திங்கள், 30 டிசம்பர், 2019

இருபது இருபதே வந்திடுவாய்!

ஆண்டுகளில் இந்த இருப திருபதோ

அருமை பொருந்தியே மலர்ந்திடுக!

தாண்டிப்   பிறந்திடத் துன்பங்களை---ஒரு

தண்மை சுரந்திட  வேண்டிடுவோம்.

ஒன்றுபட்  டுயர்வதே    அறிவுடைமை  ----  அதற்கு
அடிப்படை ஆவதே  அன்புடைமை;
 சென்றபன்  னாட்களைப்  பின்பற்றிப் பிரியாமல்
சேர்ந்திருப் போம் அன்பாய் வாழ்ந்திருப்போம்.

அமைதி  நாடுவோம்  போர்வெறி   சாடுவோம்
அகிலத்தின் ஒற்றுமை தேடிடுவோம்
நமது வாழ்வுக்கு நன்மை நாம்கண்டு
நாடொறும் பீடுறக் கூடிடுவோம்.

அன்பர்கள் யாவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
ஆட்படும் அனைத்திலும் வெற்றியே உங்கட்கு
தண்மடி  நிறைவுறப் பொன்முடி கைவர
வண்விடி வெள்ளியு திக்கட்டுமே.

This post was hacked
இது சரி செய்யப்பட்டுள்ளது 

புத்தாண்டே வருக test repeat

ஆண்டுகளில் இந்த. இருப திருபதோ

அருமை பொருந்தியே மலர்ந்திடுக!

தாண்டிப்   பிறந்திடத் துன்பங்களை---ஒரு

தண்மை சுரந்திட  வேண்டிடுவோம்.

ஒன்றுபட்  டுயர்வதே    அறிவுடைமை  ----  அதற்கு
அடிப்படை ஆவதே  அன்புடைமை;
 சென்றபன்னாட்களைப்  பின்பற்றிப் பிரியாமல்
சேர்ந்திருப் போம் அன்பாய் வாழ்ந்திருப்போம்.

அமைதி  நாடுவோம்  போர்வெறி   சாடு வோ ம்
அகிலத்தின் ஒற்றுமை தேடிடுவோம்
நமது வாழ்வுக்கு நன்மை நாம்கண்டு
நாடொறும் பீடுறக் கூடிடுவோம்.

அன்பர்கள் யாவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

ஆட்படும் அனைத்திலும் வெற்றியே உங்கட்கு
தண்மடி  நிறைவுறப் பொன்முடி கைவர
 வண்விடி வெள்ளியு திக்கட்டுமே.

புத்தாண்டில் எமக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக
கள்ளமென்பொருளை அனுப்பிச் சில [பிழைகளைப் 
புகுத்திய கெட்டிக்காரர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.  
திருத்தினாலும் பிழை  மீண்டும் தன்னை நிலைநாட்டிக்
கொள்வதுதான் இதில் சிறப்பு ஆகும்.
போர்வெறி சாடுவோம் என்பதைப்  போர்வெறி நாடுவோம்
என்று மாற்றியது என்னே திறமை  அடடா.......

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

வெளியிடாத சிறு கவிதை

முன் எழுதி வெளியிடாத ஒரு கவிதையை இப்போது பதிவு செய்கிறேன்.  படிதது  மகிழுங்கள்.


கலகம் செய்யும் மனப்பாங்கு
கல்லெடுத் தெறியும் குள்ளமனம்
உலகம் வியந்த சுதந்திரத்தை
ஒதுக்கி வீசுதற்  கொப்பாகும்.

நிலவும் வேற்றுமை  எதுவேனும்
 கலந்து நின்று   முடிவெடுத்தே
அல்லன மாற்றி நல்லனவே
ஆக்கும் நெறியே அடைந்திடுவீர்





சனி, 28 டிசம்பர், 2019

விபுலாந்த அடிகள். பேராசிரியர்.

விபுலானந்த அடிகள் சிறந்த தமிழறிஞர்.
(1892 - 1947)
அவர் மேற்கொண்ட இது துறவுப் பெயர்.  இதுவும் சிறந்த பெயரே.இங்குக் கூறிய சொல்லாய்வு இடுகைகளைப் படித்துவரும் நேயர்களுக்கு இப்பெயர் எப்படி அமைந்தது என்று தெரிந்திருக்க வேண்டுமே!

இப்போது அதைக் கூறுவோம்.


விழுமிய புலம்  =  சிறந்த நாடு.  விழுமிய புலம் என்பது செந்தமிழ், தனித்தமிழுமாம்.

இதைச் சுருக்கி  விழுபுலம் எனல்.

அப்போதும் இது ஒருசொன்னீர்மைப் பட்டுவிடவில்லை.

விழு , புலம் என்றிரு சொற்கள் உள்ளன.  இன்னும் இது ு  சொற்றொடர்தான்.

விழுபுலம் >  விபுலம்.  இப்போது ஒரு சொல்லாய் விட்டது.  இங்கு ழுகரம் தொக்கு நின்று இடைக் குறை ஆனது.

ஆனந்தம் என்ற சொல்லை ஆய்ந்தால் அது:

ஆ+ நன்று + அம்  என்பவற்றை உள்ளடக்கியது என்று அறியலாம்.

நன்று என்பது நல்+ து >  நன்+து  என்பதுதான்.

நல்+து என்பது நன்று என்றுமட்டும்தான் தமிழில் வருமோ? இல்லையே.  நல்+து = நற்று  என்றுகூட வருவதற்குச் சந்தி இலக்கணம் இடம்தரும். நாம் இன்று  நற்று என்ற சொல்லை மறந்தோம். அவ்வளவுதான்.

நன் து என்பது  நந்து அல்லது நன்-து என்றும் வரலாம்.  முந்து பிந்து என்ற சொற்கள் அப்படி அமைந்தன.  சிந்து என்பதும் அதுபோல.   சின்= சிறிய.  து விகுதி.  சில் > சின் ( ந்  ).  சந்தித் திரிபிலும் அல்லாத திரிபிலும்  ல் -ந் ஆகும்.

நன்று -  நற்று போல சிற்று  என்றும் ஒரு சொல் உள்ளது.  சில்+ து = சிற்று.

எனவே  ஆனந்தம் என்பது  ஆ + நல்(நன்) + து +அம்  அன்றி வேறில்லை.
ஆக அல்லது இறுதியான அல்லது மிக்க நன்றான மகிழ்வுநிலை. நன்மை அல்லது நன்றில் உண்டாவது மகிழ்வு.  உறுபொருள்: நன்மை. அதிற் பெறுபொருளே மகிழ்வு.

விபுலானந்தர் என்பவர் விழுமிய மண்ணில் ஆனந்தமாக இருப்பவர்
என்பது  பொருள்.

நாமும்  ஆ+நன்+து+அம் காண்கிறோம்.

குறிப்பு

உறுபொருள் -  original or etymological meaning
பெறுபொருள்-  derived  meaning



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எழுதும்போதே இடுகைகள் மறைந்து மீளாமற் போவதால் தட்டச்சுப் பிழைகள் இருந்தாலும் பரவாயில்லை, வெளியிட்ட பின் திருத்தலாம் என்றே வெளியிடவேண்டியுள்ளது. பிழைபொறுத்து நலம் நண்ணுவீராக.  எமக்குக் கரைச்சலுக்குக் குறைச்சல் இல்லை என்றாலும் தளர்ச்சி ஒன்றுமில்லை.

திருத்தம் வேண்டின் பின்.

 

 


செவ்வாய், 24 டிசம்பர், 2019

இரத்து > ரத்து இன்னும் சில விளக்கம்.

ரத்து அல்லது இரத்து என்பதை அறிவோம்.

இறுதல் என்றால் முடிதல்.  இதிலிருந்து தோன்றிய எச்ச வினைகள்  :  இற்று :  இது வினை எச்சம்.  இற்றுப் போயிற்று என்பர்.  பெரும்பாலும் இரும்புப் பொருள் பற்றிப் பேசுகையில் இச்சொல் பயன்படும். (  சட்டியில் தூர் இற்றுப் போய்விட்டது என்பது காண்க.)   இற்ற என்பது பெயரெச்சம்.  மூவசைகளால் இற்ற இறுதியடி என்பது காண்க.  பெயரெச்சம் பெயரைத் தழுவி நிற்பது. வினையெச்சம் வினையைத் தழுவி நிற்பது.

இறு என்ற வினைச்சொல் தி  விகுதி பெற்று இறுதி என்ற சொல்லைப் பிறப்பிக்கிறது.   சவ  ஊர்வலம் இறுதி ஊர்வலம் எனப்படும்.   மாநிலங்கள் அவையில் இறுதிக் கூட்டம் என்பது காண்க.

ரத்து என்பது து என்னும் விகுதி பெற்ற தொழிற்பெயர்.  வினைச்சொல்லினின்று உண்டாகும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.  தொழில் என்றது இங்கு வினைச்சொல்லை.

இறு+ து >  (  இறு+ த் + து )  >   இரத்து  > ரத்து.

இச்சொல் திரிபு அடைந்துள்ளது.  விகுதி வந்து புணர, ஒரு தகர ஒற்று (த்) தோன்றியது.  பகுதியின் ஈற்றில் நின்ற றுகரம் றகரமாக மாறிப் பின் ரகரமாகத் திரிந்துள்ளது.  இரவு என்பது ராவு என்று தலையிழந்து முதல் நீண்டு பேச்சு வழக்கில் வருவது போல, இரத்து என்பது தலையிழந்து நல்ல வேளையாக முதலெழுத்து நீளாமல் ரத்து என்று நின்றுவிட்டது.

இதைப் பாருங்கள்:

இரக்கமுள்ள ஆய்  (  அதாவது அம்மன் ) :  இரக்க ஆய் >  இரக்க ஆயி > ராக்காயி.  தலையிழந்து முதல் நீண்டுவிட்டது.  இரக்கமுள்ள அம்மா > இரக்க அம்மா > ராக்கம்மா.

இரவில் வந்து கடிக்கும் ஒரு சிறுவகைக் கொசு இராக்கடிச்சி > இராக்கச்சி > இராக்காச்சி.  நடுவில் வந்த டி என்னும் வல்லெழுத்து மறைவு. கச்சி காச்சி ஆனாலும் கா(ய்)ச்சுவதற்கு ஒன்றுமில்லை.  ராக்காச்சி என்பது தலையிழந்த சொல்.

கேடு > கே > கேது  (   இராசிநாதன் பெயர் அல்லது கிரகத்தின் பெயர்).
பீடுமன்(னன்)  > பீமன் > வீமன்.

கேடுது >  கேது
பீடுமன் > பீமன் என்றும் காட்டலாம்.

வல்லெழுத்து மறைவு கண்டீர்.

இரக்கம் என்பது ரட்சம் என்று மாறும்.  பக்கி என்பது பட்சி என்று மாறும்.

ரட்ச ரட்ச ஜெகன்மாதா......

அருட்பெரும் உலக அம்மை.

இரக்கம் > ரக்கம் > ரட்சம் > ரட்சித்தல்.

ரட்சகர் ஏசு என்ப.

எனவே

இறத்து > இரத்து > ரத்து.

இறு என்பது இர என்று மாறுதல்போல்  வரு + து > வரத்து (போக்குவரத்து )  என்றும் திரிதல் காண்க.

சின்னாளில் மறுபார்வை


எழுந்திரு > எழுந்திரி மற்றும் இரு இரி திரிபுகள்

எழு என்பது அழகான செந்தமிழ்ச் சொல். இதிலிருந்து எழும்பு என்ற வினைச்சொல் பிறந்தது.  ஒரு வினைச்சொல்லிலிருந்து இன்னொரு வினைச்சொல் தோன்றியுள்ளது இதிலிருந்து அறியலாம்.  பு என்ற விகுதியும் வினைச்சொல்லாக்கத்திற்கு உதவுவதை இது தெளிவிக்கிறது .  எழும்பு என்பது சில தமிழ்க்குடிகளிடை "ஒழும்பு"  என்று வழங்குகிறது.  எகர ஒகரத் திரிபு முன்  அறியப்பட்டதே எனினும்  எழும்பு என்பதே பெரிதும் தமிழ்ப் பேச்சினரிடையே பெருவரவினதாகும்.

இந்தப் பாடல் வரியைப் பாருங்கள்:

"அலைகடல் சேரும் வான்போல எழும்பும்
நாமே பார்மேல் ஈடிலா காதலர்"

என்பது காண்ணதாசன் சொல்லழகு. (  எதுகை மோனை அழகை விடுத்துக் கருத்தழகு ஒன்றையே கொண்டு இவ்வரி செல்கிறது.  எழும்பு என்ற சொல் இங்கு கவின் சேர்க்கிறது.  மண்டி என்ற சொல்லைப் பாரதி பயன்படுத்திய பாங்கு போன்றது இது. " ( .......வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.....)."

படுக்கையிலிருந்து எழுவதையும் எழும்பு என்பர்.  பு விகுதி இன்றி எழு என்று மட்டுமே இதைக் குறிக்கலாம்.  எ-டு:  எழு - விழி - நட"  என்ற தொடர் காண்க. ( "விழி - எழு - நட"  என்பதுமது.

எழு என்பதிலிருந்து எழுந்திரு என்ற கூட்டுச்சொல் அமைந்து,  அது பின் எழுந்திரி என்று மாறிவிட்டதுடன், மேலும் எந்திரி என்றும் திரிந்தது.  இங்கு திரிபுகள்:  இரு என்ற ஈற்றுச்சொல் இரி என்று மாறியது.  அஃதேயன்றி  ழுகரம் மறைந்து இடைக்குறையுமானது. எழுத்துத் தமிழை நோக்கப் பேச்சில் வரும் திரிபுகள் மிகுதியே ஆகும்.

ழுகரம் மறைந்து மேலும் திரிபுகளால் தாக்குண்ட இன்னொரு சொல்லை இங்குக் காண்பதும் விளக்கத்திற்கு உதவும்.

ஒரு வாதத்தில் ஒருவன் சரிவு அடையுமாறு இழுத்தல் சர்ச்சை ஆகும். இது சரி ( சரிவு ),  இழு ( இழுத்தல் ), விகுதி ( சை ) முதலியன வந்த சொல்லாக்கம்.

சரி + இழு + சை >  சரி + இ + சை > ச(ர் இ) ( இ )  சை > சர்ச்சை.

