வியாழன், 31 ஆகஸ்ட், 2017

அரணும் சரணும்.



அகர வருக்க்ச் சொறகள் சகர வருக்கமாகத் திரியும் எனற்பாலது போதுமான அளவில் முன்னர் நம் இடுகைகளில் விளக்கப்பட்டுள்ளது.  இப்பழைய இடுகைகளை மீண்டும் கவனித்துக்கொள்ளுங்கள்.

இன்று நாம் அணுகவிருக்கும் சொல், முன்னர் ஈண்டும்  பிற தளங்களிலும் யாம் வெளியிட்டதே  ஆகும்.  ஒரு நோட்டுப் புத்தகத்தில் 1  இவற்றைப் பதிந்து வைத்துக்கொள்ளுங்கள். மேலும் சொற்கள் அறியப்படும்போது பட்டியலை வளர்த்துக் கொள்ளுங்க்கள்.

அகர வருக்கம் சகர வருக்கமாகத் திரிவுறுகையைக் காட்டுவதற்குப் பெரும்பாலும் அமண் > சமண் என்பது காட்டுவோம்.  அதாவது எடுத்துக்காட்டாக.

ஆடி > சாடி.  ( நீர்  ஆடும்  கலம் ).
அடு > அட்டி > சட்டி ( அடுதல் = சுடுதல் ).
அடை > சடை. (>ஜடை).
அடர்ந்த மயிர் திரிக்கப்பட்டுத் தொங்குவது ).

“தாழிருஞ்சடைகள் தாங்கித்
தாங்கருந்தவமேற் கொண்டு” (கம்)

அட்டை >  சட்டை.   ( இது உடலை அடுத்து நிற்பது என்னும் பொருளில்.    அடு > சடு..  அட்டை > சட்டை.   இது முன்னர் பாம்புச் சட்டையைக் குறித்த்து).
இங்ஙனமே  அரண் என்பதும் சரண் என்று திரிந்த்து.

சரண் என்றால் பாதுகாத்தல் என்று பொருள்.  அரண் புகுந்தேன் =  பாதுகாப்பு வளையத்துள் புகுந்தேன்.
சரண் புகுந்தேன் எனினுமது.  உன் அரண் அடைந்தேன் ;  பின் அது உன்னிடம் சரண் அடைந்தேன் என்று வழக்கு அல்லது சொல்லும் விதம் மாறிற்று.  எனினும் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை. அடிப்படை இன்னும் தெளிவாகவே உள்ளது.

அரண் என்பதன் உண்மைச் (ஆதிச் ) சொல்லமைப்புப் பொருள் இன்னும் புரிந்துகொள்ளத்தக்கதே.

அரு =  அரிய.
அண் =   அண்முதல், அடைதல்.
அரு+ அண் =  அரண்.

காவலுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் அரியவை. எங்கும் கிட்டாதவை.  எனவேதான் “ அரு” என்ற என்ற சொல்லில் தொடங்கியது. அரு என்ற சொல்லும் மேலை மொழிகளில் சென்றுள்ளது.  இறுதியில் “ரேர்”   rare  என்று ஆங்கிலம் அதை வாங்கிக்கொண்ட்து. ஒரு பழைய மொழியிலிருந்து சொற்களை எடுத்துப்பயன்படுத்துவது இயல்பே.  அதைச் சுட்டிக்காட்டும்போது பெருமைபேசி ஏற்காமையே அறியாமை ஆகும்.









அடிக்குறிப்புகள்:


1.      (நோடு = காண்(தல்) .  நோடு> நோட்டு;  பாடு > பாட்டு போல ). நோட்டா என்ற இலத்தீனிலிருந்து நோட் என்ற ஆங்கிலம் வந்த்தெனில்,  நோட்டா தமிழ்த் திரிபு என்று உணர்க.



புதன், 30 ஆகஸ்ட், 2017

தமிழ்ச் செய்தித் தாள்கள் --



தனிச்சுவையாய் இனித்திடுமாம் தமிழர்நா
டாக்கும் செய்தி;
தரணியிலே இருப்போருள் தமிழர்போல் 
செய்தி தந்தோர்
இனிச்சென்றே எங்கேனும் திரக்கிடினும் 
யாண்டும் காணோம்;
இருப்பனவும் உடைப்பனவும் உடைப்பனசேர்த் 
தாக்கம் என்று
கணிக்கவரும் அனைத்தினையும் கண்டிடலாம் 
செய்தித் தாளில்
காசுதனைப் பார்க்காமல் கடுகிப்போய்  
வாங்கிப் பார்க்க!
மணிக்குடத்துள் யாவினையும் திணிக்கினது 
போன்ற பன்மை
மகிழ்வுறுத்தும் மனமகழ்க்கும் மற்றும்செயும் 
யாவும் உண்மை 

