப் பெறுகின்ற காலமாகும். ஆகவே தகவல் என்ற சொல்லை நாம் அறிந்துகொள்ள‌
வேண்டியது தேவையாகின்றது.

பிற்காலத் தமிழில் பல பிறமொழிச் சொற்களும் கலந்துவிட்டன என்பதை நாம் அறிவோம். சில  உண்மையில் பிறமொழியின ஆகும்,
வேறுசில பிறமொழியினபோலும் ஒரு தோற்றத்த உடையனவாய்
உள்ளன. எடுத்துக்காட்டாக பார்லிமென்ட் என்ற ஆங்கிலச் சொல்
பாராளுமன்றம் என்ற தமிழ்ச் சொல்லுடன் ஒலியொற்றுமை உடையதாய்  உள்ளது. இது பார் ஆளும் மன்றம் என்று பிரிக்கத்
தக்கது ஆகும். ஆகவே தமிழ்ச்சொல். இது பின் நாடாளுமன்றம்
என்று மாற்றப்பட்டு இப்போது நல்ல பயனழகு உடையாதாய் இலங்குகின்றது


தாங்கி என்ற சொல் இன்னொன்று. இதைத் தமிழர்கள் தண்ணீர்த் தாங்கி என்றனர். தண்ணீர் சேமித்து வைத்து ஓர் உயரமான இடத்தில்
இருத்தப்பெற்று அங்கிருந்து வீடுகட்குப் பகிர்ந்தளிக்கும்
கொள்கலம். பின்னாளில் வெறும் "தாங்கி" என்று மட்டும் சொன்னார்கள். இது வட இந்தியாவிலும் பரவிப்  பின்னர் ஆங்கிலத்தில் வழக்குப் பெற்றது.

கப்பல் தமிழே என்று ஆசிரியர் சிலர் எழுதியுள்ளனர்.

இத்தலைப்பை வேறொரு முறை தொடர்வோம்.

தகவல் என்ற சொல்:

தகுந்த செய்தி என்று பொருள் படுவது.  விடையம் > விடயம் என்பது விடுக்கப்படும் செய்தி என்பதுபோல, இத் தகவல் என்னும் சொல் தக்க செய்தி என்பதறிக.  தகு> தகவு; தகவு> அல் = தகவல். அவ்வளவுதான் இதன் சொல்லமைப்பு என்றறிந்து இன்புறுவீர்.

இத்தலைப்பை வேறொரு முறை தொடர்வோம்.

will review  and edit.


ஞாயிறு, 7 மே, 2017

இறைவன் ஆக்கிய ஆகமங்கள்

அறிவு என்பது வெளியிலிருந்து உள்ளுக்குச் செல்கிறது. தவளை தாவித் தாவிச் செல்வதை மனிதன் காண்கிறான். அதன்பின்னரே அது
தாவித் தாவிச் செல்லும் ஓர் உயிரி என்பதை உணர்ந்து கொள்கிறான். இந்த "அறிவு" வெளியிலிருந்து உள்ளுக்குச் செல்கிறது. அதுவே தொடக்கமாகும். அடுத்து, தவளையைப் பற்றி அறிந்து கொண்ட ஒரு மனிதன் ஆசிரியனாகி ஒரு பிள்ளைக்குத் தெரிவிக்கிறான். பிள்ளையும் அறிவு பெறுகிறது, இது நேரடியாகக் கண்டறிந்த அறிவு அன்று, ஆசிரியன் வாய்க்கேட்டறிந்ததே ஆகும். இது நேரில் தவளையைக் கண்ட மாத்திரத்தில், பிள்ளைக்குள் முழுமை பெறுகிறது. கற்ற அறிவு உறுதிப்படுகிறது, அதுகாறும் அது கேட்டறிந்ததே ஆகும். பின் கண்டும் உறுதி பெறுகிறது.