ரிகரத்தின் ஈற்றில் நின்ற இகரம் வீழ,  சரி என்பது சர் ஆனது.
வருத்தகம் என்பதில் ருகரத்தின் உகரம் வீழ்ந்து வர்--  ஆனது போலுமிது.
(வருத்தகம் >  வர்த்தகம்).  வருத்துதல் > பொருள் வரச் செய்தல். வரு> வருத்து என்பது வரத்து என்று திரிந்து வருந்து - வருத்து என்ற பிறவினையுடன் வேறுபடும்.   எ-டு:  நீர்வரத்து,  போக்குவரத்து.  வரு என்பதே பகுதி.

இழுச்சை என்பதிலும் ழு முன்பே ஒழியப் பின் இகரமும் மறைந்தது.

மனம் இடுதலைக் குறிக்கும் இடுச்சை என்பது இச்சை ஆனது காண்க.  ழு, டு என்பன மறைதல் இயல்பு.

வழுக்கணை என்பது  வக்கணை ஆனதும் காண்க. (  அணைப்பதும் அணைத்து வழுக்கிச் செல்லும் பேச்சு)

வக்கணைப் பேச்சுக் காரி  பெரிய வாய்வீச்சுக் காரி என்பதுண்டு.


இரு என்பது இரி எனச்  சேரலர் பேச்சில் வரும்.

இன்னும் திரி என்று முடியும் பதங்கள் பல உண்டு எனினும் இத்துடன் முடிப்போம். நீங்கள் ஓய்வு பெற்றபின் தொடரலாம்.

தட்டச்சுப் பிழைகள் பின் திருத்தம் பெறும்.

,






வெள்ளி, 20 டிசம்பர், 2019

பல்வேறு சொற்புனைவுகள். இவற்றுள் "இரு(2)" எப்படி வந்தது?

இருக்கிறான் இருந்தாள் முதலிய முற்றுக்களில் முன்நிற்கும் இரு என்னும் வினை இன்று இடம் குறிக்கும் உருபாகவும்  இல்லம் குறிக்கும் சொல்லாகவும் உள்ள "இல்" என்பதினின்று வந்தது என்பதே முடிபு  ஆகும்.

இல் >  இரு.  (வினைச்சொல் : இருத்தல்).

இடமென்ற சொல்லும் இடு என்பது மிகுந்தானதே  ஆகும்.   இடு + அம் = இடம் என்பதறிக.  இஃது அம் என்னும் விகுதியேயன்றி ஐ என்னும் விகுதியும்  (<மிகுதியும்) பெறும். இடு + ஐ = இடை. அப்போது  இரு இடங்கட்கு இடைப்பட்டது -  நடுவிலது -  என்றொரு சிறப்புப் பொருளையும் உணர்த்தவல்லது. தமிழின் ஏனை  இனமொழிகளில் (திராவிட மொழிகளில் ) இஃது இடம் என்றே பொதுப்பொருள் கொண்டிலங்கு மென்பதும்  அறிக.

இடைபடுதல் ("மூக்கை நுழைத்தல்" என்பது அணியியல் வழக்கு) என்ற வினைச்சொல்லும் உளது.  இடைப்படுதல் என்பது இடையே  வந்திருத்தல் என்பதுபோல் பேச்சில் வருதல் அறியலாம்.

இடு > இரு என்பவற்றின் அணுக்கமும் உணர்க. மடி > மரி என்பது  போலவே இத்திரிபுமாம்.

ஒன்றினோடு இன்னொன்று (வந்து) இருக்குமாயின் அது ஒன்றிற்கு அடுத்த
"  இரு "  அல்லது இரண்டு ஆகும்.  இருத்தல் என்ற வினையடியாகவே இரண்டிற்கும் எண்ணுப்பெயர் வந்துள்ளது காணலாம். ஒன்றை அண்டி இருப்பதே இரு+ அண்டு =  இரண்டு ஆகும்.  அண்டி இரு ( ஒன்றை அண்டி இரு) என்பது முறைமாற்றிச் சொல் அமைந்துள்ளது.  இவ்வாறு  சொல் அமைத்தல் பிற்காலத்தில் பல சொற்களில் பின்பற்றப்பட்டுள்ள முறையாகும்.  தொல்காப்பியனார் காலத்திலே " தாரம் தப்புதல்"  ( மனைவியை இழத்தல் ) என்பது " தப்பு + தாரம் "  > தபுதாரம் என்று குறிக்கப்பட்டது.  ( தப்பு > தபு  என்பது தொகுத்தல் அல்லது இடைக்குறை).   அவிழ்க்கும் இரு கைகளை உடைய பெண்டிரின் சட்டை,  இரு+ அவிழ் + கை >  இரவிக்கை ( ழகர ஒற்று இடைக்குறை)  ஆனது காண்க.  நிறுவாகத்தைக் காக்கும் இல்லமானது  :  கா + இல் >  இல்+ (ஆ) + கா = இலாகா ஆனது திறமையே. பலராலும் உணர்ந்திட முடியாத மறைவுப்புனைவு ஆகுமிது.  { இல்லம் ஆகும் காப்பதற்கு > இல்  ஆ கா}

ஆசு பட இருக்குமிடம்  :   இரு+ ஆசு + இ = இராசி.   இதுவும் முறைமாற்றுப் புனைவே. கிரகம் -  கிருகம் என்பது  இரு+ அகம் >  இரகம் > கிரகம் அன்றி வேறில்லை.  இரகம் என்பது சிரகம் என்று மாறிப் பின் சி என்பது  "கி" ஆகி,     கிரகமானது என்று விளக்கினும் அதுவே.  இராசிநாதன் இருக்கும் இடமே இரு அகம் > கிரு அகம் > கிரகம்.  (  இறகு > சிறகு ).(சேரல் > கேரளம்)

ஆசி என்பது நன்மை நடக்குமாறு  பற்றுக்கோட்டினை வழங்குவதே.  ஆசீர்  என்பது சீராகுக என்பதன் முறைமாற்றுப் புனைவு.  இதன் ரகர ஒற்று மறைந்து ஆசி ஆனது.  ஒரு  முண்டு ( துண்டு, துண்டுத்துணி)  தலையினை ஆசுபடப் பற்றி நிற்க,  அது முண்டாசு ஆகும்.  ஆசீர்வாதம் என்பதில் வாதம் என்பது வாதநோயைக்  குறிக்காது.  வருக தமக்கு ஆகும் சீர் என்பது வாக்கியம். இது  ஆ + சீர் + வா + தம் ஆனது.  வா = வருக; தம் = தமக்கு;  ஆ  =  ஆகும் ;  சீர் = நன்மை.

ஆகும் சீர் :  ஆசீர்,  இது ஆகு + ஊழ் =  ஆகூழ் என்ற பழம்புனைவு போன்றது.  ஆகுபெயர் என்பது இலக்கணக் குறியீடு.

வட்டமாகவோ நான்மூலையாகவோ மாவால் உருச் செய்து அதை சுடுகல்லில் ஒட்டி எடுப்பது:  உரு+ ஒட்டி =  உரொட்டி >  ரொட்டி. இது வேறுவழியிலும் விளக்குறலாம் ஆகையால் இருபிறப்பி ஆகும்.  வகர உடம்படு மெய் சொல்புனைவில் வேண்டியதில்லை.  சொல்லுருவில் துய்யது உரு+து மொழி,  அரபு கலந்தமையின். து விகுதி எனினும் ஒக்கும். படைவீடுகளில் பேசப்பட்டது என்பது கதை.  தெற்குக் கணத்தில் வழங்கிய மொழி தெற்காணம் = தெக்காணம், > தக்காணம் > தக்காணி.

பல்வேறு சொல்லாக்க முறைகளை அறிந்தோம்.

எழுத்துப் பிசகுகள் பின் திருத்தம்பெறும்

செவ்வாய், 17 டிசம்பர், 2019

இலத்தீனில் தமிழ்ச்சொற்கள்

வாழ், வாழ்வு  என்ற சொல்லுடன் விவோஸ்  (வைவோஸ்)  என்ற இலத்தீன் மொழிச்சொல்லுக்கு உள்ள தொடர்பு முன்பு   ஈங்கு விளக்கப்பட்டது உண்டு.

இலத்தீனில் பல தமிழ்ச் சொற்கள் உள. எவ்வாறு தமிழ் இலத்தீனில் புகுந்தது என்பதை ஆய்வாளர்கள் கூறக்கேட்டுணர்க.

அதுபற்றியும் முன் யாம் எழுதியதுண்டு.

இப்போது இன்னொரு  சொல்லை அறிந்துகொள்வோம்.

விழி என்ற சொல்லும் விஸுஸ்  என்று இலத்தீனில் வரும்.

பாழை என்பது பாடை என்றும் திரிதற்கொப்ப விஸுஸ் என்பது விடரே என்றும் திரியும்.  இதிலிருந்துதான் விடியோ என்ற சொல் ( காணொளியைக் குறிப்பது)  வந்துள்ளது.  ஆதலால் தமிழ் "விழி"  (காண் - காணுதல்)  என்பதே வீடியோ என்ற புதுமைப்பொருளுக்குப் பெயரிட வழி செய்துள்ளது என்பதை அறிதலும் மகிழ்வுறுத்துவதே ஆகும்.

வாய் என்ற தமிழ்ச்சொல் வழி என்றும் பொருள்தரும். இது "வயா" என்று இலத்தீனில் புகுந்து பொருள்மாறாது அந்த வழியையே குறிக்கும்.

வேளாண்மை விளைச்சலில் தொடர்புடையோரே காராளர்.  காக்கும்கை காராளர் கை என்று ஒரு பழைய வெண்பா முடியும்.  இந்தக் கரு   (கார்)  என்ற பகுதி கிரிஷி என்ற சொல்லினுள் உள்ளது.  திடல் என்றோ வயல் என்றோ பொருளறியப்படும்  எகர் என்பதிலிருந்து "ஆக்ரிகல்சர்" என்ற சொல் பிறந்ததாய்க் கொள்ளப்படினும்  ஆக்ரி (agri) என்பதில் ஆ என்பதை விலக்க, மீதமுள்ள கிரி  (-gri)  என்பது கிரிஷி என்ற சொல்லில் இருப்பது காணலாம். தமிழிலும் ஆ-  என்பது  ஆகாயம் என்பதில் முன்னொட்டாய் ( prefix )உள்ளது. மூலச்சொல்  காயம் என்பதே.  சூரியன் நிலவு முதலிய காயும் இடம்.   ஆ என்ற முன்னொட்டு  ஆதல் குறிப்பது.  ஆ என்பது வினைத்தொகையிலும் வரும். எடுத்துக்காட்டு:  ஆபயன்.  ( பயனுடையது ஆவது).  (  ஆ என்பதை  மாடு என்று பொருள்கொண்டு,  ஆபயன் எனில் பால், தயிர் வெண்ணெய் என்று  கொண்டாரும் உளர்.

ஆகிரி(agri) என்பதில் ஆ முன்னொட்டு என,  கிரி என்பது வேளாண்மைப் பொருளதாகிறது.

அறிவீர் மகிழ்வீர்.


எழுத்துப்பிழைகள் பின் திருத்தம்பெறும்.

புதன், 11 டிசம்பர், 2019

முன் கவிதை நினைவுகள்

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் வாழ்ந்து மறைந்த இனுக்கா (என்னும் பெயரிய )  கரடி நினைப்பு வந்துவிட்டது.  பாவம் இந்தத் துருவக் கரடி. இது வெள்ளை நிறப் பனிப்புலக் கரடியாகும். யாமெழுதிய அகவற் பா முன்னர் வெளியிடப்பட்டிருந்தது.   அந்தப் பா சென்று முடிந்தது இவ்வாறுதான்:

என்றினிக் காண்போம் இனுக்காக் கரடியே
மென் துணை புரந்தாய் நீயே
நன்றினி நினைத்துப் புலம்புவ தன்றியே

அந்த விலங்கியல் தோட்டத்தில் நட்பார்ந்த மென்மைசேர் துணையாய் அஃது இருந்ததை " மென் துணை புரந்தாய் நீயே " என்ற வரி நினைவுபடுத்தியது.

பனிவளர் மலைப்பகுதி பற்றியும் ஒரு கவிதை எழுதியிருந்தேன். அது:

"கட்டிப் பனிமலைகள்
காணும் இடமெங்கிலும்
ஒட்டிச் செலவியலா
ஒப்பில்  குளிர்வதைப்பே" 

அங்கு ஒரு நரி கிடந்தது:

பனியிற் சுருண்டபடி
படுத்திருக்கும் நரிதான்
தனிமைத் துயர் அறியா
தலைமை விலங்கினமோ

என்று வருணித்திருந்தேன்.

தனித் துயரும் தனிமைத் துயரும் தீர்க்கும் மருந்து தமிழ்க் கவிதைதான்.
கவலையைத் தீர்ப்பதும் கனித்தமிழ் கவியே.

செவ்வாய், 10 டிசம்பர், 2019

குரைப்பவர் குரைக்கட்டும் புதைப்பவர் புதைக்கட்டும்

உகத்தினின்று சுகத்தினைப் பெற்றோம்
ஓர்ந்துணர்ந்  துரைத்திட்டேம் யாம்! ---- கண்டார்
அகத்தினில் ஆத்திரம்  புறத்தினில் குதித்தனர்
அழித்தனர் எம்மிடுகையை.

அழிப்பதன் முன்பலர் ஆயிரம் வாசித்தார்
அதனை அறிந்துவிட்டார்.---- அது
குழிப்புதையல் அன்று கோல வெளிப்பாடு
குரைக்கட்டும் கவலை இல்லை.

திங்கள், 9 டிசம்பர், 2019

சீனாவின் முதல் அரசர் நம் தமிழர்!

சீனாவில் தமிழ்க் கல்வெட்டு பற்றி முன் எழுதியதுண்டு.

ஆனால் முதலில் சீனாவில் அரசு நிறுவியவர்கள் நம்மவரே ஆவர்.

The first two civilizations of ancient China were founded by Dravidian and Manding speaking people who had formerly lived in Africa (Winters,1985,1986). As a result the substratum languages in many  languages spoken in the Pacific are of Manding and Dravidian origin (Winters, 2013).

The Xia Dynasty is considered the first dynasty of the sandai(three Dynasties) of ancient China :Xia,Shang and Zhou. There are many references to the Xia people.

இவ்வாறு ஆராய்ச்சி செல்கிறது.  இது பிறர் ஆய்வு.

