ஞாயிறு, 30 ஜூலை, 2017

சங்கப் புலவர் பக்குடுக்கை நன்கணியார் ஞானி

பக்குடுக்கைக் நன்கணியார் ஒரு சங்கப் புலவர். தம் வாழ்க்கைத் தொழிலாகச் சோதிடம் கணிப்பதை மேற்கொண்டிருந்தார். பழந்தமிழில் சோதிடர்களுக்குக் "கணியர்என்பர். சோதிடத்தில் வல்லவராதலின் இவர் "நன்கணியார்" என்று போற்றப்பட்டவர்இவர்தம் இயற்பெயர் தெரிந்திலது.

புறநானூற்றில் 194‍வது பாடல் இவருடையது. இப்பாடலில் இவர் உலகில் உள்ள பல்வேறு மாறுபட்ட நிலைகளையும் நிகழ்வுகளையும்காண்கின்றார். இக்காட்சிகள் ஒருவாறு இவரை வருத்துகின்றன.யாரைக் குற்றம்சொல்வது? அந்தக் கடவுளைத்தான் நொந்துகொள்ளலாம்.அவனைப் பண்பிலாளன் என்று சுட்டுகின்றார். ஈவிரக்கம் அற்றவன் அவன்.ஒரு பக்கம் பிண வீடு! இன்னொரு பக்கம் மணப்பந்தல். ஒரு பக்கம் பிணமாலை கழுத்தை அலங்கரிக்கிறது. இன்னொரு பக்கம் பூச்சூடிய மணமகள், இவ்வுலகம்இன்பமயம் என்றெண்ணி ஒப்பனையுடன் காட்சியளிக்கிறாள்.இப்பன்மை நெறிகளை எப்படித்தான் பாராட்டிப் பாடவியலும்?உலகு ஒரு துன்ப ஊற்று என்பது தெளிவாக "இன்னாது அம்ம‌இவ்வுலகம்!" என்கிறார். இவ்வுலக இயல்பு உணர்ந்து, துன்பத்தைநோக்காது இன்பம் மட்டுமே கண்களுக்குப் புலப்படுமாறு வாழ்ந்துகடல்போலும் இதனைக் கடந்து செல்வது கடமை, அறிஞருக்கு ==என்கிறார், அவர்தம் பாடலில். இயல்பு உணர்ந்தோர் இனியவையேகாண்க என்கிறார்.

உலகம் துன்ப மயமானது என்ற எண்ணமே மேலிட்டு, எல்லாவற்றினின்றும் விலகி, பற்றற்று வாழ்ந்து, விடுதலை பெறுக என்று இவர் கூறவில்லை.துன்பம் உண்டு; ஆனால் படைத்தவன்அப்படிப் படைத்துவிட்டான். அதற்கு நாமென்ன செய்யவியலும்?என்செய்தாலும் வருந்துன்பம் வந்துதான் ஆகிறது. அந்தக் கடவுளின்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, உலக இயல்பு இது என்று உணர்ந்து இன்பமே கண்டு பிற மறந்து அதனால் சிறந்து வாழ்க என்பதுஇப்புலவர் நமக்குக் காட்டும் நெறியாகும். பல நிகழ்வுகள் நமக்கும்அப்பால்பட்டவை. அவற்றுக்குரிய நெறிகளில் அவை செல்கின்றன.நம்மால் காக்க முடிந்தவற்றை நாம் காத்துக்கொள்ளலாம்; முடியாதவை உலக இயல்பின்பால் படும். அவற்றைக் கண்டுகொள்ளாதீர். கொள்ளீரெனின்இன்பமே எங்கும் புலப்படும். அதுவே வாழ்நெறியாம்.
இனிப் பாடலைப் பார்ப்போம்.

இனிப் பாடலைப் பார்ப்போம்.
ஓர் இல் நெய்தல்கறங்க , ஓர் இல்ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப,புணர்ந்தோர் பூவணி அணிய, பிரிந்தோர்பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப,படைத்தோன் மன்ற அப் பண்பி லாளன்;இன்னாது அம்ம இவ்வுலகம்,இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே!

இப்புலவர் ஓர் ஞானி. ஞானும் ( நானும் ) நீயும் ( கடவுள் ) ஆயிருப்பதே ஞானமாகும். என்னால் இயன்றவை ஞான் ( நான்)செய்கிறேன். மற்றது நீ (கடவுள் ) ஆள்கிறாய். இப்படிச் செல்பவர்இவர். இனிய செந்தமிழ்ப் புலவர். பலர் வாழ்க்கைகளைக் கணித்துக்கணித்துப் பார்த்து உண்மை கண்டவர். இவர் கூறும் நெறியை ஆய்ந்து தெளிதல் அறிவுடையோர் கடனாகும்.
நான் என்னும் தன்மை ஒருமைச் சொல் ஞான் என்றும் திரியும்,இது ஞான் என்றே மலையாளமொழியில் இன்றும் வழங்குகிறது,நயம் > ஞயம்; ( நய + அம் ) > ( நாயம் ) > ஞாயம்; (முதனிலைநீண்டு விகுதிபெற்றுப் பின்னும் திரிந்தது; ). இவைபோன்ற திரிபேஞான் என்பதும். ஞான் + நீ > ஞானி என்று மருவியது. நோ: பழம் + நீ = பழநி போல.

நெய்தல் ~ சாப்பறை; கறங்க ~ ஒலி மிக எழ;
ஈர்ந்தண் முழவு ~ திருமணப் பறை;பாணி ~ ஆட்ட பாட்டம்;ததும்ப ~ மேலோங்க;புணர்ந்தோர் ~ மணம் செய்துகொண்டோர்;பைதல் உண்கண் ~ துயருற்ற கண்கள்;பனிவார்பு ~ கண்ணீர் வார்த்தல், வடித்தல்.உறைப்ப ~ மிகுந்திட.இன்னாது ~ துன்பம் மிக்கது.
will   edit/


x


முக்தி மோட்சா!!

மோட்சம் என்பது ஒரு திராவிடச் சொல்லே ஆகும்.

இதை இப்போது ஆராயலாம்.

மேல் என்ற தமிழ்ச்சொல் சில திராவிடமொழிகளில் மோள் என்று
திரிந்து வழங்கும்.