நாம் அறிந்த பல‌, நாம் நேரிற் கண்டு அறிந்த அறிவு அல்ல, பிறரிடம் இருந்து அறிந்துகொண்டவையே ஆகும். இந்தப் பிறர், இப்போது உயிரோடிருப்பவர், முன் இருந்தவர் என இருவகை. முன் இருந்தவர் எழுதிவைத்ததும் இப்போதிருப்பவர் எழுதிவைத்து நேரில் நம்மிடம் சொல்லித்தர இயலாதிருப்பதும் ஆக இருவகை..


நீண்ட காலமாக நடப்பில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நெறிகளும் முறைகளும் ஒன்று திரட்டப்பட்டு எழுத்து வடிவாக ஆக்கப்பட்டதே
ஆகமங்களும். இறைவனைத் தொழுதற்கும் ஆலயங்கள் அமைப்பதற்கும் இன்னும் ஏனைய இறைப்பற்றுத் தேவைகளுக்குமாக, ஏற்பட்ட செய்ம்முறைகள், எண்ணங்கள், கருத்துகள் முதலியவை இந்த எழுத்துக்களில் இடம்பெற்றனஇவற்றை உருவாக்கியவர்கள், இறைநலம் போற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள். இவற்றை எழுதும்போது
எந்த மொழியில் எழுதிவைப்பது என்ற கேள்வி எழும், எழவேண்டும். இவற்றைக் கற்று நடைமுறைப்படுத்தவேண்டியவர்கள் பெரும்பாலும் பூசாரிகளாக‌ இருந்தமையால், அவர்கள் இறைவழிபாட்டு நடப்புகளில் பயன்படுத்தும் சமஸ்கிருதம் என்னும் சங்கத மொழியில் எழுதப்பட்டன. இப்படி உருவாக்குமுன், வேறுமொழிகளில் அல்லது சமஸ்கிருதத்தில்  எழுதப்பட்ட பல சிறு ஏடுகள் இருந்திருக்கலாம். வற்றிலிருந்தும் நடைமுறைகள் திரட்டப்பட்டிருக்கலாம். அவை திரட்டப்பட்டு சங்கத‌ மொழியில் இறுதிவடிவம் கொடுக்கப்பட்டு மிருக்கலாம். இந்த‌ இறுதிவடிவத்தின்பின், அச்சிறுநூல்கள் தேவை0படாதவை. அவற்றைக் கைவிடுதல் என்பது இயல்பானதே. இப்படிச் செய்திருக்க மாட்டார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிந்தாலன்றி, இத்தகைய‌
நூல்வடிவங்கள் இல்லையென்று எண்ணிக்கொள்வது அறியாமையே ஆகும். வரலாற்று அறிவுக்காக பழையனவற்றைச் சேர்த்து வைத்துப் 
பின் ஆராயும் நடைமுறை, குறிப்பாகத் தமிழனிடமும் பொதுவாக‌
இந்தியனிடமும் இருந்ததில்லை.இந்த நிலையில் திடீரென்று எதிர்   தோன்றும் ஒரு ஆகம நூல்,  இறைவனால் அருளப்பட்டது என்று சொல்வது, இயல்பானதே ஆகும்.சிந்திக்கும் மூளை இறைவனால் அருளப்பட்டது என்னில், அதிலிருந்து போந்த ஆகம விடையங்களும் அவனால் அருளப்பட்டவையென்றே முடிபுகொள்ளல், ஏற்புடைத்தே!.


அவனன்றி ஓர் அணுவும் அசைவத்தில்லை. அசைந்த அணுக்களும் எழுதிய எழுத்துக்களும் அவன் அசைவே ஆகும். ஈர்க்கப்பட்ட மனத்தின் அசைவையே ஆசை என்கிறோம்: அசை> ஆசை, இது முதனிலை திரிந்த தொழிற்பெயர். இறைவனின் ஆசையால் மனிதனின் ஆசை எழுந்து, இவை உருப்பெற்றன.