ஆப்ரிக்கா கண்டம் குமரிக் கண்டத்துக்கு அருகிலிருந்த கண்டம்தான்.

தமிழுக்கு அங்கும் தென் கிழக்கு ஆசியாவிலும் மொழித்தொடர்பு மிகுதி.

கிமர்  --   குமரி.

அரசு என்ற சொல் இலத்தீன் மொழியிலும் "ரெக்ஸ்"  (Rex) என்று இடம்பிடித்திருந்தாலும் அது தமிழ்தான்.அரசு பின் ராஜ்   (raj) -என்று திரிந்தது.

அரசு >  ராசு  >  ராஜ்  > ரெக்ஸ்
ராஜ் > ரெஜினா   regina  ( அரசி)
ராஜ் > ராய் > ராய  > ரோய்  rai raya roy .

Raya :  Big,  grand in Malay


இவ்வாறு திரிபுகள் பல.

வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_12.html

சாமி என்பதற்கு இன்னொரு பொருள்.

சாமி என்ற சொல்லை முன் சிலமுறை விளக்கியதுண்டு.  அதிலொன்றை இங்குக் காணலாம்.

https://sivamaalaa.blogspot.com/2019/02/blog-post.html


இதுவேயன்றி  இன்னொரு பொருளும் அறியக்கிடக்கின்றது.


சாய்தல் /.  சாய்த்தல் :  இது பேச்சு வழக்கில் இன்னுமுள்ள சொல்.  இது சாயாது என்றால் நடைபெறாது என்பது பொருள்.  " எப்படி முயன்றாலும் சாய்க்க முடியாது என்றால்  "  முடிக்க இயலாது என்பதுதான்.   ஜம்பம் சாயாது என்பதுமுண்டு.

சாய் > சாய்த்தியம் > சாத்தியம் என்பது இயல்வது குறிக்கும்.

வாய்ப்பாடம் சொல்பவர் என்னும் பொருளிய வாய்த்தியார் என்பது வாத்தியார் என்று வந்தமை காண்க.  உப அத்தியாயி என்ற உபாத்தியாயி (  இலக்கணம் சொல்லிக்கொடுப்பவர் ) என்னும் சொல் வேறு. பலருக்கு இதிற் குழப்பம்.

இனி சாமி என்பதன் இன்னொரு பொருள்.

சாய் > சாய்மி  > சாமி :   வேண்டுதல்களைச் சாத்தியமாக்கும் தேவன் என்ற பொருளும்  காணலாம்.

சாய்  >  சாம் > சாமி எனினும் அது. பழநூல்களில் இது சாம் என்று காணப்படுகிறது.

சாய் > சா(யு)ம் இ > சாமி என்று பழங்குடியினரிடை வழங்கிட எளிதான சொல் இது.  சாயுங்காலம் > சாய்ங்காலம் என்று யகர ஒற்று மறையாமலும் வரும்.


இங்கு சில சொற்கள் தரப்பட்டுள்ளன.  வாசித்து மகிழ்க.
https://sivamaalaa.blogspot.com/2019/08/blog-post_29.html

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

பகிரங்கம் என்னும் சொல்

இங்கிருப்பதை அங்கு போய்ச் சொல்வது,  என்றால் உமக்குத் தெரிந்ததைப் பிறருடன் பகிர்ந்து கொள்கிறீர் என்றுதான் அர்த்தம். இக்கருத்தினின்று
பகிரங்கம் என்ற சொல் புனைவுற்றது.

பகிர்தல்,
அங்கு
அம் விகுதி அமைப்பும் குறித்தது.

பகிரங்கம்   -   பகிர் + அங்கு + அம்.

மிக்க எளிமையாய் அமைந்த சொல்.

அறிந்து மகிழ்க.

சொல்லியல் நெறிமுறைகள்: கழுதைச் சொல்

கழுதை என்ற சொல் ஓர் ஒலிக்குறிப்புச் சொல் ஆகும்.

கழுதை காழ் காழ் என்றுதான் கத்துவதாகச் சொல்வர்.  ஆனால் கழுதைஎன்றசொல்லில் கழு என்பது பகுதியாகவும் தை என்பது விகுதியாகவும் உள்ளன. ஆகவே அது "கழு கழு" என்று கத்துவதாகச் சொல்லலாம் என்றால் பொருத்தமாகத் தோன்றவில்லை.

கத்துமொலி  காழ் என்பதுதான். சொல்லமைப்பில் காழ் என்பது குறுக்கப்பட்டு, கழு என்று அமைத்துள்ளனர். அதுவே சரியென்றும் சொல்லவேண்டும்.

இனி, கழு+ தை என்று பகுதியையும் விகுதியையும் புணர்க்கும் போது, கழுத்தை என்று வலிமிக்கு வராமல் கழுதை என்று மெலிந்தே (அதாவது தகர ஒற்று இரட்டிக்காமல்)   சொல்லில் வருகிறது.  இதே வலிமிகாமையை விழுது, பழுது,  முதலிய வேறு சொற்களின் அமைப்பிலும் காணமுடிகின்றது.

சொல்லமைப்பில் புணரியல் ( சந்தி) இலக்கண விதிகள் பின்பற்றப்படுவதில்லை. நிலைமொழியும் வருமொழியும் புணர்வது வேறு.  அடிச்சொல்லும் விகுதியும் இணைவது வேறு.  விகுதி  வருமொழி அன்று.

மேலும் ஒரே பகுதி விகுதி, இருவேறு விதமாக இணைந்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைப் பிறப்பிக்கலாம். எடுத்துக்காட்டு:

அறு + அம் = அறம்.
அறு + அம் =  அற்றம்.

குறு + அம் =  குறம்.  ( குறி சொல்லுதல்)
குறு + அம் = குற்றம் (  குற்றச்செயல்.)  (  சிறுமைசேர் செயல்).

குறு = குன்று.  சிறிய மலை.
குறு = சிறு(  மை )

அறிவீர் மகிழ்வீர்

தட்டச்சுப் பிழைகள் -   திருத்தம் பின்.


சனி, 7 டிசம்பர், 2019

ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ (ஆடகம்)

ஆட்சி செய்தல் என்பதைக் கருதுகையில் இது மனிதனை மட்டுமின்றி ஏனைப் பொருள்களையும் ஆளும் பொருளாகவும் ஆளப்படும் பொருளாகவும் உட்படுத்தும்.  நக்கத்திரங்களும் மனிதனை ஆட்சிபுரிவதாகச் சோதிட நூல்கள் கூறும்.  நக்கத்திரம் சொரிகின்ற அல்லது சோர்கின்ற கதிர்கள் நம்மை வந்தடைந்து நம் நடவடிக்கைகளை  ஆதிக்கம் புரிவதனால், சோதிடக் கலைக்கு அப்பெயர் வந்தெய்தியது.

சோர் + து + இடு + அம் =  சோர்திடம் > சோதிடம் ஆயிற்று. அல்லது
சோர்+ திடம் > சோதிடம் எனினுமது.

சோரும் அல்லது சொரியும் கதிரலைகள் நம்மேல் இடப்படுவன, நம்மை ஆள்வன.

மேகநீர் இடைந்து தளர்ந்து உருகி மழையாகச் சோர்ந்து சொரிகிறது...!!!

குளிர்க்கட்டி சோர்ந்து நீரைச் சொரிகிறது.

சொரி <> சோர்.

சேர் > சோர் > சார்.

இவை நிற்க.

இப்போது ஆடகம் என்ற யாம் கருதிய சொற்கு வருவோம்.  இதை ஆள்+தகம் என்று பிரிக்கலாம்.   தகமென்பது தகு+ அம் = தகம். மற்றும் தக+ அம் = தகம்.

தக, தகத்தக என்பது ஒளிவீச்சுக் குறிப்பு.  பொன்னும் தங்கமும் ஒளிவீசுவன.

தகத்தக என ஒளிவீசி நம்மை ஆட்சிசெய்வது,  எனவே:  ஆள் + தக+ அம்.

இது "ஆடகம்"  என்றாகும்.

ஆடகமாவது பொன்.  இது பொன்னில் ஒரு வகை என்ப.

ஆடகம் என்பது ஆடுமிடம் என்றும் பொருள்தரும்.  இது ஆடு+ அகம்  எனப் பிரிப்புறும்.  கூத்தாட்டு அவைக்குழாம் எனினுமது.

ஆக இருபொருளது இச்சொல்.

சிலப்பதிகாரத்திலும் சைவத்திருமுறையிலும் ஆடகப் பொன் பற்றிய குறிப்புகள் உள.

"ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
அன்றுமின்றும் என்றுமே என் ஆவியடி நீ"

(கண்ணதாசன் வரிகள் .)

அறிவீர் மகிழ்வீர்.


தட்டச்சுப் பிழைகள் திருத்தம்  - பின்.




அரங்கசாமி > ரங்கசாமி

ஆற்றிடைக்குறை நிலத்துண்டில் சீராக அமர்ந்திருப்பவர் அரங்கனார் என்னும்
மாவிண் மன்னவராகிய  ( ஐந்திலொன்றாகிய) முன்னவர்.  அவர் அமர்ந்திருப்பதே அரங்கம்.

அரங்கு  >  அரங்கன் > ரங்கன்.

ரங்கன் > ரங்கசாமி.

சீர் அரங்கம் > சீரரங்கம் > சீரங்கம்.  இரு  ரகரங்களில் ஒன்று வீழ்ந்தது.  திரிபுச்சொல்.


தமிழறிஞர் கி ஆ பெ விசுவநாதமும் இது ( அரங்கு அரங்கசாமி என்பது)  கூறியுள்ளார்.

விண் விசும்பு எனவும்   படும்.
ஐந்து   என்பது :  நிலம் தீ நீர் வளி விசும்பு.  ஆக ஐந்து. ( தொல்.)

விண்ணு > விஷ்ணு.
விசு (தமிழ் )  > விஷ்.
சீரங்கம் > ஸ்ரீ ரங்கம்.  மெருகூட்டுச் சொல்.


விசுவம்  என்பது விசும்பையும் (விண்ணையும்) உள்ளடக்கிய உலக விரிவு.
விசும்பு விசுவம் என்பன ஓரடியின.   விஸ்வம் என்பது மெருகூட்டு.


குறிப்பு: -  இவ்விடுகை பழம்பதிவின் சாரம்.          
இக்கருத்து 2014-5 வாக்கில் இடுகைசெய்யப்பட்டது.

ரோமம்

ரோமம் என்ற சொல்லை ஆய்வுசெய்வோம்.

பண்டைத் தமிழர் மயிர் என்று சொல்லப்படும் முடிக்கு உற்றறியும் திறம் இருப்பதாக நம்பினர்.

அதனால் ரோமம் ( றோமம் ) என்ற சொல்லை உண்டாக்கினர். உற்றறியும் உணர்வுக்கு உரிய " உறு"  என்பதையும் அதைக் காப்பது என்னும் பொருளில் "ஓம்"  (ஓம்புதல் ) என்பதையும் இணைத்து அம் விகுதி கொடுத்தனர்.

உறு + ஓம் + அம் -=  உறோமம் என்ற சொல் அமைவுற்றது.

ஆற்றிடையில் அமைந்த நிலத்துண்டும் அரங்கு என்ற பெயரைப் பெற்றதும் ஆங்கு அமர்ந்த தேவன் அரங்கனாகிப் பின் அகரம் தொலைந்து ரங்கன் ஆனதும் போல்  பல சொற்கள் தலையெழுத்திழந்து உலவின.

 சொற்றிரிபு காத்தலும் அரிதே.

உறோமம் என்பதும் தவறாக றோமம் ஆகி, முன் வடிவு உணராமையின் ரோமம் என்று தவறாகத் திருத்தப்பெற்றது.

இவ்வலைப்பூவில் காணக்கிட்டாதெனினும் இது யாம் முன் கூறியிருந்ததே ஆகும்.

உரோமம் என்ற திரிசொல்லும் அழகுடன் அமைவுற்றதே என்றறிக.

ரோம் என்பது பகுதியாகக் கொண்டு அமைப்பை அறிய முற்படின் அஃது இருளிற் பொருளைத் தேடியதுபோலவே இறும்.

அறிவீர் மகிழ்வீர்.


தட்டச்சுப்  பிழைகள் தோன்றின் பின் திருத்தம் பெறும்
வே






புதன், 4 டிசம்பர், 2019

சுவர் என்ற சொல்லின் தோற்றம்.

தமிழ் மொழியில் உள்ள மூலவடிச் சொற்களில் " சுல் " என்பதும் ஒன்றாகும்.

சுல் என்பதே து என்னும் வினையாக்க விகுதியைப் பெற்று  சுல்+து = சுற்று என்ற வினைச்சொல் பிறக்க வழிசெய்தது.

சுவர் என்ற   சொல்லும் இம்மூலத்தினின்றே தோன்றியதாகும்.

சுவர் என்பதை "  சு + அர் " என்று பகுத்தால் இடையில் நிற்கும் வ் என்ற மெய் உடம்படு மெய் என்பது துலங்கும்.  அர் என்பதோவெனின்  அரு> அருகு > அருகுதல்  என்பதிற் காணும் நெருங்கி நிற்றல்,  இடைவெளியைக் குறைத்தல் என்னும் பொருளிய அடிச்சொல் என்பது புரிந்துகொள்ளலாம். இன்றும் அருகில் என்ற சொல்லில் இத்தொலைவின்மைக் கருத்து பளிச்சிடுகின்றது அறியலாம்.  அர் என்பது மூலமாக, ஈற்று உகரம் (அர்+ உ)  "  நெருங்கி முன் (நிற்றல்)  என்ற பொருளை வருவிக்கிறது.  உ(  சுட்டு ) : முன்.

சுவர் என்பது கூரையுடன் நெருங்கி அதை மேலணைத்தவாறு சுற்றி நிற்கிறது. இவ்வளவையும் இப்பகுப்பாய்வே தெரிவிக்கிறது.  இடர்ப்பாடு ஒன்றில்லா இனிமை இதுவாம்.

சுல்  > சு  (கடைக்குறை).

அர் என்பதிற் பொருள் காணாமல் வெறும் விகுதி என்று மட்டும் கொண்டால்,
சுவர் என்பது வீட்டைச் சுற்றி நிற்பது என்று மட்டுமே பொருள் கொண்டதாக ஏற்படும்.