ஒன்று இன்னொன்றன்மேல் மோதுகிறது. மேல்சென்று இடிப்பதை
மேது என்று வினையாக்காமல் மோது என்றல்லவா வினைச்சொல் ஆக்குகிறோம்? மே> மேல்; மே> மோ > மோது. ஏகாரச் சொற்கள் ஓகாரமாகும். ஏம் ‍= பாதுகாத்தல்; ஓம் = பாதுகாத்தல்; ஓம் > ஓம்புதல் : பாதுகாத்தல். பல சொற்களை ஆராய்ந்தால் இது தெற்றெனத் தெரியவரும்.

மோள் > மோட்சு > மோட்சம்.


மே > மோ > மோச்சம். சு, அம் விகுதிகள்.

இது பேச்சு வழக்குச் சொல். இறந்தவன் மேலே போய்விட்டான் என்பது பேச்சு வழக்கு. அதிலமைந்ததால் மோச்சம் என்ற சொல்அதுபின் மோட்சம் என்று திருத்தப்பெற்றது. ட்ச என்றால் ஒலி இனிமையாகிறது என்று கருதினர்.

முது > முதுமை.

முது > முத்து > முத்தி > முக்தி.

மோள் > மோட்சம்.


முக்தி மோட்சா!!

சனி, 29 ஜூலை, 2017

இணையம் சரிவரக் கிடைக்காமல்...........

இருதினம் இணையம் சரிவரக் கிடைக்காமல்
எழுதும் முயற்சியும் தடைப்பட்டதே!
வருகிற நண்பர்கள் நறுமணம்  தருமலர்
வரப்பெறு நிலையதும் இடைப்பட்டதே!

முயன்று முடித்திட நாளை வரும்வரை
முனைப்புடன் மீண்டும் வருவிரென்றால்
சிறந்த கருத்துப் படையல் உங்கள்பால்
சேர்ந்திடும் தமிழைப் பெறமகிழ்வீர்.

( இதை உரைநடையில் எழுதவேண்டும். அயர்ச்சியினால்
கவிதைபோலச் சுருக்கித் தந்துள்ளேன்.)

வாழ்த்துக்கள்.

வியாழன், 27 ஜூலை, 2017

நாயன்மாரும் ஆழ்வார்களும்,



பல அறிவாளிகளைப் பெற்று மகிழ்ந்தது இந்துக் குமுகாயமாகும். அறிவாளிகள், இறையுரைஞர்கள் பலரை உடையராயிருந்ததனால் யாரையும் தனிப்பட வியந்து போற்றிக்கொள்ளவில்லை. மேலும் ஒரே சிறந்த கருத்தினை அவருட் பலரும் கூறியிருப்பர். அக்கருத்தினை அவர்கள் இறைவன் தம்மிடம் வெளிப்படுத்திய தனிக்கருத்தாகக் கூறவில்லை யாதலின், அக்கருத்து நம் மதத்தினை நிறுவிய கருத்தாக நாம் கொண்டாடுவதில்லை. ஆகவே செல்வம் நிலையாமை, வாழ்க்கை நிலையாமை முதலிய கருத்துகள் நம்மிடம் மிக்கிருந்தாலும் இவற்றையே கூறிய பிற நாட்டறிஞர்களின் பின்னால்தான் நம்மறிஞர்களை நாம் இருத்தியிருக்கின்றோம்.

ஏறத்தாழ இருமாதங்களுக்கு முன்புதான் நம்பியாண்டார் நம்பி, அமர்நீதி நாயனார், கலிய நாயனார், கோட்புலி நாயனார், பட்டினத்தார் ஆகியோரை நினைவுகூரும் பூசைகள் ஆலயங்களில்
நடைபெற்றிருக்கவேண்டும்.

ஆழ்வார்களில் திருக்கோட்டூர்நம்பி, திருவாழியாழ்வார், பெரியாழ்வார், எங்களாழ்வார், நாதமுனிகள் ஆகியோரையும் அங்ஙனமே நினைவு கூர்ந்திருக்கவேண்டும்.

சித்தார்கள், ஆழ்வார்கள் எடுத்தியம்பிய முன்மைக் கருத்துகளைத்

திரட்டி ஒரு கையேடாக வெளியிட்டு, அக்கருத்துகளை ஆலயங்களிலும் சிற்றுரைகளாக பூசையின் முடிவில் வெளியிட்டாலும் அவற்றை மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு மிகும் என்னலாம்

புதன், 26 ஜூலை, 2017

எதன் தொடர்பில் வள்ளுவன் என்ற சொல் பிறந்தது?

வள் என்ற  அடிச்சொல்.

இவற்றை முதலில் பகுத்துணருங்கள்:

வள் > வளம்.
வள் > வளை (வினைச்சொல்). வளைதல். வளைவு.

வள் > வளி (காற்று).
வள் > வளவு ( வீடு).

வள் > வளா (பரப்பு, பரந்த இடம்)

வள் > வளர்  (வளர்தல்).

வள் > வளாவு > வளாவுதல்  (கலத்தல், சூழ்தல்)

வள் > வளுவல் (இளமை).

வள் > வளை > வளையல்.

வ்ள் > வளை > வளையம்.

வள் > வள்ளம் (தோணி)

வள் > வள்ளல் (கொடைஞன்)

வள் > வள்ளி (குறப்பெண்)

வ்ள் > வள்ளுரம் (இறைச்சி)

வள் > வள்ளை( ஒரு பாட்டு).

வள் > வள்பு  (தோல்).

இன்னும் பல.


வள்ளுவன் என்பதற்கு வள் என்பதே அடிச்சொல்.

இதில் எதன்    தொடர்பில் வள்ளுவன் என்ற சொல் பிறந்தது?

சொல்ல முடியுமோ?

Materials destroyed.

Two of our computers in Malaysia had suffered virus attacks and much materials awaiting
publication have become destroyed.
We will soon be back.

 

--------------




-------------------------------------------


We will try to recover data from the hard disks that have

crashed.

We are hopeful.

Pending the try, we shall proceed as per normal.

Sorry for any inconvenience.

திங்கள், 24 ஜூலை, 2017

அஞ்சலி - ஒரு விளக்கம்

அஞ்சலி

இந்தச் சொல்லுக்கு 2010 வாக்கில் ஒரு விளக்கம் தந்து இது ஒரு தமிழ்/திராவிடச் சொல் என்று அதை அணிசெய்திருந்தோம். அந்த இடுகை
கள்ள ஒட்டுமெல்லியால் ( .an unauthorised browser add-on ) இல்லாததாயிற்று.  அதைப் படித்த‌ சிலருக்கு இன்னும் நினைவிலிருக்கலாம். தமிழறிந்தோர் நிரம்ப உளராதலின் அது தொலைந்துவிட்டாலும் அவ்விளக்கத்தினை மறந்திருக்கமாட்டார்கள்.