ஒரு  பற்றன்  ஒரு நடைமுறையை  முற்றாகக் கடைப்பிடிக்க வேண்டின்,  அந்நடைமுடைகள் இறைவனால் அருளப்பட்டவை என்று நம்புதல் இன்றியமையாதது ஆகும்.  ஆக்கிய அனைத்தும் இறைவனால் ஆக்கப்பட்டவென்பது உண்மைநெறியும் சமயக் கடைப்பிடியும் ஆகும்.

தலைப்பு :  இறைவன் ஆக்கிய ஆகமங்கள்

will review to edit and detect hacker attacks.




சனி, 6 மே, 2017

பாரியை

பார் என்பது இவ்வுலகைக் குறிக்கிறது.இவ்வுலகில், கணவனென்பானுடன் இணைந்து 
வாழ்வு நடாத்துபவளே பாரியை. இங்கு இரு சொற்கள் கோவைப்பட்டு நிற்கின்றன.
ஒன்று பார். மற்றொன்று: இயை என்பது. இதன்பொருள் இயைதல், அதாவது 
 இணைதல் என்பதாம்.

மனைவி என்பவள் வீட்டுக்காரி என்று பொருளுணர்ந்து
கொள்ளப்படுவாளாயின், ஒப்பிடுங்கால் பாரியை என்று
குறிப்பிடப்படுபவள், பாரெங்கும் அவனுடன் இயைந்து
வாழ்பவள் ஆவாள். இச்சொல்லால் காட்டப்படுவது எல்லையில்லா
 உறவு ஆகும்.

இச்சொல் வேறு மொழிகட்கும் தாவி வழங்குவது இச்சொல்லின் விரிபொருளையும் திறத்தையும்

உணர்த்துகிறது

நல்லதோர் தீர்ப்பிது...........

இங்கு குறிப்பிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பாராட்டி ஒரு பாடலை
எழுதியிருந்தேன். இன்னொரு பாடலையும் எழுதினேன். அதை அப்போது வெளியிடவில்லை. அதை இங்கு பதிவு செய்கிறேன். நன்றாக இருப்பின் பாடி மகிழுங்கள்.

நால்வருக்கும் சாவென்ற நல்லதோர் தீர்ப்பிது
மேல்வர நாட்டினர் மிக்கமகிழ் ‍‍=== வால்வரிந்து
ஏற்ப துறுதியே  இஃதொன்றும் தீதில்லை;
கேட்பாரும் கீழ்மை அற.

இதன் பொருள்:

நால்வருக்கும் ~  நான்கு குற்றவாளிகளுக்கும்;
சாவு என்ற ~  மரணதண்டனை உறுதி என்று முடித்த;
மேல் வர ~   சட்டமறிந்த மேல்முறையீட்டின் வழியாக வர;
மிக்க மகிழ்வால் வரிந்து ஏற்பது ~  உள்ளம் மிக மகிழ்ந்து முன்னின்று ஒத்துக்கொள்வது;
இஃதொன்றும் தீதில்லை  :   இத்தகைய குற்றவாளிகட்கு மரணதண்டனை தருவதில் குறையொன்றும் இல்லை;
கேட்பாரும் ~ இதைக் கேட்டறிந்தவர்களும்;
கீழ்மை  குற்றமிழைக்கும் தன்மை நீங்கப்பெறும்படியாக.


இந்தி மொழியைத் திணிக்கவில்லை ( அமைச்சர்)


இந்தி மொழியைத் திணிக்கவில்லை, அதன் பயன்படுத்தலை ஊக்குவிக்கின்றோம் என்கிறார் மத்திய உள்துறை சார்பு அமைச்சர்
கிரண் ரிஜிஜு. ஆகவே கட்டாயம் ஒன்றுமில்லை என்று சொல்கிறார்.


Government not imposing Hindi but promoting it: Kiren Rijiju

இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.