அரும்பொருள்:

ஆக்கும் செய்தி -  வெளியிடும் செய்தி;
திரக்கிடினும் -  தேடினாலும்;
யாண்டும் - எங்கேயும்
உடைப்பன சேர்த்து ஆக்கம் -  பிரிந்தவற்றைச் சேர்த்து அமைத்தல்;
கடுகி = விரைந்து;
திணிக்கின்  = உள் வைத்தால்;
பன்மை - பலவும் இருத்தல்
மனமகழ்க்கும் -  மனம் அகழ்க்கும்;  மனத்தைத்  தோண்டும்;
செயும் - செய்யும்.

சதி என்ற சொல்.



கீழறுப்பு -   சதிநாசம்.

இந்த இரண்டும் கூட்டுச் சொற்கள்.  ஒவ்வொன்றிலும் இருசொற்கள் உள்ளன.   கீழ் என்பது ஒரு சொல். அறுப்பு என்பது ஒரு சொல்.  இவை இரண்டும் தனித்தனியாக வரும்போது அவற்றின் பொருள் வேறுவேறு.    ஒன்றாக இணைகையில் அவை குறிப்பன வேறு பொருள்.  உரையாசிரியர்கள் நச்சினார்க்கினியர் முதலானோர் இரு சொற்களும் ஒரு சொன்னீர்மைப்பட்டு நின்றன என்பர்.  இங்கு நீர்மை என்ற சொல், தன்மை என்பதினும் பொருள் மிகப் பொதிந்தது ஆகும்.   நீர் கலந்துவிட்டால், எது எந்தக் கோப்பையிலிருந்து ஊற்றியது என்று தெரியாத வண்ணம் கலந்துவிடுகின்றது. இரண்டு “தான்”கள் ஒன்றாகும்போது அவை இரண்டறக் கலந்துவிடுவதில்லை.  எனவே  தானிலிருந்து வந்த “தன்” > தன்மை என்ற சொல்லினும் நீர்மை என்ற சொல்லில் பொருள் தெளிகிறது. நன்கு தெரிகிறது.

கரையான்கள் கீழிருந்து அறுப்பவை.  அவை மரக்கட்டையை இரவில் அறுக்கும்போது (அரித்து உண்கையில் ) அதன் ஒலியைக் கேட்கமுடிகிறது.   கட்டையின் மேற்பக்கம் பார்த்தால் தெரிவதில்லை. கட்டை அழகாகவே இருக்கிறது.  அதிகம் அறுத்து உண்டபின்  தெரிந்து என் செய்வது. கட்டையை மாற்றவேண்டி வந்துவிடும்.   ஆகவே கீழறுப்பு என்ற சொல் நல்ல பொருண்மையைக் காட்டுகிறது.  கீழறுப்பு நடவடிக்கை என்பது கரையானின் செயலை ஒத்தது.  இது மொழிபெயர்ப்புச் சொல்லா என்று தெரியவில்லை.

It may have been translated from  the word "subversion". 

சதிநாசம் என்பதும் ஏறத்தாழ இதே போன்ற நடவடிக்கையைக்  காட்டுகின்றது.   சதி என்பது அழிவு, வஞ்சனை மற்றும் துரோகம் என்பன - இப்போது வழங்கிவரும் ஒருபொருட் சொற்கள்.  இப்போது சதி என்ற சொல்லை ஆய்வு செய்யலாம். 

எடுத்துக்காட்டாக முதலில் சவம் என்னும் சொல் மற்றும் தொடர்புடைய பிற காணலாம்.

சாவு +  அம் = சவம்.   சா என்பதே வினையாதலின் இதைச் சா + அம் = சவம் என்று காட்டவேண்டும்.  விளக்கத்தின்பொருட்டு வு விகுதி கூட்டப்பெற்றே முன் இடுகைகளில் காட்டப்பெற்றுள்ளது.
 
இதில் கவனிக்கவேண்டுவது,  சா என்ற நெடில் ச என்று குறிலாகிச் சொல் அமைகிறது.   சில சொற்கள் இப்படி அமையும்.

இன்னொருவனை சாகும்படி வெறுப்புரைத்தல்,  சா > சாபித்தல் > சபித்தல் 1 என்று குறுகும்.  சாதல் மட்டுமின்றி  ஏனைத் துயர்களையும்  அடைக என்று ஏசுதலும் பின்னர் இச்சொல்லில் உட்பட்டுப் பொருள் விரிவுற்றது.   
இதுபோன்று அமைந்ததே சதி என்பதும்.