இவைபோன்ற சொற்களுக்கு நாமளிக்கும் விளக்கங்களை எங்காவது உங்கள்
கணினியின் மூலைமுடுக்கில் சேமித்து வைத்திருங்கள். சொற்பொருளை நன்குணர இவை உதவும். எல்லாமும் இல்லையாயின் எல்லையிலா இருளன்றோ நிலவும்!!

-
இச்சொல்லின் முன் நிற்கும் சொல் அகமென்பது.  இது அம் என்று குறுகுதலை
உடையது. தமிழைத் தேர்வுக்காகப் படிக்காமல் ஆர்வுக்காக அலசியவர்கள்
இதை எளிதில் மறத்தலிலர்.  அகம்+கை என்பது அகங்கை > அங்கை என்று
மாறும்.  அகத்துக்காரி ஆத்துக்காரி என்று மாறுதலுணர்ந்தோர் இதை அதிசயித்து நோக்கார். அகம் > அம்.

செல்லுதல் > செல் > செலி.  ஆக, ஒருவனது அகம் செல்லுதலே அஞ்சலி
செயதலாம்.

பாத+ அஞ்சலி = பத + அஞ்சலி >  பதஞ்சலி என்பது அறிக.









சனி, 22 ஜூலை, 2017

Avathaaram அவதாரம்

அவதாரம்

இந்தச் சொல்லை இப்பொழுது பார்ப்போம்.

அவமென்பது அவி+அம்  என்று பிரியும்அவித்தல் என்பது
அழித்தல்; அவிதல் தானே அழிதல்அவிஅழி. இது அம்  
விகுதி பெற்றால்அவம் ஆகும். அழிதல் என்பது  
கெட்டுவிடுதல். எனவே அவமானம் என்ற
சொல்லில்:

அவம் = கேடுமானம்பெருமை. பிறரால் மதிக்கப்படுவது.
ஆதலின் மானக்கேடு என்று இதனை வேறுவிதமாகச்  
சொல்லலாம். மானம் --பழந்தமிழர் இதனைப் பீடு என்றனர்.  
பீடுடைய மன்னன் என்ற சொல்,பீடுமன் > பீஷ்மன்  
என்றானது முன்னர் எழுதியுள்ளோம்.

இனித் தாரம் என்பது காண்போம். தரு+அம் = தாரம்
தாரமாவது தருதல்தாரம் என்ற பலபொருளுடையது
பிள்ளைகளைப் பெற்றுக்குடும்பத்துக்களிப்பவள் தாரம்  
எனபபட்டாள். தாரம் என்பது வருதல்    மீளவும்
வருதல்  என்றும் பொருள்தரும்

தரு> தார் > தாரம்வாழைத்தார்என்பது பழம்
மீளவும் வருதலால் அப்பெயர் பெற்றதுஅவதாரம்
என்ற கூட்டுச்சொல்லில் அழிந்தது மீளவும் வருதல்   
என்பதுபொருளாகிறது.  

வாழை மீண்டும் மீண்டும் பழங்களைத் தந்து
உண்ண வழிசெய்தல் போலவே அவதாரமும் அழிந்து 
அழிந்து தோன்றுதல்  என்று பொருளாகிறது.


எனவே இதை மீண்டும் அறிந்து மகிழுங்கள்

>

வியாழன், 20 ஜூலை, 2017

தலைலாமாவும் இந்தியாவும் சீனித்திருநாடும்.

இந்தியாவுக்கும் அதன் அண்டை நாடான சீனாவுக்கும் சிக்கிம் பூட்டான் முதலியவற்றில் உள்ள நிலப்பகுதிகளை முன்னிட்டு ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமையை உலக அரசியல் முன்னணியினர் எழுத்தாளர்கள் கூறியவற்றைக் கொண்டு வாசித்து அறிந்தோம். இந்த‌
நிலைக்கு யாது பரிகாரம்  என்பதையும் சிலர் எடுத்துக்கூறியுள்ளனர்.

இதில் தொடர்புடைய நாடுகள் நடந்துகொள்ளும் விதம்,  குடும்‍பங்களில்
ஏற்படும் தகராறு போலவே உள்ளது எனில் மிகையன்று.

சீனாவை விட்டு தலைலாமா இந்தியாவுக்கு ஓடிவந்து உயிர்பிழைத்தார்.
இவரைப் பிடித்துத்  திரும்பச் சீனாவிடம் ஒப்படைக்க இந்தியா மறுத்துவிட்டதனால்தான் தகராறு தொடங்கியது என்று சிலர் கூறியுள்ளது
சரியாகவே தோன்றுகிறது.  இன்று வரை இது ஒரு தொடர்கதை .

ஒருவன் மனைவி புருடன் அடிப்பான் என்று பயந்து அடுத்தவீட்டுக்கு
ஓடிவிட, அவளை அடுத்த  வீட்டுக்காரன் உணவும் உடையும் இடமும்
கொடுத்துக் காப்பாற்றினால் எப்படி இருக்கும் அவளை மீண்டும் அடிக்கும்
கணவனிடம் அனுப்ப  மறுத்தால் எப்படி? அதுபோன்றதே இது.

ஆனால் தலைலாமாவுக்கும் சீனாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு மனைவிக்கும்  அவளைப் புடைக்க விரட்டும் கணவனுக்கும் உள்ள‌
தொடர்பை விடக் குறைவானதே. திபேத் என்ற தலைலாமாவின் நாடு
ஒரு தனிநாடு.  சீனாவில்  மன்னர் ஆட்சி நடைபெற்ற காலத்தில்
திபேத்தைச் சீனா ஆண்டதாம். அந்தப் பழைய ஆட்சியை வைத்துச் சீனா
உரிமை கோரிற்று. இந்தியத் தலைவர்கள் அதை அப்போது ஏற்றுக்கொண்டனர். இல்லாவிட்டால் சீனா தொல்லை தரும் என்ற‌
அச்சத்தினால்.

பேச்சுகளின் மூலம் இது தீர்வுற வேண்டுமென்பதே நம் ஆசையாகும்.