நிருபயா உச்சநீதி மன்ற வழக்கில்
அருமையாய்த் தீர்ப்பு வழங்கினர் நன்றுநன்று.
கற்பழித்துக் கொன்ற இரண்டிரு பேருக்கும்
பிற்பகலில் தூக்கென்றார் பேதமில்லாச் சாதனையே!
கொள்ளை கொலைகற் பழிப்பினைப் போன்றவை
எள்ளளவும் ஏற்றுக் கொளவியலாக் குற்றங்கள்.
குற்றமொன்றும் செய்யாது கூனின்றிப் பேருந்தில்
பற்றியேறிச் செல்பயணி பால்பாய்ந்த பாழ்ங்கையர்
உள்குடலைப் பேர்த்தனர் ஓரிரக்கம் இல்லாமல்
பல்கடல் சூழ்நாட்டி லும்பதைக்கப் பாவிகள்!
குற்றமே கொய்த முறைமன்று முற்றும்நம் 

கைதட்டைப் பெற்றதே காண்.  

There is an inherent alignment error.
Will edit  and try later.




இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

வெள்ளி, 5 மே, 2017

வாழ்க்கைத் துணை மனைவி

வாழ்க்கைத் துணை என்பது மனைவிக்கு மற்றொரு பெயர். மனைவியே பிள்ளைகளை ஈன்று தாயாகி உலகை நிலைபெறச் செய்கிறவள் என்பது யாவருமறிந்ததே. ஆதலின் அது விளக்கம் ஏதுமின்றியே யாருக்கும் புலப்படுவதாம்.

வீட்டினை ஆட்சி புரிகின்றவள் என்ற பொருளில் மனைவி என்ற சொல் புனையப்பட்டது. அந்த ஆட்சி வீட்டுக்கு வெளியில் இல்லை யென்று வழக்காடுபவர்களும் இருக்கிறார்கள். வீட்டுக்கு வெளியில் உள்ள நிகழ்வுகளுக்கு நிற்பவன் கணவன் என்பர் இவர்.

வீட்டில் தண்ணீர் இல்லையென்றால் அதை வெளியில் சென்று
வீட்டுக்குக் கொண்டு தருபவள் பெரும்பாலும் மனைவியே. உதவாமல் ஓடிவிடுகின்ற கணவரும் உண்டல்லவா?


(உளரல்லரோ என்று எழுதவேண்டும், இப்படி எழுதினால் பலர்
கடினமென்கிறார்கள் அது நிற்க )

வீட்டிற்குரியாள் மனைவி என்பதைக் கூறுவோர், "மனை" என்ற‌
வீடு குறிக்கும் சொல்லிலிருந்து மனைவி என்ற சொல் வந்தது என்று
முடிவுக்கு வருவதால், அவர்கள் வீடு ~ மனைவி என்ற வட்டத்தினுள் சிந்திக்கிறார்கள். அது சரி அல்லது தவறு என்று சொல்லவில்லை. அப்படிச் சிந்திக்கிறார்கள் என்கிறோம்.

இப்போது வேறோரு வகையில் சிந்திப்போம். மன் : மன்னுதல் எனின் நிலைபெறுதல் என்று பொருள். மன் = நிலைபெறல்; = தலைவி அல்லது தலைமைப் பண்பு என்று பொருள்கொண்டால் மனைவி
என்பதன் பொருள் தெளிவாகிவிடுகிறது. வீட்டுக்குள் அடங்கிக் கிடப்பவள் அல்லள் மனைவி; நிலைபெற்ற வாழ்வினை உடையவள் என்று பொருள் வருகிறது.


மன்+ ஐ என்பதனுடன் வி சேர்ந்துகொள்கிறது. வி என்பதோர்
விகுதி (மிகுதி> விகுதி). துணைவி என்பதில்போல் இங்கும்
இவ்விகுதி சேர்கிறது. அது பொருத்தமே ஆகும்.
மன்+அம் = மனம் என்பதில் 0னகரம் இரட்டிக்க வில்லை; அதுபோல் மனைவி என்பதிலும் இரட்டிக்கவில்லை என்று முடிக்கலாம்.