சுவரில் ஒட்டிய கீரைக் குழம்பைச் "சுவத்துக் கீரை" என்றனர்.  ( பண்டித வி. சேகரம் பிள்ளை (1938). புதிய உலகம் மாத இதழ்). கோழிக்கறியை எதிர்பார்த்துச் சாப்பிட உட்கார்ந்த கணவன், கீரைக்குழம்புதான் தட்டிலுண்டு என்றறிந்து கோபம் கொண்டு,   வைத்த அக்குழம்பினைத் தூக்கிச் சுவரில் அடித்தானாம். வேறொன்றும் இல்லை என்று மனைவி கூற, "சுவத்துக்கீரையை வழித்துப் போடடி சுரணை கெட்ட பொண்டாட்டி" என்று வைதானாம்.  சுவத்தில் என்பது பேச்சு வழக்கு.

சுவர் என்பதே இப்போது கிட்டும் சொல்லாகும்.  இது சுவறு என்றிருந்தாலே பேச்சில் சுவத்தில் என்று வரவேண்டும். சுவறு என்பதை மீட்டுருவாக்கம் செய்தால்  " சுற்றி அடைக்கப்பட்டது"   (சு + அறு ) என்ற பொருள் கிட்டும். அறுக்கப்பட்டது அறை எனல்போலவே  வெளிச்சுற்றாக எழுப்பப்பட்டதுமாகும்.   எனல் ஒக்குமாறு,  சுவறு என்ற மற்றொரு வடிவம் மொழியில் இருந்து அஃது இறந்திருக்கலாம். இவ்வாறு கொள்வதிற் கடினம் ஒன்றுமில்லை காண்க.

பழையன கழிதலென்பது வழக்கமான நிகழ்வே.

தட்டச்சுப்பிழைகள் பின் திருத்தப்பெறும்.



வியாழன், 28 நவம்பர், 2019

ரோகியுடன் சில சொற்கள்

இன்று "ரோகி" என்ற சொல்லினை அறிந்துகொள்வோம்.

மனிதன் "உறுகின்ற"வற்றுள் முதன்மையாக வெறுத்து ஒதுக்கற்குரியது நோய் என்று சொல்லலாம். இதற்குக் காரணம் நோய் என்பது முற்றினால் உயிரிழப்புக்கு இட்டுச் சென்றுவிடும்.  அப்புறம் அம்மனிதன் உலகின்கண் இலனாகி விடுவதால் நோய் அஞ்சத்தக்கது. நல்லவேளையாக நோய் நீங்கி வாழ மனிதன் பல்வேறு சிகிச்சைகளைக் கண்டுபிடித்துள்ளான். சிகிச்சையாவது சீர்படுத்திக்கொள்ளுதல்.   சீர்ச்சை > சிகிச்சை.  சீர்ச்சை சிகிச்சை என்பவெல்லாம்  "சீர் செய்" என்பதன் திரிபுகளே.   ஆதலின் இவை திரிசொற்கள்.

செய் என்பது சை எனத் திரியும்.  எடுத்துக்காட்டுகள்:

செய்கை >  சைகை.
பூ செய் > பூசை.  (>பூஜை).
நன்செய் >  நஞ்சை
புன்செய் >  புஞ்சை
தண்செய் > தஞ்சை  (ஊர்ப்பெயர்).

சீர் என்ற சொல்லும் சொல்லிறுதியில் சி என்று குறுகிவிடும்.

வன்சீர் >  வஞ்சி.  (வஞ்சிப்பா )

இனி நோய் என்னும் ரோகத்தையும் நோயுடையோனாம் ரோகியையும் சந்திப்போம்.

கெடுதல் குறிக்கும் ஊறு என்ற சொல்லும் உறு என்ற வினை முதனிலை திரிந்தமைந்ததாகும்.  முதனிலை நீண்டுள்ளது.  படு > பாடு எனற்பாலதுபோல் உறு > ஊறு ஆயிற்று.

உறுவது ஓங்குவதே ரோகம்.

உறு ஓங்கு அம் >  உறு ஓகு அம் >  உறோகம்.
இச்சொல் தலையிழந்து  றோகம் > ரோகம் ஆயிற்று.

ரோகமுடையான்  ரோகி.

ரோகம் ரோகி என்பவெல்லாம் திரிபுகள்.

ஒருவேளையே உண்பான்  யோகி;
இருவேளை உண்பான்  போகி;
மூன்றுவேளையும் முடிப்பவன் ரோகி.

இவ்வரிகளில் ரோகி என்ற சொல் இலங்குவதாகிறது.

அறிவீர் மகிழ்வீர்.


குறிப்புகள்

இலக்கணம்

ஓங்கு >  ஓகு  (  இடைக்குறை).
ஓகு > ஓகம்.

சீர்ச்சை  >  சிகிச்சை.    பகு என்பது பா என்று திரிந்தன்ன சீ(ர்) என்பது சிகு> சிகி ஆனது.  இது மறுதலைத் திரிபு  மற்றும் உகர இகரத் திரிபு.

இவை போல்வன எம் பழைய இடுகைகளிற் கண்ணுறுக.

ஓகம் என்பதே பின் யோகமும் ஆனது.  பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் வாழ்ந்தவர்.  சூழ்ந்து திறமாக அமைவுற்றது சூத்திரம்.  (சூழ்த்திறம்  > சூத்திரம்,  இது வாழ்த்தியம் > வாத்தியம் போலும் திரிபு ஆகும்.)

தட்டச்சுப் பிழைத்திருத்தம் பின்.

சனி, 23 நவம்பர், 2019

யாதவர்

வகரமும் மகரமும் தொடர்புடை ஒலிகள்.  ஒன்று  மற்றொன்றாக மொழியில் திரிந்து வரும். இப்படித் தொடர்புபட்டு வரும் சில கிளவிகளைக் கண்டு போல வருதலின் போலி என்றனர் தமிழிலக்கணத்தார்.  இலக்கண நூல்களில் இவ்வாறு தெரிவித்த இவ்வாசிரியர் மிக்க நுண்ணறிவுடையோர் என்று நாம் அவர்களைப் புகழலாம். அவர்கள் அதைச் சொல்லாமல் நீரே இதைக் கண்டு உணர்ந்திருந்தால் உம் நுண்ணறிவினுக்காக நீரே உம் முதுகில் நாலு தடவை தட்டிக்கொடுத்துக்கொள்ளலாம்.

செய்யுள் இயற்றும்போது முதலில் வகரத்தில் தொடங்கிய ஒரு வரிக்கு அடுத்த வரியிலும் வகரத்தில் தொடங்க ஒரு சொல் கிட்டவில்லையென்றால்
(  மோனை )  மகரத்தில் தொடங்கிக்கொள்ளலாம்.  மோனை கிட்டிவிட்டதென்று தட்டிக்கொள்ளலாம் உம் கைகளை.

பொருள் மாறாமல் எழுத்துமட்டும் மாறியிருந்தால் ஆனந்தம் தான். எடுத்துக்காட்டு:   மிஞ்சுதல்  > விஞ்சுதல்.  பொருள் அதே.

சில வேளைகளில் எழுத்தும் மாறிப் பொருளும் சற்று மாறியிருக்கும். உதாரணம்:

மிகுதி  > விகுதி.

விகுதி என்பது சொல்லில் இறுதியாக மிகுந்து நிற்பது.

தணி > தணிக்கை.  இங்கு கை என்பது தனிப்பொருள் ஏதுமின்றிச் சொல்லை மிகுத்து  வேறு பொருளை வருவித்தமை காண்க.

இது நல்ல உது+ஆர்+ அண் +அம்.  ( நிறைவாக அண்மி முன் நிற்கும் ஒரு சொல் ). உது - முன் நிற்பது.  ஆர்(தல்) : நிறை(தல்). அண் : அண்மியது.  அம்: விகுதி.

சரி. இனி யாதவர் என்ற சொல்லைக் கவனிப்போம்.

ஆகரத்தில் தொடங்கிய சில சொற்கள் யாகாரத்திலும் தொடங்கிடலாம்.

ஆனை > யானை.
ஆடு > யாடு.
ஆதல் >  யாத்தல். ( மாறித் தொடங்கியது மட்டுமின்றி தகர ஒற்றும் தோன்றிற்று ). யாத்தல் எனின் தானே ஆகுவதன்றி ஆக்கப்படுவதாகும். புலவன் பாவினை ஆக்குகின்றான்.  அவனே ஆக்கியோன்.
ஆக்குதல் > யாக்குதல்
ஆண்டு > யாண்டு
ஆறு > யாறு.
ஆமை > யாமை.
ஆய் > யாய்

யாதவர் என்ற சொல்லில் முன் நிற்பது உண்மையில்   "ஆ" தான்.   ஆ என்றால் மாடு.  ஆ என்பதே யா ஆகி நின்று உம்மை மயக்குகிறது.

தவர் என்பது தமர் ஆகும்.  மேலே வகரம்<> மகரம் பரிமாற்றம் கூறினோம்.  அதை மீண்டும் பார்த்து மனப்பாடமாக்கிக் கொள்க.

மொழி இடை வரு இத்தகு பரிமாற்றத்திற்கு இன்னொரு காட்டு:

அம்மையார் >  அவ்வையார்  ( மகரம் வகரமாகிப் பரிணமித்தது.)

*ஆகவே  தமரே தவர்.   தமர் எனின் தம்மவர்.

ஆக்களை மேய்க்கும் தம் பெருமக்களே யா+தமர் >  யா+தவர்.

தவர் என்பதைத் தவமுடையார் என்று விளக்கினும் ஒக்கும்.

வட இந்திய மொழிகளில் பல தமிழ்ச் சொற்கள் அன், அர் . அள் முதலிய ஒழிந்து வழங்கும். அவ்வதே நிகழும் ஈண்டுமென்றுணர்க.

தமிழ் மொழி இயன்மொழி ஆயினும் பற்பல - எண்ணிறந்த திரிபு வசதிகளைத் தன்னகத்தே இயக்கிக்கொண்டு உலக மொழிகளையும் வளப்படுத்தியுள்ளமை உணர்க.


அறிவீர்  மகிழ்வீர்.

திருத்தம்
7.12.2019 ஓர் எழுத்துப்பிழை  * (அ - ஆ) திருத்தம் செய்யப்பட்டது.

வெள்ளி, 22 நவம்பர், 2019

கடற்பரப்புக் குறிக்கும் சொற்களும் பிறவும்.

பரவை என்ற தமிழ்ச் சொல்லுக்குக் கடல் என்று பொருள். கடல் மிகப் பரந்தது (பரப்பு உடையது ) என்று     நம் முன்னோர்கள் 6எண்ணியதால் இச்சொல் மொழியில் எழுந்தது.  இதேபோல் கடவுளும் அங்கு இங்கு எனாதபடி எங்கும் பரவி நிற்பதாக உணரப்படுபவர் என்னும் கருத்தினால்  அவர்க்குப்  '"பரம்பொருள்"   என்ற பெயர் ஏற்பட்டது. இதன் முதலாகிய பரம் என்பதும்  "பரன்" என்று மாறி அக்கடவுளுக்கு ஆண்பாற் பெயரானது.  இன்னும் பரம் என்பதே  அன் விகுதி பெற்று  பரம்+ அன் = பரமன் என்று அக்கடவுளையே குறித்தது.

மனிதர் உள்ளிட்ட மரம் செடி கொடி விலங்குகள் என எவற்றின்பாலும் அன்பும் அருளும் உடையவனாகிப் பரந்த நோக்குடன் வாழ்ந்தவன் :  பர >  பார் > பாரி எனப்பட்டான். ( முல்லைக்குத்   தேர்   கொடுத்தோன்   )

கடலைக் குறிக்கும் பரவை என்ற சொல்லுடன் தொடர்புடைய சொல்லே மீனவரைக் குறிக்கும் சொல்லாம்  "பரதவர்:" என்ற சொல்லும்.  மீன்விலைப் பரதவர் என்பதும் காண்க.  இது பர + து + அ + அர் என்ற உள்ளீடுகளை உடைய சொல்லாகும்.  இதில் வல்லொற்று வரல்வேண்டும் என்று வாதிட்டாலும், அது  பயனின்மை கருதிப் பின் குறைவுறும். அஃதன்றியும் பரத்தவர் எனின் பரத்துக்கு உரியோர்  என்று பொருள்பட்டு   பொருள்  மயக்கம் விளைக்குமென்றும் அறிக.  பரதவர் என்பதே ஏற்புடை வடிவம்.   [பரத்துக்கு  =  கடவுட்கு]

முப்புறமும் கடல் சூழ்ந்த ---   கடல் நாகரிக ----  நாடு என்பதே பாரத நாடாயிற்று.
பரதவ மக்களின் நாகரிகத்தில் ஓங்கிய நாடே பாரத நாடு.  பாரதம் என்பதும் அது.  இம்மக்கள் அரசோச்சிய பண்டை நிகழ்வுகளை நினைவுகூர்வதும்   மகாபாரதம் ஆகும்.

மறுபார்வை பி ன்

திங்கள், 18 நவம்பர், 2019

நந்தலாலா : லாலா இசை வருவித்தல்

நந்தலாலா என்பது வட இந்திய மொழிகளில் இன்பொருள் தருதல்போலவே தமிழிலும் இனிய பொருளைச் சேர்க்கவல்ல தொடர்.

நம் தலைவர்.
நம் தலை  >  நந்தலா.

தலை என்பது தலா என்றும் திரியும்.

தலா பத்துக் காசு என்பது தலைக்குப் பத்துக் காசு என்பதே.

கவிஞன்  மன்னவா வா\கொஞ்சவா வா என்று எழுதினால் சில சொற்களை இணைத்து இசை வருவித்தலே ஆகும்.  சில வேளைகளில் இனிமையும் சேரும்.

நம் தலா > நந்தலா-லா -  லாலா லாலா!

இப்படி வந்துறும் லாலாவிற்கும் பொருள்கூட்டிக்கொள்ளுதல் இயல்பு.

உபயம் சொல் இருபிறப்பி.

கோவிலுக்குப் போனால் உபயம் என்ற சொல்லைக் கேட்கமுடிகிறது.

இன்று எல்லாத் தெய்வங்களுக்கும் பூசனைகள் செய்தற்குக் கோயில் பயன்பாட்டினை மொத்தமாக ஒருவர் மேற்கொண்டால் அதை உபயம் என்று சொல்வர்.

இச்சொல்லை இருவிதமாக ஆய்ந்து கூறலாம்.

உ + பயம் =  உபயம்.