சீனிதந்த  நன்னாடு சீனா அதுமீண்டும்
சீனியாம் நல்லமைதி   தந்தாலே ‍‍=== சீனியாம்
ஞாலத் தமைதியே பொன்னாகும் போயினது
கூலம் ஓழிக்கும் வழி.


திங்கள், 17 ஜூலை, 2017

மர் - அடிச்சொல்.

ஒரு சொல்லுக்கு என்னபொருள் என்பது தெரிந்தாலே
 நாம் அதைப் பயன்படுத்த முடிகிறது. பயன்படுத்துதலாவது: 
நாம் அச்சொல்லைப் பயன்படுத்துவதும் பிறர் பயன்படுத்தியதைப் புரிந்துகொள்வதும் என இருவகை ஆம். பொருள்
 தெரியாதபோது எழுப்பப்பட்ட ஒலி ஒரு வெற்று ஒலியே 
அன்றி வேறில்லை. நமக்குப் புரியாத மொழியிற் பிறன் பேசினால்
எழுந்த ஒலிகள் எந்தத் தாக்கத்தையும் நம்மில் 
ஏற்படுத்துவதில்லை. அவன் என்ன சொல்கிறான் 
என்று தெரிந்தவனிடம் கேட்டு அறிந்துகொள்ளும் 
ஒரு நடவடிக்கையை  மட்டுமே 
மேற்கொள்ள முடியும்,   ---  அதுவும்  தேவையானால்.

நம் மொழியிலே நாம் பயன்படுத்தும் சொல்லுக்கே 
என்ன அதன் உரிய பொருள் என்று நமக்கு சிலவேளைகளில் புலப்படுவதில்லை. ஒவ்வொரு சொல்லும் ஏன் 
அதன் பொருளைப் பெற்றது என்பது சில வேளைகளில் 
தெரிந்தாலும் சிலவேளைகளில் தெரிவதில்லை. 


மரம் என்ற சொல்லை  நாம் பயன்படுத்த அறிந்திருந்தாலும் 
அதற்கு ஏன் அந்தப் பெயர் என்று அறியோம். எனவேதான் 
"மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா" என்றார் 
தொல்காப்பியனார். 

பண்டைத் தமிழர் உணர்ச்சி அற்றனவாகக் கருதியவற்றை
 மரம் என்றனர். குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம்
என்ற ஒளவையார் கூறுவதால் இதுவே சரியான
காரணமாம்.கால் மரத்துப்போய்விட்டது என்ற
 வழக்கை நோக்குக.மரத்தல் என்பது வினைச்சொல்.
 ஆனால் இன்றைய அறிவியல் மரங்களுக்கும்
உணர்ச்சி உண்டென்று கூறுகிறது.
இருந்தாலும் பெயர்க்காரணங்களில் நாம் மாற்றமுரைத்தல்
இயலவில்லை.

காரணம் அறிந்த பெயர் காரணப்பெயர் என்றனர். 
 காரணம் அறியாப் பெயர் இடுகுறிப்பெயர். நாற்காலி 
என்பது காரணப்பெயர் என்றாலும் நாலு கால் உடைய
எல்லாம் நாற்காலி அல்ல‌. நாய்க்கும் நாலு கால் இருந்தாலும்
அது நாற்காலி ஆகாது. இத்தகைய சொற்களை
காரண இடுகுறி என்றனர்.



மர் என்பது அடிச்சொல்.
மர் + அம் = மரம். 2
மர > மரத்தல்.
மர் + அணை = மரணை > ஸ்மரணை.
உணர்ச்சியற்ற நிலையால் அணைத்துக்கொள்ளப்படுதல். 1
அணைத்தலாவது அண்மிச்செல்லுதல்.
மர் > மரித்தல்.
மர் + அணம் =மரணம்.
மர் _> மரி + அணம் = மரணம் எனினுமாம்.
மரி + அகம் = மாரகம் (மரணம்).  முதனிலை திரிந்த (நீண்ட) தொ.பெயர்


1.   ஒ.நோ:  தீண்டு > தீட்டு   :.தீண்டின் ஏற்படும் நிலை.
          தீண்டு > தீட்டம் ( மலையாளம்)  தீண்டவொண்ணாதது.  
உணர்ச்சியுண்மையும் அஃது இன்மையும் ஒரே அளத்தலின்  இருகோடிகள்>
ஆகையால் மரி என்ற சொல்லினின்று  ( ஸ்மரணை.)  புனைந்துள்ளனர்.

2 உடல் கட்டை என்று சொல்லப்படும்.

If this post does not appear good on your screen, we are sorry. Edit features are not available now. Will make good later.
















சனி, 15 ஜூலை, 2017

அடு > சடு.

அடு (சடு ‍ சுடு) என்பதன் அடியாகச் சொற்கள்


அடு சடு.
அடு > சட்டு > சட்டி.
அடு > அட்டு > சட்டு > சட்டுவம்.

அடு > சுடு. (அகரம் உகரமாகியும் சகர ஒற்று முன் ஏறியும் நின்றது).

அடு ( அடுத்திருத்தல், இடையீடின்றி நெருக்கமாதல் முதலிய)

அடு > அடுத்தல்.
அடு > அடர். ( அர் வினையாக்க விகுதி).
அடு > அடை.
அடு > அடைதல்,அடைத்தல்.
அடு > சடு > சடம். <,,,,,,,>(ஜடம்)
அடு > சடு > சடலம்.
அடு > (அட்டு ) > அட்டை

அடு (சடு ‍ சுடு) என்பதன் அடியாகச் சொற்கள்


அடு > சடு.
அடு > சட்டு > சட்டி.
அடு > அட்டு > சட்டு > சட்டுவம்.

அடு > சுடு. (அகரம் உகரமாகியும் சகர ஒற்று முன் ஏறியும் நின்றது).

அடு ( அடுத்திருத்தல், இடையீடின்றி நெருக்கமாதல் முதலிய)

அடு > அடுத்தல்.
அடு > அடர். ( அர் வினையாக்க விகுதி).
அடு > அடை.
அடு > அடைதல்,அடைத்தல்.
அடு > சடு > சடம். <,,,,,,,>(ஜடம்)
அடு > சடு > சடலம்.
அடு > (அட்டு ) > அட்டை
அடு  >  ச டு  >  சட் டை 

இன்னும்பல 











நெய், நெயவு, நேயம், ஸ்நேகம்.