வினைச்சொல் :  சாய் என்பது.
சாய் >  சாய்தி > சதி என்று அமைந்தது.  முதல் (எழுத்து ) குறுகி
யகர  ஒற்றும் மறைந்தது.   சாய்தி >  சய்தி > சதி என்றும் காட்டலாம்.  செய்தி என்பது  சேதி என்று வந்தது. யகர ஒற்று மறைந்தது.  முதல் நீண்டது.
கெடுத்துச் சாய்ப்பது என்பது சொல்லமைப்புப் பொருள்.. 


-----------------------------
சாவித்தல் என்பர் ஆசிரியர் சிலர்.  சாவித்தல் > சவித்தல் > சபித்தல்.  வ- ப திரிபும் இதில் வருகிறது. 

This post was lost and recovered.  Hence it will be published first to remote -  save and edited later. 

Pl note that either hackers or the autocorrect feature has supplied too many dots in places where they were originally not there. We have corrected them  If it recurs we shall check but feel free to inform us through the comments column.  We shall be grateful.
This also applies to other posts. tq. 






உலக வானில் மோடி உயர்ந்தார்.



[H1] புனலிடைப் புகுந்தே அள்ளி
முகிலென எழுந்து துள்ளி
அனலினை அடக்கி வெள்ளி
ஆகுகா யப்பூ  வாக்கி
துணையிணை தேடா நின்று
தொய்விலாத் திண்மை கொண்டே
அணிபெறு பொழிவு கண்டார்
அமைதியே குறியாய்க் கொண்டார்.

மோடியைச் சென்று காண்பாய்
மோதல்கள் தவிர்க்கு மாற்றைத்
தேடியே அலைந்தி டாமல்
திரட்டி,  கை வரவே  காண்பாய்
வீடொடு நாடும் கூடி
விளங்கிடத் தலைமை ஏற்றுப்
பீடுற நின்ற பெற்றி
பேசிடப் பெற்றேம் பேறே.

டோக்லாம் எதிர்ப்பாடு நீங்கி இருநாட்டுப் படைகளும் திரும்ப்ப் பெற்றுக்கொள்ளப்பட்டமை உலக அமைதிக்கு ஒரு மகுடம் சூட்டியதாகும். இதைச் சாதித்து முடித்த தலைமை அமைச்சர் மோடியின் தகைமையைப்  பாராட்டி  மகிழ்கிறது இந்தப் பாடல். நீருண்ட முகில் வானிலிருந்து பூவாகப் பொழிகிறதென்*கிறது பாடல் தொடக்கம்.  அதுதான் அமைதிப் பூ.  அனல் என்பது போர் அனல்.
அதைப் புனலால் தணித்துப் பூவாய்ப் பொழிந்த்து.
அமைதி வேண்டின் மோடியைப் போய்ப் பார் என் கிறது இப்பாடல்.  ஆகவே அமைதிக்கு ஓர்
ஆற்றுப்படையாம் இக்க்விதை.

அரும்பொருள்:

புனல் -   நீர்
முகில் - மேகம்
அனல் -  தீயின் வெப்ப வீச்சு.
வெள்ளி -  வெண்மை
ஆகு காயப் பூ =  ஆகாயப் பூ.
காயம் -  நிலவு செங்கதிர் உடுக்கள் ஒளிவீசுமிடம்.
காய்தல் - ஒளிசெய்தல்  காய்+அம் = காயம்..
 துணை இணை -  எதிரியை முறியடிக்கத் துணையும் உடன்வருதலும் செய்வோர் (இல்லாமல்)
தவிர்க்கும் ஆறு =  நடக்காமல் செய்யும் வழி
திரட்டி கை -  இங்கு  வலிமிகாது தொகுக்கப்பட்டது.
ககர ஒற்று விடப்பட்டது.  வேண்டுழித் தொகுத்தலும் விரித்தலும் கவியின் உரிமை.
கைவரவே -  உண்மையாய்க் கிட்டவே
பீடு - பெருமை
பெற்றி = தன்மை
பெற்றேம் - பெற்றோம்.  ஏம்   ஓம் வினைமுற்று விகுதிகள்.
பேறு ஏ -  பாக்கியமே.  தேற்றேகாரம்.


;



 [H1]

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

சக்கரம், இரதம் - குமுக முன்னேற்றப் படிகள்.....