இங்கு வந்த பயம் என்ற சொல் பயன் என்பதன் மறுவடிவமாகும்.   பயம் > பயன்.   அல்லது பயன் > பயம். இந்தப் பயம் என்பது அச்சம் அன்று. பயம் ஆவது பயன் தருதல் பயன் படுதல்.  இதற்குரிய வினைச்சொல்:  பயத்தல்.

"என்ன பயத்ததோ சால்பு" என்ற திருக்குறள் தொடரை நினைவுகூர்க.

இது போலும் இறும் வேறு சொற்கள்:  திறம்  >< திறன்;  அறம் ><  அறன்.

உ என்பது முன் என்று பொருள்தரும்.  இது சுட்டு.

உபயம் என்பதை வேறுவிதமாகச் சொல்வதானால்  "முற்பயன்பாடு" என்னலாம்.  பயன்பாட்டுக்கு முன்னரே இடம் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பது புரிந்துகொள்க.


இனி,  உ+ வை + அம் = உவையம்   இதில் ஐகாரம் குறுகி :  உவயம் >  உபயம் ஆகும்.  முன்னரே வைக்கப்பட்ட நிகழ்ச்சி.  வகர - பகரப் போலித் திரிபு.  போல இருப்பது போலி.

இச்சொல் இருவழிகளிலும் பொருள்தந்து ஒன்றே முடிபாய் நிற்றலின் இருபிறப்பி ஆயிற்று.

எழுத்துக்களும் சங்கதமும்


குறிப்பு:  சமஸ்கிருதத்துக்கு எழுத்துமைப்பு இருத்தலாகாது என்று பண்டை அறிஞர் தீர்மானித்தனர்.  மந்திரக் குரல் ஏற்ற இறக்கங்களையும் அளவுகளையும் அழுத்தம் மென்மை முதலியவற்றையும் வெளிக்கொணர எழுத்துக்கள் இயலாதவை என்பது அன்னோரின் கருத்துப்பிடியாய் இருந்தது என்று அறிக.  எழுத்தின்மையால் பல மறந்தும் இறந்தும் தொலைந்த பின்னேதானே எழுத்தினாலும் நன்மை உண்டு என்ற இணக்க அறிவும் ஏற்பட்டது.   வேதவியாசனின் தொண்டு உள்ளவையும் அழிந்துவிடாமலும் திரிந்துவிடாமலும் இருக்க ஒரு மருந்தானது.  சமஸ்கிருதத்திலும் பல்லாயிரம் ஒலிவடிவ நூல்கள் அழிந்தன. எழுத்தில்லாத பொலினீசிய மொழிகளிலும் சொற்கள் பல தொலைந்தன அறிக.  சீனாவின் கிளைமொழிகள் ஒலித்திரிபுகளால் விளைந்தவை. காரணங்கள் உள   . மண்டரின் எழுத்து மொழி இது விரியாமல் நிலைப்படுத்தியது    (18.11.2019)..

ஞாயிறு, 17 நவம்பர், 2019

சிறுமமே சிரமம்.

நம் முன்னோர் பல துன்பங்களைப் பெரியனவாய் மதிக்கவில்லை. சிலவற்றுக்கு ஒன்றும் செய்யமுடியாவிட்டாலும் அவற்றைத் துருவி
ஆய்ந்தனர். சில உலகிற்குப் பெருமை தருவன என்றும் நினைத்தனர்.

அவர்களிடையே துன்பங்ககளின் சிறுமை பெருமை பல்வேறு கருத்துக்களையும் ஆன சொற்களையும் தோற்றுவித்தன. ஒரு சொல்லை  ஆய முற்படும் இதனில் சுருங்கக் கூறியுள்ளேம்.

இன்பங்களையும் இவ்வாறே  பெரிய சிறிய என்றனர்.

சிறிய துன்பங்கள் ஒன்றன் இடை இடைத் தோன்றி நீங்கின.  இடையிடை வருவன இடைஞ்சல்,  இடையூறு  என்றனர். முதல் இடை கடை என்று வேறுபாடின்றிச் சில துன்பங்கள்  " சிறுகு" எனப்பட்டன.  இவைகள் சிறு தொல்லைகள். ஒரு செயல்பாட்டு முன்னும் வரும், பின்னும் வரும் இடையும் வந்து குடையும் கொஞ்சம்.

சிரமம் என்பது சிறு துன்பமே.  இச்சொல் தன் பண்டை வடிவத்தில் "சிறுமம்" என்றிருந்ததற்கான சுவடுகள் அச்சொல்லிங்கண்ணே உள.  சிறுமம்  பின் சிறமம் ஆகிப் பிறழ்திருத்தமாகச் சிரமம் ஆயிற்று.  சிறுகு என்பதன் ஒப்புமையாக்கமாகவே சிறுமம் ஆகிய சிரமம் வந்துற்றது.  றகர ரகர வேறுபாடிழந்த சொற்களின் பட்டியலில் சிறுமம் > சிறமம் > சிரமமும் இடமறிந்து  புகுந்து நிற்றற்பாலது.

துன்பமோ சிரமமோ வருங்கால் நகுக.

அறிந்தீர் மகிழ்ந்தீர்.   

தட்டச்சுப் பிழைக்கு மறுபார்வை பின். 

வெள்ளி, 15 நவம்பர், 2019

Rigor mortis or மரித்திறுக்கம்.

ஆங்கில வைத்தியத்தில் ஒரு கலைச்சொற்றொடராகப் பயன்படுவதுதான் "ரிகோர் மோர்ட்டிஸ்"  (அல்லது ரிகார் மார்ட்டீஸ் }  என்ற இலத்தீன் மொழித் தொடராகும்.

ரிகோர் ----   இறுகு ஊர்தல்.
சதை இறுகும்படியான நிலை ஊர்ந்துவரல்.
 இரிகோர்  -- இறுகூர்.

மார்ட்டீஸ் ---  மரித்தல்.   மரி > மார்.  மாரகம் என்ற சோதிடச் சொல் மரணம் என்று பொருள்படும்.


செத்துச் சில மணி நேரத்தில் உடல் விறைப்பு.

பழைய இடுகைகள் காண்க.

அதிகம் சொன்னால் "காப்பி அடிக்கும்" கூட்டம் பெருகும். வரலாற்றையும் உடன் சொல்லற்க.

அறிந்தின்புறுக.



அடிக்குறிப்புகள்

ஒரு பெரிய நோய்வந்துவிட்டால்  ஒரு வைத்தியனை வைத்து நோயைப் பார்க்கவேண்டும் என்பது தமிழ் நாட்டில் பேச்சு வழக்காகும். வைத்தியனை வைத்து என்றால் அவனை டப்பாவிற்குள் அடைத்து வைத்து என்று பொருளன்று. "அப்போய்ன்ட் ஏ டாக்டர்"  என்றுதான் அதற்குப் பொருள். கடினமான ஆங்கிலத்தையும் வெகு எளிதாக மொழிபெயர்த்தறிய வல்லது தமிழ்ப் பேச்சுமொழி என்று உணரவேண்டும்.  சீனக் கிளைமொழியான ஹோக்கியனில் உரிமம் இல்லாத வடகை உந்துவண்டி அல்லது கார் என்பதை "பா ஹோங்  சியா" என்பார்கள்.  அப்படியென்றால்  "வண்டி அடி(த்தல்)" என்றுதான் சொற்களுக்கு அர்த்தம் என்றாலும் அச்சொற்கள் வழக்கில் தரும்பொருள்  உரிமம் இல்லாத வடகை உந்துவண்டி (பயன்பாடு)  என்பதே ஆகும்.  In Chinese intonation is important  and changes must be adverted to.  தமிழைப் போலவே சொல்லையும் பொருளையும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறம்படைத்தவை சீனக்கிளைமொழிகள்.  வைத்துப்பார்க்கப்படுவோனே  பின் "வைத்தியன்" என்ற புனைச்சொல்லால் குறிக்கப்படுவோன் ஆயினன்.

வை+  து  + இ + அன்  >  வைத்தியன்.

இட்டு அப்பி வைக்கும் சிற்றேனமே  டப்பி அல்லது டப்பா.
இடு அப்பி   ( அப்பி இடு அல்லது இட்டுவை )  -  இடப்பி >  டப்பி > டப்பா.

எழுத்துப்பிழைகள் பின்பு பார்க்கப்படும்.

வியாழன், 14 நவம்பர், 2019

ஆபத்து என்ற சொல்

இது ஒரு மூவசைச் சொல்.

ஆநிரைகளைக் கைப்பற்றுதல் பண்டைத் தமிழர் போர்த் தொடக்க நடவடிக்கை.    ஆ பற்றுதல்  எனப்படுவது  ஆ பற்று  >  ஆ பத்து என்று மாறியுள்ளது.

ற்று என்பது த்து என்று மாறுவது எழுத்துத் தமிழ் -  பேச்சுத் தமிழ் இவற்றிடை நிகழும் இயல்புப் பெருநிகழ்வாகும்.   இதைப் பல இடுகைகளில் கூறியுள்ளோம்.
இடுகைகள் சில ஈண்டு குறைவுண்டன  (இன்மை).

ஆ பற்றுதல் என்பதில் ஐ யுருபு தொக்கது.

நாளடைவில் ஆ என்ற சொல் பேச்சு வழக்கின்றி மறைந்ததும் தமிழரசு மாறிப் பிற நிகழ்ந்தமையுமே  இதன் பொருள் சற்றுத் திரிந்து  பேரிடர் என்னும் பொதுப்பொருளில் இச்சொல் வழங்குதற்குக் காரணங்களாவன.

சிறப்புப் பொருள் திரிந்தமையில்  திரிசொல்.

மாடு பிடித்தல் என்ற தொடரில் வலிமிகாமை போலுமே இது.  காட்டை வெட்டுவோன் காடுவெட்டி.  காட்டுவெட்டி அன்று.  இங்கும் இரட்டிக்கவில்லை.

காடு > காடை.  குருவிப்பெயர்,  இரட்டிக்கவில்லை.   காட்டில் வாழும் ஒரு வகைக் குருவி என்பது பொருள்.  காரண இடுகுறி.

காவு தாரி  >  கௌதாரி.    (முதனிலைக் குறுக்கம் ).  காடுகள் பெருவாரியாகத் தரும் பறவை.  அவை காட்டில் பெரிதும் வாழ்வன என்று பொருள்.  சில வீட்டுப் பக்கங்களுக்கு  -    பின்பு இடம் மாறின.

குறிப்பு: 

ஆபத்து என்பதில் வலிமிகாமைக்குக் காரணங்கள்:

1..  ஆப்பத்து  <  ஆப்பற்று என்றால்,  ஆப்பு + அற்று என்று பிரிந்து   "ஆப்பு வைக்காமல்" என்ற பொருள் தந்து பொருள் மயக்கு உண்டாம்.

2.  இது சொல்லாக்கம். வாக்கியத்தில் வரும் நிலைமொழி வருமொழி அல்ல.


 காவு என்ற சொல் பயன்பாடு:
ஆரியங்காவு.  காவு கொடுத்தல்.

காடு என்பது இருபிறப்பிச் சொல்.  கடு > காடு. (  கடுமை மிக்க இடம்.  வேங்கடம் என்பதில் கடு> கடம் எனினுமதுவாம்.  காத்தல் : கா > காவு. காப்பு.

பின் உரையாடுவோம்.

மறுபார்வை பின்

சனி, 9 நவம்பர், 2019

வித்துவான் பற்றிய இன்னொரு சிந்தனை

வித்துவான் என்ற சொல்பற்றி முன்பதிவுகள் இட்டதுண்டு.  அவற்றுள் ஒன்று அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இச்சொல்லை வித்துவன் என்று எழுதுவோருமுண்டு.  அன், ஆன் என்பன இரண்டும் தமிழ்விகுதிகளே.

விள் என்பதோர் அடிச்சொல்.  வித்து விதை முதலிய பலவேறு வடிவங்கள் இதனோடு தொடர்பு கொண்டவை ஆகும்.

எச்ச வினையினின்று சொற்களைப் பிறப்பிக்கும் முறை பாலி முதலிய மொழிகளில் காணப்படுகிறது.

விளைத்தல் என்பதினின்று விளைத்து,  விளைத்த என்ற எச்ச வினைகள் தோன்றும்.  விளைத்து என்பது எச்சவினை வடிவத்திலே பெரிதும் காண்புறும் சொல்லாயினும் அதைப் பெயர்ச்சொல்லாய்க் கருதுவதற்கு இறுதித் துகரத்தைப் பெயராக்க விகுதியாகக் கொள்ளுதல் வேண்டும்.  கொள் > கொளுத்து என்பது வினையாகவும் பெயராகவும் பயன்பாட்டிற்கேற்பப் போதரும்.  கொளுத்து என்பது கொண்டி அல்லது தாழ்ப்பாள்.  விளைத்து எனற்பாலதும் அவ்வண்ணமே   போதரத் தக்கது.

விளைத்து என்பது இடைக்குறைய வித்து என்றாகிவிடும்.   வித்து என்பது பெயரும் வினையுமாம்.  ளைகாரம் கெட்டது.

எதனையும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்கினும்  ஏற்புடைமை மாறாதது காணலாம்.

அடிக்குறிப்பு.


வித்துவான்.
https://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_33.html

வியாழன், 7 நவம்பர், 2019

திடகாத்திரம் இனிய படைப்புச்சொல்

இன்று "திடகாத்திரம்" என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.

இது ஒரு புனைவுச்சொல்லே.

ஒருவன் திடகாத்திரமாக இருக்கின்றான் என்றால்:

அவன் தன் உடலின் திடத்தினை      {....திட(ம்)  }

உணவினாலும்  ஏனை  நடபடிக்கைகளாலும்   காத்துக்கொண்டு   {....கா(த்து ) .....}

இவ்வுலகில் இருக்கும்படியாக நல்வாழ்வை அடைந்துள்ளான்   {....இரு....}

அம் என்பது ஒரு விகுதி.

அம்முக்கும் ஒரு பொருளைக் கூறிக்கொள்ளலாம்.  பெரிய வேறுபாடு ஒன்றும் ஏற்பட்டுவிடுதல் இல்லை.

எல்லாத் துண்டுகளையும் இணைக்க:

திட(ம்)  +  காத்து +  இரு +  அம்.


=  திடகாத்திரம்

ஆகிவிட்டது.