நெய், நெயவு, நேயம், ஸ்நேகம்.

நெய் என்பது ஒன்றாக உருகி ஒட்டி நிற்கும் பொருள். நெயவில் அல்லது நெசவில் நூல்கள் பின்னிப்பின்னி இழை அணுக்கமாகத்
தொடுக்கப்பட்டு, துணி ஏற்படுகிறது. நூல்கள் பின்னிப் பிணைகின்றன.
நேயத்தில் இருவர் அன்பினால் உருகி உள்ளங்கள் ஒன்றுபட்டுத் திகழ்கின்றனர். இச்சொற்களில் ஓடும் பரக்கக் காணப்படும் பொருளாவது, அணுக்கமாகச் சேர்ந்திருத்தல் என்ற ஒரு கருத்தே ஆகும் என்பதை அறிந்துகொள்ள இயல்பான அறிவே போதுமானது ஆகும். ஆனால் ஆய்வுத்திறனில்லார் இதை அறிந்துகொள்ளாதது
வருந்தத்தக்கதே.

நெய்.
நெய்தல்.
நெய் > நெயவு > நெசவு.
நெய் > நெய்+ அம் = நேயம். > நேசம்.
நேயம் > நேசம் > நேசன். யகரம் சகரமாதல். வாயில் > வாசல்.
இங்கு யகரம் சகரமாதலோடு, இடையில் இகர உயிரும் அகரமாயிற்று.

யகரம் ககரமாதல் சில சொற்களில் உளது.

நேயம் > நேகம் > ஸ்நேகம்.


நாகம் > நாக் > நேக் > ஸ்னேக்  (ஆங்கிலம்) என்பதும்
ஒப்பு நோக்குக. இடைநின்ற ஐரோப்பியத் திரிபுகள் விடப்பட்டன.



வெள்ளி, 14 ஜூலை, 2017

அதிபர் திரம்பின் ஆதரவை அடைந்த இந்திய........

அதிபர் திரம்பின் ஆதரவை
அடைந்த இந்தியப் பெருநாடு
புதிய திறத்தில் பொலிவோடு
புயத்தை உயர்த்தி நிற்கிறதே!
நிதியில் குறைவே போர்முறைக்கு
நேமித் திருந்த போதினிலும்
பதிய வைத்தது தன்கருத்தை,
பாரோர்  அறிந்து வியந்திடவே!.

அஞ்சிப் பதுங்கி இருப்பதுவோ
அயர்ந்த  தளர்ச்சி அமிழ்த்திவிடும்.
கெஞ்சிக் கிடந்து சுருங்குவதோ
கேட்டை விளைக்கும் இறுதியிலே!
நெஞ்சில் உரமாய் நின்றுவிடில்
நிழலுக் கஞ்சா தவரெனவே
மிஞ்சும் எவரும் உணர்ந்திடவோர்
மேன்மைத் தருணம் உறுத்துவதாம்.

உணர்ந்த பகைமை நாட்டினரும்
ஒன்றித் திருந்தால் உயர்வெனவே
உணர்ந்தும்  அமைதி வேண்டுவராய்
உலகில் உரையாட் டணைந்திடுவார்;
அணைந்த படகின் பயணிகளும்
அச்சம் தவிர்ந்தே இறங்குதல்போல்
இணைந்தே  ஒருமைத்  தரைதனிலே
இனிதே பயணம் பெறமகிழ்வார்.
  

உருபுகளாக்கிப் பாதுகாத்து.......


மனிதன் நகரவாழ்நன் ஆதலின்முன்னர் அவர் சிற்றூர்களில் வாழ்ந்தான்; ஊர்களில் ஒன்றாக வாழுமுன்னர் அவன் வனவாழ்வில்
தினந்துன்புற்றான். வனத்தில் வாழ்ந்தாலும் கருத்தறிவிப்புக் கலையாகிய மொழியை பயன்படுத்திக்கொள்ளும் திறமுடையனாய் இருந்தான். இப்படி வனவாணராய் இருந்த காலத்திலே தான் பெரும்புலமை வான்மிகி முதலானோர் இராமகாவியம் இயற்றினர். அப்படியானால்
வனத்தில் வாழ்ந்தாலும் மொழிப் பயன்பாட்டில் சிறந்துவிளங்கினர்.

ஆனால் அதற்கும் வெகுகாலத்துக்கு முன்பு மனிதன் குகைமாந்தனாய்
இருந்தான்; அதற்குமுன் ஒரு நிலைத்த இடமின்றி அலைந்தான்.

மனிதன் குகைமாந்தனாய் இருக்கையில் அல்லது அதற்குமுன்பே தமிழ்இருந்தது. தமிழ் என்ற பெயரில்லாவிட்டாலும் மொழி இருந்தது.

அக்காலங்களில் இருந்த சில சொற்கள் இன்னும் நம்மிடை உள்ளன.
அ என்ற சுட்டுச்சொல் ஓரெழுத்துடையது. அது அப்போதிருந்தது.
அ என்பது அங்கு. கு என்பதோ இன்னொரு சொல். அது சேரிடத்தைக் குறிப்பது. அதுவும் ஓரெழுத்து ஒருசொல். ஆகவே
" அங்கே போய்விட்டான்" என்று சொல்பவன், "அ கு" என்றுமட்டும் சொன்னான். மொழியே அவ்வளவிலே இருந்தது.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍வீடு கட்டிக்கொள்ள அறிந்த காலத்தில், வீட்டை "அ கு அம்" என்றான். " அங்கு போய் இருக்கலாம்" அல்லது அது இருக்குமிடம்
என்பது தோன்ற : "அ கு அம்" என்றான். இன்று அதை விரித்துச்
சொல்வதானால் " அவண் சென்று அமைக!" என்று சொல்லவேண்டும். நம் தொல்பழங்காலத்து மொழி மறைந்து விட்டதோ எனின், மறைந்தவை போக மிச்சமுள்ளவற்றை இன்னும்
அடையாளம் கண்டுகொள்ளும்படி உள்ளது என்றே சொல்லவேண்டும்.
அதற்காக நாம் ஆனந்த நடனம் ஆடவேண்டுமே!

கு என்பது திரிந்து "கி" என்று வழங்குகிறது, இராமனுக்கு என்பது
"ராமனிகீ" என்று திரிகிறது. கு போன்ற சொற்கள் அழியா வரம்
பெற்றவை ஆகும். தமிழில் உருபாக நிலைத்துள்ளது.