இனிப் பாரியை என்ற சொல்லை ஆய்வு செய்வோம்



வியாழன், 4 மே, 2017

"திட்டம் தீட்டுதல்"

தீட்டுதல் என்ற சொல் வழக்கில் உள்ளதுதான். திட்டம் தீட்டினார்கள்
என்பதை நூல்களிலும் தாளிகைகளிலும் காணலாம். நாம் இங்கு
உரையாட விழைவது திட்டம் என்ற சொல் பற்றியது. "திட்டம் தீட்டுதல்
"என்ற  வழக்கிலிருந்தே திட்டம் என்ற சொல்லுக்கும் தீட்டுதல் என்ற‌
சொல்லுக்கும் உள்ள தொடர்பினை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

சவம் என்ற சொல் நான் அடிக்கடி காட்டுகிற உதாரணம்1 தான். சா + வு + அம் = சவம். இங்கு சா என்ற நெடில் சகரமாகக் குறைந்தது.
இந்த மாதிரி பல சொற்களை நான் முன் இடுகைகளில் எடுத்துக்காட்டியுள்ளேன்.

இதேபோல், நெடில் குறுகி அமைந்த சொல்தான் திட்டம் என்பது.
தீட்டு + அம் = திட்டம். சில தொழிற்பெயர்கள் வினைப்பகுதி குறுகி
விகுதி ஏற்கும். சில நீண்டு விகுதி ஏற்கும்:  எ‍~டு:  சுடு+அன் = சூடன்,  அல்லது அம் சேர்த்துச் சூடம்.  இவற்றை மனத்திலிருத்தி மகிழவும்.




‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍========================================
 ( உது= முன்னிற்பது; ஆர் = நிறைவு.  ஆர்தல்: வினைச்சொல்: நிறைதல் . அணம் : ஒரு வினையாக்க விகுதி.)

ஆகமமும் வேதமும் ~ ஒரு சொல்லியல் ஒப்பீடு.

ஆகமமும் வேதமும் ~ ஒரு சொல்லியல் ஒப்பீடு.

ஆகமம் என்றால் என்ன?  வேதம் என்றால் என்ன? இவற்றுக்கு
சமய நூலார் பல வேறுபாடுகளை எடுத்துரைப்பர். சொல்லியல்
முறையில், சமயக் கோணத்தில் நில்லாமல் இங்கு ஒப்பீடு செய்வோம்.
இது சொல்லாக்கத்தையும் அதன்கண் பிறந்த பொருண்மையையும்
உணர்ந்துகொள்ள உதவும்.

ஆகமம் என்பது தமிழ்ச்சொல். தென்னாட்டில் உள்ள   கோயில்களில்
ஆகமப்படி பூசைகள் நடைபெறுகின்றன. ஆகமத்துக்குத் தலைவன்
தென்னாடுடைய சிவனே ஆம்.

ஆகு+ அம் +அம் = ஆகமம்.

ஆகு : ஆகுதல் என்ற வினைச்சொல்.
அம்  :  அழகு.  அம்மையாகிய உலக நாயகி. அமைத்தல் என்பதன்
அடிச்சொல்.
அம் :  விகுதி.

ஆகும் நெறியில் அமைக்கப் பட்ட கடைப்பிடிகள். ஏற்பாடுகள்>

பற்றுடையாரால் வேயப்பட்டது வேதம். இங்ஙனம் வேய்ந்த பல‌
பாடல்களின் திரட்டு.

இவற்றுக்கு வேறு புனைபொருள் கூறுவோரும் உளர்.

புதன், 3 மே, 2017

கடமை தவறாத சனிக்கிரகம்

கடமை தவறாதவர்களைப் பாராட்டி அவர்களின் நல்ல செயல்பாடுகளை ப் பயன்படுத்திக்கொள்ளுதல் மனித இனத்துக்குத் தேவையானது என்பதை சொல்லவேண்டுவதில்லை. இப்படிக் கடமை தவறாதோரின்
பட்டியலில் சனிக்கிரகம் முன் நிற்கின்றது. கிரகம் என்ற சொல்லை  முன் இவண் விளக்கியுள்ளோம்.