காத்து + இரு + அம் > காத்திரம் என்பதை

கா+ திறம்  >  காத்திரம் என்றும் பிறழ்பிரிப்பாகக் கூறலாம்.

இதிலும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.

அறிவீர் மகிழ்வீர்.


தட்டச்சுப் பிழைகள் புகினோ அன்றிக் காணப்படினோ திருத்தம் பின்.



ஞாயிறு, 3 நவம்பர், 2019

சிருஷ்டி காட்டும் சொல் அமைப்புத் தந்திரம்

உருள் >  உருட்டு,   திரள் > திரட்டு என்றெல்லாம் தமிழில் வினைச்சொற்கள் முடிகின்றன. இவற்றைப்  பார்க்கும்போது ஒரு சொற்படைப்பாளனுக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது.  "ட்டி"  என்று ஒலிக்கும்படியாக ஏன் ஒரு சொல்லைத் தோற்றுவித்தலாகாது? என்பதுதான் அது.

இறைவன் உலகின் உள்ளிருக்கும்படியாக ஒன்றைத் தோற்றுவிக்கின்றான். அதைப் புதுவிதமாகச் சொல்லவேண்டும்.

உள்ளிரு என்பதை எடுத்துக்கொண்டான்.

உள்ளிரு  >  (முறைமாற்ற )  >  இரு + உள்.

இரு + உள் +(  து + இ.)

இவற்றுள்,  இ என்பது இறுதி  வினையாக்க விகுதி.
து என்பதும் வினையாக்க விகுதிதான்.

இரு + உள்  + தி.

து+ இ இரண்டும் இணைய, தி என்றாகும்.

ள் + தி  =  டி என்றாகும்.

அகர வருக்கத்துக்கு   சகர வருக்கம் மிக்கப் பொருத்தமான  திரிபினை வழங்கும்.

எ-டு:  அமணர் >  சமணர்.
             அட்டி >  சட்டி   ( அடுதல் :  சமைத்தல்)
             எட்டி > செட்டி.
             அமை > சமை.
              அவை > சவை > சபை.

இரு + உள்  + தி  >  சிருட்டி.

சிருட்டி > சிருஷ்டி > சிருஷ்டித்தல்.

இல்லாத ஒன்றை இவ்வுலகின் உள்ளிருக்கும்படி செய்தல்.

சிருஷ்டி :  நல்லபடி அமைந்த சொல்.

எழுத்துப்பிழைகளிருப்பின் திருத்தம் பின்பு.


சனி, 2 நவம்பர், 2019

துரை என்ற சொல்

தன் கீழ் பணிபுரிவார் அ ல்லது பணிந்து நிற்பார் யாராக இருந்தாலும் அன்னவர்களை நல்லபடி பயன்படுத்திக் கொள்பவர் யாரோ அவரையே துரை என்னலாம். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அவர்களுள் இத்தகைய திறன் உடையவர்களே துரைகளாக நேர்மிக்கப்ப்  பட்டனர். துரை என்பது  பதவிப் பெயர் அன்று எனினும் அவர்களைத் துரைகளாக மதிக்கத் தமிழர் அறிந்திருந்தனர்.

துர என்ற அடிச்சொல்லிலிருந்தே துரை என்ற முழுச்சொல் வருகிறது. துர+ ஐ = துரை ஆகும்.

பாரம் தாங்குவோனுக்குத் துரந்தரன் என்றும் துரந்தரி என்றும் பெயருண்டு. இது துர+அம்   (துரம்) என்பதிலிருந்தே வருவதால்  நிறுவாகப் பாரத்தைச் சுமக்கும் ஒரு பண்பு நலனையும் துர என்னும் சொல் கொண்டுமுன் நிறுத்துகிறது.

துர என்பதன் அடிச்சொல் துரு - ( துருவு  - துருவுதல்) ஆகும். எதையும் துருவிச் சென்று ஆய்தல் அல்லது நடைபெறுவித்தல் என்ற தன்மையும்கூட இதில் அடங்கியுள்ளது.

துரத்துதல் என்ற வினைச்சொல்லும் நீங்கிச் செல்வோனை விடாது பின்செல்லும் வினைத்திண்மையைக் காட்டவல்லது.

dura -  giver, granter, one who  unlocks.  Skrt. இதுவும் பொருந்தும் பொருளையே கொண்டுள்ளது.

துரப்பணம் என்பது   துளையிடுகருவி.  துர+பு+ அணம்.

ஒன்றை விரட்டிச் செல்கையில்  நாமும் முன்னைய இடத்தை நீங்கிச் செல்வதால்  தொலைவாகச் சென்றுவிடுவோம்.   இதிலிருந்து    துர+ அம் = தூரம் என்ற சொல் தோன்றுகிறது.  இது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

தொல் > துர் > துர.> தூரம். 
லகர ரகரத் திரிபு.
தொல் > தொலைவு.

இவை எலாவற்றுக்கும் அடிப்படை தமிழின் துருவுதல் என்ற வினையே ஆகும்.

அறிக மகிழ்க.




 

புதன், 30 அக்டோபர், 2019

மாரன் சுகுமாரன் மாறன் என்பவை

தமிழில் மாரன், மாறன் என்று இரு ஒலியணுக்கமுடைய  சொற்கள் உள்ளன..

இதில் மாறன் என்பது பாண்டியனைக் குறிக்கும் சொல்.  சுருக்கமாகச் சொன்னால் :

மறு +  அன் = மாறன்:   அதாவது எதிரிகளை மோலோங்க விடாமல் போரில் மறுத்து நின்று வெற்றியை ஈட்டிக்கொள்பவன் என்று பொருள்.  முதனிலை  மகரம்  மா என்று நெடிலாக நீண்டது. வீரம் என்று பொருள்படும் மறம் என்பது முதனிலை நீளவில்லை. முதனிலை  நீண்ட சொற்கள் பல. அவற்றைப் பழைய இடுகைகளில் கண்டு மகிழ்க.

மாரன் என்ற சொல்  மரு+ அன் எனற்பாலது முதனிலை நீண்டு அமைந்தது ஆகும்.

மரு > மருவு:   தழுவுதல் குறிக்கும் வினைச்சொல்.

மரு +  அன்  =  மாரன்
பொருள்:  தழுவி நிற்போன். கணவன்,   காதலன்,  என்றெலாம் விரித்துக்கொள்க.

சுகுமாரன் என்பதன் முந்துவடிவம்  உகு மாரன் என்றிருந்தது தெளிவு.  உகுதலாவது  இலைபோல் வீழ்தல்.  காதலினால் வீழ்தல்.  மாரன் என்பது மேற்சொன்னதே  ஆகும்.

உகுமாரன் > சுகுமாரன்.

இது அமண் >  சமண் என்பதுபோலும் திரிபு. இவ்வரிசையில் பல காட்டியுள்ளேம்.
பழைய இடுகைகள் காண்க.

தட்டச்சுப் பிழை - திருத்தம் பின்.




சனி, 26 அக்டோபர், 2019

தீபாவளி வாழ்த்துகள்

 தீபத்  திருநாளின் வாழ்த்தனை வர்க்குமே
சீர்பதி   னாறுமே  சேர்ந்திணைந்தே----- நேர்படுக
ஆபத்  துலகில் அகன்றவனி மேம்படும்நம்.
நாபுத் துணவும் நயந்து

புதன், 23 அக்டோபர், 2019

அயல் அந்நியன் ஒருதாய்ப் பிள்ளைகள்.

"வடசொல் என்று கருதப்பட்ட " அந்நியன்" என்ற சொல்லுக்கும் "அயல்" என்பதற்கும் ஒரே அம்மா என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்.

இது உண்மையா என்று ஆய்வோம்.

அந்நியன் என்பது  " அல் நீ  அன்" என்று திறமையாகத் திரிக்கப்பெற்ற சொல்.

இதன் பொருள்:  நீ அல்லாத பிறன்"  என்பது.  பிறன்  என்ற சொல்லை உள்ளே கொணராமல்,   " நீ அல்லாத ஒருவன்" என்றால் கூறியது கூறலை விலக்கிவிடலாம்.

அல் என்பதோ  அ+இல் என்பதன் சுருக்கம்.

அ இல் :  என்றால்  அங்கு  இல்லாதது.  இதில்  அங்கு என்பதே சுட்டு.

அயல்  எனில்  அ+ அல் என்பதன் புணர்வு.  யகர ஒற்று உடம்படுமெய்.  அவ்விடம் அல்லாத இன்னோர்  இடம்.

இரண்டு சொற்களிலும் அகரச் சுட்டு இருப்பதால் இவை சுட்டடிச் சொற்களே.

அல்லுக்கும் இல்லுக்கும் உண்டான நுண்பொருள் வேறுபாடு பின் விளைந்தது.

மற்றவை பின்னொருநாள் வரும்.

மேலும் வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_21.html

https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_29.html

புதன், 16 அக்டோபர், 2019

கௌரவித்தல்

இன்று கௌரவித்தல் என்ற சொ ல்லின் அமைப்பினை ஆய்வு செய்வோம்.

முன்னா  ளாய்வுகளின்படி  இது குரு ( கற்பிப்போன்) என்னும் சொல்லினின்று வருகிறதென்பர்.  இருக்கலாம்!  முன்னோர் கூறியதை மதிப்போம், மாண்பென்று காண்போம். இது நம் கடனே ஆகும்.

ஆயினும் ஆய்வதும் அறிவுடைமையே.  இல்லையேல் இறக்கையற்ற மனிதன் ஒலிமிகைப் பறவூர்தியில் விண்ணிற் செல்வதெப்படி?

குரு  என்னும் சொல்லைப் பார்ப்போம்.

குரு என்ற சொல் அடிப்படையில் ஒலி என்று பொருள்படுவது.

குர்ர் குர்ர் என்று ஒலி எழுப்பும் சிறு பறவை குருவி ஆனது.

குர்+ வி = குருவி.  வி என்பது விகுதி.  உகரம் ஒரு சாரியை.  இடைநிலை எனினுமாம்.  (கல்> கல்வி.   வி: விகுதி).

குர் > குரங்கு.   ( குர் என்ற ஒலியெழுப்பும் விலங்கு).

இது வலித்துக் குரக்கு என்றுமாகும்.

குர்  >  குரம்  (ஒலி).

குர் >  குரல்.  (தொண்டையொலி,  வாயொலி.)

குர் >  குரைத்தல்.  (நாயொலி)

குர்> குரவை:   ஒலி.  (  ஒலியுடன்  மகளிர்  ஆடுவது).

முற்காலத்து  ஆசிரியன்மாரெல்லாம் மிகுந்த ஒலி எழுப்பியே மாணவர்க்குக்
கற்பித்தனர் என்பது அறிக.  ஆகையால் சொற்கள் இவ்வாறு எழுந்தன.

வாய்>  வாய்த்தி > வாய்த்தியார் > வாத்தியார். வாய் என்பது ஒலியுறுப்பு.

குர் >  குரவர்  =  ஆசிரியர்.

குர் என்பது உகர ஈறு பெற்றும் பெயராயிற்று..

உகர ஈறு பெற்ற வேறு சொற்கள்:

பரு,  உரு, மரு  என்பவும் பிறவும்.

குரு என்பது பின் அயலொலி  ஏற்றது.

நல்ல அறிவாளியை ஓர் ஆசிரியனுக்கு நிகராய் மதித்து அதை வெளியிடுவதே
கௌரவித்தல் எனலாம். பிற வகையின பின் வந்தவை என்பது தெளிவு. ஒப்புமைகள் பின்னர் தோன்றுவன.

அரசன் தன் பாதுகாப்பும் துணையாகும் வலிமையும் கருதி யாரையும் கவுரவிக்கலாம்.  இதில் ஒருவர் ஆசிரிய நிலைக்கு மேலெழும்பினார் என்பது
அவ்வளவு பொருத்தமானது என்று கூறுவதற்கில்லை. அவர் உண்மையில்:

கா+ உறவு + இ  = காவுறவி >  கவுரவி :  கவுரவிக்கப்பட்டார் என்பதே சரி.

முதலெழுத்துக் குறுக்கம்.
றகரத்துக்கு ரகரம்.

இத்தகு திரிபுகள்  பற்பல நாம் முன் காட்டியுள்ளோம்.

அரசன் அன்னாரைக் காக்கவும் அன்னார் அரசனைக் காக்கவுமான உறவு ஏற்பட்ட நிலையே கவுரவித்தல்.

சிந்தித்து மகிழ்வீர்.


திங்கள், 14 அக்டோபர், 2019

ஜின்பிங்க் வருகையின் பின் நல்லமைதி.

இந்தியாவில் சீன அதிபர்

கவிதை.



சீன அதிபரும் இந்தியா வந்துளார்
காணச் செவிகொள மாணுறு செய்தியே
எல்லையில் கோடே துளதொரு தொல்லையும்;
ஒல்லுறு வாணிபத் தொருபக வோங்கலும்
கொல்படைத் தீவிர வாதி குறும்பொடு
பல்பொருள் பேச்சுக் கணிசேர் பயனே
அதிபர் அவரெனின் சீன உணவர்
புதியன தென்னாட் டுணவுமுன் வைக்கவும்
ஏற்றார் சமையலைப் போற்றினர் உண்டனர்
ஒன்றும் தயக்கமே கொள்ளுதல் இன்றியே
நன்று திசையூண் நயந்தனர் வெற்றியே
மாமல்லை வந்த மணிபொங்கு  மன்னவர்க்குத்
தஞ்சையின் கோழிக் கறியும் இறைச்சியும்
நண்டும் நனிபல பக்கக் கறிகளொடு
விஞ்சும் சுவைத்தே விழுஅடைக் காய்ச்சி
விருந்திற் கொடுத்தே அருந்த அழைத்தனர்
இந்திய நாட்டின் இனியவர் மோடி
உணவும் உரைகளும் முற்றுப் பெறவே
இணையில் தலைவர்நம் சின்பெங்கும் சென்றுளார்
வானிடை ஏறியே சீனமும் நோக்கியே
மாணமைதி ஞாலம் பெறும்.

அரும்பொருள்:


எல்லையில் கோடே து --- சீன இந்திய எல்லையில் எல்லைக்கோடுகள்
வரையறை செய்யப்படவில்லை இன்னும்.

உளதொரு தொல்லையும்  -   அதனால் புரிந்துணர்வுகள் வேறுபட்டுத் தொல்லைகள் உள்ளன. இது நிலைமை.