தேய்ந்துவிட்ட சொற்களை வீசிவிடாமல் உருபுகளாக்கிப் பாதுகாத்துள்ளனர் உருபுகள் வந்தவழி இதுவே.

அகம் மிகப் பழங்காலச் சொல். ஒப்பு நோக்க வீடு என்பது அதன்பின்
உருவானது ஆகும். வினைகளிலிருந்து தொழிற்பெயர்கள் திரிந்து
தோன்றியது ஒரு வளர்ச்சி. அது அகம் தோன்றிய காலத்தின்பின்

தோன்றியிருத்தல் வேண்டும்.  

அகமும் வீடும்

/வீடும் அகமும் ஒருபொருட் சொற்கள். எனினும 
அகம் என்பது மனத்தையும் குறிக்கிறது. இன்னும்
 பலபொருள்களும் உள்ளனஅவற்றுள் "உள்"
  என்பதும் ஒன்று. மனம் என்பது எங்கிருக்கிறது
என்று அறிய இயலவில்லை; ஆனால் உடம்பின் 
உள்ளிருப்பதாகஏறத்தாழ நம் இருதயம் இருக்குமிடத்தில்
 இருப்பதாக நம்பப்படுகிறதுநுரையீரலுடன் கல்லீரல்
 முதலியவையும் அங்கு உள்ளன. நினைப்பு.
இரக்கம் என்று இன்னுமுள்ள உணர்வுகளுக்கும் 
சேர்த்து, மூளையே காரணம் என்கிறது அறிவியல்.

சில சொற்கள் அறிவியலுக்கு ஒத்துவருகின்றன;
சில அங்ஙனம் ஒத்துவருவதில்லை.


இப்போது வீடு என்பதைக் காண்போம், இது 
விடு என்ற வினனச்சொல்லிலிருந்து வருகிறது.
  விடு> வீடு. முதனீலை நீண்டு விகுதி ஏதும் 
பெறாமல் அமைந்த சொல். எங்கே வெளியில்
சென்றாலும் நாம் வீட்டுக்கு வந்துவிடுகிறோம்
எல்லாவற்றையும்  முடித்தாலும் முடிக்காவிட்டாலும்
விட்டு வந்துவிடுகிறோம். அதனால் அது வீடு 
ஆகிறது. வீடு என்பதற்கு மேலுலகு அல்லது 
சொர்க்கம் என்று ஒரு பொருளும் உண்டு
அதுவும் விட்டுச் செல்லுதலையே குறிக்கிறது
வீடுபேறு ‍ = துறக்கம்இனி அகம் என்ற 
சொல்லை ஆய்வோம்.

= அவ்விடம்; அங்கு. இது சுட்டடிச் சொல்.
கு = சேர்விடம்; போய்ச்சேர்தல்.

மதுரைக்குப் போனான் என்ற வாக்கியத்தில்
"கு" எதைக் குறிக்கிறது?
போய்ச்சேர்ந்த இடம் குறிக்கிறது.

எங்கு வெளியில்) திரிந்தாலும் போய்ச் சேருமிடமே
வீடு ஆகும்அதுவே (+கு) என்பதுமாகும். அதாவது 
அங்கிருந்து போய்ச்சேரவேண்டிய இடம். +கு 
என்பதில் அம் சேர்த்து, அகம் ஆகிறது. இங்கு 
அம் என்பது ஒரு சொல்லிறுதி அல்லது விகுதி ஆகும்.

விடு> வீடு என்ற முதனிலை திரிந்த ( நீண்ட
தொழிற்பெயரும் அகம் (+கு+அம்) என்ற
சுட்டடிச் சொல்லும்  ஒரு கருத்தையே
வெளிப்படுத்துகின்றன.

மனிதன் உள்ளிருப்பதே வீடு ஆதலின் உள் என்ற 
கருத்து, அகத்தைத் தழுவி நிற்கின்றது. இது பொருத்தமே
மனம் உள்ளிருப்பது என்ற கருத்தில் அகம் மனத்தைக் 
குறித்ததும் பொருத்தமே. மனத்தில் நிகழும் ஒழுக்கம் 
என்ற கருத்தில் அகம் ‍> (அகவொழுக்கம்) குறித்து நின்றதும்
 அதிலிருந்து பெறப்பட்ட பொருத்தமான கருத்தே.

இவ்வொப்பாய்வின் மூலம் வீடு என்பதும் அகம்
என்பதும் ஒத்த கருத்தமைதியில் எழுந்த மிக்கப் 
பொருத்தமுடைய தமிழ்ச்சொற்கள்
என்பது பெற்று அகமகிழலாம்.

will edit later.  edit not available.



புதன், 12 ஜூலை, 2017

யாத்திரை

இப்போது   யாத்திரை என்ற பதம் காண்போம்.

இந்தச்  சொல்  யாத்தல் என்ற தொழிற்பெயருடன் தொடர்பு உடையது.

யாத்தல்  : பொருள்:  கட்டுதல் என்பது.

யா + திரை =  யாத்திரை.

திரை என்பதொரு விகுதி.       இன்னொரு எடுத்துக்காட்டு:   "மாத்திரை".மா= அளவு.  மாத்திரை:  அளவு, ஒலி அளவு.

ஒரு  பயணம் மேற்கொள்கையில் எந்த இடத்தில்   போய்ச்சேர்வது,  எதை எதைக் காண்பது, என்ன என்ன செயல்களில் ஈடுபடுவது,
என்ன ஊர்திகளைக் கொண்டு செல்வது, என்பனவும் பிறவும்  ஒரு கட்டுக்குள் கொண்டுபரப்பட்ட  நிலையைக் காட்டுவது.  பயணத்தின் உள்ளீடுகள்  அனைத்தும் திட்டம் செய்யப்பட்டுள்ளன  என்று பொருள்.

யா>யாத்தல்  (மேலே).
யாத்திரை:  : யாக்கப்பட்ட பயணம்.
யாப்பு : பாடல் கட்டப்படுவது.
யாகம்  :  ஆன்மாவை சடங்குகள் மூலம் கட்டி இறுதியில் இறைவனுடன்  கட்டுவது.
யாக்கை  :   கட்டப்பட்டதாகிய  உடம்பு.    தசை,  எலும்பு  உறுப்புகளால்
கட்டப்பட்டது.