படைத்த சிவனாரையே பற்றிக்கொண்டு தன் கடமையை ஆற்றியதால்,  சனிக்கு ஈஸ்வரப் பட்டம் என்பார்கள். ஈஸ்வரன் என்ற சொல்லுக்கு விளக்கமும்  இங்குக் காணலாம்.

அவற்றுக்கான தனி இடுகைகளைக் காண்க.

சனி என்பவனே ஒரு தனித்தன்மை வாய்ந்தவன்.   ஆதலின்
தனி என்ற சொல்லினின்று சனி என்ற கோட்பெயர் அமைக்கப்பெற்றது.  தகரத்துக்குச் சகரம்  ஈடாகுமிடங்கள்
தமிழில் உண்டு. தங்கு > சங்கு என்பது காண்க.  தன் என்பதன்
பன்மையாகிய தம் என்பதும் தம்முடன் பிறரும் கூடியிருத்தலைக்  குறிப்பது  மறத்தலாகாது. வேறு சில மொழிகளில் த என்பது ச என்று ஒலிக்கப்பெறுதலும் உண்டு. ஒத்மான் என்பது ஒஸ்மான்  எனப்படுதல் காண்க. உலக மொழிகளை ஆராய்ந்தால் இவ்வுண்மை புலப்படும்.  யாப்பில் த என்னும் எழுத்துக்குச் ச மோனையாகிவருதலும் உண்டு.

சனி மெதுவாக நகரும் கிரகம் என்பர்.  அதனால்  அவனுக்கு
"மந்தன்"  என்ற பெயரும் சொல்வர்.   மந்தமாவது, விரைவுக்
குறைவு. சனி பிடித்துள்ளதாகக் கூறப்படும் காலங்களில் விரைவாக எதையும் நீங்கள் செய்து முடிக்க இயலாது என்பர்.  ஓர்  இராசி வீட்டைக் கடக்க இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்வான் சனி. இதைச் சோதனை செய்ய, சனி பிடித்த காலக்கட்டத்தைத் தேர்ந்தெடுத்து உங்களுடைய முக்கிய வேலையை மேற்கொள்ளுங்கள். தடை, தாமதம் இருக்கின்றனவா என்று  அறிந்து மகிழலாம்.

குப்பைத் தொட்டி. குப்பை போடுதல் தொடர்பாக ஏதேனும் தகராறுகள்,  அழைப்பாணை வந்தால், சனி எந்த இராசியில் இருந்து என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று ஆய்வு செய்வது நலம்.


பாவம் என்ற சொல், தமிழ்ச்சொல்லே......

பாவம் என்ற சொல், தமிழ்ச்சொல்லே ஆகும். தமிழர்களும் பாவபுண்ணியம் பார்த்தவர்கள்தாம்.  எந்தக் காலக்கட்டத்திலும் எல்லோரும் நாத்திகர்கள் அல்லர்; சிலர் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்திருப்பது சாத்தியமே.

வினைச்சொல் பாவுதல் என்பதே. பாவுதல் என்பதன் பொருளாவன:

1 தாண்டுதல்
2 நடுதல்
3 பரப்புதல்
4 பரம்புதல்
5 பற்றுதல்
6 --
7 வேர் வைத்தல்
8 விரித்தல்
9 பரவுதல்
10 வியாபித்தல்
11 படர்தல்
12 விதைத்தல்
13 தளவரிசை இடுதல்.