ஒல்லுறு  -   நடைபெறுகின்ற

 ஒரு பகவு    ஓங்கலும்  -    ஒரு நாட்டின் பக்கம்  வர்த்தகம் சாதகமாயிருப்பதும்

உணவர் -   பழக்கமான உணவு கொள்பவர். 

விஞ்சும் -  மிகுதியாகும்.

அடைக்காய்ச்சி  -  அடைப்பிரதமம்

மாணமைதி  -   சிறந்த அமைதி.

ஞாலம் - உலகம்.





திருத்தம் பின்



சனி, 12 அக்டோபர், 2019

0னகர ணகரப் பரிமாற்றுகள்.

செந்தமிழ்ச் சொல்வடிவம் உடையன  ஒன்று மூன்று என்ற சொல்வடிவங்கள்.

மூன்+ து =  மூன்று.
ஒன்+ து  =  ஒன்று.

ஒன்  என்ற ஒன்றைக் குறிக்கும் சொல்வடிவம்  மூலவடிவம் அன்று. அதனின் மூத்த வடிவமும் முதல் வடிவமும் " ஒல்"  என்பதே. ஒடு, ஒட்டு, ஒற்று, ஒற்றை. ஓடு என்று ஒல்-ஒன் என்பவற்றில் உறவும் பிறப்பும் உடையன பலவாம்.  அகல உடம்பின் வெளிக்கோடுகள்  உள்நெருங்கி ஒன்றுபடு நெறியிற் சென்றிருக்க நடமாடும் மனிதனே ஒல்லியான மனிதன். இப்படி யாம்
விரி-வரிப்பது  (>> விவரிப்பது)* முயன்று  வாசிக்கப்2     புரிந்துகொள்ளக்கூடியதே.

இன்னும் ( ஒல் >ஒர்>) ஒரு என்பதும் உள்ளது.

எனவே:

ஒல் +து =  ஒன்று
மூல் +  து  =  மூன்று.


மேல் யாம்  உரைத்தன ஒரு முன்னுரையே.

உங்கள் கவனத்துக்கு:

ஒன்று  என்பது   ஒன்னு,  ஒண்ணு என்று  திரியும். 0னகர ஒற்றுக்கு  ணகர ஒற்று வரலாயிற்று.

மூன்று என்பது  மூனு,  மூணு என்று  திரியும்.  இங்கும் 0னகர ஒற்றுக்கு  ணகர ஒற்று வரலாயிற்று.

0னகர ணகரப் பரிமாற்றுகள் பற்றி விவரிக்கையில் இத்தகு திரிபுகளையும் முன்னிருத்திக் கொள்க.


அடிக்குறிப்புகள்

*விவரித்தல் என்பது  விரி-வரித்தல் என்பதன் மரூஉ.
2 வாய்> வாயித்தல் > வாசித்தல்.  ய>ச

புதன், 9 அக்டோபர், 2019

சீனாவை மட்டுமோ?




சீனாவை மட்டுமோ செந்தமிழர்
ஏ நா  டென்றாலும் சுற்றிவருவர்!
மானாக மனத்துளே அன்புவைத்தார்,
 கூனொன்று மில்லாத குதூகலமே.




சீனாவின் கடைத்தெருவில்.

 ஏ  = எந்த.


செவ்வாய், 8 அக்டோபர், 2019

எம் வெண்பாவுக்கு என்ன பொருள்?

மயங்குவது  தான்ம தயங்கும் வதனம்

தயங்கு தயைஎன லாகும்===நயங்காண்

விபுலம்  விழுபுலம்  காணும்  கமலம்

கழுமலர் குன்ற லிடை.

 

இது எம் வெண்பா. அலகிட்டு ஓசையும் கண்டு

இதற்குப் பொருள் கூறுங்கள்.  


திங்கள், 7 அக்டோபர், 2019

துக்கம் சொல்லுக்கு இருமுடிபு.

இறந்துபோன மனிதனைத் தூக்கி, இடுகாட்டுக்குக் கொண்டு செல்வர்,  அல்லது சுடுகாடு கொண்டுபோவர்.  ஆகவே பிறர்கேட்பது:  எத்தனை மணிக்குத் தூக்குகிறார்கள் என்பது.  இறந்தபோது ஏற்பட்ட துன்பம் தூக்கும்போது மேலிடுகிறது,

தூக்கு >  தூக்கு + அம் >  துக்கம்.

நெடிலான முதலெழுத்து விகுதியேற்றுக் குறிலாகும்.

அரசு தூக்கிலிடும்போதும் தூக்கு என்ற சொல்லே வருகிறது. இங்கும்  தூக்கு > துக்கம் என்றே ஆகிறது.

முதலெழுத்துக் குறுக்கம்:

இதற்கு இன்னோர் உதாரணம்:  சா+ அம் =  சவம். (பிணம்).
தோண்டு+ ஐ =  தொண்டை எனினுமது.

இன்னும் வேண்டின் பழைய இடுகைகளில் காண்க.

துறத்தல் அடியாகப் பிறந்த துறக்கம் என்பதும்  உயிர்துறத்தல் கருத்தில் றகரம் இடைக்குறைந்து  துக்கம் என்றாகும்.   ஆதலின் இஃது ஓர் இருபிறப்பி ஆகும்..

தக + அனல் =  >   தக அனம் > தகனம்.

தகுந்தபடி அனல்படுத்துவது, அல்லது தகத்தக என்னும் அனலில் இடுவது.

பிழைபுகின் திருத்தம்பின்.

சனி, 5 அக்டோபர், 2019

மும்முரம் -எழுத்து பொருள் திரிபுகள்.

ஒருவன் ஒருமுறை செய்வதை மூன்று முறை விடாமற் செய்தானென்றால் அவன் அதில் மும்முரமாக ஈடுபடுகிறான் என்று ஊர்மக்கள் எடுத்துக்கொள்வர்.

மும்முரம் என்பது ஈடுபாட்டின் அகலத்தை அல்லது விரிவினைக்  குறித்து வழங்கினாலும்  அந்தச் சொல்லெழுந்ததோ தடவைகள் மூன்று என்ற கருத்திலிருந்து தான். தடவையினின்று செயல் விரிகை காட்டினமையால் பொருள் சற்றே  திரிந்து  அது திரிசொல்லாயிற்று. இது பொருட்டிரிபு ஆகும்.

அத்துடன் சொல்லும் திரிந்தது காணலாம்.

மும்முறை -  மும்முரம்.

முறை என்பது  மு+(ற்+ ஐ)..என்று எழுத்துப்பிரிப்பு அடையும்.

இதில் ஐகாரம் விலக,  முற் என மிஞ்சும்.

ற் என்னும் வல்லொலி நீங்க  ஆங்கு ரகர ஒற்று இடம் கொள்ளும்.

இப்போது   இருப்பது  முர் என்பதே.

இதில்  அம் விகுதி புக,   முரம்   ஆகும்.

இதற்கு ஓர் உதாரணம் காட்டுதும்.

வீறு  என்ற மனத்திட்பம் குறித்த சொல் அம் விகுதி பெற்று  வீரம்  ஆனது காண்க.  அது வீறம்  என்று வரவில்லை.  வீறு என்பதும் வீரு என்று வடிவம்கொள்வதில்லை.  வீரு எனின் அஃது செந்தமிழியற்கை வழுவிற்று.
வாய்ப்பேச்சில் நீண்டொலிக்க விலக்கில்லை.

வீர் என்பதே அடி, அடியினின்று செலின்  வீர்+ அம் = வீரம்  ஆகும். வீர் என்பதும் விரைவுடன் தொடர்புடைச் சொல்.

ஐகாரக் குறுக்கத்துக்கு எ-டு:   தீ + விரை + அம் >  தீ + விர் + அம்  = தீவிரம்.

விரை என்பது தன் ஐகாரமிழந்து விர் என்றே சொல்லாக்கத்துள் நின்றது.

இத்தகு திரிபுகளால்  மும்முரம் பொருட்டிரிபும் எழுத்துத் திரிபும் உடைத்தாயிற்று.

இச்சொல் ஒரு பகுதியே காரணத்துடன் நின்றமையின்  காரண இடுகுறி ஆயிற்று. பொருள் விரிந்து செயல் அகலத்துடன் அதனில் ( செயலின்) ஆழ்ந்த ஈடுபாட்டையும் இப்போது குறிக்கும்.

மும்முறையே அன்றிப் பன்முறைச் செயலும் குறிக்க விரியும். ஈண்டு மும்மைச் சொல் பொருளிழக்க நேர்ந்தது.

மும்முறம் என்றே விட்டிருப்பின் பொருட்கேடுறுதல் காண்க.
அறிவீர் மகிழ்வீர்.




பிழை புகின் திருத்தம் பின்.
கண்ட இரு பிழைகள் திருத்தம் பெற்றன.7.10.19  காலை.



திங்கள், 30 செப்டம்பர், 2019

உந்தியும் சூரியகாந்தியும்.

உந்தி என்ற பதம் கொப்பூழ் என்று பொருள்படும்.  சூரியகாந்தி என்பது ஒரு மலர் என்பது நீங்கள் அறிந்ததே. இரண்டிற்கும் ஏதும் பொருள் தொடர்பு
இருப்பதாக யாரும் கூறார்.

சூரிய காந்தி என்ற சொல்லை விளக்கிய இடுகையில் காந்தி என சொல் காண்+தி என்று அமைவுற்றது என்று காட்டினோம். ஆனால் இதற்கு எடுத்துகாட்டு ஏதும் தரவில்லை.

இப்போது ஒன்று காட்டுவோம்.

குழந்தை கருவில் உள்ளபோது அது தன் உணவைத் தாயிடமிருந்தே கொப்பூழ் மூலம் பெறுகிறது. கொப்புழ் தொப்பூழ் எனவும்படும்.

குழந்தை உண்பது கொப்பூழால் ஆதலின் அது  உண்+தி =  உந்தி எனபட்டது. இங்கு கவனிக்கவேண்டியது  ண்+தி  = ந்தி என்பதே.

உணவு குறிக்க வருவது : உண்+தி= உண்டி. அதே சொல்லும்  விகுதியும் இருவேறு விளைவுகளை உண்டாக்குவது இயல்பேயாகும்.

அறிவீர் மகிழ்வீர்.

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

பரிகாசம்

பரிகாசம் என்பதைப் பேச்சில் பரியாசம் என்பதுண்டு.

இச்சொல்லில் இரு துண்டுகள் உள. இவற்றை வினையாகக் காட்டினால் வருமாறு :

பரிதல்.
காய்தல்.

இவற்றை  உவத்தல் (பரிதல் )  , வெறுத்தல் (காய்தல்) என்று வேறு பதங்களால் தெளிவிக்கலாம்.

காய்தல் என்ற சொல்  அம் விகுதி பெற்றுக்  காயம் என்றாகி  ய - ச திரிபு விதிப்படி காசம் என்றாகும்.

பரிகாசமாவது பரிந்து காய்தல். அல்லது (இவ்விரண்டனுள்) ஒன்றைச் செய்வதுபோல்இன்னொன்றைச் செய்தல்.

பரிதலும் காய்தலும் தமிழ்.

இதுதான் சுருக்க விளக்கம்..

வியாழன், 26 செப்டம்பர், 2019

நாகர் என்போர் யார்

நாகர் என்று இன்று குறிப்பிடப் படுவோர் யாரென்று நாம் அறிந்துள்ளோமா
என்று திட்டவட்டமாய்க் கூறுவதற்கில்லை.

இற்றைக்கு நாகாலந்து  என்னும் மாநிலத்தில் உள்ளோரே நாகர்கள் என்று கூறுதல் ஒரு நல்ல பதில்தான்.

ஆனால் மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் இவர்கள் கடலில் இருந்த ஒரு மலையில் வாழ்ந்தவர்களாகக் குறிக்கிறார்.

இம்மலை நாகாலாந்திலுள்ள மலையாகத் தெரியவில்லை.  ஆகவே அந்த நாகரும் இந்த நாகாலாந்து நாகரும் ஓரே வகை என்று கூறுவதற்கில்லை. சிலர்  நக்கசாரணர் நாகருள் ஓர் உட்பிரிவினர் என்பர். இதிலும்  தெளிவில்லை.

நக்கசாரணர் நாகர் எனல் உம்மைத் தொகையாகவும்  இருக்கலாம்.

நக்கசாரணர் என்பதற்கு எம் விளக்கம் இது.  வாசித்துக்கொள்ளுங்கள்.

இவர்கள் உடலில் நல்ல நிறமுடையோராய் இருந்தனர்.   ஆதலால்   " நக்க சாரணர் "  எனப்பட்டனர்.  நகுதல் :  ஒளி வீசுதல்.  Gregarious people with good skin colour என்பதே நக்க சாரணர் என்பதற்குச் சரியான மொழிபெயர்ப்பு.  ஒளிவீசும் நட்சத்திரங்கள் உண்மையில் நக்கத்திரங்களே.  இருளில் நகுவன அவை.  புகு >  புக்க; நகு > நக்க; தகு > தக்க; பகு > பக்க.

22.5.2019.  இடுகை.


இனி   நாகர் என்ற சொல்லைப் பார்ப்போம்:


நகுதல்:   ஓளிவீசுதல்.

நகு+ அர் =  நாகர்.   ஒளி வீசும் நிறத்தினர்.

இது முதனிலை நீண்டு பெயரானது.

நகு  >  நக்க.   பெயரெச்சம்.   ( ஒளிவீசுகின்ற )

நக்கசாரணர்.


இவற்றை அடுத்து வேறு கோணத்தில் பார்ப்போம்.  மீ ண்டும் சந்திப்போம்.


செவ்வாய், 24 செப்டம்பர், 2019

சிலாகித்தல் என்றால் என்ன?

இன்று சிலாகித்தல் என்ற சொல்லெழுந்த வகையை  அறிந்துகொள்வோம். இஃது இன்னும் வழக்கில் உள்ள சொல்லாம்.

அறிதற்கு எளிமையானதே இது.

இதனைச் "சில  ஆகுதல்" என்ற தொடர்கொண்டு  அறிக.

இந்தச் சொல்லiைப் படைத்தவர்,   ஆகுதல்  என்ற செந்தமிழ் வடிவினைக்
கையிலெடுத்து  ஆகி என்று வினை எச்சமாக்குகிறார்.

அப்புறம்  அதில்  -தல் என்னும் தொழிற்பெயர் விகுதியை  இணைக்கிறார்.