செவ்வாய், 11 ஜூலை, 2017

Terror attack on Amarnath pilgrims.

யாத்திரையாய் அமர்நாத்து நோக்கிச் சென்றார்
யாதொன்றும் யார்க்கெனினும் தீங்கே இன்றி
ஈத்துவக்கும் நெஞ்சினராய் பேருந்  துக்குள்
இனிதாக  ஊர்ந்துகொண்டே இருந்த வேளை
கூர்த்தகொடு தீவிரவா தத்தோர் சுட்டுக்
கொலைசெய்தார் எழுவரையே பல்லோர் காயம்;
ஆர்த்தபிற பயணிகளும் அஞ்சா நெஞ்சில்
அற்றுவிடாப் பற்றுடனே தொடர்ந்து வென்றார்.

இதைச்செய்து முடித்துவிட்டால் காசு மீரம்
இம்மென்று வந்திடுமோ மூட நோக்கில்
பதைபதைக்கப் பலர்செத்த போதும் என்ன‌
பயனையா  பாரிலென்ன கைக்குள் சேரும்;
எதைஎதையோ செய்வதெலாம் ஏறிச் சொர்க்கம்
இயன்றிடவே செய்திடுமோ மூளைக் கேடே!
வதைசெய்து பாவத்தின் வாய்ப்பட் டார்க்கு
வாய்த்திடுமே எரிநரகே அரனே வாழ்க.



ஈத்துவக்கும் = ஈந்துவக்கும், கொடையால் மகிழும்.
இங்கு எதுகை நோக்கி வலித்தல்.

இம்மென்று =  உடனே.

அரனே = கடவுளே







ஞாயிறு, 9 ஜூலை, 2017

நமோஸ்துதே.....வணக்கம்!!

இதுபொழுது புதுவதாய் ஒன்றினை அறிந்தின்புறுவோம்.

நாம் அறிந்துகொள்ள இருப்பது நமோஸ்துதே என்ற தொடராகும்.
நமோ என்பது வணக்கம் குறிக்கும் ஒரு பழஞ்சொல் ஆகும். இதைக்
கழித்தால் நாம் எடுத்துக்கொண்ட தொடரில் எஞ்சியிருப்பது "ஓஸ்துதே'
என்பதேயன்றோ?

நமோ+ ஓஸ்துதே = நமோஸ்துதே.

இந்த இரு துண்டுச்சொற்களும் புணர்த்திய வடிவமதுவாம்.


நமோ என்பதன் இறுதி ஓகாரத்தில் முடிந்ததாலும் ஓஸ்துதே என்பதன்
முதல் ஓகாரத்திலே திகழ்ந்ததாலும், இரண்டு ஓகாரங்கள் உள்ளன.
தேவையற்றதைப் புணர்ச்சியில் எடுத்துவிடுவது மொழிமரபும் இலக்கணமும் ஆகும்.

எனவே ஓர் ஓகாரம் கெடும்.    கெடும் எனில் இலக்கணத்தில்
விடப்படுமென்பது..   எனவே தொடர்  " நம்+ ஓஸ்துதே"   ஆகி, நமோஸ்துதே ஆகும்.

நமோ என்பதை முன்னர் விளக்கி வெளிப்படுத்தியுள்ளோம். ஆங்குக்
காண்க.

ஓஸ்துதே என்பது: ஓதுதே என்ற தமிழ் வினைமுற்று அன்றிப்
பிறிதில்லை.


நமோ ஓதுதே = நமோ என்று ஓதுகிறேன் என்பதற்காகும்.

இதில் ஒரு "ஸ்" ( ஸகர) ஒற்றினை இட்டு, மெருகு பூசி 
தமிழிலிருந்து பெறப்பட்டதென்பதை வெளிப்பாடு காணாமல்
இரகசியப்படுத் த ,   யாவும்  நன்மையாம் .


இப்போது ஒரு புதிய சொல் கிடைத்துவிட்டது. அதைப் பயன்படுத்துவதும்
 அதன் பழமை வெளிப்படாமல் புதுமை
இயற்றுவதும் கைகூடிவிட்டது.இனி நமோஸ்துதே என்பதற்கு
இலக்கணம் கூறுகையில் வேறுவிதமாக அமைந்தது என்று
காட்டினால் மாணவனும் அதில் புதுமை கண்டின்புறுவான்.
இதில் நட்டமென்ன?


எந்த மொழியும் ஒரே நாளில் உருப்பெறுவதில்லை
பல குகைகளிலும் பல மரக்கிளைகளிலும் மனிதர்கள் வாழ்கையில் 
மொழி  உருவாகி ,   பின்னொரு காலத்தில் அவர்கள் பேச்சுக்களையெல்லாம்
 ஒன்றுதிரட்டி  அதுவே   தமிழ் எனப்பட்டது. பின் உருவான மொழி,  
வே ற்றிடங்களிலிருந்து  சொற்களை எடுத்து, இன்னும் பலவற்றுடன் கலந்து
 இன்னொரு புதுமொழி உருவாகும்படி  ஆயிற்று.

. கதிர்காம வேலவா! உலகில் புதியது எது?

புதியது கேட்கின் விதியருள் வேலோய்!

புதிது புதிது புத்தியே புதிது...!

error whilst posting

No  postings done for the past couple of days as internet connection errors and network changes
have occurred frequently and browsers collapsed.

We are sorry about it.

We will resume when things come back to normal.

புதன், 5 ஜூலை, 2017

இன்றுபோய் நாளை வா - சீனா இந்தியா

பல்வேறு நாடுகளுடனும் எல்லைத் தகராறுகள்
உள்ள நாடு சீனாவாகும். சீனா வலிமை குன்றியிருந்த
காலங்களில் இந்தப் பல்வேறு நாடுகளும் சீனாவின்
மண்ணைப் பிடுங்கிக்கொண்டன, அவற்றையெல்லாம்
 திரும்பவும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சீனா
 செயல்படுகிறது. சீனாவுடன் பாக்கிஸ்தான் முதலிய
 சில நாடுகள் விட்டுக்கொடுத்து எல்லைத் தகராறுகளைத் தீர்த்துக்கொண்டுள்ளன.