விதைப்பதுபோலும் உள்ளிடப்பட்டுப் பாவம் பற்றிக்கொள்கிறது. ஒருவன் துணிந்து ஒரு பாவத்தைச் செய்தபின், தன் உணர்வுகளை
நிலை நிறுத்த முடியாதவன், பின்பற்றிப் பாவச்செயலில் ஈடுபட்டு
விடுகிறான். நல்லவை இப்படி இவ்வளவு  வேகமாகவும் தீவிரமாகவும்
பரவுவதில்ல. திருடுவதில் பொருள்வரவு இருக்கிறது. ஆகவே அது
வேகமாகப் பரவும். யாரும் பார்க்காமல் இருப்பதும் ஒரு காரணம்.
காவல்துறை அறியாததும் ஒரு காரணம். இன்னும் பல. பொருளை
இழந்தவன் மிரட்டினால் பணிந்துவிடுகிறான்....  ஆனால் பொருளை
அறத்திற்கு உதவு என்று  சொல்லிப்பாருங்கள்.  " கரவு உள்ள, உள்ளம் உருகும்" என்றார் ஆசிரியர் திருவள்ளுவனார். கொடுக்க‌ முன்வருவார் ஒருசிலர். எடுப்பாரே அதிகம்.



பாவம் விதைக்கப் படுகிறது ; பற்றுகிறது;  உள்பற்றி ( இதுதான் உத்பற்றி ) விரிகிறது. பாவிகள் மிகுதியாவர்; நல்லோர் குறைவர்.

பாவம் என்றவுடன், கடவுளைத் தொடர்பு படுத்தவேண்டாம். அவர்
கேட்டாலும் கேட்காவிட்டாலும், இருந்தாலும் இல்லாவிட்டாலும்
பாவம் பாவமே. நீதியரசர் இருந்தால்தான் குற்றம் என்பது தவறு.
குற்றம் முதலில் மெய்ப்பிக்கப்படும் நிறைவு நிலையை அடைகிறது.
பின்னர்தான் காவல்துறையும் நீதிபதியும் வருகின்றனர்.    நோய் இருந்தால் மருத்துவர் வரவேண்டும் என்பதில்லை; அவரிடம் போகுமுன்பே  இறந்தோர் பலர்.  பாவம் செய்தால் செய்து முடித்துச்
செய்தவன் உள்ளழிந்துபோகிறான்.  அவன்  ஆன்மா அழிவு நிலையை
எய்துகிறது. உங்கள் ஆன்மா அழிவுற, கடவுளுக்கு என்ன தொடர்பு?
தெயவ மேடைக்குச் செல்ல, தகுதி இழந்துவிடுகிறீர். எல்லாம் உங்களுக்கு நடக்கிறது; கடவுள் எப்போதும்போல் இருப்பவர். நீதியரசர்போல் பின்வந்து கேட்கிறார். பாவமானது உடலையும் ஆன்மாவையும் குமுகத்தையும் நாட்டையும் அழித்தபின்,  அடுத்தது என்பது அடுத்தது; நேரடித் தொடர்பு இல்லாதது.

இப்படி எழுதினால் சொல்லாராச்சியாக இருக்காது ஆகையால்
இனி,   பாவம் தமிழ் என்பதை விளக்குவோம்.

விதைக்கப்பட்டு, உள்பற்றி விரிவது பாவம்.

பாவுதல் தமிழ். அது பிற மொழிகளால் ஏற்கப்பட்டது தமிழின்
பெருமையாகும்.

முன்னரே உணர்வுகள் களத்தில் ஓர் இடுகையில் கூறியிருந்தேன்.
இது ஒருவகையில் மறுபதிவு ஆகும்.





திங்கள், 1 மே, 2017

துறவு மேற்கொள்ளாமலே ஆசை தீர்ந்துவிடும். ......

மகிழ்சியும்  துன்பமும் மாறிமாறி வருகின்றன.

எதில் மகிழ்ந்தோமோ,  அது கொண்டே துன்பமும் வந்துவிடுகின்றது.  துன்பம்
என்பது தனியே வருவதில்லை.

ஒரு சொந்தக்காரப் பையன் என்னுடன் மகிழுந்தில் பயணிக்க
வேண்டும் என்று மிக்க ஆசையுடன் என்னோடு வந்தவன்.