இணைக்க  "ஆகித்தல்"  என்ற வடிவம் கைவரப்பெறுகிறார்.

இது  "ஓது" என்ற சொல்லை  "ஓதி"  என்று எச்சமாக்கி அப்புறம்  -தல் விகுதி இணைத்து ஓதித்தல் என்று தொழிற் பெயர் ஆக்கியது போலுமே. இதை  "ஆமோதித்தல்" என்பதில் வர அறிந்து மகிழ்வீர்.

அந்தக் காலத்தில் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்துப் புலவோர் இது கண்டு மகிழார் எனினும்  புதுமை விழைவார் யாதுதான் செய்வது.  கூடுதலான எதிர்ப்பு வரின் பிறமொழி என்று மழுப்பிட வேண்டியதே.


எச்சத்தினின்று வினைபுனைதல் பாலி முதலிய பிற மொழிகளிற் காணக் கிடைப்பதே.

சில வழிகளில் புகழ்தல்   என்பது சிலாகித்தல் என்பதான புதுப்புனைவுக்குப்  பொருள்  ஆயிற்று.  புகழே ஆக்கம்.  மற்றென்ன உண்டு மானிடற்கு?  இசைபட வாழ்தலே ஊதியமென்றார் வள்ளுவனார்.  சிலாகித்தலுமது.


ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

தடைக்குப் பின் எழும்

எழுதலாம் என்றெம்  இறகிகைக் கொண்டால்
பழுதிலார் நண்பர் பலர்வர நிற்கும்
பொழுது  தொலையுமால் பூத்தன நீங்கா
எழுதரும் பின்நின் றது.



அது என்றது எழுதும் முயற்சியை.
இறகி :  பேனா.
ஆல்  -  ஆனால்
பூத்தன -   கருத்துகள்.

வியாழன், 19 செப்டம்பர், 2019

சூரியகாந்திப் பூ.

சூரியன்  ஒளிவீசும் பக்கமாகத் திரும்பிக்கொள்ளும் பூவே சூரிய காந்திப்பூ. இதற்குப் பெயர் அமைந்த விதம்:

இப்பெயரில் சூரியன் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. வேண்டுவோர் வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_29.html


காந்தி  எனற்பாலது  காண்+தி என்பதன்  திரிபு.

சூரியனைக் காணத் திரும்பும் மலர்.

காண்தி   >  காந்தி.

இவ்வாறு  வருவது  காண்டி என வருதல் வழக்கம் எனினும்,  இது மெலிக்கும்வழி மெலித்தல் என்னும் கவிதை  நெறியைப் பின்பற்றிக் காந்தி என்றானது.  காண்டி என்பது வல்லெழுத்துப் பயில்கிறது.

காந்துதல் என்பது  சூடேற்றுதல்.  காந்து >  காந்தி  எனினுமாகும்.






புதன், 18 செப்டம்பர், 2019

அல்லியும் தாமரையும்

இந்த இரு மலர்கள் பற்றிச் சிந்திப்போம்.

தாமரை என்பது  தாழ  (கீழே)  உள்ளதை மருவி நிற்கும் மலர் என்று பொருள்படும்.

தாழ இருப்பது தண்ணீர்.

இதன் அமைப்பு:

தாழ் + மரு + ஐ   >  தா + மரு + ஐ =   தாமரை.

இதுபோல் ழகர ஒற்று இழந்த வேறு சில:

தாவணி   (  தா +  அணி )     தாழ் > தா.   கடைக்குறை.
தாக்கோல்.  1


இனி  அல்லி என்பது தண்ணீரை விட்டுவிட்ட சொல்.  அல் என்பது இரவு.
இரவில் மலர்வது  என்ற பொருளில் "அல்லி"  எனப்பட்டது.2



அடிக்குறிப்புகள்:


1.  நாதாங்கி.  -  கதவும் கதவுச் சட்டமும்  ஆகிய முழு அமைப்பில் ஒன்றிலிருந்து  நாக்கைப் போல்  ஓரத்தில் நீட்டப்பெற்று மற்றொன்றில் சென்று பற்றி அமர்வது. நாவும் அதன் தாங்கியும்.

2 இரவி என்ற சொல்லும் இரவு  இருள் என்ற கருத்துக்களை  அடிப்படையாகக் கொண்டு எழுந்த சொல்லே.  இர் =  இருள்.  இரவு. என்பவற்றின் அடிச்சொல்.  அவித்தலாவது  விலக்குதல்.  இது  சூரியனைக் குறித்தது.

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

வார்த்தை

எந்தச் சொல்லாய்வாளனும் இந்தச் சொல் இந்த அடிச்சொல்லிலிருந்துதான் வந்தது எனலாம்.  இதற்கு மாறுபாடாகப் பிற நிபுணர்களால் வெளியிடப் படும் கருத்துகளையும் சற்றே கவனித்துக்கொள்ள வேண்டும்.   அதுவே முறை. யாம் பிறவட்டுக் கருத்துகளை  விளக்குவதில்லை எனிலும் அவற்றையும் அறிந்த பின்னரே ஈண்டு வரைகிறோம்.

நிபுணர் -   ( நிற்பு + உணர் ).   >> நிற்புணர் >   நிபுணர்.

நிபுணர் என்பது  றகர ஒற்று மறைந்த ஒரு கூட்டுச்சொல்.

நிபுணராவார் நிலை  (  நிற்பு  :  நில் + பு) )  உணர் - உணர்ந்தவர்.

இதுபோல் அமைந்த இன்னொரு  சொல்:  விபுலம்.

விழு புலம் >   விபுலம்.

இங்கு ழுகரம் மறைவு.  இது மிக உயர்ந்த இடம்  அல்லது தன்மையைக் குறிப்பது.

எ-டு:  விபுலாநந்த அடிகள்.

எல்லாத் திரிபுகளையும் நீங்கிடச் செய்யின் இவ்வாறு காண்க.

விழு புல ஆ(க) நன் து  (அ)  அடிகள்.

ஆ எனற்பாலது  ஆதல்/  ஆக்கம் குறிக்கும் ஒரு முன்னொட்டு.

காயம்  = வானம். ( தொல்காப்பியச் சொல்)

காயம்  >  காயம்.

நல் >  நன்.  (  லகர  0னகரத்  திரிபு.  இறுதி ஒற்று )

நன் + து  >   நந்து.    (  நல் + து = நன்று  என்பது செந்தமிழ் வடிவம்).

ஆ + நந்து + அம்  =  னந்தம். அல்லது  ஆநந்தம்.

சொற்கள் வார்த்து எடுக்கப்படுகின்றன என்ற கருத்தும்  ஒப்புதற் குரியதே.

வினைச்சொல்:  வார்த்தல்.

வார்+ தை ( விகுதி)  >  வார்த்தை.

இலக்கணத்தாலும் இலக்கியத்தாலும்  வழக்காறுகளாலும் வார்த்து எடுக்கப்படுவது.

மற்றொரு முடிபு:

வாய் >  வாய்த்தை > வார்த்தை.  (திரிபு).


எனவே இருபிறப்பி என்று முடிக்க.

வாய்  >  வார்

இதில்:

வாய்  (  நீட்சிக் கருத்து )    எ-டு:  வாய்க்கால்,  கால்வாய்.
வார்  இதுவுமது.  (  நீட்சி).  தோல்வார்,  இடைவார்.

நுண்மாண் நுழைபுலத்தால்  அறிக.

புலன் :  அறிதலுமாம்.    எ-டு:  நுழைபுலம்,  நுழைபுலன்.

மீண்டும் காண்போம்.


மேலும் வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2018/03/aoo-aoaauu-vaarthai.html





வெள்ளி, 13 செப்டம்பர், 2019

அந்தோ என்ற சொல்.

இன்று  அந்தோ என்ற சொல்லை ஆய்வு செய்வோம் வருக.

அந்தோ என்பது தமிழில் பயின்று வழங்கும்  சொல்லாகும். இந்தப் படல் வரிகளைப் பாருங்கள்.

"அந்தோ என் ஆவியெல்லாம்
கொள்ளை கொண்டாரே
ஆறுமுக வடிவேலன் சிவபாலன்"

இன்னொரு பாடல்:

"சொப்பன வாழ்வில் மகிழ்ந்து ---  சுப்ரமண்ய
சுவாமி  உனைமறந்தார்  ------ அந்தோ!"

அந்தோ என்பதற்கு  ஐயோ  எனபதாகப் பொருள்  கூறுவதுண்டு.

ஐயோ அந்தோ அம்மோ அக்கோ அண்ணோ என்பவெல்லாம் மனம் மிக இரங்கி ஒலியெழுப்ப்புதலே.

In English "Alas"  is of the same kind of exclamation. Another:  OMG!

அம்  என்பது  அம்மா என்பதன்  முன் பகுதி.

தோ என்ற  விளிவடிவின் எழுவாய் வடிவம்  பழைய "தை"  என்பதாகும்.

இந்தச் சொல்லுக்கு  தந்தை என்பது பொருள்.

தம் + தை  =  தந்தை.
எம்+ தை =   எந்தை.
நும் + தை=   நுந்தை.

தம் + அப்பன் =  தமப்பன்  திரிபு:  தகப்பன்.
தம் +  ஆய்=  தாய். 

தந்தை  >  தந்தாய்!
தந்தை  >  தந்தோ.

தம். எம்.  நும்  இவற்றை விலக்கி உணர்க.

தை > தா!    இது விளிவடிவம்.

தை >  தோ!   இது ஓகாரம் வந்த விளி.


அம்+ தோ =  அந்தோ:   அம்மையே அப்பனே என்று இருவரையும் விளித்தவாறு.

அன் +  தோ  =  அந்தோ எனினுமாம்.    அன் என்பது அன்னை என்பதன் பகுதி.

தமிழ்தான். அறிக.
 

வியாழன், 12 செப்டம்பர், 2019

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

சகஜம் சகசம் என்பவை.

சகசம் என்ற சொல் உலவழக்கில் பெருவரவிற்று என்பதை அறிவீர்களே.  இயற்கையில் நடப்பவையும் இயற்கையாய் நடப்பவையும் சகசமானவையாய் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.   நிலநடுக்கமென்பது  இயற்கையாய் இயற்கையில் நடப்பினும்  அது சகசம் அல்லது சகஜம் அன்று.

அடுத்து அடுத்து நடப்பதாயின் சகஜம் அல்லது சகசம் ஆய்விடும்.  ஆகவே எது சகசம் என்பதைத்  தீர்மானிப்பத்ற்குக்  கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வீர்.

இவற்றுள் மூழ்கிவிடாமல் சொல்லைக் கவனிப்போம்.

வீட்டில் அம்மா சமையல் செய்வது சகசம்.


அகம் >  சகம். 

முன் இடுகைகளில்  விளக்கிய விதி இது.

அடு  - இதுவும் அஜு  என மாற்றக் கூடியதே.

இது எப்படி என்றால்  கடை > கட  .> கஜ எனற்பாலதை ஒத்ததே.

சக  +  அஜு  + அம் =  சகஜம்.
.
சக  + அச +   அம். =  சகசம்.
 
அடு -  அசு  -  அம்

>   (சக)  அச  அம்.

அதுவே  அது. வேற்றுமை யாது.?

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

சாகசச் சொல் அமைந்த விதம்

சாகசம் என்பது  அருமையாய் அமைந்த சொல்.

உலகில் திறனுடையோர் பலவிதச்  சாகசங்கள் செய்து புகழுறுவது உங்களுக்குத்  தெரியும்.  ஆகவே சாகசம் என்பது யாது என்று விளக்கவேண்டா என்பது சரிதான்.  இருப்பினும்  தெரியாத  ஒரு சிலருக்காக ஓரிரண்டு கூறுவோம்.

காண்போர் இது துணிகரமான செய்கை என்பது;   அல்லது இது வெறும் பாசாங்கு என்பது. இது காண உண்மையே போன்றது ,  கண்டேன் வியந்தேன்  என்று போற்றுவது. இது செய்வோனைச் சாகசன் என்பது.

இத்தகு செயலை  ஸாகஸம் என்றும் எழுதுவர்,  வடமொழி  என்பர்.

சாவதுபோலப் பாசாங்கு பண்ணி  (பசப்பி) காண்போரை அசத்தினால் அதுவே
சாகசம்.   அது சொல்லிலே இருக்கிறது.

சா  ( சாகு)    ஒரு வினைச்சொல்.
அசத்து   (  அச)  இன்னொரு வினைச்சொல்.

சாவது  (  சாகுவது) போல்  நடித்து அசத்திவிடுவது.

சாகு என்பதில்  கு என்பது  சாரியை.
அச என்பது  அசத்து என்பதன்  அடிச்சொல்.

சாகு +  அச +  அம்   =  சாகசம்.

நாளடைவில்  சாகசங்கள்  பெருக  சொற்பொருளும் விரிதல்  இயற்கை.

மோடி சிவன் விரைவில் வெற்றி.

சந்திரனில் தண்திரளின் தென் துரு வத்தில்
சடுதியிலே பதிவுகொளும் நெடுநோக் கத்தில்
உந்துபடை சீறியெழச் சென்று சேர்ந்தும்
ஓரிருகல் தொலைவுக்குள் ஒலிய லைகள்
முந்திவிலக் குண்டதனால் குந்த கம்தான்
மூண்டதெனி னும்வெற்றி நீக்க முண்டோ
வந்துநகை செய்திடுமே விரைவில் வண்ண
வாகைதனை மோடிசிவன் சூடு வாரே.

அரும்பொருள்

ண்ிரள் :   ிர்ந்ங்கிய ஒளியை வுகிற 
(நிலு.) 
ென் ுருவம்:  இு நிலின் ென் ுருவம்
ி :  விரைவு.
ிவு :  இறங்கி உலிடை வெற்றி பெறல்.
ெடு நோக்கம் -  ொலைவில் உள்ளக்
ைக் குறிவத்ல்.

ந்து பை -  எறிபை வான் கம் மிய
ல்  -  மைல் ொலைவு.

ஒலி அலைகள் :   ரேடியோ அலைகள்.  

ந்தி விலக்குண்ட -  மங்கூட்டியே  அறந்
அல்லுண்டிக்கப்பட்டுப் போன.

ந்தம்  =   கெடல்.

ெற்றி நீக்கம்  -  ோல்வி.
ிரிப்பு.   

ாகை =  வெற்றி மால

ோடி:   இந்தியப் பிரர்.

ிவன்  :  இந்தியிண்விக் கத் ைவர்,