முன் ஒரு தனி நாடாக இருந்தது திபேத் ஆகும்.
அதற்கும் முன்பு   ஒருகாலத்தில் (பேரரசர்கள்
காலத்தில் )  அது சீனாவின் ஆட்சிக்கு உட்பட்டு
இருந்தது என்ற காரணத்தினால், சீனா அந்நாட்டைத்
தனி நாடாகவே தொடரவிடவில்லை.படைகளை
அனுப்பி எடுத்துக்கொண்டது. அத்துடன் திபேத் என்ற
தனியரசு தவிடுபொடியாகிவிட்டது.

ஒருகாலத்தில்" நாம் ஆண்டது" என்ற நிலையில்
பார்த்தால், அமெரிக்காகூட ப்ரிட்டனிடம் போய்விடும்.
 இந்தியாவின் அருணாசலப் பிரதேசம்கூட
ஒருகாலத்தில் சீனாவிடம் இருந்திருக்கும்போலும். எனவே
அதன் நிலையும் கேள்விக்குறிதான்.

1962ல் நடைபெற்ற சண்டையில் சீனாவிடம்
இந்தியா தோற்றுவிட்டது.நீ முன்பே தோற்றவன்,
வாலாட்டாதே என்று இந்தியாவைச் சீனப்
பத்திரிகைகள் கூட எச்சரிக்கத் தொடங்கிவிட்டன.
அகிம்சை, ஆயுதக்களைவு, படைக்குறைப்பு,
படைவேண்டாம், காவல்துறையே போதும் என்று
பட்டறிவு இல்லாத அரசியல் நடத்தி அன்று அது
தோற்றது. ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட்டன.
அமைதி பேசிக்கொண்டிருந்த சாமியாருக்கு
அநியாய உதை கொடுத்ததுபோல‌ சீனா களத்தில்
விளையாடி வெற்றியைத் தனதாக்கி உலக
வல்லரசு ஆனது.

முன்பே வெற்றிவீரனான சீனா, மீண்டும்
களத்தில் இறங்கித் தோற்றுவிடுமாயின்
பெற்ற பட்டத்தை இழப்பதுடன் வேறு
விளைவுகளும் உண்டாகலாம். சண்டைக்குப்
போகாமல் இருப்பதே "விவேகம்" என்னலாம்.
சண்டையிடத் தயாராய் உள்ளவனை "ஏய், நீ
தோற்றவன், வராதே!" என்பது, மீண்டும் களம்
காணாமல் இருப்பதற்கே ஆகும். ஒரு சண்டையில்
எதுவும் நடக்கலாம்.

மோடியும் கெட்டிக்காரர். தன்வலிமையும்,
மாற்றான் வலிமையும், துணைவலிமையும்
தூக்கிவினைசெய்பவர். சிந்தித்தே செயல்படுவார்.
கார்கில் சண்டையின்போது போதுமான பீரங்கிக்
குண்டுகள் இல்லாமல் இஸ்ரேலிடமிருந்து அவற்றை
இந்தியா உதவியாகப்  பெற்றது. இப்படியெல்லாம்
நடக்காமலும் இவர் பார்த்துக்கொள்வார். இவருக்கு
முன்னிருந்த பேரவை (காங்கிரஸ்) கட்சி அரசுகள்
சில விடயங்களில் கவனம் செலுத்திப்   போர்த்
தளவாடங்களைப்  போதுமான அளவில்
வைத்திருந்திருந்தால் 'தன்வலிமை'    என்று
வள்ளுவன் கூறியதில் தவறு ஏற்படாது.
இல்லையென்றால் எதிரியிடம் இன்றுபோய்
நாளை வா என்பதே சரியாகவிருக்கும்.

இன்றைய போர்க்கலையில் இன்றுபோய் நாளை
வா என்பதற்கு வேறு பொருள் இருக்கிறது.  இராமன்
இராவணனிடம் சொன்னது: " பாவத்தில் மூழ்கிவிடாமல்
சிந்தித்துப் புதியவனாக,  திருந்தியவனாக நாளை
வா" என்பதற்காகத்தான். ஆனால் இன்று அதன்
பொருள்: " நீ வெறுங்கையாய் வருவாய், முன்
போல் உதைத்துப் போட்டுவிடலாம் என்றல்லவா
இருந்தேன்;  பெரிய கத்தியுடன் வந்துவிட்டாய்.
இன்றுபோய் நாளை வா;  நீ வெறுங்கையனாய்
இருக்கையில் பார்த்துக்கொள்கிறேன்"  என்பதற்கே
ஆகும்.

செவ்வாய், 4 ஜூலை, 2017

அனுமான்

இன்று அனுமான் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

அனு என்ற முன்னொட்டினை முதலில் அறிவது நலம்.
அனு என்பது அடுத்து நிற்பது என்னும் கருத்தினை உடைய
சொல்.   இது அணு>  அணுகு > அணுகுதல் என்ற
சொல்லினோடு உறவுடைய சொல் ஆம்.  அணுகு என்ற
வினைச்சொல்லில் கு  என்பது  வினையாக்க விகுதி.
அணு என்பதே அடிச்சொல்.   அணு என்பதில் இறுதி உ.
ஒரு சொல்லாக்க விகுதியே.  பளு என்ற சொல்லில் உ
 நிற்பதுபோலவே இங்கு  உள்ளது.

அணு > அணுகு > அணுகுதல்.

அணு =   அனு.

அனு -  அனுப ந்தம் ;
அனு -  அனுசரணை.
அனு - அனுகூலம்.
அனு - அனுபவம்.

இவைபோன்ற பல சொற்களில் அனு என்பது
முன்னொட்டாக நின்றது.

மன் -  மனிதன் என்பதன் அடிச்சொ.ல்
மன் - மான்  - மான் தன் -  மாந்தன்.
மன் - மன்+தி =  மந்தி.  தி - விகுதி.

இவற்றை இங்கு எடுத்துக்காட்டினோம். விளக்கம் பின்.
மற்றும் பழைய இடுகைகளிலும் காணலாம்.

அனு + மன்:  அனுமன். அதாவது மனிதனுக்கு அடுத்த
நிலையினன் என்று பொருள்.  அனுமான் எனினும் அது .

மன் =  மான் .

இது விரிந்து அனுமன் தன் > அனுமந்தன் என்றுமாகும்.

இவை முன் (  ஐந்து  ஆண்டுகளின் முன் )  விளக்கம்பெற்ற
சொற்களே. அவற்றைப் பகைவர் அழித்தனர் என்று தெரிகிறது.

Will edit. Paragraphs could not be justified.







ர்