ஓரிடத்தில் மகிழுந்தை நிறுத்தியபோது கொஞ்ச தொலைவில்
ஒருவன் எதோ ஒரு தின்பண்டத்தை விற்றுக்கொண்டிருந்தான்.

என்னுடன் வந்த பையனுக்கு அதை வாங்கித் தின்னவேண்டும்
என்ற தாங்க முடியாத ஆசை. ஆசையை எப்படி அடக்குவது?

இதற்காக புத்தர்மாதிரி துறவு மேற்கொள்ள வேண்டுமா என்ன
அக்காள் வாங்கிக்கொடுப்பாள் என்று பையன் எதிர்பார்க்கிறான்.

உடனே அவனிடம் ஒரு பத்துவெள்ளியைக் கொடுத்து, அதை
வாங்கிச் சாப்பிடு என்று சொன்னேன். துறவு மேற்கொள்ளாமலே ஆசை தீர்ந்துவிடும்.

அவனைப் பார்க்கவேண்டுமே!  வண்டியிலிருந்து இறங்கி, காசைக் கையில் பிடித்துக்கொண்டு  தாவிக்கொண்டும் குதித்துக்கொண்டும் அங்கே ஓடினான்.

அதைப் பார்த்த மன நிறைவுடன் நான் வேறு சிந்தனையில்
ஆழ்ந்துவிட்டேன்.

சிறிது நேரத்தில் பையன் அழுதுகொண்டு வந்தான். "என்ன. என்ன, யாரும் அடித்துவிட்டார்களா......."

"பத்துவெள்ளியைக் காணோம்"  என்று அழுதான்.

"சீ!  அழாதே...... அக்காள் இருக்கிறேன். " என்றபடி என் பையை
எடுத்து, இன்னொரு பத்துவெள்ளியைக் கையில் கொடுத்து, "ஆடக் கூடாது, குதிக்கக் கூடாது, கவனத்துடன் நடந்து போ. சாலையில் பல உந்துவண்டிகளும் மனிதர்களும் போகிறார்கள்.
யாருக்கும் இடைஞ்சல் உண்டாகாமல்  போய் வாங்கிச் சாப்பிடு. விழுந்துபோன காசு போகட்டும். இந்தக் காசு காணாமற் போய்விடாமல் பார்த்துக்கொள்..."  என்று சொல்லி அனுப்பினேன்.

ஒழுங்காகப் போய் வாங்கிக்கொண்டு வந்து, என் எதிரிலேயே
சாப்பிட்டு முடித்தான்.  "கவலைப் படாதே.....எதையும் சாதிப்பதுதான் முதன்மையானது என்று  திடமுறுத்தினேன்.

மகிழ்வும் துன்பமும் ஒரு பத்துவெள்ளிக்குள்ளேயே சுற்றிவருகிறது.  அதுதான் நாம் வாழும் மனித வாழ்க்கை. தனியாக ஏதும் துன்பம் தோன்றுவதில்லை. எல்லாம் உன்னிலிருந்தே உள்பற்றி வருகிறது.  (உள்பற்றி > உற்பத்தி ).

அரசியல் மேதை திரு லீ குவான் அவர்கள் கூறிய ஒரு
சீனக் கதை நினைவில் வந்து மோதுகின்றது. ஒரு சீனச் சிற்றூரான்  தன் மகனுக்குக் குதிரை வாங்கிக் கொடுத்த கதை. ஒரு குதிரையை வைத்தே இன்பமுன் துன்பமும் மாறிமாறிச் சுழல்கின்றன என்பதை அவர் பட்டியலிட்டுக் காட்டினார். அதை இன்னொரு நாள் அறிந்து இன்புற்றிடுவோம்.

will edit.
This story is from my diary in November 2014.  At that time I also analysed the word munthAnAL.
We shall discuss in another post. Pl stay tuned.