நாம் வாகனம் என்ற சொல்லினைப் பற்றிச் சில விடையங்களைச்  [1]1   சிந்தித்தோம். 

கனமான பொருளைச் சுமந்து கொணர்ந்து  சேர்த்தற்கே வாகனங்களும் வண்டிகளும் தேவைப்பட்டன. மனிதர்கள்  தொலைவாகப் பயணிப்பதற்கும் அவற்றைத்  தேடினர்.  தொடக்கத்தில் கழுதை, குதிரை மாடுகள் முதலியன வாகனங்கள்.  தெய்வங்கட்கும் விலங்கு வாகனங்கள் கூறப்படுதலினின்று  இதை உணரலாகும்.

வாகனத்துக்கும் (விலங்குகளுக்கும் ) வாகன உதவி (ஊர்தி) தேவைப்பட்டது.  மாட்டுக்கு வண்டிபோல.

எனவே வாகனம் என்ற சொல்,  விலங்குகளையும் பின்னர் அவற்றோடு பூட்டப்பட்ட வண்டிகளையும் பொதுவாக முன்னர் குறித்திருந்தாலும், இன்று வாகனம் என்று குறிப்பிடுகையில் அது வண்டியைக் குறிக்கிறது. விலங்குகள் வாகனமாகப் பயன்பட்டிருந்தாலும்,  விலங்கு வாகனமாகப் பயன்பட்டபோதே அது வாகனம் 3ஆகும் என்றுணர்க. அல்லாக்கால் அது வெறும் விலங்கே.  அது நிற்க.

வள் என்பது தமிழில் உள்ள மூலச்சொற்களில் சிறந்த ஒன்று ஆகும்.   வள் > வளை.    வளை> வளையம்.  வளை> வளையல்.   வள் > வளி (வளைந்தடிக்கும் காற்று).

இப்போது வண்டிக்கு வருவோம்.

வள் >  வள்+ தி >  வண்டி.  இங்கு தி என்பது விகுதி.
வளைந்த உருளைகள் பொருத்திய, நகரும் இருக்கை  "வண்டி" ஆனது.  ஆள் இருக்கவும் பொருள் இருக்கவும்  வசதி உள்ளது வண்டி.  கீழே வளையமான சக்கரம் அதற்குப் பொருத்தப்பட்ட்து.   

வாங்கு என்றாலும் வளைவு.  வாங்கு வில் = வளைந்த வில்.   வாங்கு = வளைந்த இருக்கை.  வாங்கறுவாள் = வளைந்த அறுவாள்.
வாங்கு2 என்ற சொல் இடைக்குறைந்தால் வாகு.  இடைக்குறை என்னும் சொல் திரிபு தமிழிலக்கணத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.
வாகு+ அன் + அம் = வாகனம் ஆனது. வளைவு பொருத்தப்பட்டு அங்கிருப்பது வாகனம்.  அன் என்பது இடைநிலை.  அங்கு என்றும் பொருள்படுவது. பின் பொருளிழந்து வெறும் இடைநிலையாய் நின்றது.
தலையில் வளைவாக முடி ஒதுக்கப்படுவதும் வாகு ஆகும். 4

வாங்கு+ அனம் = வாங்கனம் > வாகனம் எனினும் அஃதே.

வாங்கு + அன் + அம் என்ற புனைவில் இடைநிலை அன் என்பது அண் என்பதன் திரிபு எனினும் ஒப்புக.  அவ்வாறும் திரிதலுண்மையின்.  அண் என்பதாவது அணுகுதல்.   வளைவாக உருக்கொண்டு அணுகி வரும் ஒன்று என்பதாம் சொல்லமைப்புப் பொருள்.

கனம் எடுத்து வருவது என்றும் இது பொருந்துவதால் இச்சொல் ஓர் இருபிறப்பி ஆகும். 5உருளும் வளையம் பொருத்தியது என்பதும் உணர்க.
வாகனம் என்ற சொல்.   வளைவு பொருத்திய பின், சொல்லாக்கம் பெற்று , பொதி தூக்கி வந்த முற்சேவைக்கும் ( விலங்குகட்கும்   )  “அணிவிக்க” ப் பட்டதென்பது தெரிகிறது. அல்லது விலங்குகளின் முதுகில் வைக்கும் வளைந்த இடத்தை முன்னர் குறித்து, வளை உருளைகள் உண்டான பின் அவை பொருந்திய வண்டியையும் குறித்திருக்கலாம்.   முன்னர் மரப்பட்டையைக் குறித்து இப்போது துணிவகை குறிக்கும் சீலை (சேலை) என்ற சொல் போல்.

அடிப்படைக் கருத்து வளைவு என்பதே.

வள் = வளைவு.
வள்+ தி = வண்டி.  ( உருளை பொருத்தியது ).
வாங்கு = வளைவு.
வாங்கு+ அனம் =  வா(ங்)கனம்.

வளையம்போன்ற உருளை கண்டுபிடிக்கப் படுமுன், ஊர்திகள்  (பல்லக்குப் போல ) தூக்கிச் செல்லப்பட்டன.  ஆள் தூக்குதல், விலங்கு தூக்குதல் எல்லாம் ஒன்றுதான்.  தூக்க வசதி இல்லாத நில இறக்கங்களில், “ வண்டிகள்” அல்லது இருக்கைகள்  சறுக்க விடப்பட்டன. இதில் கயிறு கட்டி இழுப்பதும் அடங்கும். சறுக்க வசதியாக கீழ்ப்பாகம் அமைக்கப்பட்டது.  சறுக்கி அருகில் சென்றது,  சறுக்கு+ அரு+ அம் = சறுக்கரம் ,   இது பின் சக்கரம் ஆனது.   அருகுதல் = நெருங்குதல்.  அண்முதல்.  அடிச்சொல்: அரு.    உருள்வளை அமைந்தபின்னும் அது  சக்கரம்6 என்றே வழங்கியது.  
முதலில் இருக்கையின் கீழ் அரை வளையமாகப் பொருத்தப்பட்டு,  பிற்கால வளர்ச்சியில்  முழு வளையமாகச் சுற்றும்படி இணைக்கப்பட்டது.  நல்லபடி சுற்றும் வளையம் அமைக்கக் காலம் பிடித்திருக்கலாம்.

 இரதம் < இரு+அது+அம்.    இருந்து செல்லும் ஊர்தி.  அது இது என்பன இடைநிலையாக நின்ற சொற்கள் ஏராளம்.  எ-டு:  கணி + (  இ )து + அம் = கணிதம். இரண்டு இகரங்களில் ஒன்று வீழ்ந்தது.  து அஃறிணை விகுதி, இங்கு இடைநிலையாகச் செயல்பட்டது.  அம் என்பது இறுதிநிலை/ விகுதி. இந்த அம் என்பது  அல் > அன் > அம் எனத் திரிந்த சிறுதுணுக்குச் சொல்லே.  ந் > ம் திரிபு பிற மொழிகளிலும் ( சீனாவரை ) உண்டு.  இன்று இரதம் என்பது தெய்வப் படிமைகள் ஊர்தலுக்குப் பயன்படுகிறது.  ஓருருவம் படிந்த  பிடிப்பே படிமை: வினைச்சொல் படிதல்.

அறிந்து மகிழ்க.

------------------------------------
அடிக்குறிப்புகள்
------------------------------------ 

1       (விடுக்கப்பட்ட அல்லது விடுத்தற்குரிய பொருட்பொதிவே விடையம் ஆகும். ) (விடையம்> விடயம்).  

2    வாங்கு = வளைவு.   வாங்குதல் - இதன் அடிப்படைப் பொருள் வளைதல்.  (மு. வரதராசனார் ).

3.  வாகனம் என்ற சொல் இந்தோ ஐரோப்பியத்தில் பெரிதும் வழங்குவதாகும்.   இது  தமிழ். சமஸ்கிருதவழி அங்குச் சென்றிருக்கிறது.

4 வகு > வகுத்தல்,  வகு> வாகு.  தேவநேயனார் இப்படிக் கூறுவதால்,  தலையில் எடுக்கும் வாகு வேறு சொல்;  வாங்கு இடைக்குறை வாகு என்பது வேறு சொல் என்றும் கருத இடமுண்டு.

5 வரு+ கனம் > வார்+கனம் > வா+கனம் = வாகனம்.   வருதல் என்ற சொல்லும் வா என்று திரிதல் கண்கூடு. கனம் என்பது பொருள் கொணரும் வண்டி குறிப்பது ஆகு பெயர் எனலும் ஆம்.

6 சக்களத்தி என்பது சகக்களத்தி என்பதன் திரிபு.   சகக்களத்தி என்பது அகக்களத்தி என்பதன் அ-ச திரிபு.   

 
 திருத்திய  திகதி: 26.9.17.
will review for generated/external insert errors. 
சில பிழைகள் ( புள்ளிகள் ) திருத்தப்பெற்றன.  விளக்கம் சிறிது விரிவுபெற்றது. 
6.3.2020 இரு தட்டச்சு பிழைகள் கண்டு திருத்தம்பெற்றன.